வீட்டு வாசலில் கல்கி ஈஸிசேரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறார்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
பொன்னியின் செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்னியின் செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
4.5.23
6.8.14
பொன்னியின் செல்வனில் வந்த பொல்லாத சந்தேகம்!
ஆகஸ்ட்
11 இதழ் கல்கியிலிருந்து மீண்டும் 'பொன்னியின் செல்வன்' வெளியிடத் தொடங்கி
இருக்கிறார்கள். ஏக விளம்பரம் இந்தமுறை. எல்லாப் பத்திரிகைகளிலும் "2400
ரூபாய் சந்தா கட்டினால் நான்கு வருடங்களுக்கு கல்கி உங்கள் வீடுதேடி வரும்.
வந்தியத் தேவன் மூன்று வருடங்களுக்கு உங்கள் வீடு தேடி வருவார்"
என்றெல்லாம் விளம்பரங்கள் தூள் பறந்தன.
நான் ஏற்கெனவே கல்கி வாங்கிக் கொண்டிருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால் ஆகஸ்ட் 3 இதழிலிருந்து வழக்கம்போல அச்சுக் காகிதம் விலை உயர்வைக் காரணம் காட்டி, கல்கி விலையை 3 ரூபாய் ஏற்றி விட்டார்கள். வாழ்க வந்தியத் தேவன்.
கல்கியில் 'கல்கி சிறுகதைப் போட்டி' யில் வெற்றி
பெற்ற சிறுகதைகளை ஆர்வமுடன் படித்துப் பயின்று வருகிறேன். ஒருமுறை நானும்
ஜெயிப்பேன்! நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் கதை அனுப்பினால்தானே அவர்களும்
பரிசீலிப்பார்கள்? அடுத்த முறையாவது அனுப்ப முயற்சிக்க வேண்டும்! ஹிஹிஹி...
இந்த
இதழில் பொன்னியின் செல்வன் தொடங்கி இருக்கிறது என்றதும் (மீண்டும்) படிக்கத்
தொடங்கினேன். கதைக்கான வேதா ஓவியங்களை இரா முருகன் உட்பட எல்லோருமே
பாராட்டுகிறார்கள். இது சம்பந்தமாக சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஓவியர் வேதா அவர்கள் பேட்டியும் படித்தேன்.
திருமதி பக்கங்களிலிருந்து கீழே உள்ள படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் - அனுமதி இல்லாமலேயே! மன்னிக்கவும் கோமதி மேடம்! நன்றிகள்!
திருமதி பக்கங்களிலிருந்து கீழே உள்ள படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் - அனுமதி இல்லாமலேயே! மன்னிக்கவும் கோமதி மேடம்! நன்றிகள்!
நாம் இங்கு கற்பனை ஓடம் ஏறி யுகங்களைக் கடக்காமல் ஜஸ்ட் ஒரு ஐந்து பாராக்களைத் தாண்டிச் செல்வோம்! வீரநாராயண ஏரியின் தென்கோடிக்கு வரும் வந்தியத்தேவன் ஏரியைப் பார்க்கிறான். அந்த (வீராணம்) ஏறி பற்றிய வர்ணனை இந்தப் பாராவில் வருகிறது.
"இப்படி
எல்லாம் எண்ணிக்கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு
வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வடகாவேரியிலிருந்து பிரிந்துவந்த
வடவாறு. ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து
சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம்
வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப்
படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வைத்திருந்தார்கள்....."
இங்கேதான்....
இங்கேதான் படித்துக் கொண்டே வரும்போதே அந்தக் கேள்வி மனதுக்குள்
தோன்றியது. கருவேல மரங்களின் கருங்காலித் தனம் பற்றி சமீபத்தில்தானே
படித்து வருகிறோம்... யூகலிப்டஸ் மரங்கள் போல இவையும் இந்தியாவுக்கு வேறு
நோக்கில் கொண்டு வரப்பட்டு தீங்கிழைத்துக் கொண்டிருக்கும் மரங்கள் என்று
படித்தோமே... சோழர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறதா? என்று சந்தேகம்
தோன்றியது.
