செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கேட்டு வாங்கிப்போடும் கதை : மனைவி அமைவதெல்லாம் - அதிரா


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என் கதை படிச்சுப்போட்டு, தைச்சு... தையல் பிரிச்சாலும் பிரிப்பினம்:) அதால பேசாமல் போத்துக்கொண்டு நித்திரை போலப் படுப்பதுதான் சேஃப்:))


மனைவி அமைவதெல்லாம்!.
அதிரா  -

"நல்லா யோசிச்சுப் பாருங்கோ  “ராகி மாமா”.., எதுக்குப் போய் ஊருலகத்துக்குப் பயந்து வாழ நினைக்கிறீங்க? உங்களை என்ன கொலையா பண்ணச் சொல்கிறேன்? அப்படி என்ன பெரிய தப்பாக இதை நினைக்கிறீங்க? உலகிலே எவ்வளவோ கேவலம், அசிங்கம் எல்லாம் திரை மறைவிலே நடக்குது, அப்படி இருக்கும்போது இது நேர்மையான நீதியான வழி எனத்தானே சொல்கிறேன்.. கள்ளமான வாழ்க்கைக்கா அழைக்கிறேன்? நாம் இருவரும் அப்படிப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் இல்லையே?..

டந்த அஞ்சு வருடமா நானும் இதைப்பற்றித்தான் பேசிகொண்டிருக்கிறேன்.. நீங்க தான் எதுக்கும் அசைவதாகத் தெரியவில்லை.. பாருங்கோ மாமா, நாங்க ஒரு தப்புப் பண்ணிட்டால் மட்டும் முன்னால ஓடி வந்து முத்திரை குத்தி நம்மைத் தப்பானவர்கள் என அடையாளம் சூட்டும் இந்தச் சமூகம்...

நீங்க மனதால கஷ்டப்படும்போது வந்து மருந்து தரப் போகிறதா?.., இல்லை உங்களை வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து கவனிக்கப்போகிறதா?, இல்லை.., நீங்க துன்பத்தில் இருக்கிறீங்களே என நினைச்சு , ஊர் முழுக்க உங்களுக்காக.. கொண்டாட்டங்கள் எதுக்கும் போகாமல், கூடவே இருந்து தடவிக் கொடுப்பார்களோ?.. சிந்தியுங்கோ மாமா..

னக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு, உங்களுக்கும் மனதால என்னை நன்கு பிடிச்சிருக்கு என்பது எனக்குத் தெரியும், ஆனா நீங்கதான் பிள்ளைகளுக்கும், ஊர் உலகத்துக்கும் பயந்து , மறுப்புச் சொல்லிக் கொண்டே வாறீங்க..."

போன வெள்ளிக்கிழமை கோதை வந்து இப்படிச் சொன்னபோது, எனக்கும் மனதார கோதையை நன்கு பிடிச்சிருக்கு, கோதையோடு வாழ்ந்தால் என்னைக் கடைசி காலம்வரை நன்கு கவனிப்பா என்பது  தெரியும்.

என்னைவிட 12 வயது இளமையானவ கோதை. எனக்கு இப்போ 62 வயதாகிறது, எங்கள் பக்கத்து ஊர்தான், மிகவும் கெளரவமான குடும்பம், நல்ல வசதியானவர்கள், கோதைக்கு சொந்த வீடும் இருக்கு. சின்ன வயதிலிருந்தே எம்மோடு நன்கு பழகி வந்த பிள்ளை, 20 வருடத்துக்கு முன்பு என் மனைவி திடீரென காலமானதில் இருந்து, நம் குடும்பத்தோடு இன்னும் அதிகம் ஒட்டிப் பழகி வருகிறா.

கோதையின் 20 வயதில், பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, தன் தம்பி தங்கைகளை, இவவே தாய் தந்தையாக நின்று நல்லபடி வளர்த்து அனைவரையும் நல்ல வாழ்க்கையில் அமர்த்தி விட்டா.  ஆனா சின்ன வயதில் ஏற்பட்ட ஒரு பாழாய்ப்போன காதல் தோல்வியாலும், குடும்பப் பொறுப்பாலும், இனி எனக்குத் திருமணமே வேண்டாம் என இருந்து விட்டா.

கோதரங்கள் நல்ல உதவியாகத்தான் இருக்கிறார்கள், இருப்பினும் கோதை தனியே, தன் வீட்டில் இருக்கிறா, இப்போது தம்பி தங்கைகள் வெருட்டுகின்றனர்..  “நீ இனி மணம் முடிச்சே ஆகோணும், உன் பிற்காலத்துக்கு ஒரு துணை தேவை” என, அதனாலேயே ..

“இந்த வயதில போய் தெரியாத ஒருவருக்கு வாழ்க்கைப்படுவதை விட, எனக்கு பிடிச்ச உங்களோடு வாழ்க்கை நடத்துறேனே.. உங்களுக்கும் ஒரு துணை இனி நிச்சயம் தேவை மாமா” எனக் கூறினா.

னக்கும் மனைவியை இழந்து.. கடந்த  20 வருடமாக ரத்தம் சூடாக இருந்தது..,  உடம்பில் தென்பு இருந்தது.. எந்த உதவியும் தேவைப்படாமல் காலத்தை ஓட்டி விட்டேன், ஆனால் மனதில் இருந்த தனிமை.. வெறுமை.. கவலை என்னை இந்த 62 வயதிலேயே வயதானவர்போல தோற்றம் தந்து விட்டது.. மனம் இளமையாக மகிழ்ச்சியாக இருந்தால்தானே உடம்பும் இளமையாக இருக்கும். இப்பொழுது முன்புபோல என்னால உஷாராக எந்த வேலையும் செய்ய முடிவதில்லை..  “என்ன வாழ்க்கடா இது?:)” எனத்தான் அடிக்கடி சொல்ல வருகிறது.

ன் நான்கு பிள்ளைகளும் வேறு வேறு ஊர்களில் நல்லபடி சந்தோஷமாக வாழ்கிறார்கள்.  தினமும் என்னோடு பேசுகிறார்கள். என்னைத் தம்மோடு வந்து தங்கும்படி அழைக்கிறார்கள்.. ஆனால் எனக்குத்தான் அப்படிப் போய்ச் சேர்ந்திருப்பது பிடிக்கவில்லை... அதைவிட அவர்களால்தான் என்ன பண்ண முடியும்? அவர்களும் பாவம்தானே? நான் இப்படி தனியே இருந்து சமைத்துச் சாப்பிடுவதால் அவர்களுக்கும் நிம்மதி இல்லை.

ன் பிள்ளைகள் என்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. அதுவும் கோதையை அவர்களுக்கும் நன்கு பிடிக்கும், அதனால என் பிள்ளைகள் முற்போக்காக சிந்திப்பவர்கள், நான் கோதையை மணக்கப் போகிறேன் என்றால் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். நான் தனியே இருந்து தவிப்பதைப் பார்க்க அவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

எனக்குத்தான், இந்த வயதில் போய் திருமணமா? என ஒரு வித அச்சமாக இருக்கிறது.  இருப்பினும் கோதை சொல்வதத்தனையும் உண்மையே..

“மாமா, இளமையில்தான் திருமணம் என்பது உடல் தேவைக்கும்.. என்றாகிறது, ஆனா வயதான காலத்தில் துணை என்பது, ஒரு மன ஆறுதலுக்காக, பேச்சுத் துணைக்காக.. என்னதான் பிள்ளைகள், சகோதரங்கள் என இருந்தாலும், தன் துணையோடு உரிமை எடுத்துப் பேசுவதைப்போல வருமோ? ஒரு துக்கமோ சந்தோஷமோ... அப்ப அப்ப பகிர்ந்து கொள்ள , சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படும். தன் துணை தவிர வேறு யாரும் நம்மோடு 24 மணி நேரமும் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை.. அவரவருக்கும் குடும்பம் இருக்கிறது.

ருத்தமான நேரங்களில்கூட மருந்து தரத்தான் அடுத்தவர்களால் முடியும், ஆனால் மடியிலே சாய்த்து தைலம் தடவி, அன்பால் அரவணைப்பதென்பது தன் துணையால் மட்டும்தானே முடியும்? எதுக்கு மாமா ஆகவும் உலகத்துக்குப் பயப்பிடுறீங்க?”.... என்று சொன்ன கோதையை நன்கு திட்டி அனுப்பி விட்டேன், அடிக்கடி திட்டித்தான் விடுவேன், ஆனா போன வெள்ளிக்கிழமை கொஞ்சம் அதிகமாக இனிமேல் இதுபற்றி என்னோடு பேசாதே.. இன்றுதான் கடைசியாக இருக்கட்டும் இப்பேச்சு என நன்கு திட்டி விட்டேன்.

வாயாலதான் ஊர் உலகத்துக்குப் பயந்து திட்டினேனே தவிர, மனதால விருப்பமாகவே இருந்தது. இந்தக் கோயில் மரத்தடியில் இருந்துதான் பேசினோம், சரி மாமா இனி நான் என் வழியில் போகிறேன், உங்களுக்கு தனியே இருப்பதுதான் இஷ்டமெனில் நான் இனி ஏதும் கேட்க மாட்டேன் எனச் சொல்லிப் போனவதான், ஒரு கிழமையாகி விட்டது, இன்று வெள்ளிக்கிழமை எப்படியும் கோயில் கும்பிட வருவா, இன்று சொல்லி விட வேண்டும்.. எனக்கும் சம்மதம் என.

நான் கோதைக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்,  “இஞ்ச பார் கோதை, தனிமையிலேயே எத்தனையோ பேர் வாழ்ந்து முடிப்பதில்லையா? ஏன் துணை நிச்சயம் தேவையா?” என, கோதை தானாக வந்து, என்னோடு உரிமையோடு பேசும்போது, எனக்கும் கொஞ்சம் தலைக்கனமாகவே இருக்கும்.. லெவல் காட்டத் தோன்றும், ஆனா உள்ளூர எனக்கும் தெரியும் ஊருக்காகத்தான் நான் பயப்படுகிறேன் மற்றும்படி கோதையுடன் வாழ எனக்கும் பிடிக்கிறது என.

“அவர்களை விட்டுத்தள்ளுங்கோ மாமா, எல்லோருக்கும் இப்படிச் சந்தர்ப்பங்கள் அமைவதுமில்லைத்தானே?, சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால், யாரும் உங்களைப்போல் வாதாடிக் கொண்டிருக்க மாட்டார்கள்”..

”இந்த வயதில் பேப்பரில் போட்டு பெண் தேடுவதுதான் தப்பு மாமா, இது நம் இருவருக்கும் நன்கு பிடித்திருக்கிறது.. நம் இரு குடும்பத்துக்குமே நம்மை நன்கு தெரியும், இருவருமே எந்தச் சுமையும் இல்லாமல் இருக்கிறோம், இருவருமே வசதியானவர்கள் என்பதனால .. எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை”..

