வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
சென்ற வாரம் கண்டராதித்தர் எப்படி நாட்டு அரசனானார் என்ற வரலாற்றைச் சொல்லவந்தவன், “மூன்றாம் இந்திரன் மகனான நான்காம் கோவிந்தன் அரசனாகி குந்தள நாட்டை அரசாள்கிறான்.” என்று முடித்திருந்தேன். அவன் பராந்தக சோழனின் மருமகனாகிவிட்டான் (அவனுடைய மகளை மணந்துகொண்டதன் மூலம்) இப்படி உறவினர் ஆகிவிடுவதால் பெரும் போர் என்று வரும்போது படைகள் உதவிக்கு வரும். ஆனாலும் காலம் ஒரு அரசனை நிம்மதியாக விட்டுவிடாதில்லையா?
இந்த நான்காம் கோவிந்தன் பேரழகன். 918ல் இளவரசனாக ஆன இவன், பின்னால் அரசனாகி 938 வரை ஆட்சி புரிந்தான். குந்தள அரசனின் செயல்கள் அவனுக்கு மக்களிடத்தில் ஆதரவைப் பெற்றுத்தரவில்லை. அரசாங்க அதிகாரிகளும் குறுநில மன்னர்களும் அரசனிடத்தில் வெறுப்புடன் இருந்தனர். குந்தள இராச்சியத்தில் நான்காம் கோவிந்தனுக்கு அதரவு வெகுவாகக் குறைந்திருந்தது. இந்தச் சமயத்தில் கீழைச் சாளுக்கிய மன்னர்களான யுத்தமல்லனுக்கும் இரண்டாம் வீமனுக்கும் மனவேறுபாடு உண்டாகி அவர்களிட த்தில் பகை மூண்டது. இந்த நிலையில் 934ல் நான்காம் கோவிந்தன், யுத்தமல்லனுக்கு ஆதரவாகக் களம் இறங்கி, இரண்டாம் வீமனுடன் போர் புரிந்தான். இந்தப் போரில் நான்காம் கோவிந்தன் தோல்வியுற்றான். ஏற்கனவே மக்கள் ஆதரவு மிகக் குறைந்திருந்தது. இதில் இன்னொருவனுக்காக படை நடத்திப் போர் புரிந்து தோற்றதனால் உள்நாட்டில் மதிப்பும் குறைந்தது. இதைப் புரிந்துகொண்ட அமோகவர்ஷனின் மகன் மூன்றாம் கிருஷ்ணதேவன் (அதாவது நான்காம் கோவிந்தனின் சிறித தகப்பனின் மகன்) உள்நாட்டில் குழப்பம் விளைவித்து இராஷ்டிரகூட அரசுரிமையைக் கவர்ந்து தன் தகப்பனான அமோகவர்ஷனை அரசனாக்கினான். (935ல்). அரசை இழந்த நான்காம் கோவிந்தன், தன் மனைவியான வீரமாதேவியுடன் சோழ ராஜ்ஜியத்துக்கே வந்து தன் மாமனாரான பராந்தக சோழனுடன் தங்கியிருந்தான்.
