ஞாயிறு, 20 மார்ச், 2022

பூவ பூவ பூவப் பூவே !!

 

எங்கள் ஆசிரியர் K G Y Raman இந்த சீசனில் எடுத்த படங்கள் - 

# # # # 

 மலர்களிலே பல நிறம் கண்டேன்

திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்

 பச்சை நிறம் அவன் திருமேனி

வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்

பவள நிறம் அவன் செவ்விதழே

 




வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்



மஞ்சள் முகம் அவன் தேவி முகம்



இளமை எனும் 'பூ'ங்காற்று - பாடியது ஓர் பாட்டு !





அழகாய் இருந்தாலும் அரளிப்பூ அல்லவா!! நெருங்காதீர்! 





சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் .. 


(தொடரும்) 


61 கருத்துகள்:

  1. பார்த்துப் பார்த்துப் பொறாமைப் பட வைக்கும் அழகான, சுத்தமான, பசுமையான குடியிருப்பு. இங்கெல்லாம் கான்க்ரீட் தோட்டங்களைத் தவிர்த்து வேறே மாதிரிக் குடியிருப்புகளைப் பார்க்கவே முடியலை! :( அதிலும் எதிரே நீச்சல் குளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்த்தம் மாறி வந்திருக்கு. :( இங்கே தமிழகத்தில் கான்க்ரீட் தோட்டங்களைத் தவிர்த்து வேறே மாதிரிக் குடியிருப்புக்களைப் பார்க்கவே முடியலை. இங்கேயோ அழகான நீச்சல் குளம். கரையை ஒட்டி மரங்கள், எதிரே வீடுகள். என்ன அழகு! கொடுத்து வைச்சிருக்கணும் இங்கெல்லாம் வசிக்க. இது என்னோட கருத்து மட்டுமே!

      நீக்கு
    2. கீதாக்கா இந்த ஃப்ளாட்டும் தமிழகம் தான் சென்னை மாநகரில்!!!! என்று நினைக்கிறேன். இல்லையோ?! முன்பு இங்கு எபியில் பார்த்த நினைவு

      கீதா

      நீக்கு
    3. நிச்சயமாய்ச் சென்னையாக இருக்க முடியாது. இது "பெண்"களூர்னு நினைக்கிறேன். எ.பியில் இதுவும் வந்தது. திரு கௌதமன் அவர்களது குடியிருப்பின் படங்களும் வந்தன.

      நீக்கு
    4. இதை மறுத்தோ ஆமோதித்தோ ஒண்ணுமே சொல்லலையே! அது சரி! நேற்று ஞாயிற்றுக் கிழமை கூட ஶ்ரீராம் பிசி? ஆளையே பார்க்க முடியறதில்லை இப்போல்லாம்! :(

      நீக்கு
  2. மொபைலில் இந்தப் பதிவைப் பார்த்தேனா! கை துறுதுறு! உடனே கருத்துச் சொல்லிப் பார்த்தேன். இரண்டுமே வந்துவிட்டது. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! ரோபோ வரவில்லையா? ரோபோவுக்கு உங்கள் மொபைல் எண் தெரியாதோ?

      நீக்கு
    2. ஹாஹாஹா, தெரியாது போல! எப்போவோ தானே போறேன். :))))

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். எங்கே நெல்லை, திரு தனபாலன் ஆகியோரை 2,3 நாட்களாகப் பார்க்கலை? அல்லது நான் கவனிக்கலையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      சகோதரர் திரு தனபாலன் அவர்கள் பெங்களூர் வந்திருப்பதாக இப்போதுதான் சகோதரி கீதாரெங்கன் அவர்களின் பதிவில் படித்து விட்டு வந்தேன். மேலும் விபரங்கள் அவர் வந்து பகிர்வார் என நினைக்கிறேன். நன்றி.

      எ.பியில் சென்ற வியாழக்கிழமை என் வரவு கண்டு ஆறுதலாக நலம் விசாரித்த சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களுக்கும் மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி. க ஹ வரவுக்கு நன்றி.

      நீக்கு
    3. நன்றி கமலா ஹரிஹரன், எனக்கும் ஃபாலோ அப்பில் அந்தக் கருத்து வந்திருந்தது. :))) மீண்டும் நன்றி.

