செவ்வாய், 22 டிசம்பர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : புரியாத புதிர் - கீதா ரெங்கன் 

துரை அண்ணா எபி யில் கே வா போ கதைப் பகுதியில் எழுதியிருந்த அப்பனும் அம்மையும்  கதையை வாசித்ததும் பெண்ணின் கோணத்தில் மனதுள் எழுந்த கதை. துரை அண்ணாவின் அழகான கதை எனக்கு மற்றொரு கதை எழுதத் தூண்டியதற்கு அண்ணாவிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து ஊக்கப்படுத்தி படைப்புகளை வெளியிடுவதற்கு எபி ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.

 

புரியாத புதிர்

கீதா ரெங்கன் 

 

சக்திக்கு அன்றைய காலை இயல்பாய் விடியவில்லை. ஏதோ ஒன்று மனதைச் சூழ்ந்து அழுத்தியது

துரை குடும்பம் எல்லாம் வடக்க கைலாய யாத்திரை, அரித்துவாருரிசிகேஷுன்னு போனாங்கல்ல? கங்கை தீர்த்தம் கொடுத்துட்டுப் போலாம்னு வந்திருந்தாங்க. மாப்பிள்ளைய அங்க பாத்தாங்களாம். இங்க வாராராம் இத்தனை வருஷம் காணாம அங்க கண்டதும் ஆச்சரியமாயி விவரம் சொல்லிட்டுப் போனாங்க. துரையும், சம்சாரமும்” 

அம்மாவின் குரல் செய்தி வாசித்தது போல் இருந்தது. திருத்த வேண்டிய தேர்வு பேப்பர் எல்லாம் அவளைப் பார்த்து பயமுறுத்தியது

கிணற்றடி சென்று பல் விளக்கி முகம் கழுவினாள். குளிர்ந்த நீர் பட்டதும் மனதின் படபடப்பு சற்று அடங்கியது போல் இருந்தது. அங்கிருந்த தோய்க்கும் கல்லின் மீது அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த மூச்சு விட்டாள்.

ஜூர மூச்சு போல் இருந்ததோ?

தோட்டத்தின் பசுமை கொஞ்சம் இதம் தந்தது. மாங்காய், தேங்காய்முருங்கை, கொய்யா என்று அவள் ஆசையாய் நட்டு வைத்த  மரங்களும்செடிகளும் சோடை போகாமல் இதோ இப்போது வரை பூத்துக் காய்த்துத் தலைமுறையை வளர்த்துக் கொண்டிருந்தன. வாழையும் குலையோடு……


அன்று பந்தலில் கட்டிய வாழைக்குலை! வாழையடி வாழையாய்…. அதுவே இல்லாதபோது’  ….சக்திக்குப் பெருமூச்சு எழுந்தது

ஏட்டி கோட்டி புடிச்சா மாதிரி இங்க வந்து இருக்க?”

தான் ஏதேனும் சிந்தனையில் ஆழ்ந்தாலே அம்மாவைப் பொறுத்தவரையில் கோட்டியாருக்குக் கோட்டி? தனக்கா?’ சக்தி சிரித்துக் கொண்டாள். விரக்திச் சிரிப்பு. 

துரை அண்ணன் எப்ப வந்திச்சு? தெரியவே இல்லை?”

காலேல.” கொஞ்சம் நிறுத்திவிட்டு ஒரு வேளை சக்தி மாப்பிள்ளையைப் பத்தி வேறு ஏதேனும் எதிர்பார்க்கிறாளோ? என்று நினைத்த அம்மா தொடர்ந்தாள்.

வடக்க மலைல ஏதோ ஆஸ்ரமமாம். அங்க கங்கை ஆத்து படித்தொறைல தமிழ்ப் பேச்சு கேட்டதும் துரை ஆர்வத்துல பக்கத்துல போச்சாம். மொதல்ல அடையாளமே தெரியலையாம். முடி எல்லாம் வளத்து, தாடி எல்லாமாம்.  அப்புறம் பாத்தா நம்ம மாப்பிள்ளைனு…. துரைக்கு சந்தோசம் அதுவும் அவரு இங்க வாரேன்னு சொன்னதும். கூடவே மாப்பிள்ளை காப்பாத்தின ஒரு சின்ன பெம்பிளை பிள்ளையாம். மாப்பிள்ளை மொகத்துல அப்படி ஒரு ஒளியாம்.

துரை சொல்லி சொல்லி முடில. நீ நல்ல உறக்கம். எழுப்ப வேண்டானு அப்புறமா வாரேன்னு போயிட்டாங்க. சரி உள்ள வா காப்பி குடிக்கியா

தன் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டியவனின் முகத்தில் ஒளி!’ விரக்தி கூடியது.

அம்மா சொன்னது ஏதோ பக்கத்து வீட்டு விஷயம் சொல்வது போலத்தான் இருந்தது. சந்தோஷமோ, கோபமோ, வருத்தமோ எந்த உணர்வும் இருந்ததாகத் தெரியவில்லை.’ 

துரை அண்ணனுக்கு சக்தி மீது அத்தனை பாசம். அவள் கல்யாணத்தை முன்னின்று நடத்தியவர். தாலி கட்டும் சமயம் கண்ணில் நீர் மல்க அவளை வாழ்த்தி நின்றிருந்தவரின் முகம் இப்போதும் அவள் மனதில். அதனால்தான் அவர் இப்போது சிதம்பரத்தைப் பார்த்ததும் அவன் வருவதை அறிந்ததும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்

சக்திக்குச் சிதம்பரத்தின் மீது எந்த வெறுப்பும் இல்லை. என்றாலும் சக்தியின் மனநிலையை அவள் உணர்வுகளை யாரேனும் புரிந்து கொண்டிருப்பார்களா?

காலத்தையும் உணர்வுகளையும் கடந்து மனதை வெற்றி கொள்வது என்பது அத்தனை எளிதல்ல. சிதம்பரம் ஒரு வழியில். இவள் வேறு வழியில். சக்தி என்ற பெயர் எதை நினைத்து வைத்தார்களோ? பொருத்தமாகிப் போனதோ. 35 வருடங்கள். பெருமூச்செழுந்தது

எந்த உறவு, உணர்வுகளிலிருந்து தன்னை மனதளவில் விடுதலையாக்கிக் கொண்டு இத்தனை வருடங்கள் இருந்தாளோ அது மீண்டும் இப்போது

அடக்கி வைத்தக் குமுறல்களும் கோபமும் எரிமலையாய் வெடித்துவிடக் கூடாது என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா என்ன? அதை அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும்.

ஏம்மா உனக்கு எதுவும் தோணலியா இல்ல எங்கிட்ட  காட்டிக்க விருப்பமில்லையா?” 

உன் கழுத்துல தாலி இருக்குல்லா?”

இந்த அடையாளம். 75 கடப்பவளுக்கு அவளின் நம்பிக்கைகளுக்கு இந்த சமூக அடையாளம் முக்கியம்தான்.’ 

சக்தியைப் பொருத்தவரையில் அது ஒரு சங்கிலியாகிப் போனது. எந்த உறவையும் பலப்படுத்தும், அடையாளப்படுத்தும் ஒன்றல்ல. மனம்தான் உறவைப் பலப்படுத்தும் அடையாளம். அவள் அனுபவம்! அவள் எத்தனை அன்புடன் காதலுடன் எதிர்பார்ப்புடன் இருந்தாள்? ஒரு மனைவியாக!

என்னதான் மனதால் அவனிடமிருந்து பிரிந்து இருந்தாலும் அடையாளத்தை ஏன் களையத் தோன்றவில்லை? விடையில்லை. இந்த அடையாளம் சிலவற்றிலிருந்து அவளைக் காப்பாற்றியதாலோ? இருக்கலாம்.’ 

நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்? இது கழுத்துல இருக்கனால நான் அவரு கூட போய் வாழணும்னு நினைக்கியோ?”

அம்மா பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டாள். சொல்லி இவளின் மனக்குமுறல்களைக் கிளப்பி ஆறிய புண்ணை மீண்டும் கீறி வேடிக்கை பார்க்கும்  தைரியம் கிடையாது. அம்மாவும் ஒரு பெண்தானே. தன் கணவன்தன் குடும்பம் என்று வாழ்பவள்

முருங்கையும், கறிவேப்பிலையும் பறித்துக் கொண்டு போனபடியே, “ஒன் அண்ணனும், அக்காவும் எல்லாரும் வாராங்கஎன்று சொல்லிவிட்டுப் போனாள்.

