13.12.25

சாயல்குடி சாலையில் கிடந்த தங்கச் செயின் மற்றும் நான் படிச்ச கதை

 

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி ஒப்படைப்பு: அரசு பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு குவியுது பாராட்டு



கமுதி: சாயல்குடியில் சாலையில் கிடந்த தங்கச் செயினை போலீஸில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் பாராட்டி கவுரவித்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வீரபாண்டி, சந்தோஷ், மகாராஜன் ஆகியோர் நேற்று( டிச.,08) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் தங்கச்செயினை கண்டெடுத்தனர். அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று பரிசோதனை செய்ததில், அந்த நகை தங்கம் தான் என்றும் அதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் எனவும் தெரிந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்களும் அந்த தங்க நகையை சாயல்குடி போலீஸ் ஸ்டேசன் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் இந்த செயலைக் கண்டு, அவர்களை பாராட்டிய போலீசார், இன்று காலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பாக 3 மாணவர்களுக்கும் வாழ்த்து ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தனர். அவர்களுக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

============================================================================



புதுடில்லி: ஆசியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா, இந்தியா வந்துள்ளார். இன்று (டிச.,09) டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  இதனைத் தொடர்ந்து சத்யநாதெல்லா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதம் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; செயற்கை நுண்ணறிவு துறையைப்பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன. சத்ய நாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே  அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி.  செயற்கை நுண்ணறிவின் சக்தியை  பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு அந்தப் பதவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

=============================================================================================

பார்லிமென்ட்டில் ஒரு நேரத்தில் ப சிதம்பரம் இதுபற்றி கிண்டல் அடித்தது நினைவுக்கு வருகிறது.  அவர் பேச்சுக்கு சுற்றி இருந்தோர் கைதட்டி ஆரவாரித்து சிரித்தனர்!
**********



புதுடில்லி: உலகின் மிகப்பெரிய, விரைவான பணம் செலுத்தும் வழியாக யு.பி.ஐ., முறையை ஐ.எம்.எப்., அமைப்பு அங்கீகரித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறியதாவது: ஐ.எம்.எப்., அமைப்பு, 'வளர்ந்து வரும் டிஜிட்டல் சில்லரை பணம் செலுத்தும் முறை' என்ற பெயரில் கடந்த ஜூன் மாதம் ஆய்வு நடத்தியது. உலகின் மற்ற பணம் செலுத்தும் முறைகளைவிட, இந்தியாவின் யு.பி.ஐ., முறை மிகப்பெரியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், வேர்ல்டுவைடு பிரைம் டைம் பார் ரியல் டைம் 2024 (ஏ.சி.ஐ., வேர்ல்டு வைடு) அறிக்கையின்படி, உலக அளவில் ரியல் டைம் பேமென்ட் முறைகளில் 49 சதவீத பங்கை யு.பி.ஐ., பிடித்திருக்கிறது. இந்தியாவில் 12,930 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பிரேசில், தாய்லாந்து, சீனா, தென்கொரியா நாடுகளின் பரிவர்த்தனைகள், இந்தியாவைவிட மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன.

=======================================================================================================================================================

நான் படித்த புத்தகம்   -    பானுமதி வெங்கடேஸ்வரன் 


திசை மாறிய பறவைகள்: 

ஆசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா


காலச்சக்கரம் நரசிம்மா எழுதியிருக்கும் மர்ம நாவல். காலச்சக்கரம் நரசிம்மா என்றாலே அமானுஷ்யம், மர்மம் எல்லாம் சகஜமே. இந்த நாவலில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு கதையை சொல்லி செல்கிறார். 

சும்மா சொல்லக்கூடாது, ஆரம்பமே ஜெட் வேகம். பிரபல கர்நாடக இசைப் பாடகியான சுனந்தா சூரஜ் என்பவருக்கு நள்ளிரவில்  பித்துக்குளி என்பவரிடமிருந்து  ஒரு ஃபோன் வருகிறது. ஃபோனை எடுத்தால் 'பிபரே ராம ரசம்..' என்னும் பாடல் ஒலிக்கிறது. மறுநாள் கச்சேரிக்கு செல்லும் பொழுது அவள் கடத்தப்படுகிறாள். 