கோதை சொல்வதத்தனையும் மிகச் சரி என எனக்கும் தெரிந்தது, இருப்பினும் ஏதோ ஒன்று என்னைத்தடுத்து விட்டது, இனி இதுபற்றிப் பேசுவாயாயின் என்னோடு பேசாதே என ஏதோ ஒரு தடிப்பில் பேசி விட்டேன் .... கோதையும் கடந்த அஞ்சு வருடமாக இதையே என்னிடம் சொல்லிப் புலம்பிக் களைச்சிருப்பா பாவம்...

கோதையும் பாவம்தானே, எனக்காக எப்பவும் காத்திருக்க முடியுமோ? அவர்கள் குடும்பமும் இனி கோதையை தனியே இருக்க விட மாட்டார்கள், திருமணம் பண்ணி வச்சே தீருவார்கள் என்பதனால, நான் இந்த மாணிக்க கங்கையைப் பார்த்து, இத்தனை மணி நேரமாகச் சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.. இனி கோதையோடுதான் என் வாழ்க்கை.

ள்ளமாக வாழ்ந்து கெட்ட பெயர் எடுப்போர் மத்தியில், கோதை ஒழுக்கமாக வாழும் பெண், நேர்மையான எல்லோருக்கும் தெரிஞ்சு வாழும் வாழ்க்கையை விரும்பியே என்னோடு வாதாடுவா. கோதையின் விருப்பப்படி, இந்த முருகன் சந்நிதியிலேயே, ஒரு தாலி கட்டி விட்டு, நம் காலத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

ப்பவே கோதையைப் பார்த்து இந்தச் செய்தியைச் சொல்லி விட வேண்டும் என எழும்புகிறேன்.. அட நல்ல சகுனம் கோயில் மணி அடிக்கிறதே.. ஓ மேளச் சத்தமும் கேட்கிறது..  இன்று திருவாதிரை எல்லோ?  அதுதான் பூசை போலும், கோயிலில் விசேஷ பூஜைகள் எனில் கோதை வரத் தவறுவதில்லை, போய்ப் பூஜையையும் பார்த்து.. அப்படியே கோதை நின்றால் வெளியே கூட்டி வந்து சொல்லி விட வேண்டும், இன்று இரவே என் பிள்ளைகளோடும் பேசி விட வேண்டும்....

ரணம் என்பது எப்பொழுது வருமென்பது தெரிஞ்சால்.. பிடிவாதமாக இப்படியே இருந்திடலாம்.. ஆனா அது நாளைக்கும் வரலாம் இல்லை இன்னும் 20 வருடம் கழிச்சும் வரலாம் .. நமக்குத் தெரியாதே.., அதனால நான் எடுத்த முடிவே சரியானது...  “அப்பனே முருகா.. ஞான பண்டிதா.. உன்னை நம்பியே இந்த முடிவை எடுத்திருக்கிறேன், என் வாழ்க்கையை சீரழிச்சிடாமல் நல்வழிப்படுத்திப்போடு” 
என வேண்டிக் கொண்டு மண்டபத்தின் உள்ளே நுழைகிறேன்..

ள்ளே கெட்டி மேளம்!! கெட்டி மேளம்!!! என ஐயர் சொன்னபடி மந்திரம் சொல்ல. மேளச் சத்தம் கொட்ட.. கோதையின் கழுத்திலே தாலி ஏறுகிறது... தலையைக் குனிந்து கையைக் கூப்பிய வண்ணம் கோதை அழகிய மணப்பெண்ணாக வீற்றிருக்கிறாள் முருகனின் வாசல் படியிலே....., மிக மிகச் சிறிய உறவினர் கூட்டத்தோடு, மிகவும் எளிமையாகத் தாலி கட்டு நிகழ்கிறது....

நான் எட்டிப் பக்கத்தில் இருந்த தூணைப் பிடிக்கிறேன்.. மயக்கம் வருவதுபோல இருக்கிறது... தப்புச் செய்து விட்டேனே.. இன்று நேற்றல்ல கடந்த 5 வருடமாக என்னைக் கேட்டபடி வந்து போனாவே.. பாவம் கோதையின் மேல் எந்தத் தப்பும் இல்லை..  மெதுவாக எட்டி எட்டி நடந்து வெளி வீதிக்கு வந்து மரத்தடியில் அமர்கிறேன்ன்ன்...  ஜேசு என்ன சொன்னார்?.. “கதவைத் தட்டாத காரணத்தால், எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப் பட்டிருக்கின்றன”.. சரிதானே.. வாழ்வில் சந்தர்ப்பம் என்பது நெடுகவும் வராதுதானே...

ரு பெண்ணை இவ்வளவு தூரம் தாமதிக்க வைத்ததும் இல்லாமல் அப்ப அப்ப திட்டி நோகடிச்சு வந்ததும் என் தப்புத்தானே.... “எந்த ஒரு பொருளும் நம்மோடு இருக்கும் வரை நமக்கு அருமை தெரிவதில்லை”... எவ்வளவு தத்துவம் படிச்சும் என்ன பயன்?  இப்போது மட்டும் தத்துவமா வருதே ..

“மனைவி அமைவதெல்லாம்ம்ம்ம்ம் இறைவன் கொடுத்த வரம்......” 
 எங்கோ தொலைவிலிருந்து வானலையில் ஒரு பாடல் தவழ்ந்து வந்து காதில் விழுகிறது.. ஓடிப்போய் உதைக்கலாமா ரேடியோவை என மனம் துடிக்கிறது... என் மீது எனக்கே கோபம் கோபமாக வருகிறது... ஏதோ இயலாமை போல தெரிகிறது... என் மனைவியை இழந்தபோதுகூட கொஞ்சம் தைரியம் மனதில் இருந்தது.. இப்போ தைரியமே இல்லாமல் உடல் சோர்ந்து விட்டதுபோல உணர்கிறேன்... மயக்கம் வருகிறது... அப்போது தோளிலே ஒரு கை .. ”என்ன ராகி மாமா.. திருமணத்தை எட்டிப் பார்த்து விட்டு உடனே வந்து விட்டீங்கள்.. அதுதான் உங்கள் பின்னாலேயே வந்தேன்... அது என் மாமாவின் மகள் என்னைப்போலவே இருப்பா என அடிக்கடி சொல்வேனே, அவவின் திருமணம்.. சிம்பிளாகச் செய்தார்கள்....” கோதை சொல்லச் சொல்ல எனக்கு ஏதோ சொர்க்கத்தில் இருப்பதைப்போல ஒரு உணர்வு.. ...ஞான பண்டிதா உன் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா?... பதில் சொல்ல முடியாமல் மெளனித்துப் பார்க்கிறேன்..


^^^^^^சுபம்_()_^^^^^^

நன்றி:

உங்களுக்காக இந்தப் படத்துக்கான கதையை, மிக அழகாக மிக அருமையாக மிக ரசனையாக [ஆவ்வ்வ்வ் கல்லைக் கீழே போடுங்கோ பிளீஸ்ஸ்:)]  ஜிந்திச்சு எழுதிய கதாசிரியர் அதிராமியாவ்:)._()_.  
  

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 “நினைப்பதை எல்லாம் நடத்தி முடிப்பவர் எவர்?
 நினைப்பவர்தான் நீங்கள், முடிப்பவர் அவரே[இறைவன்]”
 கண்ணதாசன் அங்கிளின் தத்துவத்தை உங்களுக்காகப் பெருமையோடு வழங்கியிருப்பவர்... புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

161 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அக்காஸ் அண்ணாஸ் தம்பிஸ் நட்பூஸ் எல்லோருக்கும்…
    நம்பிக்கை தரும் தும்பிக்கையானை தரிசனம் செய்துவிட்டு வரேன்….
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீத்ஸ்.. இதில தங்கை எனச் சொல்லேல்லை நீங்க.. நான் என்னைச் சொன்னேன்:)

      நீக்கு
  2. ஓ இன்று பூசாரின் கதையா....ம்ம்ம் வாசிக்க இப்ப நேரம் இருக்குமா தெரியலை கொஞ்சம் பார்த்துட்டு போறேன்...அப்பால வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் .....

    அதென்ன.. கீறல் விழுந்த இசைத் தட்டு மாதிரி...

    அனைவரும் வருக... வருக!....

    பதிலளிநீக்கு
  4. அப்பா!...
    கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது...

    இன்னும் இலையைப் போடக் காணோமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டிக்காடா பட்டணமா கிளைமேக்ஸ் நினைவுக்கு வரவில்லையா துரை ஸார்?!!

      நீக்கு
    2. அதெல்லாம் சொன்னால்
      பாவம் - அழுதுடுவாங்க!...

      நமக்கெதுக்கு ஊரு வம்பு!?

      கல்யாணத்துக்கு வந்தோமா....
      நல்லா சாப்பிட்டோமா...

      மொய் எழுதியாச்சுன்னா -
      தாம்பூலம் தர்றாங்களோ இல்லையோ
      நடையக் கட்ட வேண்டியது தான்!...

      (இதுக்கு மேல ஒரு கருத்து இருக்கு.. அதை மின்னஞ்சல்.. ல தர்றேன்..)

      நீக்கு
    3. //இன்னும் இலையைப் போடக் காணோமே!..//

      வாங்கோ துரை அண்ணன்... முதல்ல தம்பதிகளை வாழ்த்துங்கோ பின்புதான் இலை போடப்படும்:)

      நீக்கு
    4. ///
      ஸ்ரீராம்.11 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:11
      பட்டிக்காடா பட்டணமா கிளைமேக்ஸ் நினைவுக்கு வரவில்லையா துரை ஸார்?!!//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*45632786 :)... கதை படிச்சவுடன் எதுவுமே சொல்லாமல் விட்டுப்போட்டு இப்ப போய் இப்பூடிச் சொல்றாரே:).. நான் அந்தப் படம் பார்த்த நினைவில்லையே.. பாடல் மட்டும் கேட்டதுண்டு..

      ///(இதுக்கு மேல ஒரு கருத்து இருக்கு.. அதை மின்னஞ்சல்.. ல தர்றேன்..)////

      ஸ்ரீராம் அதை எனக்குப் ஃபோவேர்ட் பண்ணோனும் இல்லை எனில் இரவு முழுக்க நித்திரை கொள்ள விடாமல் நுளம்பு காதில சோக கீதம் இசைக்கும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதில ரகசியம் வேற:).

      நீக்கு
    5. ஆஹா...

      இப்போ என் நிலைமை என்ன ஆகும் தெரியுமா?

      "அடிச்சும் கேட்பாங்க.. அப்படியும் சொல்லாதே.."

