செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : உள் உணர்வு



     இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியை
அலங்கரிப்பவர் அதிரா.  


     இவரது தளம்  என் பக்கம்.

     அதிரா எங்களுக்குத்தான் புதுமுகம்.  மற்ற வலையுலக நண்பர்களுக்கு  அறிமுகமானவர் என்று தெரிகிறது.  அரட்டை அரசியாக இருக்கிறார்.  வாங்க அதிரா...   ஒரு முன்னுரை கொடுங்க...  தொடர்ந்து நீங்கள் தந்திருக்கும் கதையைப் படிக்க ஆவலாக இருக்கிறோம்....


===================================================================


எல்லோருக்கும் வணக்கம்!


இங்கு என் பேச்சுவழக்கிலேயே அனைத்தையும் எழுதியிருக்கிறேன், தவறுகள் இருப்பின் மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

ஏஞ்சலின் என்கிற அஞ்சு எழுதிய கதைக்கு பின்னூட்டம் கொடுக்கவே முதன்முதலில் இங்கு வந்தேன், ஏனோ தெரியவில்லை அப்பவே என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது, என்னையும் ஒருநாள் கதை எழுதும்படி அழைப்பு வரலாம்:) என, அதேபோல் சகோதரர் ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவ் “உள்ளுணர்வு” தலைப்பையே தெரிவு செய்தேன். என்னையும் இங்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி.

எனக்கு யாராவது கதை எழுதுங்கோ என்றோ அல்லது ஒரு கவிதை சொல்லுங்கோ எனக் கேட்டால் எதுவுமே உடனே வராது, அடிச்சுக் கேட்டாலும் வராது, ஆனா திடீர் திடீரென நிறைய எழுத வரும், அதனால்தான் இது ஏற்கனவே எழுதி என் புளொக்கில் போட்டதையே தொகுத்து இங்கு தந்திருக்கிறேன்.

நான் தனியே வீட்டில் வேலை செய்யும் நேரங்களில் எல்லாம் எப்பவும் ரேடியோ கேட்பேன் அல்லது பட்டிமன்றம், பிரசங்கங்கள், பிரபல்யங்களின் மேடைப் பேச்சுக்கள்.. இப்படிக் கேட்டபடியேதான் வேலை செய்வது வழக்கம். அதன்போது அவர்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டு பின்பு என் பாசையில் அதனை எழுதுவேன்.  அப்படித்தான் இதனையும் தொகுத்து எழுதினேன். நன்றி.

ஊசிக்குறிப்பு: இது பொதுத்தளம் என்பதால் மிகவும் கஸ்ஸ்டப்பட்டு என் வாயை முடிந்தவரை அடக்கியே:), இதனை தொகுத்துப் போட்டிருக்கிறேன், ஏனெனில் நான் ரொம்ப நல்ல பொண்ணு:)--அப்பாவீஈஈஈ,, ஆறு வயசிலிருந்தே:).[படத்தில தெரியுதெல்லோ?:)].


=================================================================================

உள் உணர்வு:)

 

அதிரா


ரு அரசன் இருந்தார். அவர் தினமும் காலையில், தன் குதிரை வண்டிலில், ஊரைச் சுற்றிப் பார்த்து வருவது வழக்கம். அப்படி ஊரைச் சுற்றி வரும்போது, எதிரில் வரும் மக்கள் கும்பிடுவார்கள், கை காட்டுவார்கள், அப்போ பதிலுக்கு அரசனும் சிரிப்பார், கை காட்டுவார், கும்பிடுவார்.

அப்போ ஒருநாள் இப்படி அரசன் ஊரைச் சுற்றி வந்தபோது, ஒரு சந்தன மர வியாபாரி எதிரே வந்தார், அவர் அரசனைக் கண்டதும் கும்பிட்டார்.. ஆனால் அவரைப் பார்த்ததும் அரசனுக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது, ஏனோ பதிலுக்கு கைகாட்டக்கூட பிடிக்கவில்லை.. பேசாமல் போய் விட்டார்.

2ம் நாளும் அதே வியாபாரி இன்னும் மரியாதையாகக் கும்பிட்டார், அரசருக்கு அவரின் செயல்,  இன்னும் அதிக எரிச்சலையே கொடுத்தது, அன்றும் கோபமாக பதிலுக்கு ஏதும் சொல்லாமல் வந்துவிட்டார்.

அரண்மனைக்கு வந்தவருக்கு மனம் கேட்கவில்லை, தனக்கு ஏன் இப்படிக் கோபம் வந்தது, அந்த வியாபாரி ஏதும் தனக்கு தவறு செய்யவில்லையே என எண்ணியவாறு, மந்திரியைக் கூப்பிட்டுச் சொன்னார் நடந்ததை.

மந்திரி சொன்னார் நாளைக்குப் போய் வாங்கோ எல்லாம் சரியாகிடும் என. அடுத்த நாள் போனார் அரசர், வியாபாரி கும்பிட்டார், அரசனுக்கு பதிலுக்கு கோபம் வரவில்லை, கையெடுத்து தானும் கும்பிட்டு விட்டு வந்தார்.

வீட்டுக்கு வந்து மீண்டும் மந்திரியிடம் விசாரித்தார்... அப்போ மந்திரி விளக்கினார்...

அந்த வியாபாரி சந்தனக் கட்டைகள், நிறைய வெட்டி வந்து அடுக்கியிருக்கிறார், அப்போ முதல் நாள் உங்களைக் கண்டபோது, மனதிலே நினைத்தார் அரசன் குடும்பத்தில் யாராவது இறந்தால், தன் சந்தனக்கட்டைகளை வாங்குவாரே அரசன், என நினைத்துக் கும்பிட்டார், அதனால் அரசனுக்கு மனதில் ஏதோ உள்ளுணர்வு பிடிக்காமல் போய் விட்டது அதனால் கோபத்தில் வந்தார். 

அரச பரம்பரை மட்டுமே சந்தனக் கட்டைகளைப் பாவிப்பார்களாம் அக்காலத்தில்.

2ம் நாள் போனபோது அந்த வியாபாரி எண்ணினார், அரசனே இறந்தால், தன் சந்தனக் கட்டைகள் முழுவதையும் விற்றிடலாமே என, அவ்வாறு எண்ணிக்கொண்டே கும்பிட்டமையால், அந்த எண்ண அலை வரிசையால் அரசனால் பதிலுக்குக் கும்பிட முடியவில்லை. எரிச்சல் இன்னும் அதிகமானது.

3ம் நாள் அரசன் ஊர் சுற்றப் போகுமுன்பே, இந்த மந்திரி போய், சந்தன வியாபாரியிடம் சொல்லியிருக்கிறார், அரச சபையில் யாகம் வளர்க்கப் போகிறோம், எனவே யாகம் செய்ய நிறைய சந்தனக் கட்டைகள் தேவை என. அதனால் மனம் குளிர்ந்த வியாபாரி, சந்தோசத்தோடும், நன்றியுணர்வோடும் கும்பிட்டார், அது அரசனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.

இதுதான் உள்ளுணர்வு என்பது. அதாவது எம்மையும் அறியாமல் எம் மனதில் தோன்றும் எண்ணம். ரோட்டால் போகும்போது, ஒருவர் சிரித்துவிட்டுச் சென்றால், சிலநேரம் எமக்கு மனம் அரிக்கும், அவரின் சிரிப்புச் சரியில்லையே... ஒரு மாதிரி இருந்துதே... என்றெல்லாம். அதேபோல, சிலர் சிரித்தால் அன்று முழுவதும் சந்தோசம் பொங்கும்(காரணமே இல்லாமல்).

இந்த உள்ளுணர்வு மூலம் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவரின் மனநிலை எமக்குத் தெரிந்து விடுகிறது..  


அப்படியான உள்ளுணர்வுத் தன்மை, ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம்.  அதிலும் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்களே.. அது ஒருவித அறிவுக் கூர்மை, சமயோசித புத்தியைக் குறிக்கின்றதாம்... அதுவும் பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்...அதுக்கு ஒரு சின்ன கதை சொல்கிறேன்..

 “பெண் புத்தி பின் புத்தி”

ஒரு தாய் தந்தையருக்கு(ஆரம்பம் கரீட்டுத்தானே?:)) ஒரு மகள். அவவுக்குத் திருமணமாகி கணவன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போக ஆயத்தமாகிறா.

அப்போ தந்தை, மகளை அணைத்து அழுதுகொண்டே சொல்கிறார்.. “ அம்மா நீ, இங்கே செல்லமாக வளர்ந்திட்டாய், அங்கு கணவன் வீட்டில் உன்னை எப்படிக் கவனிக்கப் போகிறார்களோ, மாமியார் எப்படியானவரோ என எதுவும் எமக்குத் தெரியாது, ஆனால் நீ தைரியமாக இரு, அங்கு உனக்கு எந்த விதமான பிரச்சனை வந்தாலும் உடனே எமக்குக் கடிதம் போடு, அடுத்த நிமிடமே நாம் அங்கு நிற்போம், நீ கஸ்டப்பட நாம் விடமாட்டோம்”என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் சொன்னார்..

 “என்னங்க நீங்க சொல்றீங்க? இப்படியா மகளுக்கு சொல்லி அனுப்புவது? அங்கு கடிதம் எழுதும்போது, அதை மருமகனோ அல்லது மாமியாரோ படித்து விட்டால், எம் மகளின் கதி என்னாகும்? கொஞ்சமாவது “கிட்னியை” பாவிக்க  வேண்டும்”.. எனச் சொல்லி விட்டு,[புத்தி(மூளை/அறிவு)யை பூஸ் பாஷையில் சொல்லும்போது அது கிட்னி:)].

தாய் மகளிடம் சொன்னா....

“இஞ்ச பாரம்மா, அங்கு ஏதும் பிரச்சனை இருப்பின், எமக்கு அதை எழுதாதே,  அது உன் வாழ்க்கையைப் பாதிக்கும்,  எப்பவும் நலமாக இருக்கிறேன் என்றே எழுது, ஆனால் நீ தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிறாயாக இருந்தால், கடிதம் எழுதும்போது, ஒரு பென்சிலால் எழுதிப்போடு, இல்லை சந்தோஷமாக இருக்கிறாய் எனில் பேனாவால் எழுதிப்போடு, நாம் அதை வைத்தே புரிந்து கொள்வோம்”.

உன்னில் தவறு வந்திடுமளவுக்கு எதுவுமே பண்ணாதே என.. அறிவுரை கூறி அனுப்பினார்..

மகள் கணவர் வீடு போனபின், ஒரு மாதத்தால் மகளிடமிருந்து கடிதம் வந்தது....

தந்தையும் தாயும் போட்டிபோட்டுப் பிரித்தார்கள்..

பேனாவாலோ அல்லது பென்சிலாலோ எழுதப்பட்டிருக்கு என... ஆஹா.. என்ன சந்தோசம்... பென்னால் எழுதப்பட்டிருந்தது கடிதம்... பெற்றோருக்கோ மகிழ்ச்சி... மகள் சந்தோசமாக இருக்கிறா அதுவே போதும் என எண்ணியபடியே கடித்தத்தைப் படித்தனர்....

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு...
உங்கள் மகள் “தங்கம்” எழுதிக்கொள்வது,


நான் இங்கு மிகவும் நலமாக இருக்கிறேன்... என் கணவர் என்னை கண் கலங்காமல் பார்த்துக்கொள்கிறார், மாமியார் தலைமேல் தாங்கி நடக்கிறா... எனக்கு துன்பம் என்ன வென்றே தெரியவில்லை ... அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்... உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும்போல் உள்ளது...


இத்துடன் முடிக்கிறேன்... அம்மா இங்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. என்னவெனில் வீடெல்லாம் தேடினேன்.. ஒரு பென்சிலுமே கிடைக்கவில்லை, அதனாலேயே பேனாவினால் எழுதியிருக்கிறேன்...
அன்பு மகள்,
தங்கம்.

இப்போ எல்லாமே பிரிஞ்சிருக்குமே?:)))... பெண் புத்தி பற்றி:))...


ஊசிக்குறிப்பு:)-
எனக்கு ஆராவது ஏசப்போறீங்கள், அல்லது திட்டப் போறீங்கள் எனில்.. மனதுக்குள்ளேயே திட்டிடுங்கோ:)).. ஏனெனில் பப்ளிக்கில திட்டினால் அது அழகில்லை எல்லோ...:) அதனால தான் முன் ஜாக்கிர்ர்ர்தையா இதையும் சொல்லி வைக்கிறேன்:)). நன்றி_()_ .

132 கருத்துகள்:

  1. பின்னூட்டத்தில் கலக்கிறாப்போல் இதிலும் கலக்கிட்டீங்க அதிரா! :)

    பதிலளிநீக்கு
  2. பெண் புத்தி என்றால் "பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி" என்று சொல்வார்கள்...

    ஒரு பெட்டி பென்சில்களோடு "தாய்" தங்கத்தை சந்திக்க செல்வதாக தகவல்...!