கிபி 939ல் அமோகவர்ஷன் இறந்தான். அது வரையில் மாமனார் வீட்டில் (அரண்மனையில்) தங்கியிருந்த நான்காம் கோவிந்தன், இரட்டை மண்டலத்தின் அரசுரிமையை மீண்டும் பெற அதுவே தக்க சமயம் என்று நினைத்து தன் மாமனாரின் உதவியைப் பெற்றான். சோழப்படையும் போருக்குப் புறப்பட்டது. இதற்கிடையில் அரசனாகியிருந்த மூன்றாம் கிருஷ்ணதேவனின் அக்காள் கணவனும், கங்க நாட்டை ஆண்டுகொண்டிருந்த இரண்டாம் பூதுகன் என்பவன், மூன்றாம் கிருஷ்ணதேவனின் உதவிக்கு வந்தான். இந்த இரண்டு படைகளும் இரட்டை மண்டலத்தில் தங்களுக்கு எதிராக வந்த சோழப்படையுடன் போர் புரிந்து சோழப்படையைத் தோற்றோடச் செய்தன. வெற்றிபெற்ற மூன்றாம் கிருஷ்ண தேவன், இராட்டிர கூடத்தின் அரசுரிமையைக் கைப்பற்றினான். தங்களுக்கு எதிராக பராந்தகச் சோழன் படைகளை அனுப்பியதால், மூன்றாம் கிருஷ்ணதேவனின் பகைவனாக பராந்தகச் சோழன் ஆனான். கங்க நாட்டின் தென் பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் பிருதீவிபதி என்பவன் பராந்தகச் சோழனின் நண்பன். அதனால் கங்கநாட்டின் தென் பகுதி சோழனுக்கு ஆதரவாகவும் அதன் வட பகுதி, மூன்றாம் கிருஷ்ணதேவனின் மாப்பிள்ளை (அக்காள் கணவன்) இரண்டாம் பூதுகனால் ஆளப்பட்டு வந்ததால் சோழனுக்கு எதிராகவும் இருந்தது. ஏற்கனவே பராந்தகனால் வாணர்கள் நாடும், வைதும்பராயர்கள் ஆண்டிருந்த பகுதியும் வெற்றிகொள்ளப்பட்டிருந்ததால், அவர்களும் மூன்றாம் கிருஷ்ணதேவனிடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். (இந்த வாணர் குலத்து வந்தியத்தேவன் தான் பிற்காலத்தில் இராஜராஜசோழனின் தமக்கை குந்தவியின் கணவனாக ஆகி, சோழ ராஜ்ஜியத்திலேயே தங்கிவிடப் போகிறவன்)
கிபி 940ல் கங்க நாட்டின் தென் பகுதியை ஆண்ட இரண்டாம் பிருதிவிபதி இறந்தான். அவனுடைய மகனான விக்கியண்ணன், ஏற்கனவே இறந்துவிட்டான் என்பதால், இராஜ்ஜியத்துக்கு அடுத்த அரசன் இல்லை. கங்க மன்னன் இரண்டாம் பூதுகன், தென் பகுதியையும் தன் ஆளுகையின் கீழ் எளிதாகக் கொண்டுவந்துவிட்டான் (ஏற்கனவே சோழர் படை முந்தைய வருடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்திருந்தது)
கிபி 940ல், சோழமன்னன் பராந்தகன், வடக்குப் பகுதியில்
பல்வேறு எதிரிகளைச் சம்பாதித்துவிட்டான். அதைவிடப் பெரிய பிரச்சனை, அந்த
எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். இதன் அடுத்த கட்டம், படைபலத்தைப்
பெருக்கி, சோழ அரசோடு நேரிடையாகப் போரிட வருவதுதான். இப்படி
நடக்க வாய்ப்பிருக்கிறது என்று முன்பே உணர்ந்திருந்த பராந்தகன், இதனால் சோழ சாம்ராஜ்யத்துக்குப் பெரும் பிரச்சனை
வரும் என்று யூகித்து, தன்னுடைய மகன் இளவரசன் இராஜாதித்தனை 936ல் தென்னார்காடு
திருக்கோவலூர் அருகில் பெரும் படையோடு
இருக்கச் செய்திருந்தான்.
அவனும் அங்கிருந்தவாறே
சோழ சாம்ராஜ்யத்தின் வடக்குப் பகுதியைக் கண்காணித்துக்கொண்டிருந்தான். அவனுகு
உதவியாக அவனுடைய தம்பியான அரிகுலகேசரியும் அங்கிருந்தான். (இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஆங்காங்கு
இருக்கும் கோயில் கல்வெட்டுகளை வைத்துத்தான்)
மூன்றாம் கிருஷ்ணதேவன் (கல்வெட்டுகள் இவனை கன்னர தேவன் என்று சொல்லும்) பராந்தகச் சோழன் தனக்கு எதிராகப் படை அனுப்பிப் பொருததை மறக்கவில்லை. அதனால் அரசுக்கு வந்ததும் பெரும் படை திரட்டுவதில் முனைந்தான். இதற்கு அவனுக்கு 8 ஆண்டுகள் ஆகியிருந்தன. இளவரசன் இராஜாதித்தன் கிட்டத்தட்ட பனிரண்டு வருடங்கள் திருக்கோவலூர் அருகே பெரும் படையுடன் இருந்தான். அப்போது பல இடங்களில் கோயில்கள் எடுப்பித்திருக்கிறான். அவனுடைய தம்பியும் கோயில்கள் எடுப்பித்திருக்கிறான். சோழர் படைத்தலைவனும் ஒரு கோயில் எடுப்பித்திருக்கிறான் (943ல்). அப்படியென்றால் ஓரளவு அமைதியாகவே அப்போது இருந்திருக்கிறது என்று அர்த்தம்.