இணையத்தின் உதவியை நாடினேன். கீழ்க்கண்ட விவரங்கள் கிடைத்தன. எனவே ஆராய்ச்சி முடிவின் படி சோழர்கள் காலத்தில் கருவேல மரங்கள் இருந்திருக்காது என்று தோன்றுகிறது!
முதலில் இது.
...........53 மீட்டர் வரை வளரும் இதன் வேர், ஆழமாகச் சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. வறட்சி காலத்தில், பிற தாவரங்களுக்குத் தேவையான நீர் முழுவதையும், இவை உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்கள் வாடி வதங்கி விடுகின்றன.
இனி வரும் காலத்தில், விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசு நிலங்களாக மாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.
...........53 மீட்டர் வரை வளரும் இதன் வேர், ஆழமாகச் சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. வறட்சி காலத்தில், பிற தாவரங்களுக்குத் தேவையான நீர் முழுவதையும், இவை உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்கள் வாடி வதங்கி விடுகின்றன.
இனி வரும் காலத்தில், விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசு நிலங்களாக மாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்,எண்ணெய்ப்பசையையு
அடுத்தது இது.
கருவேல மரம் வந்த கதை.
வேலிகாத்தான் என அழைக்கப்படும் "கருவேல மரங்கள்', மண்ணின் வில்லன்கள். இதன் தாவரவியல் பெயர் "ப்ரோசோபிஸ் சூலிப்ளோரா'. (Prosopis juliflora) இது வேளாண் நிலங்கள், வாழ்வாதாரங்களை நாசப்படுத்தும் தாவரம். மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படும் எனக் கருதி, 1950ல் ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது. நலம் பயக்கும் என கருதி, விதைக்கப்பட்ட இவை, நிலத்திற்கு எதிரியாகி, இன்று இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து விட்டது.
இது வேறு கருவேல மரம், கதையில் வருவது வேறு கருவேல மரமோ!
5.5.12
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....
ஆதித்த கரிகாலன் கொலையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்குகிறது!
பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லோருமே படித்திருப்போம். அப்புறம் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகியும் சிலர் படித்திருக்கலாம். இந்த இரண்டு கதைக் களமுமே ஒன்றுதான். பாலகுமாரன் எழுதிய உடையார் கூட இதே களம்தான் என்றாலும் நான் படித்ததில்லை ! (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது!)
கடைசிப் புத்தகக் கண்காட்சியில் முன்னுரையைப் படித்து விட்டு தியாகு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு என்னிடம் கொடுக்க, நானும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
எந்தப் புத்தகம்?
முதலில் தியாகு, புத்தக அறிமுகம் அலைபேசியில் தந்து விட்டு புத்தகத்தைத் தர, ஆதித்த கரிகாலன் பற்றிய மர்மங்களை இந்தப் புத்தகத்தில் விடுவிப்பதாகப் படித்ததும் மிகுந்த சுவாரஸ்யம் ஏற்பட்டது.
(இதைப் படித்த எங்கள் ப்ளாக்கின் ஆசிரியர் ஒருவர் 'கடல் கொண்ட காதல்' என்ற புத்தகத்தையும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்வதோடு அது பற்றித் தெரிந்தவர்கள் எந்த பதிப்பகம், எங்கு கிடைக்கும் என்று விவரம் சொல்ல வேண்டுகிறார்....முனைவர் தமிழரசி என்பவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தற்செயலாக ஒரு பயணத்தின்போது தான் படித்ததை நினைவு கூர்கிறார் அவர்)
இதன் ஆசிரியர் டி ஏ. நரசிம்மா, 'தி இந்து' பத்திரிக்கையின் தமிழ்நாட்டுப் பிரிவின் செய்தி ஆசிரியராகவும் சீனியர் அஸிஸ்டன்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருவதாக ஆசிரியர் அறிமுகம் சொல்கிறது. 91 க்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசிலும் அதற்கும் முன் ஒரு தமிழ் வார இதழிலும் பணியாற்றியுள்ள இவரின் கதைகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளதாகவும் சொல்கிறது. இவரது தந்தை 'சித்ராலயா' கோபு. தாய் நாவலாசிரியை கமலா சடகோபன்.