      நீக்கு
    6. துரை செல்வராஜு சார் 'மெயில்' என்றதும் எனக்கு ஞாபகம் வருது. அவருக்கு பஹ்ரைனில் இருக்கும்போது ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். அதுக்கு பதில் போட்டமாதிரியே எனக்கு நினைவில்லை, அல்லது போட்ட பதில் எனக்குத் திருப்தி இல்லையோ? ஹாஹா

      நீக்கு
    7. அன்பின் நெ.த.,

      >>> பஹ்ரைனில் இருக்கும்போது ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். அதுக்கு பதில் போட்டமாதிரியே எனக்கு நினைவில்லை... <<<

      நான் அந்த மெயிலுக்குப் பதில் எழுதவே இல்லை...
      பொறுத்தருளவும்...

      அந்த மெயில் பெட்டியிலிருந்து அழிந்து போனது...
      தங்களுக்கு என்ன பதில் சொல்ல இயலாமல் இருந்து விட்டேன்...

      நீக்கு
    8. ஆஆஆஆஆஆஆ என் கதைக்குப் போட இருக்கும் மெயிலால நெல்லைத்தமிழனும் துரை அண்ணனும் அடிச்சுப் புரளீனம்:)) ஹையா ஜாலீஈஈஈஈ.. எப்படியாவது ஒரு நாரதர் கலகம் நடத்தினால்தான் நேக்கு நித்திரையே வரும்:))...

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம் உப்பூடிச் சொல்லித் தப்பப்பார்க்கிறீங்க:)).. நோஓஓஓஒ விட மாட்டேன்ன்ன்ன் அந்த மெயில் எனக்கு வந்தே ஆகோணும்:).
      துரை அண்ணன் .. மெயில் அனுப்பியபின் இங்கு வந்து டொல்லுங்கோ அனுப்பிட்டேன் ஸ்ரீராமுக்கு என:))

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம்.

    நல்ல கதை. பாராட்டுகள் அதிரா.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா கோதை ராகியுடன் சேர்ந்து வாழோணூம்!!! நு தோணிச்சு...

    கதை வாசித்ததும்....ஆஹா நாம் இதே படத்துக்கு யோசித்து முந்தைய கதை சோகமாகப் போச்சே இனி ஒரு நல்ல ஹேப்பி கதை கொடுக்கலாம்னு பாதி எழுதிய நிலையில் உங்கள் கதை....என்ன செய்யலாம்னு இப்ப யோசனை...ஸ்ரீராமிடம் சொல்லணும்!!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

    விரிவான கருத்திற்கு வரேன் மதியம் மேல். ரொம்ப நல்லாருக்கு அதிரா மிகவும் ரசித்தேன் ரசித்த்த்த்த்த் தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஆரம்பம் கதையின் முடிவை கோதைக்கு திருமணம் இன்னொருவரோடு முடிந்ததுபோல முடிச்சேன்.. அம்முடிவைத்தான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள் என ஸ்ரீராம் சொன்னார் அதனால டுவிஸ்ட்:) வச்சு .. முடிவை ஹப்பியாக மாத்திட்டேன்.

      எழுதத் தொடங்கியாச்செனில் முடிச்சிடுங்கோ கீதா.

      நீக்கு
    2. இதே கரு....அதான் யோசனையா இருக்கு...பார்ப்போம்....அதிரா...

      கீதா

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அப்போ முடிவை மாத்தி ஓசியுங்கோ:))

      நீக்கு
  7. ஸ்ரீராம் நான் எழுதி பாதியில் வைத்திருக்கும் கதையையும் முடித்து அனுப்பலாமா??!!!! ஆனா முடிக்கறது எப்போனுதான் தெரியலை ஹிஹிஹிஹி..இதனாலேயே பானுக்காவின் நம்ம ஏரியா சு டு கு கதையை வாசிக்காமலேயே இருந்தேன் இருக்கேன்....ஏங்கேனும் வாசித்து அந்த இம்பாக்ட் வந்துவிடுமோ என்று....காப்பி ஆகிவிடக் கூடாதே என்ற பயம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    இன்று சகோதரி அதிர்வின் கதையென்று நேற்று இரவு பின்னூட்டங்களை படித்துக் கொண்டிருக்கும் போது ஊகித்து ஒரு கருத்துட்டு விட்டேன். கொஞ்ச நேரத்தில் கதை படித்து ரசித்த பின் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வாங்கோ.. ஓ நேற்று நீங்களும் ஊகித்து விட்டீங்களோ ஹா ஹா ஹா.. இக்கதை போன கிழமை வெளிவர இருந்தது.. ஆனா போன கிழமை நாம் ஊரிலேயே இருக்கவில்லை.. அதனால இக்கிழமைக்கு மாத்தச் சொன்னேன்.. இக்கிழமையும் என்னால ஒழுங்காக எங்கும் வர முடியவில்லை, இருப்பினும் தொடர்ந்து மாற்றச் சொல்லக்கூடாது என களம் குதிச்சேன்ன்.. இக்கதை இன்று வந்திருக்காவிடில் அடுத்த கிழமைதான் நான் தோன்றியிருப்பேனாக்கும் ஹா ஹா ஹா:)..

      கதையை மெதுவா படியுங்கோ.. மிக்க நன்றி.

      நீக்கு
  9. இறுதியில் ஒரு ட்விஸ்ட் கொடுத்து
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வாங்கோ ஆவ்வ்வ்வ் அது டுவிஸ்ட் தான் என ஒத்துக் கொண்டிட்டீங்க... ஸ்ரீராம் ஓடி வாங்கோ நோட் திஸ் பொயிண்ட்.. ஹா ஹா ஹா. மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது. எண்ணங்களினால் கதையை தொடுத்தெடுத்து, இறுதியில் அருமையான செண்டை உடன் சேர்த்து அழகாக கட்டிய மலர் மாலையாக ஆக்கி விட்டீர்கள். சூப்பர். வாழ்த்துக்கள். கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. முடிவு எதிர்பாராத திருப்பம். பாராட்டுகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. புது விதமாகக் கதை புனைந்திருக்கும் அதிராவுக்கு வாழ்த்துகள்.
    நன்றாக வாழட்டும் கோதையும் ராகியும்.

    இனி எல்லாம் நலமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வல்லிம்மா... ஆவ்வ்வ் புதுவிதமா.. மிக்க நன்றி மிக்க நன்றி... படம் பார்த்த அடுத்த செக்கன் மனதில கதை விரிஞ்சது.. எழுத்தத்தான் தாமதம்.. பின்பு வெளிவரத் தாமதம்...

      ஆனா பாருங்கோ படக்கதை எனச் சிரிராம்:) ஜொள்றார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா கோபத்தைப் பெயரிலதான் காட்ட முடியுமாக்கும்:)) இஸ்கி இஸ்கி:))

      நீக்கு
    2. உண்மையாகவே அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ஆதிரா.
      அன்புத் துணை கிடைப்பது அபூர்வம்.
      கோர்வையான சம்பவங்களை அழகாக இணைத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
      எனக்கும் இந்த சீனாக்காரங்களைப் பார்க்கையில் எல்லோரும் ஒரே முகமாகத்தோன்றும்.
      உங்கள் கதையிலும் கசின்ஸ் அதுபோல் அமைந்திருக்கின்றனர்.
      நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் ஸாரி மா.

      நீக்கு
    3. அச்சச்சோ நீங்க எங்கே வல்லிம்மா தப்பா சொல்லியிருக்கிறீங்க.. எல்லாம் மகிழ்வாத்தான் இருக்கெனக்கு.. மிக்க நன்றி.

      நீக்கு
  13. அதிரா, அருமையான கதையை கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.
    நல்ல திருப்பம் முடிவில்.
    வாழ்த்துக்கள் அதிரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மியாவும் நன்றி கோமதி அக்கா... நானும் இப்போ டுவிஸ்ட்:) வைக்கப் பழகிட்டேன்ன்.. எல்லாம் ஸ்ரீராம் குடுத்த ரெயினிங்தான்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
  14. ஸ்ரீராம் பாலும் பழமும் க்ளைமாக்ஸும் இப்படித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா... நீங்க சொல்றதைப் பார்த்தால் பழைய படங்களைப் பார்த்து, அதைத் தட்டிக் கொட்டி சிலர் கதை எழுதறாங்கன்னு சொல்றீங்களா? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //revathi narasimhan11 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:54
      ஸ்ரீராம் பாலும் பழமும் க்ளைமாக்ஸும் இப்படித்தான் இருக்கும்.///

      ஹையோ யூ 2222222222222 வல்லிம்மா:)) பாஅலும் பழமும் நான் படம் பார்த்திருகிறேன் அது வேற.. அது பிரிந்த காஅதலர்கள் ஒன்று சேர்வதெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்.. என்னை ஆரும் தடுக்காதீங்கோஓஓஓஓஓஓஓஓஓ:))

      நீக்கு
    3. ///நெல்லைத் தமிழன்11 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:24
      வல்லிம்மா... நீங்க சொல்றதைப் பார்த்தால் பழைய படங்களைப் பார்த்து, அதைத் தட்டிக் கொட்டி சிலர் கதை எழுதறாங்கன்னு சொல்றீங்களா? ஹா ஹா ஹா///

      வாங்கோ நெல்லைத்தமிழன் புரொபிசரே வாங்கோ... எப்படா இப்பூடி ஒரு சந்தர்ப்பம் அமையும் காலை வாரலாம் எனக் காத்திருந்து ஓடி வந்ததுபோல இருக்கே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா ஒரு ஆப்பி:)) இதைப்பார்த்திட்டு.. குல்ட் ஐத் தூக்கி எறிஞ்சிட்டு இன்னொராள் ஓடி வருவா பாருங்கோ:)) உங்களுக்கு தோல்:) குடுக்க:)) ஹையோ ஹையோ:)).. இருந்த மாதிரியே பேசாமல் இருந்திருக்கலமோ நாம:)) இருப்பினும் பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா ...

