"சந்திராஷ்டமம் என்பது ஜோதிடப்படி, ஒருவருடைய ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும் (சுமார் இரண்டரை நாட்கள்), அப்போது மனக் குழப்பங்கள், தேவையற்ற கோபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும், புதிய முயற்சிகளைத் தவிர்த்து, விநாயகர் வழிபாடு மற்றும் அமைதி காப்பது சிறந்த பரிகாரங்கள்."
காய்கறி 'நறுக்ஸி'ன்போது நான் பாட்டு போட்டுக் கொள்(ல்)வது வழக்கம். இளையராஜா பாடல்களோ, கிஷோர்குமார் பாடல்களோ, டி எம் எஸ் சுசீலா பாடல்களோ, SPB பழைய பாடல்களோ எதுவோ ஒன்று. ஒரு பாட்டு போட்டாச்சுன்னா அதுவே அடுத்தடுத்து ஓடும்.. நேற்று அதில் ஒரு பாடலின் அடுத்து ஏ எம் ராஜாவின் 'முத்தாரமே' பாடல் வந்தது.
அட.. கேட்டு நாளாச்சே...
"நல்ல பாட்டு இல்லே?"
புளி கரைத்துக் கொண்டிருந்த (என் வயிற்றில் அல்ல, நிஜமாகவே) பாஸைப் பார்த்தேன்.
"நான்தான் சொன்னேனே சித்தி.. காயெல்லாம் இவரை நறுக்கச் சொல்லிடுவேன்.." நான் பார்ப்பதைப் பார்த்தவர், "நல்ல அழகா நறுக்குவீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார்.
குழந்தையும் குச்சி மிட்டாயும் என்று தலைப்பு ஞாபகம் வந்தாலும் அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று பாடல் விஷயத்தைத் தொடர்ந்தேன். எனக்கே பேசுவதற்கு கம்மியாகத்தான் சான்ஸ் கிடைக்கும். இதில் மௌனவிரதம் இருப்பது சிரமமா சொல்லுங்கள்!
"முத்தாரமே பாட்டு கேட்டு நாளாச்சு இல்லே?"
பாஸ் ஃபோன் கட் செய்த சோகத்தில் அசுவாரஸ்யமாக தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்தார்.
"அந்தப் படத்துல வர்ற இன்னொரு பாட்டு என்ன... அதுவும் நல்லா இருக்கும்.."
"ரத்னமாலா" பாட்டை சொல்றீங்களா?" புதுக்குரல் இடையே புகுந்தது.
அவர்கள் வீட்டில் செய்த பொங்கல் சாம்பிள் கொடுக்க வந்திருந்த ஜீவந்திகா ஆர்வம் பொங்க வேகமாக அருகே வந்தாள்.
"ரத்னமாலாவா? ரத்னபாலான்னு ஒரு புத்தகம்தான் முன்னாடி வந்ததது.."
"போங்க அங்கிள்... முத்தாரமே பாட்டு பிடிக்குமா உங்களுக்கு.." என் கேள்வியை புறக்கணித்து வியந்தாள் ஜீவா.
"ஓ பிடிக்குமே... ரொம்ப இனிமையா இருக்கும். உனக்கும் பிடிக்குமா?"
"அட. நீங்க அந்தப் பாட்டை ரசிப்பீங்களா...?"
"ஏன்.. கேட்பேனே.. பிடிக்குமே... வேணா இவளைக் கேட்டுப்பார்.. ரொம்ப நாளா தெரியுமே.."
"ரொம்ப நாளாவா.. ஆண்ட்டி. நீங்களும் கேட்பீர்களா?"
"தெரியும். ஆனால் முதல்ல எனக்கு அந்தப் பாட்டு சட்டென ஞாபகத்துக்கு வரல.. எனக்கு ஒரு முத்தாரத்தில் பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது.. எனக்கு அதுதான் பிடிக்கும்"
"ஒரு முத்தாரத்திலா.. நீங்க என்ன பாட்டு சொல்றீங்க? அங்கிள் என்ன பாட்டு சொல்றாரு.."
"ரங்கராட்டினம் படத்துல ஏ எம் ராஜா பாடின முத்தாரமே உன் ஊடல் என்னவோ பாட்டுதான்... ரொம்பப் பிடிக்கும்.."
"அட போங்கப்பா.. ஆண்ட்டி நீங்க சொன்ன பாட்டு?"
"ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் பாட்டு.. ஏன்? நீ எதைச் சொல்றே?"
அட கண்றாவியே.. விடுங்க ஆண்ட்டி.. நான் உங்க கிட்ட கேட்டது தப்பு..."
திரும்பி நடந்தாள்.
"இரும்மா... இரு.. நாம பேசித் தீர்க்கலாம்! 'முத்தே என் முத்தாரமே ன்னு ரெண்டாவது லைன்ல ஒரு பாட்டுல வரும்... அது..?"
லட்சியம் பண்ணாமல் வாசலை நோக்கி நடந்தாள்.
"முத்தாரம் இல்லன்னா ஒருவேளை நீ வித்தாரக்கள்ளி பாட்டைச் சொல்றியா?"
சட்டென திரும்பியவள், அதே வேகத்தில் மீண்டும் திரும்பி நடந்தாள்.
"என்னம்மா... இரு... இங்கே வா."
"வேணாம்.. நான் ஒண்ணு.சொல்வேன்,, நீங்க
ஒண்ணு சொல்வீங்க..."
"வந்து பேசினாதானே தெரியும்?"
"போங்க ஆண்ட்டி.. உங்களையெல்லாம் ட்ரம்ப் கிட்ட தான் புடிச்சு கொடுக்கணும்..."
போய்விட்டாள்!
பின்குறிப்பு 1 : இந்தப் பாடல்கள் பற்றி நான் முன்பு பகிர்ந்த வெள்ளி வீடியோ இங்கே...
பின்குறிப்பு 2 :
இதற்கு யோசித்த வேறு இரு தலைப்புகள் 'ஜாடிக்கேத்த மூடி', 'குழந்தையும் குச்சி மிட்டாயும்'!
===========================================================================================
சில நாட்கள், அல்லது மாதங்களுக்கு முன்னால் எலிக்குஞ்சுகளைப் பிடித்து ***றது பற்றியும், அதை FB யில் வெளியிட்டிருந்தேன் என்றும், கிடைக்கும்போது பகிர்கிறேன் என்றும் சொல்லி இருந்தேன். அதில் ஏஞ்சல் கமெண்ட்ஸ் பற்றியும் சொல்லி இருந்தேன். ஏஞ்சல் FB விட்டு சென்றுவிட்டதால் அவர் கமெண்ட்ஸ் காணாமல் போய்விட்டன. எனினும் அந்தப் படமும், அங்கு அந்தப் படத்துக்கு வந்திருந்த மற்ற சுவாரஸ்யமான உரையாடல்...
- எங்கள் வீட்டில் பூனையும் கிடையாது - நான்
- நான் வளர்க்கவெல்லாம் இல்லை! அதுவாகவே வளரத்தொடங்கியது. பழைய பேப்பர் போடும்போது அங்கு காணப்பட்டது!! - நான்
- // எங்கள் வீட்டு எலிச் செல்லங்கள்! // not consistent with the symbol followed // 🙁 🙁 // - மாதவன்
- அது இடக்கரடக்கல் மாதவன்! 🙂 - நான்
- // இடக்கரடக்கல் // இது என்ன மொழி.. . என்ன அர்த்தம்.. ? ப்ளீஸ்.. சொல்லுங்க..(நெசமாவே தெரியல/புரியல..) - மாதவன்
- நகைமுரண்! - நான் ; முரண்தொடை ? - மாதவன்.
- என்னவோ ஒன்று, விடுங்க.... மறுநாள் தாய் எலி வந்து தேடிச் சென்றது. (Rat) cake கொடுத்து உபசரித்து அனுப்பினேன்! - நான்
- I wonder, how a single rat gives birth to 6...oops - மாதவன்
- ச்ச்சோ....ச்ச்வீட்டு ஸ்ரீ - செல்வி ஷங்கர்
- இப்போதான் போட்டிருக்கும் புதுக்குட்டி எலிங்களா? கண்ணெல்லாம் திறந்துடுத்தா? பார்த்தால் இல்லை போலிருக்கே! 🙂 - கீதா அக்கா.
- க்யூட்டா இருக்குப்பா பார்க்கவே.. அழகு... - - மஞ்சுபாஷிணி
- அடேடே.... இந்த எலிக்குஞ்சுகளுக்குத் தேங்க்ஸ் சொல்லணும்... காணாமல் போன ஆட்களை எல்லாம் கொண்டு வருதே! Manju Bashini Sampathkumar! - நான்
- எலிக் குஞ்சுகளுக்கு இருக்கும் ரசிகர்களைப் பார்த்தால் Sriram Balasubramaniam ஒரு எலிப் பண்ணை ஆரம்பிச்சிடலாம் போலிருக்கே......??? - சாமிநாத பாரதி.
- கீதா மேடம்... ஆமாம், புத்தம்புது ரிலீஸ்! ஆனா பா..........வம்... அப்புறம் கண்ணைத் திறந்ததான்னு தெரியாது.. நாங்கள்தான் அதை தூரத்தில் கொண்டு விட்டு விட்டோமே... - நான்.
- அடப் பாவமே, யாருக்கு/எதுக்கு பக்ஷணம் ஆனதோ! 🙁 - கீதா அக்கா.
ரசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்!!