    பதிலளிநீக்கு
  3. //
    இங்கு என் பேச்சுவழக்கிலேயே அனைத்தையும் எழுதியிருக்கிறேன், தவறுகள் இருப்பின் மன்னிச்சுக் கொள்ளுங்கோ.//


    மன்னிக்க முடியாது முடியாது இங்கு எழுத்துபிழைகளுடன் எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளையும் 100 தடவை ஒரு நோட்டில் எழுதி அதை போட்டோவாக போடவும் அப்படி எழுதியதை நோட்டரி பப்ளிக் சைன் வாங்கி போடவும் இல்லைன்னா டி ராஜேந்தரை கூப்பிட்டு உங்களை திட்ட வைக்கப் போகிறேன்

    பதிலளிநீக்கு
  4. ///ஏஞ்சலின் என்கிற அஞ்சு எழுதிய கதைக்கு பின்னூட்டம் கொடுக்கவே முதன்முதலில் இங்கு வந்தேன், ஏனோ தெரியவில்லை அப்பவே என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது, என்னையும் ஒருநாள் கதை எழுதும்படி அழைப்பு வரலாம்://
    அடியாத்தே என்னாமா கதையள்க்கீறீர்கள் இங்கு பின்னுட்டம் போட்டா உடனே ஸ்ரீராம் கதை எழுத சொல்லுவார் என்று தெரிந்துதானே இங்கே பின்னுட்டம் போட்டு இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  5. ஹலோ உங்களை யாரு அடிச்சு கேட்டாலும் கவிதை மட்டும் எழுதீடாதிங்க அப்புறம் எனக்குள் உற்ங்கி கிடக்கும் ஆத்தா அப்புறம் வெறி கொண்டு ருத்தர தாண்டவம் ஆடிவிடுவா

    பதிலளிநீக்கு

  6. ////நான் தனியே வீட்டில் வேலை செய்யும் நேரங்களில் எல்லாம் ///

    ஹலோ டிவி அல்லது ரேடியோ முன்னால் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவதையெல்லாம் வேலைன்னு சொன்ன எப்படிங்க.....கொஞ்சமாவது ஒரு நியாயம் வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு. ரசித்தேன்.

    இரண்டு கதைகள்! நன்று!

    பதிலளிநீக்கு
  8. படத்தை பார்த்தால் ஜான்சி ராணி மாதிரியல்லவா இருக்கிறீங்க....ஆமாம் அப்பாவிக்கு உங்களுக்கு அர்த்தமே தெரியவில்லை போல....ஆமாம் 6ம் வகுப்பிற்குதான் நீங்கள் போனீர்கள் என்றும் ஆனால் அங்கு படிக்கவில்லை என்றும் சொல்லி இருக்கீங்க முன்பு ஆனால் எனக்கு நீங்கள் படிக்கவில்லையென்றாலும் ஒகே ஆனால் உண்மையிலே ஆறாம் வகுப்பிற்குதான் சென்றீர்களா என்று சந்தேகம்... அப்பாவிக்கு உங்களுக்கு அர்த்தம் சரியாக தெரியவில்லை அதனால் என்னை வந்து பாருங்கள் அல்லது என் புகைப்படம் யாரிடம் இருந்தாலாவது வாங்கி பாருங்கள் அப்போதுதான் அப்பாவி எப்படி இருப்பான் என உங்களுக்கு தெரியும்

    பதிலளிநீக்கு
  9. ///ஒரு அரசன் இருந்தார். அவர் தினமும் காலையில், தன் குதிரை வண்டிலில், ஊரைச் சுற்றிப் பார்த்து வருவது வழக்கம்///

    வேலை வெட்டி இல்லாத சோம்பேறி அரசன் போல இருக்கே அதுதான் தினமும் ஊரை சுற்றி வந்து இருக்கிறான்... காலையில் தினமும் நம்ம ஏஞ்சலின் போல வாக்கிங்க் அல்லது ஜாக்கிங்க் போக வேண்டாமோ

    பதிலளிநீக்கு

  10. அந்த வியாபரி திறமை இல்லாதவனாக இருக்கிறான் அவனிடத்தில் நான் இருந்திருந்தால் (நான் சேல்ஸ்மேன் என்பதால்) அரனைன் மாமியார் இறந்தால் இவர் நிறைய சந்தனைக்கட்டை வாங்குவாரே என்று நினைத்து இருப்பேன் அரசனின் உள்ளுனர்வும் இதை புரிந்து முதல் நாளே என்னை அரசவை வியாபாரி ஆக்கி இருப்பார் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  11. //இதுதான் உள்ளுணர்வு என்பது. அதாவது எம்மையும் அறியாமல் எம் மனதில் தோன்றும் எண்ணம். ரோட்டால் போகும்போது, ஒருவர் சிரித்துவிட்டுச் சென்றால், சிலநேரம் எமக்கு மனம் அரிக்கும்,///


    இதற்கு காரணம் என்ன தெரியுமா? நாம லூசுன்னு அவனுக்கு தெரிஞ்சதனால அவன் நம்மை பார்த்து சிரித்தானா அல்லது அவ லூசாக இருப்பதினால் நம்மை பார்த்து சிரித்தானா என்று இயல்பாக பெண்களுக்கே தோன்றுவதுதான் அதனால் பெண்கள் மனசு இப்படி அரிக்கும் என்று மதுரைதமிழானந்தா சுவடியில் அந்த காலத்திலே எழுதி வைத்திருக்கிறாராம்

    பதிலளிநீக்கு
  12. ஆஹா அதிரா தூங்கி கொண்டிருக்கும் நேரம் நல்லா கலாய்ச்சுட்டோம் அப்ப மனசுக்கு ரொம்ப திருப்தி அவங்க வருவதற்குள் நாம நல்ல புள்ளையாக தூங்க போய்விடுவோம்

    பதிலளிநீக்கு
  13. மக்களே என்னை அடுத்த இரண்டு வாரத்திற்கு காணவில்லை என்று தேடாதீர்கள் என் மனைவிக்கு பயந்து கட்டில் அடியில் ஒழிந்து கொள்வது போல அதிராவிற்கு பயந்து இணையத்தில் இருந்து ஒழிந்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. நான் இங்கு அதிகம் கலாய்ட்துவிட்டதால் இரண்டாவது கதையை வேற யாராவது கலாய்த்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  15. முதல் கதை படித்ததில்லை. இரண்டாவது கதை படித்திருக்கிறேன், இரண்டுமே நல்லா இருந்தன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. 1)

    அதிரடி,
    அலம்பல்,
    அட்டகாச,
    அயோக்ய,
    அல்டி,
    அதிரஸ
    அதிரா ......

    என் உள்ளுணர்வு என்னை இப்போ ஏதேதோ எழுதச் சொல்லித் தூண்டி விடுகிறது. இருப்பினும் நான் எழுதப்போவது இல்லை ...... ஏனென்றால் ’இது பலரும் வருகை தரும் பொதுத்தளம்’ என்பதால் மட்டுமல்ல .... கடைசியில் இரண்டாவது ஊசிக்குறிப்பில் அதிராவே மன்றாடிக் கேட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  17. 2)

    //ஏஞ்சலின் என்கிற அஞ்சு எழுதிய கதைக்கு .......//

    ’புலியைப்பார்த்து, தன் உடம்பும் அதுபோல வரி-வரியாக அழகாக ஆகணும் என நினைத்துப் பூனையும் சூடு போட்டுக்கொண்டதாம்’ என ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

    ஏனோ என் உள்ளுணர்வு அந்தப் பழமொழியை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்து விட்டது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  18. 3)

    //ஏனெனில் நான் ரொம்ப நல்ல பொண்ணு:)--அப்பாவீஈஈஈ,, ஆறு வயசிலிருந்தே:).[படத்தில தெரியுதெல்லோ?:)].//

    ஆறு வயசிலேயே படத்தில் காட்டியுள்ளபடி செம குண்டாக இருந்தீங்களோ !

    இப்போது உள்ள சமீபத்திய படத்தையே வெளியிட்டிருக்கலாம்.

    ஒருவேளை அது எல்லைமீறிய அழகாக இருந்து திருஷ்டி பட்டுப்போயிருக்குமோ என்னவோ !!

    >>>>>

    பதிலளிநீக்கு
  19. 4)

    எப்படியோ எங்கள் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ மூலம் உங்களின் மிகப்பழைய சிறுவயது (ஆறு வயது) போட்டோவாவது பார்க்க முடிந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. :)

    ஏற்கனவே ஒருமுறை நீங்கள் திரும்பிக்கொண்டு நின்ற போட்டோவைப் பார்த்துள்ளேன். அதில் சுமார் ஆறடி கூந்தலை அள்ளி முடியாமல், தரையைத் தொடுமாறு தொங்க விட்டிருந்தீர்கள்.

    ஆளே ஐந்தடி தானே எப்படி ஆறடிக் கூந்தல் இருக்க முடியும் என்று என் உள்ளுணர்வு சொல்லிச்சு.

    அதில் பாதிக்கும் மேல் செளரியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

    இப்போது முடியினை அழகு படுத்தி இன்னும் குறைத்துக்கொண்டீர்கள் போலிருக்குது. இதில் ஒரு முடி கூட நரைக்காமல், கரு-கருவென்று மிகவும் இளமையாகக் காட்டியுள்ளீர்கள்.

    [மிகவும் கவனமாக ‘டை’ அடித்திருப்பீர்கள் என நம் அஞ்சு அங்கு முணுமுணுத்துச் சொல்வது என் காதிலும் விழுகுது. :)]

    >>>>>

    பதிலளிநீக்கு
  20. 5)

    முதல் கதையில் வரும் அரசனையும், சந்தனக்கட்டை வியாபாரியையும்விட அந்த மந்திரி மிகவும் புத்திசாலி ....... நம் அதிரடி அதிரா போலவே.

    >>>>>

    பதிலளிநீக்கு
  21. 6)

    //அம்மா இங்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. என்னவெனில் வீடெல்லாம் தேடினேன்.. ஒரு பென்சிலுமே கிடைக்கவில்லை, அதனாலேயே பேனாவினால் எழுதியிருக்கிறேன்...//

    ஆஹா, கடைசியில் ஓர் சூப்பர் டிவிஸ்ட் .....

    ’பஞ்ச்’ பஹூத் அச்சா ஹை.

    ஒன்று இரண்டாக உபத்ரவத்திற்கு மூன்றாக ஊசிக்குறிப்புகளுடன் கதை சொல்லியுள்ள அதிராவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    oooooo

    பதிலளிநீக்கு
  22. Jessie woke me up at 5 am. .😃and I landed up here lol. Nice stories miyaav shall come again at noon 😃

    பதிலளிநீக்கு
  23. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் என் கதை வெளிவந்துவிட்டதோ... ஹையோ மீ கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிட்டேன்ன்ன்ன்ன்:)... அமேஏஏஏஏரிக்கால முழங்குவது திருச்சி உச்சிப்பிள்ளையார் மலையில பட்டுத் தெறிக்குதே முருகா என்னைக் காப்பாத்துங்ங்ங் ,,,, வர நெக்லஸ் வள்ளிக்குப் போடுவேன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  24. அதிராவின் முகத்தை இப்போது தான் பார்க்கிறேன்! அழகு!
    சிறுகதைகளிலும் 'அதிரா டச்' இருக்கிறது! வாழ்த்துக்கள் அதிரா!

    பதிலளிநீக்கு
  25. அதிராவின் இரண்டு கதைகளும் அருமை.
    விளையாட்டாய் பேசினாலும் உள்ளு உணர்வு அருமையான கதையை கொடுத்து விட்டது.
    வாழ்த்துக்கள் அதிரா.

    பதிலளிநீக்கு
  26. அன்றொருநாள் நான் தேம்ஸ் ஆற்றங்கரையில் தெய்வீகக் குரலில்(நம்புங்கோ ட் ருத்:)) பாடிக்கொண்டு, ஒரு அப்பாஆஆஆவியாக வோக் போயிட்டிருந்தேன்,
    அப்போ பின்னாலே மூலஸ்தானத்திலிருந்து ஒரு குரல்..... "அதிரா பிஸியாக இருக்கிறீங்களா?"... திரும்பிப் பார்த்தேன் அட நம்மட அஞ்சு:) ... இல்லயே என்ன அஞ்சு??
    அது அதிரா எங்கட எங்கள் புளொக் சகோ ஸ்ரீராம் கேட்டார் அதிராவுக்கு கதைக்க தெரியுது:) (ஒரு எதுகை மோனைக்காக சேர்த்திருக்கிறேன் அது தப்பா:))ஆனா கதை எழுத தெரியுமோ" என... நானெல்லாம் பிறந்த உடனேயே அம்மா அப்பாவோடு பேசினனானாக்கும்... நம்புங்கோ... நான் சொல்வதெல்லாம் உண்மை .... தொடரும்....:)

    பதிலளிநீக்கு
  27. 2. டொரருது.....
    சகோ ஸ்ரீராம் ரொம்ப நல்லவர், நீங்க பயப்படாதீங்க , கதை எழுதுங்கோ , எங்கள் புளொக் வாங்கோ, உங்களைக் கேட்காமலேயே, ஆமா அவ நல்லா எழுதுவா" எனச் சொல்லிட்டேன்ன்ன் என்றா, அதைக் கேட்டதும் எனக்கு ஒரு தேம்ஸ் கரைப் பாறாங்கல்லைத் தூக்கி என் காதிலே:) போட்டதுபோல இருந்திச்சா:)....

    இந்தக் குளிரிலும் பொலபொலவென வேர்த்துக் கொட்ட.... என்னை விடுங்கோ ஜாமீஈஈஈ மீ ஒரு அப்பாஆஆஆவி நேக்கு அடிச்சுப் போட்டாலும் எழுத வராது என ஓடத் தொடங்கினேன்ன்ன்ன்ன்....

