செவ்வாய், 14 டிசம்பர், 2021

ஏணிமலை 3/5

 

முந்தைய பகுதிகள் சுட்டி :   பகுதி 1  - - -  பகுதி 2 

ஏதோ சத்தம் கேட்டு அமா தூக்கம் கலைந்து எழுந்தபோது, அறை முழுவதும் நல்ல வெளிச்சம். காலை மணி எட்டு ஆகியிருந்தது. வெளியே மழை நின்று, சூரிய கிரணங்கள் பிரகாசமாக அறை ஜன்னல்கள் வழியாகத் தெரிந்தது. அறைக் கதவைத் திறந்து, வெளியே செல்ல நினைத்த  அமாவுக்கு, முந்திய நாள் இரவில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன. உடனே அறைக் கதவைத் திறந்தவாறே வைத்துவிட்டு, அறையின் ஜன்னலருகே விரைந்து சென்றார்.  இரவு தான் மூடிய ஜன்னல் கதவைத் திறந்து, அங்கே அந்தப் பெண் உருவம் தென்படுகிறதா என்று பார்த்தார். 

ஆனால், அங்கே அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. அமா ஜன்னல் வழியே கண்ட காட்சி : 

அதே நேரத்தில் அவர் அருகே யாரோ வந்து நிற்பதைப் போன்ற உணர்வு அவரை மேலும் திடுக்கிட வைத்தது. 

= = = = = =

அவருடைய பக்கத்திலிருந்து வந்த குரல், " சார் என்ன பார்க்கிறீர்கள்? அங்கே இருப்பதுதான் ஏணிமலை" என்றது. 

திரும்பிப் பார்த்த அமா - பேசியவனைப் பார்த்து, " அது சரி, நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். 

" சார். என் பெயர் போஜன். நான்தான் இந்தத் தளத்தில் உள்ள எல்லா அறைகளுக்கும் ரூம் பாய். கீழே உள்ள கிளார்க் ஐயா என்னை இங்கே அனுப்பினார். நீங்க ஏணிமலை பற்றி, நேற்றைய தண்டோரா பற்றி விவரங்கள் கேட்டீர்களாமே ?  நான் வந்து கதவைத் தட்டினேன். நீங்க திறக்கவில்லை என்றதும் - அடுத்த அறை பக்கம் சென்றேன். அப்போது இந்த அறைக் கதவை நீங்க திறந்தீர்கள். சரி, எனக்காகத்தான் திறந்திருக்கிறீர்கள் என்று நினைத்து உள்ளே வந்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்."

" அதனால் என்ன, பரவாயில்லை போஜன். நேற்று இரவு இந்த ஜன்னல் வழியாக நான் பார்த்தபோது, அங்கே ஒரு பெண் நின்றுகொண்டு இருந்ததை மின்னல் வெளிச்சத்தில் பார்த்தேன். ஆனால் - இப்போ பார்த்தால் அங்கே ஒரு மணல் திட்டு மட்டுமே இருப்பதுபோல உள்ளது. "

" சார்! அது மணல் திட்டு இல்லை. சமாதி. அக்கம்மா சமாதி. நீங்க நேற்று இரவு அங்கே ஒரு பெண் நிற்பதைப் பார்த்தீர்களா ! நிஜமாகவா ! அந்தப் பெண் என்ன கலர் உடை அணிந்திருந்தாள்? "

" ஏன் கேட்கிறாய்? நீல நிற உடை அணிந்திருந்தாள். "

" அப்படியா சார்! நீங்க நல்ல அதிர்ஷ்டம் செய்தவர். அடுத்த பௌர்ணமிக்குள் உங்களைத் தேடி பல நல்ல செய்திகள் வரும். நீங்க பார்த்தது தேவியின் ஆவி உருவம் "  

" அக்கம்மா யாரு, தேவி யாரு? விவரமா சொல்லு போஜன். " 

" சார். இப்போ நேரம் இல்லை. இந்த மூன்றாவது மாடியில் உள்ள மற்ற அறைகளுக்கு போய் அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன வேண்டும் என்று கேட்டு, அவைகளை செய்துவிட்டு, பிறகு நீங்க மதிய நேர உணவு சாப்பிட்டவுடன் வருகிறேன். காலை உணவு உங்களுக்கு என்ன வேண்டும்? ரூமுக்குக் கொண்டுவர வேண்டுமா? "

" நான் ஒரு எழுத்தாளன் என்பதால், முடிந்த வரை தனியாக இருக்காமல், மற்றவர்களோடு சேர்ந்து சிற்றுண்டி, உணவு எல்லாம் சாப்பிடுவேன். அப்போதுதான் பலதரப்பட்ட மக்களைப் பார்த்து, கவனித்து, கதைகள் எழுத யோசனைகள் கிடைக்கும். நான் கீழே இறங்கி வந்து, எது வேண்டுமானாலும் சாப்பிடுகிறேன். மத்தியானம் உனக்கு நேரம் கிடைக்கும்போது இங்கே வந்துவிடு. "

= = = =

மதியம் அறைக்கு வந்த போஜன், அமாவிடம் கதையை சொல்லத் தொடங்கினான். 

" நேற்று தண்டோரா போட்டவர், ' .. இன்று பௌர்ணமி நாளாக இருப்பதால், பெம்பட்டி  சேலை கவுடா பரம்பரையில் வந்தவர்களும், எந்தப் பெண்ணையும் அவளுடைய விருப்பம் இல்லாமல் வலிய அடைந்தவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், வெளியே வரவேண்டாம். ஏணிமலைப் பக்கம் வாழ்பவர்கள் எல்லோருக்கும் எச்சரிக்கை' என்று சொன்னார்தானே? அந்த பெம்பட்டி சேலை கவுடா என்பவர், சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு, வாழ்ந்தவர். பக்கத்தில் உள்ள பெம்பட்டி கிராமத்தில் வாழ்ந்த பெரிய பணக்காரர். அந்தக் கிராமத்தில் அவருக்குச் சொந்தமான காய்கறித் தோட்டங்கள், பண்ணைகள் நிறைய இருந்தன."

" அவருடைய காய்கறித் தோட்டங்களிலும், பண்ணைகளிலும் நிறைய வேலையாட்கள் வேலை செய்துவந்தார்கள். சேலை கவுடாவிற்கு மூன்று மனைவிகள். ஒவ்வொரு மனைவிக்கும் நான்கைந்து குழந்தைகள். இந்த எத்திலார் ஊரின் வடக்குப் பக்கத்தில் எத்தையம்மன் கோவில் உள்ளது. அங்கு வருடா வருடம் கோடைகால திருவிழா கொண்டாடுவார்கள். ஊர்ப் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள் எல்லோரும் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் பண்ணை ஆட்களுக்கு, அவர்கள் குடும்பத்தினருக்கு, பரிசுகள், வேட்டி, சேலை எல்லாம் கொடுப்பது உண்டு. "

" சேலை கவுடாவின் பண்ணையில் வேலை பார்த்த பலரில் ஒருவன் அர்ஜுனன். அர்ஜுனனுக்கு சொந்த ஊர், இந்த ஊரின் மேற்குப்  பக்கம் இருக்கும் பாலகோலா. அவனுடைய மனைவி பெயர் தேவி. பாலகோலாவுக்கு அருகே உள்ள நுந்தால கிராமத்தைச் சேர்ந்த பெண். படகர் இனத்தில் பிறந்த, ரொம்ப ரொம்ப அழகான பெண். நீங்க நேற்று இரவு அந்த ஏணி மலையில் பார்த்த உருவம், அந்த தேவி உருவம்தான்."

