வியாழன், 27 பிப்ரவரி, 2025

காய்கறிக் கூடையில் நத்தை

பருப்பு கீரையும், புளிச்ச கீரையும் பாக்கி.  அதுவும் வாங்க வேண்டும். பருப்பு கீரை வாங்கினால் கடைய வேண்டும் என்றார்கள்.  அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.புளிச்ச கீரையை என்ன செய்யணுமோ...  கவலையாய் இருக்கிறது.  இதைத்தவிர, அக்கேஷனலாக முடக்கத்தான் கீரையும், ஒரு பைக்குள் வல்லாரைக் கீரையும் ஒளித்து வைத்துக் கொண்டு அதையும் விற்கிறார் அந்த பெண்மணி.  அதை வாங்கினால் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க வேண்டும்.  முடக்கத்தான் கீரையை தோசை மாவில் போட்டு தோசை வார்த்துக் கொடுத்திருக்கிறார் என் அம்மா.  அப்போது நான் பள்ளிச்சிறுவன். வல்லாரையை என்ன செய்ய வேண்டுமோ...

வாரத்துக்கு மூன்று நாள் கீரையை அதிகம் என்று எல்லோரும் அபிப்பிராயப்பட்டனர்.  காணாததைக் கண்டவர் போல நான் வாங்கி கொண்டிருந்தேன்.  காய்ந்த மாடு கம்பில் விழுவது போல என்பார்களே..  அந்த ஆர்வம்.  எனினும் வாரத்துக்கு மூன்று நாட்கள் என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

நடுவில் ஒருநாள் வேறு ஏரியாவில் நடை போட்டதில் பழைய சின்ன கட்டு வெந்தயக்கீரையும் கண்ணில் பட்டு சபலப்படுத்தியது.  அதை ஒரு சக்கரம் போல அடுக்கி வைத்திருந்தார் அந்த விறபனைப் பெண்மணி.  போட்டோ எடுக்காமல் போனேன்.  'அடுத்த தரம் கண்ணே' என்று அதனிடம் காதலுடன் சொல்லி விட்டு வந்தேன்.

நடுவில் ஒரு சம்பவம்.  

இது நான் குறிப்பிட்டிருக்கும் காய்கறிக்கடை இல்லை.  கொஞ்சம் காசு கூடுதல் என்று தோன்றினாலும் காய்கள் இங்கு தரமாக இருக்கும்.


ஒருநாள் வேறொரு கடையில், பூச்சி பசலைக்கீரை வாங்கிய கடையில்  புதினா, வெண்டைக்காய், தக்காளி பூண்டு வாங்கி வந்தோம். வேறொரு கடையில் வாங்கிய ப்ரக்கோலியும் அதில் இருந்தது. 

வீட்டில் கொண்டு வந்து  ஒயர்கூடையோடு வைத்திருந்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து எடுத்து அலம்பி ப்ரிட்ஜில் வைக்க எடுத்தால்....

அந்தப் புதினா மேல் ஒரு மீடியம் சைஸில் நத்தை உட்கார்ந்திருந்தது!

ரொம்ப அருவறுப்பாகப் போய் அதை எடுத்து வெளியில் போட்டாலும் என்ன செய்வது என்றே யோசனையாக இருந்தது.  சமைக்கலாம் என்கிற எண்ணமே வரவில்லை.   எதிலிருந்து, எப்படி வந்தது என்று தெரியவில்லை.  நடுவில் ஒரு கோவிலில் பத்து நிமிடம் சுவரில் சாய்த்து வைத்திருந்ததோடு சரி..  அநேகமாக புதினா கட்டில் இருந்திருக்க வேண்டும்.  புதினா மேல்பகுதி இலைகளை வெட்டி எறிந்தும் அருவருப்பு அடங்கவில்லை.

வாக்களிப்புக்கு விட்டேன்.  கீதா அக்கா, கீதா ரெங்கன். மற்றும் குடும்பம்.  கேஜிஜி நத்தை மிகவும் சத்துள்ளது என்று மீட்டா மூலம் தகவல் தெரிவித்தார்.  ஒருவர் உப்புத் தண்ணீரில் களைந்து உபயோகப்படுத்தலாம் என்று சொல்லி இருந்தார்.

கீதா அக்கா சொன்னதைத்தான் செய்தேன்.  ஏனெனில் என் மதிலும் அதுதான் இருந்தது.  "த்ரோ இட் அவே" என்று சுருக்கமாக அனுப்பி இருந்தார்.  "வெண்டைக்காய், தக்காளி?"  என்று கேட்டேன்.  "ஆல்" என்று பதில் வந்தது.  Done!

முளை, அரைக்கீரைகளை வேரை நறுக்கி விட்டு அலம்பி, கீரைகளை தனித்தனியே பிரித்தெடுத்து சோதித்து மென் தண்டுகளோடு நறுக்குவது வாடிக்கை.  பசலையை, மணத்தக்காளிக் கீரைகளை இலையை மட்டும் பிரித்து எடுத்து நறுக்குவது வாடிக்கை.  வெந்தயக்கீரையை வேர் மட்டும் நீக்கி சிறு தண்டுடன் அப்படியே சாம்பாரில் போட்டு விடுவோம்.
அரைக்கீரையை நறுக்கும்போது இவளவு பெரிய இலைகளாக இருக்கும் இதைப்போய் அரைக்கீரை என்கிறார்களே என்று சும்மா ஒரு மெஸேஜ் குடும்பத்தில் விட்டேன்.  விக்கியிலிருந்து அரைக்கீரை விவரங்களை ஒரு சித்தப்பா 121 ல் அனுப்பி இருந்தார்.