    பாய்ந்து என் வாலைப் புடிச்சிட்டா... வெரி சொறி டங்கு ஸ்லிப்ட்:).... காலைப் பிடிச்சு நிறுத்திட்டா:)
    தொடரும்.........

    பதிலளிநீக்கு
  28. 3.டொரருது...
    என்னை நிறுத்தி கதை எழுதச் சொல்லி மிரட்டினா:)[விதி படத்தில் மோகன் கோர்ட்ஸ்ல சொன்னதுபோல “மிரட்டினா”]:).,

    இல்ல அதிரா, ஏதாவது எழுதுங்களேன்.. நீங்க எழுதுவீங்கதானே எண்டா:).. இல்ல அஞ்சு எனக்கு ஆத்தில ஆத்துக்காரர் அரசசபை போதாதென பள்ளிக்கூடம்போய்ப் பிள்ளைகளையும் பார்க்கவே நேரம் பத்தல:) இதில கொமெண்ட்ஸ் போடவே தள்ளாடுறேன்.. நான் போய் எப்படி இப்போ எழுதுவேன் என தள்ளாடிய இடத்தில...

    முதல்ல வாங்கோ “கணபதி ஸ்டோர்”போய் ஒரு சிறிலங்கன் நெக்டோ குடிச்சு வேர்வையை அடக்குங்கோ என்று நெக்டோ வாங்கி தந்தா:)[ஊசிக்குறிப்பு:- நாந்தான் காசு பே பண்ணினேன்:))]...
    ஹா ஹா ஹா.. இனித்தான் நான் ரொம்ப சீரியசாக பேசப் போறேன்ன்..:)..

    இல்ல உண்மையில் அப்போதான் அஞ்சு சொன்னா, இல்ல அதிரா, உங்க புளொக்கில் ஏற்கனவே எழுதிய கதையைக்கூட அனுப்பி வைக்கலாம், நீங்க எழுதியதா இருந்தா ஓகே, வேணுமெண்டா உங்களுக்கு ரைம் இல்லன்னா நான் உங்க புளொக்ல தேடி தரட்டா? எனக் கேட்டா...

    அப்போதான் நேக்கு போன உசிரு வந்திருச்சி... சரி ஓகே அப்போ சம்மதிக்கலாம் என முடிவெடுத்தேன்.. அதன் பின்பே சகோதரர் ஸ்ரீராம் என்னைக் கேட்டார்ர்...

    பதிலளிநீக்கு
  29. 4. டொரருது..
    சகோ ஸ்ரீராம் என்னைக் கதை அனுப்பச் சொல்லிக் கேட்டது ஒரு வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன்... அப்ப்போ அவர் காலநேரம் சொல்லவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), வெறுமனே.. செவ்வாய்க்கிழமைக்கு கதை அனுப்ப முடியுமோ என்றார்ர்....

    நான் கை விரல் கால் விரல் எல்லாம் எடுத்து எண்ணினேன்.. மொத்தம் 3 நாட்/4 நாட்களே இருந்திச்சா... அதில வேறு சனி ஞாயிறு வந்தாலே நேரம் கிடைக்காதே என, உடனேயே வேர்க்க விறுவிறுக்க... கொடுத்த வாக்கை காப்பாத்தோணுமெல்லோ:)..

    ஓடினேன் தேடினேன்ன்.. அஞ்சு இன்னொரு பக்கத்தால தேடி ஒரு முடிவுக்கு வந்து அவசர அவசரமா அனுப்பி வச்சால்ல்ல்ல்ல்ல்... “ உங்கள் கதை பெப்ரவரி 21ம் திகதி” வெளிவரும் என பதில் வந்துது ... ஙேஙேஙேஙேஙேஙேஙேஙே:)... இந்த இடத்தில மீ தேம்ஸ்க்கு ஓடினேன்ன்ன்ன்ன்:))

    டொரரும்....

    பதிலளிநீக்கு
  30. 5. டொரருது....
    ஹா ஹா ஹா, இக்கதை அனுப்பி.. கொஞ்ச நாளாலதான் ஒரு யோசனை வந்துது என்புளொக்கில் நிறைய கதை எழுதியிருக்கிறேனே, கொஞ்சம் அவசரப்பட்டிட்டோமோ... இன்னும் பொறுமையா தேடி அனுப்பியிருக்கலாமோ என எண்ணி..

    இன்னொன்று தேடி அனுப்பினேன் சமீபத்தில:)சகோ ஸ்ரீராமுக்கு[அஞ்சுக்கு சொன்னால் அடிப்பா:) என சொல்லல்ல:)] அதைப் பார்த்த அடுத்த செக்கண்ட்டே:).. இதில டுவிஸ்ட்டே இல்லையே எனப் பதில் வந்துதா:)).. அச்சச்சோ அப்போ டுவிஸ்ட் இல்லாதுவிட்டால் கதை எழும்பாதோ என என் வாலைச் சுருட்டிட்டு அடக்கொடுக்கமா அப்பாவியா இருந்திட்டேன்ன்...:)

    இப்போ கோபு அண்ணன்கூட டுவிஸ்ட் இருக்கு இதில் என மென்சன் பண்ணியிருக்கிறார்ர்.. அப்போ டுவிஸ்ட் இருந்தால்தான் கதைக்கு நல்லது என்பதை இக்கதை எழுதும் பகுதியில் கலந்து கொண்டமையால்தான் தெரிஞ்சு கொண்டேன்ன், இது புது அனுபவம் எனக்கு....

    என் கதையை, என் பாணியிலேயே ஏற்றுக் கொண்டு வெளியிட்ட சகோதரர் ஸ்ரீராம் க்கு மியாவும் மியாவும் நன்றி கூறி,

    இதோ இந்த நீலக்கல்லும் வைரமும் பதித்த மோதிரத்தைப் பரிசாக அளிக்கிறேன்ன்(தரப்போவது நானல்ல:)), ... என் சார்பில் இதனை அளிக்க இருப்பவர்.. அமெரிக்காவாழ் ....அவர்கள் ட்ருத்:)... கட்டிலுக்குக் கீழே இருந்தாலும்... புகைக்கூட்டுக்குக்கீழே ஒளிச்சிருந்தாலும் பறவாயில்லை.. உடனே மேடைக்கு வரவும் ட்ருத்:).(மோதிரத்தை வாங்கிக்கொண்டு).

    டொரர் நிறைவுற்றது>>>>:).

    பதிலளிநீக்கு
  31. இன்னொரு உண்மை இங்கு நான் சொல்லியே ஆகோணும்.. இது பெருமைக்காகவோ.. புகழ்ச்சிக்காகவோ அல்ல...

    அதாவது நான் எழுதிய கதையை... அப்படியே என் பாணியிலேயே, எந்த மாற்றமும் செய்திடாமல்.. அதிராவை அதிராவாகவே வெளியிட்டமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு. மிக்க நன்றி சகோதரர் ஸ்ரீராம்.

    சொற்பிழை.. பொருட்பிழை திருத்தாமல்... ஒரு எழுத்துப் பிழையைக்கூட கண்டுபிடிக்காமல்:))..[நான் தான் எழுத்துப் பிழையே விடமாட்டேனே,, ழ/ள எல்லாம் அயகா:)[ழ/ள வரவேண்டிய இடங்களில் “ய” போட்டிட்டால்ல் கொயப்பமே இருக்காதே:))] எழுதுவேன் என்பது பிரித்தானியாவுக்கே தெரிந்த உண்மை.. நான் அஞ்சுவைச் சொல்லல்ல:).

    ஒரு சம்பவம் நினைவுக்கு வருது...
    ஒர் தளத்தில் வெளியிட என்னைக் கவிதை எழுதி தரும்படி கேட்டிருந்தனர்... நான் கண்ணதாசன் அங்கிளின் படுபயங்கர:) ரசிகை என்பதற்காக.. அவரைப்போலவே எழுத முடியுமோ என்ன?:) முறைக்காதீங்கோ:)).. விரலுக்கேத்த வீக்கம்தானே...

    என் பாஷையில் எழுதினேன்.. அது ஒன்றும் போட்டிக்காக அல்ல.. ச்ச்ச்சும்மா வெளியிட மட்டுமே... ஆனா அக் கவிதையை.. அக்குவேறு ஆணி வேறாகப் பிரிச்சு.. வரிக்கு வரி அல்ல, சொல்லுக்கு சொல் மாற்றம் செய்து.. நிறைய வெட்டுக்குத்துக்கள் செய்து, இப்போ திருத்தி அனுப்புங்கோ அப்போதான் கவிதையாகும் என்றனர்... அன்று வாழ்க்கையே வெறுத்துப் போச்செனக்கு...:(.

    யார் எழுதினார்கள் எனும் விபரத்தோடு தானே வெளியிடுகின்றனர் அப்போ சரி பிழை எதுவாயினும்... எழுதியவரைத்தானே பின்னூட்டத்தில் பின்னி பெடல் எடுப்பினம்:).. அப்போ அப்படியே வெளியிடுவதுதானே அழகு...

    இந்த முறை எங்கள் தளத்திலே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... மிக்க சந்தோசம் சகோ ஸ்ரீராம் கீப் இட் மேலே:). குறை ஏதும் இருப்பின் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  32. ///Geetha Sambasivam said...
    பின்னூட்டத்தில் கலக்கிறாப்போல் இதிலும் கலக்கிட்டீங்க அதிரா! :)//
    வாங்கோ கீதாக்கா.. என் கதை படிச்சதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. //கரந்தை ஜெயக்குமார் said...
    ஆகா
    பிரிந்துவிட்டது
    அருமை//
    ஹா ஹா ஹா வாங்கோ..உங்களுக்கும் பிரிந்துவிட்டதோ மிக்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. //திண்டுக்கல் தனபாலன் said...
    //ஒரு பெட்டி பென்சில்களோடு "தாய்" தங்கத்தை சந்திக்க செல்வதாக தகவல்...!//

    வாங்கோ டிடி... ஹா ஹா ஹா வை திஸ் கொல வெறி:) மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. ///ஹேமா (HVL) said...
    Nice stories//
    வாங்கோ ஹேமா.. (HVL)எனக்கிதை டக்கெனப் பார்த்ததும் [(HDL) cholesterol: High density lipoprotein cholesterol.] தான் நினைவுக்கு வருது ஹா ஹா ஹா.. மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  36. @அதிராவ் //சகோ ஸ்ரீராம் ரொம்ப நல்லவர்//இல்லையே ஒரு வார்த்தை மிஸ்ஸிங் ..நான் ரொம்ப ரொம்ப நல்லவர்னு தானே சொன்னேன் ..ஸ்டாண்ட் அப் ஓன் தி டேபிள் :)


    தொடர்கிறது
    //நானெல்லாம் பிறந்த உடனேயே அம்மா அப்பாவோடு பேசினனானாக்கும்... நம்புங்கோ... நான் சொல்வதெல்லா//
    ஆமாம் உங்கம்மா சொன்னாங்க அன்னிக்கு பிறக்கும்போதே 2 இன்ச் பல்லோட பிறந்தீங்களாமே அதுவும் உடனே ராஜ்கிரண் மாதிரி கோழி காலையும் கடிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன்

    பதிலளிநீக்கு
  37. ///Avargal Unmaigal said...
    //
    மன்னிக்க முடியாது முடியாது இங்கு எழுத்துபிழைகளுடன் எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளையும் 100 தடவை ஒரு நோட்டில் எழுதி அதை போட்டோவாக போடவும் அப்படி எழுதியதை நோட்டரி பப்ளிக் சைன் வாங்கி போடவும் இல்லைன்னா டி ராஜேந்தரை கூப்பிட்டு உங்களை திட்ட வைக்கப் போகிறேன்///

    ஆவ்வ்வ்வ் வாங்கோ ட்ருத் வாங்கோ... இந்தாங்கோ முதல்ல இந்த கூலான மோர் ஒருகப் குடியுங்கோ:)).. ஹா ஹா ஹா அவர் வாணாம்ம் அவர் வந்தால்ல்..
    நீ ஒரு பூஸ்ஸ்..
    தேம்ஸ் கரையில் நடக்கும் புஸ்ஸ் என ஆரம்பிச்சிடுவார்ர்...:)

    நீங்க வேணுமெண்டால்ல் ரி ஆர் அங்கிளின் மகன், சிம்புவைக் கூப்பிட்டுத் திட்ட வையுங்கோ:).. குட்டு வாங்கினாலும் மோதிரக் கையால வாங்கோணும் என்பினம்:))

    பதிலளிநீக்கு
  38. ///Avargal Unmaigal said...
    ///ஏஞ்சலின் என்கிற அஞ்சு எழுதிய கதைக்கு பின்னூட்டம் கொடுக்கவே முதன்முதலில் இங்கு வந்தேன், ஏனோ தெரியவில்லை அப்பவே என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது, என்னையும் ஒருநாள் கதை எழுதும்படி அழைப்பு வரலாம்://
    அடியாத்தே என்னாமா கதையள்க்கீறீர்கள் இங்கு பின்னுட்டம் போட்டா உடனே ஸ்ரீராம் கதை எழுத சொல்லுவார் என்று தெரிந்துதானே இங்கே பின்னுட்டம் போட்டு இருக்கீங்க///

    ஹா ஹா ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:))கேட்டிடப்போகுதூஊஊ:))

    பதிலளிநீக்கு
  39. ///Avargal Unmaigal said...
    ஹலோ உங்களை யாரு அடிச்சு கேட்டாலும் கவிதை மட்டும் எழுதீடாதிங்க அப்புறம் எனக்குள் உற்ங்கி கிடக்கும் ஆத்தா அப்புறம் வெறி கொண்டு ருத்தர தாண்டவம் ஆடிவிடுவா///

    ஹா ஹா ஹா ஒரு “ஜிங்கம்” எப்போ “ஆத்தா” ஆகிச்சூஊ? நேற்றுவரை சிங்கம் எனத்தானே கேள்விப்பட்டேன்ன்ன்:)).. அஞ்சூஊஊஊஊஊ தேம்ஸ் கரையில் தனியா நின்று புகை விட்டது போதும்:)) உடனே ஓடியாந்து என் டவுட்டைக் கிளியர் பண்ணவும்:).. சிங்கம் அமெரிக்காபோய்.. ஆத்தா ஆகிடுச்சா? அதனாலதான் கிச்சின் டிப்பார்ட்மெண்ட்டைக் கையில கொடுத்து உப்ப்ய்மாக் கிண்ட வச்சிட்டாங்களோ?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீஈ ரொம்ப நல்ல பொண்ணு.. ஆறு வயசிலிருந்தே:).

