நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
24.10.25
செங்கையில் வண்டு கலிங் கலிங் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட
ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைககள் இருக்கலாம். ஒரு குழந்தைக்கு இரண்டு தாய்கள் இருக்க முடியுமா?
இது மாதிரி சிக்கலான விஷயங்களை K. பாலச்சந்தர் படம் எடுக்காமல் வேறு யார் எடுப்பார்கள்? 1972 ல் வெளிவந்த 'கண்ணா நலமா' என்னும் படம். பின்னாட்களில் இந்தக் கதையைத் தழுவி கார்த்திக், சுஹாசினியை வைத்து 'சின்னக் கண்ணம்மா' என்று கூட ஒரு படம் வந்தது.
நீண்ட காலமாய் பிள்ளை வரம் இல்லாமல் இருந்த ஜெமினி ஜெயந்தி ஜோடிக்கு, அந்த பாக்யம் வாய்க்கும் நேரத்தில் ஒரு நிலநடுக்கத்தில் மருத்துவமனையில் குழந்தை மாறி விடுகிறது. மாறுவது அவர் முதலாளி குழந்தையுடன். சில வருடங்கள் கழித்து சுந்தரராஜன் - முதலாளி - இந்த நிகழ்வை கண்டுபிடிக்க, 'என் குழந்தையைத் தாருங்கள்' என்று வருகிறார்.
குழந்தையை மாற்றிக் கொள்வதிலேயே சங்கடம். என்னதான் தன் பிள்ளை இல்லை என்றாலும், தன் பிள்ளையாய் நினைத்து வளர்த்தபின் எப்படிப் பிரிவது? மனதைத் தேற்றிக் கொண்டு நீதிக்கு பயந்து அங்கு சென்றால் இன்னொரு அதிர்ச்சி. இவர்களின் பிள்ளை கால் ஊனமுற்றவனாக இருக்கிறான்.
அதிர்ச்சி. எனினும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால்...?
குழந்தையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிய வரும்போது எழும் மனப்போராட்டங்களை விளக்க ரேடியோவில் ஒலிப்பதாய் வரும் பாடல் இந்த 'பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்' என்னும் கண்ணதாசன் பாடல். எம் எஸ் விஸ்வநாதன் இசை.
சற்றே நீளமான பாடல் என்றாலும் ரசிக்கலாம். அந்நாட்களில் பாடலில் வரும் உணர்வுபூர்வமான வரிகளுக்காகவே கேட்டிருக்கிறேன்.
சமீபத்தில் பார்த்த ரீல்ஸில் எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தபோது நடந்ததை குரல் கம்ம, கண்கள் கலங்கச் சொன்னார். ஒருமுறை அவர் நேரில் வந்து பார்த்து கண்ணதாசனுடன் பேசினால் சரியாகும் என்று சொன்னார்களாம். அது முடியாததால் இவர் டியூன் சொல்லி, தத்தகாரம் சொல்லி கண்னதாசனிடம் எப்போதும் கேட்பது போல பாடல் வரிகள் கேட்பது போலவும் பேசி கேசெட்டில் பேசி பதிவு செய்து அமெரிக்காவுக்கு அனுப்...
...ப்புவதற்குள் கண்ணதாசன் மறைந்த செய்தி வந்து விட்டதாம். இதைச் சொல்லும்போது அத்தனை வருடங்கள் கழித்தும் எம் எஸ் வி யால் பேசவே முடியவில்லை. அவர் வாழ்வில் அவர் வாய்விட்டு அழுதது மூன்று பேர் மறைவுக்குதான், ஒன்று எம் எஸ் வியின் தாய், அடுத்து கண்ணதாசன், மூன்றாவது MGR என்றார்.
நம் மன்றத்தைச் சேர்ந்தவர்.தீவிர ரசிகர். இருதயநோயால் இளம் வயதில் இறந்துவிட்டார்.அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் .ஒரு ஆண் குழந்தை.அவருடைய குடும்பம் வருமானம் இன்றி வறுமையில் வாடியது.ரசிகர்மன்றத்தை சேர்ந்த சிலர் இளையதிலகத்தை வெளியூர் சூட்டிங்கில் நேரில்சந்தித்து அவருடைய இழப்பையும் அதனால் அந்த குடும்பத்தின் சிரமங்களையும் எடுத்துக் கூறிஉதவிசெய்யகோரினர்.
.இளையதிலகமும் அன்னை இல்லத்தில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அவர்களும் குறித்த தேதியில் அன்னை இல்லதிற்கு வந்தனர்.மூன்று குழந்தைகளுடன் தாயையும் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் அழைத்து வந்துள்ளார்.
