"லூர்துசாமி... ஆர் யு நாட் அஷேம்ட்? வாரத்துக்கு எத்தனை நாள் லேட்டா வருவே நீ? நேரத்துக்கு கிளம்ப மாட்டியா? இல்லை, கொஞ்சம் முன்னாலதான் கிளம்பறது.." திரும்பவும் லேட்டாக வந்து அசட்டுப் புன்னகையுடன் இடது கையில் பேனாவுடன் வலது கையால் அட்டெண்டென்ஸை இழுத்த லூர்துவிடம் சீறினார் அற்புதராஜ்.
அட்டெண்டரிடம் பேசும்போது கூட ஒரு வார்த்தை ஆங்கிலம் கலப்பது அவர் வாடிக்கை.
"வூட்ல அவ செய்யற ரோதனைக்கு நான் முன்னால எங்க கிளம்பறது.... டயத்துக்குதான் ஸார் கிளம்பறேன்... பஸ் கிடைக்கறது கஷ்டமா இருக்கு.. நிறுத்த மாட்டேங்கறான் ஸார்... இல்லன்னா கூட்டம்னு ஏத்த மாட்டேங்கறான்... ஸ்டாப்லேருந்து முன்னாலேயே நிறுத்தறாங்க... இல்லைன்னா பஸ் ஸ்டாப்பை விட்டு தூரமா போய் பஸ் நிக்குது ஸார்... இங்கிட்டும் அங்கிட்டும் ஓடறதுக்குள்ள கிளம்பிடுது.."
"ச்சே.. எப்ப பார்த்தாலும் ஏதாவது சாக்கு.. இவ்வளவு அலட்சியம் கூடா து லூர்து.. இத்தனைக்கும் நீ அட்டெண்டர்... நாங்கள்லாம் முன்னால வந்துடறோம்..."
'நீங்களெல்லாம் காரு 'பைக்'குனு வச்சிக்கிட்டு இருக் கீங்க... நான் பஸ்ஸைதான நம்பி வரணும்.. ஏன், என்னைத் தாண்டிதான் வர்றார் யூசுஃப் ஸார்.. என்ன ஏத்திக்கிட்டு வரலாம்ல..' வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டான். கையெழுத்தைப் போட்டு விட்டு தலைகுனிந்து இடத்துக்குப் போனான் லூர்து.
"நாளைக்காவது சீக்கிரம் வா... தபால் அனுப்பற வேலை, ரிஜிஸ்தர் தைக்கற வேலைன்னு வேலை நெறய்ய கெடக்கு..."
"அக்கா.. ஒரு நூறு ரூவா இருந்தா கொடேன்... ஒண்ணாந்தேதிக்கு தந்துடறேன்.." - அந்தப் பக்கம் லூர்துவின் குரல் கேட்டது.
'ஒருத்தர் விடாம எல்லார்ட்டயும் கைமாத்து.. திருப்பி கேட்டா கொடுக்கறதில்ல... அதுக்கும் சாக்கு.. அதட்டிக் கேட்டா ரொம்ப ரோஷமா 'திருடியாச்சும் கொடுத்துடுவேன் சார்' ங்கறது...' - அற்புதராஜ் அருகிலிருப்பவர்களுக்குக் கேட்
=============
பஸ் ஓரம் கட்டி நிற்கவும் லூர்து என்ன விஷயம் என்று பார்த்தான்... 'அட, என்னடா கர்மம்... பஸ் நின்னுடுச்சு.. கண்டக்டர் டிக்கெட் போடப் போறாரா?'
ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் தவட்டி தவட்டி போகவே நேரமாகி விடும். தினசரி இதே கதை.. இவங்களால ஆபீசில் அற்புதம் சார் மூஞ்சியைப் பார்க்கவே வெட்கமா இருக்கு... கஷ்டம் தெரியாம அவரும் சுர்ருன்னு மூஞ்சிய காட்டுவாரு' - எக்கி முன்னே பார்த்தான்.
முன்னால் டிக்கெட் செக்கிங் ஏறி இருந்தார்கள்.
'ஆஹா.. இது ஆகாதுடா சாமி...' - இன்னும் இரண்டு ஸ்டாப் தாண்டினால் இறங்க வேண்டிய இடம்தான்.
சட்டென இறங்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்.
அதைப் பார்த்து விட்ட செக்கர்ஸ் சட்டென அவர்களும் இறங்கி துரத்தினார்கள்.
பஸ்ஸில் எல்லோரும் தன்னிச்சையாக தங்கள் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டார்கள்.
