சனி, 1 ஜூன், 2019

டைம் பாஸ் - வானவில்லின் ஏழு வண்ணம் ; எங்கள் பிளாகில் ஏழுநாள்


1)  கொத்தமங்கலத்தில், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அம்புலி ஆறு அணை, அதன் வரத்து கால்வாய்களை துார்வாரி சீரமைக்கும் பணியைச் செய்த இளைஞர்களை பற்றி படித்தோம்.  இப்போது பெரம்பலூரில் மேலமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், துார்ந்து போன நீர்நிலைகளை துார் வாரும் பணியில், ஈடுபட்டு உள்ள செய்தி.





2)  டைம்பாஸ் என்கிற பேஸ்புக் பக்கத்தில் பார்த்த புகைப்படம்.  விளக்கம் தேவை இல்லை.




3)  "................இதன்பின்னும், திருமணம் செய்து கொள்ளாமல், சமூக சேவையில் ஈடுபட்டார். குடிசை வீட்டில் தாயுடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு, தாய் இறந்த பிறகும், அதே வீட்டில் வசிக்கிறார்.மது, ஊழல், போலீஸ் அராஜகம் ஆகியவற்றுக்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை, தொடர்ந்து நடத்தி வருகிறார். இதற்காக அவர் செல்வது, சைக்கிளில் தான்.  பலசோர், மயூர்பான்ச் பகுதிகளில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின குழந்தைகள் படிப்பதற்காக, பள்ளிகளை நடத்தி வருகிறார்................."

ஒடிசாவில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., - எம்.பி.,.க்கு, சொந்தமாக, வீடு, வாகனம் எதுவும் இல்லை. குடிசையில் வசிக்கும் இவருக்கு சொந்தமாக, சைக்கிள் மட்டுமே உள்ளது.






4)  அடடே....

அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறாக, மின்விசிறி, 'ஏசி' ஏதும் இயங்காத நிலையில், வெயிலின் தாக்கம் இன்றி, குளுமையாக இருந்துள்ளது.  வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, அந்த வீடு, தெர்மாகோல் மூலமாக கட்டப்பட்டது தெரிந்தது. ஆரம்பத்தில் இதை நம்பாதவர், இது குறித்து விசாரித்துள்ளார். 







=====================================================================================================

இந்த வார விமர்சனம் 25/5 டு 31/5 -  ஏஞ்சல் 



வானவில்லின் ஏழு வண்ணம் காணக்காண இன்பமே 
எங்கள் பிளாகில் ஏழுநாளின்  பதிவுகளும் இன்பமே :)


                                                                                                
ஏறத்தாழ  2011 முதல் எங்கள் ப்ளாக்குக்கும்  எனக்குமான நட்பு தொடர்கின்றது பின்னூட்டம் அளிக்க தயங்கித்தயங்கி இருந்த  காலங்கள் அவை பிறகு அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு . பிறகு பிரிக்கமுடியா பந்தமாகியது இந்த இடம் .

எந்த இடம் எந்த செயல் நமக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருகிறதோ அங்கே நாம் இருக்க வேண்டும் . தொடர்ந்து 
4 நாட்கள் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலைன்னா மனசுக்கு சோர்வு உணர்வு ஏற்படுது :)  இதற்கு நானே சாட்சி :) 


                                                        
 என்னைப்பொறுத்தவரை எங்கள் பிளாக் ஒரு மலர்த்தோட்டம் பலவண்ண மலர்கள் பூத்து மணம் வீசி சந்தோஷத்தை தரும் ஒரு இடம் . ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தனித்துவமுண்டு .இங்கே வருகை தரும் ஒவ்வொருவருக்கும் நிறைய நல்ல விஷயங்கள் தெரியும் சமையல், கோலம் ,இயற்கை மருத்துவம், நல்ல அறிவுரை கூறல் ,கதை எழுதுதல்,கவிதை ஓவியம் என எல்லாருமே பன்முகத்திறமையாளர்கள் . அனைவரையும் ஒரு சேர ஒரு family get together இல் சந்திப்பது போல இங்கே சந்திக்கிறோம்  சங்கமிக்கின்றோம்  மனம் விட்டு யார் மனமும் புண்படாமல் உரையாடுகின்றோம் .

இங்கே நிறைய தாயுள்ளம் கொண்டோர் இருப்பதால்  அன்புக்கும் ஆதரவுக்கும் பஞ்சமில்லை . அதேபோல் சினிமா முதல் பெரிய தலைகள் பற்றிய செய்திகளை கீதாக்கா,பானுக்கா துரை அண்ணன் நெல்லைத்தமிழன் ஏகாந்தன் சார் மற்றும் ஜிவி ஐயா   விரல்நுனியில்  வைத்திருக்கும்  ,மேலும்  //காளியார்மடம்" அட்ரஸ் மற்றும் கணினி பழுதானதுக்கு புவனஜோதி மந்திரம் ,தேசிக்காய் உருட்டல்  என  ஆலோசனை கிடைக்குமிடமும் எங்களுடைய எங்கள் பிளாக்தான் :)))) 
                                                                         
                                                                          
 சமீபத்தில்  நான் மன ஆரோக்கியம் நலம் சம்பந்தப்பட்ட துறையில்தான் வேலைக்கு சேர்த்துள்ளேன் .வேலையில் சேருமுன் மென்டல் ஹெல்த் பற்றிய புரிதலுக்காக  பல்வேறு விஷயங்களை படிக்க நேரிட்டது அதில் மிக முக்கியமானது , பலர் பேசுவதற்கு ஒருவருமின்றி தனிமையில் இருக்கிறார்கள் .தனிமை அதிகமாகும்போது மனநல குறைபாடு இன்னபிற நோய்கள் அண்டுமாம் .

ஆதலால்  நம்மால் இயன்ற  ஒரு நல்ல விஷயத்தை  நாலு பேருக்கு செய்வோம் .எத்தனையோ பேர் பின்னூட்டமிடாமல்  இங்கே பதிவுகளை நமது பின்னூட்டங்களை உரையாடலை தினமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் மேலும் படிக்கிறவர்கள்

என்ன மனநிலையில் இருந்தாலும் ஒரு சந்தோஷத்தை அவர்கள் மனதில் பரப்பக்கூடிய இடம் இது .

ஒரு நொறுங்குண்ட இதயமாவது இங்கே வெளிவரும் பதிவுகளின் பின்னூட்ட அரட்டையை  பார்த்து சந்தோஷமடைந்தாலும் அதுவே பெரும் வெற்றி .எனக்கே சில வருடமுன்  ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் வலைப்பதிவுகளால் குறைந்தது என்றால் மிகையாகாது .

ஆகவே இனிமேலும் இதேபோல் மனமகிழ்வாயிருப்போம் :) என்று கூறிக்கொண்டு  விமரிசனப்பகுதிக்கு பறந்து செல்கின்றேன் .

                                                                                            கடந்த சனிக்கிழமையன்று நேர்கொண்ட பார்வையோடு :) என்னை மற்றும் அனைவரையும்  கிள்ளி :) கில்லி  அடித்து விளையாடிய மேதகு அதிரடி  அப்பாவி மியாவ்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 

மற்றும் பாராட்டுக்கள் :) . மேடம் நிறைய விஷயங்களை குறிப்பிட்டிருந்தாங்க சனிக்கிழமை பதிவு ,பின்னூட்டங்கள் பற்றி.   

அதில் மியாவின் பின்னூட்டம் //அதுதான் சொன்னேனே .. அது என் கருத்தே தவிர.... நான் சொல்வதுதான் சரி என ஆகிவிடாது...//  என்னை கவர்ந்தது . 

சனிக்கிழமை பதிவுகள் பற்றிய எனது கருத்து செய்திகள்   ஒரு பத்திரிகையில் வருவது  மட்டுமன்றி வேறு பத்திரிகைளில் வருவதை இங்கே பகிர்வது குறைவோ என தோன்றுகிறது.  ஆங்கில  இணையங்களில் இருப்பதை தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்து விட்டு ,நன்றி என்று இறுதியில் கூறலாம் . சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகள் மூலம் இத்தனை நற்குணமுள்ள மனிதர்கள் நம்மிடையே  வாழ்கிறார்கள் என்பதை வாராவாரம் உறுதி செய்கிற ஸ்ரீராம் மற்றும் தாங்கள் படித்த  நல்ல விஷயங்களை சேகரித்து  தொகுத்து ஸ்ரீராமுக்கு அனுப்பி பகிரும்  பிற வலைப்பூ நட்புக்களுக்கும் நன்றிகள் .


=========================
சனிக்கிழமை கேப்டன் ஸ்ரீராம் :)


     Every action has a reaction,everything we do or say has an effect.”


                                                                                          ― Heidi Ayarbe, Freeze Frame 


இன்றைய பதிவில்  மார்பக புற்றுநோய் கண்டறியும் எளிய சாதனத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி  சீமா பற்றிய செய்தி அருமை. உதவி நற்செயல் மட்டுமின்றி இப்படிப்பட்ட அவசியமான விழிப்புணர்வு செய்தி பகிர்வுகளை அதிகமாக பகிரவேண்டுகிறேன் . 

அடுத்து நாம செய்யும் ஒரு நல்ல செயல் எப்படி நல்விளைவுகளை இளம் சிறுவர்கள் சிறுமியர்கள் இடையில் கூட  ஏற்படுத்துகிறது என்பதற்கு இன்றைய இரு செய்தி பகிர்வுகளும் சாட்சி. நூறுநாள் வேலைத்திட்டத்தில் சம்பாதித்த 10,000 ரூபாயை மக்களுக்கு இன்றியமையாத நீர் வரத்து வேண்டி தூர் வார அளித்தார் ராஜம்மாள் என்றால் அவரை பற்றி செய்தியறிந்து தங்கள் சிறுசேமிப்பு தொகையை அவருக்களித்த சுரேஷும் அனுஷ்காவும் உயர்ந்து நிற்கிறார்கள் இவர்களை நல்லமுறையில் வளர்த்த பெற்றோருக்கு நன்றி .மேலும் ராஜம்மாள் பற்றிய செய்தியை நியூஸ் பேப்பர் மட்டுமில்லாது சமூக வலையிலும் பகிர்ந்து அனைவரையும்  சென்றடைய செய்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி .

சனிக்கிழமை பின்னூட்டங்கள் = 226

==============================

ஞாயிற்றுக்கிழமை கேப்டன் கே .ஜி எஸ்   சார் :) 

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பிஸி என்பதால் வருகை தருவது வெகு அபூர்வம் .இந்த வாரம் வந்தபோது மிக பெரிய மாற்றம் .படங்கள் மட்டுமே caption உடன் இருக்கும் ஞாயிறு பதிவில்  ஆனால் இவ்வாரம் நிறைய தகவல்கள் இருந்தன .கோமதி அக்காவின் விமரிசனம் படித்தபோது அவர்கள் பயண  விவரங்கள் பற்றி  கூடுதலாக பகிருமாறு குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது .இது மிக நல்ல விஷயம் .கடல் தாண்டி வாழும் எனக்கு மாம்பலம்  மாமி வற்றல் கடை பற்றி தகவல் கிடைத்தது எங்கள் பிளாக்  பதிவில். நானும் 3 தாங்க்ஸ் போட்டிருக்கேன் அங்கே :)  அதுபோல் பயணக்கட்டுரையில்  உணவு தங்குமிடம் பற்றி குறிப்பிடும்போது புதிதாக செல்வோருக்கு பயன்படும் . 

இந்த வாரம் ஞாயிறு  கண்ணை கவர்ந்த விஷயம் முதலில் இருந்த படம் பழங்குடியினரின் உடையணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்த ஆசிரியர் family  பாஸ் :) கள் சூப்பர் :) கழுத்தில் அணிந்திருந்த மணிமாலைகள் செம வெயிட்டோ ?? ஹாஹா .பயணத்தில் உணவு பற்றி சொல்லியிருந்தது சிறப்பு . அந்த கடுகு வாசனை எனக்கும் பிடிக்காது :) மேலும் இத்தனை நாள்  இருக்க இடமளித்த மரக்கிளைக்கு பை பை சொல்லிய இலை படத்தை ரசித்தேன் .





அந்த இரண்டு கார்களும் கவனித்தேன் எல்லாருக்கும் குழப்பமாய் தோன்றியது எனக்கு தோன்றவில்லையே ???

பின்னூட்டத்தில் கார் எண் பற்றி சிலர்   குழம்பியது  RTO ரெஜிஸ்ட்ரேஷன் முதல் நான்கு எழுத்தை மட்டும் கவனித்ததாலோ ?? 

ஞாயிறு பின்னூட்டங்கள் = 51

==========================

இன்றைய நாள் வலைப்பூ   நட்புக்கள் டர்ன் எடுத்து கேப்டனாக இருப்பார்கள் :)

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமைகளில் எல்லா சமையல் வல்லுனர்களின் சமையல் குறிப்பும்  வெளியிடுவார்கள் இங்கே .
ஹிஹி :) எனது குறிப்புக்கள்  மற்றும்  தமிழில் டீ குடித்த அதிராவின் சமையல் குறிப்புகளும் கூட இங்கே வெளி வந்துள்ளன :)

விதவிதமான குறிப்புகள் கிடைக்கின்றன .என்னைப்போன்ற கோதுமை மைதா சேர்க்காதோருக்கான குறிப்புக்கள் மற்றும் வீகன் வகை உணவு குறிப்புக்களையும் இங்கே பகிருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் . அவ்வப்போது ஸ்ரீராம் மற்றும் அவர் பாஸின் குறிப்புக்களையும் எதிர்பார்க்கிறோம் இங்கே :) அதேபோல் OPOS  என்றொரு சமையல் வகை இருக்குன்னு .(ஏதோ குட்டியூண்டு குக்கர் படம் இருந்தது கூகிளில் )கேள்விப்பட்டேன் அதை செய்து பார்த்தவர்களும் அச்சமையல் பற்றிய  தங்கள் கருத்துக்களை ரெசிபியுடன் பகிர வேண்டுகின்றேன் .