=======================================================================================
நெல்லைத்தமிழன் சினிமா விமர்சனம் :
பனி :
திரிசூரில் வாழ்ந்துவரும் ரவுடிக்கூட்டங்களின் சாதாரண வாழ்வைப் புரட்டிப் போடும் புதிதாக உதித்த இரண்டு இளம் கொலையாளிகள் பற்றிய கதை. திரிசூரில் புகழ் பெற்ற ‘மங்கலத்’ குடும்பத்தின் முக்கியஸ்தர் கிரி (இயக்குநர் ஜோஜு ஜார்ஜ்). ரியல் எஸ்டேட் மற்றும் மாஃபியா கேங் லீடர். மாஃபியா கேங்கில் அவருடன் படித்த மூவர், குடும்ப உறுப்பினராகவே ஆகி கூட்டாகச் செயல்படுகின்றனர். கல்லூரியிலேயே அடாவடியாகக் காதலித்து கைப்பிடித்த அழகிய மனைவி கிரிக்கு. (கௌரியாக அபிநயா)
இன்னொருபுறம் இரண்டு புதிய இளைஞர்கள் (ஜுனைஸ் விபி, சாகர் சூர்யா), கூலிக்காக முதல் முறை கொலை செய்து பத்து லட்சம் சம்பாதிக்கின்றனர். அந்த கெத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கிரியின் மனைவி கௌரியைச் சீண்டி அனைவர் முன்பும் கிரியால் அடி வாங்குகின்றனர். இந்த சாதாரண சம்பவம், இந்த இரண்டு இளைஞர்களை எப்படி சைக்கோ வில்லன்களாக மாற்றியது, எப்படி திரிசூர் ரவுடிக்கூட்ட த்தைப் புரட்டிப் போட்டது, கிரியை பழி வாங்கினார்களா இல்லை கடைசியில் கிரியால் பழி வாங்கப்பட்டார்களா என்று சொல்லும் கேங்க்ஸ்டர் கதை.
மலையாளப் படங்களுக்கே உள்ள சிறப்பு, கதை என்ற ஒன்று இல்லாமல் அவர்கள் திரைப்படம் எடுக்கச் செல்வதில்லை. அதை விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ். நல்ல கதை இருந்துவிட்டால், அதை விறுவிறுப்பாக்கும் திரைக்கதை இருந்துவிட்டால் படம் வெற்றி பெற, பெரிய ஹீரோக்கள் தேவையில்லை என்று நிரூபிக்கும் படம். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் சீமாவைத் திரையில் பார்க்கிறேன்.
கொஞ்சம் அதீத ரத்தம் இருந்தாலும், அருமையான படம். நான் ஸோனி லைவ் தளத்தில் பார்த்தேன். பார்க்கத் தவறாதீர்கள்.
=======================================================================================
தங்கள் முயற்சி, ஆரம்பம் பற்றி அல்லயன்ஸ் பதிப்பகத்தார் முன்னுரை :-
எங்களது முயற்சி.
தற்போது ஹாஸ்யம் நிறைந்த, குடும்பச் சூழ்நிலையை வைத்து, கதைப்போக்கிலே உண்மைச் சம்பவத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்ற எழுத்து மறைந்துவருவது குறித்து நாங்கள் மிகவும் மனம் வருத்தப்பட்டதுண்டு.
அந்தக் காலக் கட்டத்தில்தான், அதாவது 1984-85 வாக்கில், சிறந்த கதையம்சம், நிறைந்த ஹாஸ்யம், உயர்ந்த பண்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட எஸ்.வி.வி.யின் எழுத்துக்களை மெதுவாக வெளியிடத் தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலேயே, வாசகர்களின் வரவேற்பு நன்றாக இருந்தது. பிறகு எஸ்.வி.வி.யின் பெரும்பாலான தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டோம். அப்போதுதான் எஸ்.வி.வி.யின் தொடராக முதலில் பிரசுரித்த ஆனந்த விகடன் அதிபர் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களின் புதல்வன் திரு. எஸ். பாலசுப்பிரமணியன், எஸ்.வி.வி.யின் நூல்கள் மறுபடியும் வந்து விட்டது' என்ற சிறு வாசகம் ஒன்றை விகடனில் அறிவித்தார். அது ஒரு பெரிய விளம்பரமாக ஆகிவிட்டது. உடனே பல வாசகர்கள், "எஸ்.வி.வி.யின் நூல்களைப் போட்டது போல் ஏன் 'தேவன்' புத்தகங்களைப் போடக் கூடாது?" என்று கேட்ட வண்ணமாக இருந்தனர்.
வாசகர்களின் உந்துதலின் பேரிலும், அவர்கள் தந்த உற்சாகத்திலும் நாங்கள் தேவன் அறக்கட்டளையைச் சார்ந்த திரு. வேங்கடராமனை அணுகினோம். அவரும், 'முதலில் நீங்கள் எஸ்.வி.வி.யின் நூல்களை முடியுங்கள், பிறகு நான் ஏற்பாடு செய்கிறேன்' என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் மறைந்து விட்டார். பிறகு நாங்கள் விடாப் பிடியாக, தேவன் அறக்கொடை மானேஜிங் டிரஸ்டியாக இருந்த திரு. சுந்தரம் அவர்களைச் சந்தித்தோம். அவரும் அவருடைய துணைவியாரும், எங்களுக்கு உற்சாகத்துடனே நம்பிக்கை தெரிவித்தார்கள். ஆனால் ஏனோ காலன் அவரையும் தன்னருகே அழைத்துக் கொண்டான்.
பிறகு திருமதி சுந்தரம் அவர்கள் எங்களைத் தற்போதைய டிரஸ்டிகளான திரு. லட்சுமணன் அவர்களையும் திரு. விசுவநாதன் அவர்களையும் சந்திக்குமாறு கூறினார்கள். நாங்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டோம். ஆனால் எவ்வளவோ இடையூறுகள் வந்த போதிலும் கடைசியில் 1991-வாக்கில், அதாவது ஆறு ஆண்டுகளின் முயற்சிக்குப் பிறகு, 'தேவ'னின் எழுத்தோவியங்கள் பல எங்கள் வெளியீடாக வருவதில் நாங்கள் மிக மிகப் பெருமை கொள்கிறோம்.
இந்த நூல்களினால் தேவன் அறக்கட்டளைக்கு வரும் வருவாய், எந்த ஒரு தனி மனிதருக்கும் சேராமல், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச் சாரியார் அவர்களின் அநுக்கிரஹத்துடன் பல நல்ல தர்ம காரியங்களுக்குச் செலவிடப் படுகிறது. வாசகர்கள் இந்த நூல்களைப் பெருமளவில் ஆதரித்து, தேவன் அறக் கட்டளையினரின் பணியினை ஊக்குவிப்பார்கள் என நம்புகிறோம்.
==========================================================================================
OTT யில் பார்த்த படம் - ஸ்ரீராம்!
The Great Flood
நெட்ஃப்ளிக்சில் நான் பார்த்த தென் கொரியபடம். டிசம்பர் 19 ஆம் தேதிதான் நேரடியாக நெட்ப்ளிக்சில் வெளியாகி இருந்தது போலும். ட்ரெயிலர் பார்த்து, முதலில் நான் பயங்கரமான வெள்ளத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கும் என்று நினைத்து இரண்டு முறை வெவ்வேறு படங்கள் பார்த்தேன். அப்புறம் பார்க்கும்போதுதான் தெரிந்தது, இது வேறுவகைப் படம் என்று.
அவள் மகன் தனது செல்லை அவள் பார்க்க வேண்டுகிறான். மறுக்கிறாள் ஆனா. அவள் ஒரு AI எஞ்சினியர். U N அரசு அவளைக் காப்பாற்ற ஆளை அனுப்புகிறது. South Pole ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆஸ்டராய்டு சோதனை காரணமாக உலகையே பெருவெள்ளம் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள். மனித குலமே அழியும் நிலை.
செயற்கை முறையில் உருவாக்கப்படும் மனித உருவங்களுக்கு உணர்வுகள் கொடுக்கும் தொழில்நுட்பத்தில் வேலை செய்பவள் ஆனா. அவளைக் காத்து புதிய மனித செயற்கை உயிரினங்களை உருவாக்க நினைக்கிறது ஒரு அரசு சார்ந்த குழு. இவள் மகனே செயற்கை முறையில் சோதனைக்காக உருவாக்கப்பட்டவன்தான். அவனை ஒருகட்டத்தில் இழக்க நேரிடும் என்று இவளுக்கும் தெரியும் என்றாலும் இப்போது அவளுக்குஅவனை விட மனமில்லை. உயிரதப்பித் பிழைக்க இவள் மொட்டை மாடிக்கு ஓடும்போது ஒவ்வொரு மாடியாக வெள்ளம் பரவுகிறது. நடுவில் ஒரு மாடியில் கணவனுடன் உதவியற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு கர்ப்பிணிப்பெண் பிரசவ வேதனையில் உதவி கேட்கிறாள். இன்னொரு மாடியில் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட சிறுமி உதவி கேட்டு அழுகிறாள். முதல் முயற்சிகளில் முடியாததை அடுத்த முயற்சிகளில் அவர்களுக்கு உதவுகிறாள் ஆனா. ஒரு கட்டத்தில் அவள் பல்வேறு கடினமான அனுபவங்களுக்குப் பின் காப்பாற்றப்பட்டு ஒரு பெரிய விண்கலத்தில் மற்ற விஞ்ஞானிகளுடன் பயணம் மேற்கொள்ளும்போது விண் குப்பையால் தாக்கப்பட்டு அந்த விண்கலம் வெடிக்க எல்லோரும் உயிரிழந்தாலும் இவள் மறுபடி புதிதாக தனது அபார்ட்மென்ட்டில் விழிக்கிறாள். மறுபடி அதே வெள்ளம், பையனின் கெஞ்சல், தப்பிக்கும் முயற்சிகள்.. இவை மீண்டும் மீண்டும் ஆயிரக்கணக்கான முறை நடக்கிறது. இதையே அவள் தன் மகனின் செல்லில் அவன் காட்டிய ஓவியங்களைக் கொண்டுதான் அறிகிறாள்.
அவன் கேட்கிறான் "நான் ஏன் ஆறு வயசிலேயே இருக்கிறேன்?"
அவள் பனியனில் வரும் எண்ணைக்கொண்டு வெவ்வேறு முயற்சிகள் என்பதை யூகிக்க வைக்கிறார்கள். என்ன ஆகிறது என்பது கதை. ஒன்றரை மணி நேரம்தான் படம். தமிழில் வசனங்கள் கேட்கலாம். பார்த்து விட்டு கதை புரியாவிட்டால் இங்கு செல்லலாம்!