==== ======
"ஸார்... லூர்து ஓடியாரான்.. அவனை தொரத்திக்கிட்டு யூனிஃபார்ம்ல ரெண்டு பேர் வர்றாங்க.."
எஸ்தர் உள்ளே செய்தியை ஒலிபரப்பினாள். ஆபீஸ் சற்றே பரபரப்பானது.
லூர்து ஓடி உள்ளே வரவும் துரத்தி வந்த இருவரும் உள்ளே வந்து விட்டார்கள். வந்து கைப்பிடியாய் அவனைப் பிடித்தார்கள்.
ஒருகணம் அவர்கள் உடையைப் பார்த்த அற்புதராஜ் போலீஸ் என்றே நினைத்தார்.
"எதையாவது களவாடிட்டியாடா?"
"இல்ல.. ஸார்.. நேரத்துக்கு ஆபீஸ் வரணும்னு பஸ்லேருந்து இறங்கி ஓடியாறேன்... யோவ்... யார்யா நீங்க? கைய எடுய்யா.. விடு"
"டிக்கெட் வாங்காம இறங்கி ஓடிவந்துட்டு பேச்சு வேறயா? வா எங்க கூட... வந்து ஃபைனக் கட்டு"
"எதுக்குய்யா ஃபைனு?"
"டிக்கெட் வாங்கலைன்னா ஃபைனுதான் கட்டணும்"
"டிக்கெட்டா... இந்தா வச்சுக்கோ... " தன் கையில் மடக்கி வைத்திருந்த டிக்கெட்டை அவர்களிடம் எடுத்து நீட்டினான் லூர்து.
"இம்மாந் தூரமாய்யா ஓடியாந்து செக் பண்ணுவீங்க?"
"பின்ன நீ எதுக்குய்யா ஓடியாந்தே?" செக்கர்ஸ் குரலில் எரிச்சலான காரம் இருந்தது.
"நான் உங்களை ஓடியாரச் சொன்னேனா? வாரத்துல மூணு நாளு உங்களோட ரோதனையாய் போச்சு. .. நிறுத்தி வச்சுக்கிட்டு டிக்கெட் போடறது.. இல்லைன்னா நடு ரோட்ல நிறுத்தி செக் பண்றது... இங்க யாருய்யா எங்க ஆபீஸர்ஸ் கிட்ட பதில் சொல்றது? நான் வேணும்னு லேட்டா வர்றேன்னு திட்டறாரு ஸாரு..
அவர்களிருவரும் கடுப்புடன் வெளியேற,
அற்புதத்துக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. அட்டெண்டென்ட்ஸை எடுத்து லூர்துவிடம் நீட்டினார்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய சிறுகதைப்பகிர்வு நன்றாக உள்ளது. இறுதியில் அட்டெண்டர் லூர்துவிடம் இருக்கும் நேர்மையை கண்டவுடன் அற்புதத்தின் மனது இளகி விடவே அவர் கை அட்டெண்டென்ட்ஸை எடுத்து நீட்டச் செய்தது. ஒருவரை அவர் செயலின் விளைவாய் மற்றவர்கள் தவறுதலாகவே நினைக்கும் போது, அவரது வாய்மை அதை உடனடியாக மறக்கச் செய்து விடுகிறது. நல்ல குணங்களின் பக்குவத்தை உணர்த்தும் கதை. அருமை யாக இருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படித்து ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி கமலா அக்கா!
நீக்குக ஹ - உங்கள் ஜி மெயில் inbox பார்க்கவும். அவசரம்.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஉங்கள் மெயில் பார்த்தேன்.விபரங்கள் அறிந்து கொண்டேன். நீங்கள் கூறியபடி இன்று வேறு படங்களை அனுப்புகிறேன். என் மெயிலைப் பார்த்து தகவல்களை சொன்னதற்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
__/\__
நீக்குஒரு சின்ன சம்பவத்தை அழகான சிறுகதையாக்கியிருக்கும் ஸ்ரீராமுக்கு பாராட்டுகள்!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. நன்றி.