                                                                                                                                      
எங்கள் ப்ளாகில் கோமதி அக்காவின்  அழகான கதைகளை படித்திருக்கிறோம் ,முதன்முதலா மிகவும் புதுமையான எளிமையான சத்தான  வாழைக்காய் அப்பளம்  ரெசிப்பி இன்று பகிர்ந்திருக்கிறார்கள் .அக்கா அவர்களை ரெசிப்பி பகிர வைத்ததில் எல்லா புகழும் பாராட்டுக்களும்  ஸ்ரீராமையும் வலைப்பூ நட்புக்களுக்கும் சேரும் :) 

கோமதி அக்கா பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார் ஏற்கனவே ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ரெசிப்பி போட்டியில் தான் பங்கேற்றதாக .இப்படி பழைய பதிவுகளின் சுட்டி கிடைக்கும்போது இன்னும் நிறைய சமையல் ரெசிப்பிக்களை கற்றுக்கொள்ள முடிகிறது .

இன்றைய பதிவில் சமையல் லெஜெண்ட்ஸ் கீதாக்கா ,நெல்லைத்தமிழன், கீதா ரெங்கன், காமாட்ஷியம்மா ,வல்லிம்மா ,கமலா அக்கா ,பானு அக்கா,ப்ரியசகி அம்மு  ,ஸ்ரீராம், துரை அண்ணா ,ஜி எம் பி ஐயா அப்புறம் பேச்சிலர் ரெசிப்பிபோட்டியில் 4வது பரிசு வாங்கிய மேதகு ஸ்கொட்லான்ட் பூனையார் ,என அனைவரும் பாராட்டி கருத்துரையாடலில் பங்கேற்றார்கள் .பெரும்பாலானோர்  கவனத்தை கவர்ந்தது 

கோமதி அக்கா அவர்களின் கணவர் வரைந்த அழகிய படம் . அப்படியே தத்ரூபமாய் அக்கா அவர்கள்  (மூக்குத்தி ,ஜிமிக்கி கண்ணாடி சேலைக்கொசுவம் அந்த அழகிய புன்னகை )வற்றல் வடாம்  இடும்போது எப்படி இருப்பார்களோ அதை காட்சிப்படுத்தியிருந்தார் அரசு சார் . அவர்கள் மகனும் வடாமை அபேஸ் செய்ய ஆர்வமுடன் காத்திருக்கும் காகமும் என 
சின்ன டீட்டெயில்ஸையும் அரசு சார் எவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தியிருக்கிறார்.   அக்கா அவர்கள் குறிப்புடன் எங்களில் சிலர்  அறியாத தகவலையும் //முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் சத்து மிகுந்த வாழைக்காய் தோல் சமையலைப் பற்றி சொன்னார்கள்//குறிப்பிட்டிருந்தார்கள்  இதேபோல் புதிய சமையல் குறிப்புகளை அக்கா அவர்கள் சார் வரைந்த ஓவியத்துடன் பகிர கோரிக்கை விடுக்கின்றேன் . 

திங்கட்கிழமை பின்னூட்டங்கள் = 183

===============================

செவ் வாய்க்கிழமையும் நட்புக்களின் பங்களிப்பில் கதைகள் மிளிரும் 
செவ்வாய்க்கிழமைகளில் கேட்டு வாங்கி போடப்படும் கதைகள் மற்றும் ஸ்ரீராமின் கடின முயற்சி பற்றி போன வார விமரிசனத்தில் அப்பாவி அதிரா குறிப்பிட்டிருந்தது //எவ்ளோ அவமானங்கள், மனக்கவலைகள் கசப்புக்கள்.. ஸ்ரீராமுக்கு ஏற்பட்டிருக்குமோ தெரியவில்லை // இதை அப்படியே மீண்டும் வழிமொழிகின்றேன் .ஒரு தோட்டத்தில் இயற்கையாக வளர்ந்து 
கொண்டிருக்கும் பூ மரங்கள் செடிகளுக்கு  மேலும் தோட்டத்தில் சந்தோஷமாய் பறந்துதிரியும் பட்டாம்பூச்சிகளுக்கும் தோட்ட நிலத்தின் தன்மை மலர்களின் தன்மை  தோட்டக்காரரின் குணம் கூட வளரும் செடிகளின் குணம் எல்லாம் நன்கு பரிச்சயம்  அப்படிப்பட்டதுதான் ஸ்ரீராமுக்கும் இங்கு தொடர்ந்து கதை ,சமையல் குறிப்பு போன்றவற்றை பகிரும் நல்லுள்ளங்களுக்கும் எப்பொழுதும் அவ்வித புரிதலுள்ள நட்பு , அன்பு நீடிக்கிறது. ஆகவே  இதற்கும் நானே சாட்சி  :)
இது இப்படியே தொடர வேண்டும்  என்பது என்னுடைய ஆவல் .


                                                                         செவ்வாய்க்கிழமை பதிவுகளில்  பல வித்யாசமான கதைகளை நம் நண்பர்கள் பகிர்ந்துள்ளார்கள் அனைத்துமே அட்டகாசம். ஒவ்வொருவரின் பின்னூட்டமும் பல உணர்வுகலவைகளை சொல்லும் 

இதில் தனது  சில கதைகளுக்கு பொருத்தமாக  நெல்லைத்தமிழன் படமும்  வரைவது கூடுதல் சிறப்பு.

ஆற்றங்கரையோர முதியவரின் படம் மற்றும் இரயிலில் உறங்கும் முதிய ஜோடிகளின்   படம் இவற்றுக்கான கதைகளையும் படைத்துள்ளர் நம் நண்பர்கள் . கதைகளில் வியாழன் வெளியான கதையும் உண்டு. கேட்டு வாங்கிப்போடும் கதைப்பகுதி 2016 ஆரம்ப முதல் எங்கள் பிளாக்கில் இடம்பெறுகிறது .   செவ்வாய் கதைகள்  சிறப்பை சொல்ல இடம் போதாது ஆகவே இன்றைய பதிவுக்கு செல்வோம் .

இன்றைய கதை கோபம்   சகோதரர் பரிவை சே .குமாரின் கதை .குமார் எப்பவும்மனித உணர்வுகளை கிராமிய மணம் வீசி அழகாய் கதையாக்கி சொல்வதில் வல்லவர் .இன்றைய கதையில் எல்லா மனிதர்களுக்கும் இயல்பில் பணி ஓய்விற்குப்பின் ஏற்படும் மன குழப்பங்கள் ,ஸ்ட்ரெஸ் போன்றவற்றை கதையின் நாயகர் தாசில்தார் ராஜகோபால் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் .

கதையின் முடிவில் எனக்கும் அங்கே படித்து கருத்திட்ட பலருக்கும் உடன்பாடில்லை .காரணம் ராஜகோபால் ஒரு நேர்மையான மனிதர் அவர் அந்த ஹோட்டல் சிப்பந்தியிடம் மன்னிப்பு கேட்டதில் தவறில்லை ஆனால் அவனுக்கு பணம் தருவது//''திட்டுனதுக்கு லஞசம் கொடுத்து சமாதானம் பண்ணுறேன்னு நினைச்சிடாதே... எனக்கு லஞ்சம் பிடிக்காது... இது அன்பால கொடுக்குறது... வச்சிக்க.//' அவ்வுயர்ந்த மனிதரை ஏற்றி வைத்த  சிம்மாசனம் சரிந்தது  போலிருந்தது எனக்கு .ஆனால் குமார்  வாசகர்களின் விருப்பமறிந்து பின்னூட்டத்திலேயே மிக அருமையான முடிவை அழகாய் எழுதி இருக்கின்றார் .மனமார்ந்த பாராட்டுக்கள் குமார் .

செவ்வாய்க்கிழமை பின்னூட்டங்கள் =80


========================

புதன் கிழமை  எனக்கு மிகவும் பிடித்த நாள் எங்கள் பிளாகில் :) எனக்கு கேள்வித்திலகம் என்ற பட்டத்தை பல்லாயிரக்கணக்கானோர் முன் ஏகாந்தன் சார் பொற்கிழியோடு பொன்னாடை போர்த்தி :) பாராட்டுபத்திரம் வாசித்து அளித்தார் . என்னை  மிகவும் சந்தோஷப்படுத்தும்  நாள் :) கேள்விகேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் .அதுவும் எனக்கு பல கேள்விகளுக்கு பதில்  தெரியும் ஆனாலும் என்னைப்போலவே எத்தனை பேர் சிந்த்திக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் பேரார்வம் :) 

என் ஜுனியரும் அப்படியே நான்  என்ன சொல்கிறேன் எனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள வில்லங்கமான கேள்விகள் கேட்பாள் :) 
எப்பொழுதும் தயங்காமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் புதன்கிழமை கேப்டன் கௌதமன் சாருக்கும் பிறருக்கும் நன்றி .  
ஏற்கனவே நான் சொன்னது அதாவது இங்கே எங்கள் பிளாக் மனதுக்கு ரிலாக்ஸேஷன் தரும் இடம் என்பதற்கு இன்று 
கீதாக்காவின் பின்னூட்டம் சாட்சி :)

///geethasmbsvm629 மே, 2019 ’அன்று’ முற்பகல் 11:53
//இந்த வாரக் கேள்வி :

 இந்த வாரக் கேள்வி! விடை சொல்லிட்டேனே! :))))) இங்கே வந்ததும் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து இருந்தால் அநேகமாச் சரியாயிடும்! :)))
பதிலளி//

இன்றைய எனது கேள்விகளில் இந்த கேள்விக்கான பதிலை மிகவும் ரசித்தேன் 
//

 5,முன் பின் தெரியா அறிமுகமில்லா ஒருவருடைய நாளை சிறப்பானதாக ஆக்க என்ன செய்வீர்கள் ?

 # அவரைப் பாராட்ட தகுந்த காரணம் இருந்தால் பலமாகப் பாராட்டுவேன்.

& அவரைப் பார்த்துப் புன்னகை புரிவேன். A smile costs nothing but wins many things.    

ஒரேயொரு சுயதம்பட்டம் அடிச்சிக்கிறேன் அதிரா சத்து பொறுத்துக்கொள்ளவும் :)))  முந்தாநாள் ஹாஸ்பிடலில் நுழைந்ததும் கண்ணில் பட்ட அனைவரையும் பார்த்து சிரித்தேன் :) அதில்  இருவர் நான் வேலை முடிந்து திரும்பும்போது //you made my day//
தாங்க்ஸ்னு சொன்னாங்க .

நாமெல்லாம் சைக்கிள் ஓட்டினா :) ஸ்கொட்லான்ட் அப்பாவி மட்டும் சைக்கிள் ஓட அதுபின்னாடி ஓடியிருப்பார் போல ..ஹ்ம்ம் கிரேட் லெஜண்ட் :) ஆனாலும் இந்த லெஜண்ட்டால் :) கௌதமன் சாரின் பழுவேட்டரைய சைக்கிள் ஓடிய /ஓட்டிய  அனுபவங்கள் சுட்டி கிடைத்தது :)

//11,கடிதம் எழுதி தபாலில் சேர்க்க மறந்து போனதுண்டா ?
அப்படி தபாலில் சேர்த்த கடிதம் உங்களுக்கே வந்த அனுபவம் இருக்கா ? //

இந்த கேள்வி உண்மை சம்பவத்தை அடிப்டையாகவைத்து கேட்டேன் ஒரு ஜீனியஸ் நமக்கு தெரிந்தவர் டு அட்ரெஸில் தன்  அட்ரஸை போட்டு லெட்டர்ஸ் அனுப்பியிருக்கார் தொடர்ந்து 3 கடிதங்கள் அவருக்கே ரிட்டர்ன் ஆச்சாம் :)  .

நானும் காரசாரமாக ஒரு போலீஸ் அங்கிளை இங்கே திட்டி( கொஞ்சம் அதிகமாவே) 2008 இல் திட்டி லெட்டர் எழுதி அப்புறம் போஸ்ட் செய்யமுன் படிச்சி பார்த்ததில் எனக்கே ஒருமாதிரி இருந்தது பிறகு அப்படியே வச்சிட்டேன் .இன்னும் பத்திரமா இருக்கு லெட்டர் .

கேள்விக்கான பதிலில் நல்மனம் கொண்ட  திரு :) டர் அலுவலக தாள்களை பேப்பர்ஸை அனுப்பியதில் வியப்பில்லை ஆனால் அந்த அபிமான நடிகை படத்தையும்  பார்சலில் அனுப்பியிருக்காரே ஹாஹா :) அது அந்த அபி :) யாரா இருக்கும்னு  அறிய ஆவல் குறு குறுன்னு இருக்கு :)


புதன்கிழமை பின்னூட்டங்கள் =230


============================

வியாழக்கிழமை கேப்டன் ஸ்ரீராம் :)

வியாழக்கிழமைகள் அனைவருக்கும்  ஸ்ரீராம் இனிய தாளி மீல்ஸ் வழங்கும் நாள் :)  புகைப்படங்கள் கிசுகிசு பழைய கதைபுத்தகங்களில் இருந்து சில பகுதிகள் வாராந்தரிகளில் வெளிவந்த கதைகள் ஓவியம் , நாலுகால் செல்லங்கள் ,ரெட்டைவால் ரெங்குடு கார்ட்டூன்ஸ் அப்புறம் அவரது குறுங்கவிதைகள் எல்லாம் மொத்தமா பரிமாறுவார் :) ஸ்ரீராம் மழைக்காதலரோ ?? மழை பற்றிய கவிதைகள் அடிக்கடி எழுதுவார்னு நினைக்கின்றேன் .இதுவரை வெளிவந்த வியாழன் பதிவுகளில் இன்று வெளியானதுதான் கொஞ்சம் பெரிய பதிவோன்னு தோன்றியது . இந்த படம் அதிராவின் ஸ்கொட்லன்ட் கண்ணழகியை எனக்கு நினைவூட்டியது :) 



இன்றைய பதிவில் ஸ்ரீராம் அலகாபாத் ஆல் செயிண்ட்ஸ் கத்தீட்ரலை வளைச்சி வளைச்சு படம்பிடித்திருக்கிறார் அப்புறம் அந்த காலியான சாலை அநேகமா அதிகாலைன்னு நினைக்கின்றேன் அழகாமனித  சஞ்சாரமில்லாமல் இருந்தது .