=========================================================================================================================
தினசரி எனக்கு Good Morning மெஸேஜ் அனுப்பும் நண்பர்களில் வெங்கட்ராமன் என்ற நண்பர் நேற்று அனுப்பிய படம் என்னைக் கவர்ந்தது. அதைச் சேமித்துக் கொண்டு அதற்கு எழுதியது கீழே...
எட்டிப் பார்க்கும் குதிரைக்கு ஒரு கவிதை
இன்றைய கோட்டாவுக்கு ஒரு
குட்டி விடுதலை கிடைக்குமா
அல்லது
சாப்பாடு கொண்டு வருகிறார்களா
என்று
எட்டிப் பார்க்கிறது உள்ளே
கட்டிப் போடப்பட்டிருக்கும்
குதிரை
இது குறித்து கேட்டபோது
குதிரை சொன்னது...!
குதித்து எப்பொழுதும் ஓடாமல்
குறித்த நேரத்தில் மட்டும் ஓடுவது
பழகிவிட்டது
அடிமை வாழ்வில்
அன்றாடம் உணவு கிடைக்கிறது தான்
ஆனால்
சுதந்திர வாழ்வில்
எப்பொழுதும் கிடைப்பது சந்தோஷம்
காடுகளில் ஓடிய நாங்கள்
இப்போது காசுக்கு ஓடுகிறோம்
===================================================================================
M S விஸ்வநாதன், S P பாலசுப்ரமணியம்
1976 ல் ஜெய்சங்கரின் 150 வது படமாக வெளியானது டாக்சி டிரைவர். எனவே ஸ்பெஷலாக ஈஸ்ட்மென் காலரில் எடுத்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி அவருக்கு ஜோடி. நான்கு வயதில் கந்தன் கருணை படத்தில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரீதேவி 13 வயதில் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியானார். அதே வருடமே இந்தப் படத்திலும் நடித்தார். 20 வயதில் ஹிந்திக்குப் போய் நடித்தவர் அங்கே கொடிகட்டி பறந்தார். ஜெய்சங்கருடனேயே குழந்தை நட்சத்திரமாக கனிமுத்து பாப்பா படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.
— Sridevi, The New Indian Express, 2013
எம் எஸ் விஸ்வநாதன் இசை; பாடல் கவியரசர். இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனுடன் SPB சில பாடல்கள் இணைந்து பாடி இருக்கிறார். அதில் ஒன்று இது. வேறு இரண்டு பாடல்கள் முன்னர் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைவு!
சமயங்களில் எம் எஸ் வி யை ஓவர்டேக் செய்வதுபோல SPB பாடும்போது MSV செல்லமாக கோபித்துக் கொள்வாராம்! இந்தப் பாடலில் தலைவர் குரலை கேளுங்கள். ரேவதி ராகத்தில் அமைந்த பாடல் இது என்கிறது விக்கி!
நான் ரெகார்ட் செய்து வைத்திருந்த SPB கேசட்டில் A side ல் கடைசி பாடல் இது. இரண்டாவது சரணமும் முடிந்து பல்லவி வரும் இடத்தில பாதியில் பொட்டென்று நின்று விடும் பாடல்!
SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க
இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
SPB : காற்றினில் வந்தது பூவின் வாசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்
காற்றினில் வந்தது பூவில் வாசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்
தேவன் மலரென தெரிந்தது இன்று
தேடிய கண்கள் செல்வது எங்கு
SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
MSV : வைரம் அமர்வது தங்கத்தின் மீது
மாதவன் துணை தான் திருமகள் மாது
மங்கையின் அழகுக்கு இணை ஒன்று ஏது
மன்மதனே கண்டு மயங்கிடும் போது
SPB : மாணிக்க வீணையில் ஆயிரம் ராகம்
வாசிக்க போவது யாரோ எவரோ
காணிக்கை தந்தது ஏழையின் கரங்கள்
கடவுள் வகுத்தது அவரவர் இடங்கள்
MSV, SPB : பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க
MSV, SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
MSV: கண்கள் இரண்டும் கரு வண்ணப்பூக்கள்
காவியம் பாடிடும் கார்முகில் கூந்தல்
பெண்மைலே ஒரு பேரின்ப நடனம்
பிறந்தால் அதுதான் ஜாதியின் ஜனனம்
SPB : களங்கமில்லா ஒரு சந்திரவதனி
கவிதையிலே ஒரு சௌந்தர்யலஹரி
தென்னம்பாளை செந்நிற வாழை
சிறியவன் சொன்னேன் சொன்னவன் ஏழை
குழு : பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க
MSV, SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
=========================================================================================
இளையராஜா, S P பாலசுப்ரமணியம்
SPB, MSV யுடன் சேர்ந்து பாடிய பாடல் கேட்டோம்... கேட்டோம்தானே?!!
அடுத்து SPB இளையராஜாவுடன் சேர்ந்து பாடிய ஒரே பாடல்! எனக்குத் தெரிந்து இந்த ஒரே பாடல்தான் இளையராஜாவும், SPB யும் இணைந்து பாடி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எவ்வளவு யோசித்தும் வேறு பாடல் நினைவுக்கு வரவில்லை.
புதுப்புது அர்த்தங்கள் என்கிற படம் K பாலச்சந்தர் இயக்கத்தில் 1989 ல் வெளியானது. ரகுமான், கீதா, சித்தாரா நடித்திருந்த அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. பாடல்கள் வாலி.
இந்தப் படத்தில் இளையராஜா இசைக்குழுவில் வயலின் வாசிப்பவராக ஜனகராஜ் நடித்திருப்பார். அவருக்கு திக்குவாய் பிரச்னை இருக்கும். அதை வைத்தே பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. ஜனகராஜுக்கு இளையராஜாவும், ரகுமானுக்கு SPBயும் குரல் கொடுத்திருப்பார்கள்.
இளையராஜா : வாசிக்கறீங்ளா
ஆ ஆ வாசீங்கோ
ஓ ஒன் டு கொடுக்கணுமா
சரி ஒன் டு த்ரீ போர்
அட ஏன் வாசிக்கல
ர் ர்.. ரிதம் என்னன்னு சொல்லணுமா
ஆங் ஜும் கு ஜூஜும்கு ஜும் கு
ஜூஜும்கு ஜும் வாசீங்கோ
இளையராஜா : அப்படி தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
எடுத்து நான் விடவா என் பாட்டைத் தோ
தோ தோ தோ
குடிக்கதான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
SPB : என்னடா சொல்ல வர்றே
இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ தோழா
SPB : ஆஹான்
இளையராஜா : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
ஹே ஹே
SPB : ஓஹோ
இளையராஜா : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்
இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ
SPB : தோழா
இளையராஜா : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ
SPB : இந்தாடா சோடா
இளையராஜா : அய்யோ
சபாஷ் இந்தா
இளையராஜா : ஏ நான் பாட பிறந்திடும் ஷோ ஷோ ஷோ
ஷோக்கு
ஆனாலும் தடுக்குது இளையராஜா : நா நா நாக்கு
என் பாடல் இனித்திடும் தேன் தேன்
தேன் அட தென்பாண்டி குயிலினம் நான் தான்
இளையராஜா : நீ பாட் போ போ பாடு
SPB : நான் பாடவே ஏழு சுரங்களும் தான் தாவிடும் நாவிடம்
இளையராஜா : ஓஹோ
SPB : ஊர் கூடியே மாலை அணிந்திட தான் ஆடிடும் ஆடிடும்
இளையராஜா : ஓஹோ
SPB : என் இசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா
இளையராஜா : அட டா டா டா
SPB : நள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதோ
இளையராஜா : சு சு சு
இளையராஜா : என்ன உன் சங்கதி சொல்லம்மா
இளையராஜா : ஹான் ஹான்
இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோ
தோதோதோ
SPB : தோழாடா
இளையராஜா : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
SPB : வராத வாா்த்தையை வுட்டுடு
இளையராஜா : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
SPB : ஜமாய்
இளையராஜா : இன்பவெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா என் பாட்டை
SPB : தோழா தோழா
இளையராஜா : தா தா தா தா தா
SPB : தா தக்கிடதா
இளையராஜா : ஹே ஹே தேங்க் யூ
தி தி தி தி தி தி
SPB : தீம் தகிட தீம்
இளையராஜா : சபாஷ்
இளையராஜா : தா தா
SPB : தகிட
இளையராஜா : தீ தீ
SPB : திகிட
இளையராஜா : கி கி
SPB : கிடித
SPB : ரொம்ப திக்குதா
இளையராஜா : ஹா ஹா ஹா ஹா ஹா ஹே ஹே
SPB : பாடாக படுத்துது கா கா கா
இளையராஜா : காதல்
SPB : கூடாது நமக்குள்ளே மோ ஓஓ
இளையராஜா : ஹே ஹே மோதல்
SPB : பால் கூட கசக்குது ஏன் ஏன் ஏன்
இளையராஜா : ஏ....ன்
SPB : பட்டுப்பாய் கூட உறுத்திட பார்த்தேன்
இளையராஜா : என்ன ஓஓ…
SPB : டேய் சும்மா இருடா
SPB : என் ஓவியம் நீல நயனங்களைக் காட்டுதே வாட்டுதே
பெண் ஞாபகம் பாதிஇரவுகளில் தோன்றுதே தூண்டுதே
பத்து விரல் நான் தீண்ட
சித்திரம் வாராதா
இளையராஜா : த்சு த்சு த்சு
SPB : பட்டு உடல் நான் வேண்ட சம்மதம் தாராதா
இப்பவோ எப்பவோ சொல்லம்மா
இளையராஜா: ஹான் ஹான்
SPB : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா
இளையராஜா : ஹான்
SPB : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
இளையராஜா : ஹ்ம்ம்
SPB : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்
இளையராஜா : ஹான்
SPB, இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா
குடிக்கத்தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா
===========================================================================================================
பல ஆண்டுகளுக்கு முன் ‘வசந்த்’ தொலைக்காட்சியின் ‘சந்திப்போமா’ நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட, நாடக, சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான நித்யாவின் பேட்டி ஒளிபரப்பானது. பேட்டி கண்டவர் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரமான ஐஸ்வர்யா. பேட்டியின்போது ‘நடிகர் திலகத்தை’ப் பற்றி நித்யா சொன்னது:
“பாலாஜி சாருடைய ‘தீர்ப்பு’ படத்தில் சிவாஜி சாருடைய மகளாக நடித்திருந்தேன். சரத்பாபு, விஜயகுமார் இருவரும் என் அண்ணன்கள். படத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகும் காட்சி வரும். என் உடலை தகனம் செய்யும் காட்சி சத்யா ஸ்டுடியோவின் வெட்டவெளி பொட்டலில் நடந்தது. என்னைக் கற்பழித்தவனைக் கொன்றுவிட்டு சிறையில் இருக்கும் என் தந்தை சிவாஜி சார், பரோலில் வந்து என் சிதைக்கு தீ வைப்பதாக காட்சி.