      பிக்பொஸ் ஐஸ்வர்யா மாதிரி அழுது குளறிப்போட்டு மாட்டென் வீட்டுக்குப் போறேன் என்றிட்டு அடுத்த செக்கண்ட்டெ எழும்பி நிண்டு.. நான் ரெடீஈஈஈஈஈஈ ஃபைனலுக்குப் போராடப்போறேன்ன்:)) எனச் சொல்றது.. ஹா ஹா ஹா ஆசை ஆரை விட்டது?:))..
      நோ வெயிக்கம் நோ ரோசம் ஆக்கும் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    4. எனக்கு சமீபத்திய ஆசை :) நம்ம நெல்லைத்தமிழனை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பலாம்ன்னு யார் யாரெல்லாம் நாமினேட் பண்ணறீங்க :)

      நீக்கு
    5. நான் மொத்தம் 4 எபிசோட் (2 மாதத்துல), அதுவும் மறு ஒளிபரப்புல அரைகுறையாப் பார்த்தேன் (எனக்குப் பிடிக்கலை. இது என்ன... அடுத்த வீட்டை எட்டிப் பார்ப்பதுபோல நிகழ்ச்சி). ஏன்னா, 8.45 எனக்கு தூங்கும் சமயம். தொலைக்காட்சி பெரும்பாலும் பார்க்கமாட்டேன், பார்த்தால், மினிட் டு வின்?, America's talents, Briton talents, Voice இந்த மாதிரி நிகழ்ச்சிகள்தான் பார்ப்பேன். நிச்சயம் தூங்கப்போவதற்கு 2 மணி நேரம் முன்னால் தொலைக்காட்சி பக்கத்திலேயே இருக்கமாட்டேன் (அதுனால Voice etc. நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்புலதான் பார்ப்பேன். அதுனால எனக்கும் பிக் (இதுக்கு எப்படி ஆங்கிலத்தில் எழுதினாலும் சரியாத்தான் இருக்கும்) பாஸுக்கும் ரொம்பத் தூரம்.

      உங்களுக்காக ஒரு செய்தி. முதல் முதல்ல இந்த பிக் பாஸை பார்த்தபோது (காலைல 9 மணிக்கு, அப்போ என் மகள் ஆபீஸ் செல்லும் நேரம்) அவங்கள்ல சிலர் போட்டிருந்த டிரெஸ் எனக்கு ஒரு மாதிரித்தான் இருந்தது. இதுபோல Bachelors Paradise (?) சீரியலை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தபோது, என் மகள் இது குப்பை, பார்க்காதீங்கன்னுட்டா. ஹாஹா.

      நீக்கு
    6. உண்மைதான் நெல்லைத்தமிழன் ..உண்மையில் குப்பை நிகழ்ச்சிதான் பிக் பாஸ் ஆனாலும் இந்த கியூரியாசிட்டி விட மாட்டேங்குதே :) விகடனில் சுரேஷ் கண்ணனின் ரிவ்யூ படிச்சி அங்கே ட்விட்டர் கமெண்ட்ஸ் லாம் படிச்சே நான் தொடர்கிறேன் .
      ஹா ஹா உண்மைதான் என் பொண்ணு ஒரு நாள் ஐஸ்வய்ரா அழுகை ப்ரோமோ காதில் கேட்டுட்டு //why are யு வாட்சிங் திஸ் crap னு கேட்டா .அப்புறம் சொன்னேன் இது பிக் பிரதர் மாதிரின்னு .அதுக்கு சொன்நா லவ் ஐலண்ட் னு ஒன்னு இருக்கும் அதும் குப்பை ப்ரொக்ராம்ன்னு அநேகமா பிக் பாஸ் லவ் ஐலண்ட் பிக் பிரதர் இரண்டும் சேர்த்த கலவையின்னு தோண்றது .
      சாவியின் பேத்தி வைஷுவை ரொம்ப கேவலப்படுத்தினது சுத்தமா பிடிக்கல .

      நீக்கு
    7. என்ன வேடிக்கை பாருங்க நம் பிள்ளைங்களுக்கு /இக்கால குழந்தைங்களுக்கு கூட நல்லது கேட்டது தெரியுது :) நாம் தான் கியூரியாசிட்டில பார்த்துdarom

      நீக்கு
    8. வாங்கோ அஞ்சு வாங்கோ... யேச்ச்ச்ச்ச்ச் நெ தமிழனை அனுப்புவோம்ம் அத்தோடு வெளியே வர விட்டிடாமல் தொடர்ந்து வோட் பண்ணி உள்ளேயே வச்சிருப்போம்ம்ம்ம்:)...

      100 நாட்கள்.... 64 கமெராக்கள் வாவ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா நெ தமிழன் ஓடுறார்ர்ர்ர்ர்ர் :)

      நீக்கு
    9. போனமுறை கொஞ்சம் நீதி ஞாயம் இருந்துது, இம்முறை படு குப்பை... பார்க்கும்போதெல்லாம் பிபி ஹைக்குப் போயிடுது:)... பாலாஜிக்கு குப்பை கொட்டிய அன்று நான் நித்திரையே கொள்ளவில்லை தெரியுமோ... இப்படியும் ஒரு பெண்ணோ என நினைச்சு:)

      நீக்கு
    10. ஏஞ்சல் நான் முத ஆளா கை தூக்கியிருப்பேன் நாமினேட் பண்ணி நெல்லையை பிக் பாஸ் வீட்டுக்குள்ள அனுப்ப..ஹிஹிஹி இப்பத்தான் பார்த்தேன் உங்க கருத்தை சே லேட்டாகிப் போச்சே....நான் பார்ப்பதே இல்லை பிக் பாஸ்....ஆனால் இப்படியான செய்திகள் வழி அறிவதுதான்....

      அதிரா மற்றொன்று எப்போதுமே ஒரு நிகழ்ச்சி முதலில் ஆரம்பிக்கும் போதுதான் நன்ராக ஸ்வாரஸ்யமாக இருக்கும் எல்லோருக்கும் புதுசா இருக்கே என்று தோன்றவும் செய்யும் அப்புறம் போகப் போகப் புளிக்கும் அதில் வித்தியாசங்கள் கொண்டுவரவில்லை என்றால்....நிகழ்ச்சிகளும் மாறிக் கொண்டே வித்தியாசமான சிந்தனைகளுடன் வந்தால்தான் நல்லாருக்கும். இப்ப பாருங்க சூப்பர் சிங்கர் எல்லா சானலும் தொடங்கி சீ சீ இந்தப் பழம் புளிக்கும்னு ஆகிப் போச்சு...

      கீதா

      நீக்கு
  15. //வயதான காலத்தில் துணை என்பது, ஒரு மன ஆறுதலுக்காக, பேச்சுத் துணைக்காக.. என்னதான் பிள்ளைகள், சகோதரங்கள் என இருந்தாலும், தன் துணையோடு உரிமை எடுத்துப் பேசுவதைப்போல வருமோ? ஒரு துக்கமோ சந்தோஷமோ... அப்ப அப்ப பகிர்ந்து கொள்ள , சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படும். தன் துணை தவிர வேறு யாரும் நம்மோடு 24 மணி நேரமும் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை.. அவரவருக்கும் குடும்பம் இருக்கிறது.//


    எங்கள் மாயவரத்து நண்பர் ஒருவர் கதைக்கு நினைவுக்கு வருது.
    மனைவி மறைந்த பின் குழந்தைகளுக்கு என்று வாழ்ந்தவர்
    தன் குழந்தைகள் திருமணம் ஆகி வெளிநாடு போன பின் தனக்கு என்று தன் வயதுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தேடிக் கொண்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பொறுத்து குடும்பத்தைக் குழந்தைகளை நடு வழியில விட்டுப் போட்டு தன் சுகம் தேடிப்போவோர் எனில்தான் தப்பு என்பேன்ன்.. இப்படி தன் கடமைகளில் இருந்து தவறாமலும், கள்ளமான வாழ்வு தேடாமலும்.., இப்படி நேர்மையாக நல்லபடி வாழ்க்கை அமைத்து வாழ்வதில் எந்தத் தப்பும் இல்லை. மிக்க நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. அவருக்கு 65, அந்த அம்மாவுக்கு 55 வயதில் திருமணம். அந்த அம்மா தான் குடும்பத்தில் மூத்தவர்.தன் அப்பா காலமான பின் தம்பி, தங்கைகளை படிக்க வைத்த பின் தன் திருமணம் பற்றி யோசித்து தனக்கு ஒரு துணை வேண்டும் என்று திருமணம் செய்தவர். இப்போது அந்த அம்மாவின் குடும்பமே அவரின் குழந்தைகளுக்கு உதவியாக அன்பாக நடந்து கொள்கிறார்கள். கணவரின் இரண்டு குழந்தைகளும் அம்மா என்று அழைத்து பாசமாய் இருக்கிறார்கள்.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது போல் நேர்மையான நல்லபடியான வாழ்க்கை.

      நீக்கு
  16. //“நினைப்பதை எல்லாம் நடத்தி முடிப்பவர் எவர்?
    நினைப்பவர்தான் நீங்கள், முடிப்பவர் அவரே[இறைவன்]”//

    தத்துவ பகிர்வு உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அது மிகப் பிடிச்ச வரி கோமதி அக்கா.. அதுதானே விதி:).

      நீக்கு
  17. நிறைவு பகுதியை படிக்கும் போது ஏமாற்றம், அப்புறம் மகிழ்ச்சி எல்லாம் கொடுத்தது.
    நன்றாக எழுத வருகிறது.

    //“கதவைத் தட்டாத காரணத்தால், எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப் பட்டிருக்கின்றன”.. சரிதானே.. வாழ்வில் சந்தர்ப்பம் என்பது நெடுகவும் வராதுதானே...//

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.. இதை சில விசயங்களில் நாம் எல்லோரும் உணர்ந்திருப்போம். ஒரு பொருள் வாங்குவதில்க்கூட.. நிறைய இருக்கே யோசித்து விட்டு நாளைக்கு வாங்கலாம் எனத் திரும்பிப் போனால் அங்கு முடிஞ்சிருக்கும்.

      நீக்கு
  18. நல்லதொரு கதை முடிவில் நல்ல திருப்பம் வாழ்த்துகள் அதிரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ கில்லர்ஜி.. ஆஆஆஆ இப்படியான கதைகளை எதிர்க்கும் கில்லர்ஜியே.. கதை நல்லது என்றிட்டார்ர் மிக்க நன்றி ...

      நீக்கு
    2. நான் இதை எதிப்பவனே அல்ல!

      ஆண்-பெண் இருபாலருக்குமே வாழ்க்கைத்துணை மிக அவசியம்.

      நானே மூன்று நபர்களின் மறுமணத்துக்கு காரணமாகி இருக்கிறேன்.

      நீக்கு
    3. ஓ .. நீங்கள் பலரைத் திட்டுவதைப் பார்த்து எதிர்க்கருத்துடையவர் என நினைச்சிட்டேன் உங்களை.. வாழ்த்துக்களோடு நன்றி.

      நீக்கு
  19. கதை வித்தியாசமாக இருந்தது. கடைசி பத்தி பாத்திரம் நாடகத்தனமாய் இருந்தது. பாராட்டுகள் அதிரா. எழுத்தை டிசக்‌ஷன் செய்ய பிறகு வருகிறேன். தயாரா இருங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ நெல்லைத்தமிழன்...

