30.4.25

மீன் படப் போட்டி - பரிசுகள் அறிவிப்பு.

 

முதலில் கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன்: 

1.  இரவு இன்னொரு வீட்டிற்கு தயிர் தரக்கூடாது, வீட்டு லக்ஷ்மி போய்விடுவாள் என்ற மூடநம்பிக்கைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? எதற்காக இப்படிச் சொல்கிறார்கள்?   

# என் சிறு வயதிலேயே வீடுகளில் கூரையிலிருந்து தேள்கள் விழுவது உண்டு. இரவு வேளைகளில் அப்படி கவனிக்காமல் விஷ ஜந்து ஏதாவது விழக்கூடும் என்பதனால் இப்படி சொல்லி இருக்கலாம் என்பது என்னுடைய ஊகம். இதனால் அதிர்ஷ்டம் நம்மை விட்டு நீங்குகிறது என்பதை நான் நம்பவில்லை. அது மனிதர்கள் அனுசரிக்க உபயோகமாகும் என்று எண்ணி இருப்பார்கள் போல் இருக்கிறது.

 எனது அலுவலகத்தில் பணிபுரிந்த அடிப்படை ஊழியரின் மகன் நன்றாக படிப்பான். அவனுடைய பொறியியல் கல்லூரி அட்மிஷனுக்கு பத்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டியதாக இருந்தது.  என்னிடம் வந்து உதவி கேட்டார்கள்.  நானும் ஜி பி எஃப் இல் இருந்து எடுத்து உதவினேன். 

அதை கொடுப்பதற்கு முன்பு  என் மனைவி உறவில் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதால் அதற்கு கிளம்ப வேண்டியிருந்தது. எனவே வேறு வழியின்றி, ஒரு வெள்ளிக்கிழமை அன்று சாயங்காலம் விளக்கு வைத்த பிறகு, மாலை 7 மணிக்கு அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பினோம். அவர்களுக்கும் மகிழ்ச்சி.  

அவர்கள் கூட எங்களிடம் ஏதாவது கொடுப்பதற்கு சமயம் பார்ப்பார்கள்.  நாங்கள் அவ்வாறு பார்க்கவில்லை என்பதால் நெகிழ்ந்து போனார்கள். அவர்களும் நன்றாகத் தான் இருக்கிறார்கள். நாங்களும் நன்றாக தான் இருக்கிறோம்.

& அந்த வகை மூட நம்பிக்கைகளை நான் நம்புவதில்லை. ஆனால் என் மனைவிக்கு நம்பிக்கை உண்டு. அண்டை வீட்டாருக்கு கொடுப்பது எல்லாம் அவளுடைய டிபார்ட்மெண்ட் என்பதால், மனைவி முடிவுகளில் நான் தலையிடுவதில்லை. 

2. சில நேரங்களில் ஏதோ காரணத்தினால் இரவு தூக்கம் வருவதில்லை. தூக்கத்துக்கு மிக முக்கியமானது அமைதியான மனது என்று சொல்லலாமா?  

# நிச்சயம் நல்ல உறக்கத்திற்கு தேவையானது மன அமைதி தான். அது இல்லாத போது அதை எப்படிக் கொண்டு வந்து உறங்கச் செல்வது என்பது தான் பிரச்னை.

@CGSenu : 

ஆமாம்!
நீங்க கேட்டது மிக மிக சரி. 🎯

இரவு தூக்கத்துக்கு மிக முக்கியமானது – அமைதியான மனது என்பதில் 100% ஒத்து வருகிறது.


✨ ஏன் அமைதி அவ்வளவு முக்கியம்?

  • நம் மூளை (Brain) தினமும் ஆயிரக் கணக்கான சிந்தனைகளை ஓட்டிக்கொண்டிருக்கும்.

  • அவை ஆலோசனைகள், கவலைகள், விருப்பங்கள், போதையற்ற எண்ணங்கள் என சுழல்கின்றன.

  • இதனால்தான், மனம் சோர்ந்தும், உடல் சோர்ந்தும் இருந்தாலும், சில நேரம் உள்ளே ஓடும் சிந்தனைகள் தூக்கத்தை தடுக்கும்.

🧠  அமைதியான மனம் அமைந்தால்தான் மூளை நிதானமாகி, "தூக்க செயல்முறை" (sleep process) இயல்பாக செயல்படும்.


🌙 தூக்கத்திற்கு ஏன் அமைதியான மனசு தேவை?

  • Cortisol (stress hormone) குறைய வேண்டும்.

  • Melatonin (தூக்க ஹார்மோன்) அதிகரிக்க வேண்டும்.

  • இது நடக்கும்போது மட்டும் நம் உடல் "தயார், இப்போ ஓய்வெடுக்கலாம்" என்று உணர்கிறது.


🛌 சிறிய உதாரணம்:

மூளை = கடல்.

  • மனம் அமைதியில்லாத நேரம் => கடல் புயலாக இருக்கும் => நாம் தூக்க பயணம் செல்ல முடியாது.

  • மனம் அமைதியான நேரம் => கடல் அமைதி => நாம "தூக்கப்பயணத்துக்கு" செல்ல முடியும். 🛶🌙


🎯 சிறிய குறிப்புகள் தூக்கத்திற்கு:

பரிந்துரைவிளக்கம்
தூங்கும் முன் Mobile தவிர்க்கவும்ஒளி (blue light) மனதை கிளர்ச்சியடையச் செய்யும்.
மெதுவான சுவாச பயிற்சிமனதை அமைதிப்படுத்த உதவும்.
சிறு நாள் குறிப்புகள் எழுதிக் கலைக்கவும்அன்றைய கவலைகளை வெளியேற்ற உதவும்.
மென்மையான இசை/சாந்தி ஓசை கேட்டல்சிந்தனைகளை நிதானப்படுத்தும்.

