சென்றவாரம், முதலாம் பராந்தகச் சோழனுக்குப் பிறகு அவனது மூத்த மகன் இராஜாதித்தன் தக்கோலப் போரில் இறந்ததால், இளைய மகன் கண்டராதித்தன் அரசு பட்ட த்திற்கு வந்தது பற்றிப் படித்தோம்.
இவன் சிவநேசச் செல்வன். தில்லையம்பதியிடம் மனதைச் செலுத்தியிருந்தாலும் மற்றச் சமயங்களை வெறுத்தவனில்லை. தான் அமைத்த கண்டராதித்த சதுர்வேதி மங்கலத்தில் (நான்கு வேதங்களில் புலமை உள்ள அந்தணர்களுக்காக அமைக்கப்பட்ட கிராமம்), திருமாலுக்கு ஒரு கோவில் எடுப்பித்தான். தென்னார்காடு மாவட்டத்தில் பள்ளிச்சந்தல் என்ற ஊரில் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்ற சமணர் கோவிலையும் எடுப்பித்தான். கண்டராதித்தனின் மூத்த மனைவி நாராயணி, அவன் பட்டத்திற்கு வருவதற்கு முன்னரே மறைந்துவிட்டாள். இளைய மனைவி, மழவராயர் குலத்தைச் சார்ந்த செம்பியன் மாதேவி. இவர்களுக்கு நெடுங்காலம் குழந்தை இல்லாமல், இறுதியில் ஒரு தவமைந்தன் பிறந்தான். அவனுக்கு மதுராந்தகன் மற்றும் உத்தமச் சோழன் என்ற பெயர்கள் உண்டு. மகன் சிறு குழந்தை என்பதால், தான் பட்டத்துக்கு வந்தவுடன், தன் தம்பியான அரிஞ்சயனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான் கண்டராதித்த சோழன் (954ல்)
இப்போது சோழர்கள் தலைமுறையை ஒரு முறை பார்த்துவிடலாம். இல்லையென்றால் யார் யாருக்கு மகன், யாருக்கு அப்பா என்பதே நமக்குக் குழப்பமாகிவிடும்.
கண்டராதித்த சோழன் மறைந்ததும் அரிஞ்சய சோழன் பரகேசரி என்ற பெயருடன் அரசனானான். ஆட்சிக்கு வந்ததும், வாணர் குலத்துடன் பெண் கொடுத்து உறவினனாக்கி, இராட்டிரகூடருக்கு எதிராகப் போர் புரிந்தான். இதன் மூலம் இழந்த இடங்களைத் திரும்பப் பெறமுடியும் என்ற எண்ணம்தான். ஆனால் போர் நடந்துகொண்டிருக்கும்போதே வட ஆற்காடு பகுதியில் ஆற்றூரில் இறந்தான். இவனை ‘ஆற்றூர் துஞ்சிய தேவர்’ என்று கல்வெட்டுகள் குறிக்கும். பிற்காலச் சோழர்களில் மிகக் குறுகிய காலம் அரசனாக இருந்தவன் இவன்.
அரிஞ்சயன் காலத்திற்குப் பிறகு, இராஜகேசரி என்ற பட்டத்துடன் இரண்டாம் பராந்தகன் முடிசூட்டிக்கொண்டான். இவன் மிக அழகிய உருவம் கொண்டிருந்ததால், சுந்தரச் சோழன் என்று அழைக்கப்பட்டான்.