அந்த ப்ரிட்ஜ் மற்றும் எல்லாஇடங்களிலும் இருந்த ஓவியங்கள் மிக அழகு கும்பமேளா வரும்போது அப்படி செய்திருக்கிறாரகள் என்று படித்துத்தெரிந்துகொண்டேன் .ப்ரயாக் ஹோட்டலின் ஓவியங்கள் அப்புறம்  லிங்கங்கள் .லிங்கங்களில் ஓவியம் இதுவரை பார்த்ததில்லை மூன்று நாமம் மட்டும்தான் நான் பார்த்தது .பிறகு தேசிய கொடி பறக்கும்  சாலை நேதாஜி லால்பகதூர் சாஸ்திரி என அனைவரையும் காமிராவில் சிறைபிடித்திருந்தார் .இவையெல்லாம்காசிக்கு போகும் வழியில் :)

அப்புறம் முக்கியமா இதை சொல்லணும் அலஹாபாத் நகரில் ரிஃஷாவை படமெடுக்கும்போது அதில் இருந்த ஆன்டியும் காமெராவில் வந்து முறைத்திருக்காங்க ஸ்ரீராமை :) 

வியாழன் பின்னூட்டங்கள் =229

==============================

வெள்ளிக்கிழமையும் ஸ்ரீராம் கேப்டன் .  மிக ஆரவாரமாக  தான் ரசித்த பாடல்களை பகிரும் நாள் :) அதுவும் ஸ்ரீராம்  எஸ் .பி பி சாரின் ரசிகர் மன்ற செயலர் பொருளாளர் ஆல் இன் ஆல் :)  ஒருவேளை அவரின் பெயரில் பாதியை வைத்திருப்பதாலோ :)    அவ்வப்போது மனோ ,ஜெயச்சந்திரன் மலேசியா வாசுதேவன் ,டி .எம் .எஸ் போன்றோரின் பாடல்களையும் பகிருவார் .இதற்க்கு தில்லையகத்து கீதா ரெங்கன் இசையை ராகத்தைதுல்லியமாய் கணித்து வெள்ளியை சிறப்பாக்குவார் .பல பாடல்கள் நானும் அதிராவும் அறியாதவை :)   

ஸ்ரீராம் பகிரும் பாடல்களின் கதையை சுருக்கமாக பானு அக்கா சொல்லுவார் . இப்படி வெள்ளிக்கிழமை அழகாய் இனிமையாய் பயணிக்கும் .  ஜிவாஜி அங்கிள் விக் மற்றும் சிவகுமார் அங்கிளின் நவரசத்துக்கும்  ....அதுக்கும் மேலே அதிகமான முக எக்ஸ்பிரெஷன்ஸ் மற்றும் பிற எங்கள் பெரியப்பாக்களின் வயது அங்கிள்கிளின் உ :) டான்ஸ் , விஜயா ஆன்ட்டி  சரிதா சுஜாதா ஆன்ட்டிஸ் மற்றும்  சரோ ஆன்ட்டி பிறரின் முக அசைவுகளை வெகு க்ளோஸப்ப்பா வர காணொளிகளை என அனைத்தையும் ஸ்ரீராம் போட்டு அப்பப்போ சின்னபிள்ளைங்களான என்னைப்போன்றோரை பயம் காட்டறார் :) ஆனா இன்று காணொளியில்லாமல் சகலகலா வல்லவரின் மிக அழகிய  இனிய கருத்துள்ள தாலாட்டு பாடல் spb சித்ரா குரல்களில் இந்த நாளை அழகாக்கியது என்றால் மிகையில்லை . இன்றைய பதிவில் நடமாடும் விக்கிப்பீடியா நெல்லைத்தமிழன் துரை அண்ணன் போன்றோர் நிறைய தகவல்களை சொல்லி சென்றார்கள் . ஸ்ரீராமுக்கு ஒரு வேண்டுகோள் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர்  ஏஞ்சலோட சித்தப்பா ரஜினி அங்கிள் ,அரவிந்த்சாமி ,பிருத்திவிராஜ் சுகுமாரன் நிவின் பாலி தல அஜித் , போன்றோரின் பாடல்களை அவ்வப்போது தேர்வு செய்து பகிர சொல்லியிருக்கிறார் :)  

வெள்ளிக்கிழமை பின்னூட்டங்கள் = 136

எழுதி முடித்து வாசித்தால்  மிக நீளமாக எழுதி விட்டேனோ என தோன்றியது .எனது விமரிசனத்தில்  நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள் :) விமரிசனம் எழுத வாய்ப்பளித்த ஸ்ரீராமுக்கு நன்றிகள் .


தொடர்ந்து பயணிப்போம் ..


191 கருத்துகள்:

  1. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், என்ன யாரையும் காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... நல்வரவு, வணக்கம்.

      கால்வலி தேவலாமா?

      நீக்கு
    2. ஶ்ரீராம் .. எனக்கு டாக்டர் பெயின் கில்லர் எழுதிக் கொடுத்து ஐந்து நாள் போட்டுக்கோங்க. செப்பல் வந்த உடனே நிறுத்திடுங்க, தொடர்ந்து எடுத்துக்காதீங்கன்னார். எனக்கு மாத்திரை சாப்பிடவே பயம் (புது பிரச்னைல கொண்டுபோய்விடுமனு). ஒரு நாள் உபயோகப்படுத்தினதுல வலி மாயம். நான் மாத்திரை ஸ்டாப் பண்ணினேன். இரண்டு நாள் கழித்து வலி வந்தாலும் கண்டுக்கலை.

      கீசாமேடம் ஆயுர்வேத மாத்திரையாயிருக்கும். அது பெயின் கில்லர் போல வேலைபார்க்காது. ரெண்டு வாரம் கழித்துதான் அவங்கள்ட நீங்க கேட்கணும்

      நீக்கு
    3. ஶ்ரீராம், ஒரு வாரமாவது ஆகணும் இல்லையா ? அதுக்குள்ளே கேட்டால் எப்பூடி? ஆனாலும் அன்னிக்கு வலிச்ச வலி இல்லை! குறைஞ்சிருக்கு!

      நீக்கு
  2. ஙே!!!!!!!!!!!!!! நிஜம்மா யாரும் வரலையா? யாரானும் சீக்கிரமா வாங்கப்பா! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும் இல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் சந்தோஷமா தூங்கிகிட்டு இருக்காங்க! ஸ்வீட் ட்ரீம்ஸ்!

      நீக்கு
    2. அது என்னவோ சமயங்களில் இப்படி ஆகிவிடும். பயப்படாதீர்கள்.. யாராவது வந்தால் உடனே நாங்கள் யாராவது இங்கு வந்துவிடுவோம்! ஆட்டோமேட்டிக்!

      நீக்கு
    3. கீசா மேடம்- அதிகாலைல எழுந்து எலுமிச்சை சாதம், வெண்டை பச்சிடி, மேங்கோ மில்க் ஷேக் பண்ணிட்டு, சனிக்கிழமை கோவிலுக்கு விளக்கேற்றப் போய், இணையம் வர நிறைய நேரமாகிடும்.

      படி ஏறுவதற்கு பயப்படும் நீங்க, தனியா இருக்கவும் பயமா கீசா மேடம்?

      நீக்கு
    4. நெல்லைத் தமிழரே, படி ஏற பயம் இல்லை. ஏறவே முடியலையேனு வருத்தம்! மற்றபடி நான் தனியா இருக்கிறதாச் சொல்லுவது, யாரும் வரலையானு கேட்பது எல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா உள உளாக்கட்டிக்குனு ஶ்ரீராம், கௌதமன் எல்லோருக்கும் தெரியும். :))))

      நீக்கு
    5. //உளாக்கட்டிக்குனு ஶ்ரீராம், கௌதமன் எல்லோருக்கும் தெரியும்// - ஏன் என்னை விட்டுவிட்டீர்கள்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  3. ஏஞ்சலோட கருத்துக்கள் பலவற்றோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாய் செவ்வாய்க்கிழமைக் கதையில் அந்த ஓட்டல் பையருக்குப் பணம் கொடுத்தது! அது என்னையும் உறுத்தியது. கருத்திலும் சொல்லி இருப்பேன். அது என்னமோ சரியில்லை!

    பதிலளிநீக்கு
  4. உண்மையாகவே உடல்நலக்குறைவுடன் மனம் நொந்து இருந்த என்னை இந்த இணையத்தின் பக்கம் திருப்பி விட்டது எங்க பையர் தான். 2005 ஆம் வருடம் ஆரம்பித்தது. தொடருகிறது. ஏஞ்சல் சொல்லி இருப்பது சரியே. இங்கே வந்து அனைவரையும் பார்த்துப் பேசி பதிவுகளையும் படித்துவிட்டுச் சென்றால் ஓர் புத்துணர்வு கிடைப்பது உண்மையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் எங்கள் பிரச்னைகளுக்கும் - குறிப்பாக எனக்கு - ஒரு வடிகால் இந்த தளமும் நீங்கள் எல்லோரும்.

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா அண்ட் ஸ்ரீராம் ..எல்லா நாளும் ஏதாவது ஒரு அசதி வரும் அதை போக்கடிக்க இங்கே வந்தா; உற்சாகத்தை எடுத்துக்கொண்டு போகலாம் :) நாமெல்லாம் ஒரே அலைவரிசையில் இருப்பதால் சந்தோசம் கூடுகிறது

      நீக்கு
    3. ஆமாம் கீதாக்கா அவ்ளோ நேர்மையாளர் தாசில்தார் மன்னிப்பு மட்டும் கேட்டிருந்தா உயர்ந்திருப்பர் நம் மனதில் .அவரும் சராசரி மனிதர்தான் . இந்த சம்பவத்தால் கோபம் குறைந்து தன்னிலை உணர்ந்தார் அது நன்று

      நீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருமே வரலை! எனக்கு பயம்ம்மா இருக்கு, நான் போறேன். ஏஞ்சலோட அழகிய விமரிசனத்தைப் படித்தேன். எல்லாமே நல்லா இருக்கு. ரொம்பச் சரியாச் சொல்லி இருக்காங்க! அவங்களுக்கு மேலும் மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நிறைய இருக்கு. அருமையான விமரிசனத்தை அளித்ததுக்கு வாழ்த்துகள் ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் சார்பிலும் ஏஞ்சலுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஹாஹா யாருப்பா அது கீதாக்காவை தனியே விட்டு பயம்காட்டிவிடறது :) கீதாக்கா கண்ணு மூடாம எங்க டைம் 12 வரைக்கும் விழிச்சி பார்த்தேன் நடு இரவில் இங்கே வர :) ஆனாலும் கண்ணு அசதில மூடிடுச்சி
      மிக்க நன்றி கீதாக்கா :)

      நீக்கு
  6. எங்கே போனீங்கப்பா எல்லோரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று ஒரு குடும்ப விழா - அதற்குச் சென்று, அருமையாக சாப்பிட்டு, தூங்கிக் கொண்டிருப்பார்கள் எங்கள் ஆசிரியர் குழு. என்னால் அங்கு செல்ல இயலவில்லை.

      நீக்கு
    2. அட.... அப்பவே பிடிச்சு மாய்ந்து மாய்ந்து மேலே பதில் கொடுத்துக்கிட்டிருக்கேன் கீதாக்கா... சித்தமேலே பாருங்க! கௌ அங்கிள் வேற வந்துட்டார்...

      நீக்கு
    3. காலம்பரேயே பார்த்துட்டேன் ஶ்ரீராம், அதுக்குள்ளே பால்காரர் வந்துட்டார்! கணினியை மூடிட்டேன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. பெரம்பலூரில் மேலமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பணி சிறப்பு. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    //டைம்பாஸ் என்கிற பேஸ்புக் பக்கத்தில் பார்த்த புகைப்படம். விளக்கம் தேவை இல்லை.//

    முதியவருக்கு உதவி செய்யும் காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.


    ஒடிசாவில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., - எம்.பி.,.க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
    தொடர வேண்டும் அவர் சேவைகள்.

    தெர்மாகோல் வீடு பற்றி புதியதலைமுறையில் ஒளி பரப்பியதை பார்த்தேன்.இங்கும் படித்தேன்.கோடை காலத்தில் வீடு நன்றாக இருக்கும்.
    அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  9. ஏஞ்சல் என்றால் ஏஞ்சல்தான்...

    நல்லதொரு விமரிசனம்...
    வானவில்லின் அழகுபோல...