சனிக்கிழமை கீரை வாங்கவில்லை.  ஞாயிறு கடை லீவு.  இந்த வாரம் திங்கட்கிழமை சென்றபோது மறுபடி முளைக்கீரை வாங்குவோமா என்கிற எண்ணம் பசலையைப் பார்த்ததும் மாறியது.  நடுவில் பருப்புக் கீரையும், வல்லாரையும் வேறு குழப்பியது.  எனினும் சபலம் வென்றது.  நான் பசலைக்கீரை ரசிகன்.

வாங்கியதும் சந்தேகம் வந்தது.  கீரையின் கால்கள் - அதுதாங்க தண்டுப்பகுதி - போலியோ வந்தது போல இளைத்திருந்தன.  ஒருவேளை பேலியோ கீரையோ என்றெண்ணி விற்பனைப் பெண்மணியிடம் கேட்டேன்.அவர் என்னை இளக்காரமாகப் பார்த்தார்.  


"பாலக் கீரைங்க ஐயா" 

"ஆ...   இதுதானா அது..  கேள்விப்பட்டிருக்கிறேன், ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறேன்.  நேரில் இப்போதுதான் பார்க்கிறேன்" என்று நினைத்துக் கொண்டு 'எப்புட்டி அம்மகு நிப்பட்டியே கதி' என்பது போல முளைக்கீரைக்கே போய்விடலாமா என்று யோசித்தபடி கீரையை பையிலிக்கருந்து வெளியே எடுத்தேன்.  "ஐயே...  இதையே வாங்கிட்டு போங்க...  எல்லாக் கீரையும் அதே பருப்புதான், மொளகாதான், தேங்காய்தான்" என்று மறுபடி என் கையிலேயே அதைத் திணித்தார்.  பாஸும் 'சும்மா வாங்குங்க' என்று அனுமதி கொடுத்ததும் அதை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

கீரை, காய், வாழைத்தண்டு எல்லாம் நறுக்குவது என் தலையில்...   ச்சே...  என் டிபார்ட்மென்ட்!

நெருங்குவதற்கு கையில் எடுத்தால் அதன் தண்டுகள் அநியாயத்துக்கு ஒல்லியாய் இருந்தன.  என்ன செய்யலாம் என்று பேசியபடி - "பசலைக்கீரையை என்ன செய்வோமோ அதையே செய்துடுவோம்..." -நறுக்கத்தொடங்கினேன்.  பாலக் பனீர் செய்யலாம் என்றால் சப்பாத்திக்குதானாம் அது.  என் வழக்கப்படி பொடியாய் நறுக்கி எடுத்து வைத்து விட்டு வந்து விட்டேன்.
மது- என் மருமகள் - அதை சென்று பார்த்த உடன் என்னிடம் வந்தாள்.  "அப்பா..  புலாவும், பாலக் பனீரும் செய்யவா?"

கசக்குமா என்ன?  "ஓ...!"  என்றேன் சந்தோஷத்துடன்.

"ஆனா அப்பா..  பாவம் நீங்க...  பாலக் பன்னீருக்கு கீரையை இவ்வளவு நறுக்கி இருக்கவே வேண்டாம்...  உங்களுக்கு வேலை"

"பரவாயில்லை விடு.. ஏதோ வித்தியாசமாய் இருக்கட்டும்"

அன்று மதியம் நாங்கள் கிளம்பி சுகுமாரை பார்க்கப் போவதாய் பிளான் இருந்தது.  கொஞ்ச நேரத்தில் நல்ல நல்ல வாசனைகள் மூக்கை வந்து உரசிச்ச செல்ல..  மணிகள் கரைந்தன.

"சரியா இருக்கா பாருங்க" என்று சுவைக்கு ஸ்பெசிமன் வந்தபோது சுவையில் மயங்கிப்போனேன்.




சாதாரணமாக புலாவ் செய்தால் மிகவும் கம்மியாகத்தான் சாப்பிடுவேன்.  இன்று தட்டில் நிறைய விழுந்ததும், அச்சச்சோ..  எப்படி சாப்பிடப் போகிறேன் என்று நினைத்தேன்.  உள்ளே போனதே தெரியவில்லை.

நறுக்கி வைக்கப்பட்டு மீதி இருக்கும் தண்டுகளையும் நறுக்கப்பட்டிருக்கும் கீரையையும் வைத்து சொல்லுங்கள்..  இது என்ன கீரை?

அனுபவம்தான்...   திங்களாயிருந்தால் என்ன, வியாழனாயிருந்தால் என்ன!

======================================================================================


=================================================================================================

பொக்கிஷம்  : எழுத்தும் தொழிலும்

நகை செய்வது மட்டுமின்றிக் கலை நுணுக்கம் மிக்க வேறு பல தொழில்களுக்கும் தங்கம் தேவைப் படுகிறது. ஐரிகை வியாபாரத்தில் ஈடுபட்டவரும், பிரபல எழுத்தாளருமான ஸ்ரீ எம். வி. வெங்கட்ராம் தங்கக் கட்டுப்பாட்டினால் தாக்கப்பட்டுள்ள எண்ணற்ற மக்களின் விசனமிக்க நிலையைச் சாங்கோ பாங்கமாக விளக்குகிறார்.

அவருக்கு மொரார்ஜி மேல் என்ன கோபம் வருகிறது பாருங்கள்...!

'பஸ்மாசுரன் கதை!
எம்.வி.வெங்கட்ராம்

ஜரிகையில் என்ன பொருள்கள் உள்ளன என்பது வாசகர்களில் புலருக்குத் தெரிந்திருக்கக் காரணம் இல்லை. பட்டு நூல், அதற்கு மேல் சுற்றிய சன்னமான வெள்ளி இழை,அந்த வெள்ளிக்குத் தங்க முலரம் பூச உதவும் சில ரசாயனப் பொருள்கள் - இவ்வளவும் சேர்ந்து ஜரிகை ஆகிறது.