" பழங்காலத்தில் வாழ்ந்த பெண்ணா ! ஏன் அந்தப் பெண் ஆவியாக ஏணி மலையில் தென்பட வேண்டும்?" 

" சொல்கிறேன் சார். எத்தையம்மன் திருவிழாவில், பண்ணையாட்களுக்குப் பரிசு கொடுக்கும் நாளில், பெம்பட்டி சேலை கவுடா முறை வந்தபோது, அவர் அர்ஜுனனையும், அவனின் இளம் மனைவி தேவியையும் பார்த்தார். பார்த்தவுடனேயே அவருக்கு தேவி மீது ஆசை வந்துவிட்டது. 

தேவியை, தன்னுடைய நான்காவது மனைவியாக்கிக் கொள்ள அவர் மனம் ஆசைப்பட்டது."

" தன்னுடைய அடியாட்களை விட்டு, தேவியைக் கடத்திக் கொண்டு வரச் செய்தார். தேவியிடம், தன்னை கல்யாணம் செய்து கொண்டு தன்னோடு வாழ வரச் சொன்னார். ஆனால், அதற்கு தேவி ஒப்புக்கொள்ளவில்லை. 'அர்ஜுனன்தான் என்னுடைய கணவர். அவரைப் பிரிந்து வரமாட்டேன்' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். " 

" தேவி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்க வேண்டும் என்றால், அவளை அர்ஜுனனிடமிருந்து பிரிப்பதுதான் ஒரே வழி என்று யோசித்த சேலை கவுடா, அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கமுறச் செய்து, அவருடைய ஆட்கள் மூலம், அவளைத் தூக்கி வந்து, இந்த ஏணிமலையில் இருந்த அவரது கிடங்கில் சிறை வைத்துவிட்டார். 

இந்த ஏணி மலைக்கு செல்ல நேர் பாதை கிடையாது. மலை உச்சி இங்கேயிருந்து பார்த்தால் தெரிகிறது அல்லவா - அதற்கு அந்தப் பக்கம் ஒரு குன்று இருக்கிறது. அந்தக் குன்றின் உச்சியிலிருந்து ஒரு ஏணி மூலமாகத்தான் ஏணி மலைக்குச் செல்ல முடியும்.  தேவி அங்கே சிறை வைக்கப்பட்டது ஒரு பௌர்ணமி நாளில். 

தேவி மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், அங்கே வந்த சேலை கவுடா அவளிடம், ' உனக்கு அடுத்த பௌர்ணமி வரை அவகாசம் தருகிறேன். அதற்குள் யோசித்து, என்னைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் கொடுத்துவிடு. இல்லையேல் அடுத்த பௌர்ணமிக்கு மறுநாள், அர்ஜுனனை இந்த உலகத்தைவிட்டே அனுப்பிவிடுவேன். இங்கே உன்னை கவனித்துக்கொள்ள வேண்டிய உணவுகளை தயார் செய்து கொடுக்க, அக்கம்மா இருக்கிறாள். அவள் இந்தக் கிடங்குக்கும் காவல், உனக்கும் காவல். இங்கிருந்து தப்பித்துச் செல்ல, என் ஆட்கள் உதவியின்றி, யாராலும் முடியாது. இந்த ஏணி மலை கிடங்குக்கு என்னுடைய ஆட்கள் ஏணியை வேண்டும்போது மட்டும் வைத்து, மீதி நேரங்களில் ஏணியை எடுத்துவிடுவார்கள். நான் என்னுடைய வீட்டிலிருந்து இந்த ஏணிமலை உச்சியை ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருப்பேன். நீ மஞ்சள் நிற சேலை உடுத்தி வீட்டுக்கு வெளியே வந்து நின்றால் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டாய் என்று தெரிந்துகொள்வேன். உடனடியாக வேறு ஒரு இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள அர்ஜுனனை விடுதலை செய்துவிட்டு, இங்கே வந்து உன்னைக் கல்யாணம் செய்துகொள்வேன்' என்று சொல்லிச் சென்றார். "

(தொடரும்) 

173 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்.

    அமாவுக்கும் இனிய காலையாக விடிந்திருக்கிறதே!!!!

    படம் கண்டிபாகக் கௌ அண்ணாதான்...ஃபோட்டோ டெக்னிக் பயன்படுத்தி போன வாரம் பெண் உருவம் இருப்பது போலவும் இப்போது இல்லாதது போலவும் செய்வது எல்லாம் கௌ அண்ணாதான். முன்பே சொல்லிருந்தாரே ஏதோ ஃபோட்டோ ஆப் பயன்படுத்தி எல்லாம் செய்வதாக!!!

    முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைப் படிச்சோமா, அதன் கீதான விமர்சனத்தைக் கருத்தாக எழுதினோமா என்றில்லாமல் இந்த கீதா ரங்கன், காலையிலேயே ஜோசியர் வேலை பார்க்கிறாரே

      நீக்கு
    2. திசை திருப்புகிறார் என்கிறீர்களா?

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை!!! நீங்க என் காலை எப்படி இழுத்தாலும் நான் ஸ்டெடியாக்கும்!!

      கீதா

      நீக்கு
    4. மீண்டும் முதல் பகுதியிலிருந்து தொடர்ந்து வாசித்துப் பார்த்தேன். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இதை எழுதுபவர் கௌ அண்ணாதான்!!!!!!!!! ண்ணாதான்....ணாதான்...தான்...ன்...ஏணிமலைக்குப் போய் அதன் உச்சியிலிருந்து சொல்வதால்!!! எக்கோ எஃபெக்ட்!!!!

      கீதா

      நீக்கு
  2. படம் கௌ அண்ணா வரைந்தது போல தோற்றம் அளித்தாலும், கதை அப்படித் தெரியவில்லை. இந்த வாரம் யார் எழுதியுள்ளார்களோ தெரியவில்லை. நானும் படித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படித்துவிட்டு வருகிறேன்.//

      ஹாஹாஹா ஆமா ஆமா எப்படிக் குழப்பலாம்னு யோசிக்க வேண்டுமே!!! நல்லா குழப்புங்க குழப்புங்க!!!

      கீதா

      நீக்கு
    2. படம் ஏதோ சினிமாக் காட்சியிலிருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்தது போல தெரிகிறதே...   