இளையதிலகம் அவசர சூட்டிங் காரணமாக சென்றிருந்தார்.அவர் வந்து விடுவார் என்று தகவல் கூறி அவர்களை காத்திருக்குமாறு ஊழியர்கள் கூறினர்.
அந்த நேரம் வந்த நடிகர்திலகம் அவர்களை பார்த்து விவரம் கேட்க அவர்கள் இளையதிலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினர்.குழந்தைகளை பார்த்து புன்னகையுடன் பேசி நலம் விசாரிக்கையிலே அவர்களின் முகங்களை பார்க்கிறார்.இயல்பான சந்தோசம் அந்த முகங்களில் எதுவும் தெரியாததை அவர் உணர்ந்து கொண்டார்.மேலும் பேசி விஷயத்தை தெரிந்துகொண்டார்.
உதவியாளரை அழைத்து அவர்களின் பெயர், விலாசம் குறிக்கச் சொல்லிவிட்டு,
அவர்களிடம் பிரபு அவசரமாக சூட்டிங் போயிருக்கான் போல, வெயிட் பண்ணுங்க. "என்று சொல்லிவிட்டு பின் நடிகர்திலகம் சென்று விட்டார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.
மீண்டும் வருகிறார் நடிகர்திலகம்.கையில் ஏதோ பேப்பர்களை வைத்திருக்கிறார்.அவர்களை அழைக்கிறார்.
ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூபாய் ஐம்பதினாயிம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பத்திரங்களை ஒப்படைக்கிறார்.மொத்தம் ஒன்றரை லட்சம் . மாதந் தோறும் கிடைக்கும் வட்டியை வைத்து குடும்பம் நடத்துமாறும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் அறிவுரைகள் கூறினார்.மேஜர் ஆகும் வரை பணவட்டியிலேயே குடும்பத்தை நடத்துமாறும் அதற்குண்டான அவசியங்களையும் எடுத்துக் கூறினார்.
பின் அழைத்து வந்த மன்றத்தலைவர் குடும்பத்தினரை பார்த்து இந்த விஷயம் இந்த விஷயம் இந்த வீட்டு வாசலோடு மறந்து விடுங்கள்.ஊரில் போய் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க கூடாது சிறிது கண்டிப்புடன் கூறி அனுப்பி வைத்தார்.
இன்றைய இரண்டாவது பாடல் 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சொல்லடி அபிராமி' பாடல்.
ஆதிபராசக்தி திரைப்படம் 1971 ல் வெளிவந்தது. அதனுடன் வெளியான பாபு, நீரும் நெருப்பும் போன்ற சிவாஜி எம் ஜி ஆர் படங்களை விட மிக அதிக வசூல் செய்தது.
K S கோபாலகிருஷ்ணன் இயக்கம். கே வி மஹாதேவன் இசை. கண்ணதாசன் பாடல்.
நம் அல்லது என் மனக்கோளாறு.. இந்த 'சொல்லடி அபிராமி' வரியையும், 'நில்லடி முன்னாலே' வரியையும் கேட்கும்போது வடிவேலுவின் 'அரசு' பட நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வந்து தொலைக்கிறது! 'மணியே' என்று தொடங்கும்போது 'உனக்கும் எனக்கும் Something something' விவேக்!
நேற்று இரவு நாங்கள் எல்லோரும் ஆதிபராசக்தி படத்தை இந்தப் பாடல் மற்றும் தொடர்ந்த காட்சி முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல காட்சியமைப்பு, பாடல் வரிகள், நடிப்பு என எங்களைக் கவர்ந்தது. அதில் வரும் அரசர் சரபோஜி மன்னர் எனக் கூறவும் ஆர்வம் இன்னும் அதிகமாகியது. எனக்குப் பிடித்த பாடல்.
வாங்க நெல்லை... நேற்று இந்தப் படத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்பது ஆச்சர்யம். இன்று காலை நான் இந்தப் பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்! உங்களுக்கு ஆதிபராசக்தியின் அருள் பரிபூரணமாக இருக்கிறது.
பெற்றெடுத்த உள்ளம் என்றும்... பாடல் வரிகள் படிக்கும்போதே பாடல் மனத்தில் ஓடியது. உண்மை வாழ்வில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் எதிர்கொள்வது மிக்க் கடினம்.
