ஒரு வித்தியாசத்திற்கு செய்த உளுந்து சேர்க்காத தோசை. இட்லி அரிசியும் வெந்தயமும் அரைத்து உடன் சுட்ட தோசை.
ஒரு டம்ளர் இட்லி அரிசி ஊற வைக்கப்பட்டது.
ஊறிய அரிசியுடன் சுமார் கால் டம்ளருக்கும் குறைவாக வெந்தயம் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கப்பட்டது.
அரைத்த மாவை சூடான தோசைக்கல்லில் செட் தோசை போல் வார்த்தெடுத்து
பச்சை கார சட்னியுடன்
சூடாக பரிமாறப்பட்டது.
பச்சை சட்னியில் அடங்கிய /அரைத்த பொருட்கள்.
புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை கொஞ்சம். உப்பு.
கடுகு உளுந்து தாளித்து சட்டினியில் சேர்க்கப்பட்டது.
தோசை பரவாயில்லை. கொஞ்சம் வெந்தய கசப்பு இருந்தாலும் ஓகே. சட்னி கொஞ்சம் சொதப்பி விட்டது. இஞ்சியோ பொட்டுக்கடலையோ ஏதோ ஒன்று சுவையை மாற்றி விட்டது.
========================================================================================
பாஸிட்டிவ் செய்தி :
நேர்மையின் இன்னொரு பெயர் பத்மா
'ஒரு கிராம் திருகாணி வாங்கவே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் காலம் இது. ஆனால், தன் கண் முன்னால் 45 பவுன் தங்கம் மின்னியபோதும், அது அடுத்தவர் உழைப்பு என்று ஒதுக்கித் தள்ளிய ஒரு உன்னத மனுஷியைப் பற்றித்தான் ஊரே பேசிக் கொண்டிருக்கிறது!" சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பத்மா. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் இவர், தினமும் அதிகாலையில் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். வழக்கம் போல ஒருநாள் தி.நகர் மகாராஜா சந்தானம் தெருவில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, குப்பை மேட்டிற்குள் ஒரு கவர் கிடப்பதைக் கண்டார்.
தினமலர்






காலை வணக்கம், உணவுப்பிரியர்களே!
பதிலளிநீக்குபசுமைப்புரட்சி!! பச்சைத்தமிழரின் பச்சைமாவு வெந்தய தோசையும் பச்சை சட்னியும் பச்சை மையில் பதிவு!!
"பச்சதான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று பாட்டே பாடி விடலாம் போலிருக்கே!
நீக்குவாங்க, சூர்யா!
நீக்குஅடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.
//அடுத்தமுறை கொஞ்சம் பச்சை பட்டாணி, பச்சைப்பயறு, பச்சை கர்ப்பூரம் (அட ராமா!) இதுகளையும் சேர்க்கலாமா? யாராவது பச்சை கொடி காட்றாங்களான்னு பார்ப்போம்.// அன்புடன் ஒரு ஆலோசனை: இது போல தினமும் உருப்படாத கோமாளி கமெண்ட்களை எழுதுகிறவர், தன் பெயரை 'திருவாழிமார்பன்' என்பதற்கு பதிலாக, 'திருவாழத்தான்' என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்; செய்வாரா?
நீக்குவணக்கம் திரு.
நீக்குபச்சை பயறு தோசை - பெசரட்டு இப்பகுதியில் முன்பே வந்துவிட்டது.
உலுவா என்பது வெந்தயத்தின் பெயர் மலையாளத்தில் ! ஆக தோசையில் உலுவா உண்டு உளுந்து இல்லை.
Jayakumar
தோசைல பச்சைக் கற்பூரம் சேர்க்கணுமா? யாராவது பச்சை பச்சையாத் திட்டிடப் போறாங்க.
நீக்குநான் வெல்லப் பாயசம், சர்க்கரைப் பொங்கலுக்கு பச்சைக் கற்பூரம் சேர்ப்பேன். சட்னு கோயில் பிரசாத வாசனை வந்துவிடும்.
//தோசைல பச்சைக் கற்பூரம் சேர்க்கணுமா? யாராவது பச்சை பச்சையாத் திட்டிடப் போறாங்க.// :-) :-)
நீக்குதிருவாழத்தான்னு நம்ம வீட்டுல அடிக்கடி திட்டற பெயர், திவாமா. ரெண்டாவது திருவாழத்தான்னு ஒரு எழுத்தாளரின் புனைபெயர். ஸோ மாத்தினீங்கனா....ஹிஹிஹிஹி
நீக்குகீதா
ஏன் பச்சைக்கற்பூரம் சேர்க்கக் கூடாதுன்றேன்... நெல்லை....திவாமா அவர் சொல்ற தோசைல வெல்லம் போடச்சொல்ல மறந்துவிட்டார்!!! அப்படி வைச்சுக்குவோம்...வெல்லம் போட்டா பச்சைக்கற்பூரம் சேர்த்துடலாமே!!! உம்மாச்சிக்குப் படைச்சா மாதிரியும் ஆகிடும்!