    எங்கள் பிளாக் பெற்றிருக்கும்
    ரத்தினங்களுக்குள் தானும் ஒருவர் என்பதை நிரூபித்து விட்டார்!..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா அண்ட் கௌதமன் சார் :)
      என்னை பாராட்டும்போது இந்த அதிரடி பூனையை காணோம் பாருங்க :))
      @துரை அண்ணா நாம் ஒரு இடத்துக்கு புதிதா போகும்போது நம்மை இன்முகம் காட்டி வரவேற்றால் மனசுக்கு சந்தோஷமாகிடும் அப்படிதான் இங்கே அனைவரையும் அனைவரும் முதல் வருகைபுரியும்போது வரவேற்கிறார்கள் அதுதான் தொடர்ந்து இங்கேயே நம்மை ஒன்ற வைக்கிறது .இங்குள்ள அனைத்து அன்பு மனங்கள் வாழ்க .

      நீக்கு
  10. நல்ல மனங்களை எடுத்துக் காட்டிய
    இன்றைய தொகுப்பு அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  11. //வானவில்லின் ஏழு வண்ணம் காணக்காண இன்பமே
    எங்கள் பிளாகில் ஏழுநாளின் பதிவுகளும் இன்பமே :)//

    தேவதையால்தான் இது போல் சொல்ல முடியும்.

    அழகான விமர்சனம். மலர் தோட்டத்தில் அழகான மலர் ஏஞ்சல். நல்ல விமர்சனம், புதுமையான விமர்சனம், பின்னூட்டங்கள் எண்ணிக்கை எல்லாம் போட்டு அசத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    //சமீபத்தில் நான் மன ஆரோக்கியம் நலம் சம்பந்தப்பட்ட துறையில்தான் வேலைக்கு சேர்த்துள்ளேன் .வேலையில் சேருமுன் மென்டல் ஹெல்த் பற்றிய புரிதலுக்காக பல்வேறு விஷயங்களை படிக்க நேரிட்டது அதில் மிக முக்கியமானது , பலர் பேசுவதற்கு ஒருவருமின்றி தனிமையில் இருக்கிறார்கள் .தனிமை அதிகமாகும்போது மனநல குறைபாடு இன்னபிற நோய்கள் அண்டுமாம் .//

    உங்கள் மென்மையான மனதுக்கு ஏற்ற வேலை, வேலையை சிறப்பாக செய்வீர்கள், வாழ்த்துக்கள் ஏஞ்சல்.
    நீங்கள் சொல்வது உண்மைதான் ஏஞ்சல். மூப்பியல் வைத்தியர் நடராஜன் அவர்கள் சொல்வது இதுதான் முதியவர்களிடம் பேசுங்கள். அவர்களின் கைகளை பிடித்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் பேசுங்கள் அது போதும் என்று. சில முதியவர்கள் தாங்கள் கவனிக்கபட வேண்டும் என்பதற்காகவே தங்களுக்கு ஏதாவது நோய் இருப்பதாய் கற்பித்து சொல்லுவார்களாம், குழந்தைகள் போல. முதியவர்களும் குழந்தைகள் ஆகி விடுவார்களாம்.

    நானும் முதியவள் தான். இந்த மலர்த்தோட்டத்தை பார்த்து மலர்களுடன் பேசி மகிழும் போது மனவலி, உடல்வலி தெரிவது இல்லைதான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. வாங்க கோமதி அக்கா .இங்கே அனைவரும் சொல்வதே மெண்டல் well being மிக முக்கியமானது .மனதை சந்தோஷமா வைக்கணுமாம் நெகட்டிவ் எண்ணங்கள் வரவிடக்கூடாது இப்படி நிறைய சொல்லறங்க .நான் வேலை செய்யும் இடத்தில ஒரு பெரியவர் எனக்கு செஸ் விளையாட கற்றுக்கொடுத்தார் :) அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் . நானும் மனமார சந்தோஷா இந்த வேலையை செய்கின்றேன் தற்சமயம் மூன்று நாட்கள் பிறகு நேரத்தை அதிகரிக்க நினைத்திருக்கிறேன் .வெளிநாடுகளில் ஒரு வசதி நமக்கு ஏற்ற நேரங்களை தெரிவ செய்து வேலை செய்யலாம் .மிக்க நன்றி அக்கா

      நீக்கு
    3. நீங்கள் விருப்பமாய் வேலை செய்வது மகிழ்ச்சி ஏஞ்சல்.
      நாம் ஒருவருக்கு கற்றுக் கொடுக்கிறோம் என்பதே மகிழ்ச்சியாக இருக்கும் அந்த பெரியவருக்கு.

      நீக்கு
  12. ஒடிசாவில் வெற்றி பெற்றவர் மினிஸ்டர் ஆகிவிட்டார்.

    ஏஞ்சலின் தொகுப்பு அருமை ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ கில்லர்ஜி :) நீங்க விமர்சனம் எழுதும்போது அந்த கல்கோனா மிட்டாய் வைக்கணும் சொல்லிட்டேன்

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று வீடு மாற்றுகிறோம். இன்னும் சற்று நேரத்தில் ஆட்கள் வந்து விடுவார்கள், அதற்குள் எட்டி பார்த்து விடலாம் என்று வந்தேன்.
    ஒரு தேவதையின் விமர்சனம். Good! கொஞ்சம் நீளம் இல்லையில்லை இனிமேல் இப்படி சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன். ஏழு நாட்கள் விஷயங்களை விமர்சிக்க வேண்டாமா? Good Good!👌👌.
    பிறகு பார்க்கலாம்.
    என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் வளம் அளிக்க வாழ்த்துகள்.

      நீக்கு
    2. வாங்க பானுக்கா :) பிஸியான நேரத்திலும் எட்டிப்பார்த்தற்கு மிக்க நன்றீஸ் :)
      அது எனக்கு குட்டியூண்டா சுருக்கி எழுதவே வராது :))))))))))) பாதி எடிட் செய்து மீதுதான் இது :)
      ஒவ்வொருநாளும் எழுதி வைத்தேன் :) மிக்க நன்றி பானுக்கா

      நீக்கு
  14. அரவிந்தர் அன்னையின் மந்திர மலரில் மஞ்சள் ரோஜாவிற்கு அதிக பலன் இருக்கிறது.

    //அது மணம் வீசி மலர்வதன் மூலம் இயற்கை தனது அன்பை வெளிப்படுத்துகிறது.//

    நிறைவு பகுதியில் ஏஞ்சல் மஞ்சள் ரோஜாவை அளித்து தன் அன்பை தெரிவித்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள் ரோஜாவை சமர்ப்பணம் செய்வதால் நிம்மதி கிடைக்குமாம்.
      விமர்சனம் செய்ய அழைத்த கடமையை சிறப்பாக செய்த நிம்மதியை ஏஞ்சலுக்கு கொடுக்கும் மஞ்சள் ரோஜா.

      நீக்கு
    2. மிக்க நன்றி கோமதி அக்கா அண்ட் கௌதமன் ஸார் :) அந்த மஞ்சள் ரோஜா எங்கள் வீட்டில் பூத்தது இப்பவும் நாலைந்து இருக்கு .
      இலைகள் அடர் பச்சை கலரில் .4 வருடம் முன் நட்ட செடி .
      மஞ்சள் மலர் மகத்துவம் பற்றி அறிந்துகொண்டேன் கோமதி அக்கா .எனக்கு மிகவும் பிடித்த நிறம் :) ஒரு காலத்தில் விதவித ஷேடில் மஞ்சள் சல்வார் அணிவேன் என் மகளுக்கும் சின்னத்தில் மஞ்சள் நிற சட்டைதான் அதிகம் அணிவிப்பேன் .அரவிந்தரின் மஞ்சள் ரோஜா பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றிக்கா ..

      96 படம் பார்த்து மஞ்சள் குர்த்தா ஆன்லைனில் தேடினேன் :) வடிவேலு கூட அந்த கலர் டிரஸ் போட்டு மீம்ஸ் போட்டு மக்கள் அதகளப்படுத்தியதால் சுடிதார் குர்தா ஐடியாவை கைவிட்டேன் :)))))))))))

      நீக்கு
    3. மஞ்சள் குர்த்தா ஆசையை கெடுத்து விட்டாரா வடிவேல்.
      பேரனுக்கும், மகனுக்கும் மஞ்சள் குர்த்தா வாங்கி அனுப்பினேன்.
      எனக்கும் பிடித்த கலர் ஏஞ்சல்.

      நீக்கு
    4. கௌதமன் சாரும் அந்த மீம்ஸ் பார்த்திட்டார் :)
      ஆமம்க்கா :) எல்லாரும் யெல்லோ சுடி வாங்கி போட ஆரம்பிச்சாங்களாம் படம் வந்த புதிதில் :) நான் ஆசையை விட்டுட்டேன் :))

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    பெரம்பலூரில் மேலமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி. ஏற்கனவே அம்புலி ஆற்றில் இந்த பணி குறித்து செய்திகள் படித்தேன்.நீரின் பயன் உணர்ந்து நீரை பத்திரப்படுத்த இந்த சேவைகள் செய்து வரும் இளைய தலைமுறைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    முதியவருக்கு உதவி செய்த காவல் துறையினர் செய்யும் செயலுக்கு பாராட்டுக்கள்.

    ஒடிசா மாநிலத்தில் வெற்றி வாகை சூடியுள்ள ப. ஜா எம். பிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அவரின் எளிமை வியக்க வைக்கிறது. இன்று போல் என்றும் மக்களுக்கு சேவைகள் செய்திட மனம் நிறைந்த பாராட்டுடன் பிராத்தனைகள்.

    தெர்மாகோல் வீடு புதுமையானதாக இருக்கிறது. ஆபத்தில்லாமல், பயன் தரும் பட்சத்தில் சிறப்பானது. இந்த முறையை கண்டுபிடித்து செயலாற்றி வருபவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. OPOS என்றொரு சமையல் வகை இருக்குன்னு .(ஏதோ குட்டியூண்டு குக்கர் படம் இருந்தது கூகிளில் )கேள்விப்பட்டேன் அதை செய்து பார்த்தவர்களும் அச்சமையல் பற்றிய தங்கள் கருத்துக்களை ரெசிபியுடன் பகிர வேண்டுகின்றேன் .//

    என் மருமகள் அதில் சேர்ந்து இருக்கிறாள். கார்த்திகை பொரி உருண்டை அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி அதி விரைவில் செய்து விட்டாள்.
    சின்ன குக்கரில் ஒரு கை தண்ணீர் தெளித்து ஒரு விசிலில் காய் சூப்பராக நிறம் மாறாமல் வெந்து விடும்.
    நான் அந்த வகுப்பில் சேரவில்லை என்றாலும் செய்து வருகிறேன். விரைவில் சமையல் முடிகிறது. வேலைக்கு போகிறவர்களுக்கு உதவியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. நானும் படிச்சேன் இந்த சமையல் முறை பற்றி. ஆனால் புரியலை! அதோடு குக்கர் பயன்படுத்தணும் என்பதால் அதிகம் முயற்சிக்கவில்லை. ஏற்கெனவே அரை மணி நேரத்தில் சமைச்சுடறே! லேட்டாச் சமைக்க ஆரம்பினு சொல்லிட்டு இருக்கார். இது வேறே சீக்கிரமா ஆனா! வெறுத்துடுவார்! :))))

      நீக்கு
    3. மிக்க நன்றி கோமதி அக்கா அண்ட் கீதாக்கா :) அது அமேஸான் பக்கம் காட்டுச்சி இந்த OPOS புத்தகத்தை ஒன்னும் புரியலை .வேலைக்கு போறவங்களுக்கு சுலபம்னு நினைக்கிறன் .இங்கே காஸ் ஹாப் சீக்கிரம் சமையல் ரெடியாகிடும் .அநேகமா பனிக்க சொல்லக்கூடும் இல்லைன்னா கீதா ரெங்கனுக்கு விவரம் தெரிஞ்சிருக்கும்

      நீக்கு
    4. https://youtu.be/
      CW8eVP8mmG4
      மருமகள் இந்த சுட்டியை அனுப்பினாள் ஏஞ்சல் இதில் பார்த்து சமைக்கலாம்.

      நீக்கு
    5. நன்றி அக்கா புக் மார்க் செய்கிறேன்

      நீக்கு
    6. அநேகமா பனிக்க சொல்லக்கூடும்//
      awww typing error பானுக்கா அவசரத்தில் பனிக்கா ஆகிட்டாங்க எச்சூஸ்மீ அக்காவ்

      நீக்கு
  17. ஆஜர்!! எல்லோருக்கும் காலை வணக்கம்....

    கௌ அண்ணா ஞாயிறு ஸ்வீட் ட்ரீம்ஸ் எனக்கில்லை எனக்கில்லை எங்க்கில்லை......என் கணினிக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!

    இன்று கண்டிப்பாக ஏஞ்சலின் விமர்சனமாகத்தான் இருக்கும் என்று என் மனப்பட்சி சொன்னது!! ஏனென்றால் போனவராம் அதிரடியாரின் விமர்சனமாச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!

    ஒவ்வொருகருத்தா வருகிறேன்....என் கணினி சொங்கிப்போயிடாம இருக்கணும்...நேற்று மதியத்திலிருந்து கணினி பிரச்சனை....கரன்ட் வேறு அடிக்கடி கட் ஆவதால் கணினியை மீண்டும் ஓப்பன் செய்தால் ஹேங்க் ஆகும் மீண்டும் மீண்டும் முயற்சித்து....ஹூம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்பியூட்டரே கண்ணுறங்கு !
      காலமெல்லாம் கனவுலகை
      கையருகே கொண்டுவரும்
      கம்பியூட்டரே கண்ணுறங்கு!