    பதிலளிநீக்கு
  40. //அதாவது நான் எழுதிய கதையை... அப்படியே என் பாணியிலேயே, எந்த மாற்றமும் செய்திடாமல்.. அதிராவை அதிராவாகவே வெளியிட்டமை//

    ஹாஹா அதானே :) பூனையை பூனையாத்தான் வெளிப்படுத்தனும்


    //நான் கை விரல் கால் விரல் எல்லாம் எடுத்து எண்ணினேன்.. மொத்தம் 3 நாட்/4 நாட்களே இருந்திச்சா... //

    ஒழுங்கா எண்ணுனீங்களா ஏனென்றால் எங்களுக்கு ஐ மீன் மனுஷங்களுக்கு 20 விரல்கள் உங்களுக்கு 18 மட்டுமே :)))

    பதிலளிநீக்கு
  41. ///Avargal Unmaigal said...

    ////நான் தனியே வீட்டில் வேலை செய்யும் நேரங்களில் எல்லாம் ///

    ஹலோ டிவி அல்லது ரேடியோ முன்னால் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவதையெல்லாம் வேலைன்னு சொன்ன எப்படிங்க.....கொஞ்சமாவது ஒரு நியாயம் வேண்டாமா?///

    ஹா ஹா ஹா தேம்ஸ் மேல் ஆணையா.. அவிச்ச முட்டை சாப்பிடும்போது மட்டுமே தனியா இருந்து சாப்பிடுவேன்ன்.. யாரும் பங்குக்கு வந்திட்டாலும் எனும் பயத்தில்... உண்மையில் மேசைக்கு கீழ ஒளிச்சிருந்தும் சாப்பிட்டிருக்கிறேன்ன்ன்.. ஏனெனில் ருசிச்சு ருசிச்சு மெதுவா சாப்பிடுவேன் அ. முட்டையை மட்டும்:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  42. ///வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு. ரசித்தேன்.

    இரண்டு கதைகள்! நன்று!///

    வாங்கோ வாங்கோ... மிக்க சந்தோசம், மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  43. ஆவ்வ்வ்வ்வ் என்னடா தேம்ஸ் பக்கம் போன புகை இப்போ எங்கள் புளொக்கை மறைக்குதே என எட்டிப் பார்த்தேன்ன் அஞ்சு லாண்டட்ட்ட்ட்:)).. ஹையோ என்னை சேவ்வ்வ்வ்வ் மீஈஈஈஈஈஈ:))

    பதிலளிநீக்கு
  44. @ @கோபு அண்ணா ஹா ஹா ஆஹா

    யெஸ் யெஸ் அது டையேத்தான் ..//Garnier Nutrisse in Liquorice Black // அவங்க சின்ஸ் 6 இயர்ஸ் அதைத்தான் பயன்படுத்தறாங்களாம் சொன்னாங்க :) நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ..மனசிலிருந்து அழி ரப்பர் போட்டு அழிச்சிருங்க :))

    பதிலளிநீக்கு
  45. @அஞ்சு///ஒழுங்கா எண்ணுனீங்களா ஏனென்றால் எங்களுக்கு ஐ மீன் மனுஷங்களுக்கு 20 விரல்கள் உங்களுக்கு 18 மட்டுமே :)))///

    ஹா ஹா ஹா விழுந்து புரண்டு உருண்டு சிரிக்கிறேன்ன்ன்ன்.. நல்லவேளை அடிகிடி படேல்லை:))

    பதிலளிநீக்கு
  46. ///Avargal Unmaigal said...
    படத்தை பார்த்தால் ஜான்சி ராணி மாதிரியல்லவா இருக்கிறீங்க...///

    ஹா ஹா ஹா இல்ல நீங்க டப்பு டப்பாச் சொல்றீங்க... மீ பிரித்தானியப் பூலாந்தேவீஈஈஈஈஈஈஈஈ.. ஹா ஹா ஹா பொய் எண்டால்ல் என் செகட்டரி:) யைக் கேளுங்கோ(ஹை கரீட்ட் ளு:))..

    பதிலளிநீக்கு
  47. ///Avargal Unmaigal said...
    அதனால் என்னை வந்து பாருங்கள் அல்லது என் புகைப்படம் யாரிடம் இருந்தாலாவது வாங்கி பாருங்கள் அப்போதுதான் அப்பாவி எப்படி இருப்பான் என உங்களுக்கு தெரியும்///

    வாணாம்ம் நேரில பார்த்தாலும் நீங்க அலாப்புவீங்க:).. வாங்கோ நாங்க “குஸ்பூ அக்காவின்”[அதிராவின் முறையில சொன்னேன்..:)) , ட்ருத் ட முறையில குஸ்பூ தங்கச்சி:)) “நிஜங்களுக்குப் போவோம்ம்”.. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  48. ///Avargal Unmaigal said...
    ///ஒரு அரசன் இருந்தார். அவர் தினமும் காலையில், தன் குதிரை வண்டிலில், ஊரைச் சுற்றிப் பார்த்து வருவது வழக்கம்///

    வேலை வெட்டி இல்லாத சோம்பேறி அரசன் போல இருக்கே அதுதான் தினமும் ஊரை சுற்றி வந்து இருக்கிறான்... காலையில் தினமும் நம்ம ஏஞ்சலின் போல வாக்கிங்க் அல்லது ஜாக்கிங்க் போக வேண்டாமோ////

    ஹா ஹா ஹா இங்கின தனியா நிண்டு ஒரு பூஸை எதிர்க்க தைரியமில்லாமல்... சப்போர்ட்டுக்கு ஆள் தேடி ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சுவைப் புகழ்றார்ர்... அஞ்சூஊஊஊஊஊஉ .. அதிரா சொன்னாக் கேளுங்கோ.. புகழ்ச்சிக்கு மயங்கிட வாணாம்ம்ம்ம் சொல்லிட்டேன்ன்.. இல்ல தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்ன்:)).

    பதிலளிநீக்கு
  49. @ அவர்கள் உண்மைகள் :))
    மிக நன்றாக கலாய்த்ததற்கு தாங்க்ஸ் :)

    ஆங் அப்புறம் அந்த பவர் ஸ்டார் போதும் அவரையே கூட்டிட்டு வாங்க டி ஆர்லாம் வேணாம் :)

    வேணும்னா அன்பானவன் அசாராதவன் ல ஒரு தாத்தா நடிக்கிறார் அவரையும் கூட்டிட்டு வரலாம் :)

    பதிலளிநீக்கு
  50. ஸ்ஸ்ஸ்ஸ் நல்ல ஸ்ரோங்கா.. சூடா ஒரு ரீ ஊத்திக் குடிச்சிட்டு வாறேன்ன்ன்.. எங்கேயும் போயிடாதீங்கோ... அப்படியே நில்லுங்கோ...
    ------------இடைவேளை...................:).

    பதிலளிநீக்கு
  51. @ அவர்கள் ட்ரூத் :))

    //காலையில் தினமும் நம்ம ஏஞ்சலின் போல வாக்கிங்க் அல்லது ஜாக்கிங்க் போக வேண்டாமோ////

    நன்றீ நன்றீ :) எனக்கு இப்பவே உங்களுக்கு ஏதாச்சும் நல்ல பரிசா தரணும் .
    அதிரா கைல இருக்க வைர மோதிரத்தை எடுத்து தாரேன் :)

    பதிலளிநீக்கு
  52. இப்போ ஸ்டோரிக்கு வரேன் :)

    இந்த உள்ளுணர்வு நம்மக்கு ரொம்ப க்ளோஸ் ரிலேட்டிவாச்சே :)
    அரசன் கதையில் வர மாதிரி நாமா சந்திக்கிறவங்களுக்கு எல்லாம் நம் மனதில் நினைப்பது தெரிஞ்சுபோச்சுன்னா :) அம்மாடியோவ் நினைக்கவே பயமா இருக்கு ..இப்போவே எனக்கு நிறைய பேர் மைண்ட் வாய்ஸ் கேக்குது :)

    அதிராவின் பூனை முத்திரையுடன் நல்ல கதைகள் ..வாழ்த்துக்கள் மியாவ் நன்றி எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு
  53. அதிரா. சூப்பரா ரெண்டு கதை கொடுத்திட்டீங்க. இரண்டாவது அம்மா அப்பாக்கு எப்படி இருந்திருக்கும் .பாவம். புத்திசாலிப் பொன்னு சமாளிச்சுக்குவா. வாழ்த்துகள் மா. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  54. அதிரா சகோ! கதைகள் மிக அருமை! வாழ்த்துகள்! இரண்டாவது நல்ல புத்தி சாதுரியம்!!

    கீதா: முதலில் எங்கள் ப்ளாகிற்கு நன்றி அதிராவின் கேவாபோக வை இங்குப் பிரசுரித்தமைக்கு!!!!!!நல்ல கதைகள்! தாங்க்ஸ் அதிரா நீங்களும் ஒரு குழந்தை இங்கு வருபவர்களும் குழந்தைகளே!!!!!! அப்படியான கதைகளைச் சொல்லிக் கதைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி!!! நாங்களும் பாப்பாக்களாகி எஞ்சாய் பண்ணினோமே!!!!

    பதிலளிநீக்கு
  55. அதிரா கொஞ்சம் கஷ்கு முஷ்கு பூஸ் எல்லாம் ரொம்ப காமெடியா பேசுவாங்களாம்..எல்லோரையும் சிரிக்க வைப்பாங்களாம்....ஸோ...ஸோ....ஏஞ்சல் என்னைக் காப்பாத்துங்க..இதுல ஒரு சின்ன திரியை கொளுத்திப் போட்டுருக்கன்ன்ன்ன்..அதிரா மீ எஸ்கேப்!! தேம்ஸில் தேடுங்கோ!!! நான் நல்லா நீச்சலடிப்பேனே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  56. //என் புகைப்படம் யாரிடம் இருந்தாலாவது வாங்கி பாருங்கள் அப்போதுதான் அப்பாவி எப்படி இருப்பான் என உங்களுக்கு தெரியும்// மதுரை நான் வருவேனு தானே சொல்லியிருக்கீங்க....அதிரா, ட்ரூத்தின் ட்ரூத் படம் வேணுமா??!!!!! என்னிடம் இருக்கு. ஆனால் ட்ரூத் சொல்லுவார் அது ட்ரூத் இல்ல டூப் அப்படினு சொல்லுவார்...பாருங்க..ஹஹஹஹஹஹ் அதிரா நீங்க ட்ரூத் சொல்லும் என்னை நம்புவீங்களா இல்லை டூப் சொல்லும் ட்ரூத்தை நம்புவீங்களா ஹிஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  57. // கஷ்கு முஷ்கு பூஸ்//
    Got it geetha
    Haaa haa😃

    பதிலளிநீக்கு
  58. ///Avargal Unmaigal said...

    அந்த வியாபரி திறமை இல்லாதவனாக இருக்கிறான் அவனிடத்தில் நான் இருந்திருந்தால் (நான் சேல்ஸ்மேன் என்பதால்) அரனைன் மாமியார் இறந்தால் இவர் நிறைய சந்தனைக்கட்டை வாங்குவாரே என்று நினைத்து இருப்பேன் அரசனின் உள்ளுனர்வும் இதை புரிந்து முதல் நாளே என்னை அரசவை வியாபாரி ஆக்கி இருப்பார் ஹீஹீ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாமியைப் பற்றி இப்படி எல்லாம் நினைத்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:)... இது உங்க ஆத்து மாமிக்குத் தெரியுமோ?:)

    பதிலளிநீக்கு
  59. ///Avargal Unmaigal said...
    மக்களே என்னை அடுத்த இரண்டு வாரத்திற்கு காணவில்லை என்று தேடாதீர்கள் என் மனைவிக்கு பயந்து கட்டில் அடியில் ஒழிந்து கொள்வது போல அதிராவிற்கு பயந்து இணையத்தில் இருந்து ஒழிந்து கொள்கிறேன்///

    ஹா ஹா ஹா... எனக்கு ரெம்ம்ம்ம்ம்பப் பெருமையா இருக்கு:) இருங்கோ கொஞ்சம் என் கொலரில்லாத ரீசேட்டிலிருந்து கொலரை இழுத்து விட்டுப்போட்டு வாறேன்ன்ன்:))...