சுந்தரச் சோழன் பட்டத்திற்கு வந்தபோது பாண்டிய நாட்டை இராஜசிம்ம பாண்டியன் மகனான வீரபாண்டியன் அரசாண்டு கொண்டிருந்தான். சுந்தரச் சோழன் பட்டத்திற்கு வரும் முன்னரே வீரபாண்டியன் ஒரு போரில் சோழர்குல இளவரசன் ஒருவனைக் கொன்றிருந்தான். அதனால் சோழன் தலைகொண்ட அரசன் வீரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான் (கல்வெட்டுகளில்). சுந்தரச் சோழர் ஆட்சிக்கு வந்த பிறகு சேவூர் என்ற இடத்தில் பாண்டியனுடன் பொருது அவனைத் தோற்றோடச் செய்தார். தோற்ற வீரபாண்டியன் ஒளிந்துகொண்டான். இந்த சேவூர் போர் 962ல் நடந்திருக்கலாம். இந்தப் போரில் ஈழ மன்னன் தன் பெரும்படையை பாண்டியனுக்கு உதவ அனுப்பியிருந்ததால் கோபம் கொண்ட சுந்தரச் சோழன், போரின் முடிவுக்குப் பிறகு சோழப் படைத்தலைவனுடன் பெரும் படையை ஈழத்துக்குப் போர் புரிய அனுப்பினான். அந்தப் போரில் சோழர் படை வெற்றிபெறவில்லை. ஒளிந்துகொண்ட வீரபாண்டியன், பிறகு மீண்டு வந்து மதுரையை ஆண்டான். இது அவனது 18, 19ம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பாண்டிய நாட்டைத் தன் வசப்படுத்தவேண்டும் என்று நினைத்த சுந்தரச் சோழன், தன் மகனான இரண்டாம் ஆதித்த கரிகாலன் தலைமையில் படையை அனுப்பினான் வயதில் மிக இளையவனான ஆதித்த கரிகாலன் பெரும் போர் புரிந்து வீரபாண்டியனை போரில் கொன்றான். அதனால் கல்வெட்டுகளில் அவன், ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.
சுந்தரச் சோழன் 962ல், தன் மகனான ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். அதன் பிறகுதான் அவன் தலைமையில் வீரபாண்டியனுடன் பொருத பெரும் படை சென்றது.
சுந்தரச் சோழன் ஆட்சிக் காலத்தில் மக்கள் செழிப்புற்று வாழ்ந்தனர். நாடும் அமைதியாக இருந்தது. சுந்தரச் சோழன் ஆட்சி புரிந்துவந்த இடம் பழையாறை. அங்குதான் சோழர் அரண்மனை இருந்தது. இந்த பழையாறை என்பது, தற்போது ஒரு சிற்றூராக உள்ளது. அதனைச் சுற்றியுள்ள முழையூர், பட்டீச்வரம், திருச்சத்திமுற்றம், சோழன் மாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், …. தாராசுரம், நாதன் கோவில் என்று அழைக்கப்படும் நந்திபுர விண்ணகரம் போன்ற பல சிற்றூர்களை உள்ளடக்கிய பெரு நகரமாக இருந்தது. பழையாறை மாநகரம், 7ம் நூற்றாண்டில் பழையாறை எனவும், 8ம் நூற்றாண்டில் நந்திபுரம் என்றும், 9,10 நூற்றாண்டுகளில் பழையாறை நந்திபுரம் எனவும், 11ம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் எனவும் 12ம் நூற்றாண்டில் இராசராசபுரம் எனவும் வழங்கப்பட்டுவந்ததை கல்வெட்டுகளாலும் இலக்கியங்களாலும் அறியலாம்.
வரலாறு ரொம்பவே அதிகமாகிவிட்டதோ? இதற்குப் பின் வரும் வரலாறுகள் உங்களில் பலருக்குத் தெரிந்ததுதான்.
அதைப் பார்ப்பதற்கு முன்பு, தாராசுரம் கோவிலின் படங்களைப் பார்த்துவிடலாம்.
கோவில் உள்ளிருந்து மதிலின் தோற்றம். சிறிது சிறிது இடைவெளியில் நந்திதேவர் சிற்பங்கள்.
மூன்று
வாரங்களாக தாராசுரம் கோவிலின் முன் பகுதியையே பார்த்துக்-கொண்டிருக்கிறோம். ஏன் இந்தக் கோவில், யுனெஸ்கோவால் பாரம்பர்யக்
கட்டிடக் கலை என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது?
காரணத்தைப்
புரிந்துகொள்ள கோவிலின் எல்லாப் பகுதிகளையும் காணவேண்டாமா? எத்தனை வாரங்கள்
ஆனால்தான் என்ன?
(தொடரும்)
ஜோக்குகள் தாம் "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்று கூறுவது போல் உண்மையிலயே பெரிய வரலாறு பாடமாக அமைந்து விட்டது இன்றைய பதிவு. விவரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும் தெரிவித்திருக்கலாம்.
