ஞாயிறு, 26 டிசம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 14.

 

சாலை வளைந்து வீடு..... வீடு வந்து சாலையை வளைத்தது ?


வீடுகள் வளர்கின்றன 


துணிகள் காய்கின்றன 


பஸ் கொஞ்சம் சின்னதாக இருக்கலாம் 


என்னதான் ஸ்டார்ம் DRAIN  கட்டினாலும் ..

















பச்சையும் சிவப்பும் செடிகள் அழகு 





மரப் பெண் மயிலாள் தோகை விரித்தாள் -- 


விரல் சென்சார் (sensor). மதில் சுவர் மீது என்ன அணி ? 














கிராம தேவதை கோவில் சாலையின் மறுபுறத்திலிருந்து 


இந்த இடத்தில்தான் கால்வாய் சாலையின் மேல் செல்கிறது 


தொடர்ச்சி - அடுத்த வாரம். 

56 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகே அண்ணா, ரொம்ப நாள் கழித்து உங்கள் மூலம் நினைவுக்கு வந்த பாடல்..

      கீதா

      நீக்கு
    2. பாட்டு எங்கே? ஏணிமலை ஆவி எடுத்துப்போய் விட்டதா!

      நீக்கு
    3. ஆமாம். நான் வரும் போதும் அந்தப் பாடலை பார்க்க இயலவில்லை. ஒரு வேளை சென்ற வாரம் வரை மரங்களுக்கிடையே, அதன் கிளைகளுக்கிடையே ஆங்காங்கே அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், தொங்கியபடியும் இருந்த ஆவிகள், வேதாளங்கள் போன்றவை இந்த வாரம் காணோம். அவைகள்தாம் தங்களுக்கு ஒரு பாட்டு கிடைத்த சந்தோஷத்தில் எடுத்துப் போய் விட்டது போலும். :)

      நீக்கு
    4. கௌ அண்ணா ஏணிமலைப் பேய் இப்போ இறங்கும் நேரம் போல!!!!!!!! ஜெகே அண்ணாவின் பாடல் கருத்து பிடித்துப் போல கமென்டைத் தூக்கிக் கொண்டு கீழே போட்டுவிட்டது!!!

      ஊட்டி போரடித்துவிட்டது....ஆழகான அடர்த்தியான ஒளிஞ்சுக்க சௌகரியமான கீரிப்பறைக்கு ஷிஃப்ட் பண்ணலாமான்னு கலந்தாலோசனையாம்..என்ன யோசனைன்னா கன்னியாகுமரில துரத்தறவங்க அதிகமாச்சே..நிம்மதியா இருக்க முடியுமான்னு ஒரு சந்தேகம் வேற!!!

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம் எல்லோருக்கும்

    என்னதான் ஸ்டார்ம் ட்ரெய்ன் கட்டினாலும்??????

    மேலே செல்லும் கால்வாய்தான் வில்லுக்குறியிலும் தொடர்ந்து வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மேலே செல்லும் கால்வாய்தான் வில்லுக்குறியிலும் தொடர்ந்து வரும்.// :)))

      நீக்கு

  3. ​​ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
    மேரு வலம் திரிதலான்

    ​​
    ​ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

    கீரிப்பாறை வலம் திரிதலான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்...   திருத்தப்பட்ட பதிப்பா?

      நீக்கு
    2. ஓ அங்கிருந்து இங்க வமந்துவிட்டதா....!! கூட இந்த வரியுடன்!!!!!

      //கீரிப்பாறை வலம் திரிதலான்//

      ஹாஹா ரசித்தேன்!!!

      கீதா

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம். மரப்பெண்ணின் தோகை வெகு அழகு. செல்ஃபோனில் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் மன நிம்மதியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் குறிப்பாக மரத்தோகையும் அருமை.
    கூடவே பயணிக்கு வாசகங்களும் சிறப்பு. வண்டியை நிறுத்திக் கொஞ்சம் படங்கள் எடுத்திருக்கலாமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா எனக்கும் ரொம்ப நாளாகத் தோன்றியது. பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்னா நிறுத்தச் சொல்ல முடியாது. நாம் ஏற்பாடு செய்த வண்டி என்றால் கொஞ்சமேனும் முடியுமே என்று...