    என்னைப் பார்த்தும் ஒருவர் பயப்பிடுறார் எனில் அது நேக்குப் பெருமை தானே... ஆவ்வ்வ்வ் ஓகே ஓகே... அனைத்துப் பின்னூட்டங்களுக்கும்.. இவ் உள்ளுணர்வை கலகலப்பாக்கியமைக்கும் மிக்க மிக்க நன்றிகள் ட்ருத்.

    பதிலளிநீக்கு
  60. //'நெல்லைத் தமிழன் said...
    முதல் கதை படித்ததில்லை. இரண்டாவது கதை படித்திருக்கிறேன், இரண்டுமே நல்லா இருந்தன. வாழ்த்துக்கள்.//

    வாங்கோ நெ.த.. மிக அமைதியாக வந்து போயிருக்கிறீங்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  61. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    1)

    அதிரடி,
    அலம்பல்,
    அட்டகாச,
    அயோக்ய,
    அல்டி,
    அதிரஸ
    அதிரா ......//

    ஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... என்ன இது படம் பார்த்தபின்.. இரு வரிகளை அதிகமாச் சேர்த்திட்டீங்களே அவ்வ்வ்வ்வ்:)..

    பதிலளிநீக்கு
  62. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    2)

    //ஏஞ்சலின் என்கிற அஞ்சு எழுதிய கதைக்கு .......//

    ’புலியைப்பார்த்து, தன் உடம்பும் அதுபோல வரி-வரியாக அழகாக ஆகணும் என நினைத்துப் பூனையும் சூடு போட்டுக்கொண்டதாம்’ என ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

    ஏனோ என் உள்ளுணர்வு அந்தப் பழமொழியை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்து விட்டது.///

    உங்க உள்ளுணர்வு சொல்வதெல்லாம் சுத்த பொய் நம்பாதீங்கோ:).. அதுதான் மேலே கதையிலயே சொல்லிட்டனே:) பெண்களின் உள்ளுணர்வுதான் கரீட்டாஆஆஆஆம்ம்ம்ம்.. ஹா ஹா ஹா எங்கிட்டயேவா?:) மீ எஸ்கேப்ப்ப்:)

    பதிலளிநீக்கு
  63. ஆங் அப்புறம் அந்த பவர் ஸ்டார் போதும் அவரையே கூட்டிட்டு வாங்க டி ஆர்லாம் வேணாம் :)// ஹஹஹஹஹ ஏஞ்சல் இதுதான் லேட்டஸ்ட்!!! டிஆர் எல்லாம் ஓல்ட்!!! அதிரா மியாவ்!!!! மியாவ்! பௌவ்பௌவ்..பௌவ்!!(இது எங்கட வீட்டு ரெண்டு செல்லங்கள்)

    அதிரா...."ஓடினேன் ஓடினேன் தேம்ஸ் நதி எல்லை வரை ஓடினேன்...

    ஓ! அதுக்கப்புறம்?

    அதுக்கப்புறம்..ஹு ஹு ஹு ஹு... ஓட முடியலை மூச்சு இரைச்சுச்சு!!!
    நீங்கள் நின்னப்புறம்தானே ஏஞ்சல் பிடிச்சாங்க உங்களை..இல்லைனா உங்களைப் பிடிச்சுருக்க முடியாதுதானே அதிரா கரீக்டுதானே??!!!!!ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  64. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    3)

    //ஏனெனில் நான் ரொம்ப நல்ல பொண்ணு:)--அப்பாவீஈஈஈ,, ஆறு வயசிலிருந்தே:).[படத்தில தெரியுதெல்லோ?:)].//

    ஆறு வயசிலேயே படத்தில் காட்டியுள்ளபடி செம குண்டாக இருந்தீங்களோ !

    இப்போது உள்ள சமீபத்திய படத்தையே வெளியிட்டிருக்கலாம்.///
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இனியும் பாவம் பார்க்க மாட்டேன்ன்ன்:) அஞ்சூஊ அந்தக் கிரெயினைக் கொண்டுவாங்கோ... ஸ்ரெயிட்டா டெல்லிக்குத்தேன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  65. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    4)

    எப்படியோ எங்கள் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ மூலம் உங்களின் மிகப்பழைய சிறுவயது (ஆறு வயது) போட்டோவாவது பார்க்க முடிந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. :)

    ஏற்கனவே ஒருமுறை நீங்கள் திரும்பிக்கொண்டு நின்ற போட்டோவைப் பார்த்துள்ளேன். அதில் சுமார் ஆறடி கூந்தலை அள்ளி முடியாமல், தரையைத் தொடுமாறு தொங்க விட்டிருந்தீர்கள். ///

    நிஜமாலுமே எனக்கு மிக அடர்ந்த ...மிக நீண்ட கூந்தல்.... ஆனா இப்போ சோட் ஆக்கியாச்சு... என் அன்றும் இன்றும் என ஒப்பிட்டு கூந்தல் படம் பேஸ் புக்கில் போட்டிருந்தேன்ன்.. நீங்க அங்கு ஃபிரெண்ட்டாக இருந்தும் பார்க்கத் தவறிட்டீங்க:).. அது என் நல்ல காலம்:)..

    இப்போ ஓடாதீங்கோ விழுந்திடுவீங்க.. என் பேஸ்புக்கை மூடி வருசக்கணக்காகுதாக்கும்:))

    பதிலளிநீக்கு
  66. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    இப்போது முடியினை அழகு படுத்தி இன்னும் குறைத்துக்கொண்டீர்கள் போலிருக்குது. இதில் ஒரு முடி கூட நரைக்காமல், கரு-கருவென்று மிகவும் இளமையாகக் காட்டியுள்ளீர்கள்.///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சுவீட் 16 க்கு எப்படி நரைக்கும்... அப்படி நரை எல்லாம் நம்ம அஞ்சுவுக்குத்தேன்ன்ன்:).. அதனால்தான் இந்தக் குளிரிலும் ஓடி ஓடி நடக்கிறா:)) ஹையோ ஹையோ.. நான் நடக்க இன்னும் பல வருசம் இருக்கு:)).. ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சுக் கூவத்தில வீசிடுங்கோ கோபு அண்ணன்.

    பதிலளிநீக்கு
  67. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
    6)

    //அம்மா இங்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. என்னவெனில் வீடெல்லாம் தேடினேன்.. ஒரு பென்சிலுமே கிடைக்கவில்லை, அதனாலேயே பேனாவினால் எழுதியிருக்கிறேன்...//

    ஆஹா, கடைசியில் ஓர் சூப்பர் டிவிஸ்ட் .....

    ’பஞ்ச்’ பஹூத் அச்சா ஹை.

    ஒன்று இரண்டாக உபத்ரவத்திற்கு மூன்றாக ஊசிக்குறிப்புகளுடன் கதை சொல்லியுள்ள அதிராவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். ///

    அச்சா அச்சா.. பகவத் அச்சா..:) ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  68. Angelin said...
    Jessie woke me up at 5 am. .😃and I landed up here lol. Nice stories miyaav shall come again at noon 😃 ///

    வாங்க அஞ்சு வாங்க... இந்தச் சாமத்திலயெல்லாம் எதுக்கு எழும்புறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பேசாமல் போர்த்திட்டுப் படுங்கோ.. :)

    பதிலளிநீக்கு
  69. மனோ சாமிநாதன் said...
    அதிராவின் முகத்தை இப்போது தான் பார்க்கிறேன்! அழகு!
    சிறுகதைகளிலும் 'அதிரா டச்' இருக்கிறது! வாழ்த்துக்கள் அதிரா!//

    வாங்கோ மனோ அக்கா, மிக்க மிக்க நன்றி. காதால் கேட்டதை நினைவுபடுத்தி வச்சு , என் பாஷையில் நான் எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  70. கோமதி அரசு said...
    அதிராவின் இரண்டு கதைகளும் அருமை.
    விளையாட்டாய் பேசினாலும் உள்ளு உணர்வு அருமையான கதையை கொடுத்து விட்டது.
    வாழ்த்துக்கள் அதிரா.///

    வாங்கோ கோஒமதி அக்கா.. மிக்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  71. //Dr B Jambulingam said...
    அதிரா...அருமை. அறிமுகத்திற்கு நன்றி.///
    வாங்கோ மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  72. //Angelin said...
    @அதிராவ் //சகோ ஸ்ரீராம் ரொம்ப நல்லவர்//இல்லையே ஒரு வார்த்தை மிஸ்ஸிங் ..நான் ரொம்ப ரொம்ப நல்லவர்னு தானே சொன்னேன் ..ஸ்டாண்ட் அப் ஓன் தி டேபிள் :)////

    ஹா ஹா ஹா இப்பூடியெல்லாம் சொன்னால்.. இன்னொரு கதை போடச் சொல்லுவார் எனக் கனவு காணாதீங்கோ:)) அதெல்லாம் இந்த ஜென்மத்தில நடக்காது, நாங்களும் கொமெண்ட் போடமாட்டோம்ம்ம்ம்:) ஹா ஹா ஹா:))


    ////
    ஆமாம் உங்கம்மா சொன்னாங்க அன்னிக்கு பிறக்கும்போதே 2 இன்ச் பல்லோட பிறந்தீங்களாமே அதுவும் உடனே ராஜ்கிரண் மாதிரி கோழி காலையும் கடிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன்///
    ஆவ்வ்வ்வ்வ் இந்த நியூஸ்ஸ்ஸ் அங்கின வரைக்கும் பரவிடுச்சோ?:) அது கோழிக் கால் அல்ல.. அரைக்கிலோ ஹேஸில்நட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  73. ///Angelin said...
    @ @கோபு அண்ணா ஹா ஹா ஆஹா

    யெஸ் யெஸ் அது டையேத்தான் ..//Garnier Nutrisse in Liquorice Black // :))///

    ஹா ஹா ஹா... கோபு அண்ணன் உடனடியாக மேடைக்கு வரவும்...:)) நுணலும் தன் வாயால் கெடுமாமே:))... ஒயுங்கா டை அடிக்கும் “டைக்கொயந்தை” க்குத்தானே பெயர் நினைவிருக்கும்:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ தேம்ஸ் கரையில் உலாப்போறேன்ன்ன்ன்.. ஓஓஒ லலலாஆஆஆஆஆ:))

    பதிலளிநீக்கு
  74. ///Angelin said...
    @ அவர்கள் உண்மைகள் :))
    மிக நன்றாக கலாய்த்ததற்கு தாங்க்ஸ் :)

    ஆங் அப்புறம் அந்த பவர் ஸ்டார் போதும் அவரையே கூட்டிட்டு வாங்க டி ஆர்லாம் வேணாம் :)

    வேணும்னா அன்பானவன் அசாராதவன் ல ஒரு தாத்தா நடிக்கிறார் அவரையும் கூட்டிட்டு வரலாம் :)///

    இது அஞ்சுவின் குற்றமில்லை:) அஞ்சுட வயசின் குற்றமாக்கும்:) அதாவது வயசாகிட்டாலே.. இளைஞர்கள் யாரும் நினைவுக்கு வர மாட்டினம்போல:)) ஹையோ என் வாய் தேன் நேக்கு எதிரி:) அஞ்சு ஆத்தில இல்லை என்பதைக் கன்ஃபோம் பண்ணிட்டே இங்கின வந்தேனாக்கும்:)

    பதிலளிநீக்கு
  75. ///Angelin said...
    @ அவர்கள் ட்ரூத் :))

    //காலையில் தினமும் நம்ம ஏஞ்சலின் போல வாக்கிங்க் அல்லது ஜாக்கிங்க் போக வேண்டாமோ////

    நன்றீ நன்றீ :) எனக்கு இப்பவே உங்களுக்கு ஏதாச்சும் நல்ல பரிசா தரணும் .
    அதிரா கைல இருக்க வைர மோதிரத்தை எடுத்து தாரேன் :)///

    எப்பவும் என் வைர மோதிரத்திலயே கண்ண்ண் கர்ர்:)) இதுக்குப் பயந்தே நான் ஒரு கொண்டாட்டம் கூத்துக்குக்கூட அதைப் போடாமல் கட்டிலுக்குக் கீழ இருக்கும் ஒரு குட்டிப் பெட்டியில் ஒளிச்சு வச்சிருக்கிறேன்ன்ன்:)).. அச்சச்சோஒ இடத்தை வேறு சொல்லிட்டனா:))

    பதிலளிநீக்கு
  76. ///Angelin said...
    இப்போ ஸ்டோரிக்கு வரேன் :)

    இந்த உள்ளுணர்வு நம்மக்கு ரொம்ப க்ளோஸ் ரிலேட்டிவாச்சே :)
    அரசன் கதையில் வர மாதிரி நாமா சந்திக்கிறவங்களுக்கு எல்லாம் நம் மனதில் நினைப்பது தெரிஞ்சுபோச்சுன்னா :) அம்மாடியோவ் நினைக்கவே பயமா இருக்கு ..இப்போவே எனக்கு நிறைய பேர் மைண்ட் வாய்ஸ் கேக்குது :)

    அதிராவின் பூனை முத்திரையுடன் நல்ல கதைகள் ..வாழ்த்துக்கள் மியாவ் நன்றி எங்கள் பிளாக்///

    ஹா ஹா ஹா உங்க மைண்ட் வொயிஸ் நல்லாவே கேக்குது எனக்கு:)).. முடிவிலே தப்பிருக்கிறது... :)) சகோதரர் ஸ்ரீராம் என முடிச்சிருக்கோணுமாக்கும்:)).. ஹா ஹா ஹா மியாவும் நன்றி அஞ்சு.