நீக்குகீதா
//திருவாழத்தான்னு ஒரு எழுத்தாளரின் புனைபெயர். // வடை போச்சே!! அது சரி, திரு வாழ் அத்தான் அப்டீன்னு பிரிச்சிருவாங்களோ?!
நீக்குஉளுந்து சேர்க்காமல் நல்லா வந்ததா? வெந்தய வாசனை தோசைக்கு நல்லா இருக்கும். வெந்தயம் கொஞ்சம் அதிகமா சேர்த்த தோசைக்கு புளிமிளகாய் ரொம்ப நல்லாருக்கும்.
பதிலளிநீக்குஇந்தச் சட்னில இஞ்சி மல்லி புதினா காம்பினேஷன்தான் டவுட்டு
நெல்லை நல்லாருக்கும் இந்த தோசை. நம்ம வீட்டில் மட்டுமில்ல பல வீடுகளிலும் அடிக்கடி செய்வது ...வெந்தய தோசைன்னு
நீக்குநீங்க சொல்ற புளிமிளகாய்கோம்போ தான் நம்ம வீட்டில் ஊரில்.
சரி கீழ போறேன் ஜெ கே அண்ணாவுக்குக் கமென்ட் போட வேண்டாமா??!!!
கீதா
தோசையம்மா தோசை
பதிலளிநீக்குஅரிசி மாவு தோசை
உளுந்தில்லா தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு இரண்டு
எனக்கு மட்டும் ஒன்னு
Jayakumar
தோசைப்பாட்டு ப்ரமாதம், சாரே!
நீக்குஎப்படியோ இந்த புகழ்பெற்ற தோசைப்பாட்டு தெரியாமலே சிறுவயதைத் தாண்டிவிட்டேன். ஒருக்கால் முந்தைய தலைமுறையில் பள்ளிப்பாடமாக இருந்திருக்குமோ?
தோசைப் பாட்டில் அவர் மறந்த வரி,
நீக்குதோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
இந்தப் பாட்டிலேயே தெரியுதா? ஆணாதிக்கம் அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கிறது என்று?
இந்தப் பாட்டிலேயே தெரியுதா? ஆணாதிக்கம் அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கிறது என்று?//
நீக்குநெல்லை, வம்பு தொடங்கிட்டீங்க!!!...நான் சொல்லத் தொடங்கினேன்னு வைங்க!!!! பச்சை பச்சையா ....ஹாஹாஹா
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஉளுந்தில்லா தோசை... விதம் விதமாய் யோசிப்போம்.
பொதுவாகவே எங்கள் வீட்டில் தோசை மாவு அரைக்கும்போது வெந்தயம் சேர்த்தே தான் அரைப்பது வழக்கம்.
தொடரட்டும் புதிய முயற்சிகள்.
தோசையில் மயங்கிய எல்லோரும் 48 பவுன் நகைகளை மிகவும் நாணயமாக போலீசாரிடம் ஒப்படைத்த பத்மாவை மறந்து விட்டார்கள். பத்மாவிற்கு நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும்.
பதிலளிநீக்குவெந்தய தோசைக்கு மாவு அரைத்தவுடன் வார்க்க மாட்டோம். கொஞ்சம் மாவு புளித்தால்தான் நன்றாக இருக்கும். மெல்லிசாக வார்க்கக் கூடாது, குண்டாக வார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குதோசை அம்மா தோசை
பதிலளிநீக்குஅம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
ஆக மொத்தம் பத்து
கொடுக்க கொடுக்க ஆசை
எடுக்க போனால் பூசை
முழு பாடலும் இப்படித்தான் வரும் என்று நினைவு.
அரிசி மாவும் உளுந்த மாவும்
நீக்குஅரைச்சு சுட்ட தோசை
னு வரும்
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவெந்தய தோசை இதை அரைத்தவுடன் செய்யாமல் கொஞ்சம் புளிக்க வைத்து செய்தால் மெத் என்று பஞ்சு போன்ற தோசை கிடைக்கும். அதை கனமாக ஊற்றினாலும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஇதற்கு தக்காளி சட்னி நன்றாக இருக்கும். மாவு புளிக்காமல் பச்சை சட்னியில் தக்காளியோ, புளியோ வைக்காமல் அரைத்து இருக்கிறீர்கள் அதுதான் சுவை இல்லை.
செய்முறை படங்களுடன் உளுந்து இல்லா தோசை நன்றாக இருக்கிறது பார்க்க.
தோசை அம்மா தோசை
பதிலளிநீக்குஅம்மா சுட்ட தோசை
அரிசிமாவும், உளுந்தமாவும் கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை
என்று பாடல் வரிகள் வரும் நான் அதை பாடும் போது பேரன் கேட்பான்
உன்னும் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே? ஏன் பூசை(அடி) கொடுக்கனும் என்பான்.
அவன் தமிழ் கற்றுக் கொள்ளும் போது அவர்கள்கொடுத்த புத்தகத்தில் தோசை பாடல் கொஞ்சம் மாற்றம் ஆனது, பாடலில் கடைசி வரி
தின்ன தின்ன ஆசை இன்னும் கேட்டால் தோசை என்று முடியும்.