அதுவரை செய்தி போய் தன்னிடம் பேசுவதற்கு வருகிறார்களோ? அக்கா பக்கத்தூரில்தான். வேலை நிமித்தம் அண்ணனின்  குடும்பம் 3 மணி நேர தூரத்தில்.’ 

தினமும் அம்மாவுடன் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் சக்திக்கு எதிலும் ஈடுபட இயலவில்லை

அப்பாவுக்குத் தெரியுமா?”

இன்னும் எந்திக்கலை”.  ‘பாவம். நம்பிக்கையுடன் இருந்த அப்பா பின்னர் தளர்ந்து அதிகம் பேசுவதில்லை.’  

அன்று அம்மாவுடன் வீட்டு வேலையில் ஈடுபடும் மனநிலையில் இல்லை.

கொஞ்சம் நான் கிடந்துட்டு வாரேன். நீ எதுவும் செய்யாத. நான் வந்து செய்யுறேன்.”

மனம் லேசுப்பட்டதில்லையே. வருடங்களுக்கு முன்பான தினங்களுக்கு அவளை இழுத்துச் சென்றது.

***** 

அவள் பெற்றோர் பெரிய படிப்பு என்றில்லை என்றாலும் பள்ளிக் கல்வி கற்றவர்கள்அப்பாவிகள். வயல், தோட்டங்கள் என்று வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. சக்தியின் திருமணம் சீரும் சிறப்புமாய்ப் பார்த்து பார்த்து நடத்தப்பட்டது.  

சிதம்பரத்தின் வீட்டினரும் இவர்களின் தரத்திற்கு நிகரானவர்கள்தான்.

அவனுக்கு ஒரு அக்கா. ஒரு தம்பி. சிதம்பரம் மேற்படிப்பும் படித்து கல்லூரியில் ஆசிரியப்பணி. எனவே எல்லாம் திகைந்து வந்தது. ஜோசியம் உட்பட!

சிதம்பரம் ஏதோ சிந்தனைவயப்பட்டவனாகவே இருந்துவந்தான். சக்திக்கு வாசிக்கும் பழக்கமும் இருந்ததால், தான் அறிந்ததன் அடிப்படையில் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலர் இப்படியும் இருப்பது உண்டுதான்.

காலப்போக்கில் மாறலாம் என்ற எண்ணம். சக்தி நன்றாகக் கவனித்துக் கொண்டாள் சிதம்பரத்தை மட்டுமல்ல புகுந்தவீட்டினர் எல்லோரையும்.

திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கடந்திருக்குமா? இருக்கும் ஒரு நாள் அதிகாலையில் வீட்டை விட்டுப் போனவன் திரும்பவில்லை. அதுவும் வீட்டில் எதுவும் சொல்லாமல். கக்திக்கு ஏன் என்று தெரியவில்லை. அழுகை வந்தது.

ஒரு வாரம் ஆயிற்று வரவில்லை. வீட்டினரும் விசனப்படவில்லை. சக்தி விக்கித்துப் போனாள்.

அவென் அப்படித்தான் போவான் வருவான். என் மவன் எதுவும் தப்புத் தண்டாவுக்கெல்லாம் போறவன் இல்ல. ஏதாச்சும் கோயில்ல கிடப்பான்” 

சர்வ சாதாரணமாகச் சொன்னார் மாமியார்.

எந்தக் கோயில் போயிருப்பான். கோயில் என்றால் தன்னையும் அழைத்துச் சென்றிருக்கலாமே! திருமணமாகி இன்னும் சரியான புரிதலே ஏற்பட்டிருக்கவில்லை. அதற்குள் இப்படி.’ 

சக்திக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மனம் என்னென்னவோ நினைத்தது. நெஞ்சில் பாரம் அழுத்தியது. அவன் வந்திருவான் என்று சொன்னதால் கொஞ்சம் நம்பினாள். அவள் வேறு யாரிடம் கேட்பாள்

அப்படிப் போய் வருபவன் என்றால் இவர்கள் வீட்டில் ஏன் இப்படிப் போகிறான் என்று யோசித்திருக்க மாட்டார்களோ? யாருக்குமே சொல்லிச் செல்லும் பழக்கமே இல்லை என்பதும் புரிந்தது. மாமியார் உட்பட.’ சக்திக்கு இவை எல்லாமே புதுசாகவும் புதிராகவும் இருந்தது.

அவள் வீட்டிலோ பக்கத்து வீட்டிற்குச் சென்றாலும் கூடச் சொல்லாமல் யாருமே வெளியில் செல்வதில்லை.  

நாட்கள் கடந்தன. சக்திக்கு இருப்புக் கொள்ளவில்லை. கவலை அதிகமாகியது.

எப்படித் தேடுவது 

வீட்டில் எந்தக் குறிப்பும் விட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. அவன் மேசைபுத்தக அடுக்குகளை ஆராயத் தொடங்கினாள். ஏதோ ரிஷிகேஷ் ஆஸ்ரமத்து புத்தகங்கள், ராமகிருஷ்ண மடத்து விவரங்கள், புத்தகங்கள். அதனிடையில் சாரதா தேவியின் வாசகங்கள் அடங்கிய சிறு புத்தகம்.

நினைவு தட்டியது. ‘திருமணம் ஆன இரு நாட்களில், திருமணத்திற்கு வர இயலவில்லை என்று ஒருவர் வீட்டிற்கு வந்துராமகிருஷ்ண பரமஹம்ஸர்சாரதா தேவியைப் போல வாழ வாழ்த்துகள்என்று வாழ்த்தி இப்புத்தகத்தைத்தானே பரிசாக அளித்தார்!’ 

அவர்களைப் போலெல்லாம் வாழமுடியுமா? சாதாரண மானிடர் நாம்.

அவரைத் தொடர்பு கொண்டால் விவரம் கிடைக்குமா? எப்படித் தொடர்பு கொள்வது?’ வீட்டினர் யாருக்கும் தெரியவில்லை. சிதம்பரத்தின் தம்பி, அக்கா உட்பட. என்ன குடும்பம் இது? ஒரு மாதம் கடந்தது

சக்தியின் பெற்றோர் ஆடிச்சீருடன் வந்தார்கள். மாப்பிள்ளையை அழைக்கவாம். சக்தி என்ன சொல்வாள்? மெதுவாக விஷயம் அறிந்து வாயடைத்துப் போனார்கள். பேச்சு எழவில்லை. அம்மா, சக்தியிடம் யாரும் அறியாத வண்ணம் மெதுவாகக் கேட்டாள்.

நீ மாப்பிள்ளை கிட்ட எதமா நடந்துக்கிட்டியா? அவருக்கு மனசு நோவாம?  உங்களுக்குள்ள எல்லாம் நல்லா இருந்திச்சா” 

சக்திக்குப் புரிந்தது அம்மா எதைக் கேட்கிறாள் என்று. ‘அம்மாவுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.’ “ம்என்று ஒற்றை எழுத்தில் பதில் சொன்னவளுக்கு அப்போதுதான் சிலது மண்டையில் உரைக்கத் தொடங்கியது.

மணவறையில உக்காருவானா மாட்டானோன்னு எல்லாரும் பயந்துக்கிட்டிருந்தோம். எப்படியோ எல்லாம் நல்லா முடிஞ்சுருச்சுஎன்று யாரிடமோ, திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் வீட்டில் மறுமழுச்சி நடந்த போது சிதம்பரத்தின் அத்தை சொல்லிக் கொண்டிருந்தது. ‘அப்படியானால் அவன் சம்மதம் இல்லாமல் இது நடக்கவில்லை. அல்லது வற்புறுத்தல்?’

அவனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பது அவன் விருப்பம். இல்லறத்தில் இருந்தும் கடைப்பிடிக்கலாம்! இல்லறம் விருப்பமில்லை என்றால் திருமணம் வேண்டாம் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். பெற்றோரிடம் சொல்லத் தயக்கம்? இப்படிச் சொல்லாமல் போகும் தைரியம் இருப்பவனுக்கு பெற்றோரிடம் சொல்ல என்ன தயக்கம் இருந்திருக்க முடியும்?’

அவன் தன்னிடம் இரவின் தனிமையில் வந்தது?’ எங்கோ வாசித்த நினைவு வந்தது. ஆன்மீகத் தேடுதல் இருந்தாலும் உடல் ரீதியான உணர்வுகள் சிறு காலமேனும் சிலருக்கு இருக்கும் என்று. ! அதைத் தீர்த்துக் கொள்ள வேறு விதத்தில் செல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை என்பதால் திருமணம்?’  