உண்மைதான். நான் விளையாட்டாக என் பெரியவனிடம் சொல்வேன். 'ஆஸ்பத்திரியில் மாறிப்போயிட்டியோ என்று சந்தேகமா இருக்குடா.. நானும் ஒழுங்கா படிக்க மாட்டேன், உன் அம்மாவும் ஒழுங்கா படிக்க மாட்டா... நீ மட்டும் எப்படி?' என்று கேட்பேன். நீ எங்கள் ஜாடையாகவே இல்லையே என்பேன். கடுப்பாவான். அப்புறம் இந்த கிண்டலை நிறுத்தி விட்டேன்!
பல நேரங்களில், நம் மனது நம்மைத் தூண்டுவதால் நாம் உதவி செய்கிறோம். பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம், நம் அடக்கமா இல்லை தெரிந்துவிட்டால் தாளமுடியாத கூட்டம் உதவி என்று வந்துவிடுமே என்ற பயத்தாலா?
எம்ஜிஆரிடம் தான் ஏழை என்று சொல்லி உதவிபெற வந்தவள் தன் நகையை எல்லாம் கழற்றி தன்னுடன் வந்தவளிடம் கொடுத்துவிட்டு எம்ஜிஆரை உதவிபெற அணுகிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.
// இல்லை தெரிந்துவிட்டால் தாளமுடியாத கூட்டம் உதவி என்று வந்துவிடுமே என்ற பயத்தாலா? //
ஹா.. ஹா.. ஹா... எனக்கும் இப்படி தோன்றி இருக்கிறது. ரொம்ப யோசிக்காமல் செய்தால்தான் உதவிகள் செய்ய முடியும். சந்தேகம் என்று நிறைய வந்து விட்டால் உதவி செய்வது குறைந்து விடும். பின்னாட்களில் அபடித்தான் சந்தேக யோசனைகள் வருகின்றன!! அதற்கு காரணம் உதவி கேட்பவர் ஏமாற்றுவதால்தான் - எம் ஜி ஆரிடம் ஏமாற்றிய அந்தப் பெண்மணி போல...
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டுள்ளேன். முதல் பாடல் என்பழைய பதிவிலும் போட்டிருந்தேன். முதல் பாடல் இடம் பெற்ற படம் பார்த்துள்ளேனா என சரியாக நினைவில் இல்லை. ஆனால், இரண்டாவது படம் பல முறை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். படமும் அதில் இடம் பெற்றுள்ள பாடல்களும் பக்தியின் உணர்ச்சிபூர்வமாக நன்றாக இருக்கும்.
சிவாஜி கணேசன் அவர்களின் நல்ல செயல் பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் தாராளமான மனதின் செய்கை, அக்குழந்தைகளை நன்றாக வாழ வைத்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
முதல் பாடலின் அந்தக் கதை நல்ல கதைக் கரு. பாலச்சந்தரின் வித்தியாசமான படைப்பு. உண்மையிலேயே இப்படி நடப்பதை சில செய்திகளில் வாசித்தும் இருக்கிறேன்.
சில தாய்மார்கள் தங்களின் முதல் ஆண் குழந்தையை தன் சகோதரிகளில் யாருக்கேனும் குழந்தை பிறக்காது என்று தெரிந்தால் தத்துக் கொடுத்துவிடுவதும் நடக்கும். அதில் எத்தனை உளவியல் சிக்கல்கள், குடும்பச் சிக்கல்கள் பின்னாளில் வரும் என்பதைக் கருத்தில் கொள்ளாமலேயே...
இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் கதை அப்ப புரியவில்லை. ஏனென்றால் பாட்டின் வரிகளை விடப் பாட்டுக் கேட்டதோடு சரி வீட்டின் கெடுபிடியால்!! ஹாஹாஹாஹா....மறைமுகமாகப் பயந்து பயந்து கேட்டவை எல்லாமே.
சூப்பர் பாட்டு. வரிகள் அருமையான வரிகள். இப்பதான் வரிகளைப் பார்க்கிறேன் ஸ்ரீராம்.
இன்று பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை. அடிக்கடி கேட்ட பாடல் பாடல் காட்சியும் உடலை சிலிர்க்க வைக்கும். பாடல், நடிப்பு படமாக்கிய விதம் எல்லாம் நன்றாக இருக்கும். சிவாஜி அவர்களின் கொடை தன்மை படித்தேன். படிப்புக்கு உதவியது நல்ல குணம்.
எம் எஸ் வி பற்றிய செய்தியும் கண்ணதாசன் எனம் எஸ் வி நட்பைன் ஆழத்தை சொல்கிறது. பழகி பிரிவது மனம் வேதனை தரும். நேற்று கீழ் வீட்டு மாமி எப்போது என்ன உதவி என்றாலும் கேளுங்கள் என்று போனில் பேசுவார்கள், கேட்காமலே உதவி செய்வார்கள் நேற்று இரவு அழைத்து தீடிரென்று வீடு மாறி போக போகிறேன் என்றார்கள். மனம் கவலையில் ஆழ்ந்து விட்டது.