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அச்சம் நீங்கி ஆரோக்கியம் மேலோங்கட்டும். தொடரும் தொற்று முழுமையாகக் குறையவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. அழகான பாதை! கண்ணைக் கவரும் பசுமை! இம்மாதிரியான இடங்களில் ஒரு கயிற்றுக் கட்டிலில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு ஆகாயத்தை ஆராய்ச்சி செய்யலாம். முன்னெல்லாம் மொட்டை மாடியில் இப்படிப் படுத்துப்போம். பின்னாட்களில் வீடுகள்/சாக்கடைகள் பெருகக் கொசுக்கள் வந்து ஆக்கிரமித்ததில் வெளியே தலையே காட்ட முடியாமல் போனது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்ணைக் கவரும் பசுமை! இம்மாதிரியான இடங்களில் ஒரு கயிற்றுக் கட்டிலில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு ஆகாயத்தை ஆராய்ச்சி செய்யலாம்.//

      நடுவில் திரும்பிப் படுக்கும்போது நாம் கண்விழிக்க என்னென்ன ஜீவராசிகள் காத்திருக்குமோ?  காத்திருக்குமா?!! 

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இத்தனை அழகை ரசிக்காமல் கண் மூடித் தூங்குவாங்களா என்ன? மெல்லிய காற்று வருடக் கையில் ஓர் ரசனையான புத்தகமும் கிடைத்துவிட்டால் சொர்க்கம் தான் கைகளில்! ராஜஸ்தானில் அப்படியான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. அதுவும் குளிர்காலத்தில் மதிய நேரச் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் சூரிய ஒளியில் அமர்ந்து சுற்றிலும் மயில்கள் ஆட, குயில்கள் பாட, முயல்கள் குறுக்கும் நெடுக்கும் ஓட, ஆங்காங்கே சுப்புக்குட்டிகள் ஊர்ந்து செல்லத் தோட்டத்தில் லானில் அமர்ந்து பேசிக்கொண்டோ/புத்தகம் படித்துக்கொண்டோ இருக்கும் அனுபவம்! இப்போல்லாம் கிடைக்குமா தெரியலை! :(

      நீக்கு
    3. புத்தகத்தைப் புரட்டி முடிப்பதற்குள் புலி வந்து விட்டால்?

      நீக்கு
    4. ஹாஹாஹா! புலி எல்லாம் அங்கே வராது! முழுக்க முழுக்க ராணுவத்திற்குச் சொந்தமான இடம்! காடாக இருக்கும். ஆனால் பராமரிப்பு தினம் உண்டு. அதிகம் போனால் எங்கேயானும் நரிகள் கண்களில் படலாம். எங்களுக்குப் பட்டதில்லை. முயல்கள் தான்! நகர்த்தெருக்களில் உலாவும் நாய்களெல்லாம் அங்கே நுழையக் கூட முடியாது. முழுக்க முழுக்க இயற்கையைச் சார்ந்தே வாழலாம்.

      நீக்கு
    5. நானெங்கே அங்கே செல்லப்போகிறேன்?  நான் சொல்வது இங்கே கீரிப்பாறையில்...   எதுக்கு ரிஸ்க்க்கு! நான் டிராஃபிக் நிறைந்த சென்னையிலேயே தூங்கி கொள்கிறேன்!!!!

      நீக்கு
    6. கீதாக்கா ஹைஃபைவ்!!! டிட்டோ! அதானே கண் மூடித் தூங்குவாங்களா என்ன..

      ஸ்ரீராம்,

      "ஒரு முறை வந்து பார்த்தீரா?
      கன்னியாகுமரியின் இயற்கைக் காட்சியை,
      குமரியைக் காண வந்தீரென்றால்,
      மனம் சொக்கித் தங்கிடுவீர்!"

      ஒரு பாட்டின் உல்டா!!!!!!

      கீதா

      நீக்கு
    7. // மெல்லிய காற்று வருடக் கையில் ஓர் ரசனையான புத்தகமும் கிடைத்துவிட்டால் சொர்க்கம் தான் கைகளில்! ராஜஸ்தானில் அப்படியான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. அதுவும் குளிர்காலத்தில் மதிய நேரச் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் சூரிய ஒளியில் அமர்ந்து சுற்றிலும் மயில்கள் ஆட, குயில்கள் பாட, முயல்கள் குறுக்கும் நெடுக்கும் ஓட, ஆங்காங்கே சுப்புக்குட்டிகள் ஊர்ந்து செல்லத் தோட்டத்தில் லானில் அமர்ந்து பேசிக்கொண்டோ/புத்தகம் படித்துக்கொண்டோ இருக்கும் அனுபவம்! // ரசனையான கருத்துரை.