கோவில் வெளிச்சுவற்றில் சிறிய சிறிய அழகிய
சிற்பங்கள், அனைத்தும் புராணங்களுடன் சம்பந்தப்பட்டவை
தெய்வச் சிற்பத்தின் கீழே சிம்ம உருவங்கள் எவ்வளவு அழகாக அமைந்திருக்கின்றன என்று பாருங்கள்.
எனக்கு எப்போதுமே கோயிலில் இருக்கும் கணபதி சிற்பமோ இல்லை உருவங்களோ இருந்தால் படமெடுக்கப் பிடிக்கும். காரணம், கல்கி அவர்கள் தன் நாவலில், பல்லவர் காலத்தில்தான் கணபதி வழிபாடு நம் தமிழகத்தில் ஆரம்பித்தது, அப்போதுதான் கணபதி சிற்பங்கள்/சந்நிதி கோயில்களில் வர ஆரம்பித்திருந்தது என்று எழுதியிருந்தார். அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை, அர்த்தமில்லாத கற்பனை என்று நினைத்தேன்.
சுதைச் சிற்பத்தை சரி செய்திருக்கிறார்களோ?
காலத்தினால் ஏற்பட்ட சிதைவுகளா இல்லை
படையெடுப்புகளினாலா?
சட் என்று பார்க்கும்போது பௌத்த அல்லது சமண தீர்த்தங்கரர்கள்/ சன்னியாசிகள் போலத் தெரியவில்லை? நம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, சோழதேசத்தில் பௌத்தம் என்று சிறப்பான ஒரு நூலை எழுதியிருக்கிறார்.
949ல் தன்னுடைய பெரும் படையுடன், கூடவே கங்கநாட்டு மன்னனாகிய இரண்டாம் பூதுகனின் துணையுடன், இராட்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ண தேவன், தொண்டை மண்டலத்தை நோக்கிப் படையுடன் வந்தான். திருக்கோவலூரின் அருகே படையுடன் இருந்த இளவரசன் இராஜாதித்தன் சோழ தேசம் சார்பாக இந்தப் போரில் இறங்கினான். ஒரு பக்கம் பெரும் வீரம் கொண்ட இளவரசன் இராஜாதித்தன். மறுபுறம் இராட்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணதேவன் தலைமையில் வந்த பெரும் படை. இதில் அவனது மாப்பிள்ளை இரண்டாம் பூதுகனும் அவன் படையும் அடக்கம். இருவரும், அரக்கோணத்திற்கு அருகே தக்கோலம் என்ற இடத்தில் மோதிக்கொண்டனர்.
இதுவே வரலாற்றில் பெரும் போர் என்று குறிப்பிடப்படும் தக்கோலப் போர். இந்தப் போரில் யார் வெற்றிபெறுவார்கள் என்று கணிக்கவே முடியாதபடி பெரும் போர் நடைபெற்றதாம். சோழப் படையின் பெரும் வீரம் இந்தப் போரில் வெளிப்பட்டது. போரின் முடிவில், கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் விட்ட அம்பு, யானை மீது நின்றுகொண்டிருந்த இளவரசன் இராஜாதித்தன் மீது பாய்ந்து இராஜாதித்தன் இறந்தான். சோழர் படை மனக்கலக்கம் அடைந்தது. இராட்டிரகூடப் படை உத்வேகம் பெற்றது. அந்த தக்கோலப் போரின் வெற்றியினால் தென்னார்க்காடு பகுதி (அப்போது திருமுனைப்பாடி நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி) மற்றும் தொண்டை நாடு, இராட்டிரகூடர் வசம் வந்தது. சில கல்வெட்டுகளில் இராஜாதித்தன் போரில் வென்று, அவன் கவனக் குறைவாக இருந்தபோது பூதுகன் விட்ட அம்பால் யானை மீதிருந்த அவன் மாண்டான் என்று குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகள் பூதுகன் போரின்போது இராஜாதித்தனை அம்பால் வீழ்த்தினான் என்கின்றன. அதனால்தான் இராஜித்தன், யானை மீது துஞ்சிய தேவர் என்று கல்வெட்டுகளினால் அறியப்படுகிறான்.