முன்னுரை ஆதித்த கரிகாலன் பேசுவதாக அமைந்துள்ள இந்தப் புத்தகத்தில் அந்த முன்னுரையே நமது ஆவலைத் தூண்டுவதற்குப் போதுமானது.
நான் பொன்னியின் செல்வன் மட்டுமே படித்திருக்கிறேன். நந்திபுரத்து நாயகி படிக்க வேண்டும்! அந்த ஆவல் இந்தப் புத்தகம் படித்த பிறகு தோன்றியது! அதில் (பொன்னியின் செல்வன்) ஆதித்த கரிகாலன் கொலையுண்ட விவரம் இருக்குமே தவிர, கொலை செய்தது யார் என்று குறிப்பிடப் பட்டிருக்காது. படிப்போர் ஒரு மாதிரி 'கொலை செய்தது பாண்டிய நாட்டு ஆபத்துதவிப் படைகள், ரவிதாஸன்' என்று யூகிக்கும் வண்ணம் கதைப் போக்கு அமைந்திருக்கும்.வரலாறும் அவ்வாறு அறியப் பட விரும்பியதாகவே அமைக்கப் பட்டிருப்பது போலத் தோன்றுவதைச் சில காரணங்கள், கல்வெட்டுகள், தர்க்கங்கள் கொண்டு மறுக்கிறார் சங்கதாரா ஆசிரியர் நரசிம்மா.
ரவிதாஸன் ஆதித்தகரிகாலனைக் கொன்றான் என்றால் அருண்மொழிக்கு முன்னால் ஆண்ட உத்தமச் சோழன் என்கிற மதுராந்தகன் ஆட்சியில் சோழ உயர் பதவி அவருக்கு ஏன் அளிக்கப் பட வேண்டும்? ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் ரவிதாஸன் சொத்துகளைப் பிடுங்கிக் கொண்டு ஏன் நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்?
அருண்மொழிக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்று குந்தவைக்குத் தெரியவில்லை. ராஜேந்திரச் சோழன் இதை பின்னால் புரச நாட்டுக் கல்வெட்டுகள் மூலம் (தற்போதைய மலேயா) அறிகிறார்.
குந்தவை என்ன நினைத்திருக்கிறாளோ அது தவறு என்பது வந்தியத் தேவருக்குத் தெரியும். ஆனால் அவர் அதைச் சொல்லவில்லை.
குந்தவையின் தோழி தெட்டக்கனி மட்டும் தான் சந்தேகப் பட்ட ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் வரலாறே வேறு மாதிரி ஆகியிருக்கலாம்.
பதினாறு வயதில் ஆதித்த கரிகாலன் கொல்லப் பட்டதாக வரலாற்றில் பதிவாகியுள்ள தகவலே தவறு என்றும் அவர் கொல்லப் பட்டது அவரின் இருபத்தாறாம் அகவையில் என்றும் சொல்லப் படுகிறது.
'அருண்மொழியைப் போலவே நானும் அழகானவன்தான். ஏனோ சரித்திர ஆசிரியர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்டது' என்று ஆதித்த கரிகாலன் சொல்வதாக எழுதியிருக்கிறார் நரசிம்மா. அரசு கட்டில் ஏற முடியாத சோழர்குல வாரிசுகளை ஆதித்த கரிகாலன் என்ன செய்தான் என்று அறியும்போதும், ரவிதாஸன் யார், இந்தக் கொலையில் அவன் பங்கு என்ன என்று அறியும் போதும் அல்லது படிக்கும் போதும் ஆச்சர்யம். குறிப்பாக ரவிதாஸன் பற்றிய விவரங்களுக்கு ஆசிரியர் பல ஆதாரங்கள் அடுக்குகிறார்!