    பதிலளிநீக்கு
  77. ///வல்லிசிம்ஹன் said...
    அதிரா. சூப்பரா ரெண்டு கதை கொடுத்திட்டீங்க. இரண்டாவது அம்மா அப்பாக்கு எப்படி இருந்திருக்கும் .பாவம். புத்திசாலிப் பொன்னு சமாளிச்சுக்குவா. வாழ்த்துகள் மா. நன்றி ஸ்ரீராம்.//

    வாங்கோ வாங்கோ மிக்க நன்றி கதை படிச்சமைக்கு.

    பதிலளிநீக்கு
  78. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா சகோ! கதைகள் மிக அருமை! வாழ்த்துகள்! இரண்டாவது நல்ல புத்தி சாதுரியம்!!

    கீதா: முதலில் எங்கள் ப்ளாகிற்கு நன்றி அதிராவின் கேவாபோக வை இங்குப் பிரசுரித்தமைக்கு!!!!!!நல்ல கதைகள்! தாங்க்ஸ் அதிரா நீங்களும் ஒரு குழந்தை இங்கு வருபவர்களும் குழந்தைகளே!!!!!! அப்படியான கதைகளைச் சொல்லிக் கதைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி!!! நாங்களும் பாப்பாக்களாகி எஞ்சாய் பண்ணினோமே!!!!///

    வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.


    என்னாதூஊஉ அதிராவின் கேவா... ல... போன.. படத்தைப் போட்டமைக்கா..?:):):)
    ///Thulasidharan V Thillaiakathu said...
    ீதா: முதலில் எங்கள் ப்ளாகிற்கு நன்றி அதிராவின் கேவாபோக வை இங்குப் பிரசுரித்தமைக்கு////

    விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ.. இதுக்கு மேலயும் மீ இங்கின இருப்பேனோ?:), நான் முன்னே வைத்த காலைப் பின்னே எடுக்க மாட்டேனாக்கும்... இதே தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன் .... பிராக்குப் பார்த்துக் கொண்டிருக்காமல், டக்குப் பக்கென ஃபயரெஞ்சினைக் கூப்பிட்டு அதிராவைக் காப்பாத்துங்கோஓஓஓ...:))...
    [[ஹா ஹா ஹா]]

    பதிலளிநீக்கு


  79. ஆஹா அதிரா பார்க்கதான் ஜான்ஸி ராணி மாதிரி இருந்தாலும் தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் மாதிரி அமைதியாகத்தான் இருக்காக....அதனால் நான் ரீ எண்ட் ரீ தைரியமாக கொடுக்கலாம்...ஹீஹீ எங்காத்து மாமி மாதிரி இல்லை அதனால் நமக்கு டேமேஜ் அதிகம் இருக்காது

    பதிலளிநீக்கு
  80. கீதா உங்க மீது மான நஷ்ட ஈடு வழக்கு போடலாம் என நினைக்கிறேன்... யாரோ டூப் என் பெயரை சொல்லி சண்டித்து இருக்கிறான் அதை நம்பி அதுதான் நான் என்று ஊர் முழுக்க தண்டோரா பொட்டு என் இமேஜ்ஜை கெடுக்குறீங்க். அப்படியே டூப் உண்மையான மதமிழனாக இருந்தாலும் அவந்து அனுமதி இல்லாமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்வது காப்பிரைட் பிரச்சனையை மீறுவதாகும் அதனால உங்க மீது வழக்கு தொடுத்து சசிகலா ரூமிற்கு பக்கத்து ரூமில் உங்களை ஏன் அடைக்க கூடாது என்பதற்கு விளக்கம் தரவும்

    பதிலளிநீக்கு
  81. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா கொஞ்சம் கஷ்கு முஷ்கு பூஸ் எல்லாம் ரொம்ப காமெடியா பேசுவாங்களாம்..எல்லோரையும் சிரிக்க வைப்பாங்களாம்....ஸோ...ஸோ....ஏஞ்சல் என்னைக் காப்பாத்துங்க..இதுல ஒரு சின்ன திரியை கொளுத்திப் போட்டுருக்கன்ன்ன்ன்..அதிரா மீ எஸ்கேப்!! தேம்ஸில் தேடுங்கோ!!! நான் நல்லா நீச்சலடிப்பேனே!!!

    கீதா///

    என்னாது கஸ்கு முஸ்கு பூஸ் ஆஆஆஆ?:) எனக்கு பூஸ் பாசை தெரியும்.. ஃபிஸ் பாசை தெரியும்:) இதென்ன இது புயுப்பாசை:)... ஹையோ மீக்கு தலை சேர்க்கிள்பண்ணுதே:).. இந்த நேரம் பார்த்து ஃபிஸ் வேற ஊர் சுத்தப் போயிட்டா:))..

    கீதா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமோ? சுவிம்மிங் ஃபூல்ல... 10 நிமிசமா.. கையையும் காலையும் போட்டு அடிஅடியெண்டு அடிச்சு.. தலையையும் ஆட்டி ஆட்டி பெரிய பில்டப் எல்லாம் கொடுத்துப் போட்டு எழும்பி நிண்டு பார்க்கிறேன்ன்.. ஒரு அங்குலம்கூட நகராமல் அதிலயே நிண்டனே:))

    பதிலளிநீக்கு
  82. @அதிரா பெண் புத்தி பின் புத்தி என்று தலைப்பு வைத்திருக்கீங்க

    பெண் புத்தி பின் புத்தி ஓ அப்ப அது நறுக் நறுக் என்று குத்துமே

    அய்யோ இந்த கருத்து ஏஞ்சலின் கண்ணில் படாமல் இருக்கனும் இல்லைன்னா அம்மா அடுத்த ப்ளைட்டில் ஏறி சசிகலா சமாதியில் அடித்த மாதிரி என்னை நேரில் வந்து அடித்துவிடுவார்கள் சாமியோ என்னை காப்பாத்துப்பா என்னை காப்பாற்றினால் உன் பேஸ்புக் அக்கவுண்டில் வந்து 100 லைக் போடுறேன்

    பதிலளிநீக்கு


  83. @அதிரா இந்த கதை நடந்த சம்பவத்தை பார்க்கும் போது 1920 மாதிரி அல்லவா இருக்கிறது அந்த காலத்துலதான் பென், பென்சில் பயன்படுத்துவாங்க அதுமட்டுமல்ல கடிதமும் எழுதுவாங்க...


    மாடர்ன் காலத்தில் இருந்தா அம்மா பொண்ணுக்கு சீர் வரிசையாக இருந்தா ஒரு லேப் டாப் அல்லது ஸ்மார்ட் போன் அல்லவா வாங்கி தந்து தகவல் சொல்ல சொல்லியிருப்பாங்க

    பதிலளிநீக்கு
  84. //Thulasidharan V Thillaiakathu said...
    //என் புகைப்படம் யாரிடம் இருந்தாலாவது வாங்கி பாருங்கள் அப்போதுதான் அப்பாவி எப்படி இருப்பான் என உங்களுக்கு தெரியும்// மதுரை நான் வருவேனு தானே சொல்லியிருக்கீங்க....அதிரா, ட்ரூத்தின் ட்ரூத் படம் வேணுமா??!!!!! என்னிடம் இருக்கு. ஆனால் ட்ரூத் சொல்லுவார் அது ட்ரூத் இல்ல டூப் அப்படினு சொல்லுவார்...பாருங்க..ஹஹஹஹஹஹ் அதிரா நீங்க ட்ரூத் சொல்லும் என்னை நம்புவீங்களா இல்லை டூப் சொல்லும் ட்ரூத்தை நம்புவீங்களா ஹிஹிஹிஹிஹி

    கீதா/////

    ஹா ஹா ஹா எனக்கிப்போ டவுட்டு டவுட்டா வருது கீதா, உங்கள் படத்தில் இருப்பவர்தான் ஒரிஜினல் ட்ருத்:)).. இங்கின வந்து மின்னி முழங்கிப் போபவர்.. டூப்ப்பூஉ ட்ருத்:)).. எப்பூடி என் கண்டு புய்ப்பூஊஊ?:)

    இருந்தாலும் கீதா, ட்ருத் சொல்லியிருக்கிறார்ர், முட்டை ரெசிப்பி தாறேன் என.. அதனால நான் அவரோடு இப்போதைக்கு சண்டை எல்லாம் பிடிக்க மாட்டேன் என்பதனை.. ட்ருத்தின் அந்த உப்புமா டிஸ் மேல் அடிச்சு சத்தியம் பண்றேன்ன்:)).

    ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றி கீதா அண்ட் துளசி அண்ணன்.

    பதிலளிநீக்கு
  85. ///Avargal Unmaigal said...


    ஆஹா அதிரா பார்க்கதான் ஜான்ஸி ராணி மாதிரி இருந்தாலும் தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் மாதிரி அமைதியாகத்தான் இருக்காக....அதனால் நான் ரீ எண்ட் ரீ தைரியமாக கொடுக்கலாம்...ஹீஹீ எங்காத்து மாமி மாதிரி இல்லை அதனால் நமக்கு டேமேஜ் அதிகம் இருக்காது///

    ஹா ஹா ஹா உதெல்லாம் இருக்கட்டும் முதல்ல உங்களுக்கு நீந்தத்தெரியுமோ?:)).. ஏனெனில் டமேஜ் எல்லாம் பண்ண தெரியாது .. தேம்ஸ்ல தள்ளுவதுதான் என் தொழிலே:))

    பதிலளிநீக்கு
  86. ////Avargal Unmaigal said...
    கீதா அப்படியே டூப் உண்மையான மதமிழனாக இருந்தாலும் அவந்து அனுமதி இல்லாமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்வது காப்பிரைட் பிரச்சனையை மீறுவதாகும்அதனால உங்க மீது வழக்கு தொடுத்து சசிகலா ரூமிற்கு பக்கத்து ரூமில் உங்களை ஏன் அடைக்க கூடாது என்பதற்கு விளக்கம் தரவும்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவங்க காப்பிரைட்டை மீறவே இல்லயே:)).. நீங்களாவே முடிவெடுத்து எந்த ஜெயில் என்பதையும் முடிவெடுக்கலாமோ ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    ஆனாலும் இதுதான் பொல்லுக் கொடுத்து அடி வாங்கும் கதை:))

    கீதா, இனிமேலும் அப்படத்தில் இருப்பது நானில்லை என் டூப்தான் என சத்தியம் பண்ணுவாராயின்:)).. அப்படத்தை வெளியிடுங்கோ:)) சாட்சிக் கூண்டில் ஏற மீ ரெடீஈஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  87. ////Avargal Unmaigal said...அய்யோ இந்த கருத்து ஏஞ்சலின் கண்ணில் படாமல் இருக்கனும் இல்லைன்னா அம்மா அடுத்த ப்ளைட்டில் ஏறி சசிகலா சமாதியில் அடித்த மாதிரி///

    ஹா ஹா ஹா முடியல்ல சாமீஈஈஈ:)

    பதிலளிநீக்கு
  88. ஹலோ மக்களே இந்த பெண் புத்தி பின் புத்தி கதை நாளை என் தளத்தில் வெளியாகப் போகிறது கண்டிப்பாக படிக்க வாங்கோ இது இந்த கால கட்டட்திற்கு ஏற்றார் போல இருக்கும்

    பதிலளிநீக்கு
  89. ///Avargal Unmaigal said...


    @அதிரா இந்த கதை நடந்த சம்பவத்தை பார்க்கும் போது 1920 மாதிரி அல்லவா இருக்கிறது அந்த காலத்துலதான் பென், பென்சில் பயன்படுத்துவாங்க அதுமட்டுமல்ல கடிதமும் எழுதுவாங்க...//

    கொஞ்சம் நில்லுங்கோ.. போனாப்போகுது இண்டைக்கு வேர்க்குக்கு லீவு போட்டிட்டு வெயிட் பண்ணுங்கோ நான் கேட்டிட்டு வந்து சொல்லுறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  90. ///Avargal Unmaigal said...
    ஹலோ மக்களே இந்த பெண் புத்தி பின் புத்தி கதை நாளை என் தளத்தில் வெளியாகப் போகிறது கண்டிப்பாக படிக்க வாங்கோ இது இந்த கால கட்டட்திற்கு ஏற்றார் போல இருக்கும்//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓஓஒ இது என் கொப்பிவலதாக்கும்:)).. இதை அமெரிக்கால எழுதினால்ல்ல்.. மீ அந்தாண்டிக்கால உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்ன் அஞ்சுவைக் கையில பிடிச்சபடி:)..