      //கடைசி பத்தி பாத்திரம் நாடகத்தனமாய் இருந்தது.//

      ஹா ஹா ஹா அந்த ஒரே மாதிரி ஆள் என்பதைத்தானே சொல்றீங்க.. அதை ஸ்ரீராமும் சொன்னார்ர்.. ஆனா உறவுக்குள் அப்படிப் பலர் இருக்கினமே... நானும் என் ஒரு மச்சாளும் அப்படித்தான் இருப்போம்ம்.. நிறையப்பேர் கேட்டதுண்டு இரட்டையர்களோ என..

      அப்படித்தான் நான் அடிக்கடி சொல்லும் என் ஸ்கூல் தோழி.. இப்போ இங்கிருக்கிறா.. அவவும் நானும் எப்பவும் ஒட்டியபடி ஒரேபோல உடுப்புப் போட்டுப் போவதைப் பார்த்து, எங்கள் பிஸிக்ஸ் ரீச்சரே கேட்டா. நீங்கள் டுவின்ஸ் ஆ என, உருவத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்போம் கலரிலதான் வித்தியாசம் கொஞ்சம்..... அப்படி நினைச்சே டுவிஸ்ட்:).. [ஹையொ உங்களால இந்த டுவிஸ்ட் என எழுத நான் படும் பாடிருக்கே:) ஹா ஹா ஹா ] வச்சேன்:))

      நீக்கு
    2. //எழுத்தை டிசக்‌ஷன் செய்ய பிறகு வருகிறேன். தயாரா இருங்க///

      ட்றம்ப் அங்கிளோடு அவசர மீட்டிங் ஒன்றுக்காக அந்தாட்டிக்கா புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்ன் திரும்பி வர ஒரு கிழமையாகும்:)).. அப்பாடா அதுக்குள் அவரே மறந்திடுவார்ர்ர்:))

      https://i.ytimg.com/vi/-i5JZXjdf6c/hqdefault.jpg

      நீக்கு
    3. ஹலோவ் மியாவ் இப்போதைய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி பேட்டா ,குடியா லேடியும் அவங்க அண்ணன் மகளும் கூட சொல்லலாமே :) மே மே மே :))
      இதுக்கெதுக்கு 50 வருஷத்துக்கு முந்தி நீங்க உங்க கதையை இப்போ சொல்றீங்க

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இங்கேயும் பிக்கு பொஸ்சா?:)... நீங்க அதில ஊறிட்டீங்க:) என்னாலதான் என நினைக்கிறேன்ன்:)....

      நீக்கு
  20. அனைவருக்கும் காலை வணக்கம். பூசாரின் கதையா? வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. அதிராமியாவ் அவர்களின் திருவிளையாடல்களில் கதையும் அருமை...!

    பதிலளிநீக்கு
  22. கதை அருமை அதிரா... முடிவுவில்...என்ன என ஆவலாய் வருகையில் திருப்பம் சூப்பர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ உமையாள்.. ஆஅவ்வ்வ்வ் என் டுவிஸ்ட்டால நிறையப்பேர் பதறிப்போயிட்டினம்போல ஹா ஹா ஹா.. இப்போதான் நான் ஒரு முழுமையான கதாசிரியர்:) என்பதை[இருங்கோ கொஞ்சம் சிரிச்சுப்போட்டு தொடர்கிறேன்ன்.. அடக்க முடியவில்லை:)] முழுமையாக உணர்கிறேன்ன்:)).. மிக்க நன்றி.

      ஹையோ இதை நெல்லைத்தமிழன் பார்த்திடக்கூடாது ஜாமி:).

      நீக்கு
    2. படிச்சேன் படிச்சேன். கதை எழுதிய கையோடு, 'ஞானி' டைட்டிலை விட்டுவிட்டு, 'பிரபல நாவலாசிரியர்/எழுத்தாளர் அதிரா' என்ற டைட்டிலோடு வந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.க்கும்.க்கும்.

      நீக்கு
    3. ஆவ்வ்வ்வ்வ் இந்த ஐடியா வராமல் போயிட்டே:) அது கொஞ்சம் உடல் நலமில்லை எனக்கு அத்தோடு நேரமும் போதவில்லை:) அதனால இப்போ எதையும் ஜிந்திக்க:) முடியாமல் போச்ச்ச்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  23. நம் கண்ணுக்கு அருகில் இருக்கின்ற ஒன்று கால சூழலால் தூரமாகிப் போகும்போது கிடைக்கும் சோகம் அளவிடற்கரியது. சில நிகழ்வுகளில் நாம் தாமதிக்கும் முடிவுகள் நம்மை இன்னும் சோதிக்க வைத்துவிடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வாங்கோ.. அழகாகச் சொல்லிட்டீங்க.. நிழலின் அருமை வெயிலின் போதுதான் தெரியவரும்.. மிக்க நன்றி.

      நீக்கு
  24. ஆஆஆஆவ்வ்வ்வ் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்... ஆஆஆஆஆஆஆ என்னது ஒருத்தருமே கவனிக்க மாட்டினமாம்ம்:).. சரி சரி இதொன்றும் புதிசில்லையே எனக்கு:)).. வந்த வேலையைக் கவனிப்போம் ஹா ஹா ஹா..

    “தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கெண்ணுமாம்”.. ஹா ஹா ஹா அதனாலேயே ஏழியா ஓடி வந்தேன்... பின்ன நமக்கு எவ்ளோ வேலை எனினும், நமக்காக நேரம் ஒதுக்கிக் கொமெண்ட் போடுவோரைக் கவனிக்க வேணுமெல்லோ..

    இக்கதைக்கு நான் முதலில் எடுத்த முடிவு வேறு.. அது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை:) அதனாலயே முடிவை மாத்தி இப்பூடி டுவிஸ்ட்:) வச்சேன்... ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதையைப் பொருத்த வரையில், திருமணம் செய்யாமல் இருந்தாலும் கதை சரியாகத்தான் இருந்திருக்கும். என்ன.. அதுக்கேற்றபடி லாஜிக் கொண்டுவந்திருந்தால் போதும்.

      எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவி மறைந்தாலும், அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். நான் அவரிடம் தகுந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கைக்காக என்றேன். பசங்கள்லாம் இன்னும் சில வருடங்களில் வெவேறு ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள். தனிமையாக இருக்கணும் என்பதால். என்னவோ அவர் சங்கடப் பட்டுக்கொண்டு திருமணம் செய்துகொள்ளவில்லை.

      என் கிராமத்தில் இருந்த ஒருவர், அவருக்கு நன்கு வளர்ந்த பிள்ளைகள் இருந்தபோதும் 50 வயதில், தன் குழந்தைகளின் அறிவுரைக்கு எதிராக மணம் முடித்துக்கொண்டார். அவருடைய விதி வசத்தில் அவருக்கு 4 குழந்தைகளும் பிறந்தன. முதல் தாரத்து பசங்கள்லாம் நன்றாக இருந்தபோதும் இவர் கொஞ்சம் கஷ்டப்பட்டார். இவர் இறந்தபோது இரண்டாம் தாரத்துக் குழந்தைகள் ஒருவருக்கும் வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் விதி வசம்தான்.

      நீக்கு
    2. //இந்தக் கதையைப் பொருத்த வரையில், திருமணம் செய்யாமல் இருந்தாலும் கதை சரியாகத்தான் இருந்திருக்கும். //

      ஆனா படிப்போருக்கு ஒரு டுவிஸ்ட் இருக்காதெல்லோ:)) ஒரு சுவாரஷ்யம் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு..

      சிலருக்கு மனமிருந்தாலும் சரியான சந்தர்ப்பம் அமைவதில்லை.. சிலருக்கு அமைந்தாலும் ஊருக்கு உலகுக்கு பயந்து ஒதுங்கி விடுவார்கள்... ஆனா என்னைப்பொறுத்து, குழந்தைகள் இருக்கும்போது இன்னொரு திருமணம் எனில்.. அது புதுப்பெண்ணை நாடுவது தப்பு, தன்னைப்போல குழந்தையோடு இருக்கும் ஒரு பெண்ணை மணந்தால், இனிக் குழந்தைகள் வேண்டாம் என வாழ்ந்தால் அது நன்றாக இருக்கும்... ஆனா எதுவும் அவரவர் கையில் இருக்காது.. அமையும் சந்தர்ப்பத்தைப் பொறுத்ததே.. யேஸ்.. விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது....

      நீக்கு
    3. ஆஹா !! போன வாரம் புதன் கேள்விக்கு (லிவிங் டுகெதர் )நெல்லைத்தமிழன் சப்போர்ட் போலிருக்கே :)

      நீக்கு
    4. என்னாது... லிவிங் டுகேதரா? இதுக்கு அந்தப் பேரா? அது, திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் சின்னவங்களுக்குத்தானே.

      நீக்கு
    5. ஹையோ அது குழம்பிட்டேன் //திருமணம் செய்யாமல் இருந்தாலும் கதை சரியாகத்தான் இருந்திருக்கும்.//
      இப்போல்லாம் மைண்ட் ஒன்னு திருமணம் இல்லின்னா லிவ் இந்த ரிலேஷன்ஷிப் இது ரெண்டு மட்டுமே ஃபோகஸ்ட்டா காட்டுது :)

      நீக்கு
    6. @ நெல்லைத்தமிழன்

      //முதல் தாரத்து பசங்கள்லாம் நன்றாக இருந்தபோதும் இவர் கொஞ்சம் கஷ்டப்பட்டார். இவர் இறந்தபோது இரண்டாம் தாரத்துக் குழந்தைகள் ஒருவருக்கும் வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் விதி வசம்தான்.//
      நம்மூர் நாட்டை பொறுத்தவரையில் பொருளாதாரம் பணம் முக்கிய காரணம் .வெளிநாட்டில் இப்படி பிரச்சினை வராது வந்தாலும் அரசாங்க உதவி கிடைக்கும் .
      நீங்க சொன்ன நபர் திருமணம் செய்ததில் தவறில்லை கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுத்திருக்கலாம் அல்லது இரண்டாம் மனைவிக்கு பிற்காலத்துக்கு சொந்தக்காலில் நிற்க வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம் .இங்கெல்லாம் my children and your children are playing with our children என்பது மிக சாதாரணம் .நம் நாட்டில் வர எத்தனை காலமாகுமோ அதற்கு முதலில் பொருளாதாரத்தில் கல்வியறிவில் அனைவரும் சமமானால் சாத்தியமுண்டு

      நீக்கு
    7. கரீட்டு அஞ்:) நம் நாடுகளில் கவன்மெண்ட் உதவி போதாமையினாலேயே நிறையப் பிரச்சனைகள்... மேற்கத்தைய நாடுகளில் அரசாங்கம் போதிய உதவி செய்வதனால் கொஞ்சம் நிம்மதியான.. பிடித்த வாழ்க்கையில் மக்கள் இருக்கின்றனர்.