விறகுகளால் சிதை அமைத்து அதில் என்னைப் படுக்க வைத்து, உடல் முழுக்க வரட்டி அடுக்கி முகத்தை மட்டும் திறந்து வைத்து குளோசப் ஷாட்டுகளை எடுத்தனர். பின்னர் முகத்தையும் வரட்டியால் மூடி சிவாஜி அப்பா தீ வைப்பது போல காட்சி. அதை எடுத்து முடித்ததும் டைரக்டர் , சிவாஜி சாருடைய குளோசப் காட்சிகளை எடுத்து முடித்து அனுப்பி விடலாம் என்று மும்முரமானார்.
அதைக் கவனித்த சிவாஜி சார் டைரக்டரிடம், ‘ஏப்பா, அந்தப் பொண்ணை என்ன மலர்ப்படுக்கையிலா படுக்க வைத்திருக்கிறீர்கள்? பாவம், சிதையில் படுத்திருக்குப்பா! முதல்ல அதோட ஷாட்டுகளை எடுத்து முடிச்சு குழந்தையை அங்கிருந்து கிளப்புங்கப்பா. அப்புறம் என்னோட ஷாட்டுகளை எடுத்துக்கலாம். அந்தப் பெண்ணோட சீன்கள் முடிய எவ்வளவு நேரமாகும்?’ என்று கேட்டார்.
‘ஒரு மணி நேரம் ஆகும் அண்ணே’ என்று இயக்குனர் சொன்னதும், ‘இரண்டு மணி, மூன்று மணி நேரம் ஆனாலும் அப்பா நான் வெயிட் பண்றேன். முதல்ல அந்த குழந்தையோட சீன்களை முடிச்சு சிதையிலிருந்து எழுப்புங்க’ என்று சொன்னவர், அந்த வெட்டவெளியில் ஒரு குடையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.
திரைப்படங்களில் இது போன்ற சாவுக்காட்சிகள் எடுத்தால் அது முடிந்ததும் அதில் நடித்தவருக்கு திருஷ்டி கழிப்பார்கள். என்னுடைய காட்சிகள் எடுத்து முடித்ததும் எழுந்து வந்த சிவாஜி சார், ‘குழந்தைக்கு நான் திருஷ்டி கழிக்கிறேன்’ என்று திருஷ்டி கழித்தவர், ‘உனக்கு சாவே வரக்கூடாதுன்னு ஆசிர்வதிக்கிறேன்மா’ என்று ஆசிர்வதித்தார்.”
இந்த இடத்தில் நித்யாவின் கண்கள் பனித்தன. “அவரோடு ஒப்பிடும்போது நான் எல்லாம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களில் சின்னவங்க, பெரியவங்க என்ற வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் அவர் மதிப்பு கொடுப்பதில் எல்லோரும் அவர்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம்.”
அப்போது பேட்டி கண்ட ஐஸ்வர்யா சொன்னது: “அவரோட படங்களைப் பார்க்கும்போது சிவாஜி அங்கிள் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய கலைஞர், எவ்வளவு பெரிய சாதனையாளர் என்றுதான் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவரோடு பழகிய உங்களைப் போன்றவர்கள் சொல்லும் இது போன்ற சம்பவங்கள் மூலம் தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதும் நமக்குத் தெரிகிறது. இனி வரும் தலைமுறைகளும் அவரைப் பற்றி அறிந்து வியக்கத்தான் போகின்றன.”
=====================================================================================================================================
அரியாசனத்தை மட்டுமா கரையான் அரித்திருக்கிறது?!

ஆரம்ப எழுத்துகள் பைண்டிங் வேலையில் காணாமல் போயிருந்தாலும் புரிந்துகொள்ள முடியும்!












சந்திராஷ்டமத்தில் புதிய நபர் நுழைந்தபோதே என்ன நடக்கப் போகிறது எனப் புரிந்துவிட்டது. புதுப்பாடல் என்னன்னு தெரியாது. இருந்தாலும் இதில் யார் பல்ப் வாங்கினதுன்னு யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... புதுப்பாடல் பராசக்தி பாடல். கேழே படம் கொடுத்திருக்கேனே!
நீக்குபனி படத்தின் ஸ்டில்களை வெளியிடாத்தன் காரணம் என்ன? கதாநாயகியைப் பிடிக்கலையா?
பதிலளிநீக்குஒவ்வொன்றாய் முடித்துக் கொண்டு வரும்போது இணைக்க மறந்து விட்டது. இப்போது இணைத்து விட்டேன்.
நீக்குஹிந்தியில் அந்தப் படம் "பாணி" என்னும் பெயரில் இருக்கு.
நீக்குபாணி யா இருக்காது. பானி யாதான் இருக்கும். தண்ணீர்!
நீக்குபடம் பெயர் பணி அதாவது வேலை
நீக்குபுரிந்தது. கீதா அக்கா ஹிந்தி வார்த்தை சொன்னார். அதற்குச் சொன்னேன். ஹிந்தியில் வேலையை காம் என்று சொல்லலாம்!!
நீக்கு//பாணி யா இருக்காது.//"ப" பக்கத்தில் கால் வாங்கி இருக்காங்க! "பாணி" தான்.
நீக்கு
நீக்குप ा ण ी
குறிப்பிட மறந்தது வேட்டையாடு விளையாடு வில்லன்களை நினைவுபடுத்தியது பற்றி... அந்த தீம்.
பதிலளிநீக்குஓஹோ.. கொஞ்சம் யூகிக்க முடிகிறது!
நீக்குசிவாஜிக்கு அரசியலில் ஈடுபடணும் என்ற எண்ணம் இல்லாத்தால் தன்னைப்பற்றி அவரும் விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை, பத்திரிகையாளர்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பகுதி புதிது, ரசித்தேன்.
பதிலளிநீக்குசிவாஜி செய்த உதவிகளையும் அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக ராணுவத்துக்கு அவர் நிறைய நிதி கொடுத்திருக்கிறார்.
நீக்குஜிவாஜி அரசியலில் ஈடுபட்டு எடுபடாமல் போனது. தோற்றுப் போனார். பின்னர் ஒதுங்கிய பின்னர் அரசியல் குறித்தே பேசினதில்லை. அவரைப் பற்றி நித்யா சொல்லி இருப்பவை நானும் முன்னர் படிச்சிருக்கேன். நித்யா பிடித்த நடிகைகளில் ஒருத்தர்.
நீக்குதேனாம்பேட்டை...இறங்கு. (சிவகுமார் படம்).. அந்தப் பாட்டில் மலேஷியாவுடன். எஸ் பி பியுடன் வேறு பாடல் யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குநான் முன்னரே யோசித்து மண்டை காய்ந்து போனேன். எனக்குத் தெரிந்து வேறு இல்லை! நீங்கள் சொல்லி இருக்கும் 'என் கண்மணி' பாடலில் SPB மட்டுமே ஆண்குரல். அந்த வசனம் சிவகுமார் குரல். பெண்குரல் சுசீலாம்மா.
நீக்குதைரியமா great flood படம் பார்க்கலாமா? நேரம் வீணாகாதே. எனக்கு இல்லாத விஷயமாக வரும் சில sci-fi பிடிப்பதில்லை.
பதிலளிநீக்குஇவ்வகை படங்கள் பிடிக்காது என்றால் நோ, பார்க்காதீர்கள். டைம் லூப் படம் போலவும் எடுத்துக் கொள்ளலாம். வேறு விளக்கங்களும் இருக்கலாம். ஆனால் ஜஸ்ட் ஒண்ணரை மணி நேரம்தான்!
நீக்குதேடித் தேடிப் படங்கள் பார்க்கறீங்க. இருவருமே விமரிசனம் எழுதுவதோடு அல்லாமல் இணையத்திற்கும் பங்களிப்புச் செய்யறீங்க. வாழ்த்துகள்.
நீக்குநன்றி கீதா அக்கா. பார்த்த படங்களை பகிரச்சொல்லி நெல்லை சொன்னார். நடுவில் நிறுத்தி இருந்தேன்.
நீக்குகீசா மேடம்... ஒரு படத்தை ஒரு சிட்டிங்கில் நான் பார்த்ததே இல்லை. விதிவிலக்கு கோகுலத்தில் சீதை என்று நினைவு. மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரீவைண்ட் பண்ணிப்பண்ணிப் பார்ப்பேன். கச்சா முச்சா பாட்டு டான்ஸ்லாம் ஓட்டிடுவேன்
நீக்குநானும் அவ்வண்ணமே... ஆரம்ப பெயர் போடும் காட்சிகள், சண்டைக்காட்சிகள், பாடல்கள், சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாள், மெதுவாக நடக்கும் காட்சிகள்..