கல்கி இந்த விவகாரங்களைத் தொடாமல் அல்லது தொட விரும்பாமல் இந்தப் பகுதிகளை நாசூக்காக ஓரமாக மட்டும் தொட்டுச் சென்று விட்டார் என்கிறது இந்தப் புத்தகம்.
சங்கதாரா என்பது சோழ மன்னர்கள் பட்டாபிஷேகத்தில் நீர் வார்க்கப் பயன் பட்ட ஒரு பஞ்சசன்னிய சங்கு. அது இருக்குமிடம் சங்கதாரா. புரச இலையை சிரசில் வைத்து, கரத்தில் புரசக் குச்சியைத் தந்து இந்தச் சங்கால் நீர் வார்த்து பட்டாபிஷேகம் நடைபெறும் என்று கல்வெட்டுகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.
வீரபாண்டியன் தலையை வாங்கும்போது ஆதித்த கரிகாலன் வயது, குந்தவையின் வயது, நந்தினி என்று அழைக்கப் படும் நந்தா விளக்கு, உண்மையில் யார் மகள் நந்தினி, அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் உண்மையில் யார், வந்தியத் தேவன் நல்லவனா, கெட்டவனா....
நாம் படித்ததிலிருந்து ஏகப்பட்ட மாறுதல்களுடன் இந்த நாவல். ஆங்காங்கே வரலாற்று ஆதாரங்களையும் சொல்கிறார் என்றாலும் அது போதுமானதாக இருக்கின்றதா என்ற கேள்வியும் வருகிறது. குந்தவை, நந்தினி, வானதி, பழுவேட்டரையர்கள் இவர்களைப் பற்றிய எண்ணங்களும் கருத்துகளையும் கூட மாற்றுகிறது இந்த நாவல்.
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று அறியும்போது ஓரளவு எதிர்பார்க்கும் அளவில் வைத்தாலும், சுவாரஸ்யம் குன்றாமல் திடுக்கிட முடிகிறது. சின்னச் சின்ன ஆனால் முக்கியமான திருப்பங்கள், ஆங்காங்கே சஸ்பென்ஸ் குறையாமல் கொண்டு வந்து கடைசியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கும்போது நாம் எதிர்பார்த்த சில, எதிர்பார்க்காத சில என்று சுவாரஸ்யம் கூட்டுகிறது நாவல். ராஜ ராஜ சோழன் உண்மையில் யார் உண்மையில் ராஜராஜ சோழன் பிறந்த தினம் எது, என்று அறியும்போதும் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வரலாற்று ஆதாரம் என்று சரியாகக் காட்டாமல் ஒரு துப்பறியும் நிபுணரின் திறமையோடு அவற்றை நிலை நிறுத்துகிறார் ஆசிரியர். சில புதிய கேரக்டர்கள் உண்டு.
மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனைப் பற்றிய குறிப்புகளில் மட்டும் ஒரு சிறு குழப்பம். தளிக்குளத்தார் கோவில் இருந்த இடத்தில்தான் அதை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப் பட்டது என்றும் அதற்கான காரணமும் மனித மனதின் அழுக்குகளைச் சொல்கிறது. அதை விளக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் தலைப்பு "பெரிய கோவில்; சிறிய புத்தி"
ஆங்கிலப் புத்தகங்களையே படித்துக் கொண்டிருந்த நரசிம்மா தன் மனைவி கொண்டு வந்த புத்தகக் களஞ்சியங்களில் பொன்னியின் செல்வன், கடல் புறா எல்லாம் கிடைக்க, படித்து மகிழ்ந்தாராம்.
