வெள்ளி, 30 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ...014

பாடம் பதினான்கு:
நாம் விழித்திருக்கும் நேரங்களில் செய்யும் செயல்களை - இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று - நமக்காகச் செய்துகொள்வது.
இரண்டு மற்றவர்களுக்காகச் செய்வது.
நமக்காக நாம் செய்யும் செயல்கள் - வேறு யாராலும் சாதாரணமாக செய்ய முடியாது. உதாரணம் - பல் தேய்ப்பது, காபி குடிப்பது, உணவருந்துவது, வலைப் பதிவு படிப்பது, பாட்டுக் கச்சேரி கேட்பது - இது போன்றவை. - நம் கட்டுப்பாட்டில் இருப்பவை. இவைகளை நாம் திட்டம் போட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யலாம்.
மற்றவர்களுக்காகச் செய்வது - அலுவலக வேலை, நண்பருக்கு உதவுவது, குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டுபோய் விடுவது / திரும்ப அழைத்து வருவது,  வலைப் பதிவு எழுதுவது, சமைப்பது, பரிமாறுவது, கடைக்குப் போய் காய்கறி பழங்கள் பொருட்கள் வாங்கி வருவது இதுபோல் எவ்வளவோ பட்டியலிடலாம். இதில் சில நம் கட்டுப்பாட்டில் - பல நம் கட்டுப்பாட்டில் இருக்காது. பஸ் அல்லது டிரைன் பிடித்து வேலைக்கு சென்று / திரும்புதல் - நேரக் கட்டுப்பாடு - மற்றவர்கள் சம்பந்தப்பட்டது - என்பதால் கடினமானது.
இன்றைய பாடத்தின் முக்கியமான விடயம்: சிந்திப்பதும் ஒரு செயல்தான். வள்ளுவர் 'பயனில நினையாமை' குறித்து ஏதேனும் எழுதியுள்ளாரா - இல்லையா என்று ஞாபகம் இல்லை - ஆனால் - உங்கள் சிந்தனை பயனுள்ளதாக இருக்கட்டும், உங்களுக்கும், உங்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும், உங்கள் (மனித)  சமூகத்திற்கும். உங்கள் செயல்கள் உங்கள் சிந்தனையின் அடிப்படையில் இருக்கட்டும். யாரையும், எதற்கும் வசை பாடாதீர்கள்; யாரையும், எதற்கும் சிந்திக்காமல் பின்பற்றாதீர்கள்.
(தொடரும்)


2 கருத்துகள்:

  1. >யாரையும், எதற்கும் சிந்திக்காமல் பின்பற்றாதீர்கள்.

    க்ருஷ்ணா.. ராமா.. முருகா.... கணேசா... ஆஞ்சனேயா...

    பதிலளிநீக்கு
  2. துரை! ஆமாம் - அவர்களையும்தான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!