பதிலளிநீக்குபடங்கள் சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகளை எடுத்துக்காட்டுவது சிறப்பு. மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்... எனக்குமே தோன்றியது ரொம்ப அதிகமாக வரலாறை விவரித்துவிட்டோமோ என்று. சோழர் வரலாறு பற்றி பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் அனுமானங்களும் உண்டு. நன்றி
நீக்குசுந்தரச்சோழர் என்றாலே அவரும் இளையவராக, இளைஞனாக இளமை பலத்துடன் இருந்திருப்பார் என்கிற எண்ணமே மனதில் வரமாட்டேன் என்கிறது பாருங்கள். படுக்கையில் இருக்கும் வயதான நோயாளியாகத்தான் மனதில் உருவம் தோன்றுகிறது.
பதிலளிநீக்குநம் மனதில் முதலில் ஏற்பட்ட பிம்பங்கள் மாறுவதில்லை என்பதற்கு இது சாட்சி. அதனால்தான் இன்று கூட நேரு, சாஸ்திரி பற்றி பேசினால் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது!!
வாங்க ஸ்ரீராம். இதனைத் தவிர்க்க முடியாது. காரணம் நம் மனதில் கல்கி மற்றும் ஓவியர்கள் அப்படிப் பதித்துவிட்டனர். அழகாக இருந்தார், வீரத்தையும் காண்பித்தார். இது போல இன்னொரு வம்சத்தில் மிக அழகனான ஒரு அரசன் மக்களுக்கு நன்மை செய்யாதவனாக இருந்து அவர்கள் வெறுப்புக்கு ஆளானதும் வரும்.
நீக்குவரலாற்றுச் செய்திகள் தெளிவாக இருந்து வேறு வழியில்லாமல் அருண்மொழி வர்மன் அரசணையிலிருந்து விலகி இருக்கவும் ஆனால் உத்தமச்சோழனுக்குப் பிறகு அரசணை தனக்குத்தான் என்று உறுதி பெற்றதாகவும் இருந்தால் (காரணம் உத்தமச் சோழனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்குக் கொடுத்திருந்த துறை, அறநிலையத்துறை.. கேட்க ஆச்சர்யமாத்தான் இருக்கும்) நம் மனதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது
கருணாநிதி இந்த நல்லதைச் செய்தார் என்று யாரேனும் சொன்னால், சும்மா ஜால்ரா அடிக்கிறான் என்று மனம் சொல்லும். எம்ஜிஆர் செய்யாத ஒரு பெரிய நன்மையை யாரேனும் சொன்னால், இருக்கும் இருக்கும், ரொம்ப நல்ல மனுஷன்பா அவன் என்று தோன்றும்.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுருகன் திருவருள் எல்லோரையும் காக்கட்டும்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசோழர்களின் வரலாறு படிக்க வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படி தெளிவாக சொல்வதற்கும் ஒரு திறமை வேண்டும். அது தங்களிடம் நிறையவே உள்ளது. பாராட்டுக்கள்.
தாராசுரம் கோவில் படங்கள் எப்போதும் போல் தங்கள் கைவண்ணத்தில் அழகு. இன்னும் ஒவ்வொன்றையும் பெரிதாக்கி பார்க்கவில்லை. பிறகு பார்த்து ரசித்து விட்டு வருகிறேன். மீண்டும் ஒரு முறை வரலாற்று பாடத்தையும் கவனமாக படித்து விட்டு படங்களையும், சிற்பங்களையும் ரசித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கெல்லாம் எனக்குத் தகுதி இல்லை கமலா ஹரிஹரன் மேடம். சுவாரசியமாகச் சொல்வது ஒரு கலை. அது என்னிடம் இல்லைனு நினைக்கிறேன்.
நீக்குபடங்கள் நான் திரும்பவும் பார்க்கும்போதும் மிக அழகாக இருக்கின்றன. அதற்கு ஓவியத் திறமையும் கலையை ரசிக்கும் மனதும் கூர்ந்து கவனிக்கும் தன்மையும் வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கும் அவற்றில் சிறிது இருப்பதால் படங்கள் நன்றாக வருகின்றன என்று தோன்றுகிறது.
சிறப்பு..