949ம் வருடத் தக்கோலப் போரில் கன்னர தேவன் வெற்றி பெற்றாலும் திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டைமண்டலத்தையும் முழுமையாக இராட்டிரகூடப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு அவனுக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. கிபி 955லிருந்து 968ல் மூன்றாம் கன்னர தேவன் இறக்கும் வரையில் திருமுனைப்பாடி மற்றும் தொண்டை மண்டலம் இராட்டிரகூட இராஜ்ஜியதின் பகுதியாக இருந்தது.
தக்கோலப் போரினால் சோழர்கள் சாம்ராஜ்யம் சுருங்கியது எனலாம். பட்டத்து இளவரசனும் வீரனுமான இராஜாதித்தன் மறைந்தது பராந்தகச் சோழனை நிலைகுலையச் செய்தது. 950ல் தன் இரண்டாம் புதல்வனான கண்டராதித்தனை இளவரசனாக்கினான். இதுவே சிவபக்தியில் மூழ்கி இருந்த கண்டராதித்தனை சோழ இளவரசனாகவும், பிறகு மூன்று வருடங்களில் சோழ அரசனாகவும் ஆனதன் வரலாறு.
யாருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ, பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கிறதோ அவர்களே அரசனாக முடிகிறது (தற்காலத்தில் தலைவனாக முடிகிறது).
அழகிய எருதுச் சிற்பம். மிகச் சிறிய அளவிலேயே எழிலுடன் திகழ்கிறது.
லிங்கோத்பவர். இவர்தான் நம் மனக்கண்ணில் நாம் லிங்க உருவைத் தரிசனம் செய்யுபோது வரவேண்டும்.
வலது பக்கம் வாள் கேடயத்துடன் இருக்கும் வீரனின் சிற்பம் உள்ளங்கை அகலமே உடையது. எவ்வளவு சிறிய இடத்தில் அழகிய சிற்பத்தைச் செதுக்கியிருக்கிறார்கள்.
நடந்த சோழர் வரலாற்றிற்கு நானும் ஒரு சாட்சி என்று ஐராவதீஸ்வரர் கோயில் விமானம் சொல்கிறதோ?
இந்த வாரம் கண்டராதித்தர் அரசனான வரலாறும், தாராசுரம் கோயில் படங்களும் அதிகமாகிவிட்டதோ? அடுத்த
வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வாரத்திய வரலாற்று பதிவு (கோவில் தரிசன பதிவு) மிக அருமையாக உள்ளது. எப்படி இவ்வளவு விபரமாக சரித்திர வரலாற்றை படித்து சேகரித்து தொகுக்கிறீர்கள் என நிறைய வியப்பு வந்தது. பாராட்டுக்கள்.
நன்றாக புரியும்படி விளக்கமாக சொல்லியுள்ள தங்களின் எழுத்துக்களை விரும்பி படித்து ரசித்தேன். நடுவில் தாங்கள் எடுத்த கோவில் படங்களுக்கு பின்புள்ள இன்னும் பாதியையும் படித்து விட்டு வருகிறேன். தாங்கள் எடுத்த படங்களும் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வரலாறு ரொம்ப அதிகமாகி போரடிக்க வைக்கிறதோ கமலா ஹரிஹரன் மேடம்? பெயர்க்குழப்பங்கள் அயர்ச்சியைத் தருகிறதோ?