அதையடுத்து கேசவ் என்னும் கர்நாடக இசைப் பாடகர்,  கர்நாடக இசை பாடிக்கொண்டிருந்து, பின்னர் திரை இசைக்குத் தாவி விட்ட மால்யதா என்னும் பாடகி, சியாம்(SIAM) என்று அழைக்கப்பட்ட சவுத் இந்தியா அனுராக் அகாடமி ஆஃப் மியூசிக்கின் தலைவர் கிரிதரன் போன்றவர்களும் அடுத்தடுத்து கடத்தப் படுகிறார்கள். இதில் கேசவிற்கும் பித்துக்குளி என்னும் காலர் ஐடியிலிருந்து ஃபோன் வருகிறது. அதே 'பிபரே ராம ரசம்..' என்னும் பாடல் ஒலிக்கிறது. மற்ற  இருவரும் கூட கடத்தப்படும் முன் 'பிபரே ராம ரசம்..' என்னும் பாடலை கேட்கிறார்கள். யார் அந்த பித்துக்குளி? இந்த நால்வருக்கும் அந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம்? என்பதையெல்லாம் விறு விறு விறுவென்று கொஞ்சம் கூட தொய்வில்லாமல் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். 

சதாசிவ பிரும்மேந்திரரால் இயற்றப்பட்ட பிபரே ராம ரசம் என்னும் பாடல் ஆஹிர் பைரவ் என்னும் ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்த பாடலாம். அந்த கால ஆஹிரி ராகமும், இந்தக் கால பைரவி ராகமும் சேர்ந்ததுதான் ஆஹிர் பைரவ் ராகம். ஆஹிரி ராகம் பாடினால் சோறு கிடைக்காதுஎன்று ஒரு நம்பிக்கை, பைரவி மனதை வருத்தும் ஒரு ராகம். ஆஹிர் பைரவி ராகம் மனதை உருக்கி தற்கொலை எண்ணத்தைக் கூட தூண்டுமாம். இப்படி கேள்விப்படாத ஒரு தகவலை அறிந்து கொள்கிறோம்.   

இந்தக் கதையை படிக்கும்பொழுது யாரை குறிப்பிடுகிறார்? இவரையா? அவரையா? என்ற கேள்விகள் எழும்புவதை தவிர்க்க முடியவில்லை. கர்நாடக இசை புனிதமானது, அதை மலினப்படுத்தக் கூடாது என்று கருதுகிறார் என்றும் புரிகிறது.

நல்ல சுகமான கச்சேரியை கேட்ட மாதிரியான அனுபவத்தை தரும்  சுவாரஸ்யமான ஒரு புத்தகம்! புஸ்தகாவில் கிடைக்கிறது.

29 கருத்துகள்:

  1. திசை மாறிய பறவைகள் விமர்சனம் நன்று. படிக்கவேண்டும்.

    இன்றைய பாசிடிவ் செய்திகள் பாராட்டத்தக்கது. ப.சிதம்பரம், ராகுல் பிரியங்காவின் வயிற்றெரிச்சல்கள் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அகிலேஷ் யாதவ், தாக்ரே போன்றவர்களுமா கூட்டணிக்காக நாட்டின் நலனை விட்டுக்கொடுப்பது என ஆச்சர்யப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... இப்போதெல்லாம் நாடு யாருமே சிந்திப்பதில்லை. சிவசங்கரி கதை போல தான், தன் சுகம்..

      இப்போது கூட இந்திய சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கைக்கு யாதவ் ஆதரவு தெரிவித்திருக்கிறார், கையெழுத்திட்டிருக்கிறார்.  என்ன கொடுமை.

      நீக்கு
    2. //திசை மாறிய பறவைகள் விமர்சனம் நன்று.// நன்றி

      நீக்கு
  2. பாசிடிவ் செய்திகள் அனைத்தும் நன்று.

    காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இந்த நூல் படித்ததில்லை. படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...  இப்படியாகத்தானே நாம் புதிய புத்தகங்களை அறிகிறோம்...

      நீக்கு
    2. நன்றி வெங்கட்!
      //இப்படியாகத்தானே நாம் புதிய புத்தகங்களை அறிகிறோம்...// அதுதானே நோக்கம்.

      நீக்கு
  3. பாசிட்டிவ் செய்தி முதல் செய்தி - சாதாரண பசங்க முன்னுதாரணம் மற்ற குழந்தைங்களுக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... குழந்தையிலேயே நேர்மை மனம் இருப்பது பாராட்டத்தக்கது.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் ரொம்பவே பாராட்ட வேண்டும். அதுதான் எனக்கும் தோன்றியது.

      கீதா

      நீக்கு
  4. திசை மாறிய பறவைகள் - படிக்கக் கிடைக்குமா? என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது .

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // படிக்கக் கிடைக்குமா? என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது . //

      எனக்கும்!