பதிலளிநீக்குவரலாற்றை மீண்டும் படித்தேன்..
வாங்க செல்வராஜு சார்... ரொம்ப போரடித்ததோ?
நீக்குஉயர்நிலைப் பள்ளியில் சோழர் வரலாற்றினைப் படித்தது போலவே குறிப்புகள்..
பதிலளிநீக்குஆமாம் செல்வராஜு சார், ஆனால் நான் ரொம்பவே சுருக்கித் தந்திருக்கிறேன், என்னுடைய புரிதலையும் இது நடந்திருக்கும் என்ற எண்ணத்தையும் வைத்துக்கொண்டு. அசோகர் என்றாலே நம் மனதில், மரம் வெட்டினார், சாலைகள் அமைத்தார் என்பதுதான் எழுமே தவிர, அவர் கொடூரக் கொலைகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தார் என்ற வரலாற்று உண்மை நம் மனதில் தோன்றாது. நமக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்களோ அதனை நம்பும் தன்மை
நீக்குசுந்தரர் சற்றே உடல் நலம் குன்றியவராக இருந்த போதிலும் அவரை நோயாளியாகவே பாவித்தார்கள்...
பதிலளிநீக்குஅப்படி வரலாறு சொல்லவில்லை. அரசன் என்ற பதவிச்சுமை, போர்களுக்கு இளவரசனை அனுப்புவது வழக்கம். ஆதித்த கரிகாலன் சதிச்செயலால், உள்ளூரிலேயே (தேசத்திலேயே) கொல்லப்பட்டது அவரை மிகவும் தளர்வுறச் செய்தது. இதற்கிடையில் அவர் காஞ்சிபுரத்தில் பொன் வேய்ந்து அரண்மனை கட்டிக்கொண்டிருந்தார்.
நீக்குஒன்று தெரியுமா? அருண்மொழி மிகச் சிறியவனாக இருந்ததும் (கல்வெட்டுகள் சொல்வது, பால்குடி மாறாத சிறுவன்), அவனது அம்மா, பட்டத்தரசி, சுந்தரச் சோழருடன் உடன்கட்டை ஏறினாள், சுந்தரச் சோழரின் பிரிவு தாங்கமுடியாமல்.
கல்வெட்டுகள் சொன்னதை விரைவில் தருகிறேன். அப்படி இருந்தபோது எப்படி சிறுவன் அருண்மொழியை அரசனாக்கியிருப்பார்கள்? மதுராந்தகத் தேவருக்கும் ஆட்சி புரிவதில் விருப்பம் இருந்தது. அவருடைய ஆட்சியில் மக்கள் சுகமாக இருந்தார்கள், அதனால் உத்தமச் சோழன் என்ற பெயர் பொருத்தமாக அமைந்தது. அருண்டொழித் தேவனுக்கு அப்போ பதினைந்து வயதுக்குள்ளாகத்தான் இருந்திருக்கும் (கொஞ்சம் தேடிப் பார்த்து வயதைக் கண்டுபிடிக்க முயல்கிறேன்)
நீக்கு"சுரந்த முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணும் தலைமகற் பிரியாத் தையல்" என்று திருக்கோவலூர் கல்வெட்டு வானவன் மாதேவியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அந்த மாதேவி, தன் இளம் குழந்தையைப் பிரிந்து (முலை மகன்) கணவன் சுந்தரச் சோழனுடன் உடன்கட்டை ஏறினாள். இந்தக் கல்வெட்டின் பிரகாரம் அருண்மொழித்தேவனுக்கு 7-10 வயதுதான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது, அல்லது அதைவிடக் குறைவாக இருந்திருக்கலாம்.
நீக்குநான் இந்த மண்ணில் பிறந்தவன்.. தஞ்சையையும் சோழர் வரலாற்றையும் மிகவும் விரும்புபவன்.. சோழர் வரலாறு ஒருபோதும் அலுப்பு ஆவதில்லை எனக்கு..