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்கு/வரலாறு ரொம்ப அதிகமாகி போரடிக்க வைக்கிறதோ/
அப்படியெல்லாம் படிக்க போரெல்லாம் அடிக்கவில்லை. சரித்திர கதைகள் மிக சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், முதலாம், இரண்டாம் பெயர்களை நன்றாக நினைவுபடுத்திக் கொண்டு படித்தால், நினைவில் நன்றாக தங்கி விடும். அதற்கு ஒரு சில முறை வேறெங்கும் கவனம் வைக்காமல் படிக்க வேண்டும். நீங்கள் சிரமத்தைப் பாராமல், இவ்வளவும் படித்து இவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் எனும் போது ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. உங்களின் எழுத்து திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
கோவிலில் அனைத்து சிற்பங்களின் நுணுக்கங்களும் வியக்க வைக்கிறது. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். எழுத்தில் தவறுகள் இருப்பினும் (புரிதலினால்) முடிந்தவரை விளக்கமாக எழுதிவிடுவது நல்லது என்று எனக்குத் தோன்றியது. வெறும்ன படங்களை மாத்திரம் பகிர்ந்தால் அதில் என்ன சுவாரசியம் இருக்கும் என்று தோன்றியது.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஅனைவருக்கும் நல்லது நடக்கட்டும் துரை செல்வராஜு ங
நீக்குஇரண்டாம், நான்காம், மூன்றாம் என்னும் குழப்பங்களை எப்படி குழப்பமில்லாமல் எழுதுகிறீர்கள்? இப்படி விளக்கமான வரலாற்றைக் கொடுக்க உதவி நீலகண்ட சாஸ்திரி நூல் உதவியா? என் நூல் அல்லது என்னென்ன நூல்கள் உதவின?
பதிலளிநீக்குநான் நான்கு புத்தகங்களைப் படித்து எனக்குப் புரியும் விதத்தில் ரொம்ப போர் மற்றும் உறவுமுறைகளை, அவர்கள் மனைவியர் குழந்தைகளைக் கொண்டுவராமல் எழுத முயல்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குஅனைத்துப் புத்தகங்களுக்கும் நீலகண்ட சாஸ்திரி மற்றும் அவரவரின் interpretation அடிப்படையாக இருப்பதை உணர முடிகிறது.
படங்களும் தகவல்களும் நன்று.
பதிலளிநீக்குஇறுதியில் இருக்கும் படம் பூமியோடு எடுத்த விதம் அழகு.
வாங்க கில்லர்ஜி. மிக்க நன்றி
நீக்குஅழகிய சிற்பங்கள் வியக்க வைக்கின்றன..
பதிலளிநீக்குவரலாறுகள் அறிந்து வருகிறோம். மிகவும் நன்றாக கூறிவருகிறீர்கள்.
ஐராவதீஸ்வரர் கோபுரம் விமானம் மிகவும் அழகாக இருக்கிறது. வணங்கிக் கொண்டோம்.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்கு/யாருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ, பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கிறதோ அவர்களே அரசனாக முடிகிறது (தற்காலத்தில் தலைவனாக முடிகிறது).//
பதிலளிநீக்குஅருமையான உண்மை.
படங்கள் வழக்கம் போல் துல்லியமாக, அழகாக உள்ளன.
வாங்க ஜெயகுமார் சார்.. நானே மிகவும் வியந்திருக்கிறேன்... விதி யாரைக் கை காட்டுகிறதோ அவர்களே பெரிய அளவில் வருகிறார்கள், மற்றவர்களை எப்படித் தயார் செய்திருந்தாலும், விதியே இவற்றை முடிவெடுக்கிறது என்பதைக் காணும்போது ரொம்பவே ஆச்சர்யம்தான்.
நீக்குhttps://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh_bzhZg_5g21Alr_TsY4Y6QewE1_4SpwJia-36dXfxcitGC-BleToVVXqrSOqFeyzsDkpUA91HlXTKvzqvK7jo84k6P11mdFUhQqP70Ch5znJwq3lEhNKP_XatTg0pdT-xT3jWO6EOszAKDNLmQJrUgjJDs1lXc2EK0MNNwb9QyYpjQG7EVPj4Dkx2yT32
பதிலளிநீக்குஅந்தக் காலத்திலே தீப்பெட்டி?
Jayakumar
ஹா ஹா ஹா... நம்ம ஆட்களுக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது. எப்படிப்பட்ட கலைச்செல்வங்கள். ஆனால் பிரசாதம், குங்குமம் தடவுவது, குப்பைகளைப் போடுவது என்பதெல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணம்.
நீக்குவரலாறு பார்த்துக் கொண்டேன்...சிலது மனதில் பதிய அதாவது, 1, 2 4 எல்லாம் இப்ப குழப்பமாக ஹிஹிஹிஹி... மறந்து போகும் என்பதாக ...பரவால்ல...நமக்கு அடுத்தாப்ல படங்கள்தான்...
பதிலளிநீக்குஆனா உங்க முயற்சி அபாரம் நெல்லை. இத்தனையும் திரட்டி எழுதியிருக்கீங்க பாருங்க அதுக்கே பெரிய சபாஷ்!!