"அமரர் கல்கி ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார். ஆனால் தனது பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக, சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலில் இருந்த 'சுழல் பகுதிகளை' ஆபத்தானவை என யூகித்து தனது 'கற்பனை' எனும் பாயமரக்கப்பலை, ஆபத்தில்லாத பக்கமாகச் செலுத்தி, சுழல் பகுதிகளைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் தனது கலத்தைச் செலுத்தியுள்ளார். மற்ற சரித்திர நாவலாசிரியர்களும் அவரைப் பின்பற்றி ஆபத்தான பகுதிகளைத் தவிர்த்து விட்டனர். எனக்கு எவ்விதக் கட்டாயமும் இல்லை.பெரிய நாவலாசிரியர் என்ற பெயர் வாங்குவதற்காக நான் எழுதவில்லை. எனது பத்திரிகைப் பணியின் பாரத்தைக் குறைக்கவும் உண்மைகளை அறியும் ஆர்வத்தினாலும்தான் எழுதுகிறேன்...." என்கிறார் ஆசிரியர் நரசிம்மா.
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இவரது மற்ற இரண்டு படைப்புகளான 'காலச்சக்கரமும்', 'ரங்கராட்டினமு'ம் படிக்கும் ஆவல் உண்டாகிறது. "இந்த நாவலை எழுதியதற்காகவே உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்" என்று ஒரு மூதாட்டி திருவரங்கத்திலிருந்து கதறியபடி தொலைபேசியதாகச் சொல்கிறார் நரசிம்மா, தனது 'ரங்கராட்டினம்' நாவலைப் பற்றி.
பொன்னியின் செல்வனைக் கூட இப்போது ஒருமுறை எடுத்து மறுபடி ஒருமுறைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்!
இந்தப் புத்தகம் சொல்லும், விளக்கும், விடுவிக்கும் பலப் பல மர்மங்களைச் சொல்வது நியாயமாகாது. சுவாரஸ்யத்துக்கு நான் கியாரண்டி! கண்டிப்பாகப் படிக்க வேண்டியப் புத்தகம்!
'சங்கதாரா'
ஆசிரியர் : 'காலச்சக்கரம்' நரசிம்மா.
வானதி பதிப்பகம்
450 பக்கங்கள்.
விலை : 150.00
பின் குறிப்பு: இந்தப் புத்தகத்தை ஆன்-லைனில் வாங்க, உடுமலை.காம் என்ற வெப்சைட்டில் பதிவு செய்து வாங்கலாம். இந்தியாவுக்குள் வாங்க முப்பது ரூபாய் தபால் செலவு சேர்த்து நூற்று எண்பது ரூபாய் ஆகும். பணத்தை, புத்தகம் கைக்கு வந்ததும் கொடுக்கலாம்.
14.12.11
படித்ததைப் பகிர ஒரு வெட்டி அரட்டை....
அந்தக் காலத்தில் விரும்பிப் படித்த பல நாவல்களை புத்தக வடிவில் வாங்கும்போது 'ஆனாலும்...' என்ற ஒரு சின்ன ஏக்கம் இருக்கும்! அதாவது அப்போது தொடர்கதையாக வந்த போது வாராவாரம் கதைகளுக்கு ஜீவன் சேர்த்த ஓவியங்கள் இல்லாமல் புத்தகம் படிப்பது ஏதோ இழந்தது போலத்தான் இருக்கும். பைண்ட் செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் வசதியானவை. படங்களுடன் படித்து ரசிக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு விசிறி வாழை, வாஷிங்டனில் திருமணம் பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற பல புத்தகங்கள் பூச்சி அரித்து வீணாய்ப் போனது கஷ்டமாக இருந்தது.
புத்தகமாகப் போடுகிறவர்கள் வாராவாரம் வந்த அந்தப் படங்களையும் சேர்த்து போடக் கூடாதோ என்று தோன்றும். யவனராணி போன்ற கதைகளில் டைபீரியசையும் யவனராணியையும் அட்டையில் மட்டுமே காண முடியும். உள்ளே வரிகள், வரிகள், வரிகள்.....
விகடன் முதல்முறையாக அந்தக் குறையைப் போக்க வருகிறது. அதைப் படித்த நாள் முதலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நிறையப் பேருக்கு ஏற்கெனவே தெரிந்தும் இருக்கும். படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனாலும் சும்மா பகிர்ந்து கொள்கிறேன்!