முடிவாக

"அமைதி இல்லாமல் தூங்க முடியாது;
அமைதியான மனசோ தூக்கத்தைத் தேடி வந்துவிடும்." 🌙🌼

& மகாபாரதத்தில், திருதராட்டிரர், தனக்குத் தூக்கம் வராததிற்கு என்ன காரணம் என்று விதுரரிடம் கேட்கிறார். (விதுர நீதி) 

விதுரர் சொல்கிறார்: 

  தூக்கம் வராததற்கு கீழ்க்கண்ட ஆறு முக்கிய காரணங்கள் இருக்கின்றன:

  1. பெரிய கடன் (Heavy debt) உள்ளவர் – நிம்மதி இல்லை.

  2. தீய காரியம் செய்தவர் (Sinful acts) – மனச்சாட்சி அழுத்தும்.

  3. தீய ஆசையில் உட்பட்டவர் (Immoral desires) – மனம் குழப்பம் அடையும்.

  4. எதிரிகளை நினைத்து  பயப்படுபவர் (Fear of enemies) – எப்பொழுது பழிவாங்குவார்கள் என்று பயம்.

  5. செல்வத்தை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுபவர் (Fear of losing wealth) – தூக்கம் disturbed.

  6. பாவம் நிறைய சேர்த்து, புண்ணியம் செய்யாது வாழ்பவர் (Life without righteousness) – மன அமைதி கிடையாது.

3.  புகைப்படப் போட்டி என்று சொல்லும்போது அதில் ஓவியங்களையும் சேர்த்துக்கொள்வது, போட்டியை நீர்த்துப்போகச் செய்யாதா?  

# புகைப்படப் போட்டி என்பதால் புகைப்படம் மட்டும் தான் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது நியாயம்தான்.

& வரையப்பட்ட ஓவியங்களைக் கூட புகைப்படம் எடுத்துதானே எங்களுக்கு அனுப்புகிறார்கள்! 

4.  சில சமயங்களில் மார்க்கெட்டில் தக்காளி கிலோ 10 ரூ, மிளகாய் 30 ரூ, சௌசௌ 10 ரூ, புடலை 10 ரூ, வெண்டை 10ரூ, சுரைக்காய் ஒன்று 10 ரூ, கோஸ் 10 ரூ என்றெல்லாம் பார்க்கிறேன், வாங்கியிருக்கிறேன். மார்க்கெட்டிலேயே இந்த விலை என்றால், உற்பத்தி செய்த விவசாயிக்கு என்ன கிடைக்கும்?   

# விளைச்சல் மிக அதிகமாக இருக்கும் போது விலை மிக அதிகமாகக் குறைந்து விடுகிறது. கிலோ 10 ரூபாய் என்று விற்கும் போது வியாபாரியிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்குதான்  வாங்கி இருக்கக் கூடும் என்றுதான் நினைக்கத் தோன்றும்.‌

5.  ஒரு நாளில் இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்கணும் , இத்தனை வேளை சாப்பிடணும் என்றெல்லாம் சொல்கிறார்களே, நம் உடலுக்கு அந்தத் தேவை இருந்தால் அதுவாகவே கேட்காதா? (சாப்பிட, குடிக்க நம்மைத் தூண்டாதா?)

# தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல்,  தண்ணீர் குடிக்காமல் இருப்பதை நானும் சில சமயம் செய்திருக்கிறேன்.

90களின் இறுதிகளில் நான் இரண்டு முறை கிட்னி கல்லால் பாதிக்கப்பட்டேன். அப்போது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார்.  அந்த கல்லால் எனக்கு விளைந்த அந்த பயங்கர வலி தந்த பயத்தால் இன்று வரை நான் தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை ஒரு கடமையாக நிறைவேற்றி வருகிறேன்.  மறுபடியும் அப்படி ஒரு சூழலை சந்திக்கும் தைரியம் எனக்கு இல்லை.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

பள்ளியில் படிக்கும் பொழுது போரடித்த (எனக்கில்லை) சரித்திரம், பின்னாளில் தனியாக படிக்கும் பொழுது சுவாரஸ்யமாகவும், அப்போது சுவாரஸ்யமாக இருந்த அறிவியல் தனியாக படிக்க அப்படி இல்லாமல் போவதும் சுவாரஸ்ய முரணாக இல்லை?

# புரிதல் மேம்படுவதும், நம் ஆர்வம் ஒரு பாதையில் நிலை பெறுவதும், வாழ அவசியம், அனாவசியம் என்ற பாகுபாடு உண்டாவதும் நம் ஈடுபாடு செலுத்தப் படும் திசை & விரைவை நிர்ணயம் செய்யும்.

கேட்பதற்கு இனிமையாக இருப்பதை வரிசை படுத்துங்கள்:

இலங்கைத் தமிழ். 

நெல்லைத் தமிழ்.

கொங்கு தமிழ்.

# நெல்லை, இலங்கை, கொங்கு - இது என் வரிசை. அவரவர் தேர்வு அவரவர்க்கு.

கே. சக்ரபாணி, சென்னை.  