கீதா
வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். எனக்கே பிடிபட நிறைய நேரம் ஆனது. அதுல வேற சில புத்தகங்கள்ல அரசர்களோட வேற வேற பெயரை உபயோகிப்பதால் வரும் குழப்பம், சிலர் கன்னரதேவன் என்று எழுதுவாங்க, சிலர் கிருஷ்ண தேவன் என்பாங்க. அதுபோல சில அரசர் பெயர்களையும் அநபாயன் என்றெல்லாம் பெயர்ல எழுதுவாங்க. ரொம்ப கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
நீக்குகுட்டி குட்டிச்சிற்பங்கள் வாவ்!!! நெல்லை எப்படித்தான் இதெல்லாம் செதுக்கினாங்களோ!! அப்படி வியப்பா இருக்கு. மினியேச்சர் டிசைன்ஸ்!
பதிலளிநீக்குஆஅமாம் சிம்ம உருவங்கள் செம அழகு. எனக்கென்னவோ இந்தச் சைனாக்காரங்க இங்க இதெல்லாம் பார்த்துதான் அவங்க ஊர் சிலதெல்லாம் செஞ்சிருப்பாங்களோன்னு!!! ஹிஹிஹி அந்த டிராகன் எல்லாம்...பாருங்க நம்ம புத்திய...அவங்க ஒரிஜினலா செய்திருந்தா கூட என் புத்தி போறத பாருங்க!!!
கீதா
நம்மவர்கள் மற்றும் சீன சிற்பிகளின் திறமை அளவிடற்கரியது. இரண்டுமே ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை.
நீக்குஆனாலும் பெரிய கலைச் செல்வங்களைச் செய்யணும் என்றால் அதற்கு மனித உழைப்பு வேண்டும். அது எப்படிப் பெற்றார்கள் என்பதை நாம் அறிதல் கடினம் (போரில் பிடிபட்ட வேற்று நாட்டு வீரர்கள், மக்கள் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று வரலாறு சொல்கிறது)
அந்தக் குட்டிச் சிற்பங்கலுக்கு எவ்வளவு அழகா இப்படி வில் வைத்திருக்கும் உருவ்னகள் அதுக்கும் கீழ இன்னும் சிறிதான ஒயில் இடுப்புடன் வாவ்!!
பதிலளிநீக்குநெல்லை எனக்கும் பிள்ளையார் தோஸ்தை எங்க பார்த்தாலும் எடுத்துவிடுவேன். அனுமதிக்கப்பட்டால்.
அதுக்குக் கீழ அந்தச் சிற்பம் சரி செய்யபப்டிருக்கு என்பதற்கும் மேலாக அதன் வடிவத்தைப் பாருங்க....ஓ மை கடவுளே!! தலைக்கிரீடம்? அதன் அழகைப் பாருங்க...ரசித்துப் பார்த்தேன். வலது கைல என்னது அது? கண்ணகி வைச்சிருக்காப்ல இருக்கு? இப்பலாம் யுவதிகள் அதாவது இந்த விழாவுக்கு வருவாங்களே செலிப்ரிட்டீஸ்னு அவங்க ஹேன்ட்பேக் போட்டுக் கொள்வது அபூர்வம் கைல ஒரு சின்ன ஹேன்ட் பேக் வடிவில் தொங்கவிட்டுக் கொண்டு இல்லைனா இப்படி வளையங்கள் வைத்துக் கொண்டு வருவது போல இருக்கு!
சிற்பம் ஒய்யாரம்!
கீதா
கல்கி அவர்கள் எழுதினதால்தான், அது எப்படி பிள்ளையார் பல்லவ மன்னன் காலத்திற்கு முன்னால் இல்லாமல் இருந்தார் என்ற கேள்வியால்தான் நான் அதனைக் கூர்ந்து கவனிப்பது வழக்கம். நம்மிடம் முருகன் கோயில்கள், சிவன் கோயில்கள் அனேகம். அப்படி இருக்கும்போது விநாயகர் மாத்திரம் இல்லாமல் இருந்திருப்பாரா?
