19.1.26

திங்கக்கிழமை   :  உளுந்தில்லா தோசை – வெந்தய தோசை   -  JKC  ரெஸிப்பி 

ஒரு வித்தியாசத்திற்கு செய்த உளுந்து சேர்க்காத தோசை. இட்லி அரிசியும் வெந்தயமும் அரைத்து உடன் சுட்ட தோசை.

ஒரு டம்ளர் இட்லி அரிசி ஊற வைக்கப்பட்டது.
ஊறிய அரிசியுடன் சுமார் கால் டம்ளருக்கும் குறைவாக வெந்தயம் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கப்பட்டது.
அரைத்த மாவை சூடான தோசைக்கல்லில் செட் தோசை போல் வார்த்தெடுத்து
பச்சை கார சட்னியுடன்
சூடாக பரிமாறப்பட்டது.
பச்சை சட்னியில் அடங்கிய /அரைத்த பொருட்கள்.

புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை கொஞ்சம். உப்பு.

கடுகு உளுந்து தாளித்து சட்டினியில் சேர்க்கப்பட்டது.

தோசை பரவாயில்லை. கொஞ்சம் வெந்தய கசப்பு இருந்தாலும் ஓகே. சட்னி கொஞ்சம் சொதப்பி விட்டது. இஞ்சியோ பொட்டுக்கடலையோ ஏதோ ஒன்று சுவையை மாற்றி விட்டது.

========================================================================================

பாஸிட்டிவ் செய்தி  :

நேர்மையின் இன்னொரு பெயர்  பத்மா 

                                     
'ஒரு கிராம் திருகாணி வாங்கவே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் காலம் இது. ஆனால், தன் கண் முன்னால் 45 பவுன் தங்கம் மின்னியபோதும், அது அடுத்தவர் உழைப்பு என்று ஒதுக்கித் தள்ளிய ஒரு உன்னத மனுஷியைப் பற்றித்தான் ஊரே பேசிக் கொண்டிருக்கிறது!"  சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பத்மா. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் இவர், தினமும் அதிகாலையில் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். வழக்கம் போல ஒருநாள் தி.நகர் மகாராஜா சந்தானம் தெருவில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, குப்பை மேட்டிற்குள் ஒரு கவர் கிடப்பதைக் கண்டார்.

சாதாரணமாக நினைத்து அதை எடுத்துப் பார்த்த பத்மாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பையில் கண்ணைப் பறிக்கும் தங்க நகைகள்! சுமார் 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் அவை. ஒரு கணம் அதிர்ந்தாலும், அடுத்த கணம் அவரது நேர்மை தலைதூக்கியது. 'யாருடைய உழைப்போ இது... தொலைத்தவர்கள் எவ்வளவு பதறுவார்கள்?' என்ற மனிதாபிமானம் தான் அவரிடம் மேலோங்கி நின்றது.  உடனடியாகத் தன் உயரதிகாரிக்குத் தகவல் தெரிவித்த பத்மா, காலதாமதம் செய்யாமல் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த நகை வியாபாரி பரமேஷ் என்பவருடையது என்பது தெரியவந்தது. கவனக்குறைவாகத் தவறவிட்ட அந்தப் பெரும் சொத்து, பத்மாவின் நேர்மையால் மீண்டும் உரியவரிடம் சேர்ந்தது.  உடனடியாகத் தன் உயரதிகாரிக்குத் தகவல் தெரிவித்த பத்மா, காலதாமதம் செய்யாமல் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த நகை வியாபாரி பரமேஷ் என்பவருடையது என்பது தெரியவந்தது. கவனக்குறைவாகத் தவறவிட்ட அந்தப் பெரும் சொத்து, பத்மாவின் நேர்மையால் மீண்டும் உரியவரிடம் சேர்ந்தது.  எல்.  முருகராஜ் 

தினமலர் 

19 கருத்துகள்:

  1. காலை வணக்கம், உணவுப்பிரியர்களே!
    பசுமைப்புரட்சி!! பச்சைத்தமிழரின் பச்சைமாவு வெந்தய தோசையும் பச்சை சட்னியும் பச்சை மையில் பதிவு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பச்சதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று பாட்டே பாடி விடலாம் போலிருக்கே!

      நீக்கு
    2. வாங்க, சூர்யா!
      அடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.

      நீக்கு
    3. //அடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.// அன்புடன் ஒரு ஆலோசனை: இது போல தினமும் உருப்படாத கோமாளி கமெண்ட்களை எழுதுகிறவர், தன் பெயரை 'திருவாழிமார்பன்' என்பதற்கு பதிலாக, 'திருவாழத்தான்' என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்; செய்வாரா?

      நீக்கு
    4. ​வணக்கம் திரு.
      பச்சை பயறு தோசை - பெசரட்டு இப்பகுதியில் முன்பே வந்துவிட்டது.
      உலுவா என்பது வெந்தயத்தின் பெயர் மலையாளத்தில் ! ஆக தோசையில் உலுவா உண்டு உளுந்து இல்லை.
      Jayakumar

      நீக்கு
    5. தோசைல பச்சைக் கற்பூரம் சேர்க்கணுமா? யாராவது பச்சை பச்சையாத் திட்டிடப் போறாங்க.

