சனி, 3 ஏப்ரல், 2010

கார பூந்தி வரும் முன்னே, கார் ரிப்பேர் வரும் பின்னே!

சென்ற வாரம் ஒரு நாள் - சனிக் கிழமை என்று நன்றாக  நினைவு இருக்கிறது  - கார் துடைத்துக் கழுவி எல்லாம் செய்து விட்டுப் பின் அப்படியே ஏர்-ஃபில்டரையும் எடுத்துக் கிளீன் பண்ணிவிடலாம் என்று பான்னெட்டைத் திறந்து வைத்து விட்டு உள்ளே போய் ப்ளோயர் (Blower) எடுத்து வரலாம் என்று திரும்பினவன் "எவ்வளவு நேரம் தான் கூப்பிடறது ?  நானும் ஒரு நாழியாக் கத்திண்டுருக்கேன். காதிலேயே வாங்காமல் அப்படி என்ன வெட்டி முறிச்சுன்டிருக்கேள் ?" என்ற மணியோசைக்குப் பின் வந்த யானையைப் பற்றி நான் குறிப்பிடவும் வேண்டுமோ? 





"ஃபில்டரைக் கிளீன் பண்ணி வெகு நாட்களாயிற்றே என்று திறந்தேன் ரோடுலே இருக்கிற தூசு எல்லாம் நம்ம கார்லேதான் செட்டில் ஆகிற மாதிரி இருக்கு. " என்று சொல்லிக் கொண்டே சின்ன பிளாஸ்டிக் பிளேட்டில் ஒரு சின்ன ஸ்பூனுடன் வந்த கார பூந்தியையும் காப்பியையும் வாங்கிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தேன். ஒரு வழியாகக் கூலன்ட், பாட்டரியில் தண்ணீர், பிரேக் ஃப்ளூயிட் இப்படி எல்லாவற்றையும் செக் செய்து முடிப்பதற்குள் முதுகுவலி தாங்க முடியவில்லை. ஒரு வழியாக சாமான்களை எல்லாம் திரும்ப வைத்து விட்டு வந்து ஐ பி எல் கிரிக்கெட்டில் அடைக்கலமானேன்.  [அதென்ன ஐக்கியம் என்று தானே சொல்வார்கள் என்பவர்க்கு - அடைக்கலம் என்பதே சரி - மற்றவர்களும் கிரிக்கெட் சுவாரஸ்யத்தில் நமக்கு எதுவும் புதிது புதிதாக வேலை சொல்ல மாட்டார்கள்!]

மறு நாள் - ஞாயிறு மாலை, மயிலையில் ஒரு ரிசப்ஷன்.  பட்டுப் புடவை, பாங்காகச் சுற்றுப்புறச் சூழலை மனதில் கொண்டு தயாரிக்கப் பட்ட காகிதப் பையில் பரிசுப் பொருள் என்று வந்து காரிலும் ஏறிக் கொண்டு ஸ்டார்ட் செய்தால், "ஹி ஹிஹ ஹி " என்று குதிரை கனைக்கிற சப்தம் வந்ததே தவிர குதிரை ஒன்றும் கிளம்புவதாகத் தெரிய வில்லை.   சரி, பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஆட்டோ சவாரி - அருணாசலம் தெரிந்தவர் தான் என்றாலும், அவருக்குத் தெரியும் எப்பொழுது எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று.

கார் ஸ்டார்ட் ஆகாததைப் பற்றி ஆளுக்கு ஆள் - குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.  "எங்கள் வீட்டுக் கல்யாணம் என்றாலே உங்கள் கார் சதி பண்ணி விடும் " என்பதிலிருந்து, "நீங்க உங்க ஸ்க்ரூ டிரைவர், ஸ்பானர் இதை எல்லாம் தூக்கிக் காயலான் கடையில் போடும் வரை நாங்கள் எல்லாம் ஆட்டோவில் போவதுடன் அவ்வப்பொழுது நடந்தும் போக வேண்டியிருக்கும்" என்பது வரை வித விதமான வர்ணனைகள்,  உபதேசங்கள் அடுத்த கட்ட ஆக்ஷன் பிளான்கள் இப்படி எல்லாவற்றையும் எதிர் கொண்டு கார் பான்னெட்டைத் திறந்து பார்த்தவன், வழக்கம் போல எங்காவது எண்ணெய் சொட்டி இருக்கிறதா, தண்ணீர் சொட்டி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க, அங்கே - லக்ஷ்மியின் பிளாஸ்டிக் மணிகள் சிதறிக் கிடக்கக் கண்டு அவற்றைத் திரட்டினேன்.  மூன்று, நான்கு வர்ணங்களில், ஆனால் ரொம்ப தீர்மானம் செய்ய முடியாத வடிவங்களில் பிளாஸ்டிக்.  இப்பொழுது புரிந்தது கார் ஸ்டார்ட் ஆகாத கதை.