நிலா நிலாஓடி வா பாடல் வரிகளும் மாறி இருந்தது.
பத்மாவின் நேர்மையை பாராட்டி வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குபிறர் பொருளுக்கு ஆசை படாத அவரின் நல்ல குணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்தியில் 47பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த திருமதி பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது நேர்மைக்கு தலைசாய்த்த வணக்கங்கள்.
இன்றைய திங்களின் அடையாளமாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் வெந்த தோசையின் மணம் இங்கு வரை வீசுகிறது. இரவு இதை அரைத்து வைத்து விட்டு மறுநாள் காலையில் வார்த்தால் தோசையின் மணம் இன்னும் கூடும்.மாவு மிகவும் புளிப்பாகியும் விடக்கூடாது. எப்போதுமே வெந்தயம் சேர்த்தால் மாவை சற்று பொங்கி வரச் செய்யும் இட்லி மிளகாய்போடியும் இதற்கு சுவையாக இருக்கும். சட்னிகளில் எதுவுமே இதற்கு துணைதான். எப்போதுமே நம் விருப்பந்தானே உணவுக்கு துணையாகிக் போகிறது.
தோசை பாடல்கள் அருமை. "தின்ன தின்ன ஆசை, திருப்பி கேட்டால் பூசை." என்று வரும். அந்தக்கால இந்தப் பாட்டிலேயே "சிறு குடும்பம் முக்கியத்துவம்" கூறப்பட்டுள்ளது. அதுவும் பத்து தோசைகள்தான் என்ற உணவு கட்டுப்பாடு வேறு. அத்தோடு "தோசை கணக்கின் விபரங்களில் குழந்தைக்கு ஊட்டப்படும் கணக்குப்பாடம்" என்ற அறிவு பாடல் வேறு. நானும் எங்கள் வீட்டு சிறு குழந்தைகளுக்கு இப்பாடலை புகட்ட முயன்றுள்ளேன். இனி வரும் காலங்களில் எப்படியோ.? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"வெந்தய தோசை" என எழுதியது மாறி விட்டது. மன்னிக்கவும்.
நீக்குஅது சரி... பெண்டிர் உண்டி சுருக்கி... என்பதால் பெண்களுக்கு மாத்திரம் குறைந்த தோசைகளா? இந்தக் கேள்வி உங்களுக்கு அப்போ மனசுல எழவில்லையா?
நீக்குஜெ கே அண்ணா தோசை சூப்பரா வந்திருக்கு இது இப்படித்தான் இழுத்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும் ..லைட்டாதான் தேய்க்க முடியும் மாவு ஊற்றியதும்.
பதிலளிநீக்குஅண்ணா இதற்கு பூண்டு சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்
பூண்டு சட்னி பூண்டை கொஞ்சம் நசுக்கி கொஞ்சம் எண்ணையில் நன்றாக கோல்டன் கலரில் வதக்கிக் கொண்டு அதோடு உப்பு, (சிவப்பு மிளகாயும் போட்டு நுணுக்கி.. - அப்பொடியையும் காரத்திற்கேற்ப கலந்து இடி உரலில் போட்டு தட்டி வைத்துக் கொண்டால் இப்படித் தொட்டுக் கொள்ள நல்லாருக்கும். இந்தச்சிவப்பு மிளகாயும் மல்லியும் சம அளவில் கலந்து பொடித்து வைத்திருப்பேன் எதற்காவது சேர்த்துக் கொள்ள சாம்பார் குழம்பு என்று. இதையும் இந்தப் பூண்டுப் பொடியில் சேர்த்தால் நல்லாருக்கும்னு நம்ம ஸ்ரீராம் அவரது நட்பு வீட்டில் செய்ததைச் சொல்லியிருந்தார். அதைச் சேர்த்தும் செய்யலாம் தொட்டுக் கொள்ள நல்லாருக்கும்.
நம் வீட்டில் வெந்தய தோசை அடிக்கடி செய்வோம். மாவை நார்மல் இட்லி மாவு பொங்கி வ்ரும் வரை வைப்போமில்லையா அப்படிப் பொங்க வைத்துச் செய்வோம்.
இன்னொரு வகை - இட்லி அரிசி, வெந்தயம் இதே அளவு,
கூட கால்கப் துவரம் பருப்பு.
துவரம்பருப்பு போடறப்ப சட்டுனு புளித்துவிடும் மாவு எனவே மாவு பொங்கியதும் செய்துவிடலாம் ...
கீதா
பாசிட்டிவ் செய்தி நல்ல செய்தி! பத்மா அவர்களைப் பாராட்டுவோம்!
பதிலளிநீக்குகீதா
ஜெ கே அண்ணா, மாவு கொஞ்சம் புளிக்க வேண்டும். அடுத்து தோசையை மேலே கருத்தில் சொன்னது போல தேய்க்கக் கூடாது கொஞ்சம் குண்டாக ஆனா மிகவும் மெத்து மெத்து என்று சாஃப்டாக வரும்.
பதிலளிநீக்குகீதா.