தாம்பத்தியம் இல்லாத திருமணம் அபூர்வமே. அப்படியான தாம்பத்தியத்திலும் அன்பும் புரிதலும் கலந்து இருந்தால்தானே அதற்கு அர்த்தம் உண்டு! இல்லை என்றால் அது வெறும் உடல் சார்ந்த உணர்வு, காமம் மட்டுமே என்று வேறு பெயர்தானே அர்த்தமாகிப் போகிறது! ஆன்மீகத் தேடல் என்று சிந்திக்கும் மனதிற்கு இப்படி மனைவியாக்கிய பெண்ணை விட்டுப் போவது நியாயமற்றது என்று தோன்றாதோ?’

அவளுக்கு ஏனோ அருவருப்பு ஏற்பட்டதுஎண்ணங்கள் வலுப்பெற்று அவளை உந்தித் தள்ளின.

அம்மா நான் நம்ம வீட்டுக்கு வந்துடறேன். எனக்கு இங்க இருக்க வேண்டாம்

ஏய் என்ன பேச்சு பேசுதே. சும்மாரு. மாப்பிள்ளை வந்துருவாருன்னு ஒன் மாமியார், மாமனார் சொல்லுறாங்கல்ல. அப்ப நீ நம்ம வீட்டுக்கு வரது நல்லாருக்காது. பொறுமையா இரு

கல்யாணம் கழிஞ்சு 6 மாசமாவுது. இன்னும் குளிச்ச்சிட்டுதான் இருக்கா.. “

காப்பி, பலகாரம் கொடுத்துக் கொண்டே போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றாள் மாமியார்.

எப்படி இப்படி இவர்களால் நாக்கில் நரம்பில்லாமல் பேச முடிகிறது? தன் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில்? நல்லகாலம்!

எதுவுமில்லை.’ சக்திக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது

அவன் விட்டுப் போனதுக்கும் இவள்தான் காரணம் என்பது போல பேச்சுக்கள் பேசப்பட்டன. இவளுக்கு அவனை முடிந்து வைத்துக் கொள்ளத் தெரியவில்லையாம். வேண்டாத பேச்சுகள் வேறு எழுந்தது அவளுக்கு அருவருப்பு கூடியது. எப்படி இவர்களிடம் சொல்லுவது? புரிந்து கொள்வார்களா? யாரிடம் பேசித் தீர்வு காண்பது? துக்கம் நெஞ்சைப் பிசைந்தது

அம்மா, அப்பா விடை பெற்றார்கள். அப்பா எதுவும் பேசவில்லை. அவளைப் பார்க்கும் திராணியும் இல்லை அவருக்கு. சற்றுத் தள்ளாடினாரோ? சக்திக்கு ஒரு புறம் வருத்தம், அழுகை. மறுபுறம் தன் பெற்றோர் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் செல்கின்றனரே என்ற கோபம். இப்படியும் அப்பாவிகளா என்ற வருத்தம்

தலைதீபாவளியும் நெருங்கியது. சிதம்பரம் வந்தானில்லை. தேடினார்கள்.

போலீஸுக்கோ, டிவியிலோ, நாளிதழிலோ சொல்லித் தேடுவதை வீட்டினர் விரும்பவில்லை. ரிஷிகேஷ் ஆஸ்ரமத்தையும், ராமகிருஷ்ண மடத்தையும் அவளுக்குத் தெரிந்த வகையில் சக்தி தொடர்பு கொண்டாள். பலன் இல்லை

சக்தியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அழுது அழுது மனம் பாறையாகிக் கண்ணில் நீர் வற்றியே போனதுதான் மிச்சம் 

அம்மாவும் அப்பாவும் எத்தனை மனமுடைந்து போனார்கள்? ஊராரின்சுற்றத்தின் கேள்விகளும் பேச்சுகளும்!’ 

தலைதீபாவளிச் சீருடன் மீண்டும் சக்தியின் பெற்றோர் வந்தனர். இம்முறை அவள் அண்ணனும், அக்காவும் கூட வந்திருந்தனர் அவளுக்குச் சௌகரியமாயிற்று. அண்ணனிடமும், அக்காவிடமும், தான் இனி இங்கிருக்க முடியாது என்றும் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் தீர்மானமாகச் சொன்னாள்

மாப்பிள்ளை திரும்ப வந்தாருனா?”

அப்ப பார்த்துக்கிடலாம்

அப்பாவின் காதில் அது சொல்லப்பட்டது. அப்பா சிதம்பரத்தின் பெற்றோரிடம் மெதுவாக இங்கிதத்தோடு சொன்னார்

சக்தி கொஞ்ச நாள் எங்க கூட வந்து இருக்கட்டுமா?”

கேள்வி கேட்கத் தெரியாத மனிதர். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.

கூட்டிட்டுப் போங்க. எனக்கென்ன? ஆனா சிதம்பரம் வந்திடுவான்.”

மாப்பிள்ளை வந்ததும் கண்டிப்பா நாங்க அவளை இங்க கொண்டு விடறோம்மா

கோர்ட்டுக்கு எல்லாம் போக………” மாமியார் முடிப்பதற்குள்

ஹையோ! எங்க பொண்ணு வாழ்க்கை முக்கியம்மா. அப்படிச் செய்வமா?  மாப்பிள்ளை வந்திருவார்னு நம்பிக்கை இருக்கு

அவனே இல்லாத போது கோர்ட்டுக்கு எங்கே போவது? அவன் வந்தால் இங்குதான் அவள் வரப் போகிறாள்.’ சக்தி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

சக்தி பிறந்த வீட்டிற்கு வந்ததும் செய்த முதல் வேலை மேற்கொண்டு படிப்பதற்கான முயற்சிகள். எம்ஃபில், எம்மெட் என்று முடித்தாள். சிதம்பரம் வரவில்லை. பள்ளியில் ஆசிரியை வேலையிலும் சேர்ந்தாள். சிதம்பரம் வந்ததாகத் தெரியவில்லை.

எத்தனையோ வேண்டுதல்கள், பிரார்த்தனைகள். ஆனால் காலத்தின் கணக்கு வேறாகி இருக்கும் போது மனிதர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் காலத்தின் கணக்கு ஒத்துப் போனால் நிறைவேறும் இல்லையேல் இல்லை. ஆனால் பிரார்த்தனைகளின் பின் ஒளிந்திருக்கும் அந்த நம்பிக்கைதான்  வாழ்க்கை வண்டி குடை சாயாமல் ஓட்டிச் செல்ல ஆசுவாசப்படுத்தி உதவும்.

அப்போது போலீஸுக்குத் தகவலும், தேடுவதற்கான அறிக்கையும் கொடுத்துப் பார்த்தார்கள். சிதம்பரம் என்ன ஆனான் என்பதற்கான எந்தத் தகவலும் இல்லை. அதன் பின் இரு வீட்டாரும் அமைதியானார்கள். சிதம்பரம் வீட்டினருடனான தொடர்பும் விட்டுப் போனது. 

விதி என்றனர். தப்பிப்பதற்கு அல்லது மனதைச் சமாதானம் செய்து கொள்ள நல்லதொரு வார்த்தை. சக்தியின் வாழ்க்கை?

அம்மாவும் அப்பாவும் நடமாடிக் கொண்டிருந்தாலும் ஏதோ என்று ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அடி மனதில் விரக்தி என்று கூடச் சொல்லலாம்.

சில விஷயங்கள் அந்தந்தக் காலக்கட்டத்தில் நடந்திட வேண்டும்.  இல்லையேல் அதற்குப் பயனில்லாமல் போய்விடும். போனவன் போனவன்தான் என்றாகிப் போனது

வருடங்கள் கடந்தன. அவள் பெற்று சீராட்டி வளர்க்க நினைத்து காலடி வைத்தது பொய்யாகிப் போனாலும், தற்போது அவளது கவனிப்பில் பல ஆதரவற்ற பிள்ளைகள் அவளை அம்மா என்று அழைத்துக் கொண்டு.

குறிப்பாகப் பெண் பிள்ளைகள்

****** 

இதோ இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் வருகிறான் என்ற செய்தி. ஒரு பெண் குழந்தையுடன். அன்று ஏதோ ஒன்றிற்காக…., இப்போது குழந்தைக்காக? சக்திக்கு இருந்த கோபம் வருத்தம் எதுவும் தற்போது இல்லை

அதனால் வெறுப்பும் இல்லை. எத்தனையோ குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவள் இக்குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு மாட்டேன் என்பாளா என்ன?

அண்ணனும், அக்காவும் வந்த சத்தம் கேட்டு எழுந்து வந்தாள். விசாரிப்புகள் முடிந்து, எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் அக்காவும் அண்ணனும் அவள் என்ன முடிவு எடுப்பதாக இருக்கிறாள் என்று கேட்டார்கள்.