      நீக்கு
    3. ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமாதி வைத்துவிட்டார்கள்:)

      நீக்கு
    4. ஃபோட்டோ ஷாப்பிங். க்ராப் செய்ததும் கூட இருக்கலாம். அந்த வானின் அடர் நீலம் இப்படி வராது இல்லையோ!

      நீக்கு
    5. படம் ஏதோ சினிமாக் காட்சியிலிருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்தது போல தெரிகிறதே... //

      ஆமாம் இல்லைனா ஏதாவ்து படத்தை எடுத்துக் கொண்டு அதை டெக்னிக்கல் சமாச்சாரம் செய்வது...அதைத்தான் ஒரு ஃப்ளோல வரைந்தது என்று சொன்னேன் ஸ்ரீராம்!!!!!!

      கீதா

      நீக்கு
  3. ஜீவி அண்ணாவும் கௌ அண்ணாவும் போட்டி போடுகிறார்கள். ஜீவி அண்ணாவின் வாசனைதான் தூக்கலாகத் தெரிகிறது. என் அனுமானம் சரியா என்று பார்ப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. சொல்கிறேன் சார். எத்தையம்மன் திருவிழாவில், பண்ணையாட்களுக்குப் பரிசு கொடுக்கும் நாளில், பெம்பட்டி சேலை கவுடா முறை வந்தபோது, அவர் அர்ஜுனனையும், அவனின் இளம் மனைவி தேவியையும் பார்த்தார். பார்த்தவுடனேயே அவருக்கு தேவி மீது ஆசை வந்துவிட்டது. //

    இதில் ஒன்று உதைக்கிறதே. பெம்பட்டி சேலை கவுடா முறை வந்த போது???!!!! அவர் தானே பரிசுப் பொருள் கொடுக்கிறார்!! அர்ஜுனனின் அவன் மனைவி தேவியின் முறை வந்த போது என்று இருக்க வேண்டும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாயிண்ட்டு...   எல்லோரும் கதையை ஊன்றிப் படிக்கிறார்களா என்று டெஸ்ட் வைத்திருக்கிறாரோ Mr. X, அந்த மர்ம எழுத்தாளர்?!

      நீக்கு
    2. ஓ அப்படியும் இருக்கலாம்.

      நீக்கு
    3. /இந்த எத்திலார் ஊரின் வடக்குப் பக்கத்தில் எத்தையம்மன் கோவில் உள்ளது. அங்கு வருடா வருடம் கோடைகால திருவிழா கொண்டாடுவார்கள். ஊர்ப் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள் எல்லோரும் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் பண்ணை ஆட்களுக்கு, அவர்கள் குடும்பத்தினருக்கு, பரிசுகள், வேட்டி, சேலை எல்லாம் கொடுப்பது உண்டு/

      அந்த முறைப்படித்தான் இந்த பெம்பட்டி சேலை கவுடா அந்த அழகான பெண் தேவியை சந்தித்திருக்கிறார். ஆனால், அந்த பெயருக்கேற்ப சேலை கவுடா பல வண்ண நிற சேலைகளை வைத்தே நம்மை குழப்ப வேண்டுமா?:)

      நீக்கு
    4. சரியாகச் சொன்னீர்கள். நெனங்க சொல்வதுதான் சரியாக இருக்கும். // ஊர்ப் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள் எல்லோரும் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் பண்ணை ஆட்களுக்கு, அவர்கள் குடும்பத்தினருக்கு, பரிசுகள், வேட்டி, சேலை எல்லாம் கொடுப்பது உண்டு. அந்த முறைப்படித்தான் இந்த பெம்பட்டி சேலை கவுடா அந்த அழகான பெண் தேவியை சந்தித்திருக்கிறார். // சரியான பாயிண்ட்.

      நீக்கு
    5. ஸ்ரீராம், //பாயிண்ட்டு... எல்லோரும் கதையை ஊன்றிப் படிக்கிறார்களா என்று டெஸ்ட் வைத்திருக்கிறாரோ Mr. X, அந்த மர்ம எழுத்தாளர்?!//

      இதெல்லாம் யார் செய்வாங்க சொல்லுங்க?!!!! புதன் பதிவுக்குச் சொந்தக்காரர்தான்!! வேற யாரு!!!

      கீதா

      நீக்கு
  6. மலை உச்சி இங்கேயிருந்து பார்த்தால் தெரிகிறது அல்லவா - அதற்கு அந்தப் பக்கம் ஒரு குன்று இருக்கிறது. அந்தக் குன்றின் உச்சியிலிருந்து ஒரு ஏணி மூலமாகத்தான் ஏணி மலைக்குச் செல்ல முடியும். //

    பாலமா? ஏணியா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏணிதாங்க..   தலைப்பை ஜஸ்டிபை செய்யணுமில்ல...

      நீக்கு
    2. ஏணியாக இருக்கலாம் என்று கொஞ்சம் புரிகிறது!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. அட ஆமாம். தலைப்பு வந்துடுச்சு! மாய மோகினி போயாச்சு!!

      நீக்கு
  7. புள்ளிக் கோடுகள் - மூன்றாவது பகுதியில் கௌ அண்ணா!!! ஹாஹாஹா

    எனவே கதை கௌ அண்ணாதான் எழுதுகிறார் என்று முதலிலேயே நெல்லை சொன்னதை அமா...ஓ சாரி ஆமோ திக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாமா,
      கதை சொல்லும் பாணி ஒருவரைத்தான்
      காண்பிக்கிறது.
      பார்க்கலாம்.

      நீக்கு
    2. யார் அவர்?  எவரு அவரு?  கௌன் ஹை ஓ?  ஓரு அதி? Who is he?

      நீக்கு
    3. வல்லிம்மா சொல்வது போல் இது அவர் எழுதியதாக இருக்குமோ??

      நீக்கு
    4. ஆமாம்.. சந்தேகமில்லாமல் இது அவர் எழுதியதுதான்.:)

      நீக்கு
    5. ஆமாம் வல்லிம்மா நீங்கள் நினைக்கும் அதே நபர்தான் என்று என் மனதிலும் தோன்றுகிறது. அவரோடு கௌ அண்ணாவையும் சேர்த்து நானும் இங்கு குழப்பிக் கொண்டிருக்கிறேன்!!!!!! இரண்டாவது பகுதியில் தான் இவர் சேர்ந்துகொண்டார் என் லிஸ்டில்!!!

      அதைச் சொல்லிக் கொண்டும் இருக்கிறேனே..ஹாஹா ஜீவி அண்ணா மற்றும் கௌ அண்ணா தான் என் லிஸ்டில் போட்டியில்!!!!

      கீதா

      நீக்கு
    6. இவரே தான் அவரே .அவரே தான் இவரே:)

      நீக்கு
  8. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எல்லா நாட்களும் ஆரோக்கியத்துடன்
    அமைதியாக இருக்க வேண்டும்.