      நீக்கு
    8. ஏஞ்சல் உ ங்கள் இந்தக் கருத்தைக் (நெல்லைக்கு) கொஞ்சம் பார்த்துட்டு அப்பால போயிட்டேன்...ஸோ பதில் சொல்லலை. ஃபுல்லும் வாசிக்கலை... ரீஸன் ரீஸன்...சரி வேண்டாம் இப்ப....

      கும்மி அடிக்கவும் முடியலை ஏஞ்சல்...அதிரா...வேற யாரு பதிவுகள் வெயிட்டிங்க்னு பார்க்கணும்...மீ ஓடிங்க்

      கீதா

      நீக்கு
    9. கீதா நான் இன்னும் பிளாக் அப்டேட்ஸ் செய்யலை :) இன்னும் பிஸிதான் இன்னிக்கு உடம்பு சரியில்லை அதான் வீட்ல முழு நாளும் இருக்கேன் .விரைவில் பதிவுகள் ரிலீஸ் ஆகும்

      நீக்கு
  25. //ஆவ்வ்வ்வ் கல்லைக் கீழே போடுங்கோ பிளீஸ்ஸ்:)] // - நீங்க சொன்னதைப் படித்தப்பறம் கையில் இருந்த கல்லைக் கீழே போட்டேன். அவசரத்தில் அது என் காலிலேயே விழுந்துவிட்டது.

    கதையில் தத்துவம்லாம் நல்லாத்தான் இருக்கு. கதையும் சினிமா பாணியில் முடித்திருக்கீங்க. கம்பானியன்ஷிப் வேண்டியதுதான். ஆனால் என்றைக்கு இருந்தாலும் அவரவர் ஸ்டேஷன் வந்தால் அவரவர் இறங்கித்தானே ஆகவேண்டும். அதற்கு அப்புறம் தனித்து விடப்பட்டவரின் கதி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்க சொன்னதைப் படித்தப்பறம் கையில் இருந்த கல்லைக் கீழே போட்டேன். அவசரத்தில் அது என் காலிலேயே விழுந்துவிட்டது.///

      ஹா ஹா ஹா .. வெற்றி வெற்றீஈஈஈ.. இதுவும் ஒரு திருவிளையாடல்தான்:)).

      //ஆனால் என்றைக்கு இருந்தாலும் அவரவர் ஸ்டேஷன் வந்தால் அவரவர் இறங்கித்தானே ஆகவேண்டும். அதற்கு அப்புறம் தனித்து விடப்பட்டவரின் கதி?///

      இது நிலவுக்குப் பயந்து பரதேசம் போனகதையாவெல்லோ இருக்கு:)).. வெள்ளையர்களைப்பார்த்தால்.. 80 வயதிலும் தமக்கென ஒரு துணை தேடுகிறார்கள்.. இவர்கள் மரணத்தைப் பற்றி நினைப்பதில்லைப்போலும்.. மகிழ்ச்சியாக இருந்தால் மரணம்கூடத் தள்ளிப்போகும் என எண்ணுகிறார்களோ என்னவோ ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  26. நானும் தனிமையில் வாழும் பலரைப் பார்த்திருக்கிறேன். அதற்கு, சரியான துணையொன்றைத் தேடி அவர்களோடு சேர்ந்து வாழ்வது நல்லதுதான். கதையின் கரு நன்றாக அமைந்திருக்கிறது.

    இருக்கற பசங்களுக்கே பெண்ணைக் காணோம். இதில் வயதானவர்களுக்கு எப்படி பெண் தேடுவது? ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இருக்கற பசங்களுக்கே பெண்ணைக் காணோம்///

      ஹா ஹா ஹா இப்போ புரியுதோ பெண்களின் அருமை:))..

      அரிது அரிது
      மானிடராய்ப் பிறத்தல் அரிதூஊஊஊஊஊஉ
      அதனினும் அரிதூஊஊஊஊஊ
      பெண்ணாய்ப் பிறத்தல் அரிதூஊஊஊஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா மீ எஸ்கேப்பூஊஊஊஊஊஊஊ:))

      நீக்கு
    2. //அதனினும் அரிதூஊஊஊஊஊ
      பெண்ணாய்ப் பிறத்தல் அரிதூஊஊஊஊஊஊஊ:))// - என்ன காரணம்னா, அதுக்கு ஆண்களின் அனுமதி வேண்டும் என்பதால். ஹாஹாஹா

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இனி வருங்காலத்தில் அதுவும் தேவைப்படாதாம்... உங்களுக்கு தெரியுமோ சேவல் இன்றி வருடம் முழுக்க முட்டையிடும் கோழிகள் இங்கு கிடைக்கின்றன... இது பTறி என் பக்கத்தில் படத்தோடு போஸ்ட் போட்டிருக்கிறேன்:)

      நீக்கு
  27. மீண்டும் ஒரு வித்தியாச கதை அதிரா

    ரொம்ப நல்லா இருந்தது...

    பதிலளிநீக்கு
  28. அதிரா கதை நன்றாக இருக்கிறது. வளவளவென்றில்லாமல் மணிரத்தினத்தின் படம் போல நிகழ்வுகள் டக்கு டக்கென்று மாறுகின்றன. கதையில் ட்விஸ்ட் வேண்டியதுதான், அதற்காக நம் ஊர் ஆட்டோக்காரர் மாதிரி இவ்வளவு ட்விஸ்ட்டா? கழுத்து சுளுக்கிக் கொண்டுவிட்டது. காம்பிஃபிளோம் மாத்திரைக்கும், அயோடெக்ஸ் வாங்கவும் பேடிஎம் பண்ணுங்க. ஹா! ஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஅ சுஹாசினி அன்ரி அடிக்க வரப்போறாவே ஹா ஹா ஹா:).

      //அதற்காக நம் ஊர் ஆட்டோக்காரர் மாதிரி இவ்வளவு ட்விஸ்ட்டா?//

      ஹா ஹா ஹா நான் எள் எண்டால் எண்ணெயுடன் நிற்பேனாக்கும்:))..

      //காம்பிஃபிளோம் மாத்திரைக்கும், அயோடெக்ஸ் வாங்கவும் பேடிஎம் பண்ணுங்க. ஹா! ஹா!///
      என்னை வச்சே உங்கட வருத்தங்களுக்கெல்லாம் குளிசை வாங்கும் ஐடியாப் போல இருக்கே:)) எதுக்கும் ஒருக்கால் தேம்ஸ்கரைக்கு வரவும்:).. பானுமதி அக்காவின் கழுத்தை செக் பண்ணத்தான்:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  29. அது சரி ஒரு விஷயம் சொல்லிவிட்டு போங்கள், கதையில் ட்விஸ்ட் வைத்து எழுதுவதை என்னிடம்தானே கற்றுக்கொண்டீர்கள்? இப்போ நான் அப்படி என்ன ஜோக் அடித்து விட்டேன் என்று அடக்க முடியாமல் சிரிக்கிறீர்கள்? தன்னுடைய பதிவை படித்து விட்டு சக பதிவர்கள் ராகு காலம் பார்ப்பதில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று சிலர் நம்பும் பொழுது, என்னுடைய பதிவை படித்து விட்டுத்தான் நீங்கள் கதை எழுத கற்றுக் கொண்டீர்கள் என்று நான் நம்பக் கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஜோக் ஆகவே இருக்கட்டும் பானு அக்கா.. சுருக்கமாக கதை சொல்லும் திறமையை ரிஷபன் ஸாருக்கு அடுத்து உங்களிடம்தான் கற்க வேண்டும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், நான் கால்களை தரையில் நன்றாக ஊன்றிக் கொண்டு நிற்கிறேன். நான் ஒரு கத்துக்குட்டி, அவர் ஒரு ஜாம்பவான். யாரோடு யாரை ஓப்பிடுகிறீர்கள்?

      நீக்கு
    3. இது ஒப்பீடு இல்லை அக்கா. சுருக்கமாக எழுதும் கலை பற்றிய கருத்து.

      நீக்கு
    4. ஸ்ரீராம் உங்க கருத்தை அப்படியே கன்னா பின்னானு ஆமோதிக்கிறேன்....நான் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று....ஆனால் எனக்கு ஒரு சில கதைகள் தவிர மற்றவை பெரீயீயீயீயீயீயீயீயீயீயீயீயிஸா போகுதே தவிர சிறிதாக வரவே மாட்டேன் என்கிறது....நான் முயற்சி செய்கிறேன் தான்...ஹூம் வருவேன்னான்றது....அககாவ் எங்கருக்கீங்க க்ளவுட் 9!!!!! (ஆனா நீங்க ஸ்டெடியான ஆளு!!)

      கீதா

      நீக்கு
    5. பானுக்கா நானும் இந்தக் கருவில் எழுதி பாதி வைச்சுருக்கேன்...எனது முந்திய கதை சோகம் என்பதால் ஒரு ஹேப்பியா எழுதலாம்னு தொடங்கி பாதில நிக்குகு...இப்ப அதிராவின் கதை வந்தப்புறம் அதை முடிக்கணுமானு யோசனை...அதான் ஸ்ரீராம்கிட்ட கேட்டிருந்தேன் அவரோ எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்கனு சொல்லிட்டார்...பட் கதைக் கரு காப்பினு வந்திடக் கூடாதேநு ஒரு பயமும் இருக்கு. அல்ரெடி வேறொரு வலைப்பதிவர் இதே கருவில் கதை எழுதிவிட்டார். ஸ்ரீராம் நினைவிருக்கா?!!!!!!!!

      கீதா

      நீக்கு
    6. ஆஹா என்னை வச்சு ரெண்டாவது நாரதர் கலகம் இங்கு ஸ்ரீராமுக்கும் பானுமதி அக்காவுக்கும் இடையில ஆரம்பிச்சுட்டுதே:)) ஆவ்வ்வ்வ்வ் இன்று காலையில ரெண்டு கரிக்குருவி பார்த்தேன்:) அந்த லக்குத்தான் இப்பூடி ரெட்டையா அடிக்குதூஊஊஊஊஊ:) ஹா ஹா ஹா..

      இல்ல பானுமதி அக்கா.. வானம் மேல பூமி மேல கடல் மேல அந்த நிலா மேல சத்தியமா.. நீங்கள் எழுதும் குட்டிக் கதைகளை பார்த்து பார்த்து வியக்கிறேன்ன்.. ஆனா நீங்க கடசியா எழுதியது மட்டும் பெரிசாகப் பிடிக்கவில்லை.. மற்றும்படி குட்டிக் கதையாகவும் டுவிஸ்ட் வச்சும் எழுதுவதில் உங்களை மிஞ்ச ஆரும் இல்லை.. நான் பார்த்தவர்களுள்.

      நீக்கு
    7. மிக்க நன்றி பானுமதி அக்கா.