கீழே இருந்து எடுத்தது பிளாஸ்டிக் இன்சுலேஷன். நான் கிரிக்கெட் பார்க்கும் ஆசையில் கார பூந்தியை மறந்து வைத்து மூடி விட்டு வந்து விட்டேன்.  எலி கார பூந்தியை முதலில் சாப்பிட்டு விட்டுப் பின் பல் துரு துருத்ததில் பக்கத்தில் இருந்த ஒயரையும் கடித்துப் பார்த்திருக்கிறது.  அதனால் ஒயர் கட் ஆகி, பெட்ரோல் லயனில் இருக்கும் சலினாயிட் வால்வுக்கு சப்ளை  கட். பிறகு என்ன "ஹி ஹி"  தான் 

ஆகையால் தோழர்களே, கார பூந்தி சாப்பிட்டால் கண்ட இடங்களில் வைத்து மறந்து போகாதீர்கள்.  அப்படி மறந்தால்  உங்களுக்கும் எங்கள் கதி தான். 

11 கருத்துகள்:

  1. நம்மகிட்ட கார் இல்லாததாலே - இதப்பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல இயலாது.

    பதிலளிநீக்கு
  2. உண்மை சொல்லும் வரலாறும், வரலாறு சொன்ன உண்மைகளும்….. பகுதி -07 தமிழீழப் போராட்டம்

    http://muthalvarone.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. //தமிழ் உதயம் said... நம்மகிட்ட கார் இல்லாததாலே - இதப்பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல இயலாது //

    நான் ஓட்ட என்கிட்டே கார் கிடையாது; என்னை ஓட்ட பெண்டாட்டியும் கிடையாத;

    பூந்தி இருக்கின்றது ?!?

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு.. என் குட்டீஸ் ஏதோ ஸ்நாக்ஸ் வண்டில விட்டு, எலி வந்திருக்கு..
    நீங்க எழுதின விதம் சூப்பர்.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. //என்று __________ கொண்டே சின்ன பிளாஸ்டிக் பிளேட்டில//

    please fill up the blank.(something is missing, "சொல்லிக்" ?)

    கார் முன்புற கண்ணாடி மேலே (top & on the surface ) 'எங்கள் ப்ளாக்' ரொம்ப தத்ரூப-செயற்கையா தெரியுது..

    பதிலளிநீக்கு
  6. //நான் ஓட்ட என்கிட்டே கார் கிடையாது//
    அப்போ அந்த BMW ?

    பதிலளிநீக்கு
  7. //Anonymous said... //நான் ஓட்ட என்கிட்டே கார் கிடையாது//

    அப்போ அந்த BMW ? //


    அதே ஏன் கேட்கிறே ? சோகமாக கடனை ஏற்றிக்கொண்டது தான் நான் கண்ட பலன் !

    நான் அந்த கார் வாங்க காரணம் -

    a) இன்னும் மூன்று வருடங்களில் இங்கே காலேஜ் படிக்க இருக்கும் பையனுக்கு இந்த காருக்காக லோன் வாங்கி "என் கடன்" வாங்கும் / மற்றும் திரும்பி கொடுக்கும் திறமையை (Credit History) ஏற்றிக்கொண்டு இருக்கத்தான் இது ? அப்பத்தான் என் பையனின் கல்லூரிக்கு ஆகும் செலவு (200,௦௦௦ $) கடன் வாங்க முடியும்.
    b) நான் இருக்கும் எடிசன், நியூஜெர்சி அருகே வந்த என் கம்பெனி "சி.இ.ஓ." அவர்களை மீட் செய்ய எங்களை எல்லாம் அழைத்திருந்தார். என் சக உழியர்கள் எல்லாம் மெர்சிடீஸ் / BMW என்று பந்தா காட்டி வந்தபோது நான் ஒரு டுபாகூர் காரில் சென்றேன். அசிங்கமாக போய் விட்டது. அகலக்கால் வைக்காதே சில சமயம் ஊருக்காக வைத்து தான் இருக்க வேண்டியிருக்கின்றது ?

    பதிலளிநீக்கு
  8. //அப்படி என்ன வெட்டி முறிச்சுன்டிருக்கேள் ?" என்ற மணியோசைக்குப் பின் வந்த யானையைப் பற்றி நான் குறிப்பிடவும் வேண்டுமோ?//

    ஏன்பா யாராச்சும் இவரோட தங்கமணி ஈமெயில் அட்ரஸ் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  9. //எலி கார பூந்தியை முதலில் சாப்பிட்டு விட்டுப் பின் பல் துரு துருத்ததில் பக்கத்தில் இருந்த ஒயரையும் கடித்துப் பார்த்திருக்கிறது//

    முல்லைக்கி தேர் குடுத்த பாரி மாதிரி எலிக்கி பூந்தி குடுத்த ஸ்ரீராம்னு ஹிஸ்டரில பேர் வரும்னு வெச்சேலோ என்னமோ... தங்கமணிய யானைனு கிண்டல் பண்ணினதுக்கு அந்த கணேசர் தான் தன்னோட வாகனத்த (எலி) அனுப்பி பலி வாங்கி இருக்கார்னு நேக்கு தோன்றது.... (ஹா ஹா ஹா இது எப்படி இருக்கு)

    பதிலளிநீக்கு
  10. குரோம்பேட்டைக் குறும்பன்6 ஏப்ரல், 2010 அன்று PM 8:51

    // கார பூந்தி சாப்பிட்டால் கண்ட இடங்களில் வைத்து மறந்து போகாதீர்கள். அப்படி மறந்தால்....//
    அப்படி மறந்தால்?
    உங்கள் காரு பூந்திதான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!