ஐரிகைக்கு ஏகபோக உற்பத்தி ஸ்தலம் சூரத் நகரம். சூரத் தொகுதியிலிருந்து பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யார், தெரியுமா? பயப்படாமல் கேளுங்கள்: மொரார்ஜி தேசாய்! தங்கம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலில் ஈடுபட்ட நான் மொரார்ஜிப் பெருமானைத் தியானிக்காமல் கட்டுரையை ஆரம்பிக்க முடியாது.

இன்றைய பாரத் சர்க்கார் என்ற பெரிய கோயிலில் மூலவர் மொரார்ஜி, உற்சவர் நேருஜி என்று எனக்குத் தோன்றுகிறது. உற்சவரை விட மூலவருக்குத் தான் யந்திரபலமும், மந்திர மகிமையும் அதிகம் என்று உங்க ளுக்குத் தெரியும்.

மொரார்ஜியின் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தால். நேரடியாக அடியுண்ட ஜரிகைத் தொழிலும் ஒன்று. ஐரிகை உற்பத்திக்குப் போதிய தங்கம் தருவதற்கு ஆட்சியாளர்கள் உடனபடாததால், கோடிக் கணக்கில் இத் தொழிலில் முதலீடு செய்துள்ள முதலாளிகள் வேறு தொழில்களை தேடு கின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக் கணக் ன தொழிலாளர் குடும்பங்கள் தவிக்கின்றன. சூரத் ஜரிகையை வாங்கி ஜவுளி உற்பத்தியாளரிடம் விற்பனை செய்யும் வியாபாரிகள் நாடு முழுதும் உள்ளனர். அவர்கள் இத்தொழில் இனிப் பிழைக்காது என்று அஞ்சுகின்றனர். புராண இதிகாச காலங்களிலிருந்து, இந்த நாள் வரை இந் நாட்டுக்குப் புகழ் தேடித் தரும் ஓர் அழகுத் தொழில் தங்கச் சட்டத்தால் அழியும் நிலையை எட்டியுள்ளது. ஜரிகை இல்லாத வேஷ்டியை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். ஜரிகை இல்லாத பட்டுச் சேலையை நினைக்க முடியுமோ? ஜரிகை கிடைக்காததால் நெசவாளர்களின் நிலை பழையபடி வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதை ஆகியுள்ளது!

தங்கச் சட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட் டுள்ள சூக்குமமான நன்மைகள் மொரார்ஜி யின் ஞானக் கண்களுக்குத் தென்படுகின்றன. நம் ஊனக் கண்களுக்கோ மக்களின் சமூக வாழ்க்கை அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. நகை செய்யும் தொழிலாளர். நகைக் கடைக்காரம், ஜரிகை உற் பத்தியாளர், ஐரிகைத் தொழிலாளர், ஜவுளி உற்பத்தியாளர், நெசவாளர், வளையல் செய்வோர். இன்னும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் சட்டத்தால் பிழைப்பிழந்து விட்டனர். இந்த நாலு பவுன் நகையை வைத்துக் கொண்டு நான் பணக்காரன் என்று தலை நிமிர்ந்து நடந்த ஏழையின் முதுகு ஓடிந்து விட்டது. 'ஐயாயிரத்துக்கு என்னிடம் நகை இருக்கிறது. பெண் கல்யாணத்தை ஜமாய்த்து விடுவேன்',  என்னிடம் நான்கு பவுனுக்கு நகை இருக்கிறதே! ஜமாய்த்து விடுவேன்' என்பன போன்ற மத்திய வகுப்பாரின் கனவுகளில் மண் விழுந்து விட் டது. பதுக்கும் அளவுக்குத் தங்கம் வைத்துள்ள செல்வந்தர்களை இந்தச் சட்டம் என்ன செய்துவிடும்? சட் டத்தால் நசுக்குண்டவர்கள் தொழிலாளிகள், ஏழைகள். மத்தியதர வகுப்பினர் தாமே! கோடிக் கணக்கான எளிய மக்கள் இத்தனை இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றனரே. காந்தி போதித்த அஹிம்சையின் விளைவோ இது?

தங்கச் சட்டத்துக்கு அற் புதக் காரணங்கள் காட்டு கிறார் மொரார்ஜி. தங்கக் கள்ளக் கடத்தலை இச் சட்டம் தடுக்குமாம். கள்ளக் கடத்தலை கண்டுபிடிக்க முடியாத போலீஸ்காரர், அஜாக்கிரதையாக இருந்துகொண்ட வீட்டுக்காரர்களைக் கட்டி உதைத்தால் எப்படி இருக்கும்?  சில ஆயிரம் அல்லது சில லட்சம் கள்ளக் கடத்தல்காரர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் நாட்டு மக்களை ஹிம்சிக்கத் துணிகிறார் நிதி அமைச்சர்!  சட்டம் வந்த பின் கள்ளக் கடத்தல் குறைந்துள்ளது என்று பார்லிமெண்டில் சொல்லுகிறார்:  கடத் தல்காரர்கள் அவரிடம் கணக்குக் காட்டி இருப்பார்களோ? கடத்தல்காரர்களைப் பிடித்து தண்டிக்கக் கையாலாகாதவர்கள். தங்கச் சட்டத்தை ஏமாற்றத் தங்கத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்களே. அவர்களை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார்களோ ?