நீக்குஇதே மாதிரி ஒரு சம்பவம் என் அண்ணாவின் சிறு வயதில் நடந்தது. என் அண்ணாவின் சிறு வயதில் ஒரு நாள், மரூன் கலர் டிராயர்(trouser),வெள்ளை பனியன் போட்டுக் கொண்டிருந்த என் அண்ணா தன் நண்பர்களோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். எங்கள் தெருவிலிருந்து பக்கத்து தெருவை சுற்றி மெயின் ரோடிலும் கொஞ்சம் ஓடி மீண்டும் எங்கள் தெருவுக்குள் அண்ணா பிடிக்க வேண்டிய பையன் ஓட, அவனை அவுட்டாக்க அண்ணாவும் ஓடி வந்தான். அதே நேரத்தில் தெருவில் ஒரு குழந்தையின் கழுத்திலிருந்த தங்க செயினை அண்ணாவைப் போலவே மரூன் கலர் டிராயர், வெள்ளை பனியன் போட்டுக் கொண்டிருந்த வெறொரு பையன் கழட்டிக் கொண்டு ஒட, அவனை துரத்தி வந்தவர்கள் என் அண்ணாதான் செயினை திருடியவன் என்று தவறாக நினைத்து துரத்திக் கொண்டு எங்கள் வீடு வரை வந்து, "மரியாதையா செயினைக் குடு" என்று மிரட்ட, என் அண்ணா அழ ஆரம்பித்து விட்டான். எங்கள் வீட்டுப் பெரியவர்களும், அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் நிலமையை விளக்கி அவனை விடுவித்தார்கள். துரத்தி வந்தவர்களும் "ஏன் ஓடினாய்?" என்றுதான் கேட்டார்கள். அண்ணாவின் நண்பர்கள் தாங்கள் விளையாடிக் கொண்டிருந்ததாக சாட்சி கூற ஒப்புக் கொண்டார்கள். என் அண்ணா அதற்குப் பிறகு அந்த மரூன் நிற ட்ராயரை போடவேயில்லை.:))
பதிலளிநீக்குஇது மாதிரி எல்லாம் கூட நடக்குமா என்று அதிசயிக்க வைக்கும் உண்மைச் சம்பவங்கள் எப்போதுமே வியப்புதான் பானு அக்கா.. பாவம் உங்கள் அண்ணன்.
நீக்குகதை சொல்லிய விதமும், காட்சி படங்களும் நன்றாக உள்ளன. செவ்வாய் சீரடைய துவங்கியுள்ளது.மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குJayakumar
அப்படியா? நன்றி.
நீக்குஇரண்டாவது படத்துக்கு கீழே பெயர் பார்த்தீர்களா?
நீக்குஇரண்டாவது படம் சரியில்லை பஸ் வேறு முதல் படத்தில் உள்ளது இல்லை. பஸ் நாடு ரோடில் நிறுத்தியா செக் செய்வார்கள். செக் செய்யும்போது வெளியில் ஒரு செக்கர் இறங்குபவர்களைக் கவனித்து கொண்டு இருப்பார். இப்படி பல குறைகள் உண்டு. மீட்டா படம் என்று தோன்றுகிறது.
கீதா ரெங்கன் இப்படித்தான். சும்மா எதையேனும் எட்டியது போடுவார்.
Jayakumar
முதலாவது படம் சென்னை பஸ். நான் இணையத்தில் இருந்து எடுத்தேன். இரண்டாவது படம் நான் முயற்சித்து தோல்வியுற்ற பின் கீதாரங்களிடம் அதை சொல்லவும் அவர் ஒன்று இரண்டு மூன்று தயார் செய்து அனுப்பினார். அதில் இது கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. அப்படியே ஓவியர் வரைவது போல ரொம்ப பொருத்தமாக அமைவது 200 ல் ஒரு வாய்ப்பு கிடைக்கும்
நீக்குஇரண்டாவது படத்துக்குக் கீழே எனக்கு எந்தப் பெயரும் தெரியலை. :(
நீக்குவலது பக்கம் கீழ்க்கோடீல உத்துப் பாருங்க... நல்லா பாருங்க... தெரிகிறதா?
நீக்குகீதா ரெங்கன் இப்படித்தான். சும்மா எதையேனும் எட்டியது போடுவார்.//
நீக்குஜெ கே அண்ணா, சிரித்துவிட்டேன் இதைப் பார்த்து.
அண்ணா படம் தேத்துவது ரொம்பக் கஷ்டம், அண்ணா. நிறைய டைம் எடுக்கும். நாம் நினைப்பது போல் வராது. அதுவும் எல்லாம் பொருந்தி.
இதற்கு நேரம் செலவழித்தால் அப்புறம் நம்ம வேலைய யார் பார்ப்பாங்க? ஸ்ரீராமுக்கும், கதை எழுத வேண்டாமா? பதிவுக்கு மேட்டர் தேத்தணுமே. அதுவும் கணினி ஏற்படுத்தும் சிரமங்களோடு....
மீக்கும் தான்.....என் சிஸ்டம் அதான் மூளை அதுவும் மெதுவாகத்தான் இயங்குது!!
கீதா
ஸ்ரீராம், நன்றி....மீட்டாவின் பெயரை எடுத்துட்டு என் பெயரை போட்டிருக்கீங்களே...