      நாளும் நம் நண்பர்களை
      நம் வீட்டிற்கே அழைத்து
      உருவமில்லா காட்சி காட்டும்
      கம்பியூட்டரே கண்ணுறங்கு!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      அழகான கவிதை. குறைந்தது பத்து நிமிடத்தில் உருவான கவிதை. மிகவும் ரசித்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சுத்தம்.. கீதா ரங்கன் - கம்ப்யூட்டர் ஒழுங்கா வொர்க் பண்ணணும்னு ஆசி கொடுக்காம, கம்ப்யூட்டரே கண்ணுறங்குன்னு தூங்கப் பண்ணறார் கேஜிஜி சார். இன்னைக்கு வந்து நீங்க கருத்து போட்ட மாதிரிதான்

      நீக்கு
    4. ஹாஹா :) @கௌதமன் சார் ..கம்பூட்டரை தாலாட்டு பாடி தூங்க வச்சிட்டீங்க .அதுவும் பாவம்தான் ரெஸ்டில்லாம நமக்கு வேலை செய்யுது

      நீக்கு
    5. @கீதா ரெங்கன் :) ஹாஹா நானும் அதிரா வுக்கு அடுத்து நானாகத்தான் இருக்கும்னு நினைச்ச வெளியில் மயில் வந்தது :)

      நீக்கு
    6. நினைத்த வேளையில் /// SSSS HAPPAA

      நீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    சனிக்கிழமை நல்ல செய்திகளைக் கொண்டு வந்திருக்கிறது.

    பெரம்பலூரில் மேலமாத்துார் கிராமத்து சேவை பெரியது.
    அங்கு தூர் வாரி, பெரிய நீர்த்தேக்கம் வர வாழ்த்துகள்.

    ஒடிஷா எம் பி அவர்களின் எளிமை மனத்தை நிறைக்கிறது.
    நம்பிக்கை மேலிடுகிறது.
    டைம்பாசில் நல்ல போலீஸ்காரர்களின் நற்குணம்
    மகிழ்ச்சி தந்தது.

    தெர்மகூல் சூட்டைக் காப்பாற்றும் என்று நினைத்தேன்.
    இந்த வீடு குளிர்ச்சி தருகிறதா.
    அருமையான ஏற்பாடு. பத்துலட்சம் ரூப்பாயில் வீடு அது எல்லா சீதோஷ்ணத்திலும் நிலைத்து
    நிற்கிறது என்றால் மிகுந்த பாராட்டுக்குரியது.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. அன்பு ஏஞ்சலின் விரிவான ,யாரையுமே போற்றூம் குணம் அவர் செய்த விமரிசனம் முழுவதும் பரவி இருக்கிறது.
    மலர்களும் ,மலர் போல் அடுக்கி இருக்கும் கருத்துகளும் எல்லோரும் நினைப்பதே.
    ஆனால் இது போல அருமையாக எழுதுவது மிகக் கடினம். அன்பு ஏஞ்சல் ம்னம் நிறை வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்லியிருப்பது சரியே!

      நீக்கு
    2. மிக்க நன்றி வல்லிம்மா அண்ட் கௌதமன் சார் :)
      @வல்லிம்மா எப்போ லண்டன் வருவீங்க ? முகப்புத்தகத்தில் நாள் இல்லாததால் உங்களுடன் அதிகம் பேச முடிவதில்லை .மிக்க நன்றி வல்லிம்மா மனசில் தோணுவதை அப்படியே எழுதிட்டேன் :)

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இந்த வார விமர்சனமாக சகோதரி ஏஞ்சல் அவர்கள் மிகவும் அழகாக அருமையாக விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு முதலில் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    /சமீபத்தில் நான் மன ஆரோக்கியம் நலம் சம்பந்தப்பட்ட துறையில்தான் வேலைக்கு சேர்த்துள்ளேன் .வேலையில் சேருமுன் மென்டல் ஹெல்த் பற்றிய புரிதலுக்காக பல்வேறு விஷயங்களை படிக்க நேரிட்டது அதில் மிக முக்கியமானது , பலர் பேசுவதற்கு ஒருவருமின்றி தனிமையில் இருக்கிறார்கள் .தனிமை அதிகமாகும்போது மனநல குறைபாடு இன்னபிற நோய்கள் அண்டுமாம் ./

    மிகவும் மென்மையான மனம் உடையவர்கள்தான் இந்த வேலைக்கு செல்ல முடியும். மென்மையான மனதை மேலும் பக்குவபடுத்திக் கொள்ள இந்த வேலையில் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இந்த விதத்தில் இதில் சேர்ந்து பணியாற்றி வரும் சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்த விமர்சனமும் அமைதியான நீரோடை போன்று மிக அழகாக எழுதியுள்ளார். இந்த எழுத்தில் மயங்கி நான் 6 மணியளவில் எழுந்தவுடன் முதலில் விமர்சன பகுதியை ஒன்று விடாமல் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்ததில் எ. பியின் கதவை கவனிக்கவில்லை. (வாசலில் இன்று அதிசயமாக யாருமில்லாத எ..பி யின் கதவை நானும் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுடன் சேர்ந்து தட்டியிருப்பேன். இல்லையெனில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுடன் சேர்ந்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்திருக்கலாம்.) அவ்வளவு சுவையாக என்னை ஈர்த்து வைத்துக் கொண்டிருந்த எழுத்துக்கள்.

    உண்மைதான்.! இங்கு வந்து (எ. பி) பதிவுகள் படித்து கருத்துக்கள் கோடுத்து ஒரு திருப்பு முனையாக இருந்து வருவதில் என் வாழ்வின் சந்தோஷங்களும் குறையாது இருக்கின்றன. நன்றி எ. பிக்கும்.எ. பி ஆசிரியர் பெரு மக்களுக்கும்.

    ஆரம்பத்தில் இயற்கை ரசிப்பான வான வில்லுடன் தொடங்கி, அழகுள்ள மலர் வரை நாங்கள் கண் விழித்ததும் கண்டு ரசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி ஏஞ்சல். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இங்கு வந்து (எ. பி) பதிவுகள் படித்து கருத்துக்கள் கோடுத்து ஒரு திருப்பு முனையாக இருந்து வருவதில் என் வாழ்வின் சந்தோஷங்களும் குறையாது இருக்கின்றன. நன்றி எ. பிக்கும்.எ. பி ஆசிரியர் பெரு மக்களுக்கும். // நன்றி, நன்றி.

      நீக்கு
    2. ஆஹா ! விரிவான கருத்திற்கும் பார்ட்டியதற்கும் மிக்க நன்றி கமலா அக்கா .
      நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் பல வருடங்கள்முன் மிகவும் ஸ்டெரெஸ் ஆன நிலையில் இன்ட்லி வழியே இங்கே வந்து ஒரு பின்னூட்டம் அளித்தேன் அது ஸ்ரீராம் ஒரு மஞ்சள் மலர் படத்தை போட்டு இது என்னன்னு கேட்டிருந்தார் அப்போ எல்லாரும் பின்னூட்டத்தில் கலகலப்பா பேசினது பார்த்து ஆச்சர்யமா ஹாப்பியா இருந்தது மனசுக்கு உற்சாகம் அளித்தது .
      எங்களபளாக் அனவைருக்கும் இன்னும் நிறைய சந்தோஷங்களை வழங்கட்டும் .எல்லாரும் எல்லாரையும் சந்தோஷமா வைப்போம் .
      @கமலா அக்கா .ஒவ்வொரு நாளின் நிறமும் VIBGYOR வானவில்லின் நிறங்களை வைத்து தலைப்பு வைத்தேன் :)

      நீக்கு
  21. விமர்சனம் என்ன மர்மக்கதையா? யார் எழுதறதுன்னு நாங்களே கண்டுபிடிக்கணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் ... -
      அப்படிங்கறது...னாலயா!?.....

      நீக்கு
    2. நானும் ஆரம்பத்தில் கொஞ்சம் திணறினேன். பிறகு கண்டுபிடித்தேன்!

      நீக்கு
    3. ஹாஹாஆ :) 5 மார்க் கேள்விக்கு கட்டுரை வடிவில் ஆன்சர் எழுதறவங்க ரெண்டே பேர்தான் அது ஒருவர் கீதா ரெங்கன் :) மற்றவர் நான்தான்
      எங்க வீட்டு பூசார் படங்களை போட்டிருந்தா கண்டுபிடிச்சிருப்பாங்க எல்லாரும் :))

      நீக்கு
    4. ஏஞ்சல்! நீங்க தான் எனப் படிக்கும் முன்னரே மலர்களைப் பார்த்துக் கண்டு பிடிச்சுட்டேனே! நானும் 5 மார்க் கேள்விக்குக் குறைந்த பட்சமாகப் பத்துப் பக்கமாவது எழுதுவேன்.

      உங்க விமரிசனம் அருமையாக உள்ளது அந்த மலர்களைப் போலவே மென்மையாக! உங்கள் புது வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடு வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் பயனுள்ள பொழுதாகக் கழித்து வருவதற்கு.

      நீக்கு
    5. ஹாஹா :) hi five கீதாக்கா :) என் மகளும் அப்படிதான்க்கா :) அது சொல் வந்ததை முழுதா சொல்லணுமில்லையா :) அதான் விளக்கமா எழுத்திடறோம் நாம் .வேலை மிக சந்தோஷமா செல்கிறது நான் படித்த துறை வேறு எனக்கு முதலிலாவர்கள் சொன்னது டூ not ஜட்ஜ் but ட்ரை டு அக்செப்ட் . .விரைவில் ஒரு பதிவு எழுதணும் அதுபற்றி :)
      மலர்கள் வைத்து கண்டுபிடிச்சீங்களா :) நன்றீஸ்

      நீக்கு
  22. ஒடிசா எம்.பி. ஆஹா! டைம் பாஸ் காவலர்கள் ஓஹோ! தூர் வாரும் இளைஞர்கள் பேஷ்!பேஷ்!

    பதிலளிநீக்கு
  23. வடிஷா எம் பிஐப் பற்றி ஏற்கனவே படித்தேன். நல்லவர்கள் எளியவர்கள் சமூகத்துல இவ்வளவு அருகிவிட்டார்களேன்னு நினைத்துக்கொண்டேன். அவருக்கும் மந்திரி பதவி கொடுத்தது பெருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  24. விமர்சனம் படித்துவிட்டேன். பிறகு வந்து கருத்திடறேன் ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சொல்ல வருவார் (என்று எதிர்பார்க்கிறேன்)

      நீக்கு
    2. இதோ வந்துவிட்டேன் @ நெல்லை தமிழன் அண்ட் கௌதமன் சார் .
      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் செவ்வாய் கதை ஆராய்ச்சி செய்தபோதுதான் உங்கள் கதை ஒன்று வியாழனில் வந்து அதற்கு நீங்கள் படமும் ம் வரைந்தது பார்த்தேன் :)

      நீக்கு
  25. 1,2 & 4 செய்திகள் : நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

    சகோதரி ஏஞ்சலின் அவர்களின் விமர்சனம் உற்சாகம்...!

    பதிலளிநீக்கு
  26. //ஏற்றி வைத்த சிம்மாசனம் சரிந்தது போலிருந்தது// நிறைய பேர்கள் குமார் அவர்களின் கதையில் அவர் பணம் கொடுத்ததை லஞ்சம் என்று கூறியுள்ளனர். ஆனால் எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை. அன்பால் கொடுத்தது என்று அவரே கூறியிருந்தார்.
    புராணங்களில் கூட பார்த்திருக்கிறோமே முதலில் கோபத்தால் சாபம் கொடுத்த முனிவரே பின்னர் மனம் மாறி வரும் தருவார். தன் தவறை உணர்ந்து அதற்கு செய்யும் பிராயச்சித்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைத்ததற்கு நன்றி.

      நீக்கு
    2. @ பானு அக்கா ..சரி அன்பால் கொடுத்திருந்தாலும் அதை வேறொரு நாள் கொடுத்திருக்கலாம் அன்று மன்னிப்பை கேட்டுட்டு .அது அனைவருக்கும் அவர் மேல் ஒரு வெறுப்பை ஒரு செக்கண்டில் ஏற்படுத்திடுச்சே வர வீட்டில் கோபப்பட்டு சிறு குழந்தையை கூட திட்டினபோதும் பெரிசா எடுக்காத மனம் ,லஞ்சம் வாங்காதவர் லஞ்சம் கொடுக்கிற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் :)என்று பெருவாரியானோர் நினைத்தோம் அக்கா .மிக்க நன்றி பானுக்கா

      நீக்கு
  27. பதில்கள்
    1. நன்றி தெரிவிக்க அவரை அழைக்கிறோம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி மாதேவி :)
      உங்கள் குறிப்பு பார்த்து செய்த பருத்தி துறை தோசை இன்னமும் சுவை நாவில் இருக்கு
      @ கௌதமன் சார் வந்துவிட்டேன்

      நீக்கு
  28. அனைவருக்கும் சனிக்கிழமை காலை வணக்கம் .லண்டனில் இப்போது காலை நேரம் 07:41

    பதிலளிநீக்கு
  29. இதோ வந்துவிட்டேன் பதிவை வாசித்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  30. \காளியார்மடம்" அட்ரஸ் மற்றும் கணினி பழுதானதுக்கு புவனஜோதி மந்திரம் ,தேசிக்காய் உருட்டல் என ஆலோசனை கிடைக்குமிடமும் எங்களுடைய எங்கள் பிளாக்தான் :))))\அனைத்டும் லலந்து கட்டும் இடம் ஆனால் அரசியல் என்றால் காததூரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார் :) மிக நன்றி வருகைக்கும் கருத்திற்கும் .