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
நன்றி துரை செல்வராஜு சார். வரலாற்றைப் படிக்கப் படிக்க, நான் பார்க்காத இடங்கள் நிறைய இருக்கிறது பழையாறை மற்றும் சோழப் பிரதேசங்களைச் சுற்றி
நீக்குஆட்சிக்கு வந்ததும், வாணர் குலத்துடன் பெண் கொடுத்து உறவினனாக்கி, இராட்டிரகூடருக்கு எதிராகப் போர் புரிந்தான். இதன் மூலம் இழந்த இடங்களைத் திரும்பப் பெறமுடியும் என்ற எண்ணம்தான்.//
பதிலளிநீக்குஇதை எங்கோ வாசித்த நினைவு எங்கு வாசித்தேன்னு மூளைய கசக்கிட்டுருக்கேன் ஏதோ ஒரு கட்டுரை அல்லது கதை.
கீதா
பொன்னியின் செல்வன் அல்லது குபேரவனம் ஆசிரியர் (சட்னு பெயர் மறந்துபோயிடுது... அக்காவுக்கு ஏற்ற தம்பி நான்)
நீக்குஹாஹாஹாஹா....சும்மா சைக்கிள் கேப்ல அக்காவுக்கு ஏற்ற தம்பி நு விட்டுட வேண்டியது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஉங்களுக்கு இருக்கும் நினைவு கூட எனக்கு மிஸ்ஸிங்க் நெல்லை.
நரசிம்மா எழுதிய நாவல்கள் கரெக்ட்
கீதா
//நினைவு கூட எனக்கு மிஸ்ஸிங்க் நெல்லை.// அதனால்தானே ஒவ்வொரு தடவையும் க்கா க்கா என்று அழுத்தி அழுத்தி எழுதுகிறேன். இல்லைனா, நான் அண்ணன் போலிருக்கு என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது இல்லையா?
நீக்குசோழன் தலை கொண்ட அரசன் வீர பாண்டியன் இதையும், //‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ // இது எல்லாம் இப்பகுதி ....வாசித்த நினைவு...
பதிலளிநீக்குகீதா
வீரபாண்டியன் கொன்றது சோழச் சிற்றரசன் ஒருவனை. ஏதேனும் இளவரசனாகவோ அல்லது உறவினனாகவோ இருந்திருக்கலாம். ஆனால் ஆதித்த கரிகாலன் கொன்றது வீரபாண்டியனை. இதனை நாவல்களில் வாசித்திருக்கலாம். வாசித்துவிட்டு நந்தினியைத் தேடி நீங்கள் சென்றிருக்கமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன் கீதா ரங்கன்(க்கா)
நீக்குஆமாம் நெல்லை நினைவுக்கு வருது.
நீக்குஹாஹாஹா ஆனா ஆதித்தன் நந்தினி ரசனை.
கீதா
கல்கி சித்தரித்த நந்தினி, படையப்பா மற்றும் பல படங்களில் பார்த்த வில்லி. பெண்கள் வில்லியாக இருந்தால் அனர்த்தம்தான் விளையும் இல்லையா? ஹா ஹா ஹா
நீக்குகுந்தவை நாச்சியார் சுந்தர சோழருக்காக தஞ்சையில் ராஜராஜேஸ்வர பேராலயத்தின் முன்பாக ஆதுர சாலை ( மருத்துவமனை) ஒன்றை அமைத்ததாக ஒரு குறிப்பு...
பதிலளிநீக்குபிற்காலத்தில் அந்த இடமே விருத்தியாகி ராஜாக்களாலும் மிராசுதார்களாலும் பரிபாலிக்கப்பட்டதானது..
தஞ்சையின் பிரதான அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு குந்தவை நாச்சியார் பெயரே சூட்டப்பட்டுள்ளது..
இதெல்லாம் அந்தப் பகுதிகள் வரும்போது வரும் துரை செல்வராஜு சார். நான் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் வரலாறுகளைப் பிறகுதான் (கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் படங்கள் வரும்போது) எடுத்துக்கொள்ளப்போகிறேன். நாம் எல்லோரும் பொன்னியின் செல்வன் படித்துவிட்டு ஒரு பிம்பம் வைத்திருப்போம். அதனால்தான் இந்தத் தயக்கம்.
நீக்குகோயில் சிற்பங்கள் அழகை விவரிக்க முடியுமா? வார்த்தைகளில்
பதிலளிநீக்குபானை அடுக்கி வைச்சாப்ல இருக்கு மினி சைஸ்ல இது பல சிற்பங்களில் பார்க்கலாம் ஆனாலும் என்ன ஒரு டிசைன்.