2216 பக்கங்களில் 5 பாகங்களாக கெட்டி அட்டையுடன் 1,350 ரூபாய், ஆனால் 31-12-2011 க்குள் முன்பதிவு செய்தால் பொன்னியின் செல்வன் புத்தகம் 999 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரம். ஓவியர் மணியம் தீட்டிய ஒரிஜினல் வண்ண ஓவியங்களுடன் என்பதுதான் விசேஷம். (புத்தகத்தில் கருப்பு வெள்ளைதான் வந்தது - முதல் முறை) "இது வரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாத பிரமிப்பான வடிவில்" என்று ஆசை காட்டுகிறது.
ரூபாய் அதிகம் என்று தோன்றினாலும் நிச்சயம் நிறைய பேர் விரும்புவார்கள் என்றுதான் தோன்றுகிறது. (ஓவியங்கள் இல்லாத பதிப்புகள் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது - ஐந்து பாகங்களும். ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாய்க் கூட கிடைக்கிறது. டைரி சைஸில் என்ற விளம்பரத்துடன்)
****************************************************
பத்து நாட்களுக்குமுன் படித்த இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். கடத்தப் பட்ட 22 டைனோசர் முட்டைப் படிமங்களை சீனாவிடம் அமெரிக்கா தந்ததாகப் படித்த செய்தி.
வயது 6.5 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என்றும் ஏலம் விடப் படுவதற்கு இவை கடத்தப் பட்டதாகவும் தெரிகிறது.
சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த முட்டைகளில் 19 முட்டைகளில் உயிர் பெறக் கூடிய முதிர்வுறாக் கருவுரு உயிர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற செய்திதான்.
மூன்றாவது முறை அமெரிக்கா இப்படி திருப்பி தந்திருக்கிறதாம்.
ஒவிராப்டர் வகையைச் சேர்ந்த முட்டைகளாம். சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் குவாங்க்டன் மாகாணத்தில் கிடைக்கப் பெற்றதாம்.
***********************************************************
மறைந்த தேவ் ஆனந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றும் படித்தேன். தேவ் ஆனந்துக்கு முஹம்மது ரஃபி பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
ஆனால் முஹம்மது ரஃபிக்காக தேவ் ஆனந்த் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். 1966 ஆம் வருடம் பியார் மொஹப்பத் என்ற படத்தில் ஒரு பாடலின் இடையே வரும் வரிகளை தேவ் ஆனந்த் பாடினாராம்.
************************************************************
கடிதங்கள் எழுதும் காலத்தில் போஸ்ட் கார்டாக இருந்தாலும் சரி, இன்லேன்ட் லெட்டராக இருந்தாலும் சரி எங்கள் குடும்பத்துக்கே ஒரு வழக்கம் உண்டு. சுருக்கமாக எழுதிப் பழக்கமே இல்லை! பொடிப் பொடியாக எழுதுவது முதல் மார்ஜினில் கோணம் மாற்றி எழுதுவது, ஸ்கெட்ச் பேனாவில் - ஏற்கெனவே எழுதியிருக்கும் இடையே பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி என்றெல்லாம் எழுதி ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும் கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்!
இது எதற்கு நினைவுக்கு வந்தது என்றால், பொன்னியின் செல்வன் செய்தியை மட்டுமே பகிரும் எண்ணம் இருந்தாலும் ஒரு பதிவில் நிறைய இடம் கீழே வேஸ்ட் ஆகிறதே (!!!) என்று இன்னும் இரண்டு செய்திகளை இதோடு இணைத்து விட்டேன்.
கொசுறு தகவல். இன்று எவர்க்ரீன் படம் மிஸ்ஸியம்மா மறுபடி பார்க்கப் பட்டது. மிக அழகிய சாவித்திரி, மிக அழகிய ஜெமினி கணேசன் இனிமையான பாடல்கள் என்று அலுக்காத, அருமையான படம்.