      நீக்கு
    2. ஆஆங்ங்ங் விடமாட்டேன்ன் அஞ்சு இன்று மாட்டீஈஈஈஈஈஈ:)) அஞ்சு பதில் சொல்லுங்கோ ஜி எம்பி ஐயா கொஸ்ஸன் கேட்கிறார்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நல்லவேளை போன சனி.., ஜிஎம்பி ஐயாவுக்கு இக்கொஸ்ஸன் நினைவில வரல்ல:)) அதென்னமோ அஞ்சுவைப் பார்த்ததும்தான் வந்திருக்குதூஊ ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. ஹலோ மியாவ் நல்லா கண்ணை திறந்து பாருங்க கேள்விக்குறி இல்லியே

      நீக்கு
  31. ஆஆஆஆ மீ லாண்டிங்ங்ங்ங்.. என்னாதூஊஊஊ இன்று அஞ்சுவோஓஓஓஓஓ இதை ஓல்ரெடி சொல்லியிருந்தா மீ அம்பேரிக்காவுக்குப் போயிருப்பேனெல்லோ ஹா ஹா ஹா.. அழகான வானவில் கண்ணில தெரியுதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோவ் மியாவ் உங்க ஸ்கொட்லான்ட் வானவில்லை சுட்டு போடத்தான் நினைச்சேன் :) அப்புறம் மனசு வரலை ஹாஹா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா பொய் சொல்லப்பிடா:) என் அநாமிகா விட்டிருக்க மாட்டா:)) பயந்துபோய் திரும்பி வந்திருப்பீங்க:))

      நீக்கு
    3. ஹையோ ஹையோ ஒரு kfc சிக்கின படம் காட்டினா உங்க அனாமிகா பிளாகையே தூக்கி கொடுப்பா தெரியுமா

      நீக்கு
  32. //எந்த இடம் எந்த செயல் நமக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருகிறதோ அங்கே நாம் இருக்க வேண்டும் . தொடர்ந்து
    4 நாட்கள் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலைன்னா மனசுக்கு சோர்வு உணர்வு ஏற்படுது :) இதற்கு நானே சாட்சி :)
    //

    இது உண்மைதான் அஞ்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ் ஆஆஆ என்னோடு அக்ரி செய்ஞ்சிடுச்சே குண்டு பூஸ் :) தேங்க்ஸ் tom :) வித் லவ் from ஜெர்ரி

      நீக்கு
  33. ///இங்கே வருகை தரும் ஒவ்வொருவருக்கும் நிறைய நல்ல விஷயங்கள் தெரியும் சமையல், கோலம் ,இயற்கை மருத்துவம், நல்ல அறிவுரை கூறல் ,கதை எழுதுதல்,கவிதை ஓவியம் என எல்லாருமே பன்முகத்திறமையாளர்கள்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கம்பபாரதம் பற்றி எல்லாம் ஜொள்ளவே இல்லை:)).

    //மற்றும் கணினி பழுதானதுக்கு புவனஜோதி மந்திரம் ,தேசிக்காய் உருட்டல் என ஆலோசனை கிடைக்குமிடமும் எங்களுடைய எங்கள் பிளாக்தான் :)))) ///
    ஹா ஹா ஹா ஹையோ இதனாலதான் இங்கின தனியே நிக்க கீசாக்கா பயப்பிடுறவவோ:)) இனி நானும் தனியா எல்லாம் இங்கின வர மாட்டேன் ஜாமீஈஈஈஈ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அந்த கம்ப பாரதம் இங்கே வந்திருந்தா ஹைலைட் செஞ்சி போட்டிருப்பேன் :) அது தப்பிட்டிங்க உங்க பக்கம் வந்ததால் .அந்த புவன ஜோதி மந்திர உரிமையாளர் நீங்கதானே :)

      நீக்கு
  34. //பின்னூட்டத்தில் கார் எண் பற்றி சிலர் குழம்பியது RTO ரெஜிஸ்ட்ரேஷன் முதல் நான்கு எழுத்தை மட்டும் கவனித்ததாலோ ?? //

    பொதுவாக எல்லோரும் ஆரம்பத்தை மட்டும்தானே பார்ப்போம். ஆனா நான் எப்பவும் நம்பர் பார்த்துக் கண்டுபிடிப்பதில்லை, காரினுள் இருக்கும் அடையாளங்கள் மூலமே கண்டு பிடிப்பேனாக்கும்:)).. ஏனெனில் எனக்கு நம்பர் எதுவும் பாடமில்லை:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நான் இதுக்குன்னே கணவருக்கு ஹேண்ட்மேட் கார் ஹேங்கர் செஞ்சு மிரரில் மாட்டி விட்டிருக்கேன் :) ஒருநாள் இன்னொரு காரை திறக்க போய்ட்டார் :)

      நீக்கு
    2. நான் என் பையனுடன் என் ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு நடந்துபோனேன். (பஹ்ரைனில்). ஆபீஸ் பக்கத்தில் ஒரு காரைப் பார்த்துட்டு என் பையனிடம், 'பாருடா.. நம்ம கார் மாதிரியே இங்க ஒண்ணு நிக்குது. நம்மள மாதிரியே நீட்ட வச்சிருக்கான்" என்றேன். அவன்... 'அப்பா..அது நம்ம கார்தாம்பா. உள்ள திராட்சைமாதிரி தொங்க விட்டிருக்கீங்களே' என்றான். அப்போதான், இன்றைக்கு ஆபீசுக்கு கார் எடுத்துட்டு வந்தோம் என்பதே ஞாபகம் வந்தது. வீட்டிலிருந்து 7 நிமிட நடை தூரம் என்பதால், பெரும்பாலும் கார் எடுத்துட்டு வரமாட்டேன் (விசிட்டர்ஸ் யாரேனும் வந்தாலோ இல்லை வேறு லொகேஷனுக்கு போகணும்னாலோதான் கார் எடுத்திட்டு வருவேன்)

      நீக்கு
    3. ஹாஹாஆ :) என் கணவருக்கும் இந்த குழப்பம் அடிக்கடி வரும் :) இன்னிக்கு டெஸ்க்கோ போனப்போ லேண்ட்மார்க் அடையாளலாம் சொல்லியும் அவரால் கண்டுபிடிக்க முடிலா .பொண்ணு விழுந்து விழுந்து சிரிச்சா :)

      நீக்கு
  35. //.(ஏதோ குட்டியூண்டு குக்கர் படம் இருந்தது கூகிளில் )//
    குட்டிக் குட்டி மண் பாத்திரத்தில் ஒருவர் சமைக்கிறார் அதைச் சொல்றீங்களோ.. அதைப் பார்க்கவே பிடிக்கவில்லை எனக்கு:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை மியாவ் அதி 2 லிட்டர் குக்கராம் அதில் சமைக்கிறாங்க அநேகமா கீதா ரெங்கன் க்ளியரா சொல்வார்னு நினைக்கிறேன்

      நீக்கு
  36. //கோமதி அக்கா பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார் ஏற்கனவே ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ரெசிப்பி போட்டியில் தான் பங்கேற்றதாக ////

    ஆங்ங்ங்ங் அதிராவுகு அதிலதான் அழகிய காண்ட்பாக் அதுவும் ஒரெஞ் கலரில கிடைச்சது ஜல் அக்காவிடமிருந்து:)) ஹையோ அந்தப் படத்தை அஞ்சுவுக்கு அனுப்பாமல் விட்டிட்டனே:)..

    //பேச்சிலர் ரெசிப்பிபோட்டியில் 4வது பரிசு வாங்கிய மேதகு ஸ்கொட்லான்ட் பூனையார்//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கேட்டினமோ கேட்டினமோ அது எத்தனையாவது பரிசு என:)) ஹையோ சும்மா இருப்போருக்கெல்லாம் நியூஸ் வாசிக்கிறாவே பழனி முருகா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா எல்லாரும் உங்களுக்கு முதல் பரிசான்னு நினைச்சி யாருக்கும் chest பெயின் ப்ரெஷ்க்ஷர் ஏதும் ஆகிடக்கூடாதேன்னு நல்லெண்ணத்தில் சொல்லிட்டேன் :)))))))))))))

      நீக்கு
  37. ///புதன்கிழமை கேப்டன் கௌதமன் ///
    ஆஆஆஆஆஆஅ கெள அண்ணன் எப்போ கப்டன் ஆனார்ர்ர்ர்?:)) ஜொள்ளவே இல்லை:)) ஹா ஹா ஹா அதென்னமோ உண்மைதான் அஞ்சு... புதன் கிழமை என ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்துது பழைய போஸ்ட்களைப்பார்த்தால் 25 கொமெண்ட்ஸ் என்பதே பெரிய விசயம்போல தெரியுது.. ஆனா இன்று கெள அண்ணனாலயே நம்ப முடியாதளவு வளர்ச்சி... இதன் உழைப்புக்கு கப்டன் பதவி கொடுக்கத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேப்டன் - அவரின் இரண்டு கொம்புகளை (இரட்டைக் கொம்பு) முறித்துவிட்டால் கப்டன். விவரமாத்தான் இருக்கீங்க!

      நீக்கு
    2. ஹாஹ்ஹா கௌதமன் சார் அது நாம பேசுற மாதிரி எழுதுவதில்லை சொல்லும்போது கப்டன் னு சொல்வோம் ஆனா எழுதும்போது கேப்டனு எழுதுவோம் :)
      @ கௌதமன் சார் இன்று அனைவருக்கும் பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி யூ ஆர் எ ரியல் captain :)

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கொம்பில்லாத கப்டன்:)) அதாவது தலைக்கனமில்லாத என பொஸிடிவ்வாக ஜிந்திக்கோணும் ஹா ஹா ஹா:))

      நீக்கு
  38. //ஒரேயொரு சுயதம்பட்டம் அடிச்சிக்கிறேன் அதிரா சத்து பொறுத்துக்கொள்ளவும் :))) //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ மேலே அடிச்சதெல்லாம்:))).

    //நாமெல்லாம் சைக்கிள் ஓட்டினா :) ஸ்கொட்லான்ட் அப்பாவி மட்டும் சைக்கிள் ஓட அதுபின்னாடி ஓடியிருப்பார் போல //
    ஹா ஹா ஹா உங்களுக்கொரு உண்மை சொல்லியே ஆகோணும் .. எனக்கு கடசிவரை அது என்ன என்பதும் ஏன் ஓட எனப் பேசுகிறார்கள் என்பதும் புரியவே இல்லை, கடசியில் யாரோ ஏ அண்ணன் கொமெண்ட்டோ என்னமோ பார்ஹ்ட்த பின்னர்தான்.. ஆவ்வ்வ்வ்வ்வ் இதுவோ சங்கதி எனக் கண்டு கொண்டேனாக்கும்:)) பிக்கோஸ் நன் எழுதும் டமிலில் எனக்கு அசையாத நம்பிக்கை:)) ஹா ஹா ஹா.. பொதுவா நாம் பேச்சு வழக்கில்.. சைக்கில் ஓடுவது கார் ஓடுவது எனத்தான் பேசுவோம்.. ட் சேர்ப்பது குறைவுதான்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீயும் மீயும் ஓடிடுறேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    2. அந்த அசையாத நம்பிக்கையை எங்கள் தமிழ் புலவர் நெல்லைத்தமிழன் அசைச்சிட்டாரே மியாவ் :) ஹாஹா
      இன்னும் உங்க நம்பிக்கையை பரட்டறேன் பல வருஷமா தக்காளிக்கு ழி போடறீங்களே :) கடைசி வரைக்கும் ஓடி னு எழுதினது புரியல்லியா லெஜண்ட் :))

      நீக்கு
  39. //ப்புறம் முக்கியமா இதை சொல்லணும் அலஹாபாத் நகரில் ரிஃஷாவை படமெடுக்கும்போது அதில் இருந்த ஆன்டியும் காமெராவில் வந்து முறைத்திருக்காங்க ஸ்ரீராமை :) //

    அதுமட்டுமில்ல:) இப்போ அந்த ஆன்ரிட புளொக்கில் ஸ்ரீராமின்.. ஜன்னலோரப் படம்.. ஐ மீன் பஸ்ல இருப்பது:)) பப்ளிஸ் பண்ணியிருக்கிறாவாம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா ஜண்டைக்கும் போக முடியாதே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா :) ஆனா அந்த ஆன்டி பார்த்தா இல்லை தமிழ் படிக்க கூடியவரா இருந்தா என்னாகும் ஸ்ரீராம் நிலை

      நீக்கு
  40. ஆஆஆஆஆஆஆ மீதான் 100 அண்ட் 111:)).. அழகாக எழுதி முடிச்சிட்டீங்க அஞ்சு.. இந்தாங்கோ உங்களுக்கு..

    http://www.lovethispic.com/uploaded_images/112231-Especially-For-You.gif?1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே கிஃப்ட் தானே நீங்க விமர்சனம் எழுதினபோது ஏஞ்சலின் தந்தாங்க....... இது என்ன..சொல்லிக்கிட்டுச் செஞ்ச மாதிரி இருக்கு?

      நீக்கு
    2. அஞ்சு தந்தது குட்டிப்பூ நெ தமிழன்:).. இது பெரிசூஊஊ:)...
      வீட்டுக்கு விசிதேர்ஸ் வரவு:)... மீ குக் பன்ன போறேன்ன்ன்ன்:)... ஒரு பப்பி கூட்டி வாறாங்க டெய்சியோடு விளையாட:)... டெய்சிப்பிள்ளையின் ரியாக்ஸன் எப்படி இருக்குமோ தெரியல்ல ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. ஆவ் டெய்சி அண்ட் பப்பி :) எல்லாத்தையும் விளக்கமா போஸ்ட் போடணும்

      நீக்கு
  41. குதிரைவாலிதோசை சுட்டுட்டு பதிவு பற்றி பேச வருகின்றேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதைவேணும்னாலும் சுட்டுட்டு வாங்க. ஆனா படங்கள் எடுத்து 'தேவதை கிச்சனை' தூசு தட்டிடாதீங்க. எனக்கு தூசு அலர்ஜி உண்டு.