பாரத மக்களுக்கு உள்ள அதிகப்படியான தங்க மோகத்தைக் குறைக்கவே இச் சட்டம் என்று அறம் பேசுகிறார் தேசாய்ப் பெருமான், ஆகா, இந்நாட்டில் தோன்றிய மகான்களும், மகா புருஷர்களும் போதித்ததைச் சட்டத்தால் செயல் படுத்த இவர் முனைந்துள்ளார். பெண்ணாசை கூடாது என்று நம் பெரியோர்கள் உபதேசித்தார்கள். அதற்கு ஏதாவது காவல் சட்டம் கொண்டு வருவாரோ?  செய்தாலும் செய்வார் நம் மதி மந்திரி! மண்ணாசையும் கூடாதுதான்; ஆகாசத்தில் குடியேறுங்கள் என்று உத்தரவிடுவாரோ என்னவோ! சீன ஆக்கிரமிப்பால் இச் சட்டம் விளைந்ததாய்க் கூறுகிறார்கள். நாட்டில் பதுங்கிய தங்கம், பதுங்காத் தங்கம் அவ்வளவும் சர்க்கார் கைக்கு வந்தாலும் அது பத்து நாள் போருக்குக் காணாது என்று பொருளாதார வல்லுநர்கள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். ஆனால் தேசாய் பிரபு 'என் அரசியல் வாழ்வு பாழானாலும் சட்டத்தைக் கைவிட மாட் டேன்' என்று சூளுரைத்து. மக்களை மாக்களாய்க் கரு திப் பேசுகிறார்.

மனைவியரின் தாலி ஒளி மங்கினாலும். செய்யும் தொழில் பறி போனாலும் உண்ணும் சோற்றில் மண் விழுந்தாலும் மக்கள் அமைதியாக. மிகவும் அமைதியாக இருப்பதற்குக் ணம் யாதோ? இதுதான் நம் தலையெழுத்துப் போலும் என்று எந்த அக்கிரமத்தையும் கொண்டு சிவனே ஒப்புக் என்று காலத்தை ஓட்டும் நிலை என்று மாறுமோ?  மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் திராணியை என்று திரும்பப் பெறப் போகிறார் களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஜரிகை வியாபாரத்தைச் சொந்தத்தில் தொடங்கினேன். பம்பாய் ராஜ்யத்தில் உள்ள சூரத் நகரம் ஐரிகை உற்பத்தியை இன்று வரை ஏகபோகமாக அநுபவித்து வருகிறது. அங்கிருந்து ஜரிகை வரவழைத்து, பட்டு நூல் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் விற்பதுதான் என் தொழில்.

ஆரம்பத்தில் எனக்குப் பேராசையாக ஒன்றும் கிடையாது. அப்போது எனக்குச் சின்னக் குடும்பம்; யாரிடமும் சேவகம் செய்யாமல் மாதம் சம்பாதித்தால் போதும் என்கிற அடக்கமான ஆசையுடன் தொழிலை ஆரம்பித்தேன். முதலில் சூரத்தில் இருக்கும் ஒரு ஜரிகைக் கம்பெனிக்குச் சரக்கு வேண்டிக் கடிதம் எழுதினேன்: என்னை அவர்கள் நேரில் அறிய மாட்டார்களாதலால் ஈரக் கைப் பாங்கு மூலம் அனுப்பும்படி எழுதினேன்; ஆனால் அந்தக் கம்பெனியாரோ, நான் கேட்டதற்கு இரு மடங்கு சரக்கை எனக்கு நேராக அனுப்பி வைத்தனர்; எம் என் தொழில் திறனையும் பற்றி அவர்களுக்குத் தெரியும். என்றும். சரக்கை விற்று மெதுவாகப் பணம் அனுப்பலாம் என்றும், மேலே தேவைப் படும் சரக்குக்கு ஆர்டர் எழுதும்படியும் அவர்கள் கடிதம் எழுதினார்கள். நான் 'ஆர்டர்' எழுதா விட்டாலும் அவர்களிடமிருந்து சரக்குகள் வந்தன.  ஆறு மாதங்கள் கழித்துச் சூரத்துக்குச் சென்றேன். எனக்குச் சரக்கு அனுப்பிய கம்பெனியார் வீட்டில் தங்கினேன். காலைக் குளியலையும். ஆகாரத்தையும் முடித்துக் கொண்டு, எனக்குப் பரிச்சயமான மற்றொரு கம்பெனியாரை, சிவாஜி கம்பெனி என்று வைத்துக் கொள்ளுவோமே, பார்க்கச் சென்றேன்.

உண்ணா விரதம்

சூரத்தில் உள்ள மிகப் பெரிய ஜரிகைக் கம்பெனிகளில் சிவாஜி கம்பெனியும் ஒன்று. அவர்களுடைய ஏஜண்டு ஒருவர் ஏற்கனவே கும்பகோணக்கில் இருந்தார்.  ஏஜண்டு நியமிக்கிற வழக்கம் இந்தக் கம்பெனியாருக்கு இல்லை; ஆகையால் எனக்குச் சரக்கு அனுப்பும்படி அவர்களை நான் கேட்கவே இல்லை; நட்பு முறையில் தான் அவர்களை சந்திக்கப் போனேன். இரண்டாவது  அவர்கள் கொடுத்த தேநீரைப் பருகியதும் சிவாஜி கம்பெனி மகன்லால் கேட்ட முதல் கேள்வி: "ளங்கள் சரக்கை நீ விற்பனை செய் கிறாயா?"

இந்தக் கேள்வியை எதிர்பாராத நான் மகிழ்ச்சியால் அதிர்ந்து விட்டேன்; அந்தக் கம்பெனியின் ஏஜன்னிக்காகத் தவம் கிடக்கும் எத்தனையோ ஜரிகை வியபாரிகள் இருக்க, அவர்களாகவே வலிய வருவது என்றால் --“முன்பே உங்களுக்கு ஓர் ஏஜண்ட் இருக் கிறாரோ" என்றேன்.