மீட்டா இபப்தானே வந்திருக்கு ஆர்வக் கோளாறு ஹிஹிஹிஹி.
கீதா
ஶ்ரீராம் கதை சூப்பர். சின்ன நிகழ்வு. இதை கதையாக எழுதும் உங்கள் திறமை அசத்தல். இயல்பான உரையாடல்கள். லூர்து கடன் வாங்கினால் கொடுப்பதற்கும் சாக்கு சொல்வான் என்று சொல்லும் அற்புதத்திற்கு, ஒரு வேளை டிக்கெட் எடுக்காமல்.அல்லது பிக்பாகெட்டோ என்றும் கூட சொல்பவர்க்கு , அவன் டிக்கெட் வாங்கியதும், கடைசில சொல்லும் அந்த காரணமும்...அவரையும் யோசிக்க வைத்திருக்கும்.
பதிலளிநீக்குமுடிவில் அவன் சொல்லும் காரணம் எனக்குப் புன்சிரிப்பு வர வைத்தது.
கீதா
குமுதம் ஒரு பக்கக் கதை போன்று ம் உள்ளது ஶ்ரீராம். குமுதத்துல கண்டிப்பா வெளியாகியிருக்கும்...ஆனா என்ன காத்திருக்க வேண்டியிருக்கும்...
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களது சொல்படி வேறு மீன் படங்களுடன் மெயில் அனுப்பி விட்டேன். வந்ததா? தங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மீன் இன்னமும் நீஞ்சிட்டிருக்கா? முடிஞ்சு முடிவும் வந்திருக்கோனு நினைச்சேன்.
நீக்குநாளைய பதிவில் வோட்டு போடவும்.
நீக்குஇது மாதிரி முன்னர் எங்கேயோ எப்போவோ படிச்ச நினைப்பு. எனக்கென்னமோ பிலஹரி நினைவுக்கு வந்தார்.
பதிலளிநீக்குGrrrrr... யாரோ எழுதிய கதையை என் பெயரில் போட்டு விட்டேன் என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டுமா, அல்லது அவர்கள் லெவலில் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? ம்ம்ம்.. நான் பாஸிட்டிவாகவே எடுத்துக் கொள்கிறேன்!
நீக்குhehehehehe
நீக்குகதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு'//நீங்களெல்லாம் காரு 'பைக்'குனு வச்சிக்கிட்டு இருக்கீங்க... நான் பஸ்ஸைதான நம்பி வரணும்.. ஏன், என்னைத் தாண்டிதான் வர்றார் யூசுஃப் ஸார்.. என்ன ஏத்திக்கிட்டு வரலாம்ல..' வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டான். கையெழுத்தைப் போட்டு விட்டு தலைகுனிந்து இடத்துக்குப் போனான் லூர்து.//
அதுதானே பாவம் என்று ஒரு நாள் ஏத்திக்கிட்டு வந்து இருக்கலாம்.
அலுவலகத்தில் நடக்கும் சின்ன சம்பவம் வைத்து அழகான கதையை புனைந்து விட்டீர்கள். வாழ்த்துகள் ஸ்ரீராம்.
ஹா.. ஹா.. ஹா.. நன்றி கோமதி அக்கா.
நீக்கு//இங்க யாருய்யா எங்க ஆபீஸர்ஸ் கிட்ட பதில் சொல்றது? நான் வேணும்னு லேட்டா வர்றேன்னு திட்டறாரு ஸாரு.. //
பதிலளிநீக்குலூர்துவின் கஷ்டமும், லேட்டா வரும் காரணமும் தெரிந்து விட்டது அற்புதராஜ்க்கு.
ஆமாம். அடுத்தடுத்த நாள் லேட்டாக வந்தால் என்ன செய்வாரோ...! நன்றி கோமதி அக்கா.
நீக்குபாவம் லூர்துசாமி.
பதிலளிநீக்கு//அற்புதத்துக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. // நமக்கும்தான். சிறப்பான நடையில் அருமையான கதை.
ஓ.. நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குசிறுகதை அருமை. சிறிய சம்பவம் நல்ல கதையாக ஆகியிருக்கு. ரசித்துப் படித்தேன்
பதிலளிநீக்குகீதா ரங்கன் க்கா திறமையானவர். எப்படித்தான் நேரம் ஒதுக்கறாரோ.
பதிலளிநீக்குகசகசவென அந்தக் காலத்தில் 87களில் பேருந்துப் பயணத்தை மின்சார ரமில் பயணத்தை இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சர்யபா இருக்கும்