இத்தனை வருடங்கள் யாரும் இதைப் பற்றிப் பேசவில்லை. இப்போது மட்டும் என்ன?

என்ன சொல்ல இருக்கு? வந்தார்னா பாத்துக்கலாம். இத்தனை வருஷத்துல என்ன முடிவு எடுத்தோம்? காலம் போற போக்குலதானே போயிட்டுருக்கோம்

காலம் போற போக்குன்னா அப்ப மாப்பிள்ளையோடு போய் வாழலாம் என்ற முடிவு போல.

எல்லாரும் கொஞ்சம் சும்மாருங்க. மாப்பிள்ளை என்ன நினைச்சு வாரார்னு தெரியாம சும்மா சக்திய போட்டு குடைஞ்சுகிட்டு. எங்க காலத்துக்கப்புறமும் சக்தி நல்லாருக்கணும் அவ யோசிச்சு முடிவு எடுக்கட்டும். என்ன முடிவு எடுத்தாலும் சரிதான்..” - அப்பா

துறவு வாழ்க்கை வாழ்பவனோடு, தன் குடும்பமும், அவன் குடும்பமும் எதிர்பார்ப்பது போல் இனி வாழ முடியுமா? எல்லோரும் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும் 

புரிந்து கொள்வதற்கு முன்னரே பிரிந்து போனவன்…. இப்போது என்ன பேச இருக்கிறது? பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோன்னு கம்ப இலக்கியம் சொல்லும் தெய்வீகக் காதலா என்ன?

சக்தியின் அப்பா அவள் முகத்தைப் பார்த்தார். அவர் கண்ணில் நீர் இருந்ததை சக்தி காணத் தவறவில்லை.

அவள் பேசவில்லை. சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டு தன்னை அமைதியாக்கிக் கொண்டாள்

நான் குழந்தைய நல்லா பார்த்துக்குவேன். எந்தப் பிரச்சனையுமில்லை.” 

சக்தி மீண்டும் கண்களை மூடிக் கொண்டு அமைதியாகி, நிமிர்ந்தாள். மிக அமைதியான குரலில் அழுத்தமாகஎனக்கு இப்ப கோபம், வருத்தம், எதுவும் துளிக் கூட இல்லை. ஆனா…” நிறுத்தி மீண்டும் நிதானித்தாள்

இத்தனை வருடங்கள் அவள் மனதினடியில் புரண்டு கொண்டிருந்தது மேலெழும்பியது.  

அவர் அன்னிக்குச் சொல்லாம கொள்ளாம 'தேடல்'னு போனாப்ல நான் போயிருந்தா எல்லாரும் என்ன சொல்லிருப்பாங்க? என்ன ஆகியிருக்கும்?”

சட்டென்று அங்கு பேரமைதி நிலவியது.

*******

104 கருத்துகள்:

  1. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை வெளியிட்டதற்கும் ஊக்கம் கொடுப்பதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எல்லா எபி ஆசிரியர்களுக்கும்.

      கணினியை ஒரு வழியாகத் தற்போதைக்குச் சரியாக்கிட்டேன்....வேலையும் வந்துவிட்டது. கணினி திரும்ப மக்கர் செய்யும் முன் வேலை முடித்து அனுப்ப வேண்டும்... எனவெ கருத்து கொடுத்துவிட்டு ஓடுகிறேன்.

      கிழமை தேதி எதுவும் மனதில் நிலையாத ஒரு நிலை..இன்று கதை வந்தது குறித்து.காலையில் முதலில் வல்லிம்மா, பானுக்கா, அப்புறம் ஸ்ரீராம் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி...

      கீதா

      நீக்கு
  2. ஆ..
    எதிர்பாராத திருப்பம்...
    அருமையான கோணம்..

    கடைசி வரிகள் சாட்டையடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பெண்ணின் உணர்வு அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.

      நீக்கு
    2. மிக்க நன்றி துரை அண்ணா உங்களின் கருத்திற்கு.

      அவள் மனதில் இத்தனை வருடங்களாக புதைந்திருந்தது ஒரு தருணத்தில் வெளி வந்துதானே ஆக வேண்டும் அண்ணா அதான் இது சரியான தருணம் முடிவைக் கேள்வியாக வைத்துவிட்டாள்!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. நிறைமதி போன்ற பெண்மையே ஆன்மீகம்.. அதற்கென்று தேடல் தனியே ஏதும் இல்லை...

    ஓம் சக்தி ஒம்..

    பதிலளிநீக்கு
  4. இன்றைய கதைக் களம் நன்றாகக் களைகட்டியிருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் கீதா ரெங்கனால் பங்கு பெற  முடியுமா என்று பார்க்க வேண்டும்.  அவர் கணினி ஒத்துழைக்க வேண்டும்.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் நேற்றிலிருந்து கணினி படுத்தல் சுண்டெலி குதித்துக் கொண்டே இருந்தது...ஓடிக் கொண்டே இருக்கப் பிடிக்க முடியலை. பூஸாரைக் கூப்பிடணுமோ என்றும் நினைத்தேன்...வேலை வேறு இருந்ததே முடித்துக் கொடுக்க....அப்புறம் சிஸ்டம் ரிஸ்டோர் செய்து இப்போது ஒழுங்காக இருக்கு...

      துரை அண்ணா மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  5. கதை சிறப்பாக வந்திருக்கிறது...
    அந்த துரை அண்ணன் யாருன்னு தெரியலை.. வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த துரை அண்ணனும் நல்லவர், பிறர் நலம் விரும்புபவர் என்று தெரிகிறது.

      நீக்கு
    2. துரை அண்ணா உங்கள் கதையிலிருந்து இது வந்ததால் அது நீங்களாகவும் இருக்கலாமே! ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் அதை அப்படியே வழி மொழிகிறேன்

      மிக்க நன்றி இருவருக்கும்

      கீதா

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அடடே .
    கீதாப் பொண்ணு கதை.
    அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.

      நீக்கு
    2. வல்லிம்மா மிக்க நன்றி காலையில் நினைவுபடுத்தியமைக்கு

      கீதா

      நீக்கு
  8. வெகு அழுத்தமான கதை. முற்காலமாக இருந்தால்
    இதுதான் ஆச்சுன்னு பெண்ணை அனுப்பி இருப்பார்கள்.

    இவள் 35 வருடங்கள் பட்ட கஷ்டம் போதாதா.
    அருமையான கதை. அன்பு துரை சொல்வது போல
    கடைசி வரி சாட்டையடி.
    அன்பு வாழ்த்துகள் கீதாமா.
    சமூகத்தின் அவலங்கள் ஓடிப்போகும் கணவன்கள்.

    கூடவே இருந்து சகிக்க முடியாமல் வாழும் மனைவிகள்.
    சமூக நீதிக்கு வழி செய்ய முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள்.

    அலட்சியமாக இருந்த புகுந்த வீட்டுக்காரர்கள்.
    இதற்கெல்லாம் எப்போது விடுதலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெட்ட பெயர் வருமோ என்று சமூகத்துக்கு பயப்படுவதுபோல தங்கள் பொறுப்புகளைக் கழற்றி விடுகிறார்கள்.

      நீக்கு
    2. வல்லிம்மா மிக்க நன்றி விரிவான கருத்திற்கு. //முற்காலமாக இருந்தால்
      இதுதான் ஆச்சுன்னு பெண்ணை அனுப்பி இருப்பார்கள்.// அதே அதே அம்மா.

      சமூகம் இப்போது மாறியிருக்கிறது என்றாலும் அந்த மாற்றம் பல ஏற்கத்தக்கதாக இல்லை. ஹெல்தியாக இல்லை.

      கீதா

      ஸ்ரீராம் ரொம்பவும் சரி!! டிட்டோ டிட்டோ!!

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. மிக அருமையாக வார்த்தைகளை செதுக்கி இந்த அழகான கதைச் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு வரிகளிலும் உள்ள உண்மைகள் உளி பட்ட கற்களாய் சுற்றிலும் தெறிக்கிறது. இறுதி வடிவம் சிறப்பாக வந்துள்ளது.

    /எத்தனையோ வேண்டுதல்கள், பிரார்த்தனைகள். ஆனால் காலத்தின் கணக்கு வேறாகி இருக்கும் போது மனிதர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் காலத்தின் கணக்கு ஒத்துப் போனால் நிறைவேறும் இல்லையேல் இல்லை. ஆனால் பிரார்த்தனைகளின் பின் ஒளிந்திருக்கும் அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை வண்டி குடை சாயாமல் ஓட்டிச் செல்ல ஆசுவாசப்படுத்தி உதவும்./

    அருமையான வரிகள். என்னை தினமும் ஆட்டிப்படுத்தும் வரிகள். மனதில் ஏதோவொரு வலிகளை உண்டாக்கும் வரிகள்.