இருத்தால் என்ன? இரண்டாவது ஏஜண்ட் நியமிப்பது எங்கள் இஷ்டம்; எங்கள் பணத்தைக் கொண்டு நாங்கள் தயாரிக்கிற சரக்கை யார் மூலமாகவும் நாங்கள் விற்போம் எழுத்திரு; பாக்டரிக்குப் போய் வேண்டிய சரக்கைத் தயார் செய்து கொள்!!' என்று அன்புக் கட்டளை இட்டார் மகன்வால்,

ஒரு வாரத்துக்குப் பிறகு நான் ஊர் திரும் பும்போது, சுமார் முப்பதாயிரம் ரூபாய்ச் சரக்கு எனக்குப் பின்னால் ரயில்வே பார்சலில் வந்து கொண்டிருந்தது. சொந்த முதலீடு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கடன் வாங்கும் வாய்ப்புக்கள் தொழில் அபிவிருத்திக்கு அவசியம் என்பதை வியாபாரிகள் அறிவார்கள். தொழில் தொடங்கிய போது இருந்த அடக்கமான ஆசையை நான் மறந்து விட் டேன்; முதல் ஆண்டிலேயே என் வரவுசெலவு பல லட்சங்களைக் கடந்தது. இதற்கு, என் அறிவும் திறனும் காரணம் என்று கூற முடியுமா?  எங்கள் சரக்கை விற்றுத் தந்து எங்களைக் கௌரவிக்க வேண்டும் என்று வந்தார் இன்னொருவர்; சந்திரவதன் என்று அவரை அழைப்போம்; சொன்னதுடன் நில்லாமல் சரக்கும் அனுப்பத் தொடங்கினார். ஒரு முறை அவர் கும்பகோணம் வந்தார். அந்தச் சமயம் பார்த்து, சிவாஜி கம்பெனி யிடமிருந்து ஏராளமாகச் சரக்கு வந்தது. அதைக் கண்ட சந்திரவதனுக்குப் பொறுக்கவில்லை.  இனி சிவாஜி கம் பெனி சரக்கை விற்கக் கூடாது. வந்த வாபஸ் செய்யும்வரை நான் சாப்பிடமாட்டேன்" என்று உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டார். எனக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. சிவாஜி கம்பெனியார் வருத்தப்படுவார்களே என்கிற வேதனை. ஆனால் சிவாஜி கம்பெனி சரக்கை விற்பனை செய்தால் இரண்டு சத விகிதம்தான் லாபம் கிடைக்கும்; ஏராளமாய்க் கடன் வாங்கி, கடன் கொடுக்க வேண்டும். சந்திரவதனின் சரக்கில் நூற்றுக்குப் பத்துப் பதினைந்து சதவிகிதம் லாபம் கிடைக்கும். இந்தச் சரக்கு பெரும்பாலும் ரொக்கத்துக்கு விற்பனை ஆகும். தொழில் ரீதியாகப் பார்த்தாலும், சந்திரவதனுடன் தொழில் செய்வதே லாபகரமானது. தவிர, அவர் கொண்டாடிய சகோதர பாசம் வேறு! ஆகவே, சிவாஜி கம்பெனியாரின் சரக்கைத் திருப்பி அனுப்பி, அவர்களுடைய ஜரிகையை என்னால் விற்க இயலவில்லை என்று கடிதம் எழுதினேன். தம்பி சந்திரவதன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு சூரத்துக்குப் போனதும் ஜரிகை மழையாகக் கொட்டுவதாயான தம் குழந்தைகள் மீது ஆணையிட்டு விட்டுத் திரும்பினார். அங்கே போனதும் அவருக்கு ஒரு மதுரை அண்ணனின் நேசம் கிடைத்தது. மதுரைக்காரர் பெரும் பணக்காரர். ஆகவே, சந்திரவதனின் பாசம் அந்தப் பக்கம் சாய்ந்தது; எனக்குச் சரக்கு அனுப்புவதைப் படிப் படியாகக் குறைத்துக் கொண்டே வந்து, வருட முடிவுக்குள் சரக்கு அனுப்புவதையே நிறுத்தி விட்டார்! அது பட்டும்அல்ல, தப்புக் கணக்குக் காட்டி என்னை இருபதாயிரம் ரூபாய் வரை மோசம் செய்திருப்பதையும் அப்போதுதான் கண்டு பிடித்தேன்!  அப்புறம் என்ன? சிவாஜி கம்பெனியிடம் சரக்குக் கேட்க வழி இல்லை: தம்பி சந்திரவதன் சரக்கு அனுப்பவில்லை. புதிய ஏஜன்ஸி தேடி அலையவேண்டிய தேவை ஏற்பட்டது." பகை நடுவிலே அன்பும், புகை நடுவிலே தீயும். பெருந்துன்பங்களுக்கிடையே இன்பமும் இருப்பது போல, எனக்கு அறிமுகமான ஜரிகைத் தொழிவில் எத்தனையோ ஏமாற்றங்களும் மோசடிகளும் இருப்பினும் நேர்மையான வாழ்க்கைக்கும் வழியுண்டு, இல்லா விட்டால் எண்ணற்ற மக்கள் இத் தொழிலில் ஈடுபட்டிருப்பார்களா? சிவபெருமானைப் போன்று பொன் மனம் படைத்த சூரத் தொகுதிவாழ் மக்கள் ஸ்ரீ மொரார்ஜி தேசாய், தங்கள் வோட்டுக்களைப் பெற்றுத் தங்கள் தலையிலேயே இப்படிக் கைவைப்பார் என்று கனவிலும் கருதியிருக்க மாட் டார்கள் ! ஆணவம் மிகுந்து ஆண்டவனது தலையிலேயே கை வைக்க முயன்ற பஸ்மா சுரனின் கதை ஸ்ரீ மொரார்ஜிக்கு மறந்திருந்தால் நினைவூட்ட வேண்டியதுதான் !
===============================================================================================

எந்த நோயையும் 
எனக்கானதென்று 
சொந்தம் கொண்டாடவே 
முடிவதில்லை 

எனக்கு முன்பிருந்தே 
அந்த நோயால் 
தாங்களும் 
அவதிப் படுவதாகவே 
அதைக் 
கேட்கும் அனைவரும் 
போட்டிக்கு வருகின்றனர்.