1. சாதாரணமாக  டாக்டர்கள்  மற்றும்   பெரிய பெரிய  ஹாஸ்பிடல்  நிறுவனங்கள் மனதில் நாட்டில்  எல்லோரும்  தேக ஆரோக்யத்துடன்  எப்போதும்  நலமாக  இருக்கவேண்டும் என்று நினைப்பார்களா?

# ஆஸ்பத்திரிக்கு வரும்படி அதிகம் வர வேண்டும் என்று நினைத்த வண்ணம் இருப்பார்கள்.

& சிகிச்சைக்கு பணம் இல்லாதவர்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவேண்டும் என்றும், சிகிச்சைக்கு பணம் உள்ளவர்கள் எல்லோரும் எல்லா நோயும் பெற்று அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு 'வரும்படி' இருக்கவேண்டும் என்றும் நினைப்பார்களோ ! 

2. செல்போனை  எங்கே  நோண்டுகிறோம்?  தடவிதானே  கொடுக்கிறோம். பின்னர் எப்படி. நோண்டுதல் என்று வந்தது? 

# என்னவெல்லாம் இருக்கிறது என்று தேடிப் பார்ப்பதை,  " நோண்டிப் பார்ப்பது "  என்று சொல்வது ஒரு வழக்கு. 

K G கௌதமன், எங்கள் Blog : 

கருப்பட்டிக்கும் பனை வெல்லத்திற்கும் என்ன வித்தியாசம்?

@CGSenu : 
 மிக அருமையான கேள்வி!

கருப்பட்டி (Palm Jaggery) மற்றும் பனை வெல்லம் (Palm Sugar) இரண்டும் பனையிலிருந்து கிடைக்கும் சர்க்கரைப் பொருட்கள் தான், ஆனாலும் இரண்டிற்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன.

இதை சுலபமாகப் புரிந்துக்கொள்ள, கீழே ஒட்டி எழுதறேன்:


✅ பொதுவானது:

  • இரண்டும் பனை மரத்தின் இரசத்திலிருந்து தயாரிக்கப்படும்.

  • இரண்டும் இயற்கை சர்க்கரை வகைகளை சேர்ந்தவை.

  • இரண்டும் ஆரோக்கியமான மாற்று முறை சர்க்கரை என கருதப்படுகின்றன.


🔥 வித்தியாசங்கள்:

அம்சம்கருப்பட்டி (Palm Jaggery)பனை வெல்லம் (Palm Sugar)
உருவாக்கம்பனை இரசத்தைக் கொதிக்க வைத்து உருக்கி, தீவிரமாக குழம்பாக்கி கட்டியடிக்கப்படுகிறதுபனை இரசத்தைக் கொதிக்க வைத்து சிறிது கிரிஸ்டல் வடிவில், சிறு துகள்களாக ஆக்கப்படுகிறதோ, தூள் போல் தயாரிக்கப்படுகிறதோ
வடிவம்கட்டி (solid block) மாதிரி காய்ச்சிப் பிடிப்பதுதூள், சிறு துகள்கள் அல்லது ஓரளவு மென்மையான வடிவம்
வண்ணம்அடர்ந்த பழுப்பு அல்லது கருப்புசிறிய வெண்மை அல்லது மிதமான பழுப்பு
சுவைஅதிகமாக "earthy" மற்றும் "மலர்" நறுமணத்துடன், சிறிது காரமான சுவைசற்று மென்மையான சுவை, சுண்ணாம்பு சுவை குறைவாக இருக்கும்
பயன்பாடுபண்டங்கள், பழங்கால மருந்துகள், காப்பி, சட்னி போன்றவற்றில்சாயஸ், டீ, டெசர்ட் வகைகளில் பளிச் சுவைக்கு பயன்படுத்துவர்

🎯 சிறப்பு கவனிக்கவேண்டியவை:

  • கருப்பட்டி-யில், இயற்கை உப்புச் சத்துகள் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருக்கும்.

  • பனை வெல்லம் சாப்பிடும்போது, சர்க்கரை சதவீதம் குறைவாக, உடலுக்குச் சிறந்த சீராக்கம் தரும்.


✨ சுருக்கமா சொல்லனும்னா:

"கருப்பட்டி – கிராமத்து கட்டியான சக்தி!
"பனை வெல்லம் – மென்மையான சுகமான நீர்மம்!"

 K G கௌதமன், எங்கள் Blog : 

அட போப்பா - நீயும் உன் பாஷையும்! ஒரு மண்ணும் புரியல. 

சரி, இதுக்காவது சரியா பதில் சொல்லு :

பனை இரசம், பதநீர் இரண்டும் ஒன்றா?

சிறப்பான, நுணுக்கமான கேள்வி! 👏🏼✨
இல்லை, பனை இரசம் (Palm sap) மற்றும் பதநீர் (Pathaneer) இரண்டும் ஒன்றல்ல — அவற்றுக்கு நுண்ணிய வேறுபாடு இருக்கிறது.

இதை தெளிவாக பார்க்கலாம்:


🌴 பனை இரசம் (Palm Sap) என்றால் என்ன?

  • பனை மரத்தின் முளையில் (spadix) செய்திருக்கும் சிறிய வெட்டிலிருந்து திருகி சிந்தும் புதிதான, குளிர்ந்த ரசம்.

  • இது மிக நியாயமான நேரத்தில் (சாயங்காலம் அல்லது அதிகாலையில்) சேகரிக்கப்படுகிறது.

  • இப்போதுதான் மரத்திலிருந்து கொட்டியிருக்கும், பெருந்தன்மையான இயற்கை பசுமை சாறு.