      நான் வெல்லப் பாயசம், சர்க்கரைப் பொங்கலுக்கு பச்சைக் கற்பூரம் சேர்ப்பேன். சட்னு கோயில் பிரசாத வாசனை வந்துவிடும்.

      நீக்கு
    6. //தோசைல பச்சைக் கற்பூரம் சேர்க்கணுமா? யாராவது பச்சை பச்சையாத் திட்டிடப் போறாங்க.// :-) :-)

      நீக்கு
    7. திருவாழத்தான்னு நம்ம வீட்டுல அடிக்கடி திட்டற பெயர், திவாமா. ரெண்டாவது திருவாழத்தான்னு ஒரு எழுத்தாளரின் புனைபெயர். ஸோ மாத்தினீங்கனா....ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    8. ஏன் பச்சைக்கற்பூரம் சேர்க்கக் கூடாதுன்றேன்... நெல்லை....திவாமா அவர் சொல்ற தோசைல வெல்லம் போடச்சொல்ல மறந்துவிட்டார்!!! அப்படி வைச்சுக்குவோம்...வெல்லம் போட்டா பச்சைக்கற்பூரம் சேர்த்துடலாமே!!! உம்மாச்சிக்குப் படைச்சா மாதிரியும் ஆகிடும்!

      கீதா

      நீக்கு
  2. உளுந்து சேர்க்காமல் நல்லா வந்ததா? வெந்தய வாசனை தோசைக்கு நல்லா இருக்கும். வெந்தயம் கொஞ்சம் அதிகமா சேர்த்த தோசைக்கு புளிமிளகாய் ரொம்ப நல்லாருக்கும்.

    இந்தச் சட்னில இஞ்சி மல்லி புதினா காம்பினேஷன்தான் டவுட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நல்லாருக்கும் இந்த தோசை. நம்ம வீட்டில் மட்டுமில்ல பல வீடுகளிலும் அடிக்கடி செய்வது ...வெந்தய தோசைன்னு

      நீங்க சொல்ற புளிமிளகாய்கோம்போ தான் நம்ம வீட்டில் ஊரில்.

      சரி கீழ போறேன் ஜெ கே அண்ணாவுக்குக் கமென்ட் போட வேண்டாமா??!!!

      கீதா

      நீக்கு
  3. ​தோசையம்மா தோசை
    அரிசி மாவு தோசை
    உளுந்தில்லா தோசை
    அப்பாவுக்கு நாலு
    அம்மாவுக்கு மூணு
    அண்ணனுக்கு இரண்டு
    எனக்கு மட்டும் ஒன்னு
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசைப்பாட்டு ப்ரமாதம், சாரே!
      எப்படியோ இந்த புகழ்பெற்ற தோசைப்பாட்டு தெரியாமலே சிறுவயதைத் தாண்டிவிட்டேன். ஒருக்கால் முந்தைய தலைமுறையில் பள்ளிப்பாடமாக இருந்திருக்குமோ?

      நீக்கு
    2. தோசைப் பாட்டில் அவர் மறந்த வரி,

      தோசையம்மா தோசை
      அம்மா சுட்ட தோசை

      இந்தப் பாட்டிலேயே தெரியுதா? ஆணாதிக்கம் அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கிறது என்று?

      நீக்கு
    3. இந்தப் பாட்டிலேயே தெரியுதா? ஆணாதிக்கம் அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கிறது என்று?//

      நெல்லை, வம்பு தொடங்கிட்டீங்க!!!...நான் சொல்லத் தொடங்கினேன்னு வைங்க!!!! பச்சை பச்சையா ....ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    உளுந்தில்லா தோசை... விதம் விதமாய் யோசிப்போம்.

    பொதுவாகவே எங்கள் வீட்டில் தோசை மாவு அரைக்கும்போது வெந்தயம் சேர்த்தே தான் அரைப்பது வழக்கம்.

    தொடரட்டும் புதிய முயற்சிகள்.

    பதிலளிநீக்கு
  5. தோசையில் மயங்கிய எல்லோரும் 48 பவுன் நகைகளை மிகவும் நாணயமாக போலீசாரிடம் ஒப்படைத்த பத்மாவை மறந்து விட்டார்கள். பத்மாவிற்கு நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. வெந்தய தோசைக்கு மாவு அரைத்தவுடன் வார்க்க மாட்டோம். கொஞ்சம் மாவு புளித்தால்தான் நன்றாக இருக்கும். மெல்லிசாக வார்க்கக் கூடாது, குண்டாக வார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. தோசை அம்மா தோசை
    அம்மா சுட்ட தோசை
    அரிசி மாவும் உளுந்து மாவும்
    கலந்து சுட்ட தோசை
    அப்பாவுக்கு நாலு
    அம்மாவுக்கு மூணு
    அண்ணனுக்கு ரெண்டு
    பாப்பாவுக்கு ஒண்ணு
    ஆக மொத்தம் பத்து
    கொடுக்க கொடுக்க ஆசை
    எடுக்க போனால் பூசை

    முழு பாடலும் இப்படித்தான் வரும் என்று நினைவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!