      ///Thulasidharan V Thillaiakathu
      இப்ப அதிராவின் கதை வந்தப்புறம் அதை முடிக்கணுமானு யோசனை...அதான் ஸ்ரீராம்கிட்ட கேட்டிருந்தேன் அவரோ எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்கனு சொல்லிட்டார்...பட் கதைக் கரு காப்பினு வந்திடக் கூடாதேநு ஒரு பயமும் இருக்கு.///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அதாரது என் கதையைக் கொப்பி பண்ணப்போவதூஊஉ விட மாட்டேன்ன் இப்பவே காண்ட் கோர்ட் படி ஏறுறேன்ன்ன்ன்.. ஸ்ரீராம் ஜாட்சிக்கு வரோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
  30. //அப்பா!...
    கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது...

    இன்னும் இலையைப் போடக் காணோமே!.. //

    துரை சார், பெரும்பாலும் கோவில்களில் நடக்கும் திருமணங்களில் பக்கத்தில் இருக்கும் உணவகத்தின் சாப்பாடு டோக்கன் கொடுத்து விடுவார்கள். சீக்கிரம் போய் வாங்கி கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை...
      நீங்களாவது சொன்னீங்க!...

      ஆனா..
      டோக்கன் அச்சடிக்கத்தான் மறந்துட்டாங்களே!..

      நீக்கு
    2. ஹா ஹா ஹா துரை அண்ணன் உங்களுக்கு ரோக்கின் எல்லாம் வாணாம்ம்.. ஃபிங்கர் பிரிண்ட் போதும்:)) உள்ளே அனுமதிப்பாங்க:))

      நீக்கு
  31. ஹலோவ் வணக்கம் :) நாலஞ்சி நாளா ஜுரம் உடல் வலி த்ரோட் infection எல்லாம் சேர்ந்து அடிக்கும்போதே நினைச்சேன் எதோ விபரீதம்னு :) அப்போ அதுதானா இது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. அங்க பாருங்கோ எல்லோரும் கத்தி கோடாரியோடு கலைக்கினம்.. இவ்ளோ நாளா இல்லாமல் இப்போ எப்பூடி வாறீங்க என:)).. நான் செக் அனுப்பி வரவச்ச விசயம் நமக்குள் இருக்கட்டும்:))..

      //நாலஞ்சி நாளா ஜுரம் உடல் வலி த்ரோட் infection///

      சே..சே..சே.. இதுக்குத்தான் அம்மம்மா அப்பவே ஜொன்னா:) உன்னைப்போல சுவீட் 16 ஆட்களோடு மட்டும் சேர்ந்து பழகு என:)).. இது 60+ ஐ எல்லாம் ஃபிரெண்ண்டூஊஊஊஊஉ ஆக்கி வச்சுக் கொண்டு நான் படும் பாடு இருக்கே அப்பப்பா:)).. ஹா ஹா ஹா...

      நீக்கு
  32. கதையை முதலில் போனில் வாசிச்சிட்டுதான் வந்தேன் மியாவ் :)
    நடுவில் பின்னூட்டங்களை பார்த்து கலாய்க்க ஆசையாருந்திச்சி :)
    நௌ வரேன் கதை பத்தி :)
    நாம் எப்பவும் ரிவர்ஸ் ஆர்டர் தானே :)
    expect the unexpected என்ற வசனத்தை அழகாய் பொறுத்தியுளீர்கள்
    ராகி மாமா /கோதை ..ராகி அது என்ன பேர் ராகவன் ??
    அந்த 20 வருஷம் பெரிய இடைவெளி ராகி மாமாக்கு .எனக்கு தெரிஞ்ச ஒருவர் முந்தி என் பக்கம் குறிப்பிட்டேன்.30/32 வருட மணவாழ்வு முடிந்து மனைவி இறந்து ஒரு வருடத்தில் மகள் வயது பெண்ணை மணமுடித்து இப்போ 4 மந்த்ஸ் ஆண் குழந்தையுடன் இருக்கார் :) இரண்டாம் மனைவிக்கு அவர் மகளைவிட வயது சிறிது .
    கதை நன்றாக கொண்டு சென்று உள்ளீர்கள் ட்விஸ்ட்டும் முறுக்கு மாதிரி நறுக்குன்னு இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ராகி அது என்ன பேர் ராகவன் ??///

      ஆவ்வ்வ்வ்வ்வ் அதெப்பூடி அவ்ளோ கர்க்ட்டா பிடிச்சீங்க?.. நான் முதலில் ராகவன் மாமா எனத்தான் எழுதினேன் பின்பு அது ரைப் பண்ண பெரிசா இருந்தமையால ராகி எனச் செல்லமா மாத்திட்டேன்ன் ஹாஹாஹ்ஹா...

      //மகள் வயது பெண்ணை மணமுடித்து///

      இப்படியும் சில இடங்களில் நடக்குதுதான் அஞ்சு.. அதென்னமோ கேள்விப்படும்போது கஸ்டமாக இருக்கும்.. அத்தோடு இன்னும் ஒன்றும் இருக்கு.. விரைவில இவர் வயசாகிடுவார்.. அப்போ அப்பெண் பாவம்.. ஆனா கட்டாயத்தின் பெயரில் தள்ளி விட்டு மணம் முடிக்க வைப்பதுதான் தப்பு.. மற்றும்படி இருவரும் மனமொத்து விரும்பிச் செய்தால் ஓகே.

      பாலுமகேந்திரா அவர்களின் மூன்றாவது கதை.. மொனிக்காவும் அப்படித்தானாமே.. 20 வயது இடைவெளி.. ஆனா அவவா விரும்பி அடம் பிடிச்சு மணம் முடித்தாவாம்.. அப்படி எனில் அது ஓகே.[நான் சொல்வது இங்கு வயதை மட்டும்.. மற்றபடி அவரது வாழ்க்கையில் அது சரி எனச் சொல்லவில்லை:)]..

      டுவிஸ்ட் சீனி முறுக்கு மாதிரி இருக்கோ?:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      நீக்கு
    2. எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவிக்கு 20 வயசு வித்தியாசம். காதல் திருமணம். முதல் மனைவி இறந்த பின்னர் இந்த இரண்டாம் மனைவியைக் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மூத்த மனைவி மூலம் பிறந்த மகனுக்குத் திருமணம் ஆகிப் பேரன், பேத்தி எடுத்தாச்சு. இரண்டாம் மனைவி மூலம் ஒரு பெண்! தம்பதியர் இருவரும் அப்படி ஒரு ஒற்றுமை என்பதோடு மனைவி கணவன் சொல்லை மீற மாட்டார். மிகவும் அனுசரணை. மனைவி முனைவர் பட்டம் வாங்கியவர். கணவர் அத்தனை படித்தவர் இல்லை. என்றாலும் மனைவி தன் படிப்பைக் கணவரிடம் வெளிக்காட்டிக்கொள்ளவே மாட்டார். இன்னும் சொன்னால் என் கண்ணே பட்டுவிடும்! :))))))))

      நீக்கு
  33. நல்ல புரிதலுள்ள உறவுகள் அமைந்தால் நம் பூமி சொர்க்கமே .எத்தனை பேர் இப்படி பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்பவர்கள் பிள்ளைகள் இருக்காங்க ..இங்கே ஒரு பஞ்சாபி பெண்மணி 65 வயது இங்குள்ள சீனியர் சிட்டிசன்ஸுக்கு நிறைய சலுகைகைகள் அதில் ஹேர் கட்டிங் பஸ் பாஸ் எல்லாமுண்டு ஸ்கொட்லாந்திலும் அதே சிஷ்டம்னு நினைக்கிறேன் .
    அப்போ அந்த ஆன்டி ஹேர் கட் செஞ்சி வாராவாரம் லைப்ரரியில் சீனியர் சிட்டிசன்ஸுக்கான கேதரிங் போவார் .அவர் மருமகள் இந்த வயதில் என்ன்ன இது யாரை மயக்கனு கேட்க மனம் சுருங்கி போனது அந்த ஆண்டிக்கு .நான் கேட்கிறேன் அவங்களுக்கும் சந்தோசம் இல்லியா ??
    எல்லாருமே திருமணம் என்றால் உடல் ரீதியாவே சிந்திக்கிறாங்க யாரும் மனங்களை புரிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு ஹெயார் கட் ஃபிரீ இல்லை என நினைக்கிறேன்ன் ஆனா பஸ் ரெயின் ஃபிரீ.. மற்றும் பெரும்பாலான இடங்களில் ஓவர் 60 க்கு டிஸ்கவுண்ட் உண்டு...

      //அவர் மருமகள் இந்த வயதில் என்ன்ன இது யாரை மயக்கனு கேட்க//

      காவோலை விழக் குருத்தோலை சிரித்த கதைதான் அஞ்சு.... நிறையப்பேர் வருங்காலத்தை நினைத்துப் பார்ப்பதில்லை.. இப்படியேதான் வாழ்க்கை ஓடும் என்பதுபோல அடுத்தவர்களை மனம் நோக வைப்பார்கள்..

      அதேதான் பலரின் நினைப்பு இணைந்து வாழ்வதென்பது உடல் தேவைக்காக மட்டுமே என நினைக்கிறார்கள்.. ஒரு வேளை அப்படி நினைப்போர்... மனதால வாழாமல் இருக்கிறார்களோ என்னமோ.. தம் அனுபவத்தைத்தானே சொல்ல முடியும் அவர்களால்..

      நீக்கு
  34. ஒரு நல்ல கதைக்கருவை எடுத்தியிருக்கிங்க வாழ்த்துக்கள்
    ஞானி அடை மொழி பட்டத்தை எடுத்திட்டு வேறே நல்ல பட்டத்தை கொடுக்கலாம்னு நினைக்கிறேன் :)
    கொஞ்சம் அவகாசம் தாங்க பட்டத்துடன் வரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க மெயில் செர்வரை இப்போதான் ஹேக் பண்ணினேன். அதுல, அ. உங்களுக்கு, 'தனக்கு ஸ்காட்லாந்தின் நாவலாசிரியை' என்று பட்டம் கொடுக்கச் சொன்னதும், அதுக்கு நன்றிக்கடனாக உங்களுக்கு 'தேவதையின் கிச்சன்' பின்னூட்டத்தில், 'லண்டனின் தாமு/வெங்கடேஷ் பட்/ரேவதி சண்முகம்' என்று பெயர் தருவதாகவும் சொல்லியிருந்தாரே. அதே பட்டம்தான் இப்போ கொடுக்கப்போறீங்களா இல்லை நான் சொல்லிட்டேன் என்பதற்காக மாத்தப்போறீங்களா?