நேற்று இரவு நாங்கள் எல்லோரும் ஆதிபராசக்தி படத்தை இந்தப் பாடல் மற்றும் தொடர்ந்த காட்சி முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல காட்சியமைப்பு, பாடல் வரிகள், நடிப்பு என எங்களைக் கவர்ந்தது. அதில் வரும் அரசர் சரபோஜி மன்னர் எனக் கூறவும் ஆர்வம் இன்னும் அதிகமாகியது. எனக்குப் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... நேற்று இந்தப் படத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்பது ஆச்சர்யம். இன்று காலை நான் இந்தப் பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்! உங்களுக்கு ஆதிபராசக்தியின் அருள் பரிபூரணமாக இருக்கிறது.
நீக்குபெற்றெடுத்த உள்ளம் என்றும்... பாடல் வரிகள் படிக்கும்போதே பாடல் மனத்தில் ஓடியது. உண்மை வாழ்வில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் எதிர்கொள்வது மிக்க் கடினம்.
பதிலளிநீக்குஉண்மைதான். நான் விளையாட்டாக என் பெரியவனிடம் சொல்வேன். 'ஆஸ்பத்திரியில் மாறிப்போயிட்டியோ என்று சந்தேகமா இருக்குடா.. நானும் ஒழுங்கா படிக்க மாட்டேன், உன் அம்மாவும் ஒழுங்கா படிக்க மாட்டா... நீ மட்டும் எப்படி?' என்று கேட்பேன். நீ எங்கள் ஜாடையாகவே இல்லையே என்பேன். கடுப்பாவான். அப்புறம் இந்த கிண்டலை நிறுத்தி விட்டேன்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குபல நேரங்களில், நம் மனது நம்மைத் தூண்டுவதால் நாம் உதவி செய்கிறோம். பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம், நம் அடக்கமா இல்லை தெரிந்துவிட்டால் தாளமுடியாத கூட்டம் உதவி என்று வந்துவிடுமே என்ற பயத்தாலா?
பதிலளிநீக்குஎம்ஜிஆரிடம் தான் ஏழை என்று சொல்லி உதவிபெற வந்தவள் தன் நகையை எல்லாம் கழற்றி தன்னுடன் வந்தவளிடம் கொடுத்துவிட்டு எம்ஜிஆரை உதவிபெற அணுகிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.
// இல்லை தெரிந்துவிட்டால் தாளமுடியாத கூட்டம் உதவி என்று வந்துவிடுமே என்ற பயத்தாலா? //
நீக்குஹா.. ஹா.. ஹா... எனக்கும் இப்படி தோன்றி இருக்கிறது. ரொம்ப யோசிக்காமல் செய்தால்தான் உதவிகள் செய்ய முடியும். சந்தேகம் என்று நிறைய வந்து விட்டால் உதவி செய்வது குறைந்து விடும். பின்னாட்களில் அபடித்தான் சந்தேக யோசனைகள் வருகின்றன!! அதற்கு காரணம் உதவி கேட்பவர் ஏமாற்றுவதால்தான் - எம் ஜி ஆரிடம் ஏமாற்றிய அந்தப் பெண்மணி போல...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டுள்ளேன். முதல் பாடல் என்பழைய பதிவிலும் போட்டிருந்தேன். முதல் பாடல் இடம் பெற்ற படம் பார்த்துள்ளேனா என சரியாக நினைவில் இல்லை. ஆனால், இரண்டாவது படம் பல முறை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். படமும் அதில் இடம் பெற்றுள்ள பாடல்களும் பக்தியின் உணர்ச்சிபூர்வமாக நன்றாக இருக்கும்.
சிவாஜி கணேசன் அவர்களின் நல்ல செயல் பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் தாராளமான மனதின் செய்கை, அக்குழந்தைகளை நன்றாக வாழ வைத்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
நன்றி கமலா அக்கா.
நீக்கு"வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் கொடுப்பவன் கர்ண வீரன்"
முருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா.. முருகா...
நீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
இன்றைய பதிவு சிறப்பு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஉதிக்கும் டா போடா...
பதிலளிநீக்குஎன்னே ஒரு நடிப்பு....
இந்தக் காட்சியை பதிவில் ஏற்றி வைத்துள்ளேன்..
கந்த சஷ்டிக்குப் பிறகு வெளியாகும்.