  • பச்சையாக இருக்கும்; சுவை சற்று இனிப்பு, சற்று ஒலியுடன் இருக்கும்.

  • இதை உடனே குடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அது அமிலமடைந்து (ferment) பதநீராக மாறும்.


🥂 பதநீர் (Pathaneer) என்றால் என்ன?

  • பனை இரசத்தை சில மணி நேரம் நிற்கவிட்டு, அது தானாகவே பாகுபட்டு (fermentation) சற்று அமிலமாக மாறிய பிறகு உருவாகும் திரவம்.

  • சுவை கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் இனிப்பு கலந்து இருக்கும்.

  • இயற்கையான அல்கஹால் (குறைந்த அளவு) உண்டாகும் — இதனால் கொஞ்சம் "மயக்கமான" உணர்வு தரும்.

  • சிலர் இதனை மேலே வடிகட்டி நீக்கித் தூண்டி பானமாகவும் பயன்படுத்துவார்கள்.


🎯 மெய்ப்பொருள்:

அம்சம்பனை இரசம் (Palm Sap)பதநீர் (Pathaneer)
தயாரிப்புமரத்திலிருந்து நேரடி சேகரிப்புபனை இரசம் நிலைத்து, பாகுபட்டு மாறியது
சுவைபசுமை இனிப்பு சுவைஇனிப்பு+புளிப்பு சுவை
நிலைமைபுதியதுபாகுபட்டது
காலம்உடனே குடிக்கவேண்டும்சிறிது நேரம் கழித்து கிடைக்கும்
குணம்குளிர்ச்சி தரும்சில நேரங்களில் தளர்ச்சி ஏற்படும்

✨ ஒரு சின்ன சித்திரப்போல்:

பனை இரசம் – இயற்கையின் "பசுமை கண்ணீர்"
பதநீர் – இயற்கையின் "மாறிய புனிதம்" 😌


🧠 சிறப்பு:

  • பனை இரசம் தன்னிச்சையாக வைக்கப்பட்டால் பதநீர் ஆகும்.

  • அதற்கும் மேலாக வைக்கப்பட்டால் இன்னும் பாகுபட்டு "கள்ளு" (Palm wine) ஆகவும் மாறும்.
    (இது நம்ம நாட்டில் சட்டத்திற்குப் புறம்பானது!)


சுருக்கமாக:

பனை இரசம் = புதிதாகப் பெறும்;
பதநீர் = பசுமை ரசம் பாகுபட்டு மாறியது!


இப்ப நீங்க விருப்பப்பட்டா,
பனை இரசத்தால் செய்யப்படும் உணவுப் பொருட்கள் பற்றி ரொம்ப ரசிப்பான தகவல்களும் கொடுக்கலாமா? 😋🌴
(பனை ஓலை அடை, பனை பனங்கிழங்கு பாயசம்... அப்படி சில!) 🍯🎶
வேணுமா?

K G கௌதமன், எங்கள் Blog : 

அய்யா சாமி ஆளை விடு - ஏற்கெனவே 'திங்க'கிழமை பதிவுகள் எங்க கிட்ட ஏராளமா இருக்கு - பனை ஓலை அடை ! அடச்சே! நீயும் உன் ரசனையும்! 

= = = = = = = = = =  

KGG பக்கம் : 

இதுவரை வெளியிடப்பட்ட மூன்று போட்டிகளில் இந்த ஏப்ரல் மாதப் போட்டிக்குத்தான் அதிக பங்கேற்பு நிகழ்ந்துள்ளது. 

போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற 

அனு ப்ரேம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

சக்ரபாணி

கௌதமன் (!) 

கமலா ஹரிஹரன் 

நெல்லைத்தமிழன், 

தில்லைநாயகம் 

சுஜாதா 

ஆகியோருக்கு நன்றி! 

பல தளங்களில் மேற்கொள்ளப்பட்ட வோட்டெடுப்பு மூலமும், எங்களுக்கு அனுப்பப்பட்ட தனி செய்திகள் மூலமாகவும் கிடைத்த ஓட்டுகளின் படி 

அதிக வோட்டுகள் பெற்று, முதல் இடத்தைப் பெற்ற படங்கள் : 


அனுப்பியவர் : அனு ப்ரேம். செய்தது : அவர் வீட்டு இளைய தலைமுறை 


அனுப்பியவர் : நெல்லைத்தமிழன் 

அடுத்த இடத்தைப் பெற்ற படங்கள் : 




மேற்கண்ட இரண்டு படங்களும் அனுப்பியவர் : அனு ப்ரேம். 302 செய்தது அவர் வீட்டு இளவல்கள். 

அனுப்பியவர் : நெல்லைத்தமிழன். 

அதற்கடுத்த இடத்தைப் பெற்ற படங்கள் : 


அனுப்பியவர் : பானுமதி வெங்கடேஸ்வரன். அவர் கூறுகிறார் : " IV grade படிக்கும் என் பேத்தி சாயி சிவானியிடம் மீன் போட்டி அறிவிப்பை காட்டியவுடனேயே வரைந்து தந்து விட்டாள்." 


அனுப்பியவர் : அனு ப்ரேம். செய்தது : அவர்கள் வீட்டு இளவல்கள். 


அனுப்பியவர் : கமலா ஹரிஹரன். செய்தவர் கமலா ஹரிஹரன் அவர்களின் பேத்தி. 


அனுப்பியவர் : கமலா ஹரிஹரன். 