கீழ உள்ள படத்துல இடப்பக்கம் கணபதி வடிவம் என்று தோன்றுது....முகம் சரியாகத் தெரியவில்லை ஆனால் மற்ற வடிவங்கள் அப்படித் தோன்ற வைக்குது
கீதா
வாங்க கீதா ரங்கன்(க்கா). நீங்கள் சொல்லியிருப்பது சரி, அது கணபதி உருவம்தான் (மோதகம் மிஸ்ஸிங்கோ?) பழையகால கோயில்களில் சில சிற்பங்கள், டிசைன்கள் அவங்க புத்தகத்துல ஸ்டாண்டர்ட் போலிருக்கு. அதனால் பல கோயில்களில் இத்தகைய சிற்பங்களைப் பார்க்கிறேன்.
நீக்குவரலாறுகளுடன் நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குபுன்னியம் செல்வன் வரலாற்றுடன் இவற்றையும் மீண்டும் கண்டு கொண்டோம் வரலாறுகள் படிக்க சலிப்பதில்லை . நன்றி.
தாராசுரம் கோவில் சிற்பங்கள் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவை. தேர் இழுக்கும் யானை குதிரை மனதை ஈர்ப்பவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சிறிய சிற்பங்களும் அழகு.
மிகுதி காண தொடர்கிறோம்.
வாங்க மாதேவி அவர்கள். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நாவல்கள்தாம் நமக்கு வரலாற்றில் ஆர்வம் உண்டாக்கினவை என்று சொன்னால் மிகையல்ல.
நீக்குதாராசுரம் கோயிலை விட சூப்பரான கோயில்கள் சோழர்களால் கட்டப்பட்டிருக்கிறது. அவை எல்லாமே வரும். மிக்க நன்றி
பொன்னியின் செல்வன் என வரவேண்டும். மொபைலில் தட்டுவதால் பிழைகள் வருகின்றன.
பதிலளிநீக்குசோழர் வரலாறு பற்றிப் பேசும்போது, என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரிந்துவிடுகிறது. அதனால் தவறில்லை.
நீக்குகுதிரை சிற்பம் எவ்வளவு அழகு! முன்னங்கால் கொஞ்சம் பழுதடைஞ்சது போல இருக்கு. பல சிற்பங்களும்
பதிலளிநீக்குமண்டபம் அந்தத் தூண்கள் எல்லாம் கொள்ளை கொள்ளுகின்றன.
யானை இழுப்பதும் அவ்வளவு அழகு. கஷ்டப்பட்டு patch up வேலை செய்திருக்காங்க போல சிதைந்தவற்றை?
கீதா
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. படையெடுப்புகள் அந்நியர்கள் போன்றவர்களாலும் சிதைவுற்றிருந்திருக்கலாம் (இல்லைனாலும் நாம ரொம்ப பாதுகாத்துவிடுவோம்.. தஞ்சை பெரிய கோயில் நூறு வருடங்களுக்கு முன்னால் உள்ள படங்களைப் பார்த்தால் நாம எந்த லட்சணத்துல வச்சிருந்தோம்னு தெரியும்)
நீக்குசிற்பிகள் ரொம்ப நல்லா உழைத்து அவங்க திறமையைக் காட்டியிருக்காங்க.
இங்கும் சிவன் கோவிலில் (பழைய கோவில் எல்லாம் இல்லை சில வருடங்களுக்கு முன்னால கட்டினதா இருக்கும். ) மதிலின் மீது இப்படி நந்திதேவர் இடைவெளியில் இருப்பார்.
பதிலளிநீக்குஅதுக்குக் கீழ தக்ஷிணாமூர்த்தி போல?
இந்த மாதிரியான சிற்பங்கள் நடனக்கலைக்கு மிகவும் உதவும்.
பரவால்ல நெல்லை எத்தனை வாரங்கள் ஆனாலும் முழுசும் போடுங்க. இதுவரை வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை.
வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் டமால்னு பத்திக்கிட்டு போய் வளைச்சு வளைச்சு எடுத்துக்குவேன்.