    நல்லதொரு ஆழமான கதையை தந்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தின் கணக்கை மாற்றி எழுத அவர் உறவுகள் யாரும் முன்வராமல் போனது கதையில் சொல்லபப்ட்டிருக்கும் சோகம்.

      நீக்கு
    2. மிக அருமையாக வார்த்தைகளை செதுக்கி இந்த அழகான கதைச் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.//

      மிக்க நன்றி கமலாக்கா...உங்களின் ஊக்கமான பாராட்டு வரிகளுக்கு மிக்க நன்றி.

      அக்கா நீங்கள் கோட் செய்திருக்கும் வரிகளில் மற்றொன்றும் உண்டு....அதை ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார்.

      மிக்க நன்றி கமலாக்கா

      ஸ்ரீராம் காலத்தின் கணக்கை மாற்றி எழுத முடியுதோ இல்லையோ முயற்சி கூட உறவுகள் எடுக்கவில்லை என்பது நீங்கள் சொல்லியிருப்பது போல் சோகம்...அதைத்தான் சக்தி கடைசியில் சுட்டிக் காட்டுகிறாள்...காலம் போற போக்குலதானே போயிட்டிருக்கோம்னு..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. சக்தியின் கதை விவரமில்லாத வருத்தம் தருகிறது.
    வெகு கோர்வையாக எழுதி இருக்கிறார் கீதா ரங்கன்.
    நிறைவான முடிவு. பதில் சொல்ல முடியாத கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஆனால் அதற்கான பதில் எல்லோருக்கும் தெரியும்.  

      நீக்கு
    2. வல்லிம்மா மிக்க நன்றி அம்மா உங்கள் பாராட்டிற்கு.

      பதில் சொல்ல முடியாத கேள்வி என்றுதான் பல வீடுகளிலும் பலதும் புறக்கணிக்கப்படுகிறது...பல விஷயங்களுக்குத் தீர்வுகளே இல்லைன்னு முடிச்சுருவாங்க...

      ஸ்ரீராம் சொல்லி இருப்பது போல் இக்கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் தெரியும் ஆனால் தைரியமாகச் சொல்லமாட்டார்கள். அதனால் தான் அங்கு அமைதி நிலவுகிறது...எப்படி பதில் சொல்ல முடியும்?

      வல்லிம்மா, அண்ட் ஸ்ரீராம் இருவருக்கும் மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. தி/கீதாவின் கதையா இன்னிக்கு? அருமையா இருக்கு. இந்த மாதிரி ஆன்மிகத் தேடலில் விட்டுச் சென்ற ஆண்கள் பலர். அவர்களின் மனைவிமார் என்றோ ஓர் நாள் கணவன் வீடு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்புடன் வருடக் கணக்காகக் காத்திருந்ததையும் பார்த்திருக்கேன். நல்லவேளையா சக்திக்குக் குழந்தை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா....அதே அதே வீடு திரும்பிடுவாங்கன்னு எதிர்பார்ப்புடன்..

      ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இப்போதைய தலைமுறை இருக்க சான்ஸ் இல்லை என்றே தோன்றுகிறது...பெற்றோரும்...சக்திக்குக் குழந்தை இல்லை....ஆனால் என் உறவில் குழந்தை உள்ள ஒரு அக்காவுக்கு இதே நிலைமை..தனியாகவே காலத்தை ஓட்டி பெண் குழந்தையைப் படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டு...எப்படியோ அதுவும் நடந்து அப்படியே ஓட்டிவிட்டார் காலத்தை...இன்னும் ஓரிரு உறவுகள் இருக்கு அதில் ஒருவருக்கு குழந்தை இல்லை ஆனால் இப்படிச் சக்தி போன்று தனியாகவே ஓட்டிவிட்டார்..

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  13. ஆன்மிகத் தேடல் அனைவருக்குமே இருக்கு என்றாலும் பெண் எனில் கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டி இருக்கு. சக்தி கேட்டிருப்பதைப் போல் சிதம்பரத்துக்குப் பதிலாக சக்தி வீட்டை விட்டு வெளியேறி இருந்தால் சமூகம் நல்லவார்த்தைகளாகவா சொல்லி இருக்கும்? காறித்துப்பி இருப்பதோடு சக்தியின் பெற்றோர்களும் அவமானத்தில் ஆழ்ந்து போகும் வண்ணம் பேசி இருப்பார்கள். ஆனால் பெண்கள் அதற்கு இடம் கொடுக்காமல் திருமணமே செய்து கொள்ளாமல் தனித்திருந்து வாழும் மனோ வலிமையைப் பெற்றவர்கள். இப்படி ஓடி எல்லாம் போகமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா கை கொடுங்க!!! அப்படியே டிட்டோ டிட்டோ...

      மிக்க மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  14. ஒரு குழந்தையைக்க் கொடுத்துவிட்டு இரவுக்கிரவே ஓடிப் போன புத்தன், பின்னர் வந்த ராமானுஜர், ராகவேந்திரர் என அனைவருமே ஆன்மிகத் தேடல்களுக்காக மனைவியையும், குடும்பத்தையும் தவிக்க விட்டுப் போனவர்கள் தாம். ஆனால் நாம் இன்றும் இவர்களின் ஆன்மிக அறிவுரைகளைத் தான் பேசுகிறோம். அவர்களின் குடும்பம் என்ன ஆனது? அதன் பின்னர் எப்படி வாழ்ந்தார்கள் என்றெல்லாம் இந்த சமூகம் கவலைப்படவில்லை. நாமும் சேர்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஆ ஆ என் மனதில் உள்ளவை அப்படியே..

      இதற்குச் சொல்ல வேண்டும் என்றால் பெரிதாக ஆகிவிடும் இப்போது என்னால் இயலாத நிலை கீதாக்கா..

      அதனாலேயே நான் நம்மை மீறிய அந்த சக்தியைத் தவிர பிறவற்றில் என்னை உட்படுத்திக் கொள்வதில்லை. நேரே டோட்டல் சரண்டர்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  15. கணவனை சமூகத்திற்காகத் தூக்கிக் கொடுத்த இந்தப் பெண்கள் தான் உண்மையான ஆன்மிகவாதிகள். மனதை அடக்கி வெற்றி கொண்டவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முன்னாலயே இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பேன்.
      இப்படி ஆன்மீகம் தான் தேடல் என்றால்
      திருமணம் செய்யக் கூட்டது இல்லையா.
      இதற்கும் ஏதாவது காரணம் சொல்வார்கள்.
      பாவம் அந்தக் குடும்பங்கள்.

      நீக்கு
    2. எதையாவது சொல்லப் போய் அபசாரமாகிவிடப் போகிறது:(

      நீக்கு
    3. அதெல்லாம் ஆகாது. உண்மையைத் தானே சொல்கிறோம்! மனதை அடக்கிப் பெண்களால் வாழ முடியும். ஆண்களுக்கு இப்படி ஓடிப் போய்த்தான் மனதை அடக்க வேண்டி இருக்கிறது.

      நீக்கு
    4. என்னாது.. ஓடிப் போய் மனதை அடக்கறதா? பெணகள் வீட்லயே மனசை அடக்கிடுவாங்களா? புதுப் புதுக் கதையாச் சொல்றீங்களே

      நீக்கு
    5. புதுசெல்லாம் ஏதும் இல்லை. யோசிச்சால் புரியும்.

      நீக்கு
    6. கீதாக்கா உங்கள் முதல் கருத்து டிட்டோ...

      வல்லிம்மா எனக்கும் உங்கள் முதல் கருத்தே...

      நெல்லை கீதாக்கா சொல்லியிருப்பது போல் தான்...

      மிக்க நன்றி கீதாக்கா வல்லிம்மா, நெல்லை

      கீதா

      நீக்கு
  16. கொஞ்சம் யோசனையோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

    மிக அருமையான கதை. மனதை மிகவும் கவர்ந்தது.

    சமூகத்தில் பெண்ணிற்கும் ஆணுக்கும் இரு வேறு அளவீடுகள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நெல்லை? யோசனையோடு...கீதாவின் கதை என்றால் உங்களுக்கு ஏற்காத கருத்துடன் எழுதுவேன் என்றா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      மிக்க நன்றி நெல்லை பாராட்டிற்கு.