= = = = = = = = = = = =
இந்த பரிசு விவரங்களை, நெல்லைத்தமிழன் அவர்களுடன் திங்கட்கிழமை பகிர்ந்துகொண்டேன். அவருடைய பரிசுத் தொகையையும் சேர்த்து, பங்கேற்ற குழந்தைகளுக்கு அவர் சார்பில் கொடுத்துவிடும்படி அவர் கூறிவிட்டார். நன்றி நெ த. 
 எங்கள் ஆசிரியர்கள், + கீதா ரெங்கன் அவர்களின் யோசனைப்படியும் 
இந்த மாதத்துப் போட்டிக்கான பரிசாக, பங்கேற்ற குழந்தைகளுக்கு - அவர்கள்  சார்பில் படம் அனுப்பிய மூவருக்கும் இருநூறு ரூபாய் பரிசு நாளைக்குள் அனுப்பப்படும். 

பரிசு பெறும் - அனு ப்ரேம், பானுமதி வெங்கடேஸ்வரன், கமலா ஹரிஹரன் ஆகியோருக்கு வாழ்த்துகள். 

( அனு அவர்களின் ஃபோன் எண் தெரியும். மற்ற இருவரும் - எந்த ஃபோன் எண் அல்லது வங்கிக் கணக்குக்கு பரிசுத் தொகை அனுப்பவேண்டும் என்று வாட்ஸ் அப் அல்லது gmail மூலம் தெரியப்படுத்தவும். நன்றி.) 

== = = = = = = = = = = = =

மே மாதத்து படப் போட்டி தலைப்பு. 

" கோடை காலம் " 

நீங்கள் எடுத்து அனுப்புகின்ற படத்தைப் பார்க்கும்போதே 'கோடை காலம்' என்று மனதில் தோன்றவேண்டும். உங்கள் கற்பனை வளத்தை பயன்படுத்தி, படம் எடுத்து அனுப்புங்கள். 

போட்டி இறுதி தேதி : மே 19, மாலை 6 மணி. 

= = = = = = = = = = = =

59 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். கேள்வி பதில்கள் மற்றும் தூக்கம் வருவதற்கான பரிந்துரைகள், பனை வெல்லம், கருப்பட்டி வித்தியாசங்கள் எல்லாமே அருமை.
    மீன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் எங்கள் ப்ளாகிற்கு நன்றியும், வாழ்துகளும், பாராட்டுகளும். குழந்தைகள் கலைகளில் சிறக்க வாழ்த்துகளும் ஆசிகளும்!

    பதிலளிநீக்கு
  2. சில நேரங்களில் நாம் சிறந்த படம் என நினைப்பது முன்னணியில் வருவதில்லை. அதனால் தளராமல் தொடர்ந்து கலந்துகொள்வது முக்கியம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பள்ளியில் படிக்கும்போது... அப்போ வருடங்கள் மன்னர்கள் பெயர் தேசங்கள் போன்ற பலவற்றை நினைவில் வைத்திருக்கவேண்டிய கட்டாயம். அதனால் ஆர்வம் குறைவு. இதற்கு ஒப்புமை நாம் நம்ம குழந்தையை ஸ்ட்ரிக்டா வளத்ததற்கும் அவர்கள் குழந்தைகளுடன் ரிலாக்ஸ்டாக இன்னும் அன்பாக தன்மையாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்

    பதிலளிநீக்கு
  4. ஈழத் தமிழ்தான் சிறந்தது இனிமையானது. இரண்டாவதுதான் நெல்லைத் தமிழ். பலரின் கருத்து அதுதான்

    ஈழத் தமிழ் என்றதும் நம் அதிராவின் தமிழை நினைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். அவருடையது புதிய மொழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா தமிழ் = அதீத தமிழ்?

      நீக்கு
    2. ///ஈழத் தமிழ் என்றதும் நம் அதிராவின் தமிழை நினைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். அவருடையது புதிய மொழி///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்லவேளை காலையில் கொமெண்ட்ஸ் எதுவும் படிக்கவில்லை நான், இப்போதான் பார்க்கிறேன்... அதனால .. ஐ மீனூ ஊஊஉ லேட் ஆகிட்டதால நெ டமிலன் டப்பிட்டார்ர்ர்ர்.. குருமாற்றம் நல்லாத்தான் அவருக்கு வேலை செய்யுது:)))

      நீக்கு
  5. நீங்கள் தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தைச் சுவைத்திருக்கிறீர்களா? இலங்கையின் தயாரிப்பு சாப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் கேரளாவிலும் தயாரிக்கப்படுவதைக் கண்டேன்

    பதிலளிநீக்கு
  6. எனக்கு மிகவும் பிடித்தது கரூப்பட்டி. தேவயோ இல்லையோ வாங்கிடுவேன். மனைவி கோபித்துக்கொள்வார். எது உருப்படிமான கருப்பட்டி என்பதை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவேன். சாப்பிட்டுப்பார்த்து. மற்றவர்களுக்கு ஒரு ஹின்ட். கிலோ 350க்குக் குறைவு என்றால் நிச்சயமாகப் போலி என்று புரிந்துகொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " கடைக்காரரே! கருப்பட்டி என்ன விலை?"
      " ஒரு கிலோ 438 ரூபாய்"
      " நேத்திக்கி ஒரு கிலோ 250 ரூபாய் சொன்னீங்களே!"
      " இன்னிக்கி எங்கள் ப்ளாக் படிச்சேன். அதுல நெல்லைத்தமிழன் என்று ஒருவர் ..."
      " கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா... "