கீதா
வாய்ப்பு கிடைத்தால் நீங்க எல்லாச் சிற்பங்களையும் படமா எடுத்துடுவீங்க. எனக்கு சந்தேகமில்லை. ஆனால் நீங்க பொறுமையா எடுக்காத படங்கள், கொஞ்சம் ஆடியிருந்தால், புகைப்படக்கருவி மேல பழி சுமத்தக்கூடாது. இல்லைனா, என்னை அவசரப்படுத்திட்டாங்க என்றும் சொல்லிடக்கூடாது. கோயில் இறைவன் படங்கள்லாம் தைரியமா, அவங்க கூடாதுன்னு சொல்லலைனா எடுங்க. நம்ம கீதா சாம்பசிவம் மேடம் மாதிரி அங்க இங்க பார்த்துக்கிட்டு கேமராவை எடுத்தீங்கன்னா, மத்தவங்களுக்கே சந்தேகம் வந்துடும்.
நீக்குராஜாக்கள் சார்ட் நல்லாருக்கு நெல்லை. தெரிந்து கொள்ள உதவும்
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா ரங்கன். எனக்குமே எழுதும்போது குழப்பமில்லாமல் எழுத உதவியது.
நீக்குவரலாறு அருமை. படிக்கும் பொது யாருக்கு பின் யார் என்பதை இப்படித்தான் பெரிய நோட்டில் எழுதுவோம். என் 10 வது படிக்கும் போது தயார் செய்த நோட்டு இருக்கிறது. ஒரு நாள் என் தளத்தில் பகிர ஆசை வந்து விட்டது. உங்கள் குறிப்பைப்பார்த்து.
பதிலளிநீக்குசிற்பங்கள் எல்லாம் மிக அழகாய் படம் எடுத்து இருக்கிறீர்கள்.
ருத்திர, வீரபத்திர வடிவ சிலைகள் படம் எடுத்த விதம் அருமை.
மதில்மேல் உள்ள நந்தி சிலை படமும் அருமை.
வாங்க கோமதி அரசு மேடம்... எல்லாவற்றையும் நீங்க ஆவணப்படுத்தி வைத்திருப்பீங்க. நிச்சயம் பகிருங்கள்.
நீக்குநடன மாந்தர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள் சிலைகள் அழகு.
பதிலளிநீக்குதாராசுரம் கோயில் சிற்பங்கள் எல்லாம் தனி தனியாக எடுக்கலாம் அவ்வளவு அற்புதமான வேலைப்பாடுகள்.
அவற்றை நீங்கள் நன்றாக படம் எடுத்து பகிர்ந்து வருவதற்கு நன்றி.
தொடர்கிறேன்.
ஆமாம். ஒவ்வொரு சிற்பமும் மிக அழகு. தனித்தனியா, நிறைய நேரம் செலவழித்தால் எடுக்கமுடியும், ஆவணப்படுத்தி வைக்கமுடியும். நன்றி தொடர்வதற்கு
நீக்கு//மூன்று வாரங்களாக தாராசுரம் கோவிலின் முன் பகுதியையே பார்த்துக்-கொண்டிருக்கிறோம். ஏன் இந்தக் கோவில், யுனெஸ்கோவால் பாரம்பர்யக் கட்டிடக் கலை என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது? காரணத்தைப் புரிந்துகொள்ள கோவிலின் எல்லாப் பகுதிகளையும் காணவேண்டாமா? எத்தனை வாரங்கள் ஆனால்தான் என்ன?//
பதிலளிநீக்குகாணவேண்டும். பகிருங்கள். தொடர்கிறோம்.
நன்றி கோமதி அரசு மேடம். எனக்கு வரலாறு படிப்பவர்களுக்கு போரடிக்குமோ என்று எண்ணம்.
நீக்குசோழர்களின் வரலாறு என்றும் சுவாரஸ்யமே ..அருமை சார்
பதிலளிநீக்குவாங்க அனு ப்ரேம்குமார் . எல்லாம் கல்கியின் உபயம் நம் எல்லோருக்கும் சோழ சரித்திரம் ஆர்வமூட்டுவதற்குக் காரணம். நன்றி
நீக்கு