    ஹா ஹா ஹா எழுதுங்கோ... கல்லு பொல்லு உடைந்த ஓடெல்லாம் எடுத்து வச்சு ரெடியாகிடுறோம்ம்:)

    பதிலளிநீக்கு
  91. வாழ்க்கை கடலில் எதிர் நீச்சல் போடும் எனக்கு தேம்ஸ் நதி எல்லாம் சுசூபி,,,,,,,

    பதிலளிநீக்கு
  92. நீங்க உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் அவித்த முட்டைகளால் பண்ணிய உணவுவகைகள் குவித்து வைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  93. நன்றி அதிரா. யாருடைய படைப்பையுமே திருத்தி வெளியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல, தப்போ, ரைட்டோ உங்களை சேர்ந்தது! அவ்வளவே. நன்றி. நீங்கள் அரட்டைக் கச்சேரியைத் தொடரலாம்!

    பதிலளிநீக்கு
  94. ஸ்ரீராம். said...

    //நீங்கள் அரட்டைக் கச்சேரியைத் தொடரலாம்!//

    என்னதூஊஊஊஊ. கச்சேரியா?

    ஹைய்யோ... ஹைய்யோ... ஹைய்யோ...

    எப்படியோ கச்சேரி நடத்தி, ஏமாளிகளிடம் மாபெரும் வசூல் செய்து, வள்ளிக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் வைர மூக்குத்தி, வைரத்தோடு, வைர நெக்லஸ் ஆகிய மூன்றுமே வாங்கிடுவாங்க போலிருக்குதே, இந்த அதிரா!

    ஏற்கனவே 97 கிலோ வைரம் வசூலாகியுள்ளது. இந்த என்னுடையது 98-வது கிலோ வைரமாகும்.

    அநியாயமான இதைக் கண்டுக்கவே மாட்டீங்களா அஞ்சு?

    பதிலளிநீக்கு
  95. ///அநியாயமான இதைக் கண்டுக்கவே மாட்டீங்களா அஞ்சு?///

    ஹா ஹா ஹா அவவுக்கு இண்டைக்கு புகை விடத்தான் நேரம் போதுமாயிருக்குது கோபு அண்ணன்... மீயும் சொல்லிக்கொள்கிறேன்ன்ன்... என்னாது கச்சேரியாஆஆஆ... அரோகரா...அரோகரா.. அரோகரா....:)) இன்று எல்லோரையும் வெள்ளை பஸ்ல ஏத்தாமல் ஓயமாட்டேன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  96. கதை நடையோடு
    கருப்பொருள்
    வாசகரை ஈர்க்கிறதே!

    பதிலளிநீக்கு
  97. @Gobu Annaa ..

    //ஏற்கனவே 97 கிலோ வைரம் வசூலாகியுள்ளது. இந்த என்னுடையது 98-வது கிலோ வைரமாகும்.//

    ஒரு அங்கிள் சொன்னார் பணம் பொருள் பரிசா கொடுக்கும்போது 100 என்றிருக்க கூடாதாம் 101 அப்படித்தான் கொடுக்கணுமாம் ஆகவே 101 கிலோ வைரங்களும் எனக்கே எடையை அதாவது அந்த சைடில் இருக்கும் எடைக்கல்லை அதிரா மேலே போட்டு வைரத்தை நானா கொண்டு போறேன்

    பதிலளிநீக்கு
  98. ///Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
    கதை நடையோடு
    கருப்பொருள்
    வாசகரை ஈர்க்கிறதே!///
    வாங்கோ வாங்கோ... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  99. அதிரா கதையோ இரண்டு ,கருத்துக்கள் நூறா ?புதிராயிருக்கே :)

    பதிலளிநீக்கு
  100. Angelin said.....///ஆகவே 101 கிலோ வைரங்களும் எனக்கே எடையை அதாவது அந்த சைடில் இருக்கும் எடைக்கல்லை அதிரா மேலே போட்டு வைரத்தை நானா கொண்டு போறேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடிய விடிய மீ கத்திக் கத்தி தொண்டை நோ வேற வந்திட்டுது.. இப்போ வந்து “நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கிறாவே”... இந்த வைரத்தை வச்சுத்தானே நான் வள்ளியின் நேர்த்திக்கடனை எல்லாம் தீர்க்க முடியும்:)).. இல்லாட்டில் முருகன் கோச்சுக்க மாட்டார்ர் என்னை????:))

    பதிலளிநீக்கு
  101. //Bagawanjee KA said...
    அதிரா கதையோ இரண்டு ,கருத்துக்கள் நூறா ?புதிராயிருக்கே :)///

    வாங்கோ வாங்கோ.. மிக்க நன்றி.. ஹா ஹா ஹா எனக்கும் புதிராவேதான் இருக்கு ஆனாலும்.. ”எங்கள் புளொக்”பின்னூட்டங்களைக் கண்படுத்திடாதீங்கோ ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  102. அதிரா அவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி.இரண்டு கதைகளும் சூப்பர்.அதிரா என்றாலே பூனையும் சலுக்காமல் கமெண்ட் போடுபவர் என்ற நினைவுதான் வரும்.அதிரா கமெண்ட்ஸ் என்றால் புலி வேகத்தில் நான் ஓடிடுவேன்.

    பதிலளிநீக்கு
  103. கீதா உங்க மீது மான நஷ்ட ஈடு வழக்கு போடலாம் என நினைக்கிறேன்... யாரோ டூப் என் பெயரை சொல்லி சண்டித்து இருக்கிறான் அதை நம்பி அதுதான் நான் என்று ஊர் முழுக்க தண்டோரா பொட்டு என் இமேஜ்ஜை கெடுக்குறீங்க். அப்படியே டூப் உண்மையான மதமிழனாக இருந்தாலும் அவந்து அனுமதி இல்லாமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்வது காப்பிரைட் பிரச்சனையை மீறுவதாகும் அதனால உங்க மீது வழக்கு தொடுத்து சசிகலா ரூமிற்கு பக்கத்து ரூமில் உங்களை ஏன் அடைக்க கூடாது என்பதற்கு விளக்கம் தரவும்//

    ஹலோ மதுரைத் தமிழன் உங்க காப்பி ரைட்டை மீறலியே!!! ஹிஹிஹி....எதையும் தாங்கும் இதயமான இந்த கீதாவுக்கு ஜெயில் எல்லாம் ஜூஜுபி ஆனா நீங்கள் கடைசியா சொல்லிருக்கீங்க பாருங்க அதுதான் .....மக்கள் எல்லாரும் பாவம்னு பாக்கறேன்....ஏன்னா.சசிகலாவ வெளிய கொண்டாந்துருவேன்.ஓகேயா...??!!ஹிஹிஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  104. ஒரே பகுதி... 2 கதைகள் ( நீதிகள்)... ம்ம்ம் பலே பலே.

    1984-86 இருக்கும்... தினமலர் வாரமலர் 'இது உங்கள் இடம்' பகுதியில், ஒரு வாசகி எழுதி இருந்தார்.."திருமணமாகி புகுந்த வீட்டில் நான் சந்தோஷமாக இருப்பின், நீல மையில் கடிதம் எழுவதாகவும், கஷ்டப் பட்டால், சிவப்பு நிற மையினால் கடிதம் எழுவதாகவும் சொன்னாராம். ஒரு சில வருடங்கள் கடந்து... மறுவீட்டில் மிகவும் நல்ல முறையில் சந்தோஷமாக இருப்பதால், (கஷ்டமே வராமல்), ஒரு முறை கிடைத்த பேனாவால்(சிவப்பு மை) கடிதம் எழுதிட, அது கண்டு அவரது பெற்றோர் பதறி, அவர்கள் வீட்டிற்கு சென்று நடந்த குழப்பம் வெளியே தெரிய.. அனைவரும்(மறு வீட்டார்) அவர்களது சமயோஜித புத்தியை பாராட்டி, சிரித்து மகிழ்ந்ததாக', எழுதியது, ஞாபகம் வருக்கிறது

    பதிலளிநீக்கு
  105. ஏற்கனவே கேட்ட,படித்த கதைகள்தான் என்றாலும், அதிராவின் மொழியில் இனிக்கிறது. அது சரி நீங்கள் அதிராவா?ஆதிராவா? ஏனென்றால் ஆதிரா என்பது ஒரு நடசத்திரத்தின் பெயர். அதிரா என்றால்???

    பதிலளிநீக்கு
  106. ஆர்வத்துடன் படிக்க வைத்தது என்பது என்னவோ உண்மை.

    குறும்புக்கார(ர்) கதை!

    'பென்சில் கிடைக்கவில்லை' என்று கூட கதைக்கு தலைப்பு வைத்திருக்கலாம். அந்தளவுக்கு இந்தக் கதையில் பென்சிலின் பங்கு அதிகம். அந்த பென்சில் தான் கதையை கதையாக்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  107. ///ஆச்சி ஸ்ரீதர் said...
    அதிரா அவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி.இரண்டு கதைகளும் சூப்பர்.அதிரா என்றாலே பூனையும் சலுக்காமல் கமெண்ட் போடுபவர் என்ற நினைவுதான் வரும்.அதிரா கமெண்ட்ஸ் என்றால் புலி வேகத்தில் நான் ஓடிடுவேன்///

    ஆவ்வ்வ்வ் வாங்கோ ஆச்சி வாங்கோ.. எவ்ளோ நாளாச்சு பார்த்து... இருங்கோ வாறேன்ன்.. அஞ்சூஊஊஊ ரிஷூ பிளீஸ்ஸ்ஸ்:).. என் ஆனந்தக் கண்ணீர் துடைக்கத்தான்:)).. பிங் கலரிலதான் வேணும்:)..

    நோஓ உப்பூடி ஓடக்குடா.. உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளில ஸ்ரெடியா இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளோணும் எங்க அஞ்சுபோல:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ஆச்சி.

    பதிலளிநீக்கு
  108. ///ஹலோ மதுரைத் தமிழன் உங்க காப்பி ரைட்டை மீறலியே!!! ஹிஹிஹி....எதையும் தாங்கும் இதயமான இந்த கீதாவுக்கு ஜெயில் எல்லாம் ஜூஜுபி ஆனா நீங்கள் கடைசியா சொல்லிருக்கீங்க பாருங்க அதுதான் .....மக்கள் எல்லாரும் பாவம்னு பாக்கறேன்....ஏன்னா.சசிகலாவ வெளிய கொண்டாந்துருவேன்.ஓகேயா...??!!ஹிஹிஹ்

    கீதா///

    ஹா ஹா ஹா உங்க “டூப்” சண்டை இன்னும் முடியல்லியோ?:).. அவர் இப்போ கட்டிலுக்குக் கீழ இருப்பார்ர்.. பொறுங்கோ கீதா வந்திடுவார்ர்:)

    பதிலளிநீக்கு
  109. ///Madhavan Srinivasagopalan said...
    ஒரே பகுதி... 2 கதைகள் ( நீதிகள்)... ம்ம்ம் பலே பலே.///

    வாங்கோ வாங்கோ.. நீங்க சொல்லியிருக்கும் கதை அப்படியே இக்கதைபோலவே இருக்கு... ஒருவேளை அதைப் படித்தவரே, இப்படிக் கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கலாம்.. நான் இதை ஒரு மேடைப்பேச்சில் கேட்டேன் என நினைக்கிறேன்ன்... யார் சொன்னார்கள் என்பது நினைவில்லை ஏனெனில்... சுகிசிவம் அங்கிள் தொடங்கி.. அத்தனை பேச்சாளர்களின் பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

    மிக்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  110. //Bhanumathy Venkateswaran said...
    ஏற்கனவே கேட்ட,படித்த கதைகள்தான் என்றாலும், அதிராவின் மொழியில் இனிக்கிறது. அது சரி நீங்கள் அதிராவா?ஆதிராவா? ஏனென்றால் ஆதிரா என்பது ஒரு நடசத்திரத்தின் பெயர். அதிரா என்றால்???//

    வாங்கோ வாங்கோ.. இனிக்க இனிக்க கதை படிச்சமைக்கு மிக்க நன்றி..[எதுக்கும் உங்க சுகரை ஒருக்கால் செக் பண்ணிடுங்கோ... ஹையோ சும்மா சொன்னேன்:)]..

    அது ”ஆ”திரா வுக்கு வாலை.. சொறி டங்கு ஸ்லிப் ஆச்சு:) காலை எடுத்தால் “அ”திரா... :).. அப்போ நீங்க சொல்லியிருப்பதைப் பார்த்தால்... ஆதிரா என்பது வால்வெள்ளி... அதிரா என்பது வால் இல்லாத நட்சத்திரம்:)).. ஹா ஹா ஹா ஹையோ என்னை மன்னிச்சிடுங்கோ மீக்கு அர்த்தம் தெரியாது...

    மிக்க மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  111. ///ஜீவி said...
    ஆர்வத்துடன் படிக்க வைத்தது என்பது என்னவோ உண்மை.

    குறும்புக்கார(ர்) கதை!