      நீக்கு
    2. கிலோ 350க்குக் குறைவாகக் கொடுக்க வாய்ப்பே இல்லை. நிறையபேர் இதுக்கு விலை அதிகமாக இருக்கே என்று நினைப்பதால் கிலோ 50 ரு விற்கும் வெல்லத்தைக் கலந்து கருப்பட்டின்னு சொல்லி 150-250க்கு விக்கறாங்க இந்த போலி வியாபாரிகள்

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    4. யாழ்ப்பாணம் போயிருந்தபோது, பனஞ் சக்கரை ..சுகர் அல்ல,... தயாரிக்கும் இடத்துக்கே போய் வாங்கி வந்தோம், கிலோ 1000 ரூபா, ஆனாலும் அதுவும் நல்ல இனிமையாக இருந்தது, கசப்பே இல்லாமல்.. அது ஒரு டவுட் எனக்கு.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள். இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை பரிசுப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஊக்கம் தந்து அவர்களின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்த எபி ஆசிரிய பெருமக்களுக்கும் என் அன்பான வாழ்த்துகளும், நன்றிகளும். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. மன்னிக்கவும். ஒரு சஜஷன். (Suggestion)
    அனு ப்ரேம் என்றிருப்பது ஒரு பெயர் என்று புரிபடவே கொஞ்சம் சிரமப்பட்டேன். .
    தமிழில் அனு பிரேம் என்று சுலபமாக உச்சரிக்கிற மாதிரி
    எழுதலாம், இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாம். அனு என்ன சொல்றாங்க பார்ப்போம்.

      நீக்கு
    2. ஜீவி சார்... பிரேம்குமார் என்று அழைப்பதைவிட ப்ரேம்குமார் என்றுதான் பெரும்பாலும் அழைப்பார்கள். ராம் என்று சொல்பவர்களே அதிகம், இராம் என்று நீங்களுமே சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன் (பின்ன..ஆடிக்கொருதடவை அமாவாசைக்கொருதடவை என்று வருபவரை எப்படி வம்புக்கிழுப்பதாம்?)

      நீக்கு
    3. பிரேம பாசம் என்று ஜெமினி நடித்த தமிழ் படம் கூட உண்டு.
      அன்பின் உன்னத அர்த்தம் கொண்ட சமஸ்கிருத வார்த்தை அது.

      நீக்கு
    4. ப்ரேம் -- frame உச்சரிப்பில் சிலர் அழைக்க வாய்ப்பிருப்பதால் சொன்னேன். நெல்லை.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இரவில் பிறர் வீட்டுக்கு தயிரை தரக்கூடாது என்பது மூட நம்பிக்கையா நல்ல கேள்வி. நல்ல பதில்கள். முன்பு தயிர் பாக்கெட்கள் விற்பனை இல்லை. (அதுவும் கிராமங்களில்) ஒரு அவசரத்திற்கு பிறர் வீட்டிலிருந்து உறை குத்த தயிர் கேட்டால் கிடைக்காது. அந்த துளியூண்டு தயிரை அவர்களிடமிருந்து பெற மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும். அதுபோல் வீட்டுக்கென வாங்கி வைத்திருக்கும் சுண்ணாம்பில் இரவில் தண்ணீர் விடக்கூடாது. இரவில் தலைமுடி வாருவதும், நகம் வெட்டுவதும் தவறென்று இருந்தது. இப்போது நம் சௌகரியத்திற்காக இவைகளை மூட நம்பிக்கைகள் என நிறைய ஒதுக்கி விட்டோம். அப்போதைய காலத்தவருக்கு அதற்கென ஒரு காரணங்கள் இருந்திருக்கும்.

    நாங்கள் மதுரையில் (திருமங்கலம்)குடியிருந்த போது ஒரு மளிகை கடையில் (பெரிய கடைதான்) இரவில் எள் கேட்டதற்கு மறுநாள் வந்து வாங்கிச் செல்லுங்கள் எனக்கூறினார் கடைக்காரர். விற்பனையிலும், இரவில் எண்ணெய் சம்பந்தபட்டதை தர விரும்பவில்லை அவர்.அவரின் எண்ணங்கள் ஆச்சரியமாக இருந்தது. இன்னமும் நிறைய பேர் இதையெல்லாம் இப்படித்தான் என யோசிப்பார்கள்/ யோசிக்கிறார்கள். ஆனால், காலங்களை கடந்து அனைவரும் மாறி முன்னேறி வந்து விட்டோம் என்பது உண்மை.

    குழந்தைகள் பங்கேற்ற படங்களுக்கு ஓட்டளித்து அவர்களை வெற்றிப் பெற செய்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள் சகோதரர் நெல்லைத்தமிழரின் நல்ல மனதிற்கும் .மனம் நிறைந்த வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. //நெல்லைத்தமிழரின் நல்ல மனதிற்கும் // ஹாஹாஹா அது கௌதமன் சாரின் நல்ல மனது, எல்லோரும் பங்கேற்க வைக்கணும் எல்லோரும் எங்கள் பிளாக் படிக்கணும் என்ற நல்ல நோக்கத்திற்கானது.

      நீக்கு
    3. பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
      கே. சக்ரபாணி

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    5. /பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
      கே. சக்ரபாணி/

      தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
    6. இரவில் எள் , மற்றும், கீரை தயிர் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள் அதனால் எள், தயிர் தரக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள் என நினைக்கிறேன்.