    இன்று ஏகாதசி கண்டருளும் ஸ்ரீரங்க நாதன் அனைவருக்கும்
    நன்மை செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா மாலை வணக்கம். இன்று என்ன ஸ்பெஷல்? ஓ கைசிக ஏகாதசியோ. திருக்குறுங்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்படும்

      கீதா

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா.. வைகுண்ட ஏகாதசி வணக்கம்.

      நீக்கு
    3. ஸ்ரீரங்கனுக்கு வைகுண்ட ஏகாதசி.
      நம் நம்பிக்கு கைசிக ஏகாதசி.

      கீதாமா, ஸ்ரீராம் நலமுடன் இருங்கள்.

      நீக்கு
    4. இந்த வருடம் ஏன் இந்த வித்தியாசமோ? இன்று ஸ்ரீரங்கம் கோயில் மட்டும் கொண்டாடுகிறது போலும். மற்ற கோயில்கள் எல்லாம் புதுவருட ஜனவரியில் தான் கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு வேளை அன்று தை பிறப்பதால் இப்படியோ?

      கீதா

      நீக்கு
    5. புதுவரையுடம் என்றால் கரிநாளில் வரும், பண்டிகை கொண்டாடாமல் விடக்கூடாது என்றெல்லாமும் காரணம் சொல்கிறார்கள்.

      நீக்கு
    6. இது 19 வருடங்களுக்கு ஒரு முறை இப்படிக்கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் மரபு ஶ்ரீமணவாள மாமுனிகளின் காலத்தில் முறைப்படுத்தப்பட்டதாகச் சொல்கின்றனர். தை மாதம் ஶ்ரீரங்கத்தில் பூபதித்திருநாள் கொண்டாடப்படும். அதற்கும் ரக்ஷாபந்தனம் உண்டு. வைகுண்ட ஏகாதசிக்கும் ரக்ஷாபந்தனம் உண்டு. சுக்ல பக்ஷ மார்கழி மாத ஏகாதசி போகி அன்று இந்த வருஷம் வருகிறது. உடனே தை மாதம் பூபதித்திருநாள். அதுவும் பத்து நாட்களுக்கு மேல் கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசியோ சுமார் 20 நாட்களுக்கு மேலாக வரும். போகியன்று வைகுண்ட ஏகாதசியைக் கடைப்பிடித்தால் பூபதித் திருநாட்கள் தள்ளிப் போகும். பூபதித்திருநாளையும் தள்ளிப் போட இயலாது. அடுத்தடுத்து இரு திருவிழாக்களுக்கும் காப்புக்கட்டுவது என்பதும் இயலாத ஒன்று. ஆகவே மணவாள மாமுனிகளில் காலத்தில் அவரால் இந்தக் கார்த்திகைக் கடைசியில் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாய்க் கொண்டாடும் மரபு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு பத்தொன்பது வருடங்களுக்கு ஒரு முறை இப்படிக் கொண்டாடப்படுகிறது. மற்றப் பெருமாள் கோயில்களில் மார்கழி மாதத்தில் கடைசி தினமான போகி அன்று வரும் சுக்ல பக்ஷ ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறார்கள். நம்ம நம்பெருமாள்/ரங்கு ராஜாதி ராஜன் அல்லவா? ஆகவே அவர் வழி எப்போவுமே தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வழி! :) நாளைக்கு மாசம் பிறப்பதால் நாளையிலிருந்தே தனுர்மாதப் பூஜைகளும் அனைத்துக் கோயில்களிலும் ஆரம்பம். ஆனால் மார்கழி ஒன்றாம் தேதி வியாழன் அன்று தான்.

      நீக்கு
    7. வணக்கம் சகோதரி

      ஸ்ரீ ரங்கத்தின் வைகுண்ட ஏகாதசியைப் பற்றிய அருமையான தெளிவான விபரங்களுக்கு நன்றி சகோதரி.

      உங்கள் பேத்தி எப்படியிருக்கிறாள்? உங்கள் மகன் மருமகள்,பேத்தி அனைவரையும் கண்ட உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அனைவருடனும் சந்தோஷமாக ஒவ்வொரு நாட்களையும் கழித்திட என் அன்பான வாழ்த்துகள். அனைவரையும் கேட்டதாகக் கூறவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    8. ஸ்ரீரங்கனுக்கு வைகுண்ட ஏகாதசி.
      நம் நம்பிக்கு கைசிக ஏகாதசி.//

      ஆமாம் வல்லிம்மா தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
    9. கீதாக்கா விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி.

      பானுக்காவுடன் பேசிய போது அவரும் சொன்னார்.

      கீதா

      நீக்கு
    10. @கமலா, பேத்தி இன்னும் இங்கே வரலை. அடுத்த வாரம் வருகிறாள். ஆனால் வாட்சப்பில் பார்த்துவிட்டு ஒரே குதியல்!

      நீக்கு
    11. @ஸ்ரீராம், எல்லாப்பண்டிகைகளிலும் கரிநாள் வராது. அதோடு இந்த மாசக் கரிநாளெல்லாம் முன்னெல்லாம் பஞ்சாங்கங்களில் இல்லை என்பார்கள். கடந்த 200/150 வருடங்களில் இவை ஏற்பட்டன என்பார்கள். இதற்கான காரணம் ஜோதிட ரீதியாகத் தெரியவில்லை. ஆனால் பழங்காலத்து ஜோசியர்கள் பெரும்பாலும் மாசக்கரிநாளை உதாசீனம் செய்து விடுவார்கள். அது போலவே இறைவனுக்கு ஏதாவது செய்தாலும் எமகண்டம், ராகு காலம், அஷ்டமி, நவமி பார்க்க வேண்டாம் என்பார்கள். ஆனால் பார்க்காமல் எங்கே இருக்கோம்? கரிநாளில் இருந்து எல்லாமும் பார்த்துத் தான் செய்ய வேண்டி இருக்கு! :( என்னைப் பொறுத்தவரையில் ராகு காலம் எனக்கு எதுவும் செய்ததில்லை. 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ராகுகால விளக்கு ஏற்றுவதாலோ என்னமோ!

      நீக்கு
    12. சொல்ல வந்ததை விட்டுட்டேன். பொங்கல் சமயம் தான் தொடர்ந்து 3,4 நாட்கள் கரிநாளாகவே வரும்.

      நீக்கு
  9. அடுத்த பகுதியிலேனும் ஏதேனும் ட்விஸ்ட், அமானுஷ்யம் வருமா? பரிச்சயப்பட்ட கதைக்களம். ஆரம்ப விறுவிறுப்பு இப்பகுதியிலும் இல்லை. முடிவு வழக்கமான முடிவாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி.  எனக்குத் தெரிந்து எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் இருப்பது நலம்.  நான் எப்போதுமே அப்படித்தான் இருப்பேன்.  அது சரி, ஒருவேளை அந்த மர்ம எழுத்தாளர், Mr. X, கடைசி பகுதியை வாசகர்கள் கையில் விட்டு விடுவாரோ....?