கொசுறு 2 : தினமணியில் மதியின் கார்ட்டூன்..."ஐயோ அடுத்த வருடம் 12-12-12 என்ற ஒரு சிறப்பான நாளில் வரும் ரஜினியின் பிறந்த நாளை - இன்ப அதிர்ச்சியை -அவர்தம் ரசிகர்கள் எப்படி தாங்கப் போகிறார்களோ..." !!!!!!!
11.2.11
குட்டிச் சுவரில் வெட்டி அரட்டை - 2
சன் டீவியில் வரும் 'அசத்தப் போவது யாரு' நிகழ்ச்சியில், வாய்ப்பு கிடைக்கும் போதும் ஞாபகம் வரும்போதும் மதுரை முத்துவின் பங்களிப்பைப் பார்க்கத் தவற மாட்டேன்! இன்று அவர் சொன்ன ஒரு ஜோக்: ஸாரி ஜோக்குகளில் ஒன்று..!
ஒரு அம்மாவும் பெண்ணும் ஏதோ காரணத்தால் திடீரென உயரமான இடத்திலிருந்து தவறி கீழே விழுகிறார்கள். வழியில் அம்மா ஒரு மரத்தைப் பிடித்துத் தொங்க, குழந்தையையும் ஒரு கையில் பிடித்துத் தொங்குகிறாள். உதவிக்கு ஆள் கூப்பிட்டு அலறுகிறாள். கீழே ஒரு ஃபுட்பால் கோல் கீப்பர் வர, 'கையை விடு, நான் பிடிச்சுக்கறேன் ' என்று தைரியம் சொல்ல, தாய் குழந்தையை விடுகிறாள். அவனும் சரியாய் குழந்தையை கீழே விழாமல் கேட்ச் பிடித்து விடுகிறான். கை தட்டியே பழகிப் போன நம்ம மக்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா...தட்டுகிறார்கள். அதைக் கேட்ட உடனேயே மைதான நினைவு வந்து விட்ட அந்த ஃபுட்பால் கோல் கீப்பர் கையில் பிடித்த குழந்தையை கீழே வைத்து காலால் ஓங்கி ஒரு....
முதலில் சிரித்தாலும் பின்னர் சற்று கொடூரமாகத் தோன்றியது. கற்பனையை ரொம்ப ஓடவிடக் கூடாது. PKS இல் கமல் 'பழமொழி சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக் கூடாது' என்பாரே..அது போல ஜோக் சொன்னா சிரிக்கணும்...கற்பனை செய்யக் கூடாது!
என் நண்பர் ஒருவருக்கு இதே போல (?) தொழில் சார்ந்த சங்கடம் ஒன்று நேர்ந்ததாகச் சொன்னது நினைவு வந்தது. அவர் மருத்துவத் துறையில் பணி புரிபவர். பணியில் இருக்கும் போது உடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி வந்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள். கர்ப்ப காலத்தில் மருத்துவமனைகளில் சோதிக்கும்போது LMP, EDD என்று குறிப்பார்கள். முதலாவது Last menstrual period, இரண்டாவது Expected Delivery Date..
மருந்து, மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றின் Expiry Date பற்றியே எழுதி பேசிப் பழகிய இவர்கள் சில சமயம் ஜோக்காகவும் சில சமயம் மறந்து போயும் Retire ஆகும் சக ஊழியர்களை உங்களுக்கு எப்போ Expiry Date என்று கேட்பதுண்டு. அது போல இவரிடமும் உன் மகளுக்கு எப்போ EDD என்று கேட்பதற்கு பதிலாக, வேகமாக எப்போ Expiry Date என்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாராம்.
ரொம்பவும் சங்கடப் பட்டுப் போன இருவருமே அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆகும் வரை டென்ஷனாகவே இருந்ததைச் சொல்லியிருக்கிறார்...!
இது மாதிரி அவரவர்கள் தங்கள் வேலையில் உபயோகிக்கும் டெக்னிகல் வார்த்தைகளை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பயன் படுத்துவது குறித்து சுவாரஸ்யமாக இருந்தால் நண்பர்களும் அதைப் பகிரலாமே!!