      கண்டிப்பாக இரு வேறு அளவீடுகள்...டிட்டோ

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  17. அவர் வந்து கதையை எப்படி முடிக்கிறார் எனப் பார்த்தேன். சக்தியின் மன நிலையோடு கதையை முடித்தது சிறப்பு.

    நமக்கு, பெண்ணின் உண்மையான மன உணர்வு தெரியாமல், இராமகிருஷ்ணர் சாரதாதேவி, காந்தி கஸ்தூர்பாய் என்று எடுத்துக்காட்டுகளைச் சொல்லிச் செல்கிறோம்.

    எல்லாவற்றையும் விதி என்று பழியை விதியின்மேல் தூக்கிப் போட்டுவிட முடியாது.

    அப்போ சொன்னார், காட்டுக்குப் போறேன் என்று சொன்ன ராமன், ஜானகியின் கருத்துக்களைப் புரிந்துகொண்டு காட்டுக்கு அவனையும் அழைத்துச் சென்றதைப் பார்க்கணும்.

    சக்திக்கு ஆன்மீகத்துல ஆசை இருக்கா, தான் வெளியேறப் போகிறேன் என்பதைப் பேசித் தெளிவித்துச் செய்திருக்க முடியாதா?

    புத்தரைப் போற்றும் நாம், அவர் கைவிட்டுவிட்டு வந்த மனைவி குழந்தை பற்றி யோசிக்கிறோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்தியின் மனநிலையோடு கதையை முடித்ததே கதையின் சிறப்பு, தனித்துவம்! அதற்கு மேல் நீட்டி இருந்தால் வளவளவெனப் போயிருக்கும். அவர் திரும்பி வருவதும் அந்தப் பெண் குழந்தையை சக்தியிடம் ஒப்படைக்கத்தான்! சக்தி மேல் அன்பினாலோ, பரிதாபத்தினாலோ, கடமை உனர்ச்சியினாலோ அல்ல. முழுக்க முழுக்க சுயலம் சார்ந்தது!

      நீக்கு
    2. ராமகிருஷ்ணர், சாரதாமணி அம்மை சரி. காந்தி, கஸ்தூரிபாயைச் சொல்லி இருக்க வேண்டாமோ! அதற்கு பதிலாக உண்மையான இல்லறத்துறவிகளாக இருந்த திரு ஆசார்ய கிருபளானி, சுசேதா கிருபளானி ஆகியோரைச் சொல்லி இருக்கலாம். நான்கு பிள்ளைகளைப் பெற்று அவர்களைச் சரியாக வளர்க்காமல் கடுமை காட்டி வளர்த்து பின் மனைவியையும் சிறைக்குக் கூடவே கூட்டிச் சென்று அவருக்கு மருத்துவம் பார்க்காமல் பாடாய்ப் படுத்திய காந்தியைச் சொல்லி இருக்க வேண்டாம்.

      நீக்கு
    3. ஊர்மிளா பற்றி இங்கே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

      நீக்கு
    4. ஊர்மிளாவும் தான். ஸ்ருதகீர்த்தியும், மாண்டவியும் கூடத்தான். பரதன் பாதுகையைத் தொழுது கொண்டு நந்திகிராமத்தில் துறவற வாழ்க்கை வாழ, சத்ருக்னன் அவனுக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். இதில் ஊர்மிளையின் விரகம் பற்றி மட்டும் "சாகேத் ராமாயணம்" மூலம் தெரிய வருகிறது. மற்றபடி அனைவருமே போற்றத் தக்கவரே!

      நீக்கு
    5. நான் ரோபோ இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

      நீக்கு
    6. உங்கள் தளங்களில் நானும் ரோபோ இல்லை!!

      நீக்கு
    7. அவர் வந்து கதையை எப்படி முடிக்கிறார் எனப் பார்த்தேன். சக்தியின் மன நிலையோடு கதையை முடித்தது சிறப்பு.//

      நெல்லை இதற்கு மேல் என்ன கதை இருக்கு. அப்படி எழுதினால் அது கதையாகியிருக்காது..இங்கு சக்தியின் மனநிலையிலிருந்து மட்டுமே..இல்லையா.

      நெல்லை ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் மற்றும் சாரதா தேவியைச் சொல்ல இயலாது. சாரதா தேவி ஈடுபாட்டுடன் தான் இருந்தார். பரமஹம்சர் தேவியிடம் கருத்து கேட்டுத்தான் வாழ்ந்ததாக அவர் கதை வாசித்திருக்கிறேன். அதனால்தான் கதையில் அவர்களைப் போல் சாதாரண மனிதர்கள் வாழ்வது கஷ்டமாச்சே என்று...சொன்னது.

      மிக்க நன்றி நெல்லை

      ஸ்ரீராம் அண்ட் கீதாக்கா கண்டிப்பாக ஊர்மிளை லிஸ்டில்...

      மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ட் கீதாக்கா

      கீதா

      நீக்கு
    8. பரமஹம்சர், சாரதாமணியைத் தான் வணங்கும் தேவியாகவே பார்த்தார். ஆகவே அவரால் எளிதாகக் காமத்தை வெல்ல முடிந்தது. அவரின் போக்கு முதலில் புரியாவிட்டாலும் பின்னாட்களில் புரிந்து கொண்ட அன்னை அவருக்குத் துணையாகவே எல்லாவற்றிலும் ஈடு கொடுத்தார். "ரா.கணபதி" எழுதிய "அம்மா" கல்கியில் வெளிவந்தப்போவே படிச்சிருக்கேன். பின்னாட்களிலும் படிச்சேன்.

      நீக்கு
  18. சமூகத்துக்காகவோ இல்லை கணவனின் முன்னேற்றத்துக்காகவோ தங்கள் வாழ்க்கையை மனமுவந்து விட்டுக் கொடுப்பவர்கள், கணவனின் achievementsஐ மிஞ்சி விடுகிறார்கள் என்பது என் எண்ணம்.

    மனமுவந்த பாராட்டுகள் கீதா ரங்கன். நல்ல கோணம், நல்ல சிந்தனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமுவந்து வீட்டுக் கொடுப்பது என்பது நம் நாட்டி பல பெண்கள்  செய்வதுதான். இங்கே கீதா கையாண்டிருப்பது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டு, அவளைப் பற்றி கவலைப் படாமல் திடீரென்று அவளை உதறிவிட்டு தன் வழியில் செல்பவர்களை பற்றியது. மனைவியைப் பற்றி கவலைப்படாத ஆண் ஊதாரியாகவோ, குடிகாரனாகவோ இருந்தால் அந்தப் பெண்ணிற்கு அனுதாபம் கிடைத்து விடும். ஆனால் ஆன்மீகத் தேடலுக்காக மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு செல்லும் பெண்ணின் நிலை..? 

      நீக்கு
    2. ஆனமீகத் தேடல் -50 வயசுல கடமைகள் முடிச்சுட்டு வரலாம். கல்யாணம் ஆகி ஆறு மாசத்துலயா?அட ஆண்டவா

      நீக்கு
    3. நெல்லை, நீங்க புரிஞ்சுக்கவே இல்லை. ஆழ்ந்து யோசிங்க புரியும். ஆன்மிகத் தேடலில் இருக்கும் பலரும் திருமணம் செய்து கொள்ள யோசிப்பார்கள். மறுப்பார்கள். ஆனால் வீட்டில் பெற்றோர் இருந்தால் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைப்பார்கள். சிலருக்கு வேண்டுமானால் இல்லற வாழ்வில் ஈடுபட ஆரம்பித்ததும் ஆன்மிகம் வேண்டாம் என்று இல்லறத்தில் தொடர முடிந்திருக்கும். ஆனால் உண்மையில் மனதில் பற்றில்லாமல் வற்புறுத்தலுக்குத் திருமணம் புரிந்து கொண்டால், ஆறு மாசம் என்ன அன்றே கூடக் கிளம்ப வாய்ப்பு இருக்கு. திருமணத்தின்போதே ஓடிப் போக வாய்ப்பிருக்கு. வெகு சிலருக்கு மட்டும் இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மிகப் பணி ஆற்ற உத்தரவு கிடைக்கும், உங்கள் திரு "எம்" போன்றவர்களைப் போல!

      நீக்கு
    4. // சமூகத்துக்காகவோ இல்லை கணவனின் முன்னேற்றத்துக்காகவோ தங்கள் வாழ்க்கையை மனமுவந்து விட்டுக் கொடுப்பவர்கள்,//

      மனமுவந்து?!