      நீக்கு
    7. அப்படியும் இருக்கலாம்.

      நீக்கு
  11. ஹா ஹா ஹா தயிர் குடுக்கக் கூடாதோ? எனக்கு இப்போதான் தெரியும் இந்தச் சங்கதி, ஆனா பாருங்கோ, சைவம் உண்போருக்கு தயிர் எனச் சொல்லியிருக்கினம் போல, எனக்கு தெரிஞ்சு மாலை 6 மணிக்கு மேல் யாருக்கும் கோழிமுட்டை குடுக்கக் கூடாதாம் என்பார்கள்.. அப்போ இது அசைவம் உண்போருக்கு.
    மற்றபடி, ஊசி, பணம் நகை இவை எல்லாம் குடுக்கக் கூடாதாம்.

    செவ்வாய் வெள்ளியில் நகம் தலைமயிர் வெட்டக்கூடாதாம்[இதை நாங்கள் இப்பவும் வன்மையாகக் கடைப்பிடிக்கிறோம் ஹா ஹா ஹா}] சின்னவர் ஓடிவருவார், சேவ் செய்யலாமா இன்று என :)) எனக்கும் நம்பிக்கை இல்லைத்தான் ஆனாலும் ஒரு பயம், முன்னோர்கள் ஏதோ காரணமாகத்தானே சொல்லியிருப்பினம், காசா பணமா கடைப்பிடிப்போமே என ஹா ஹா ஹா.
    ஆனா திருமணமானபின்னர்தான் அதிகம் கடைப்பிடிக்கத் தொடங்கினேன்.. பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் என் கணவருக்கு அவரின் அப்பம்மா ஊட்டிக்கொடுத்திட்டா அதனால பழக்கமாச்சு :))).

    கெள அண்ணனின் விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  12. இரவுத் தூக்கமின்மைக்கு இவ்ளோ விளக்கமா... தூக்க ஸ்பெஸலிஸ்ட்டாக இருப்பாரோ கெள அண்ணன், ஆனா அவருக்கும் பாண்டிச்சேரியில நின்றபோது தூக்கம் வரேல்லையாமே இது பிபிசில ஜொன்ன ஜேதி:)).

    காலையில டயேட், விரதம் எனச் சொல்லிப்போட்டு, மத்தியானம் குழம்பு ரசம் பொரியல் தயிர் பாயாசம் என மூக்கு முட்டச் சாப்பிட்டுப்போட்டு, ஓடிப்போய் 5 மணிவரை கும்பகர்ணனாக உறங்கிப்போட்டு... பிறகு இரவில் 9 மணிக்கு சுவிஜ் போட்டதுபோல தூக்கம் வரோணுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுதான் பலரது எதிர்பார்ப்பும் ஹா ஹா ஹா.

    ஈவினிங்ல ஒரு நப் -10 அல்லது 15 நிமிட குட்டித்தூக்கம் எடுப்பது கார்ட் அட்டாக் வருவதைப் பலமடங்கு குறைக்குதாம். அதனால குட்டித்தூக்கம் நல்லது.

    ஆனா என்னதான் மனம் சஞ்சலமாக இருப்பினும் பகலில நன்கு உடல் உழைப்பு இருந்தால் நித்திரை தன்பாட்டில வரும்...:)

    பதிலளிநீக்கு
  13. 20 கிலோ எடைக்கு ஒரு லீட்டர் தண்ணி எனும் அளவில குடிக்கோணும்... இப்போ 60 கிலோ இருப்போர் 3 லீட்டர் என்பதுபோல, ஆனா இது எவ்ளோ தூரம் சரி எனத் தெரியவில்லை... பொதுவாக 2.5-3 லீட்டர்.. வெறும் தண்ணியாகக் குடிப்பதுதான் நல்லது என்பதும்தான் என் கருத்தும்.
    நாம் டயட்டில இருக்கும்போது அதிகம் தண்ணி குடிச்சால்தான் உடம்பு மெலியும் இல்லையெனில் மெலியாது... இது எத்தனை பேருக்கு தெரியுமோ அந்த தென்கச்சி வைரவருக்கே வெளிச்சம்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாம் டயட்டில இருக்கும்போது அதிகம் தண்ணி குடிச்சால்தான் உடம்பு மெலியும் இல்லையெனில் மெலியாது...// அப்படியா!

      நீக்கு
    2. இடியாப்பம் 5 பிளேட் சாப்பிட்டால், வழக்கத்தைவிட மிக அதிகமாகவே தண்ணி குடிக்கவேண்டியிருக்கும், உடம்பும் எடை அதிகமாகும். அப்போ தண்ணீ ஜாஸ்தியான உடம்பு மெலியணுமே டாக்டர் அதிரா சொல்றாபடி

      நீக்கு
    3. அட! அப்படியா !