நீக்குகோகுலத்தில் சீதை நானும் பார்த்திருக்கேன். எங்க வீட்டுக்குக் கேபிள் இணைப்பு வந்த புதுசிலே கேபிளில் போட்டாங்க. இது சேரனின் "பொற்காலம்" எல்லாம் பார்த்தேன். பின்னர் அலுப்பு வந்து விட்டது. படங்கள் பார்ப்பதையே நிறுத்திட்டேன். சீரியல்கள் எப்போவுமே ஆழ்ந்து கவனிச்சுப் பார்த்தது இல்லை. ஆனால் ஸ்ரீரங்கம் வந்தப்புறமா நம்மவர் மாலை ஆறரைக்குத் தொலைக்காட்சி போட்டால் அவர் இரவு பத்தரை வரை பார்த்துட்டுப் படுப்பார். நான் எட்டரை ஒன்பது வரை உட்கார்ந்துட்டுப் பின்னர் படுத்துடுவேன். :))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குசந்திராஷ்டமம் பரிகாரம் நல்லதுதான்.
பதிலளிநீக்குஅமைதியாக இருந்தாலும் வீடு தேடி வருகிறதே! பக்கத்து வீட்டு பெண் ரூபத்தில்
புதுபாடலை சொல்லாமலே போய் விட்டாரே!
புதுபாடல் நானும் கேட்கவில்லை இன்னும்.அதனால் எனக்கும் தெரியவில்லை.
ஹா.. ஹா.. ஹா... சும்மா கற்பனை தான் அக்கா. முத்தாரமே என்று பராசக்தி பாடல் வரி யு டியூபில் பார்த்ததும் தோன்றியது இது. அவ்வளவுதான். ஏனெனில் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது ஏ எம் ராஜா பாடல்தான். புதிய பாடல் நானுமே கேட்கவில்லை. இதைச் சொன்னால் மகன்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று கற்பனை செய்து ஒரு பெண் கற்பனைப் பாத்திரத்தைக் கொண்டு வந்தேன்!
நீக்குஎலி குஞ்சுகளை பார்த்து நடந்த சுவாரஸ்யமான உரையாடல்களை ரசித்தேன்
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் படம் விமர்சனம் நன்றாக இருக்கிறது. ஆனால் கொஞ்ச நாட்களாக அதீத ரத்தம் சிந்தும் காட்சிகளை பார்க்க மனம் துணிய மாட்டேன் என்கிறது.
மாயவர்த்தில் நடந்த புத்தக கண்காட்சியில் அல்லயன்ஸ் பதிப்பகத்தார் புத்தகங்கள் தான் தேவன் கதைகள் வாங்கினேன்.
FB மெமரியில் உரையாடலின் சுஃவாரயத்தைப் பார்த்தே நானும் இங்கு ஷேர் செய்தேன்.
நீக்குநான் சென்ற வருடம் அல்லயன்ஸில் சோ புத்தகங்கள் சில வாங்கினேன்.
தென் கொரியபட விமர்சனம் குதிரையின் புலம்பல்கவிதை, சிவாஜி பற்றி நித்யா சொன்னது, மற்றும் பாடல்கள், நகைச்சுவை அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவெள்ளி பாடல்களும் வியாழனில் வந்து விட்டதே!
வெள்ளி பாடல்கள் - சென்ற வாரமும் இப்படித்தானே அக்கா?
நீக்குநன்றி உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும்.
இது ராஜ கோபுர தீபம் அகல்விளக்கு அல்ல பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு.
பதிலளிநீக்குதொலைக்காட்சிகளிலும் பழைய பாடல் நிகழ்ச்சியில் வைக்கவே இல்லை. இன்று கேட்டேன் நன்றி.
நான் தொலைக்காட்சியில் பாடல்கள் கேட்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன! எனவே விவரம் தெரியாது.
நீக்குடாக்சி டிரைவர் படம் பார்க்கவில்லை , பார்க்கவேண்டும் யூடியூப்பில் இருந்தால்.
பதிலளிநீக்குவெளிறிப் போயிருக்கிறது காட்சி. படம் எப்படி தெரியுமோ...
நீக்குஒரு கொசுறு தகவல். டாக்சி டிரைவர் என்ற பெயரிலேயே 70 களில் ஒரு ஆங்கிலப் படமும், தேவ் ஆனந் நடிப்பில் ஒரு ஹிந்திப் படமும் வந்துள்ளன. மூன்றுமே வெவ்வேறு கதைகள். தலைப்பு மட்டுமே ஒன்று!
அமைதி காப்பது //
பதிலளிநீக்குஸ்ரீரான், இது எப்பவுமே கை கொடுக்கும், இல்லையா! மனக்குழப்பங்கள், கோபம் எல்லாம் எல்லா நாளும் வரும் போது ......!!!!!
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கீதா
வாங்க கீதா...
நீக்குஉதாரணங்களுக்கு நன்றி. மனக் குழப்பம் கிடையாது. தெளிவாய் இருக்கேன்! வியாழனுக்கு ஒரு பதிவு கொடுக்கணும்னு தெளிவா இருக்கேன்!!!
பாடல் அருமை சகோதரி. நல்ல பொருள் கொண்ட பாடல்.
நீக்கு/ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே /
இங்கும் ( எபி) இவ்வார நாட்கள் அனைத்தும் இப்போதெல்லாம் "பிரண்டு உடனே" நினைவில் கொள்வதற்கு சிறிது குழப்பங்கள் வருகிறது. போகப் போக பழகிவிடுமென நம்புகிறேன்.
ஹா ஹா ஹா நாகேஷுக்கு சொல்லப்பட்ட ஜோசியம் போல பழகிவிடும்!
நீக்கு//இவ்வார நாட்கள் அனைத்தும் இப்போதெல்லாம் "பிரண்டு உடனே" நினைவில் கொள்வதற்கு சிறிது குழப்பங்கள்// கமலா ஹரிஹரன் மேடம்.. சரியாச் சொன்னீங்க. நான் அன்று எபில படித்ததை வைத்து தினத்தை நினைவுகொள்வேன். மத்தவங்க யோசிக்கும்போது நான் சட்னு சொல்லிடுவேன். ஆனால் பாருங்க ஸ்ரீராமுக்கு இது பிடிக்கலை போலிருக்கு. ஹா ஹா ஹா
நீக்குபுது பாணி (கீதா அக்கா சொல்லி இருக்கும் பாணி அல்ல!!) வேண்டாம்னு சொல்றீங்களா?!!
நீக்குஸ்ரீராம்... இந்தப் புதுமைகளை நான் நிச்சயம் வரவேற்கிறேன். இன்றைக்கு இந்த மெனு, இதுதான் என்றிருந்தால் கொஞ்ச மாதங்களில் போரடிக்கும் இல்லையா? நிறைய மாற்றம் செய்யுங்க. வரவேற்போம்
நீக்குநன்றி நெல்லை. முடிந்தவரை மாறுதல்கள் கொடுக்கப் பார்க்கிறேன்.
நீக்கு"நான்தான் சொன்னேனே சித்தி.. காயெல்லாம் இவரை நறுக்கச் சொல்லிடுவேன்.." நான் பார்ப்பதைப் பார்த்தவர், "நல்ல அழகா நறுக்குவீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார்.//
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன்!!
//எனக்கே பேசுவதற்கு கம்மியாகத்தான் சான்ஸ் கிடைக்கும். இதில் மௌனவிரதம் இருப்பது சிரமமா சொல்லுங்கள்!//
அப்படிப் போடுங்க!!!!! எனக்கு வீட்டில் பல சமயங்களில் இது உதவுகிறது!
கீதா
அவர்கள் பேசும்போது என் குரல் எடுபடாமல் போகிறது. அந்த சர்ஜரிக்கு அப்புறம் என் குரலை ஒடுக்கி விட்டார் போல ENT Dr சோமு
நீக்குஜஸ்ட் நேரெதிராக நம் வீட்டில். ஹிஹிஹிஹி....
பதிலளிநீக்குகீதா
:-))
நீக்குஆ! //ஜீவந்திகா//
பதிலளிநீக்குஆ! ஒரு ராகம் நான் எழுதி ......
கீதா
பார்றா.. அப்படி ஒரு ராகம் இருக்கா?
நீக்குயெஸ்ஸு - நான் இதே தலைப்பில் ஒரு.....சொல்ல மாட்டேனே!
நீக்குதிவ்யமணியின் குழந்தை ஜீவாந்திகா....
கீதா
:-))
நீக்குஸ்ரீராம் ரொம்பப் பிடிச்ச பாடல் முத்தாரமே அருமையான இசை...
பதிலளிநீக்குமுத்தாரமே உன் ஊடல் என்னவோ!!? படம் பெயர் தெரியாது...பாட்டு மட்டும் கேட்ட நினைவு உபயம் இலங்கை வானொலி.
கீதா
படம் ரங்கராட்டினம்... அங்கேயே சொல்லி இருக்கேனே.. போதாதற்கு அந்தப் படத்தின் இந்தப் பாடலும், ஒரு தலைவர் பாடலும் share செய்திருந்த லிங்க்கும் கொடுத்திருக்கேனே...
நீக்குபார்த்துவிட்டேன் ஸ்ரீராம் படத்தின் பெயரை...அந்தப் பாட்டு உடனே பாடல் நினைவுக்கு வந்து மனசுல ஓடிச்சா....இதை விட்டுப்புட்டேன்!
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம். வழக்கமான வியாழனாக இல்லாமல் சந்திராஷ்டம வியாழன்! ஹஹஹ! (ஹா ஹா ஹா என்றால் வில்லன் சிரிப்பு போல் இருக்கிறது) அளவுக்கதிகமான சினிமா செய்திகள். அல்லயன்ஸ் தகவல் சிறப்பு. தேவன் புத்தகங்களின் ராயல்டி பணம் தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தப் படுகின்றது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... இ வ்வளவுதான் அளவு என்று இருக்கிறதா என்ன!!! வெள்ளியில் வெறும் சினிமா செய்திகள் மட்டும்தானே இடம்பெறும்!