      நீக்கு
    5. 40 வயசுலே கடமைகளை முடிச்சுட்டு வருவது ஆன்மிகத் தேடல் அல்ல. பக்தி, பக்தி மட்டுமே! ஆன்மிகம் வேறே! பக்தி வேறே! இங்கே பக்திச் சுற்றுலாவை ஆன்மிகச் சுற்றுலாவாக விளம்பரம் செய்யறாங்க. பக்தி அதிகம் உள்ளவர்களை ஆன்மிகவாதி (என்னை உள்பட, நான் ஆன்மிகவாதியே அல்ல. பக்தி மட்டும் தெரியும்.)என்கின்றனர். இங்கே சொல்லி இருப்பது ஆன்மிகம். இதற்கு ஆணென்ன, பெண்ணென்ன! அதையும் மறந்து தன்னையும் மறந்து உள்ளார்ந்த தேடலில் கிடைத்ததைப் பற்றி மகிழ்ந்து கொண்டு இருக்கும். பெண்களில் சக்கரத்தம்மாள், ஆவுடையக்காள், சகோதரி சுப்புலக்ஷ்மி போன்றவர்கள் ஆன்மிகவாதிகள். இன்னும் இருக்கலாம். "உள்ளம் உருகுதையா!" பாடலை எழுதின ஆண்டவன் பிச்சி/பிச்சையைக் கூட அப்படிச் சொல்லலாம். அவங்க குடும்பமே ஆன்மிகத் தேடலில் ஈடுபாடு உள்ளவர்கள்.

      நீக்கு
    6. நெல்லை அண்ட் பானுக்கா உங்கள் இருவரின் கருத்திற்கும் மிக்க நன்றி...

      அதைப் பற்றி விரிவா சொல்லலாம் ஆனால் மீக்கு முடியலை இப்போ

      ஸோ ஸ்ரீராம் கேட்டிருக்கும் அந்தக் கேள்வி என் மனதிலும் எழுந்தது. மனமுவந்து என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் என்றே தோன்றும். மனமுவந்து என்றால் சலிப்பு வரக் கூடாது இல்லையா? அல்லது கேள்விகள் எழக் கூடாது இல்லையோ? ஏதோ ஒரு கம்பல்ஷனில் தான் இல்லையா? ஒரு சில அபூர்வ கேஸ்கள் அன்னியோன்யமானவர்கள் இருக்கலாம்...

      கீதாக்கா டிட்டோ டிட்டோ உங்கள் கருத்து...என் கருத்தும் இதே ஆன்மீகம் என்பது வேறு....வேறு...



      நீக்கு
    7. நான் பயணத்தில் இருக்கேன். விரிவா பதில் சொல்ல முடியலை. லட்சிய மனிதர்கள் திருமணம் செஞ்சுக்கக்கூடாது. இல்லை இருவரும் ஒத்த கருத்தோடு இருக்கணும்

      அக்காவின் வரவு ஆச்சரயம். வாழ்க வளமுடன்

      நீக்கு
    8. நெல்லை, நீங்க தி.ஜானகிராமனின் "அன்பே ஆரமுதே!" படிச்சிருக்கீங்களா? இல்லைனா படிங்க. எனக்கு ஜானகிராமனின் இந்த நாவல் தான் ரொம்பப் பிடித்தது. என்னைப் பொறுத்தவரை அவரோட மாஸ்டர் பீஸ் இது! (இது ஆளாளுக்கு ரசனைக்குத் தகுந்தாற்போல் மாறுபடும் என்பதும் என் கருத்து!) படிச்சுட்டுச் சொல்லுங்க!

      நீக்கு
  19. ஆழ்ந்த சிந்தனையோடு எழுதப்பட்டிருக்கும் கதை. வார்தைகளை அவர் தேர்ந்தெடுத்து தொடுத்தாரா? அல்லது கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டதா? அருமை கீதா!, தொடர்ந்து இதைப் போல் இன்னும் நிறைய எழுத இறையருள் உங்களுக்கு துணை நிற்கட்டும்.இந்த வருடத்தில் எ.பி.யில் வெளியான கதைகளுள் ஆகச்சிறந்த கதை இது எனலாம். மனமார்ந்த பாராட்டுகள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் கணினி சுண்டெலி ஓரே ஓட்டம்...டைப் செய்ய முடியலை.சோ...இப்போ மொபைல் வழி...

      பானுக்கா மிக்க மிக்க நன்றி...உங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும்....ரொம்பவே என்னை சொல்லியிருக்கீங்க....அந்த அளவிற்கு இருக்கேனா தெரியலை...இங்கும், மின் நிலாவிலும் எழுதியிருக்கும்..மாலா மாதவன் லெவல் எல்லாம் பார்க்கறப்ப மீ எல்லாம் அதன் அருகில் கூட முடியுமா ன்னு தோணுது...உங்கள் பாராட்டிற்கும் கீதாக்கா உங்கள் பராட்டிற்கும் மிக்கmikka nantri...

      Kathai எழுத தொடங்கியதும் அதுவே அப்படியே என்னை உள் இழுத்தது.. ஆனால் தடைபட்டது பல காரணங்களால்...முடிக்காமல் பாதியில் இருந்தது..எப்படியோ உள்ளே புகுந்து முடிச்சு அனுப்பிட்டேன்...

      மீண்டும் இருவருக்கும் நன்றியுடன்

      கீதா

      நீக்கு
    2. //மின் நிலாவில் எழுதியிருக்கும்.....
      தோணுது..//

      திறமைக்கு அடக்கம் தேவையில்லை, சகோ.. தன் எழுத்தை தானே ரசிக்கும் பேறு தான் மென்மேலும் உயர்ந்த தளத்திற்கு கைப்பிடித்துக் கூட்டிச் செல்லும். இல்லையெனில் 'அவர் போலாகுமா' என்ற தாழ்வு மனப்பான்மையில் முடக்கிவிடும். மன நலக் கல்வி அறிந்த உங்களுக்குத் தெரியாததல்ல. உங்கள் எழுத்தில் புதியதோர் ஜொலிப்பைக் கண்டதால் தான் இதைச் சொல்ல நேர்ந்தது.
      யார் வேண்டுமானாலும் ஒரு கதையை
      சொல்லலாம். ஆனால் அதை எழுத்தில் வடித்து பிறரை இறுத்தி வைத்து வாசிக்க வைப்பது என்பது தனிக் கலை. அந்த கலை நேர்த்தியின் நுணுக்கம் இந்தக் கதையில் உங்களுக்கு வசப்பட்டிருக்கு.
      அதை இறுக்கப் பற்றிக் கொள்ளுங்கள். எழுதுவதில் மாற்றி மாற்றி புதுப்புது சோதனைகள் செய்யுங்கள். அது உயர்வான மேன்மைக்கு இட்டுச் செல்லும். இதைச் சொல்லவே இதை எழுதினேன். வாழ்த்துக்கள்.





      நீக்கு
    3. // எ.பி.யில் வெளியான கதைகளுல் ஆகச் சிறந்த கதை இது..//

      ஹஹ்ஹாஹ்ஹா..

      பா.வெ. எ.பி.யில் வெளியான கே.வா.போ.கதைகலில் பலவற்றை நீங்கள் வாசித்ததில்லை என்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாகவா சொல்வது?...

      நீக்கு
    4. தாழ்வு ம்னப்பான்மை இல்லை ஜீவி அண்ணா. நான் ரசித்து எழுதுவேனே ஆனால் இன்னும் நன்றாக எழுதலாமொன்னும் தோனும். அதைத்தான் சொல்லியிருந்தேன். மிக்க நன்றி அண்ணா உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு

      கீதா

      நீக்கு
  20. @Engal blog editorial: துரைசெல்வராஜூ சாரின் கதையின் தொடர்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் கதை வெளியாகி அதிக நாட்களாகி விட்டதால், அந்த லிங்கை கொடுத்திருக்கலாம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாராவிலேயே கொடுக்கப் பட்டிருக்கிறதே, கவனிக்கவில்லையா?

      நீக்கு
    2. முதல் பத்தியில் இரண்டாம் வரி ஆரம்பமே அந்தச் சுட்டி தான். காலையிலேயே கவனித்தாலும் சுட்டிக்குப் போக நேரமில்லை.

      நீக்கு
  21. தேர்ந்த கதை சொல்லல். வாகான எழுத்து நடை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி அண்ணா உங்களின் ஊக்கம் மிக்க வார்த்தைகளுக்கும், பராட்டிற்கும்

      கீதா

      நீக்கு
  22. பதில்கள்
    1. டிடி மிக்க நன்றி கருத்திற்கு.

      பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மையுண் டாகப் பெறின்

      இக்குறள் தானே?

      கதைக்கு?