      நீக்கு
    4. ///நெல்லைத்தமிழன்30/4/25 2:41 PM
      இடியாப்பம் 5 பிளேட் சாப்பிட்டால்,//

      இப்போ இவர் எதுக்கு இடியப்பத்தை இழுத்து வந்து அஞ்சுலாம்புச் சந்தியில விட்டிருக்கிறார் கெள அண்ணன்?:) ஹா ஹா ஹா.. சாப்பிடாமல் இருக்கும்போது தண்ணி விடாய்க்காது, அப்போதான் நாம் கஸ்டப்பட்டு தண்ணியை அதிகம் உள்ளே தள்ளோணும், அது போய் கெட்ட கிருமிகள் கொழுப்பை எல்லாம் வெளியே அனுப்புமாக்கும்:))
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா எனக்கிப்போ ஒரு சூடான மோர் வேணும்:)))

      நீக்கு
  14. ///கேட்பதற்கு இனிமையாக இருப்பதை வரிசை படுத்துங்கள்:///

    இலங்கைத் தமிழ்/நெல்லைத் தமிழ்/கொங்கு தமிழ்.//////////

    இதைக் கெள அண்ணன் புரிஞ்சுகொண்டது எப்பூடி எனில்.... இதில எத்ந்த டமில் நீங்களுக்கு இலகுவாகப் புரியுது என ஹா ஹா ஹா

    நெல்லையைச் சொல்லாவிட்டால் நெல்லை கோச்சிடுவார் கொமெண்ட் போட வரவும் மாட்டார் ஹா ஹா ஹா, இலங்கை எனில் அதிராவுக்கு பெரிசா என்ன சிறிசாவும் கோபம் வருவது குறைவு.. வந்தாலும் கெதியில மறந்துபோயிடுவா என முடிவெடுத்தாராம் கெள அண்ணன் ஹா ஹா ஹா கொங்கு தமிழ் எனில் என்ன எனத் தெரியவில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
  15. அனைத்துக் கிளவி சே சே.. முடிவில பார்த்து டங்கு ஸ்லிப்பாகுதே:) கேள்வி பதில்களும் நன்று நல்ல நல்ல விளக்கமும் கூட.

    பரிசு பெற்ற அனைத்துக் குட்டீசுக்கும் வாழ்த்துக்கள்.. மீனுக்கும் பின்னால் இருக்கும் நெல்லைத்தமிழனும் ஸ்கூல் போய் போலத்தான் தெரிகிறார் ஹா ஹா ஹா...

    பரிசு கிடைச்சதும் குடீசுக்கு ஏதும் உற்சாகப்பரிசு வாங்கிக் கொடுத்தால் அது நல்ல ஊக்கமாக இருக்கும்.

    ஆனா போட்டியில சீனியரையும் யூனியரையும் ஒன்றாகச் சேர்க்கலாமா கெள அண்ணன்? அது எப்பூடி நியாயமாகும்.

    சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு:) மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூனியர் படைப்புகளை சீனியர்கள்தானே அனுப்ப இயலும்! படைப்பாளிகளுக்கு வயது இல்லை - பதினாலு வயது வைபவ் அடிச்ச அடி (ராஜஸ்தான் அணி வீரர்) அவரின் வயதைப் போல் 3 மடங்கு இருக்கும் முன்னிலை வீரர்களால் கூட அடிக்க இயலவில்லை!

      நீக்கு
  16. பரிசு பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துகள். குழந்தைகளும் கலந்துக்கலாம்னு தெரிஞ்சிருந்தால் நானும் கலந்துண்டிருப்பேனே! இஃகி,இஃகி,இஃகி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி சாரின் ஆகஸ்ட் மாத அறிவிப்பு. வீட்டில் இருக்கும் இராமர் பட்டாபிஷேகம் படத்தை (அப்படி வீட்டில் வைத்திருப்பவர் எல்லோரும் கலந்துகொள்லலாம்) நன்றாக புகைப்படம் எடுத்து போட்டியில் கலந்துகொள்ளுங்கள்.

      நீக்கு
  17. கேள்விகளை கேள்விகளாக அமைக்க ஒரு பயிற்சி:

    உதாரணத்திற்கு நெல்லையின் முதல் வினா.

    1. தயிர் என்பதும் சாப்பிடும் ஒரு கெட்டி திரவம் தானே!
    இரவு என்பதும் ஒரு நேரம் தானே!
    நேற்றிரவு பக்கத்து வீட்டுக்கார அம்மாள் உரைக் குத்த
    அவசரத்திற்கு அரைக்கரண்டி தயிர் கேட்ட பொழுது என் தாயார்
    கொடுக்காமல் அனுப்பி விட்டார்களே! ஏன் எதனால்?

    2. இரவில் இன்னொருத்தர் கேட்டால் தயிர் மட்டும்
    கொடுக்க மாட்டேன் என்கிறார்களே, என்ன அக்கிரமம் ஸார் இது?

    3. உயிரைக் கூடத் தருவேன் ஆயின்
    தயிர் தர மாட்டேன் இரவில்.

    என்று பட்டி மன்றத்தில் ஒருவர் தான் எழுத முயற்சித்த குறள் ஒன்றை கேட்டு ஒரே மண்டைக் குடைச்சல். ஐயத்தை தீர்த்து வைப்பீரா, ஐயன்மீர்?

    இப்படியெல்லாம் கேள்விகள் அமைய முயற்சித்துப் பாருங்கள். வாசிக்க
    அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு பதில் பாணியில் இருக்க வேண்டும் என்றால்
      கே: இ த ஏ கொ மா?
      ப : கொ ல க போ எ ப!

      நீக்கு
  18. இந்த பதிவு மிகவும் அருமை.
    கேள்விகளும், பதில்களும் மிக அருமை.
    கேள்விகளுக்கு விரிவான பதில்கள்.
    தூக்கமின்மைக்கு அமைதியான தூக்கத்திற்கு கடைபிடிக்கவேண்டியவை அனைத்தும் உபயோகமானது.

    படங்கள் அனுப்பி வெற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
    அடுத்த போட்டி தலைப்பு அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!