      நீக்கு
    2. நன்ரி கீதா & ஸ்ரீராம்

      நீக்கு
    3. நன்றி கீதா & ஸ்ரீராம்

      நீக்கு
  5. ஆஹிர் பைரவி கர்நாடக ராகம் சக்கரவாகம். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது பாடல் ஆஹிர் பைரவி என்றும் சக்கரவாகம் என்றும் சொல்வாங்க.

    பாரதியின் பாடலான காலா உன்னை நான் சிறு புல்லென பாடலை சக்கரவாகம் ராகத்தில் சௌம்யா அவங்க பாடியிருக்காங்க. அவங்க ஆல்பத்தில் நான் கற்றுக் கொண்ட பாடல்.

    அது போல தாஸேட்டன் பாடியிருக்கும் (அடிக்கடி கச்சேரியில் இதைப் பாடுவார்) சிலையே கை கொண்டு சிவரூபமாக்குன்ன பாடல் சக்கரவாகம் ராகம்.

    ஸோ ஆஹிர் பைரவி கர்நாடக சங்கீதத்தில் சக்கரவாகத்தின் குழந்தை என்று சொல்லப்படுவதுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹிர் பைரவி - சக்கரவாஹம் தொடர்பை விளக்கியதற்கு நன்றி.

      நீக்கு
  6. அக்கா உங்க விம்ரசனம் சூப்பர். பொதுவாகவே கதைகளின் முடிவை....சில கதைகளின் முடிவை....அதிலும் குறிப்பாகத் துப்பறியும், மர்மக் கதைகளின் முடிவைச் சொல்லக் கூடாது என்ற என் ஆசையைக் கொள்கையை ஹாஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவை சொல்லவில்லையே.. நீங்களாக யூகித்திருந்தால் கம்பெனி பொறுப்பேற்காது.

      நீக்கு
    2. அதுதான், பானுக்கா. நீங்க சொல்லததுதான் எனக்குப் பிடித்த விஷயம்னு அதை அந்தச் சொல் விட்டுப் போக சிரிப்பு மட்டும் இங்கு வந்திடுச்சு.

      கீதா

      நீக்கு
  7. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு உச்சத்தைத் தொடும் வாய்ப்புகள் அதிகம். எதிர்காலத்தில். அல்லது வெளிநாடுகளில் படிக்கும் ஆராய்ச்சி செய்யும் இந்தியர்கள்....

    சிலது இப்பச் சொல்ல முடியலை இங்கு...பின்னர் வாய்ப்பு வரும் அப்ப சொல்கிறேன். ஸ்ரீராமிற்குப் புரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய முதலீட்டை வரவேற்போம்.
    டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியா முன்னணியில் இருப்பது நல்லதுதானே? உலகம் முழுவதிலும் இப்போது டிஜிட்டல் பரிமாற்றம்தானே?
    தங்க சங்கிலியை போலீசிடம் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையை பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. படித்த புத்தகம் பகுதியில் என்னுடைய புகைப்படம் எத்ற்கு? காலச்சக்கரம் நரசிம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  10. தங்க சங்கிலியை பொலிசாரிடம் ஒப்படைத்த நேர்மை மிக்க மாணவர்கள்களை பாராட்டுவோம்.

    புத்தக அறிமுகம் நன்றாக உள்ளது . படிக்கத் தூண்டுகிறது.

    இந்தியாவின் செயற்கை நுண்ணறி மேலோங்கட்டும். மைக்ரோசாப் நிறுவனத்தின் முதலீடு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. பித்துக்குளி முருகதாஸ் போல இவர் பித்துக்குளி ராமதாஸாக இருப்பாரோ? பித்துக்கொள்ளி என்பதுதான் பித்துக்குளி என்று மருவி இருக்குமோ? பித்திலே குளிப்பவர் என்பவர் என்பதும் சங்கீத மழையில் நனைபவர், பக்தியில் ஆழ்பவர் (ஆழ்வார்) என்பது போல கவித்துவமாகவே இருக்கிறது :-)

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. குழந்தைகள் நேர்மைக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் பெரியவர்கள் ஆகும் போதும். இப்படியே நல்ல குணத்தோடு இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும்

    பதிலளிநீக்கு
  14. பானு பகிர்ந்த கதை படித்தது இல்லை படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம்

    பதிலளிநீக்கு
  15. அளவான, கச்சித கதை விமர்சனம், பானுமதி வெங்கடேஸ்வரன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திருவாழ்மார்பன் சார். எத்தனை அழகான பெயர்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!