      நீக்கு
    2. கர்ர்ர் :) இப்போதைக்கு அதுக்கு டெம்பரரி பூட்டு .அநேகமா செவாய்க்கிழமையில் இங்கே வரலாம் :) அதுவும் நான் ரிப்லைஸ் சாயங்காலம் தர தான் முடியும் :) எதிர்பாருங்கள் விரைவில்

      நீக்கு
  42. நட்பு, சந்தோஷம், சீக்கிரம் குணமாகுங்கள் என்று எல்லாவற்றையும் ஒரே மஞ்சள் ரோசா படம் போட்டுச் சொல்லிட்டீங்க. எத்தனைபேர் புரிஞ்சுக்கிட்டாங்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வ் :) இது ஆசைக்கு அழகுக்கு தந்தேன் நீங்களும் கோமதி அக்காவும் சொல்லித்தான் இவ்ளோ விஷயம் இருக்குன்னு தெரியுது ..
      ஆனா இத்தனை மகிமை இருக்குன்னு தெரிஞ்சா தோட்டத்து பூவெல்லாம் போட்டிருப்பேன் :) எல்லாரும் செடியில் ஸ்மைல் செஞ்சிக்கிட்டிருக்காங்க

      நீக்கு
  43. //பேச்சிலர் ரெசிப்பிபோட்டியில் 4வது பரிசு வாங்கிய // - இதுக்கு என்ன அர்த்தம்? அதிரா செய்த குழை சாதம் இல்லைனா கேசரி சாப்பிட்டவங்களுக்கு வாய் ஒட்டிக்கொண்டுவிட்டதால் பேச்சே வரவில்லையா? அதனால்தான் பேச்சு இலர் என்று சொல்லி அதற்காக ஒரு பரிசு கொடுத்தாங்களா? அது என்ன வெப்சைட்? நியாயமாப் பார்த்தா இதுக்கு முதல் பரிசுதானே கொடுத்திருக்கணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த போட்டிநடத்தியது ஜலீலா கமால் . வலையுலகம் முகப்புத்தகத்துக்கு அடியெடுத்து வைக்காத காலம் :)
      லிங்க் தரேன் ஆனா அவங்க பிளாக் திறந்தா ஏதோ ஒரு விட்ஜெட் வைரஸ் கொண்டாருது எனக்கு அதான் யோசிக்கிறேன்

      நீக்கு
    2. /////இதுக்கு என்ன அர்த்தம்? அதிரா செய்த குழை சாதம் இல்லைனா கேசரி சாப்பிட்டவங்களுக்கு வாய் ஒட்டிக்கொண்டுவிட்டதால் பேச்சே வரவில்லையா?//

      haaaaaaaaaahaaa haaa haa ROFL ROFL

      நீக்கு
  44. இன்றைய விமர்சனம் நல்லாவே பண்ணியிருக்கீங்க. படிக்கும்போதே இது ஏஞ்சலின் என்று புரிந்துவிட்டது. பாராட்டுகள் ஏஞ்சலின் (இது நிஜமான பாராட்டு. சிலர் செய்வதுபோல, 'நான் உங்களைப் பாராட்டறேன்..நீங்க என்னைப் பாராட்டணும்னு" ஸ்காட்லாந்து வகையறா பாராட்டு இல்லை. சொல்லிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. காசா பணமா:)).. ச்சும்மா சொல்லிட்டுப் போவதற்கே பலர் கஸ்டப்படுகிறார்கள்:))

      நீக்கு
    2. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் .உங்களுக்கு பிரேமா விலாஸ் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் அனுப்பி வைப்பேன் :) ஆன்லைனில் அனுப்ப வசதி இருக்கா ??
      @CAT ..
      you are jealous:))

      நீக்கு
  45. //கடிதம் எழுதி தபாலில் சேர்க்க மறந்து போனதுண்டா ?// - இதுக்கு அன்றே பதில் எழுதணும்னு நினைத்தேன். நான் பி.எஸ்.ஸி முடித்த சமயம், எங்க அப்பா சொல்லி, ஒரு காம்படிஷன் எக்சாமுக்கு (இல்லை ஏதேனும் அப்ளிகேஷனா ஞாபகமில்லை) டி.டி. வாங்கி போஸ்ட் பண்ணச்சொன்னதால், எல்லா வேலையும் முடித்து போஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தேன். எங்க அப்பா, எவ்வளவு ஸ்டாம்ப் ஒட்டின என்று கேட்டார். ஸ்டாம்பா? நீங்க அதைச் சொல்லவே இல்லையே.. எல்லாத்தையும் கவர் வாங்கி அதுக்குள்ள போட்டு, ஒட்டி, அட்ரஸ் எல்லாம் எழுதி போஸ்ட் பாக்ஸுல போட்டுட்டேன். நீங்க ஸ்டாம்ப் ஒட்டணும்னு சொல்லியிருந்தால் ஸ்டாம்ப் வாங்கி ஒட்டியிருப்பேனே என்றேன். அவ்வளவு புத்திசாலியா அப்போ இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////. அவ்வளவு புத்திசாலியா அப்போ இருந்தேன்.////

      ஆஆஆஆ நசுக்காகச் சொல்றாராமாம்ம்ம்ம்ம் தான் இப்போ புத்திசாலியாகிட்டேன்ன் என ஹையோ வைரவா என்னால முடியல்ல:).. என்னை ஆராவது தூக்கிப்போய்த் தேம்ஸ் கரையில விடுங்கோ:)... தண்ணிக்குள் வாணாம்ம்ம் ரெம்ம்ம்ம்ம்பக் குளிர்:)

      நீக்கு
    2. பிஎஸ்ஸி படிக்கும்போதா :)) ஹாஹாஆ இது டூ இல்லை 100 மச் :))
      அப்படின்னு சொல்ல வரும்போது :) மேலே சொன்னேனே ஒருவர் அவர் மனைவியும் அப்படி வேலை செய்தவர் அதனால் மறப்போம் :)
      ஆனா சில வில்லங்க ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க வேணும்னே சினிமா நடிகை நடிகர் படங்களை பல்க்கா என்வலப்பில் போட்டு ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்புவாங்க :) ஸ்டாம்ப்புக்கும் ப்ளஸ் அந்த நடிகர்கள் படத்துக்கும் சேர்த்து மண்டகப்படி வாங்கியிருக்கேன் :)

      நீக்கு
  46. ஹப்பா வந்துவிட்டேன்...முதல்ல பூஸார் பக்கம் போயி கொஞ்சம் கமென்டிட்டு வந்துருக்கேன் அவங்க பக்கம் கலரா இல்லாமல் வெள்ளையா வந்ததுனாலயோ என்னமோ (பாட்டு முகப்பு எதுவுமே வரலை ஒன்லி பதிவும் கமென்ட்ஸும்) ஒழுங்கா வந்துச்சு. என் கணினி மெமரி பாவம் கஷ்டப்படுது போல ஹா ஹா ஹா

    முதல்ல பாசிட்டிவ் செய்திகள் சொல்லிட்டு தேவதையைப் பார்க்க வரேன்...

    அம்புலி ஆறு அணை அது தூர்வாரப்படுவது ரொம்ப நல்ல விஷயம். மழை பெய்து ஆற்றை நிறைக்க வேண்டும்....!!!

    இரண்டாவது செய்தி சொல்லவே வேண்டாம் படமே சொல்லுது. கருணை மிக்க காவலர்கள்!! பாராட்டுகள்! காக்கி யூனிஃபார்முக்குள்ளும் கருணை உண்டு!!

    ஓடிசா எம் பி பற்றி வாட்சப்பில் வந்திருந்தது. வாழ்த்துகள்! மினிஸ்டர் ஆகிவிட்டார் என்றும். மினிஸ்டர் ஆனாலும் அப்படியே அவர் சேவை தொடர வேண்டும். என்பதே! வாழ்த்துகள்!

    அட! தெர்மகோல் பெயருக்கேற்றபடி அதன் பயன்!! சூப்பர்...நல்ல பயனுள்ள செய்தி அது.

    எல்லா செய்திகளுமே சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  47. ஏஞ்சல் உங்கள் தலைப்பு அட்டகாசம்....

    ஒரு சில இதுக்கு ஏற்றாற் போல் சொல்ல வந்தேன் ஆனால் அது ரிசர்வ்ட் அப்புறம் என் சான்ஸ் வரும்போது இங்க எல்லாரும் -இதுவரை வந்தவங்க சொன்னதுல பலதும் என் மனதில் இருப்பவை...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்புறம் சொல்லும் போது ரிப்பீட் ஆகுமே என்று ஹிஹிஹி...

    ஸோ சொல்லாம போறேன்..இருங்க ஒவ்வொணணா பார்த்துட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹ்ஹா ஓகே ஓகே :) VIBGYOR ஒவ்வொரு முதல் எழுத்தின் கலரும் ஒவ்வொரு நாள் லிங்கில் இருக்கு

      நீக்கு
  48. ஏஞ்சல் நானும் வந்த போது கொஞ்சம் தயக்கம் இருந்தது...கலாய்த்து எழுதலாமா கூடாதா...ஏதேனும் அதற்கு சட்டதிட்டம் உண்டா என்று...முதலில் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து அதிரா நீங்க எல்லாரும் கொடுப்பதைப் பார்த்ததும் இப்பல்லாம் ..சொல்லணுமா...அடித்து ஆடல் தான் ஹிஹிஹி...

    அதே ஏஞ்சல் ஒரு நாள் எட்டிப் பார்க்கலைனா கூட ஹையோ என்னடா இது இப்படி ஆகிப் போச்சே என்று தோன்றும்...அந்த அளவு இங்கு சிரித்து கும்மி அடித்து அன்று கீதாக்கா சொன்னது போல நல்ல டைவெர்ஷன் ரிலாக்சேஷன் தான். அது ஜனரஞ்சகமாக இருப்பதால்...நம் வேவ்லெங்க்திற்கு ஏற்ப இருப்பதால்...அதற்குப் பதிலும் கிடைப்பதால்..சரி சரி இங்கு ஃபுல்ஸ்டாப்!! ஹிஹிஹி எதுக்குனு தெரியும்ல!!!

    ஆதே மலர்த் தோட்டம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணம்...எல்லாம் சேர்ந்து நல்ல ஃப்ராக்ரன்ஸ்!! சுகந்தம்...அதுவும் அன்பான சுகந்தம் என்பதால்....

    அதே ஏஞ்சல் எனக்கும் செய்திகள், டிட்பிட்ஸ் வாசிக்கும் வாய்ப்பு இல்லை இங்கு அக்காஸ் நெல்லை, துரை அண்ணா, கில்லர்ஜி சில சமயம், ஸ்ரீராம் எல்லாரும் பல செய்திகளைச் சொல்லித் தெரிந்து கொள்ள முடிகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா :) ஆமாம் கீதா இங்கே வருவது உற்சாகத்தை இன்க்ரீஸ் செய்கிறது எனக்கும் .ஜாலியா ஹாப்பியா இருப்போம்

      நீக்கு
  49. ,மேலும் //காளியார்மடம்" அட்ரஸ் மற்றும் கணினி பழுதானதுக்கு புவனஜோதி மந்திரம் ,தேசிக்காய் உருட்டல் என ஆலோசனை கிடைக்குமிடமும் எங்களுடைய எங்கள் பிளாக்தான் :)))) //

    ஹா ஹா ஹா ஹா எல்லாம் இந்த நெல்லையின் திருவிளையாடல்...

    மீண்டும் மீண்டும் பூதம் புகுந்துக்குது. இன்று மீண்டும் கணினி க்ளீனர் போட்டு, க்ரோம் அப்டேட் செய்து, ஸ்கான் பண்ணி என்று அதுவும் செய்யும் போது கரன்ட் போய்...இப்ப டச் வுட் வருது பார்ப்போம் ...ஒழுங்கா வரணும் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு லைம் எடுத்து பூஸார் நேம் சொல்லி கணினி முன் உருட்டுங்க சரியாகிடும் :))

      நீக்கு
  50. ஸ்ரீராமுக்கு ஒரு வேண்டுகோள் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ஏஞ்சலோட சித்தப்பா ரஜினி அங்கிள் ,அரவிந்த்சாமி ,பிருத்திவிராஜ் சுகுமாரன் நிவின் பாலி தல அஜித் , போன்றோரின் பாடல்களை அவ்வப்போது தேர்வு செய்து பகிர சொல்லியிருக்கிறார் :) //

    ஆமாம் ஸ்ரீராம், ஏஞ்சல் வேண்டுகோள் படி சில வாரங்கள் அவர்கள் விருப்ப பாட்டுக்கள் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா :) கோமதி அக்கா ஹய்யோ மாட்டிக்கிட்டேனா :) அது சும்மா நல்லா பாட்டுக்கள் இசை எல்லாம் சேர்ந்து அமைந்தால் போடுவார் ஸ்ரீராம் :)

      நீக்கு
  51. சமீபத்தில் நான் மன ஆரோக்கியம் நலம் சம்பந்தப்பட்ட துறையில்தான் வேலைக்கு சேர்த்துள்ளேன் .வேலையில் சேருமுன் மென்டல் ஹெல்த் பற்றிய புரிதலுக்காக பல்வேறு விஷயங்களை படிக்க நேரிட்டது அதில் மிக முக்கியமானது , பலர் பேசுவதற்கு ஒருவருமின்றி தனிமையில் இருக்கிறார்கள் .தனிமை அதிகமாகும்போது மனநல குறைபாடு இன்னபிற நோய்கள் அண்டுமாம் .//

    சூப்பர் ஏஞ்சல் உங்கள் பணி!!...நானும் நிறைய வாசித்துள்ளேன். முன்பு சென்னையில் இருந்தப்ப கொஞ்ச்ம இதில் இருந்தேன்....அப்புறம் தொடர முடியலை...