      நீக்கு
    2. பண்ணையார் கெடு முடியும் இரவில் வருகிறார். அக்கம்மா தேவியைக் காப்பாற்ற தேவியின் சேலையில் இருக்கிறாள்.... கடைசியில் பண்ணையாரைச் சபித்துவிட்டுக் குதிக்கிறாள்... தேவி தப்பித்து பிறகு இறக்கிறாள். என்றெல்லாம் கதையை ஓட்டிவிடலாமே... ரொம்ப லிங்க் கேட்பவர்களுக்கு, அக்கம்மாவின் பையன்தான் இந்தப் பிறப்பில் எழுத்தாளர், இல்லை போன ஜென்ம அர்ஜுன்தான் எழுத்தாளர்னு எழுதினா,நீங்க என்ன எழுத்தாளரை அரெஸ்ட் பண்ணி, புது கேஸ் ஜோடித்து, எழுத்தாளரினால் தமிழக அமைதிக்கே பங்கம் வரும்னா சொல்லப்போறீங்க?

      நீக்கு
    3. நல்ல நல்ல ஐடியாக்களா இருக்கே...  நோட் பண்ணுங்க...   நோட் பண்ணுங்க...

      நீக்கு
    4. ஆமாம்! ஆமாம். நல்ல ஐடியா! சூப்பர். ஆறாவது பகுதியை நீங்க எழுதி அனுப்புங்க. வெளியிட்டுடலாம்.

      நீக்கு
    5. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர் எனக்குத் தோன்றும் ஐடியாக்கள் எல்லாம் உங்களுக்கும் வருகிறேதே!!!! ஓ மை!!!! //நீங்க என்ன எழுத்தாளரை அரெஸ்ட் பண்ணி, புது கேஸ் ஜோடித்து, எழுத்தாளரினால் தமிழக அமைதிக்கே பங்கம் வரும்னா சொல்லப்போறீங்க? இதைத் தவிர்த்து மற்றவை!!!!)

      கீதா

      நீக்கு
    6. //நீங்க என்ன எழுத்தாளரை அரெஸ்ட் பண்ணி, புது கேஸ் ஜோடித்து, எழுத்தாளரினால் தமிழக அமைதிக்கே பங்கம் வரும்னா சொல்லப்போறீங்க?// ஹாஹாஹா நீதிபதியே விடுதலை பண்ணிடுவார். :))))

      நீக்கு
  10. ஏணி மலைக் கதை சுறு சுறுப்பாகச் செல்கிறது.
    அக்கம்மா காவல். தேவி சிறையில்.

    இருவரும் சொர்க்கம் போய்விட்டார்களோ.?
    அப்புறம் ஏன் அக்கம்மா மட்டும் நீல நிறத்தில் வரவேண்டும்?

    என்ன நடக்கிறது என்று வெயிட்டிங்க்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Good O & Q... சாதாரணமா பேயும் சரி, ஆவியும் சரி, வெள்ளை நிறத்தில் புகை போலத்தானே வருவார்கள்?  எனக்கும் டவுட் வருது.

      நீக்கு
    2. சம்மதம் கிடைக்காமல் பொறுமை இழந்து பண்ணையார் இரவு இருட்டில் தேவி என நினைத்து அக்கம்மாவை

      நீக்கு
    3. அதாவது எழுத்தாளர் இந்தக் கதை வித்தியாசம் என்று சொல்லுகிறார் போலும் ஹாஹாஹாஹா. சினிமாவில் மாறு வேஷம் என்று சொல்லி கன்னத்தில் ஒருகறுப்பு புள்ளி, கண்ணில் மை, தலையில் ஒரு முண்டாசு அல்லது மாற்றம் என்று வருவார்களே அது போல

      கீதா

      நீக்கு
    4. அப்போ பேயோ ஆவியோ இருக்காது என்கிறீர்களா?  எப்படி நிச்சயமாய்ச் சொல்கிறீர்கள்?

      நீக்கு
    5. சம்மதம் கிடைக்காமல் பொறுமை இழந்து பண்ணையார் இரவு இருட்டில் தேவி என நினைத்து அக்கம்மாவை//

      நெல்லை இது எனக்கும் தோன்றியது...வழக்கமான ஃபார்முலாவாக இன்றைய ப்குதி இருந்ததால்...

      அப்ப நீங்க தான் எழுதறீங்களோ?!! இப்படிச் சொல்லி.

      ஆனால் கண்டிப்பாக ஸ்ரீராம் இல்லை

      கீதா

      நீக்கு
    6. அப்பாடி..   தப்பிச்சேண்டா...

      நீக்கு
    7. அப்போ பேயோ ஆவியோ இருக்காது என்கிறீர்களா? எப்படி நிச்சயமாய்ச் சொல்கிறீர்கள்?//

      அப்படிச் சொல்லவில்லை ஸ்ரீராம்....(அப்படி முடிவு ஏதேனும் ட்விஸ்டுடன் இருந்தால் நல்லாதான் இருக்கும்!!!!) வழக்கமாக வெள்ளை...இங்கு நீலம் என்று மாற்றிச் சொல்லியிருப்பதை....ஒரு வேளை அது உருவம் இல்லாமல் உண்மையாகக் கூட இருக்கலாம். அந்த அக்கம்மாவும் தேவியும் கவுடாவைக் கொன்றிருக்கலாம்!!!!

      கீதா

      நீக்கு
    8. மறுபடி மொதல்லருந்தா?  குழப்பறீங்களே..

      நீக்கு
    9. இல்லை ஸ்ரீராம் என்ன குழப்பம்? எல்லாரும் ஆவி என்று நினைத்துக் கொண்டிருக்க (வாசகர்கள் மட்டுமில்ல அந்த ஊர் மக்களும் தான்) அது ஆவி இல்லை உண்மை என்று தெரியவந்தால் சஸ்பென்ஸ் தானே!!! ஆவி என்று சஸ்பென்ஸாகக் கொண்டு போய் கடைசியில் இல்லை என்று முடிக்கலாமே..அதற்கு ஒரு பின்னணியுடன்...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    10. // அந்த பெம்பட்டி சேலை கவுடா என்பவர், சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு, வாழ்ந்தவர். // இதை நீங்க யாரும் கவனிக்கவில்லையா!!

      நீக்கு
    11. கௌ அண்ணா அவர் நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்...என்பது தெரியுமே....அடுத்த தலைமுறைகளில் பழிவாங்கும் படலம் நடக்கலாமே....பேய், ஆவி என்ற புரளி பரப்பி...!! ஹாஹாஹாஹா

      விடாது கறுப்புல கூட கறுப்பு சாமிதான் எல்லாரையும் தண்டிக்குதுனு சொல்லலையா அது போல. இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கதைகள் ஒன்றிரண்டு வாசித்தாலே போதும்.

      கீதா

      நீக்கு
    12. நெஞ்சம் மறப்பதில்லை பாட்டு கேட்பது எனக்கு மட்டும் தானோ:)

      நீக்கு
  11. இந்த வார‌ கதை சில உண்மை நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகிறது. நெல்லையாராகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன, அவரும் வந்து அவர் பங்குக்கு நான் இல்லை, செல்லப்பா சாராக இருக்குமோ என்று குழப்புவார்...