நீக்குஅல்லயன்ஸ் தகவல் ஒரு விஷயத்தில் அது பகிரப்பட்டதன் பலனை அடைந்து விட்டது பாருங்கள்!
"தேவன்" புத்தகங்களிலே இந்தச் செய்தி வந்திருக்கும். பின் அட்டையில்னு நினைக்கிறேன். பழைய மங்கள நூலகம் புத்தகங்களில் இருக்காது. அலையன்ஸ் பதிப்புகளில் மட்டுமே காண முடியும்.
நீக்குஇப்போது சி ஐ டி சந்துரு வாசித்துக் கொண்டிருக்கிறேன். அல்லயன்ஸ் பதிப்பகம். அண்ணன் வாங்கி இருந்தார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி நல்ல நகைச்சுவையாக உள்ளது. சந்திராஷ்டமம் பற்றிய தெளிவான கருத்து.
/நான்தான் சொன்னேனே சித்தி.. காயெல்லாம் இவரை நறுக்கச் சொல்லிடுவேன்.." நான் பார்ப்பதைப் பார்த்தவர், "நல்ல அழகா நறுக்குவீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார்./
ஹா ஹா ஹா. நல்ல சமாளிப்பு . உங்கள் பாஸ் அழகாக சமாளித்திருக்கிறார்.
" முத்தாரம்" பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசித்திருக்கிறேன். புதுப்பாட்டு கேட்டதில்லை. பழைய அந்தப்பாடலின் சிவாஜி கே. ஆர் விஜயாவின் நடிப்பு நன்றாக இருக்கும். நல்ல கற்பனை கலந்த உங்களின் உரையாடல்களை ரசித்துப்படித்தேன். பாராட்டுக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"கற்பூர பொம்மை ஒன்று" பாடலும் அருமையாக இருக்கும்.அதில் எஸ்பிபி அவர்கள் நடித்தே இருப்பார். படம் பெயர் நினைவில் வரமாட்டங்கிறது.
நீக்குமுத்தாரம் புதுப் பாடல் நானும் கேட்டதில்லை.. ஹிஹிஹி...
நீக்குகற்பூர பொம்மை ஒன்று பாடல் கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற பாடல்.
கமலாக்கா கற்பூர முல்லை ஒன்று பாட்டு எஸ்பிபி? அது ஸ்ரீவித்யா அமலா எல்லாம் வரும் படமாச்சே....ஓ இப்ப நானும் ஜீவந்திகா ஆகிட்டேன்!!!
நீக்குநீங்க சொல்லியிருக்கும் பாட்டு படம் கேளடிகண்மனி என்று நினைக்கிறேன்
கீதா
ஆமாம். நான் சொல்லி இருக்கேன் பாருங்க...
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குநீங்கள் சொன்ன இந்தப்பாடலும் கேட்டுள்ளேன். கூகுள் உதவியில் இப்போது ஐயம் தீர்த்து முதல் வரிகளை கேட்டு வந்தேன். பாட்டு நன்றாக இருக்கும்.
/கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்/
இதையும் முன்பு வெள்ளி பாடல்களில் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்திருப்பார் என நினைக்கிறேன். . பகிரவில்லையெனில் வார வியாழனில், ஸாரி வரும் வெள்ளிகளில் பாடலின் வரிகள் மாதிரி பகிர்வார் :)) என்றோ ஒருநாள் கேட்ட, கேளாமல் தவற விட்ட, நல்ல பாடல்களை இப்படி ஒருநாள் நினைவில் மலர வைப்பதற்கு நன்றி உங்களிருவருக்கும். 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பார்த்துவிட்டேன் ஸ்ரீராம்
நீக்குகீதா
கமலா அக்கா நீங்கள் குறிப்பிட்டுள்ளதாக சொல்லி இருக்கும் பாடல் நான் கேட்டதில்லை கீதா. (சிக்கலான வார்த்தை அமைப்பு, இல்லை?!)
நீக்கு"போங்க ஆண்ட்டி.. உங்களையெல்லாம் ட்ரம்ப் கிட்ட தான் புடிச்சு கொடுக்கணும்..."//
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன்! அவ்வளவு குழப்பிட்டீங்களா என்ன!!!? ஜீவா சின்னப் பெண்ணோ?
கீதா
ஹிஹிஹி... இன்னும் வயது யோசிக்கவில்லை. காலேஜ் பொண்ணுன்னு வச்சுக்குவோமா?
நீக்குபெயரைப் பார்த்ததுமே நினைவில் வந்தவர் ஜீவஜோதி! யார்னு நினைவில் இருக்கு இல்லையா? ஆனால் கற்பனைப் பெண் என்பதும் புரிஞ்சுடுத்து. ஏனெனில் பாஸ் அவருடன் ஒரு வார்த்தை கூடப் பேசினதாத் தெரியலை. நிஜம்மா வந்திருந்தா பாஸ் உபசரிக்கும் விதமே தனி இல்லையோ?
நீக்குசம்பவமும் கற்பனை! நபரும் கற்பனை கீதா அக்கா...
நீக்குஅதான் புரிஞ்சதுனு சொல்லிட்டேனே!
நீக்குஅடிமை வாழ்வில்
பதிலளிநீக்குஅன்றாடம் உணவு கிடைக்கிறது தான்
ஆனால்
சுதந்திர வாழ்வில்
எப்பொழுதும் கிடைப்பது சந்தோஷம்
காடுகளில் ஓடிய நாங்கள்
இப்போது காசுக்கு ஓடுகிறோம்
இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் நிலையை சரியாக சொல்கிறீர்கள்.
ஜோக்குகள் ஜோக்காக இல்லை.
இவ்வளவு தான் இவ்வாறு பின்னூட்டம்.
Jayakumar
இவ்வாறு---- இவ்வார என்று திருத்திக் கொள்ளவும்.
நீக்குவாங்க JKC ஸார் ... சுருக் நறுக் என முடித்து விட்டீர்கள்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇசையமைப்பாளரும், பாடகரும் சேர்ந்து பாடும் பாடல்கள் அருமை. இதில் முதல் பாடலான "டாக்ஸி டிரைவர்" படம் கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கிறது. கேள்வி படாத மாதிரியும் உள்ளது. பாடல் கேட்டேன். முன்பு எப்போதோ கேட்ட நினைவு வந்தது.
இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். ரசித்த பாடலும். படமும் தொலைக்காட்சி தயவில் பார்த்துள்ளேன். நல்ல பாடல்களை இடம் பொருள் ஏவலுடன் சிறப்பாக தொகுத்து தருபவர் நீங்கள். இதில் நான் அதைக் கேட்டிருக்கிறேன். இதைக் கேட்டு படமும் பார்த்திருக்கிறேன் என "எடுத்து நான் விடவா..! " என்றால், யார்தான் நம்புவார்கள். :)) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரொம்ப புகழ்பெற்ற பாடல்களை பகிர்வதை நான் தாமதப் படுத்துகிறேன். நான் ரசித்த, அவ்வளவு பிரபலமில்லாத, மறந்து போன பாடல்களை அறிமுகப்படுத்துகிறேன். அவ்வளவுதான்!
நீக்குஇன்றைய பாடல்கள் அனைத்தும் நல்ல பாடல்கள். நன்றி பகிர்ந்தற்கு.
நீக்குநன்றி ரசித்ததற்கு!
நீக்குபராசக்தி படமும் அந்த கொலாஜில்? ஓ பழைய கதை என்பதாலா? அந்தப் படத்திலும் இந்தப் பாட்டு வருகிறதா?
பதிலளிநீக்குகீதா
கீதா.. நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? பராசக்தி சிவ கார்த்திகேயன் நடித்து புதிதாக வந்திருக்கும் படமாக்கும்! அதில் முத்தாரமே என்று ஒரு பாடல் இருக்கிறதாம்..
நீக்குஸ்ரீராம் தெரியும் சிவகார்த்திகேயன் படம் அதைப் பற்றிய வம்பு தும்புகள், எல்லாம் அதான் கூகுள் யுட்யூபை தொறந்தாலே வந்துருதே!
நீக்குஇந்தப் படத்திலும் முத்தாரம்னு பாட்டு இருக்கா இருங்க கேட்டுவிட்டு வருகிறேன் என்னன்னு பார்த்து
கீதா
முத்தாரம் பாட்டு கேட்டேன் ஸ்ரீராம் - retro effect கொண்டு வரணும்னு அப்படியான மெட்டில்...பழைய பாட்டை நினைவுபடுத்துகிறது, என்ன பாட்டுன்னு யோசிக்கிறேன். நீங்க டக்குனு கண்டுபிடிச்சிடுவீங்க,... குங்குமப்பூவே கொஞ்சு புறாவே பாடல் மெட்டு போல இருக்கிறது.
நீக்குகீதா
ஓ.. ஓகே கீதா... எனக்கென்னவோ அந்தப் படத்தில் ஒரு பாட்டும் பிடிக்கவில்லை!
நீக்குஸ்ரீராம் சொல்றதைப் பார்த்தால், படம் சூப்பர் பாடல்கள் சரியில்லை என்ற அர்த்தம் வருகிறதே...
நீக்குஇல்லை நெல்லை.. படம் பார்க்கும் எண்ணமோ பொறுமையோ இல்லை! அனாவசிய ரத்தக்கொதிப்பு பிரச்னைகளை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டாம் பாருங்கள்!
நீக்குஏற்கனவே படம் பெரும் வெற்றி ஆயிரம் கோடி கிளப்பில் இணைகிறது என்றெல்லாம் நியூஸ் பார்த்த நினைவு.
நீக்குநம்ப முடியவில்லை.
நீக்குஎலிக்குஞ்சுகள் சுண்டி இழுத்த சுவாரசியமான கருத்துகளை நானும் ரசித்தேன். தொட்டில் போட்டு படம் எடுத்திருக்கலாமோ!!!!!!
பதிலளிநீக்குகீதா
அவை எங்கே சென்றன என்றும் குறிப்பிட்டிருந்தேன்.. படித்தீர்கள்தானே!
