சனி, 2 டிசம்பர், 2017

ஆட்டோ ஆம்புலன்ஸ் அறுசுவை காந்திமதி சுடுகஞ்சி தேசிகர்







1)  "......என் அப்பாவுக்கு உதவியாக இருந்த எனக்கு, ரயில்வேயில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம் கிடைத்தாலும், அப்பாவுக்கு உதவியாக இருந்து அன்னதானம் வழங்குவதில் கிடைத்த மனநிறைவு, அதில் இல்லை.  அப்பா காலமான பின், இந்தப் பணியை தொடர முடிவு செய்து, ரயில்வே வேலையை ராஜினாமா செய்தேன்......"  

'ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை' அமைப்பின் மூலம், திருச்சி அரசு மருத்துவமனையில், காலையில் சுடுகஞ்சியும், மதியம் சாம்பார், தக்காளி சாதம், புளியோதரையும் அன்னதானம் செய்யும், ரவீந்திரகுமார்.







2)  இதோ ஒரு மனிதர்.  இதயம் உள்ளவர்,  தகவலுக்கு நன்றி கீதா அக்கா.








3)  அதிகாலை எழுந்து முதல் நாள் கிடைத்த அரிசி பருப்பு காய்கறி போன்றவைகளை வைத்து ஒரு தவம் போல சாப்பாடு தயார் செய்து இங்கே கொண்டு வந்து போடுவதை பார்த்த பலரும் இப்போது காந்திமதி கேட்காமலே 'இந்த தாயி இந்த மாதம் என் பங்குக்கு இரண்டு மூட்டை அரிசி' என்ற ரீதியில் நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.









மேலும் தங்கள் பிறந்த நாள், திருமண நாளன்று அன்றைய அன்னதான செலவை ஏற்றுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நாட்களில் அப்பளம் வடை பாயசம் என்றெல்லாம் அன்னதானத்தில் துாள் பறக்கும். சில நாள் எதுவும் கிடைக்காத போது அரிசி காய்கறிகளை கலந்து கலவை சாதமாக போட்டுவிடுவார், எப்படியும் தன்னை நம்பி வந்தவர்களை பட்டினி மட்டும் போடமாட்டார்.





தமிழ்மணம்.

29 கருத்துகள்:

  1. >>> படிப்பறிவு இல்லாத மூதாட்டி <<<
    என்று காந்திமதி அவர்களைக் குறித்திருப்ப்து எவ்விதத்தில் சரி??..

    பதிலளிநீக்கு
  2. இந்த வாரம் சாப்பாட்டு வாரம்! :) என்றாலும் நான் அறிந்த ஒன்றைத் தவிர்த்து மற்றவை புதிது

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    //என்று காந்திமதி அவர்களைக் குறித்திருப்ப்து எவ்விதத்தில் சரி??..//

    அந்தப் பதம் நான் உபயோகிக்கவில்லை. செய்தித்தாளில் வந்திருப்பது.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம்..

    >>> ..... <<<<

    நான் தங்களைச் சொல்லவில்லை...

    அந்தக் கட்டுரையைத் தொகுத்தவருக்குத் தான் சொன்னேன்..

    தினமலரில் எப்போதும் இப்படித்தான் - ஏடாகூடமான வார்த்தைகளுடன் செய்திகள் வெளியாகும்...

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் துரை செல்வராஜு சகோ!!

    வருகிறோம்....முழுவதும் வாசித்துவிட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  6. //முறை செல்வராஜு ஸார்//

    மன்னிக்கவும், துரை செல்வராஜூ ஸார்.
    (மறுபடியும் பெஞ்சு மேல் நின்று கொண்டு) - ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் ஆர்வமூட்டும் செய்திகள். படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. முறை ஆனாலும்
    நறை ஆனாலும்
    கறை ஆகாமல்
    இருந்தால் சரி!...

    பதிலளிநீக்கு
  9. கீழே இறங்கிடுங்கோ..
    கால் வலிக்கப் போறது!!!...

    பதிலளிநீக்கு
  10. //கீழே இறங்கிடுங்கோ..
    கால் வலிக்கப் போறது!!!...​//

    நன்றி ஸார். முறையால் வந்த திரை உங்கள் பதில் உரையால் விலகியது.​

    பதிலளிநீக்கு
  11. போற்றுதலுக்கு உரியவரகள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  12. மூன்று முத்துக்கள்
    மனிதம் இன்னும் வாழ்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அன்னதானம் செய்வோரைப்பற்றி எவ்வளவு படித்தாலும் அலுப்பதில்லை.
    அன்னம்தானே உடம்போடு பிறந்த ஒவ்வோர் உயிரின் முதல் எண்ணம்..

    பதிலளிநீக்கு
  14. திரு ரவீந்திரகுமாரும், காந்திமதி அம்மாவும் வாவ் போட வைக்கிறார்கள். தானத்திலே சிறந்தது என்று சொல்லப்படுவது அன்ன தானம். (கீதா: முதல் செய்தி போன்று ஒன்று மருத்துவமனையில் உதவுவது ம்முன்ன வந்த நினைவு. அவர் இவர்! )

    பதிலளிநீக்கு
  15. ஆட்டோ ஆம்புலன் ஆவது வாவ் போட வைக்கிறது அதுவும் இலவசமாக! ஆம்புலன்ஸ்கள் சில கொள்ளை அடிப்பது பற்றி செந்தில் சகோ அவர்களின் பதிவ்ல் வாசித்த நினைவு வருகிறது. வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  16. என் கணினியில் ஏதோ அமானுஷ்யம் புகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!! ஹா ஹா ஹா...கருத்து அடித்துவிட்டுப் பார்த்தால் பல வரிகள் மாயமாய் மறைந்து விடுகிறது. அப்புறம் கர்சரை அங்கு வைத்துக் க்ளிக்கினால் மீண்டும் வருகிறது. வ்ந்தவற்றில் எழுத்துப் பிழைகள்!!! மீண்டும் மறைந்துவிடுகிறது. இடையில் சில வரிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது. சரி மறைந்த வரிகள் அழிந்துவிட்டது போலும்னு நினைச்சு அடிக்க முயற்சி செய்தால்...வெளியிட்டாச்சு.... மீண்டும் வந்து வரிகள் முன்னுக்குப் பின் முரணாகி...தப்பும் தவறுமாய்...ஹா ஹா ஹா அப்புறம் இருப்பதூ போதும்னு..
    கீதாச்

    பதிலளிநீக்கு
  17. @கீதா: உங்கள் கணிணியின் அமானுஷ்யம்பற்றி கவிப்புயல் கதைக்கப்போவதென்ன?என்ன? என்ன..?

    பதிலளிநீக்கு
  18. நல்ல மனம் கொண்ட மனிதர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. அவற்களுக்கு என்மனமே கனிந்த பிராத்தனைகள் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. உதவும் மனிதர்கள். செயலில் காட்டுபவர்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. அரிய சேவை. போற்றுதலுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. முத்தான மூன்று செய்திகள். கண்ணில் நீரை வர வைத்து விட்டது.
    அன்பான மனிதர்கள் .
    வாழ்த்துக்கள் மனிதநேயம் மிக்கவர்களுக்கு.
    நல்ல செய்தியை தேடி தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  23. எந்த பணியிலும் சிறந்த பணி
    பசித்த வயிற்றுக்கு உணவு பகிர்தலே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!