      நீக்கு
    2. ஓ செல்லப்பா சாரைப் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன் அவரிடமே ரொம்ப நாளாகக் காணவில்லையே என்று. அவர் அழைத்தும் ரொம்ப நாளாகிவிட்டது

      அவரை ஊகம் செய்யவே இல்லை.

      கீதா

      நீக்கு
    3. அப்படியா...   சரி அப்போ அவரை விட்டு விடலாம்.

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலங்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. ஏணிமலைக் கதை, எனக்கு ஏன் சரவணபவன் இராஜகோபாலை நினைவுபடுத்துகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது? சரவணபவன் இராஜகோபால்? ஆச்சரியக் குறியில் ஸ்ரீராமோடு நானும்!

      கீதா

      நீக்கு
    2. //ஏணிமலைக் கதை, எனக்கு ஏன் சரவணபவன் இராஜகோபாலை நினைவுபடுத்துகிறது?// எனக்கும் சரவணபவன் ராஜகோபால் நினைவுதான் வந்தது. அதைத்தான் பூடகமாக சொல்லியிருந்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. எ.பி.காரர்களுக்கு எல்லாவற்றையும் உடைத்து சொல்ல வேண்டுமோ?

      நீக்கு
    3. நமக்கெல்லாம் உடைச்சுச் சொன்னாலே அவசி தான். இதிலே பூடகம்னா கேட்கவே வேண்டாம். :)

      நீக்கு
  14. இது வரை ரோபோ இல்லை என்று மட்டும் சொல்லச்சொல்லிய கூகுளார் இப்ப படம் கொடுத்து டெஸ்ட் வேற செய்கிறார். கடுப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கதை மாந்தர்களின் பெயர்கள் எல்லோருமே வித்தியாசமாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக ஏணியுடனும், மலையுடனும் சுறுசுறுப்பாக பயணிக்கிறது. கதைக்குள் கதையாக வரும் சம்பவங்களையே வைத்து ஒரு திகில் கதையாக கேட்டவருக்கு அந்த கதைக்குள் வரும் எழுத்தாளர் அமா எழுதி தந்து விடுவார் என நினைக்கிறேன்.

    ஓவியம் நன்றாக உள்ளது. கலர் கலராக வரும் அந்த பெண்களைப் பற்றிய கதைச் சொல்லியே இந்த மூன்றாம் பகுதிக்கு நாம் வந்து சேர்ந்து விட்டோம். இனி வரும் இரு வாரங்களில் எழுதிய கதாசிரியர் யார் எனபது தெரிந்து விடும். அது வரை குழம்ப வேண்டாம். (ஏனெனில் வாரமெனும் ஏணியில் ஏறி வரும் நமக்கும் குழப்பங்கள் வந்தால், தலை சுற்றி விடும்.) ஆனால் ஓவியம் வரைந்தவர்தான் (செவ்வாய்தோறும் ஓவியம் வரைபவர்தான்) உண்மை கதாசிரியர் என்பது உறுதியாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழி ஓரிடம், பாவம் வேறிடம்!!

      நீக்கு
    2. கமலா ஹரிஹரன் மேடம்... பாகுபலி. நீர்வீழ்ச்சியில் ஏறுகிறான். மலை உச்சியில் தமன்னா ஆவியாக (சூப்பர் உடையில் வந்து) அவனை வழிநடத்துகிறீள்.. அந்த தமன்னா படத்தையெல்லாம் உபயோகப்படுத்த யார் இந்த கேஜிஜி சாருக்கு ஐடியா தருவது?

      வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுட்டு, சின்னக்குழந்மை மாதிரி அழிரப்பர் கொண்டு அழதிது அதுதான் பேய் என்று சொல்கிறாரே

      நீக்கு
    3. எனக்கும் சென்ற வார, இந்த வார படங்களை பார்க்கும் போது பாகுபலி படந்தான் நினைவுக்கு வந்தது.

      ஆனால் தமன்னா எனும் போது எழுதும் உங்கள் கதைக்கேற்றபடி ஓவியத்தின் ஐடியா நீங்கள்தான் தருகிறீர்களோ எனும் சந்தேகம் இப்போது அதிகமாக வருகிறது. ஹா.ஹா.ஹா.

      நீக்கு
    4. ம்ம்ம்ம் நான் பாகுபலியெல்லாம் பார்க்கவே இல்லை. பார்த்தால் ஒருவேளை பாகுபலி கதையை எழுதினவர் தான் இதையும் எழுதி இருக்கார்னு சொல்லி இருப்பேனோ என்னமோ! :))))))

      நீக்கு
    5. பாகுபலி இன்னமும் பார்க்கவில்லையா? ஆச்சரியமாக உள்ளது. நானே பார்த்து விட்டேனே..!

      நீக்கு
    6. நீங்க வேறே கமலா! இன்னும் பாசமலரும், பாலும் பழமும் கூடப் பார்த்ததே இல்லை. ஆனால் பாவ மன்னிப்பு/பாகப்பிரிவினை பார்த்திருக்கேன். ஹிஹிஹி!

      நீக்கு
    7. அட . இது அதை விட ஆச்சரியம். இதுதான் 100 ஆவதா?

      நீக்கு
    8. மலை உச்சியில் தமன்னா ஆவியாக (சூப்பர் உடையில் வந்து) அவனை வழிநடத்துகிறீள்.. அந்த தமன்னா படத்தையெல்லாம் உபயோகப்படுத்த யார் இந்த கேஜிஜி சாருக்கு ஐடியா தருவது?//

      கௌ அண்ணா பாருங்க சம்பந்தமே இல்லாமல் ஆனால் சம்ந்தத்தை உருவாகி நம்ம நெல்லை எப்படி சைக்கிள் கேப்பில் தமன்னா பாட்டியை கொண்டு வரார் பாருங்க!!

      கீதா

      நீக்கு
    9. எப்படி ஒரு கிராபிக்ஸ் படத்தை எடுக்கக்கூடாது என்பதற்கு கோச்சடையான் உதாரணம்.

      எப்படி எடுக்கணும் என்பதற்கு பாகுபலி உதாரணம்.

      பாகுபலி திரையுலகில் ஒரு மைல்ஸ்டோன். அதைப் பார்க்கலைனு சொல்லிக்கறவங்க, எதையோ மிஸ் பண்ணிட்டாங்க

      நீக்கு
    10. சொல்லிக்கல்லாம் இல்லை. நிஜம்மாவே பார்த்தது இல்லை. அம்பேரிக்கா போயிருக்கறச்சே எப்படித் தவற விட்டேன்னு தெரியலை. :(

      நீக்கு
  17. அது சரி, இரண்டு மலைகளுக்கும் இடையில் கீழே நதி ஓடுகிறது போலவே! ஆகவே எதிர்த்த குன்று(குன்றா அது?) உயரத்திலிருந்து எப்படி ஏணியைப் போட்டுக் கீழே இந்த மலை ஒட்டில் இருக்கும் கிடங்குக்கு வர முடிகிறது? என்னால் முடியாது. இந்த மலையையும் அந்தச் சின்ன மலைப்பாதையையும் பார்க்கையில் திருக்கயிலை யாத்திரையில் பரிக்ரமாவில் சென்ற மலைப்பாதையையும் அதை ஒட்டிக்கீழே ஓடிய வைதருணி நதியையும், நான் கீழே விழுந்ததையும் நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பர்வத மலையில் ஏறுபவர்களின் சாகசங்களை நினைவூட்டும் மலைப்பாதை மலைக்க வைக்கிறது.