SVS நடிப்புக்கு சொல்லவும் வேண்டுமோ...
நீக்குகயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தனது செலவில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவச் சிலையை நிறுவியவர் நடிகர் திலகம்..
பதிலளிநீக்குகேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்குஅவரோ இவரோ - அவரவரையும் அவரவர் தலையெழுத்து இயக்குகின்றது.. இயங்குகின்றனர்...
பதிலளிநீக்குவாழ்க நல்ல மனங்கள்
__/\__
நீக்குமுதல் பாடலின் அந்தக் கதை நல்ல கதைக் கரு. பாலச்சந்தரின் வித்தியாசமான படைப்பு. உண்மையிலேயே இப்படி நடப்பதை சில செய்திகளில் வாசித்தும் இருக்கிறேன்.
பதிலளிநீக்குசில தாய்மார்கள் தங்களின் முதல் ஆண் குழந்தையை தன் சகோதரிகளில் யாருக்கேனும் குழந்தை பிறக்காது என்று தெரிந்தால் தத்துக் கொடுத்துவிடுவதும் நடக்கும். அதில் எத்தனை உளவியல் சிக்கல்கள், குடும்பச் சிக்கல்கள் பின்னாளில் வரும் என்பதைக் கருத்தில் கொள்ளாமலேயே...
சிலது எழுதி வைத்......
கீதா
வாங்க கீதா... இந்நாட்களில் தாய்மார்களே குழந்தையை...
நீக்குபாலச்சந்தரின் படம் இது என்றும் கதை இப்போதுதான் தெரிகிறது ஸ்ரீராம். ஆனால் நானெழுதி பாதியில்தானே இருக்கு...அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும்
பதிலளிநீக்குபடம் பார்க்க வேண்டும்.
கீதா
அது எப்படி இருக்கிறதே என்று பார்க்கலாமே...
நீக்குஇந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் கதை அப்ப புரியவில்லை. ஏனென்றால் பாட்டின் வரிகளை விடப் பாட்டுக் கேட்டதோடு சரி வீட்டின் கெடுபிடியால்!! ஹாஹாஹாஹா....மறைமுகமாகப் பயந்து பயந்து கேட்டவை எல்லாமே.
பதிலளிநீக்குசூப்பர் பாட்டு. வரிகள் அருமையான வரிகள். இப்பதான் வரிகளைப் பார்க்கிறேன் ஸ்ரீராம்.
கீதா
நன்றி கீதா.
நீக்குசெங்கையில்
பதிலளிநீக்கு??
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇன்று பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை. அடிக்கடி கேட்ட பாடல்
பதிலளிநீக்குபாடல் காட்சியும் உடலை சிலிர்க்க வைக்கும்.
பாடல், நடிப்பு படமாக்கிய விதம் எல்லாம் நன்றாக இருக்கும்.
சிவாஜி அவர்களின் கொடை தன்மை படித்தேன். படிப்புக்கு உதவியது நல்ல குணம்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஎம் எஸ் வி பற்றிய செய்தியும் கண்ணதாசன் எனம் எஸ் வி நட்பைன் ஆழத்தை சொல்கிறது.
பதிலளிநீக்குபழகி பிரிவது மனம் வேதனை தரும்.
நேற்று கீழ் வீட்டு மாமி எப்போது என்ன உதவி என்றாலும் கேளுங்கள் என்று போனில் பேசுவார்கள், கேட்காமலே உதவி செய்வார்கள் நேற்று இரவு அழைத்து தீடிரென்று வீடு மாறி போக போகிறேன் என்றார்கள்.
மனம் கவலையில் ஆழ்ந்து விட்டது.
அடடா... உங்கள் நல்ல மனதுக்கு வேறொருவர் அந்த இடத்தைக் கட்டாயம் பிடிப்பார்.
நீக்குசெங்கையில் - அல்ல
பதிலளிநீக்குசெங்கயல் மற்றும் வண்டுகளைப் போன்ற விழிகள் சுழன்றாடவும் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்
இந்தப் பாட்டில் சிவந்த விழிகள் என்பது மறைபொருள்...
குலைந்து (குழைந்து)
என்பதையும் திருத்த வேண்டும்.. குலைந்து ஆடுதல் என்றால் தலைவிரி கோலம்..
குழைந்து ஆடுதல் என்றால் அழகின் நடனம்..
எழுத்துப் பிழைகள் நிறைய..
குலைந்து - என்றால் தலைவிரி கோலம்..
பதிலளிநீக்குஇன்றைய பெண்களின் நாகரிகம்..