    அதே தனிமை அதிகமாகும் போது மன நல குறைபாடு // அதே அதே...அதுவும் ஒரு சிலருக்குச் சிறு வயதிலேயே வரத் தொடங்கிடுதுனும் அப்போது சென்ற போது அறிய முடிந்தது. அப்புறம் அவர்களுக்கு வழிகாட்டி என்று....தொடர முடியலை. இங்கு மொழி கற்க வேண்டும் அப்போதான் முடியும்...

    சூப்பர் ஏஞ்சல் எனக்குத் தெரியும் உங்களுக்கும் இதில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்று....அதான் நீங்க ஏஞ்சல்! பொருத்தமா பெயர் வைத்த பெற்றோருக்கு க்ரெடிட்ஸ் உங்க ப்ரேயரும் போது பாஸ் பண்ணிடுங்க அதை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா என்ன லைனில் செல்வது பழையபடி முடித்த P .G லைனிலா இல்லை வேறெதுமானு குழம்பியிருந்தேன் அப்படி சும்மா அப்ளை செஞ்சதும் ஒரு 3 இன்டெர்வியூ கடந்து இதற்க்கு நுழைந்தேன் :) மிக்க நன்றி பாராட்டுக்களுக்கு .இந்த வேலை பார்த்து உடனே ஆசிய பெண்களை கவனிக்கும் (மென்டல் ஹெல்த் ) தெரபி ஒரு வேலையும் வந்தது தற்சமயம் ஏற்கவில்லை கொஞ்சம் நாள் இதில் இருந்து நேரம் எல்லாம் பார்த்து சேர யோசிக்கிறேன் .

      நீக்கு
  52. //புதிய சமையல் குறிப்புகளை அக்கா அவர்கள் சார் வரைந்த ஓவியத்துடன் பகிர கோரிக்கை விடுக்கின்றேன் .//
    என் சமையல் குறிப்பையும், சாரின் படத்தை ரசித்து கருத்து சொல்லி , எனக்கு அன்பு கோரிக்கை விடுத்த உங்களுக்கு நன்றி ஏஞ்சல்.
    உங்கள் பாராட்டையும் உங்கள் வேண்டுகோளையும் சாரிடம் சொல்லி இருக்கிறேன்.
    உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  53. கோதுமை மைதா சேர்க்காதோருக்கான குறிப்புக்கள் மற்றும் வீகன் வகை உணவு குறிப்புக்களையும் இங்கே//

    ஏஞ்சல் அல்ரெடி ஓரிரண்டு பகிர்ந்த நினைவு....இப்போதும் உங்களை நினைத்தே குறிப்புகள் இருக்கு. நான் செய்தது. படங்கள் எல்லாம் ஆர்கனைஸ் செய்து செய்முறை எழுதணுமே...கணினி படுத்தலால் கொஞ்சம் தாமதமாகிறது...விரைவில் அனுப்ப எண்ணம் உண்டு ஏஞ்சல்...

    அப்படிவரும் போது உங்கள் புடலங்காய் தோசை நான் செய்த படமும் வரும்!ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ் தேங்க்ஸ் கீதா எனக்கு மற்றும் பலருக்கும் பயன்படும் .செவ்வாய்க்கிழமை ஒரு ஈவென்ட் இருக்கு அதுக்கு எனக்குன்னு ஸ் ஸ்பெஷலா க்ளூட்டன் இல்லா வீகன் கேக் செஞ்சி வைக்கறாங்க :) waiting for gourd dosa .

      நீக்கு
  54. opos பற்றி நானும் அறிந்தேன் ஏஞ்சல். ஹெல்தி ஃபூட் ட்ரை என்றெல்லாம் சொல்றாங்க...

    ஆஹா கணினி கருத்தை ஏற்க மாட்டேங்குது....மீண்டும் பூதம்....சரி ஆஃப் செய்துவிட்டு மீண்ட்m vவரேன்...இக்கமென்ட் போனபிறகு ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லுங்க கீதா opos பற்றி நேரம் ம்கிடைக்கும்போது

      நீக்கு
  55. எச்சூஸ்மீ நட்புக்களே :) இரவுக்குள் வந்து எல்லாருக்கும் ரிப்லை தருகின்றேன் :) வெளியே ஷாப்பிங் செல்கின்றோம் விரைவில் வரேன்

    பதிலளிநீக்கு
  56. இன்னும் நிறைய சமையல் ரெசிப்பிக்களை கற்றுக்கொள்ள முடிகிறது .//

    அதே அதே...ஏஞ்சல் சிலது தெரிந்திருந்தாலும் ஒரு சில வித்தியாசங்கள்...ஸோ செய்து பார்க்க நினைப்பேன். நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது இல்லையா. நானும் நெட்டிலும் பார்ப்பதுண்டு....இப்பத்தான் கொஞ்ச மாதமாக னெட்டில் ரெசிப்பிஸ் பக்கம் போகவே இல்லை….ஹையோ என்ன ஏஞ்சல் என்னைய லெஜென்ட் நு மத்தவங்களை சொன்னது முழுவதும் ஐ அக்ரீ…மீயைப் போய்..

    சரி சரி என்னைய ஆங்கானே மென்ஷன் பண்ணியதுக்கு மிக்க ந்ன்றி…

    ஆமாம் கோமதிக்கா மாமா சூப்பரா வரைஞ்சிருந்தார்ல…கோமதிக்கா ரெசிப்பியும் யாரும் அவ்வளவா மென்ஷன் பண்ணாத ரெசிப்பி… கோமதிக்கா கூடவே தகவலும் கொடுத்திருந்தாங்க அங்க என்னால சொல்ல முடியாம போச்சு இங்க சொல்லிடுறேன்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா கீதா உங்க ரெசிபிஸும் புதுசுதான் நான் கேள்விப்படாதவை கடுகோரை பாவக்கா உப்புசார் மில்லெட் கேக் னு கலக்கறீங்க

      நீக்கு
  57. புதன் யெஸ் யெஸ் கும்மி டே…

    உங்களுக்குப் பொன்னாடை போர்த்தி…பொற்கிழி கொடுத்த்தும் ஒருவருக்குப் புகை வந்திருக்க்மே!!!! புதன் பற்றி உங்கள் கருத்துகளுக்கு ஹைஃபைவ்.

    நான் கேள்வி கேட்பதே இல்லை. கேட்கணும் என்று நினைத்து கும்மி அடிப்பதில் மனம் போய் அப்படியே போய்விடுகிறது….இனி கேட்கணும்…ஹிஹிஹி அப்ப்டிச் சொல்லிக்குவேன்…

    யெஸ் ஏஞ்சல் //கண்ணில் பட்ட அனைவரையும் பார்த்து சிரித்தேன் :) அதில் இருவர் நான் வேலை முடிந்து திரும்பும்போது //you made my day//
    தாங்க்ஸ்னு சொன்னாங்க .//

    சூப்பர் சூப்பர் ஏஞ்சல்!!! பாராட்டுகள்!!

    புன் சிரிக்கும் போது நம் உதடுகள் ப்ரிம்முக்கு போவதால் கன்னச் சதைகள் இறுக்கமில்லாமல் தளர்ந்து மனதையும் லெகுவாய்…சும்மானாலும் அப்படி உதட்டை நன்ராக விரித்துப் பார்த்தாலே தெரியும் அந்த ரிலாக்ஸேஷன்….

    இதற்கு ஹைஃபைவ் சொல்லிக்கறேன் ஏஞ்சல் எனக்கும் அப்படியான அனுபவம் உண்டு…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புன் சிரிக்கும் போது நம் உதடுகள் ப்ரிம்முக்கு போவதால் கன்னச் சதைகள் இறுக்கமில்லாமல் தளர்ந்து மனதையும் லெகுவாய்…சும்மானாலும் அப்படி உதட்டை நன்ராக விரித்துப் பார்த்தாலே தெரியும் அந்த ரிலாக்ஸேஷன்…./

      /சூப்பர்ப் கீதா அழகான விளக்கம் :) நான் பொதுவாவே அனைவரையும் பார்த்து ஒரு குட்டி ஸ்மைல் வீசி செல்வேன் :)

      நீக்கு
  58. வியாழன் சொல்லவே தேவையில்லை…

    வெள்ளி நானும் அறியாத பல பாடல்கள் இங்குதான் தெரிந்து கொள்கிறேன்..கூடவே பல தகவல்கள் நம்ம நட்புகள் சொல்வது எல்லாமே...தெரிந்து கொள்ள முடியும்.

    ஏஞ்சல் உங்க விமர்சனம் டாப் டக்கர்!! அழகான படங்கள், அழகான உவமைகள்!! என்று செம செம!! ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்Dஸ்ஸ் கீத்ஸ்ச்:) இப்பவே இதை எல்லாம் இங்கின எழுதினா, வாற கிழமை ரிவியூவுக்கு என்ன எழுதப்போறீங்க?:) ஹா ஹா ஹா

      நீக்கு
    2. மிக்க நன்றி கீதா :) நான் ரிவர்ஸ் ஆர்டரில் வரேன் யாரையும் மிஸ் பண்ணக்கூடாதே :)

      நீக்கு
    3. கீதா என்னை வாழ்த்தினதும் பூனைக்கு :) என்னா கவலை ஹாஹா :)

      நீக்கு
  59. இப்போதான் மெயின் பதிவுக்கு வருகிறேன்

    புதிய பயணம் நண்பர்கள் குழுவிற்கு பாராட்டுக்கள் .மக்களுக்கும் கால்நடைகளுக்கும் உதவ இவர்கள் முயற்சி மிக நன்று .
    டைம்பாஸ் முகப்புத்தக பக்கம் வந்த படம் ..மனதுக்கு இதம் தருது ..அந்த காவலர் நல்லா இருக்கட்டும் எல்லாரும் உதவட்டும் இயலாதோருக்கு .சின்ன உதவிகள் இவை random acts of kindness எல்லாருக்கும் அவசியம் .

    //
    டில்லி புறப்பட்டு சென்ற போது, அவரது உடமைகள் அனைத்தும் ஒரு சிறிய பையில் அடங்கிவிட்டன. //
    வாவ் ஆச்சர்யமா இருக்கு ..வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அவருக்கு .

    தெர்மாகோல் இன்சுலேஷன் இங்கே எல்லா புதிய வீடுகளிலும் இருக்கு குளிருக்கும் சூடா இருக்கும் வெளி குளிர் உள் நுழையாது .இங்குள்ள பழைய வீடுகளுக்கு இப்போ போடறாங்க .

    பதிலளிநீக்கு
  60. நன்றி ஏஞ்சல். இந்த நாளை சிறப்பாக முடித்தீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் .

      நீக்கு
  61. பின்னூட்ட எண் 200-ஐத் தாண்டுமுன் கருத்திட்டுவிடுகிறேன்!

    கிரிக்கெட் உலகக் கோப்பைக்கிடையே எங்கள் ப்ளாக் மற்றும் இதர பக்கங்கள் பார்ப்பது, ஏன் உட்கார்ந்து செய்தித்தாளைப் படிப்பதும் சிரமமாக இருக்கிறது! இந்தப் பைத்தியம் பிடிக்காதவர்களுக்கு நிம்மதி நீடிக்குமாக. ’உடனே நான் மன ஆரோக்யம் சம்பந்தமான கோர்ஸ் பண்ணியிருக்கேன்..’ என்று ஆரம்பித்துவிடாதீர்கள், ஏஞ்சல் ! இதற்கு ஒரு மருந்தில்லை; கிரிக்கெட் விருந்தே விருந்து!

    ரொம்பவும் விபரமான விமர்சனம் அல்லது அதிரா பாஷையில் ‘ரிவ்யூ’! ஏழு நாட்களோடு எல்லாரையும் பிடித்து அலசியிருக்கிறீர்கள்.

    ஸ்ரீராம், சனிக்கிழமை சங்கதிகள் வழக்கம்போல் ஈர்ப்பவை. ஒடிஷா எம்.பி. நமது கக்கனைப்போல், ஜீவாவைப்போல், காமராஜைப்போல் அபூர்வமானவர். அவருக்கு பிஜேபி டிக்கெட் கொடுத்ததும், அவரை நேஷனல் மெய்ன் ஸ்ட்ரீமுக்குக்கொண்டுவந்ததும் மேலும் நல்லதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹ :) வாங்க ஏகாந்தன் சார் ..இல்லை அப்படி சொல்ல மாட்டேன் :) எங்க வீட்லயும் ஒரு 80% கிரிக்கெட் ரசிகர் 120 % கால்பந்து இரசிகர் இருக்கார் :) உங்களுக்கு உலகக்கோப்பை பரிசா கொடுக்கப்போற கோப்பை என் கணவர் பார்த்தார் .நிஸ்ஸான் ஸ்பான்சர்ஸ் தானே அதனால் எல்லா நிசான் கம்பெனிக்கும் கோப்பை ரவுண்ட் விசிட் அடிச்சிருக்கு :) .
      மிக்க நன்றி பதிவை பாராட்டியதற்க்கு

      நீக்கு
    2. @ஏகாந்தன் சார் எனக்கும் ஒரு குட்டி நோய் இருக்கு அது எதை பார்த்தாலும் ரீசைக்கிள் ரீயூஸ் செய்யும் ஐடியா வரும் ..நிறைய பேப்பர்ஸ் சேர்த்து வச்சிருக்கேன் :) பட்டன்ஸ் அப்புறம் ரீசண்டா கூழாங்கல்

      நீக்கு
  62. பாஸிட்டிவ் செய்திகள் சிறப்பு! ஏஞ்சலின் அவர்களின் போனவார விமர்சனம் நன்று! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!