      நீக்கு
    2. ஆஹா! என்ன நினைவலைகள்! நன்று.

      நீக்கு
    3. கீதாக்கா எனக்கும் பர்வத மலைதான் நினைவுக்கு வந்தது. போயிருக்கிறேனே பதிவும் போட்டிருக்கிறேனே.

      அக்கா ஏணி போடும் விஷயம் எல்லாம் கதையில் கேள்வி கேட்கக் கூடாது!! ஹாஹாஹா அமானுஷ்ய கதை. எனவே எப்படி வேணும்னாலும் சொல்லிக் கொள்ளலாம்!! அந்தக் குன்று இங்கு படத்தில் தெரியாது அந்து இந்த மேட்டுப் பகுதி (க்ளிஃப்) க்கு அடுத்தாப்ல சின்னதா சின்ன ஏணி போடுறாப்ல இருக்கும் மாருக்கும்...அது சரி அந்த தொங்கும் ஏணில எப்படி தேவிய தூக்கிக் கொண்டு வந்தாங்கலோ...ஏணி வெயிட் தாங்காமல் அறுந்துவிடாமல்!!!! இரும்புச் சங்கிலி ஏணியாக இருக்குமாருக்கும்...ஹாஹாஹா மீக்கு என்ன ஆராய்ச்சி!

      கீதா

      நீக்கு
    4. ஆமாம், அந்த ஏணி எனக்குச் சதுரகிரி, பர்வத மலை, வெள்ளிமலை ஆகியனவற்றையே நினைவூட்டியது. கொடைக்கானலிலாவது கமல் தயவில் ஒரு தொங்கும் பாறையும் பாழடைந்த வீடும் (வீடா அது?) பார்க்க நேர்ந்தது. இப்போதும் சுற்றுலாத்தலமாக இருக்கு. ஆனால் ஊட்டியில் இப்படி இருக்கானு நினைவில் வரலை. :(

      நீக்கு
  18. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். குஞ்சுலு நேத்திக்குக் குதியாட்டம் போட்டது. அதுக்கு மனிதர்களைப் பார்த்தால் சந்தோஷம்.இன்னிக்குப் படம் வரைந்திருப்பவர் கொஞ்சம் கொஞ்சம்(அதிகமாகவோ) கௌதமன் வரையும் சாயலில் வரைந்திருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் சமாதி மட்டும்தானே காணப்படுகிறது? அது என்ன கௌதமன் வரையும் சாயல்!!

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்? சில கோடுகள்.வண்ணக்கலவைகள், தீற்றல்கள்,போன்றவை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் வருமே! அதான் சாயல்னு எனக்கு ஓர் எண்ணம்.

      நீக்கு
  19. நிஜக்கதை போன்று துவங்கி இரண்டாவது அத்தியாயத்தில் தொய்ந்து தற்போது முழுக்கற்பனைக் கதையாகிவிட்டது. கதையின் சஸ்பென்சைக் காட்டிலும் கதாசிரியர் சஸ்பென்ஸ் தான் பெரிதாகப் படுகிறது! 

    பதிலளிநீக்கு
  20. இந்த நீலநிறப்பேயை எப்படி அறிமுகம் செய்யப் போறார் அமா என யோசிக்கிறேன். கதை சொல்லும் அந்த ஓட்டல் ஊழியருக்கும் இதில் சம்பந்தம் உண்டோ? நான் இந்த வாரம் யாரையும் யூகம் செய்யவில்லை. நிச்சயமாய்த் தெரிந்த விஷயம் என்பதால் யூகத்தை வெளியிடாமல் காத்திருக்கேன். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிச்சயமாய்த் தெரிந்த விஷயம் என்பதால் யூகத்தை வெளியிடாமல் காத்திருக்கேன். பார்ப்போம்.//

      தெரியும். நிச்சயமாக யார் என்று தெரிந்த (தெரிய வரும்தானே?) பிறகு நானும் அவரைத்தான் நினைத்தேன் என்று சொல்வது நல்ல தக்கினிக்கி! :))

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ? நான் கோவிச்சுண்டு வெ.ந. செய்கிறேன். :))))))

      நீக்கு
    3. Grrrrrrrrr.. நீங்க இதுக்கெல்லாம் கோச்சுக்கற ஆள் இல்லைன்னு எனக்குத் தெரியும்!

      நீக்கு
    4. //நான் கோவிச்சுண்டு வெ.ந. செய்கிறேன்.// - இதுக்கு இந்த கீசா மேடத்துக்கு அர்த்தம் தெரியுமோ தெரியாதோ. வெ.ந. என்றால் வெளியே சென்றுவிட்டு, தேவைனா டீ சாப்பிட்டுவிட்டு, திரும்ப உள்ளவருவதுதான் (இல்லைனா சம்பளம் கட் பண்ணிடுவாங்களோ?)

      நீக்கு
    5. ஆம், நானும் அப்படிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    6. நான் தான் வெ.ந. செய்துட்டுப் பின்னர் திரும்ப வந்துண்டு தானே இருக்கேன். :))))

      நீக்கு
  21. அதுக்குள்ளே 70 கருத்துரைகளைத் தாண்டிப் போயாச்சே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை எட்டுக்குள் 100 கமெண்ட்ஸை காண வைத்த அந்த எழுத்தாளர் (இந்தக் கதையின் ஆசிரியர்) எங்கிருந்தாலும் வாழ்க..! வாழ்க..!:)

      நீக்கு
    2. கதை ஆரம்பித்த விறுவிறுப்பில் செல்லாவிட்டாலும் இதைப் பற்றிப் பேச வைத்ததே எழுத்தாளரின் திறமைக்குச் சான்று. பேய்/ஆவி எனப் புதிதாக வரும் எனப் பார்த்தால் வழக்கமான பண்ணையார்/வேலை செய்யும் கணவன், மனைவி, மனைவி மேல் பண்ணையாருக்கு ஆசை என்று வழக்கமான பாதையிலேயே செல்கிறது கதை.

      நீக்கு
    3. //வழக்கமான பாதையிலேயே செல்கிறது கதை.// - கீசா மேடம் படிக்காத புதுப் பாதையிலும் கதை சொல்லியிருக்கலாம். பண்ணையார் மனைவி பரிசு கொடுக்கறா.. வேலையாள் அழகா இருக்கான். அவனை மலை உச்சில குடிசைல கட்டிப்போடறா. துணைக்கு மூக்கையாவை வச்சிருக்கா... என்று. இதுல ஒரே ஒரு பிரச்சனைதான்.