####################################
எம் ஜி ஆர் ஆசைப் பட்டு ஆனால் நடக்காத, அப்புறம் கமலஹாசன் ஆசைப் பட்டு நடக்காத ஒரு விஷயம் நடிகர் விக்ரமுக்கு கிடைத்திருக்கிறதாம். அதாவது வந்தியத் தேவனாக நடிக்கும் வாய்ப்பு. மணிரத்னம் இயக்கமாம். இவ்வளவுதான் செய்தி. கல்கியில் பார்த்தது.
ஏற்கெனவே படித்து ரசித்த ஒரு கதையை படமாக்கும்போது சில் சிக்கல்கள் உண்டு...நாம் ரசித்த கேரக்டர்களின் உருவம் நம் கற்பனையை ஒட்டி ஒரு விதமாக நம் மனதில் இருக்கும். ஏதோ ஒரு நடிகர்அந்தப் பாத்திரங்களை ஏற்கும்போது நம் மனம அவரை அந்த கேரக்டராக ஏற்பது கடினம். ரசிக்குமோ...?
அதே கல்கியில் நம் சக பதிவர்கள் ராமலக்ஷ்மி கவிதையும், உழவன் கவிதையும் வந்திருக்கிறது. நீங்கள் கூட கவிதைகள் எழுதி kalki@kalkiweekly.com க்கு அனுப்பலாம் என்கிறது கல்கி.
வந்தியத் தேவனைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு செய்தியும் சொல்ல வேண்டும். மக்கள் தொலைக்காட்சியில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தொடர் எடுக்கப் போவதாகவும், அதில் நீங்களும் நடிக்கலாம் என்று சொல்லி புகைப் படத்துடன் அப்ளை, மன்னிக்கவும் விண்ணப்பிக்கச் சொல்கிறது மக்கள் டிவி.. மறுபடி மன்னிக்கவும், மக்கள் தொலைகாட்சி.
#####################################௩
சல்மான் இனிமேல் ஹிந்தித் திரையுலகை பாலிவுட் என்று சொல்லாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். Hindi Filmi என்ற வார்த்தையிலிருந்து HI-Fi என்று சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!
(அப்போ தமிழ்த் திரையுலகை, TA-FI என்றும், கன்னடத் திரையுலகை, KA-FI என்றும் சொல்லலாமோ?)
##########################################
உலகக் கோப்பை கிரிக்கெட் பக்கத்தில் வந்து விட்டது. சச்சின் அடுத்த உலகக் கோப்பை விளையாடுவாரா என்று மக்கள் இப்போதே கவலைப் பட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆட்டமே ஆரம்பிக்கவில்லை. இந்திய டீமே அவரை நம்பி இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவரே அடுத்த உலகக் கோப்பை பற்றி ஒன்றும் சொல்லாத நிலையில் தோனி "Frankly speakking, and practically speaking this will be Sachin's last world cup..." என்கிறார். இவர் யார் அதைச் சொல்வதற்கு என்று தெரியவில்லை. ஒரு அலெக்ஸ் ஸ்டுவர்ட் 44 வயது வரை விளையாடலாம் என்றால் why not Sachin? கிட்டிப்புள் ஆடுவது போல தோனி அடிக்கும் ஷாட் ஒன்றைப் போட்டு அவரை விட்டே "ஹெலிகாப்டர் ஷாட்" என்று சொல்ல வைத்திருக்கிறார்கள்!! நகைச்சுவை? விளம்பரங்களுக்கு கோடிகளில் ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!
எல்லா ஆங்கிலச் சேனல்களும் உலகக் கோப்பை ஒளிபரப்பு என்று தொடங்கி விட்டார்கள்! ஒரு நாள் முழுக்க ஒரே செய்திகளை ஒட்ட இவர்களுக்கும் ஏதாவது கிடைத்து விடுகிறது..! முன்னாள் அமைச்சர் கைது...எகிப்து....
ரொம்ப நாட்களுக்குப் பிறகு எங்களுக்கு ஃப்ரீ சேனலில் CNN IBN வருகிறது!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











