புதன், 25 அக்டோபர், 2017

தி ர் பு ன் த பு 171025



சென்ற வாரப் புதிரின் விடை பூசணி அல்வா. சரியான பதில் சொன்னவர்கள் எல்லோருக்கும் அல்வாதான்!





இனி இந்தவாரக் ....

1)


2) 

C L A I G O E N D 
ఐడి అమీ 
3)  
BUDJLEM 


ఐడి  



18 கருத்துகள்:

  1. புதனும் இனிது..
    புதிரும் இனிது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. பூசனி அல்வான்னு யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. அதை காசி அல்வா என்றுதான் சொல்வார்கள். இது செய்வது கொஞ்சம் கஷ்டம். முத்தின பூசனியைத் துருவி, சாறு பிழிந்தபின் செய்யவேண்டும்.

    இந்த வாரம் 'தபு' வாரமா? ஜிலேபி பிழிந்த மாதிரி கேள்வி கேட்கும்போதே நினைத்தேன் இன்னும் சென்னை திரும்பவில்லை என்று.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. பூசணி அல்ல்வாவை தான் காசி அல்வா என்று சொல்வார்கள்

    பதிலளிநீக்கு
  5. சஷ்டி விரதம். சோ மீ எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  6. அந்த ரெசிப்பியை ரைட் க்ளிக்கினா அது பூசணி ஹல்வானு தான காட்டுச்சி ஹாஹா :) அப்படித்தானா கண்டுபுடிச்சேன்

    பதிலளிநீக்கு
  7. ஒண்ணுமே புரியல...
    யோசித்து பதில் சொல்ல இருப்போருக்கு இப்பவே வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. காலையிலே சும்மா இருக்காமல் காசி அல்வா.. என்று சொல்லியாச்சா!..

    இன்று மதிய உணவு காசி அல்வாவுடன் தான்...

    கந்த சஷ்டி அதுவுமாக ஏகப்பட்ட மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  9. ஏஞ்சலின்- நீங்க சொன்னப்பறம்தான் கேஜிஜி அவர்கள் நெட்ல இருந்து சுட்ட படம்னு தெரிஞ்சுக்கிட்டேன். நான் நினைத்தேன் யாரோ அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள், ATLEAST படத்தையாவது போட்டாரே என்று நினைத்தேன்.

    துரை சார்.-.. காசி அல்வா யார் பண்ணியது? இங்க முத்தல் பூசனி கிடைக்கவே கிடைக்காதே. அதுவும்தவிர அது கொஞ்சம் கஷ்டப்பட்டுச் செய்யும் அல்வா வாச்சே... படத்தைப் பார்த்த நிறைவில் சொன்னீர்களா அல்லது நிஜமாகவே செய்தீர்களா?

    பதிலளிநீக்கு
  10. புதிர் விடைகள் வரும் போது வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. திருமிகு நெ.த. அவர்களுக்கு,

    காசி அல்வா என்றதும் அங்கே இங்கே தேடிப் பார்த்தேன்.. இவ்வளவு தானா!!..

    எப்போதும் செய்யும் பறங்கிப் பழ பாயசத்தை நீரின்றி சுருக்கிச் செய்து விட்டேன்.. அவ்வளவு தான்..

    இரண்டு படங்கள்.. வழக்கம் போல ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் அடுத்து வரும் நாட்களில் வெளியிடுவார்..

    பதிலளிநீக்கு
  12. ஹாஹாஹா :) @நெல்லைத்தமிழன் நான் அன்னிக்கே கண்டுபுடிச்சேன்

    பதிலளிநீக்கு
  13. நேத்திக்குப் பூராவும் எங்கள் ப்ளாக் பக்கம் திறக்காமல் ஒரே அடம்! என்னோட ப்ளாகில் நான் கொடுக்கும் கமென்டுகளையும் ஒரு பத்து முறையாவது திரும்பக் கொடுக்க வேண்டி இருந்தது! இருந்தாலும் விடாமல் கொடுத்துட்டோமுல்ல! :) இங்கே வந்து புதிரைப்பார்த்தால் நல்லவேளையாத் தான் நேத்திக்குத் திறக்கலைனு தெரிஞ்சது! :) ஹிஹிஹி இங்கே யாருமே புதிரைப் பத்திக் கவலைப்படாமல் கேஜிஜி சாருக்கு அல்வா கொடுத்துட்டு இருக்காங்க! நாமளும் கும்பலோட கோவிந்தா போட்டுடுவோம். கேஜிஜி சார், விடையை வெளியிடுங்க! பார்த்துக்கறேன். :)

    பதிலளிநீக்கு
  14. வாத்தியாருக்கு கொஞ்சமும் பயப்படாம எல்லாரும் அல்வா சாப்பிட்டுக்கிட்டு இருந்தா - ம்.. என்ன செய்யிறது!..

    பதிலளிநீக்கு
  15. @துரை செல்வராஜூ சார் //பறங்கிப் பழ பாயசத்தை நீரின்றி சுருக்கிச் செய்து விட்டேன்// - அட ராமா.... பறங்கிக்காய் என்று சொல்வது மத்தன் அல்லவா? அதாவது உள்ளே ஆரஞ்சு வண்ணமாக இருக்கும். அது பரங்கி அல்வா.

    காசி அல்வா என்பது பூசனி/ கும்ளம் என்று கேரளத்தில் சொல்வார்கள். இது திருஷ்டி கழிக்க குங்குமம் தூவி தெருவில் நாலுபேர் வழுக்கிவிழட்டும், வாகனம் சறுக்கட்டும் என்று கெட்ட எண்ணத்தோடு உடைப்பார்களே அந்தப் பூசனியில் செய்வது. தோலை எடுத்து, திருவி, தண்ணீரை வடிகட்டி, சீனி சேர்த்து அல்வா பதத்தில் செய்யணும். கை எப்போ துவண்டுபோகுதோ அப்போ நிறுத்தணும். அதில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்க்கலாம். கொஞ்சம் கேசரி பவுடர் போட்டால் லைட் மஞ்சள் நிறத்தில் வரும். நெய் நிறைய விட விட அல்வா அட்டஹாசமா இருக்கும். அதை எப்படி நீங்கள் செய்திருப்பீர்கள் என்று நினைத்தேன். ( நேரம், முத்தின வெண்பூசனி இதெல்லாம் குவைத்துல எங்க?)

    பதிலளிநீக்கு
  16. கீதா சாம்பசிவம் மேடம் - இரண்டாவது கேள்விக்கு அவர் கன்னடத்தில் எழுதியிருப்பது, 'பதில் கொத்தில்லா' - விடை தெரியாது என்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!