அவர்கள் படும் 
அவஸ்தைக்குமுன் 
என் அவஸ்தை 
ஒன்றுமேயில்லை 
என்றே 
வலியுறுத்துகின்றனர் 

==============================================================================

"வீரமணி மீது தணியாத கோபம் உண்டானது"
வலம்புரி ஜான் எழுதும் உண்மை நிகழ்ச்சி
ஓடக்காரன் வடக்கு நோக்கி துடுப்பைப் போடுகிறபோது , அதிலே பயணம் பண்ணுகிற நான் மாத்திரம் தெற்கு நோக்கி திரும்பி வரமுடியாது. ஒப்புக்காக சொல்லிக் கொண்டிருந்த உதவாக்கரை விவகாரங்களிலிருந்து இப்போது நான் விடுதலை பெற்றிருக்கிறேன். என் கால்களில் இன்னமும் சங்கிலிகள் இருக்கலாம், சிறகுகள் இலகுவாகிவிட்டன.
பார்க்க முடியாத ஒன்றை தொட்டு உணர முடியாத ஒன்றை- நான் எப்படி நம்புவது என்று தான் அம்புலி மாமா காலத்தில் நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது 60 வயதிலும் அதையே சொல்லிக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
வேளாங்கண்ணியில் தொடங்கிய 'அம்மா அழைப்பு' என்கிற பதிகத்தை பாடி முடிப்பதற்காக போன வருஷம் கொன்னூர் மூகாம்பிகை கோவிலுக்கு போனேன். என் மனையாளும் மகனும் கூடவே வந்தார்கள்.
பெங்களூரில் மகாலட்சுமி லே அவுட்டில் மூகாம்பிகை பக்த மண்டலின் என்று இருக்கிறது. அங்கே நாயக் என்று ஒருவர். பெயர் வாய்ந்த இன்ஜினியராக இருந்தவர். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டார். அம்பாள் அவர் மீது பிரத்யட்சமாகிறபோது அவர் சொல்வதெல்லாம் பலிக்கிறது என்று கேள்விப்பட்டேன்.
பெங்களூர் நண்பர்கள் என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த நேரம் வந்தது. அவர் சொன்னவைகள் ஈர நதியின் பிரவாகத்தை போல இப்போதும் எனது நெஞ்சில் ஒரு அழகோடு நடந்து கொண்டிருக்கின்றன. "நீ இவைகளை நம்புவதற்காக ஒரு அடையாளம் சொல்லுகிறேன்" என்று சொல்லிவிட்டு, "கொன்னூர் மூகாம்பிகை கோவிலில் இருந்து நீ திரும்புகிறபோது 'காளிங்கன்' என்கிற சர்ப்பம் உனக்கு எதிர்ப்படும்". என்கிற அருள் வாக்கு வந்தது .
கோயிலுக்குச் சென்றேன். மூர்த்தி கணேஷ் பட் என்கிற புரோகிதரின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். அபரணை கரையில் பதிகமும் முடிந்தது. ஊர் திரும்புகிற நேரம். பஸ் நகர்ந்து கொஞ்ச நேரம். என் துணைவி கேட்டாள் -"சர்ப்பம் தென்படும் என்றீர்களே" ஒரே ஒரு நிமிடம். இப்போதும் உடல் குலுங்கி போகிறது.
வலது புறத்திலிருந்து இடது புறமாக கருப்பு வெல்வெட் நிறத்தில் ஆள் உயரத்திற்கு ஒரு சர்ப்பம் தலையை தூக்கி அருள் வழங்குவது போல படம் காட்டியது. பஸ்ஸை நிறுத்தி அனைவரும் கீழே விழுந்து வணங்கினர். சொன்னது நடந்தது; நடக்கிறது; நடக்கும். சுவாசிக்கிற காற்றே சொந்தமில்லை என்கிற போது அம்பாளை சரணடைந்து தானே தீர வேண்டும்?
அன்றிலிருந்து அம்பாள் மீது பிரேமை உண்டானது மாத்திரமல்ல வீரமணி மீது தணியாத கோபம் உண்டானது
=======================================================================================

Love Through Time

This photo from “A Photographic History of Men in Love, 1850s-1950s” captures an intimate moment from a time when male partnerships were illegal. Approximately 120 years ago, this couple posed with a sign, symbolizing their bond in a world that condemned their love.

==========================================================================================
வீரம் விளைஞ்ச மண்ணு...  ஸீட்டு ரிசர்வ் பண்ணவே நாங்க இதைத்தான் போட்டு வைப்போம்!  -  நன்றி  :  தினமலர் 


=============================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் +




-  போலி கால் சென்டர்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மியான்மரில் போலி கால் சென்டரில் பணிபுரிந்த 1,000-க்கும் மேற்பட்ட சீன தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து கொண்டு வரப்பட்டனர். இதனையடுத்து அவர்களை மீட்பதற்காக சீனா தனி விமானங்களை தாய்லாந்துக்கு அனுப்பி உள்ளது. இந்த நடவடிக்கைக்குப்பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப உள்ளனர்.

-  வாஷிங்டன்: பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து, எப்.பி.ஐ., இயக்குனராக காஷ் படேல் பதவியேற்று கொண்டார். அவர், 'அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்களை எப்.பி.ஐ., வேட்டையாடும்' என உறுதி அளித்துள்ளார்.


சென்னை,: ரயில்வே பெண் காவலர் ஒருவர், தனக்கு உயர் அதிகாரிகள் கொடுத்த, 'டார்ச்சர்' விபரங்களை பட்டியலிட்டு, தன் பணியை ராஜினாமா செய்துள்ளார்.  இக்கடிதம் போலீஸ் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-  ஆக்ரா: தாஜ்மஹால் அருகே காணாமல் போன நாயை இரவு பகலாக 104 நாட்கள் தேடிய தம்பதியின் பாசப்போராட்டம் வெற்றி அடைந்தது. வழி தெரியாமல் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த நாய், வளர்த்தவரின் குரல் கேட்டதும் ஓடோடி வந்து அவரை கட்டித்தழுவிக் கொண்டது.