      பேய்க்கதையில், ஆண் பேயா இருந்தான்னு ஒரு கதைகூட நான் படித்ததில்லை. (இருந்தாலும் இறந்தாலும் பெண் எப்போதுமே பேய் என்பதால் இருக்குமோ ஹாஹா)

      நீக்கு
    4. ஆண்கள் பிசாசு ஆகிவிடுவார்களோ!

      நீக்கு
    5. சமீபத்தில் ஓர் நிகழ்வு/அல்லது கதை படித்தேன். அதில் பேருந்து/லாரி ஓட்டுநர் பேய். ஆனால் கூட வரும் பெண்ணுக்குத் தெரியவில்லை. சேருமிடம் போய்ச் சேர்ந்ததும் தான் தெரிகிறது. திகைத்து விடுகிறாள். இது இங்கே எ.பியில் யாரோ சொல்லித் தான் படிச்ச நினைவு.

      நீக்கு
    6. பேய் ஓட்டிய பேருந்து! ஆஹா தலைப்பு நல்லா இருக்குதே!!

      நீக்கு
    7. "அழியாச்சுடர்" பக்கத்திலே படிச்சேனோ? நினைவில் வரலை. :(

      நீக்கு
  22. எனக்கு என்னவோ - அந்த 'போஜன்'தான் (இந்தக் கதையில்) வில்லன் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய் வந்து ஓட்டலில் அறையில் தங்குபவர்களுக்குச் சேவை செய்கிறதுனா அப்புறமா அந்த ஓட்டலுக்கு யாரேனும் வருவாங்களா?

      நீக்கு
    2. போஜன் பேய் என்றா சந்தேகப்பட்டேன்? இந்தக் கதையின் வில்லன் என்றுதானே சந்தேகம் என்று சொன்னேன்!

      நீக்கு
  23. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ கௌ அண்ணா இந்த் போஜன் பத்திதான் கீழ சொல்லிட்டு வரேன் இங்க உங்க கருத்து

      கீதா

      நீக்கு
  24. எபிக்கு சுற்றிப் போடுங்கள்..

    இன்றைய பொழுதுக்குள் இருநூறைத் தாண்டி விடலாம் என்று பட்சி சத்தம் போடுகின்றது..

    பதிலளிநீக்கு
  25. கதையில் வரும் போஜன் கேரக்டர் கொஞ்சம் சம்சயமாக இருக்கிறதே!! (வித்தியாசமான பெயர். ரூம் செர்வீஸ் ஊழியர் என்பதால் இப்பெயரை கதை எழுதுபவர் சூட்டியிருக்கிறாரோ!!!

    ஆனால் போஜன் எனும் பெயர் வெளிநாட்டவரிலும் உண்டு அதன் அர்த்தம் போர்!!!

    ஏகாந்தன் அண்ணா திடீரென்று நினைவுக்கு வருகிறார்! அவர் அமானுஷ்ய டாப்பிக்கில் கவிதைகள் எழுதுவாரே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்! பெயர் வித்தியாசமாக இருக்கணும்? அந்தக் காலத்திலேயே போஜ ராஜன் என்னும் ராஜா இருந்திருக்காரே! மறந்து போச்சா?

      நீக்கு
  26. நீலகிரி வாழ் படுக சமுதாயத்தினர் குடும்பங்களில் சகஜமாக புழக்கத்தில் இருக்கும் பெயர்.

    பெயர் சூட்டலில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார் கதாசிரியர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! தகவலுக்கு நன்றி ஜீவி சார்.

      நீக்கு
    2. ஆம் ஜீவி அண்ணா படுகர் சமுதாயத்திலும் உண்டு. என் மிக நெருங்கிய தோழி (தோழின்னுதான் சொல்வேன் அவள் என்னை அம்மா என்று அழைத்தாலும் என் மகனை விடச் சிறியவள்) 'டினு' படுகர் சமுதாயம். நான் கூகுளில் தெரிந்து கொண்டது தவிர படுகர் சமுதாயம், நிகழ்வுகள் கல்யாணம், சடங்குகள், குறித்தும் அவளிடமிருந்து நிறைய தெரிந்துகொண்டேன். அதைப் பற்றிக் கூடக் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறேன்!!!

      //பெயர் சூட்டலில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார் கதாசிரியர்.//

      !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  27. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அருமையான அமானுஷ்ய கதை. இன்று தான் அனைத்தும் படித்தேன். யார் எழுதியது எனவும் அறிய முடியாத சஸ்பென்ஸ். நானே ஏணிமலைக்கு சென்று வந்த உணர்வு. அடுத்த வாரத்திற்காக காத்திருக்கிறேன். நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. கீதா ரங்கன் - நான் இதைவிட பிரமாதமாக கதை எழுதுவேன். விரைவில் எபிக்கு அனுப்பறேன்.

      கௌதமன் - இதைவிட நல்ல கதை எழுதமுடியுமா? நான் கஷ்டப்பட்டு எழுதின கதையை இப்படியா சொல்றீங்க. எழுதி அனுப்புங்க.. பிரிச்சு மேயறேன்.

      அது சரி..எழுதிட்டு ஏன் கருத்தை அகற்றிவிட்டீங்க?

      நீக்கு
    3. நெல்லை அக்கருத்து ஆதே கருத்து மே..................லே போயிடுச்சு!!! (அமானுஷ்யம்!!!)

      கீதா

      நீக்கு
  29. நீலப் பேயும் வந்துவிட்டது அடுத்து சிகப்பு பேயும் வருமோ :)

    கதாசிரியர் ஆராச்சியில் வாசகர்கள் ....தொடரட்டும் ஏணிமலை.

    பதிலளிநீக்கு
  30. கதை சஸ்பென்ஸோடு செல்கிறது. அக்கமா யார் தேவி யார் என்று தெரிந்தாலும், அக்கம்மா சமாதி ஏன், தேவி ஆவியாக எப்படிப் பழி வாங்கப் போகிறாள் என்று என்பது தெரியவரும் என்று நினைக்கிறேன்.

    அமானுஷ்யம், த்ரில்லர் கதைகள் எழுதவும் கற்பனை வேண்டும். நன்றாக இருக்கிறது. இடையில் ஒரு வரியில் குழப்பம் வந்தாலும் அது தட்டச்சு செய்யும் போது வந்ததாக இருக்கலாம்.

    தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  31. கதை நன்றாக போகிறது.
    அக்கம்மா ராணி கதை ஸ்ரீசைலத்தில்(கோவிலில்) சுவர் ஓவியமாக இருக்கும்.

    தேவிக்கு காவலாக அக்கம்மா வருகிறார். பார்ப்போம் அக்கம்மா ஏதாவது தேவிக்கு உதவி செய்வாரா என்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!