      நீக்கு
    8. /அதுவும் குளிர்காலத்தில் மதிய நேரச் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் சூரிய ஒளியில்/

      நல்ல கற்பனை... நீங்கள் வர்ணித்து எழுதியது முழுவதும் நல்ல ரசனையான வரிகளுடன் இருக்கையில், இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

      /முயல்கள் குறுக்கும் நெடுக்கும் ஓட, ஆங்காங்கே சுப்புக்குட்டிகள் ஊர்ந்து செல்லத்/

      முயலுடன் போட்டி போட அங்கு ஆமை இல்லாத குறையை சுப்புக் குட்டிகள் தீர்த்து வைக்குமோ? ஹா.ஹா.ஹா. நானும் கற்பனையில் ரசித்தேன்.

      நீக்கு
    9. ரசித்த அனைவருக்கும் நன்றி. @கமலா!எங்க பையரும் பக்கத்து கர்னல் பையருமாகச் சேர்ந்து கொண்டு அந்த முயல்களைத் துரத்துவார்கள். எங்க தோட்டத்துக் காரட், உ.கி., வெங்காயம் ஒன்றையும் விட்டு வைக்காது. பட்டாணிச் செடிகள் குத்துக் குத்தாக இருக்கும். அவற்றில் கிளிகள் அமர்ந்து கொண்டு கீச், கீச் என ரசித்துக் கொண்டு பட்டாணிகளை ஒரு கை பார்க்கும். மாலி (தோட்டக்காரர்) வந்து தினம் இரு முறை பராமரிப்புப் பணிகளைச் செய்துவிட்டுப் போவார்.

      @கௌதமன் சார், நிஜம்மாகவே அங்கே மயில்கள் முன்னெல்லாம் நம்ம ஊர்ப்பக்கங்களில் கோழிகள்/சேவல்கள் நடமாடுவதைப் போல் நடமாடிக் கொண்டிருக்கும். குயில்கள்/செம்போத்துக்கள்/மரங்கொத்தி இவையும் அதிகம். உண்மையிலேயே சொர்க்கம் தான். :( இப்போல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.
      ஊட்டியில்/அரவங்காட்டில் இருக்கும்போது தினமும் சமையலறைக்கு முன்னோர்கள் வருகை தந்து கௌரவிப்பார்கள். 2 நாள்கள் பார்த்துப் புரிந்ததும் வேலையை முடித்துக் கொண்டு சமையலறையைப் பூட்டிடுவேன். :( வந்து பார்த்துட்டு வராந்தாவில் இருக்கும் பொருட்களை எல்லாம் உருட்டிப் புரட்டி விட்டுப் போகும்கள்! :) ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பேன்.

      நீக்கு
  9. விரல் சென்சார் (sensor). மதில் சுவர் மீது என்ன அணி ? //

    காலணி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கால'ணி - மீதி முக்கால் எங்கே ? ஏ ம ஆ ??

      நீக்கு
    2. ஹாஹாஹா ஏ ம ஆ இப்ப கீரிப்பறை போகலமாமா வேண்டாமானு யோசிக்கறதே இந்தப் படம் பார்த்துதான்!!! செருப்புனா அலர்ஜியாமே அவங்களுக்கு!!!

      கீதா

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கீரிப்பாறை படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. மரப்பெண் தோகை படத்தை பார்த்ததும் "மாதவி பொன்மயிலாள்" பாடலும் கூடவே மனதிற்குள் வர படத்தை ரசித்தேன்.

    காலணிகளின் கூட்டணி சேர்ந்த மதில் சுவர் படமும் அருமை.

    எல்லா படங்களுக்குமே விமர்சன வாசகம் அருமை. இன்னமும் கீரிப்பாறையை அடையவில்லையா? இல்லை கீரிப்பாறையில் தான் இப்படி இயற்கை வனப்புக்களை ரசித்தபடி காரில் சுற்றி வருகிறோமா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீ பா தான் என்று நினைக்கிறேன். கொஞ்ச வாரம் முன்பு போர்டு பார்த்தோமே!

      நீக்கு
  12. கீரிப்பாறை பயணத்தில் எடுத்த படங்கள் அனைத்தும் அழகு....

    பதிலளிநீக்கு
  13. கீரிப்பாறையும் பசுமையும். பச்சையுடன் மலரும் ஞாயிறு மனதுக்கு விருந்து.

    பதிலளிநீக்கு
  14. கீரிப் பாறை? இன்னும் பெயர்க் காரணம் தெரிந்தபாடில்லை.

    பாரி, ஓரி, காரி -- கடையெழு வ்ள்ளல்களை நாம் அறிவோம்

    இவர்கள் சம்பந்தப்பட்ட தொடர்பில் பெயர் கொண்டது பிற்காலத்தில் மருவி கீரிப்பாறை ஆயிற்றோ?..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!