ஐ.சி.டி., எனப்படும், இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி திட்டத்தில், ரூ.500 கோடி ஒதுக்கி ஹைடெக் லேப்களை அமைத்து, பாடம் கற்றுத் தரச் சொன்னால், பாடத்திட்டத்தையே தமிழக அரசு உருவாக்கவில்லை என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

-  மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்  பொருளை போல இந்திய நிறுவனம் ஒன்றின் மருந்துகள் தவறாக பயன்படுத்தப் படுவதால் அந்த மருந்துகள் உற்பத்திக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


-  சிதம்பரம் : சிதம்பரத்தில் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மெகா சைஸ் முதலையை பார்த்து, வீட்டில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் முதலையை பிடித்து, வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

லக்னோ : உத்தர பிரதேசத்தில் எருமை மாடு வாங்குவதற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பெண், கடைசி நேரத்தில் பிடிபட்டார்.

-  கட்டாக் :ஒடிசா மாநிலத்தில், 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வுகளில், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், உயிரிழந்த சிலம்ப மாஸ்டருக்கு, அவரது மாணவர்கள் கதறி அழுதபடி சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய காட்சி, காண்பவர் கண்களை குளமாக்கியது. Video Available.

-  புதுடில்லி: பஞ்சாபில், இல்லாத துறைக்கு, 20 மாதங்களாக அமைச்சர் ஒருவர் செயல்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருப்புவனம்: திருப்புவனத்தில் டூவீலரை திருடியவர் மீண்டும் மன்னிப்பு கடிதத்துடன் அதே பகுதியில் விட்டுச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.  

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்த், சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் 9 கோள்களில், நாம் வாழும் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமா நாசா ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
====================================================================================


பொக்கிஷம் :  

கீழ்க்காணும் துணுக்குகளில் ஏற்கெனவே வந்திருந்தவை எதுவும் இருந்தால் மன்னிக்கவும்.  இன்று இதை வெளியிட்டதோடு டிராப்டில் அழித்து விடுகிறேன்.

40 - 1






22 கருத்துகள்:

  1. அலிபாபாவும் துணுக்கு சமீபத்தில் மூணாறில் பார்த்த அலிபாபாவும் 41 டிஷ்களும் என்ற ஹோட்டலை நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
  2. கீரை புராணம் சுவாரசியம். மற்ற காய்கறிகளையும் நீங்கள்தான் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலம்புரி ஜானின் 'தாய்' பத்திரிகை வாசித்திருக்கிறீர்களா, ஸ்ரீராம்?

      நீக்கு
    2. ஆமாம், நான்தான் திருத்துவேன்!

      காய்கறி என்ன தப்பு செய்தன, நான் அவற்றை திருத்த? ஹிஹிஹி... நான் திருத்தினால் அவைதான் திருந்துமா?!! ஹிஹிஹி...

      நீக்கு
    3. சிலமுறை அந்த குண்டு தாய் புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன், கொஞ்சம் வாசித்திருக்கிறேன் ஜீவி ஸார். ஆனால் அதிலிருந்து எதுவும் நினைவில் இல்லை!

      நீக்கு
  3. செவ்வாயாயிருந்தால் என்ன, சனிக்கிழமையாயிருந்தால் என்ன?

    பதிலளிநீக்கு
  4. ஆமாம்
    நோயின் உபாதை
    ஆளாளுக்கு அவர்கள்
    உடல் நிலைக்கேற்ப
    மாறுபட்டிருக்கும் என்பதை
    மறந்து விடுகின்றனர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கிருக்கும் அத்தனை நோய்களும் அவர்களுக்கும் அதே சமயம் இருப்பது ஆச்சர்யம்தானே?  நமக்கு என்பது இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களை குறிக்கிறது.  யார் சென்று என்ன சொன்னாலும்!

      நீக்கு
  5. ​கீரை புராணம் நத்தை என்ற இலவச இணைப்பால் ரசிக்க தக்க ஒன்றாக இருந்தது. வாரத்தில் ஒரு நாள் கீரையை சாப்பிடுவது அலுத்து விடும் எங்களுக்கு. எப்படித்தான் வாரத்தில் மூன்று நாள் கீரை சமைக்கிறீர்களோ?

    சிறுபிள்ளையில் பாடிய பாட்டு நினைவில்

    நத்தையாரே நத்தையாரே
    அத்தை வீடு பயணமோ
    அத்தை வீடு போக முதுகில்
    தண்ணீர் குடம் வேண்டுமோ?

    உங்க வீட்டில் நத்தையாரின் அத்தை இருக்கிறார் போலும்?

    என்ன கீரை என்பதிற்கு விடை மணத்தக்காளி கீரை.

    முதல் முறையாக காங்கிரஸ் இல்லாமல் அமைக்கப்பட்ட ஜனதா ஆட்சி.... பிரதமர் மொரார்ஜி. சாதாரண மக்கள் எல்லோரும் மிகவும் தனிப்பட்ட முறையிலும், அலுவலக ரீதியிலும் மிகவும் கஷ்டப் பட்ட காலம் அவரது காலம். எமெர்ஜென்சி எடுக்கப்பட்டாலும் அதை விட கடுமையான சட்டங்களை கொண்டு வந்தவர். மூத்திரக் குடி, 18 காரட், பசை பச்சரிசி, சர்க்கரை ரேஷன், கட்டாய சேமிப்பு (சம்பளத்தில் ஒரு ப்குதியை பிடித்துக்கொள்வார்) subsidy போன்ற வற்றை முற்றிலும் அழித்தது என்று ஒரு பதிவு அளவுக்கு எழுத முடியும். முடியுமானால் துணுக்கு செய்தியாக அவ்வப்போது சனி பகிர்வில் இணைக்கிறேன்.