    'பென்சில் கிடைக்கவில்லை' என்று கூட கதைக்கு தலைப்பு வைத்திருக்கலாம். அந்தளவுக்கு இந்தக் கதையில் பென்சிலின் பங்கு அதிகம். அந்த பென்சில் தான் கதையை கதையாக்கியிருக்கிறது.///

    வாங்கோ வாங்கோ உங்கட பின்னூட்டம் மிகவும் ஊட்டமளிக்கிறது மிக்க நன்றி. உண்மைதான்.. நீங்க சொல்லியிருக்கும் தலைப்பை வைத்திருக்கலாம்.. இது காதால் கேட்ட கதை.. தலைப்பு இல்லாக் கதை என்பதால் நானேதான் தலைப்பு வச்சேன்ன்.. மியாவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  112. நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  113. //Asokan Kuppusamy said...
    நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி//
    வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  114. முதலாவதை விட இரண்டாவது கதை நன்றாக இருந்தது. எதிர்பாராத முடிவு. அதிராவுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  115. நான் என்ன சொல்ல. எங்கள் ப்ளாகின் பின்னூட்டப் புயல் ( கதை கதைகளா) எழுதியதைத்தானே பிரசுரிக்க முடியும் ஸ்ரீராம் உரலில் தலை கொடுத்து விட்டார் ஐயோ அப்பா என்றால் முடியுமா

    பதிலளிநீக்கு
  116. ///ஞா. கலையரசி said...
    முதலாவதை விட இரண்டாவது கதை நன்றாக இருந்தது. எதிர்பாராத முடிவு. அதிராவுக்குப் பாராட்டுகள்//

    வாங்கோ கலையரசி மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  117. //G.M Balasubramaniam said...
    நான் என்ன சொல்ல. எங்கள் ப்ளாகின் பின்னூட்டப் புயல் ( கதை கதைகளா) எழுதியதைத்தானே பிரசுரிக்க முடியும் ஸ்ரீராம் உரலில் தலை கொடுத்து விட்டார் ஐயோ அப்பா என்றால் முடியுமா//

    வாங்கோ வாங்கோ..... அவர் எங்கே ஐயோ அப்பா என்றார்ர்:) ஹா ஹா ஹா அவர் ஹப்பியாகத்தான் இருக்கிறார்ர்..

    என்னாது பின்னூட்டப் புயலா?:) ஆவ்வ்வ்வ்வ் எல்லோருக்கும் பொர்ர்ர்ர்ர்ராஆஆஆண்மை:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  118. அதிரா இன்னிக்கு இதே உள்ளுணர்வால் ஒரு சம்பவம் ..

    நான் சர்ச்சுக்கு போயிட்டு ரோட் க்ராஸ் பண்ணும்போது எதிர்பக்கம் ஒரு பிரிட்டிஷ்கார் 8 குட்டி பிள்ளைங்களை மொத்தமா பிடிச்சி நின்னுட்டிருந்தார் ..எல்லாம் ஒரே அளவில் ஒன் இயற் காப் தன் இருக்கும் ..நான் மனசுக்குள்ளே //அடப்பாவி இப்படியா //என்று நினைச்சேன் அந்தாளுக்கு நான் நினைச்சது புரிந்தது போல :) கையை ஆட்டி சிரிச்சி all aren't mine என்று சொல்லிட்டே போறார் :)

    பதிலளிநீக்கு
  119. யாரோ என்னை கூப்பிட மாதிரி இருந்ததே ..கனவோ !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நிறையப்பேர் கூப்பிட்டிருக்காங்க,,, மனதுக்குள்ளே:)

      நீக்கு
    2. ///all aren't mine என்று சொல்லிட்டே போறார் :)///
      ஹா ஹா ஹா அது உங்கட கண்பட்டிடாமல் இருக்க அப்படி சொல்லியிருப்பார்ர்ர்:)

      நீக்கு
  120. //Angelin said... அதிரா இன்னிக்கு இதே உள்ளுணர்வால் ஒரு சம்பவம் ..

    நான் சர்ச்சுக்கு போயிட்டு ரோட் க்ராஸ் பண்ணும்போது எதிர்பக்கம் ஒரு பிரிட்டிஷ்கார் 8 குட்டி பிள்ளைங்களை மொத்தமா பிடிச்சி நின்னுட்டிருந்தார் ..எல்லாம் ஒரே அளவில் ஒன் இயர் காப் தான் இருக்கும் ..நான் மனசுக்குள்ளே //அடப்பாவி இப்படியா //என்று நினைச்சேன். அந்தாளுக்கு நான் நினைச்சது புரிந்தது போல :) கையை ஆட்டி சிரிச்சி all are n't mine என்று சொல்லிட்டே போறார் :)//

    07.02.2017 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓர் திருமண மண்டபத்தில் ஒருவரின் சஷ்டியப்த பூர்த்தி (60-வது வயது நிறைவு விழா) நடைபெற்றது. அதே மண்டபத்தில் 09.02.2017 இன்னொருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றது. இரண்டுக்கும் என்னை அழைத்திருந்ததால், நானும் போய் வந்தேன்.

    முதலாமவர் இரண்டாமவருக்குத் தாய் மாமா. இரண்டாமவர் முதலாமவருக்கு மறுமான் (இங்கு மறுமான் என்றால் ... அதாவது அந்த தாய் மாமா அவர்களின் சொந்த அக்கா பிள்ளை என்பது பொருள்.)

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் முதலாமவரின் அம்மாவான ருக்மணி என்பவரும், இரண்டாமவரின் அம்மாவான ஜெயம் என்பவரும், தாயும் மகளுமேயானாலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கர்ப்பிணிகளாக இருந்து ஒரே வாரத்தில் இந்த இருவரையும் பிரஸவித்து உள்ளனர்.

    அதனால் இந்த இருவருக்கும் இப்போது ஒரே வாரத்தில் 60-வயது பூர்த்தியாகி விழா எடுக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் அதன் பிறகும் தாய் ருக்மணி அம்மாவுக்கும், பெண் ஜெயத்துக்கும் தலா இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

    அந்தக்காலத்தில் (1970-1975 இல்) எங்கள் வீட்டருகே வாழ்ந்து வந்த இவர்கள் எல்லோரையுமே எனக்கு நன்றாகத் தெரியும். தாயாரான ருக்மணி அம்மாவுக்கு எனக்குத் தெரிந்தே 7 பிள்ளைகளும் 3 பெண்களுமாக, வரிசையாகப் பத்து குழந்தைகள் உண்டு.

    ஜெயம் என்பவள் ருக்மணி அம்மாளின் மூத்த பெண். அவளுக்கு இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணுமாக மூவர் மட்டுமே.

    இப்போது அந்த ருக்மணி அம்மாவும், அவர்களின் மூத்த பெண்ணான ஜெயமும் உயிருடன் இல்லை. இப்போது அவர்கள் இருந்தால் அவர்களின் வயது முறையே 110 and 85 ஆக இருக்கலாம்.

    இன்றுபோல வேறு பொழுதுபோக்குக்களே இல்லாத காலமாதலால், இதெல்லாம் அந்தக்காலத்தில் வீட்டுக்குவீடு மிகவும் சகஜமாக நடந்துள்ளன. ஒவ்வொருவரும் டஜன் கணக்கில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, எப்படியோ கஷ்டப்பட்டு ஆரோக்யமாகவே வளர்த்து வாழ்ந்துள்ளனர்.

    இப்போது இந்த நவநாகரீக காலத்தில், எவ்வளவுதான் வசதி வாய்ப்புகள் இருப்பினும், ஓரிரண்டு குழந்தைகளைப் பெற்று, வளர்க்கவோ, படிக்க வைக்கவோ மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. யாருக்கும் தெம்பும் இல்லை. பொறுமையும் இல்லை.

    தாங்கள் எழுதியுள்ளதைப் படித்ததும், ஏனோ எனக்கு இதனைச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது. :)

    பதிலளிநீக்கு
  121. சும்மா இருந்த கோபு அண்ணனின் பழைய நினைவுகளத் தூண்டி விட்ட அஞ்சுவுக்கு என் வன்மையான கண்டனங்கள்:).

    உண்மைதான் கோபு அண்ணன், முந்தின காலத்தில் குழந்தை வளர்ப்பை ஒரு பாரமாக யாரும் கருதுவதில்லை, பெற்றுவிட்டால் போதும்.. தானே வளர்ந்திடுவார்கள்.

    நடிகர் கமல் கூட, ஏதோ ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்ர்.. தான் சின்ன வயதில் மூவரிடம் தாய்ப்பால் குடித்ததாக, ஏனெனில் யார் குழந்தை என்றில்லை குழந்தை அழுதால்... அருகில் இருக்கும் எந்த தாயும் , உடனே குழந்தையின் பசியை அடக்கிடுவாவாம்.

    இக்காலம் அப்படி இல்லையே... நாம் உதவ முன் வந்தாலும் என் குழந்தையை எதுக்கு தொட்டாய் என த்தான் சண்டைக்கு வருவார்கள்.

    நான் படிக்கும் காலத்தில் ஒரு அப்புவை சந்தித்தேன்ன்... நாம், தாத்தா வயதினரை அப்பு என அழைப்போம். அவரிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் எனக் கேட்டபோது.. அது எனக்கு Dozen plus one என அழகாக பதில் சொன்னார் பாருங்கோ.. கண்ணூறு பட்டுவிடும் என்றாக்கும் ஹாஹாஹா...

    பதிலளிநீக்கு
  122. @ Gopu anna ...ஆமாம் கோபு அண்ணா .அந்தக்காலத்தில் வீடு நிறைய குழந்தைகள்னு பாட்டி சொல்வாங்க .அவங்க கூட பிறந்தவங்க 12 பேராம் !!
    இங்கே நண்பர் ஒருவர் சொன்னார் அவர் வீட்டில் 10 பிள்ளைகளாம் அவரின் அப்பா அந்த காலத்தில் காரை விற்று 10 பிள்ளைகளையும் கூட்டிச்செல்ல பெரிய வான் வாங்கினாராம் :)
    இந்த காலத்தில் எங்கியுமே பார்த்ததில்லை நான் .அதான் அந்த பிரிட்டிஷ்கார் தோளில் ஒன்று பிறகு ஒரு வயது மட்டும் வித்தியாசத்தில் நிறைய பிள்ளைங்களை அரவணைச்சி பாதுகாப்பா ரோட் க்ராஸ் பண்ணவும் மனதுக்குள் //இத்தனை பிள்ளைங்களா எப்படி சமாளிக்கிறர் ??//என்று யோசிச்சேன் :)

    பதிலளிநீக்கு
  123. கோபு >>>>> அஞ்சு + அதிரா

    அதனால்தான் குழந்தைகள் மக்கட்செல்வங்கள் என அழைக்கப்பட்டார்கள், அன்று.

    இன்று இந்த ஒரு செல்வம் மட்டும் அதிகம் சேரவே வேண்டாம் என எல்லோரும் மிகவும் பயந்துபோய், அதிக கவனமாகவே உள்ளனர்.

    மிகவும் எதிர்பார்த்து, விரும்பிப் பெற்றுக்கொள்ள நினைக்கும், சிலருக்குத் தவமிருந்தாலும் கிடைக்காமல் உள்ளது இந்த மக்கட்செல்வம் என்பதை நினைக்கக் கொடுமையாகவும், மனதுக்குக் கஷ்டமாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  124. அஞ்சுவின் பத்துப் பிள்ளைகளும் வான் உம் பார்க்க எனக்கொரு சம்பவம் நினைவில......:)

    என் கணவரோடு முன்பு வேர்க் பண்ணிய இங்கத்தையர் ஒருவர், சொன்னாராம் தனக்கு 6 பெண்குழந்தைகள் என... விபரம் கேட்டபோது.. அவர்களுக்கு குழந்தைகள் இல்லையாம்... அதனால பெற்றால்தான் பிள்ளையா என... சைனாவுக்குப் போய் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வந்தனராம்...

    பின்னர் அடுத்த வருடம் மீண்டும் சைனா போய் அடுத்த பெண்குழந்தை... இப்படி தொடர்ந்து 6 பெண் குழந்தைகளை தத்தெடுத்து விட்டு, இது போதும் என நிறுத்தி விட்டனராம், அவர் ஒரு டாக்டர் ஆக இருந்தும் செலவுகள் கட்டுப்படியாகவில்லையாம், தம்மிடம் சொந்த வீடு கூட இல்லையாம், .

    இங்குள்ளவர்களுக்கு.. எது இல்லாமலும் இருப்பார்கள் ஆனா “ஹொலிடே” போவது எனக் கூறி.. ஒவ்வொரு விடுமுறைக்கும் எங்காவது சுத்தாவிட்டால் தலை வெடித்துவிடும் அவர்களுக்கு, அதனால 6 பிள்ளைகளையும் ஒன்றாக கூட்டிச் செல்ல ஒரு “வான்” மட்டும் சொந்தமாக வாங்கியிருக்கிறோம், பிள்ளைகளைக் கவனிப்பதற்காக மனைவி வேலைக்குப் போவதில்லை... ஆனா...

    தவறாமல் ஒவ்வொரு வருடமும் எல்லோரையும் சைனாவுக்கு அழைத்துச் சென்று, இதுதான் உங்கள் சொந்த +பிறந்த ஊர் எனக் காட்டி வரத் தவறுவதில்லை என்றாராம்ம்... இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  125. அப்பாடி ஓரு வழியா அதிரா அக்காவ பார்தாச்சு.நன்ரி ஶ்ரீராம் சாருக்கு.அருசுவையில் அதிரா அக்காவின் பபடைப்புகளை படிக்கும் போது பார்க்கவேண்டும் என நினைத்தது.இப்ப நிரைவேறிய்து.கதயும் சூப்பர்.அவர்களுக்கே உரிய இனிமையான சுத்த இலங்கை தமிழ்.அழகு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!