நீக்குஒவ்வொரு சிற்பங்களையும் ரசித்ததற்கு நன்றி. எனக்குமே அவற்றைக் கூர்ந்து கவனித்துப் பார்க்கப் பிடிக்கும். அதனால்தான் அவற்றை இங்கு பகிர்கிறேன்.
கொஞ்சம் காலத்தினாலும் ஏற்பட்டிருக்கும், நெல்லை.
பதிலளிநீக்குசட் என்று பார்க்கும்போது பௌத்த அல்லது சமண தீர்த்தங்கரர்கள்/ சன்னியாசிகள் போலத் தெரியவில்லை?//
சட்டென்று இல்லை நெல்லை, அச்சிற்பங்கள் அதைக் குறிப்பதுவேதான்....நம்ம முனைவர் ஐயா இதெல்லாம் பார்த்து ஆராய்ந்தும் எழுதியிருப்பார்.
தக்கோலப்போர் மட்டும் நினைவிருக்கிறது.!
சிவனின் அழகிய ஒவியம் இப்ப கொஞ்சம் அழிஞ்சுருக்கோ?
கீழே தக்ஷிணாமூர்த்தி செம அழகு...
சிவபக்தனான அதில் மூழ்கியிருந்த கண்டராதித்தான் இளவரசன் ஆனதும் அக்கதையும் நினைவிருக்கிறது. ஹப்பா வயசாகலை நமக்கு!!
கீதா
//அக்கதையும் நினைவிருக்கிறது. ஹப்பா வயசாகலை நமக்கு!!// உங்களுக்கு ஒன்று தெரியுமா (தெரியாமலிருக்குமா?) வயசாக வயசாக சிறிய வயதில் படித்தது நினைவிருக்கும் ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் படித்ததோ பார்த்ததோ நினைவிருக்காது. அதனால் நேற்று என்ன சாப்பிட்டீங்க, முந்தைய வாரம் எங்கு சென்றீர்கள், உணவுக்கு என்ன பண்ணினீங்க என்பதையெல்லாம் நினைவில் இருத்த முடிந்தால் உங்களுக்கு வயசே ஆகலை என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள். ஹா ஹா ஹா (ஆனாலும் நீங்க எனெர்ஜெடிக் பெர்சன்)
நீக்குமுனைவர் ஜம்புலிங்கம் சார், சோழ நாட்டில் பௌத்தம் என்பதை எழுதியிருக்கிறார் (ரொம்பவே ஆராய்ந்து). நான் திருவாரூர் கோயிலில் பெரிய புத்தர் சிலையைப் பார்த்தேன். ஆச்சர்யப்பட்டு பிறகு அவரிடம் பேசினேன். அவரைப் பற்றிச் சொல்லும்போது, அவ்வளவு தெளிவாக அவர் புரிய வைப்பார். பேராசிரியராக வேலை பார்க்கும் தகுதி பெற்றவர் அவர்.
எருதுச் சிற்பம் அழகு அந்த ௳னிகள் கூட அழகா செஞ்சிருக்காங்க
பதிலளிநீக்குஉள்ளகை அளவு ச் சிற்பம் கூட சூபர்..
க்டைசிப் படம் அட்டகாசம், நெல்லை
கீதா
மிக்க நன்றி கீதா ரங்கன், படங்களை ரசித்தமைக்கு
நீக்குசோழர்களின் வரலாற்றுச் செய்திகள் சிறப்பு..
பதிலளிநீக்குபடங்கள் அருமை..
வேறென்ன வேண்டும்!
நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குவாசித்தேன், நெல்லை.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார்... நலமா இருக்கீங்களா? நீங்க வாசித்தேன் என்று சொல்வதே மகிழ்ச்சி. உங்கள் கருத்தையும் தெரிவித்திருக்கலாமே...
நீக்குவரலாறு அருமை.
பதிலளிநீக்கு//ஆனாலும் காலம் ஒரு அரசனை நிம்மதியாக விட்டுவிடாதில்லையா?//
அரசன் பலவிதமான சோதனைகளை கடந்து சாதனைகளை படைக்க வேண்டும். தன் மக்களை காப்பாற்ற வேண்டும். எப்போதும் நாட்டு மக்கள் நினைவு, நாட்டை விஸ்தரிக்க வேண்டும் என்ற நினைப்பு இருந்து கொண்டே இருக்கும்.
//யாருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ, பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கிறதோ அவர்களே அரசனாக முடிகிறது (தற்காலத்தில் தலைவனாக முடிகிறது).//
ஆமாம், அரசபாரத்தை சுமக்க விருப்பம் இல்லாமல் இருந்த அரசர்களும் கடமை, தாய், தந்தையின் விருப்பத்தின் பேரில் அரசர் பொறுப்பை ஏற்று அரசாண்ட கதைகள் இருக்கே வரலாற்றில்.
வாங்க கோமதி அரசு மேடம். எனக்கு விதி மேல் மிகுந்த நம்பிக்கை உண்டு. எப்படி விதி வரலாறுகளை எழுதுகிறது என்பதும் எனக்கு மிக்க ஆச்சர்யத்தை உண்டாக்கும்
நீக்குகடைசி கோபுர படத்திற்கு மேலே இருக்கும் சிற்பத்தின் படத்தில் இடது பக்கம் தோளில் பறவை போல இருக்கிறது.
பதிலளிநீக்குகடைசி படத்தில் கற்கள் பாவிய தரை அழகு.
நன்றாகக் கூர்ந்து கவனித்துள்ளீர்கள் கோமதி அரசு மேடம். நன்றி
நீக்குநிறைய பதிவுகள் படிக்க முடியாமல் விடுபட்டுப் போனது. நேரமெடுத்து படிக்க வேண்டும் - படிக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட்... நானும் பயணங்களால் பல பதிவுகளைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. பிறகு பழைய பதிவுகளைப் படித்தாலும், கருத்து எழுதுவதால் என்ன பயன் என்றும் தோன்றிவிடுகிறது, சில கலாய்ப்புப் பதிவுகள் தவிர.
நீக்குஇருக்கும் ஏகப்பட்ட பொறுப்புகளில் எப்படித்தான் உங்களுக்கு பயணங்களுக்கு பிறகு அது பற்றி விவரமாக எழுத நேரம் கிடைக்கிறதோ (சமீப காலமால உங்கள் பதிவுகள் இன்னும் விவரங்களோடு அமைகின்றன)
"இனி அமுதா வயசுக்கு வந்தாலென்ன வரட்டிலென்ன" என்றமாதிரி ஆகியிருக்கும் என் கொமெண்ட் ஹா ஹா ஹா. என்ன பண்ணுவது, ஸ்ரீராம் டெய்லி போஸ்ட் போடுவதால், உடனே வராவிட்டால், பழைய போஸ்ட் என்றாகி விடுகிறது:( கர்ர்ர்ர்ர்ர்:).
பதிலளிநீக்குமுன்பு நானெல்லாம், சிலரின் கொமெண்ட் வராவிட்டால், சரி வரட்டும் வந்தபின் புதுப் ப்ஸ்ட் போட்டிடலாம் என வெயிட் பண்ணிய காலங்களும் உண்டு:))..
நானும் போஸ்ட் போடோணும்:))) பார்க்கலாம்... இனிக் கோடைகாலம் வரப்போகுது அப்போ கார்டினில் குதிச்சிட்டால் நேரமும் இருக்காது..
படங்கள் பார்த்தேன், சில கோயில்கள் சிற்பங்கள் பார்க்க கவலையாக இருக்கும், பழுதடைந்து உடைந்து சிதைந்து கொண்டு வருகிறதே என...
பதிலளிநீக்குபிள்ளையாரை எப்பவும் வண்டியோடு(உங்கட பாசையில் தொப்பை:)) இருந்தபடியே பார்த்துப் பழக்கம், இது இந்தக் கோயிலில் எழுந்து நிற்கிறாரா... எந்தாப்பெரிய வண்டி:) பெரிசாத் தெரியுதே:))...
சிவனின் பெயிண்டிங் பார்க்க அம்பிகையைப் பார்த்ததுபோல இருக்கிறாரே... ஹையோ நாளைக்குச் சிவராத்திரி.. கோபிச்சிடப்போகிறார், நானும் சிவனும் இப்போ பெஸ்ட் பிரெண்ட்ஸ் ஆக்கும்:).. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்.
கோபுரப் படம், கடசியில் இருப்பது சரியான வடிவாக இருக்குது, ஒரியினல் கல்லால் செய்துக்கியவை ஒருவித தனித்தன்மை வாய்ந்தவைதான்.
பதிலளிநீக்கு