      நீக்கு
    4. கோமதி அக்காவின் மூலம் தெரிந்து கொண்டது டிடி அவர்களின் மாமனார் மார்ச் 7 ஆம்தேதி இறைவனடி சேர்ந்தார் என்பது. கோமதிக்கா எங்கள் தளத்தில் ஸ்ரீராம்கேட்டதற்குப் பதில் கொடுத்திருக்கிறார்.

      கீதா

      நீக்கு
    5. நெல்லை பிசி!!! மீண்டும் சிறு பயணம். ஆன்மீக உலா! சிம்ஹத்தை தரிசிக்கப் போயிருக்கிறார்!

      கீதா

      நீக்கு
    6. திரு த்னபாலனுக்கு அவர் மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். விரைவில் அவர்கள் யாவரும் இந்த இழப்பில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
    7. இப்போ என்ன? அஹோபிலம் போயிருக்காரா? போகட்டும். போகட்டும்.

      நீக்கு
    8. இல்லை கீதாக்கா நடுநாட்டுத் திருப்பதிகள் அருகே...நரசிம்மர்

      கீதா

      நீக்கு
    9. நாளை பெங்களூர் திரும்புகிறேன்

      நீக்கு
    10. ம்ம்ம்ம்ம்? நடுநாட்டுத் திருப்பதிகள் அருகே நரசிம்மர்? ம்ம்ம்ம்ம்ம்? பார்த்ததே இல்லையே! :(

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அழகான பதிவு. ஒவ்வொரு மலர்களின் அழகும் மனதை நிறைக்கின்றது. முதல் பாடல் எனக்கும் மிக பிடித்தமானது. அழகான மலர்களின் படங்களும், அதற்கேற்ற வாசகங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அழகான படங்கள் தொடரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
  7. ...திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்...

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  9. மனதுக்கு இதமாய், குளிர்ச்சியாய் அழகழகான வண்ண மலர்களை பதிவு செய்ததற்கு இனிய நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. ஹையோ ஆசிரியர் கே ஜி வொய் அவர்களுக்கு செம ரசனை!!! வாவ் படங்கள் எல்லாம் அருமை அருமை.

    பிங்கி பிங்கி பிங்கி!!! மனதை அள்ளுகிறது. சொக்க வைக்கிறது. இரண்டாவது பிங்கி, இளமை எனும் பூங்காற்றுக்குக் கீழே உள்ள பிங்கி ...ஹையோ....

    பூக்களின் பெயர்களும் போட்டிருக்கலாமோ? ஒரு சிலது தவிர பெயர் தெரியவில்லை..பரவால்ல...பெயர் தெரியலைனா என்னா ரசித்தேன்.

    ஆசிரியரின் ரசனைக்குப் பாராட்டுகள்! இந்த அபார்ட்மென்ட் முன்னரே இங்கு இடம் பிடித்திருக்கிறது நினைவு இருக்கு குறிப்பாக இந்த நீச்சல் குளம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. ஆமாம், இந்த அப்பார்ட்மெண்ட் ஏற்கனவே இங்கே இடம் பிடித்துள்ளது.

      நீக்கு
  11. பிங்க் நிறம் என்றாலே நம் அதிராதான்...பிங்க் நிறம் ரொம்பப் பிடிக்கும் அவருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மலர்கள் எல்லாம் அழகு.
    2ம், 7ம் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  13. அழகிய படங்கள். இரண்டாவது என்ன பூ?

    பதிலளிநீக்கு
  14. பாடல் வரிகள் சொதப்பினாலும் பூக்கள் படங்கள் மிக அழகு. பாராட்டுகள் யக்ஞராமன் அவர்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)) நன்றி. பாடல் வரிகள் சொதப்பலுக்கு என்னை மன்னிக்கவும்!!

      நீக்கு
  15. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
    இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே// முதல் வரியிலேயே இலக்கண பிழை. சொற் குற்றம்

      நீக்கு
    2. @பானுமதி! எல்லோருமே இப்படித் தான் எழுதுகின்றனர். பூக்கள் சொல்கின்றனனு எழுதுவதோ சொல்லுவதோ இல்லை. பறவைகள் வருகின்றன என எழுதாமல் பறவைகள் வருகிறது என எழுதுகிறார்கள்! :( என்னத்தைச் சொல்ல!

      நீக்கு
    3. பாடல் ஆட்டோகிராப் சினிமா பாடல். சித்ரா பாடியது.

       Jayakumar

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!