நீக்குயெஸ்ஸு! அதான் அம்மாக்கு கேக் வெட்டி செலிபிரேட் பண்ணிட்டு இதுங்களை தூரமா கொண்டு விட்டுட்டீங்கன்னும் சொல்லிருப்பதை பார்த்தேனே!! கீதாக்கா சொல்லிருக்காங்களே எதுக்குப் பக்ஷணம் ஆச்சோன்னு...!!!!
நீக்குகீதா
நெல்லை சொல்லியிருக்கும் படம் நல்லாருக்கு விமர்சன ம். மலையாளத் திரைப்படங்கள் நிஜமாகவே ரொம்ப நல்லா பண்ணறாங்க. ஏனோ தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை.அங்கு நல்ல ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குகீதா
நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
நீக்குதமிழில் ஜிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர் காலத்திலாவது குடும்பப் படங்களாக வந்தன. இப்போல்லாம் குடும்பம் என்னும் அமைப்பையே காட்டுவதில்லை. குடிப்பதும் கணவன் இருக்கையில் இன்னொருவரோடு உறவு கொள்வதும் தான் நடைமுறை வாழ்க்கை என மாறி விட்டது. சமுதாயமும் அப்படிச் சீரழிந்து விட்டது. யதா ராஜா ததா ப்ரஜா!
நீக்குஅரசியல் சிவாஜி போட்டுக் கொண்ட சூடு. மகன்கள் அவர் காசை கரியாக்குவதாக கண்டித்தார்கள் என்று படித்த நினைவு.
நீக்கு/எம்.ஜி.ஆர் காலத்திலாவது குடும்பப் படங்களாக வந்தன.// நேற்று ஒரு தளத்தில் சுதர்ஷன் க்ரியா நான் பண்ணும்போது நீரும் நெருப்பும் படம் பார்க்க ஆரம்பித்தேன். இருபது நிமிடங்கள்தான் பார்த்திருக்கிறேன். இனி எந்தத் தளத்தில் இருக்கு என்று தேடணும்.
நீக்கு//மகன்கள் அவர் காசை கரியாக்குவதாக கண்டித்தார்கள் என்று// சுயநலத்திற்கு எடுத்துக்காட்டு போலிருக்கு அவர் பசங்க.
நீக்குஉண்மை. ஆனால் அது ஓரளவு நியாயமும் கூட!
நீக்குஜிவாஜி கடைசி வரை கூட்டுக் குடும்பம். தம்பி பையர்கள் கூடச் சேர்ந்து தான் இருந்தாங்க. இப்போத் தெரியலைனாலும் அவ்வளவு பேருக்கும் செலவுகள் இருக்கும் இல்லையா? ஆகவே ஜிவாஜியின் பையர்கள் காசு கரியாகுது சொல்லி இருந்தாத் தப்பே இல்லை. ஜிவாஜி பங்குக்குப் பெண்களுக்கு அதிலும் முக்கியமாக "சாந்தி" என்னும் முதல் பெண்ணுக்கு அதிகமாவே கொடுத்தார் என்று சொல்லுவாங்க. பின்னால் பாகப்பிரிவினையின் போது பிரச்னை வந்ததுனு செய்தித் தாள்களில் செய்திகள் வந்தன. இதைச் சுயநலம்னு எல்லாம் சொல்ல முடியாது. வளர்ப்பு மகன் சுதாகரனுக்குப் பெண் கொடுத்த வகையிலேயே ஜிவாஜி குடும்பத்துக்கு எக்கச்சக்கச் செலவுனும் சொல்லுவாங்க. இத்தனைக்கும் அப்போ நாங்க குஜராத்தில் இருந்தோம். எல்லாம் பத்திரிகைச் செய்திகள் அல்லது கிசுகிசுக்கள்.
நீக்குதேவன் அவர்களுக்குக் குடும்பம் இல்லையோ?
பதிலளிநீக்குதேவன் அறக்கட்டளையின் பணம் தர்மகாரியங்களுக்குச் செலவிடப்படுவது நல்ல விஷயம்.
கீதா
இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
நீக்குதேவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. முதல் மனைவி இறந்து போய் இரண்டாவது திருமணம் செய்வித்திருக்கின்றனர். ஆனால் அவரால் இரண்டாம் மனைவியுடன் மனம் ஒன்றிப் பழக முடியவில்லை. எனினும் குழந்தை இல்லை என்பது கடைசி வரை அவருக்கு ஒரு உறுத்தலாகவே இருந்திருக்கிறது. அதிலும் அவருக்குப் பிள்ளைக்குழந்தைகள் தான் பிரியம். தன் கதைகளில் சின்னஞ்சிறு சிறுவர்கள் வருவது போல் எழுதி, அவர்களைச் சுந்துப்பயல், விச்சுப்பயல் என்றெல்லாம் பெயர்களில் அழைத்து அவர்களின் குறும்புகளை உள்ளார்ந்த ஆனந்தத்துடன் ரசித்து எழுதுவார். சின்னஞ்சிறு பயல்கள் குறித்துக் கட்டுரைகளே எழுதி இருக்கார். அவருடைய மருமகன் (சகோதரி பிள்ளைனு நினைக்கிறேன்.) அவர் தான் அவருடைய புத்தகங்களைத் தொகுத்து அறக்கட்டளை அமைத்து வெளியிட்டது எனச் சொல்லிக் கேள்வி.
நீக்குஓ அப்படியா? செவ்வாய் பதிவில் தந்துள்ள விவரங்களை கூட ஒரு பெயர் சொல்லி இருப்பார் விகடன் ஆசிரியர்.
நீக்குகொரியன் படமும் நோட்டட். சுவாரசியமான படம் என்று தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் நடப்பதாக....இருங்க அது எதையோ சொல்கிறது. முன்பு வாசித்த நினைவு அதாவது ராமாயணம் திரும்பத் திரும்ப நடைபெறுமாம்.
பதிலளிநீக்குநம் சமய நம்பிக்கைகளின்படி, பிரபஞ்சம் சுழற்சி முறையில் உருவாவதும் அழிவதுமாக இருப்பதால், ராமாயணம் போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்று அதைப் பற்றிப் பேசுபவர்கள் நம்புகின்றனர். புராணங்களின்படி, ஒவ்வொரு மகா யுகத்திலும், யுகங்களின் சுழற்சிக்கு ஏற்ப, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் நிகழ்வுகள் மீண்டும் நிகழ்கின்றன எனப்படுகிறது. இதை பேஸ் பண்ணி எடுத்திருப்பாங்களோ? ஃபிக்ஷனாக?
கீதா
நமக்கு ஒரு ராமாயணம்தான் தெரிகிறது. மற்ற ராமாயணங்கள் தெரியவில்லை.
நீக்குஆமாம், காகபுஜண்டர் சொன்னதாக வரும். இந்தக் குறிப்பைப் படிச்சதை அடையாளமா வைச்சிருந்தேன். எங்கே போச்சுனு தெரியலை. விரிவாக வந்திருக்கும். ஆஞ்சநேயர் ஒவ்வொரு ராமாயணம் முடிவிலும் ஒரு கல்லைத் தூக்கிப் போடுவதாகவும் படிச்சேன். இதைப் படிச்சதும் எனக்கு வந்த சந்தேகம். நாமும் ஒவ்வொரு யுகம் முடிவிலும் ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் இதே பிறவி தான் எடுப்போமா? இதே நிகழ்வுகள் தான் நடக்குமா? அவை எல்லாம் நமக்கு நினைவில் இருக்குமா?
நீக்குஇதே பிறவி எடுத்தால் கர்மம் எப்படி தொலையும்? அப்படிப் பார்த்தால் என் அம்மா இப்போது மறுபடி பிறந்து ஹேமாவாக எங்கள் வீட்டில் வந்திருக்க வேண்டுமே...!
நீக்குநான் சொன்னதை நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை. அல்லது எனக்குச் சொல்லத் தெரியலை. இந்த யுகத்தில் பிறப்பாங்களானு நான் கேட்கவில்லை. மறுபடியும் சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்னு ஆரம்பிக்கையில் வரும் கலி யுகத்தில் நாம மறுபடி இதே பிறவி தான் எடுப்போமா என்பதே என் கேள்வி. ஏனெனில் ஒவ்வொரு யுக ராமாயணத்திலும் ஒவ்வொரு ராமர் தோன்றுவதாலும் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பார் எனவும் சொல்லுவதால் மறுபடி மறுபடி இதே போலத் தான் எல்லா யுகங்கலில் தொடர்ந்து வந்து கொண்டிருக்குமா? கொஞ்சம் தெளிவாய்ச் சொல்லிட்டேனோ?
நீக்குசிக்கலான யோசனைகள்..சாம்பு மாமாவையும் உங்களையும் ராஜா ராணி உடையில் நினைத்துப் பார்க்கிறேன்!
நீக்கு//அப்படிப் பார்த்தால் என் அம்மா இப்போது மறுபடி பிறந்து ஹேமாவாக எங்கள் வீட்டில் வந்திருக்க வேண்டுமே...!// அம்மா மட்டும் நினைச்சால் போதுமா? இப்போல்லாம் யார் குழந்தை பெத்துக்கப் போறாங்களோ அவங்க இஷ்டம் தானே! என் தம்பி பையர் சின்னவருக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் ஆகியும் இன்னமும் குழந்தை பெத்துக்காமல் தள்ளிப் போட்டுட்டு இருக்காங்க. இப்போல்லாம் பெரியவங்க எதுவுமே சொல்ல முடியாது. எங்க காலத்தில் எங்களுக்கெல்லாம் குழந்தையே வேண்டாம்னு மாமனார்/மாமியார் சொன்னாங்க. அதையும் மீறிக் குழந்தைகள் பிறந்தன. இப்போ மாமியார்/மாமனார் ஆசைப்பட்டல் கூடப் பிறப்பது யார் கையிலும் இல்லை.