      கீதா

      நீக்கு
  23. சிறந்த கதை மேடம்.
    சிறந்த சிறுகதை அப்படிப்பட்ட நறுக்கென்ற வரியுடன் தான் முடியனும்.
    கதையின் ஒட்டுமொத்த சுமையும் அங்க இருக்கு.
    உங்கள் சுண்டெலியைப் போல கதையில் கணவனும் கைக்கு சிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.
    கதையில் சுண்டெலி காலம் கடந்து வந்துச்சு.
    உங்களுக்கு சரியான நேரத்தில சரி ஆகி கமெண்ட்ஸ் கு பதில் போட விட்டுருச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அரவிந்த்! வாங்க.

      மிக்க நன்றி அரவிந்த் கருத்திற்கு. ஆமா சரிதான் உங்க கருத்து

      சுண்டெலி மீண்டும் ஓட ஆரம்பித்துவிட்டது. ஸோ கணினி velai seyyala..இப்ப மிண்டுங்க் மொபைல் வழி...

      நன்றி அரவிந்த்

      கீதா

      நீக்கு
  24. எல்லோரும் என்ன செய்வார்கள் தூற்றுவார்கள் அது எப்போதும் ஒரே மாதிரிதான் யாரும் திருந்த போவது இல்லை பெண்களின் மனக்கஷ்டம் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mikka nantri காமாட்சி அம்மா. ரொம்ப நாளாசு பார்த்து. நலம் தானே. இங்கு வந்து vasithu karuthu சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா.

      கீதா

      நீக்கு
  25. தேர்ந்த எழுத்தாளரின் சிறுகதையைப்படித்தது போல இருக்கிறது! அவ்வளவு அழகான நடை, செதுக்கிய உணர்ச்சி குமுறல்கள்! ஒரு பெண்ணின் மனதை, அவள் மனதின் அடியில் அமிழ்ந்திருக்கும் ஆறாத ரணத்தை வார்த்தைகளின் பிரவாகத்தில் மிக அழகாய் தெரிவித்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் கீதா!
    திருமதி.கீதா உங்கள் சிறுகதைக்கு மிகச் சிறந்த விமர்சனம் கொடுத்து அசத்தி விட்டார்! அவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா உங்கள்கருத்திற்கும் பராட்டிற்குm. ஆமாம் மனதின் அடியில் ஆறா ranam.

      மிக்க nantri mano akka

      geetha

      நீக்கு
    2. என் விமரிசனத்திற்கும் மதிப்பளித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி மனோ!

      நீக்கு
  26. மொபைலில் அடிக்க தமிழும் இங்க்கிலுஷும் மாறி மஆறி varuthu.
    நான் இன்னும் எழுத வேண்டும் என்று நண்பர் துளசியும் உற்சாகப் படுத்தி எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். கதைகள் பாதியில் நின்ருவிடும். meendum ezhutha துளஹ்கி சொல்லிக் கொண்டே இருப்பார். அவருக்கும் என் நன்றி. எபி ஆசிரியர்கள், ஸ்ரீராம், நட்புகள் எல்லாரும் தரும் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்க்ம் மிக்க nantri

    geetha

    பதிலளிநீக்கு
  27. கீதாவே எனக்கொரு புரியாத புதிர்தான்:) இதில கதையின் பெயரும் புரியாத புதிர் எனப் போட்டு என்னைக் கொயபி விட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாவே எனக்கொரு புரியாத புதிர்தான்:)//

      !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      வாழ்க்கையே புதிர் தானே அதிரா! ஞானி உங்களுக்குத் தெரியாததா என்ன!!!

      கீதா

      நீக்கு
  28. அதெல்லாம் சரி, துரை அண்ணனை இப்போ எதுக்கு கைலாச யாத்திரைக்கு அனுப்பினனீங்க?:)).. .. கீசாக்கா ஏற்கனவே அங்குபோய் கைலாச யானை பார்த்து வந்திட்டா தெரியுமோ..

    பதிலளிநீக்கு
  29. வித்தியாசமான கோணத்தில் அழகாகக் கதை எழுதியிருக்கிறீங்க கீதா,.

    //“அவர் அன்னிக்குச் சொல்லாம கொள்ளாம 'தேடல்'னு போனாப்ல நான் போயிருந்தா எல்லாரும் என்ன சொல்லிருப்பாங்க? என்ன ஆகியிருக்கும்?”///

    எல்லாப் பெண்களுக்கும் கரெக்ட்டா இப்பூடிக் கேள்வி கேட்க மட்டும் தெரியுது, ஆனா குழந்தை கணவன் எனும் பீலிங்ஸில் விழுந்து, அரிபிழையை மறந்து போனாப்போகுது என வாழத்தொடங்கிவிடுகின்றனர்.. இதுதான் பெண் மனம் போலும்..

    பெண்கள் இப்படித்தா ஃபீலிங்ஸ்க்கு அடிமையானவர்கள், என்ன தப்புப் பண்ணினாலும் திட்டிப்போட்டு ஏற்றுக்கொள்ளுவினம் என நன்கு தெரிஞ்சுவச்சே, சில ஆண்களும் வாழ்கையில் நன்கு விளையாடுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அதிரா கருத்திற்கு

      //எல்லாப் பெண்களுக்கும் கரெக்ட்டா இப்பூடிக் கேள்வி கேட்க மட்டும் தெரியுது, ஆனா குழந்தை கணவன் எனும் பீலிங்ஸில் விழுந்து, அரிபிழையை மறந்து போனாப்போகுது என வாழத்தொடங்கிவிடுகின்றனர்.. இதுதான் பெண் மனம் போலும்..//

      கண்டிப்பாக இதுதான் நடக்கிறது. மேபி இப்போதைய காலக்கட்டத்தில் இல்லை என்றே தோன்றுது.

      //பெண்கள் இப்படித்தா ஃபீலிங்ஸ்க்கு அடிமையானவர்கள், என்ன தப்புப் பண்ணினாலும் திட்டிப்போட்டு ஏற்றுக்கொள்ளுவினம் என நன்கு தெரிஞ்சுவச்சே, சில ஆண்களும் வாழ்கையில் நன்கு விளையாடுகின்றனர்.//

      எக்ஸாட்லி அதிரா. ஆனால் இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பெரும்பாங்கையோடரிடம் பருப்பு வேகாதுன்னே தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
  30. Geetha R-ன் கதை சரளமானது. மனதினை அகழ்வது.

    வீட்டைவிட்டகன்ற ஆண்களுக்கு என்ன- இமயமலை, திருவண்ணாமலை என எங்காவது விழுந்து புரளவேண்டியது. முடி வளரும். வளர்ந்தபின் விடிந்துவிட்டதாக, தலையைச் சுற்றி ஒளிவட்டம் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் அசடுகள்.
    ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா டிட்டோ உங்கள் கருத்தை..

      சொல்வனத்தில் நீங்கள் யு ஜி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதியிருந்ததை வாசித்த பொது அங்கு நான் எஎழுதும் ஒரு கதையிலும் இதைப் பற்றிச் சின்னதாகச் சொல்லியுள்ளேன் என்று சொல்லிருந்தேன்...

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  31. ..சக்தியைப் பொருத்தவரையில் அது ஒரு சங்கிலியாகிப் போனது.
    எந்த உறவையும் பலப்படுத்தும், அடையாளப்படுத்தும் ஒன்றல்ல.//

    ..பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக்கொண்டேனே
    உனைப் புரிந்தும்கூட சிறையில் வந்து.. மாட்டிக்கொண்டேனே..
    இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே..

    சுசீலாவின் குரல்வேறு காதில் கேட்கிறது, கதை ஓடுகையில் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட இப்படி ஒரு பாட்டிருக்கா!!?

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
    2. கண்ணதாசனின் அந்தப் பாட்டு இப்படி ஆரம்பிக்கிறது:

      நீயில்லாத உலகத்திலே.. நிம்மதியில்லை - உன்
      நினைவில்லாத இதயத்திலே.. சிந்தனையில்லை..
      காயும் நிலா வான்வெளியில் கண்ணுறங்கவில்லை - உனைக்
      கண்டுகொண்ட நாள் முதலாய்.. பெண்ணுறங்கவில்லை...
      பெண்ணுறங்கவில்லை..

      நீக்கு
  32. கடைசி வரிகள் மிகச் சிறப்பு. சரியான கேள்வி.

    சிறப்பாக கதை எழுதியிருக்கும் கீதாஜி அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  33. சக்தியின் வாழ்வு மனதை கனக்க வைத்து விட்டது.

    கடைசி வரிகள் சக்தியின் கேள்வி சமூகத்திற்கான சாட்டியடிகள்.

    அருமை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!