    எசப்பாட்டு

    உனக்கென்று தனியே ஒன்றுண்டு
    அதுதான் உன்னுடைய விதி.
    பிரம்மன் எழுதிய தலை எழுத்து
    எல்லோருக்கும் ஒன்று போல் இல்லை.

    இதையும் கவிதை என்று சொல்ல முடியுமா?

    காளிங்கன் கதை முகநூலில் வந்ததா?

    நியூஸ் ரூம் செய்திகள் நிறைய.

    ஜோக்குகள் பரவாயில்லை ரகம் தான்.

    இன்றைய பதிவு நீளம் அதிகம் என்றாலும் கீரை புராணம், மற்றும் மொரார்ஜி புராணம் மட்டும் மனதில் பதிகின்றன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்கள் கீரை இல்லாமல் வாடியதால் அலுக்காமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  மேலும் தற்சமயம் சாதத்தின் அளவை வெகுவாகக் குறைத்து, காய், கீரை பக்கம் கவனம் திருப்பி இருக்கிறேன்!

       நத்தையாரின் அத்தை பாடல் நானும் படித்திருக்கிறேனோ என்கிற ஐயத்தை மனதில் உண்டாக்கியது!

      மணத்தக்காளி கீரை என்பது சரியான விடை!  எளிதான கேள்வி!

      எதையுமே கவிதை என்று சொல்லிக் கொள்வது நம் உரிமை.  
      என் அம்மா வருடத்தில் ஓரிரு மாதங்கள் பிறழ்ந்த மனநிலையில் இருப்பார்.  திடீரென ஒருநாள் நார்மலுக்கு திரும்புவார்.  அன்று அவர் வாயிலிருந்து வரும் என் பெயர் கூட எனக்கு கவிதைதான்!

      காளிங்கன் கதை எங்கள் வீட்டு பைண்டிங் புத்தகம் உபயம்.  படம் சேர்க்க மறந்தேன்!

      செய்தித்துளிகள்தானே..  பாதிக்காது.  மனதில் சுவாரஸ்யம் என்று படும் செய்தியை மட்டும் லிங்க் தொட்டு வாசிக்கச் செல்லலாம்.

      பதிவு நீளமா?  ஆ...   குறைச்சல் என்ற குறை இருந்தது மனதில்!!!

      மொரார்ஜி பதிவு என்று நீங்கள் சொல்வது MVV எழுத்தும் வாழ்க்கையும் பகுதி..

      நன்றி JKC  ஸார்...

      நீக்கு
  6. ஜரிகையில் சரி,
    தங்கப் பதக்கத்தில்
    தங்கம் இருக்குமா?
    பதக்கம் வாங்கிய யாராவது
    பகருங்களேன்..
    லலிதா, சொர்ணா யாரிடமாவது
    கேட்டுச் சொன்னாலும்
    சரி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.  அதோடு இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...  ...  மைசூர்பாக்கிலோ, மைசூர் போண்டாவிலோ மைசூர் இருக்குமா?

      லலிதா பத்மினி சிஸ்டர்.  சொர்ணா யார்? 

      சொர்ணமுகியா?  அல்லது சொர்ணா அக்காவா?

      நீக்கு
  7. நத்தையிருந்தால்
    சொத்தையா என்ன?..
    அத்தை மகளிடம் கேட்டேன்
    காலிஃப்ளவரில்
    கத்தை கத்தையாய்
    ஊர்வனவெல்லாம்
    உல்லாசமாய் திரிவதைப்
    பார்த்ததில்லையா
    என்றாள் பாவை.
    கள்ளி கண்ணசைவில்
    கயலும் புரண்டது கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயல் என்ன முயலும் வரும் அயல் வீடுகளில்.. ஃபிளவர் காலி என்று நம்பி வாங்கினால் அதில் நெளிந்தால் விட்டு விடுவோமா... கண்ணீர் விட்டு அழுதாலும் வெந்நீர் போட்டு எடுத்து விடமாட்டோம்?

      நீக்கு
    2. அந்த வெந்நீரில், நாங்கள்
      அடைக்கலமாகி
      விடுவோம் என்பது
      அவரவர் அசட்டுதனமான
      எண்ணங்கள்தான்..!
      கொதித்து கொந்தளிக்கும் வெந்நீரில் போட்ட கோபத்தில்
      பிடிவாதமாக
      ஃப்ளவரோடு ஒட்டிக் கொள்ளும், நாங்கள்
      கோபி மஞ்சூரியன் ஆகி விடுவதில்லையா..!
      ஆக, ஊர்ந்தாலும், நெளிந்தாலும்,
      நலிவுற்றாலும்,
      நாங்கள்
      நல்லவர்கள்தாம்..!

      நீக்கு
    3. ஆ...
      கமலா அக்கா...   அசத்தி விட்டீர்கள்.  புதிய அவதாரம்.

      அது சரி, புழுக்கள் அந்த தண்ணீரில் மிதந்து விடுமே...  வெதுவெதுப்பான தண்ணீர்த்தானே?  உள்ளேயே இருந்து விடும் என்று பயமுறுத்துகிறீர்களே!

      நீக்கு
  8. கொஞ்சும் வரை கொஞ்சி விட்டு
    கொஞ்சி முடித்தபின்
    தூர விசிறி விடுவது தான்
    டிராப்ட்டின் தலையெழுத்தா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அதற்கான இடத்தை அடைந்தபின் இங்கு காலியாகத்தான் இருக்கும்!  ஆமாம், எதைச் சொல்கிறீர்கள்?

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!