நீக்குஎன் உறவிலும் நிறையபேர் ஒரு குழந்தை போதும்.. அதை வளர்க்கவே காசு சரியா போயிடும் என்கிறார்கள் இன்றைய இளைய தலைமுறை!
நீக்குநான் சொன்னதே வேறே அர்த்தம். இங்கே விரிவாய்ச் சொல்ல முடியலை! :( இப்போதைய ந்யூக்லியர் குடும்பம் பத்திச் சொல்லலை. இதன் தாக்கம் 2040 ஆம் ஆண்டில் தெரியும்னு ஏற்கெனவே செய்திகள் வருகின்றன. நல்லவேளையா நானெல்லாம் இருக்க மாட்டேன். ஆனால் குஞ்சுலுவுக்கெல்லாம் 24, 25 வயசு தான் ஆகும். என்ன செய்யுமோ? :(
நீக்குகுதிரை - கவிதை ரொம்ப நல்லாருக்கு. அரண்மனைக் கிளி போல வாழ்க்கை குதிரைகளுக்கு.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். நன்றி கீதா.
நீக்குஇது ராஜகோபுர தீபம்....நான் பல முறை கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ராகம் ரேவதியா? ம்ம்ம் எனக்குப் புலப்படவில்லை
பதிலளிநீக்குகீதா
ரசித்த பாடல், ஸ்ரீராம் இப்பவும் கேட்டுக் கொண்டே கருத்து இடுகிறேன்.
நீக்குகீதா
எனக்கும் ரொம்ப்ப்பப் பிடிக்கும்!
நீக்குஎஸ்பிபி, எம் எஸ் வியுடன் சேர்நு பாடியது இதுதெரிந்தது
பதிலளிநீக்குஆனால் ராஜாவுடன் பாடியது எதுவாக இருக்கும்னு யோசித்த போது.......ஓ இந்தப் பாட்டா. பாட்டு கேட்டிருக்கிறேன்,. ஜனகராஜ் குரலுக்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது இல்லையா ராஜாவின் குரல்! நல்ல பாட்டு ரசித்தேன்,
ராஜா கூட எஸ்பிபி இடையில் அவரது குறும்புகளைப் பாட்டில் கலந்தால் ராஜா சொல்வாராம் அவர் நோட்ஸ்குப்பாடணும் என்று!!! ஆனால் சிலசமயம் சிரித்துக் கொண்டுவிடுவாராம் இவரை மாத்த முடியாதுன்னு!
கீதா
அப்படி இல்லை.. நீ பாட்டுக்கு குரலை இந்த இழுப்பு இழுத்தா என்னால் அதற்கு ஈடு கொடுத்து பாட முடியாது என்று சொல்வாராம்!
நீக்குஓ! அப்படியா....நான் சொன்னது சேர்ந்து பாடும் போது இல்லை ஸ்ரீராம்....எஸ்பிபி தனியாக ராஜாவின் இசையில் பாடறப்ப... ஏதோ ஒரு பேட்டியில் கேட்ட நினைவு. அப்படியே நான் தரலை அதெ வார்த்தைகளை....ஜஸ்ட் அதன் அர்த்தம்...எந்தப் பேட்டின்னு பார்க்கிறேன் அப்புறம்.
நீக்குகீதா
மேடையில் பாடும்போது தலைவர் இஷ்டத்துக்கு குரலை இழுத்து பிர்கா போடுவார். அதை கண்டிப்பவர் இளையராஜா.
நீக்குஹான் இப்ப நினைவுக்கு வந்துவிட்டது!! யெஸ் இதேதான்...
நீக்குகீதா
:))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅந்த எலிக் குஞ்சுகள் பாவம்.!! எத்தனை தப்பிப் பிழைத்து தங்களது வினையைத் தொடர சென்றதோ ? எத்தனை வினைப்பயன்களை அனுபவித்ததோ. ? அங்கு ஆண்டவன் விருப்பம் நடந்தேறியிருக்கும் ஆனால், உங்கள் வியாழன் பதிவுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. நடந்த வண்ணம் உள்ளது. நானும் எலியைப் "பற்றிய" பதிவு ஒன்றை எழுதி அது பேசாமல் கிடப்பில் உள்ளது. வெளியிடும் ஆவல் உங்கள் எலிப்பதிவை பார்த்ததும் வெளி வருகிறது. அந்நாள் என்றோ.? அதுவும் ஆண்டவன் சித்தந்தானே..! நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா.. எலிப் பதிவு இரண்டு மூன்று ஏற்கனவே இங்கு வந்திருக்கிறது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்களும் அநேகமாக அங்கு கமெண்ட் செய்திருப்பீர்கள்!
நீக்குசிவாஜியின் மறுபக்கங்கள் இப்படி வெளிவந்தால்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அவருடன் இருந்த ஒவ்வொருவரும் பேட்டியில் அவரைப் பற்றிச் சொல்வது பலவும் அவரது நல்ல மனசை சொல்வதாகத்தான் இருக்கிறது. ஐஸ்வர்யா சொன்னது போலதான்,
பதிலளிநீக்குகீதா
தலைகனம் இல்லாத மனிதர். தேவர் மகன் படப்பிடிப்பில் நடந்தததை எல்லாம் கேள்விப்படும்போது ரசிக்க முடிகிறது.
நீக்குஅரியாசனத்தை மட்டுமா கரையான் அரித்திருக்கிறது!// ஹாஹாஅஹா அதானே புத்தகத்தையும் அரித்திருக்கு பாருங்க!
பதிலளிநீக்குஅரசன் பற்றிய ஜோக்குகள் எல்லாமே இக்காலத்துக்கும் பொருந்துறாப்ல !
கீதா
கரையானுக்கும் படிக்கும் ஆசை வந்தது! படித்துக் கிழித்திருக்கிறதா? கரைத்துக் குடிக்க முயன்றிருக்கிறதா?
நீக்குபடிச்சுக் கிழிச்சு கரைத்துக் குடிச்சிருச்சு!
நீக்குகீதா
வியா(வெ)ள்ளிப் பதிவு நன்றாகவே இருந்தாலும் நாளைக்கு யார்? என்னனு கேள்விகள் துளைக்கின்றன. மற்றபடி இந்தப் பாடல்கள் எதுவுமே கேட்டதில்லை. ஒரு முத்தாரத்தில் 30 முத்துக்கள் பாட்டைத் தவிர்த்து.
பதிலளிநீக்குஏ எம் ராஜா பாடல் கூடவா கேட்டதில்லை? அட தெய்வமே... வாங்க கீதாக்கா..
நீக்குஎங்க வீட்டு எலிக்குஞ்சுகள், பெருச்சாளிக் குஞ்சுகள் பத்தி ஏற்கெனவே சொல்லி (எழுதி) இருக்கேன். இந்த முகநூல் எலிப்பதிவு நினைவில் இல்லை. ஏஞ்சலும், அதிராவும் ஏன் வருவதில்லை? தி/கீதா மூலமாக ஏஞ்சல் எனக்குச் செய்தி அனுப்பி இருந்தார் ஆறு மாதங்கள் முன்னர்.
பதிலளிநீக்குஓ.. அப்படியா? அதிராவாவது அவ்வப்போது வருகிறார். ஏஞ்சல் வருவதே இல்லை.
நீக்குஜோக்குகள் சுமார் ரகம். குதிரைக்கவிதை நல்லா இருக்கு. நிஜம்மாவே குதிரை பேசினால்? கயிலை யாத்திரையின் போது சவாரி செய்த குதிரை நினைவில் வந்தது. பெரிய குதிரை. என்னால் ஏற முடியலை. இரண்டு பேராகத் தூக்கி மேலே ஏற்றினார்கள்.
பதிலளிநீக்குஅந்தப் படத்தில் இருக்கும் குதிரை ஏதோ பேச வருவது போலவே தோன்றவில்லை?!!
நீக்குகொரியப்படங்கள் பலரும் ரசிக்கின்றனர். முகநூலில் பனி சமத்மிகா என்னும் தோழி அதிகம் கொரியப் படங்கள், தொடர்கள் பார்ப்பார். என்றாலும் நான் ஆங்கிலம், ஹிந்தி தவிர்த்த மற்ற மொழிப் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. த்ருஷ்யம் போன்ற சில படங்களும், மிதுன ராசி போன்ற சில படங்களும் முறையே மலையாளம், தெலுங்கில் பார்த்திருக்கேன். என்னவோ திரைப்படம் என்றால் அவ்வளவாய் மன்ம் பொருந்தி உட்கார முடிவதில்லை. :( சின்ன வயசில் படம் பார்க்கும் சூழலோ, வசதியோ இல்லாத சமயங்களில் இருந்த படம் பார்க்கும் ஆவல், விருப்பம் இப்போத் துளிக்கூட இல்லை.
பதிலளிநீக்குநான் இதை கொரியப்படம் என்றெல்லாம் வகைப்படுத்திப் பார்க்கவில்லை. வரிசையில் வந்தது. த்ரில்லர் என்று பார்த்தேன். அது சுற்றவைத்து விட்டது.
நீக்குமுத்தாரமே பாடல்கள் கேட்டு இருக்கிறேன் சுவாரசியமான உரையாடல். புதிய பராசக்தியும் பார்த்தாகி விட்டது. என்னைக் கேட்காமலே ரிக்கற் போட்டுவிட்டார்கள்.:)
பதிலளிநீக்குகிரேட் ப்ளட் ஊர் சென்றநேரம் பார்த்துவிட்டேன். வித்தியாசமாக இருந்தது.
எலிகள் பாவம்தான். எம்முடன் வாழ்ந்தால் எமக்குத் தொல்லை என்பதும் மறுப்பதற்கு இல்லை.
பொக்கிசம் ஹா...ஹா.
வாங்க மாதேவி. புதிய பராசக்தி, great flood இரண்டும் பார்த்து விட்டேன் என்று மட்டும் சொல்கிறீர்கள். எப்படி இருந்ததது? கொரிய படம் புரிந்ததா?
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஇன்று மருந்தகத்திற்குச்
பதிலளிநீக்குசென்று விட்டேன்...