      நீக்கு

    2. ஹையோ மியாவ் என் மெயிலை திறக்க முடியாம போச்சுனனே இப்போதான் தெரியுது :)
      நெல்லைத்தமிழன் :) இதெல்லாம் ரொம்பவே அதிகம் ரேவதி ஷண்முகம் வெங்கி படலாம் பாவம் :)
      ஆனா ஸ்கொட்லாண்டும் இங்கிலாந்தும் எப்பவும் எதிரணிதான் :) எனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும் அதனால் பூனையை உயரத்துக்கு கொண்டு போக ஒரே ஒரு ஐடியா
      நான் ஒன்னு யோசிச்சி வச்சிருக்கேன் அது தொடர்கிறது

      நீக்கு
    3. ஹாஹா இருங்க நாம் பூஸாருக்கு பட்டம் கொடுக்குமுன் இன்னும் ஒரு 10 % பட்டத்தை ரீச் பண்றதுக்கு
      பூஸார் செக்க்ஷன் 377 பற்றியும் ஒரு கதையெழுதிட்டா :)))))))))))
      புரட்சி எழுத்தாளிணி என்ற பட்டத்தையும் கொடுத்திடலாம்னு நினைக்கிறேன் :)

      நீக்கு
    4. ஹையோ... நோ..நோ வாணாம் வாணாம்ம்...:) நேக்கு ரைம் ஆச்சூ:))

      http://www.nycaviation.com/newspage/wp-content/uploads/2012/05/cat-plane-630-620x413.jpg

      நீக்கு
    5. ///நெல்லைத் தமிழன்11 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:50
      உங்க மெயில் செர்வரை இப்போதான் ஹேக் பண்ணினேன்.//

      ஆவ்வ்வ்வ்வ் இப்போதானே புரியுது:) எங்கட மைண்ட் வொயிஸ் எல்லாம் எப்பூடி வெளில கேய்க்குது என ஓசிச்சமேஎ:)).. அஞ்சூஊஊ உந்த மே..மே.. சவுண்டைக் கொஞ்சம் நிறுத்திப் போட்டு முதல்ல சைபர் கிரைமுக்கு கோல் பண்ணுங்கோ:)).. என்னிடம் நெ.தமிழனின் வட்ஸப் நெம்பரூ இருக்கு:)) தாறேன்ன் .. :)) அதை வச்செ பிடிச்சிடுவாங்க:))

      நீக்கு
    6. //பூஸார் செக்க்ஷன் 377 பற்றியும் ஒரு கதையெழுதிட்டா :)))))))))))
      புரட்சி எழுத்தாளிணி என்ற பட்டத்தையும் கொடுத்திடலாம்னு நினைக்கிறேன் :)///

      ஹா ஹா ஹா அஞ்சு நான் “வலையுலக பிக்பொஸ்” கதை எழுதட்டோ?:))

      நீக்கு
    7. http://www.roflphotos.com/tamilcomedymemes/down.php?file=images/roflphotos-dot-com-photo-comments-20170722062842.jpg

      நீக்கு
  35. நல்ல மனைவி வாய்ப்பதெல்லாம்வரமே கதை எழுதும்போது எப்படி வேண்டுமானாலு ம்முடிவை மாற்றல் எழுதுபவர்களுக்கு இருக்கும் சக்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா... உண்மைதான் கற்பனையை எப்படி வேணுமெண்டாலும் ஓட விட்டு எழுதிடலாம்.. காசா பணமா கற்பனைதானே ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      நீக்கு
  36. /கோபு சார் ஒருமுறை என் பதிவில் நான் எழுதிய உண்மை சம்பவத்தில் ஒரு பின்னூட்டம் தந்திருந்தார்
    //ஒருவருக்கொருவர் துணையாக, பேச்சுத்துணையாக, கொடிகள் பற்றிக்கொள்ள கொம்பைத் தேடுமே அது போலத் தான் இதுவும். தவறேதும் இல்லை என்று நான் நினைக்கிறேன். [இது பற்றிய கருவுடன் கூடிய நான் எழுதிய கதை ஒன்றும் பிறகு வெளிவர உள்ளது]//

    அது 78 வயது பெண்மணி 80 வயது ஆண் இருவரின் திருமணம் ..ஆலயத்தில் அறிவிப்பு வந்தபோது சிரிப்பா இருந்தது எனக்கு ஆனா கோபு சாரின் பின்னூட்டம் ஒரு eye opener ..
    2011 இல் இருந்த கேலி கிண்டல் இப்போ 2018 என்கிட்டே இல்லை
    60 வயதுக்கு மேல்தான் ஒருவருக்கு உண்மையான துணை அவசியம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //2011 இல் இருந்த கேலி கிண்டல் இப்போ 2018 என்கிட்டே இல்லை//

      எனக்கு என்னமோ அஞ்சு... நான் சின்ன வயசிலிருந்தே இதே கொள்கையுடன் தான் இருக்கிறேன்ன்.. இதைவிட முழுவியளம் பார்ப்பது.. அழுக்கு உடையைப்பார்த்து ஒருவரை தரக்குறைவாக மதிப்பிடுவது... நக்கல் நையாண்டி... மாற்றுத்திறனாளிகளைப்பார்த்து சிரிப்பது.. இப்படி எதுவுமே பிடிக்காது எனக்கு.. அது என்னமோ சின்ன வயதிலிருந்தே தானா வந்திருக்கு..

      நீக்கு
    2. நீங்க மேலே சொன்ன எதுவும் என்கிட்டயுமில்ல ஆனா ..அன்னிக்கு கொஞ்சம் சிரிச்சி தொலச்சத்துக்கு காரணம் கணவர்தான்
      சர்ச்சில் அறிவிப்பாங்க திருமண அறிக்கை அப்போ பிரைட் டு பி எழும்பி நிற்பார் .இவர் சும்மா இல்லாம மணமகள் மேக்கப் இல்லாம வந்திட்டார்னு சொல்லவும் எனக்கும் உள்ளுக்குள் சிரிப்பு வந்தது பிறகு அந்த தம்பதியரை பார்த்தப்போ நானே கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டேன் பிக்கோஸ் அந்த மணமகன் வீல்சேரில் இவர் அவரின் மரணம் வரைக்கும் கவனிச்சார் 2016 வரை

      நீக்கு
    3. உண்மைதான் அஞ்சு சில சமயம் நேருக்கு நேரே பார்க்கும்போது நம்மை அறியாமல் சிரிப்பு வந்துவிடும்.. பின்பு நிதானத்துக்கு வந்து வருந்துவோம்.

      நீக்கு
  37. மனம் ஒத்துப்போர ஜோடி. அதான் கதையின் மேஜர் பாயின்ட். வயதான காலத்தில் நமக்காக கவனிக்கும் துணை அவசியம். பிள்ளைகளும் கோதையை தாய்மாதிரி நினைக்க வேண்டும். குடும்பத்து உறவுகளும் தேவை. எதிரிகள் மாதிரி வாழ்வு அமைந்திருந்தால் கூட வயோதிகம் உறவுகளைப் புதுப்பிக்கும். நல்ல கதை. இம்மாதிரி உறவு அமைவது கடினம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ காமாட்சி அம்மா... உண்மைதான் கதை எழுதிவிடுவது சுலபம்.. இப்படி உறவுகள் அமைவது கடினமே.. மிக்க நன்றி.

      நீக்கு
  38. ம்ம்ம்ம், கிட்டத்தட்ட இந்தக் கதைக்கருவில் ஒரு தொலைக்காட்சித் தொடர் எஸ்பிபி, லக்ஷ்மி நடிச்சு வந்தது. இரண்டு பேரின் நடிப்பும் இயல்பாக இருக்கும். அதில் லக்ஷ்மியின் எளிமையான உடை அலங்காரமும் எனக்குப் பிடித்திருந்தது. பாலசந்தரோ அல்லது அவர் மகன் இறந்து போன கைலாசமோ! யார்னு தெரியலை இயக்கம்! ஆனால் முடிவைப் பார்த்தேனா என்பது நினைவில் இல்லை. அல்லது முடிவு வரை பார்த்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். பல வருஷங்கள் முன்னர் வந்தது! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்கா :) நானும் பார்த்தேன் சின்னத்திரை கதைகள் // அடுத்த வீட்டு கவிதைகள் கதைகள்னு னு spb லக்ஷ்மி ரெண்டு பேருமே சூப்பர் ஆக்டிங் .லக்ஷ்மி ஊறுகா போடுவாங்க அதில்
      நானும் முடிவை பார்க்கலை :) யூ டியூபில் தேடி பார்த்து உங்களுக்கும் தரேன்

      நீக்கு
    2. அக்கா எது வரைக்கும் பார்த்தீங்க :) 39 எபிசோட் வருது நானா பார்க்கபோறேன் யூ டியூபில்

      நீக்கு
    3. லக்ஷ்மியோட பையரோ, பெண்ணோ இவங்க இரண்டு பேரையும் பத்திக் கேவலமாப் பேசுவாங்க! அநேகமா அதுக்கப்புறமாக் கோவிச்சுண்டு பார்க்காமல் இருந்துட்டேனோ? அவங்களை ஆதரிக்கும் ஒரே நபர் நடிப்பும் நல்லா இருக்கும். ஆனால் யார்னு நினைவில் இல்லையே! மறந்துட்டேன். :(

      நீக்கு
    4. https://www.youtube.com/watch?v=Ww3BawyXtXY
      யூ டியூபில் இருக்குக்கா :) இது முதல் எபிசோட் ..டோட்டலா 39 இருக்கு
      நான் பூஸாருக்கு அனுப்ப சேவ் பண்ணிட்டேன் உங்களுக்கு அத்தனையும் மந்தைவெளி போஸ்ட் ஆபீஸிலிருந்து வரும் :)

      நீக்கு
    5. வாங்கோ கீதாக்கா வாங்கோ... ஆஆஆஆஆ யேஸ் இப்போ அம்மா வந்து நின்றபோது எதாவது பார்க்கலாமே எனத் தட்டிய இடத்தில “ ஜன்னல்”.. எஸ்பிபி லக்ஸ்மி நடிப்பது சூப்பரா வித்தியாசமா இருந்துது.. முழுக்க பார்த்து முடிச்சோம்.. ஆனா அம்மாவுக்குப் பிடிக்கவில்லை கதை ஹா ஹா ஹா:))

      அஞ்சு பாருங்கோ நான் முழுக்க பார்த்திட்டேன்ன்.. ஆனா அதிலயும் எனக்குப் பிடிக்காத ஒன்று.. எதுக்காக திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.. என்பதே அதில் என் கேள்வி..

      அதில அடுத்த வீட்டுக் கவிதைகள் வேறு.. இது வேறு, இரண்டும் ஒரு தலைப்பில் வரும் குட்டிக் கதைகள் என நினைக்கிறேன்...

      நீக்கு
    6. //அம்மாவுக்குப் பிடிக்கவில்லை கதை ஹா ...///
      haahaa same .my mom would have felt the same

      நீக்கு
  39. பூஸாரும் அதிரடியாக இந்தக் கதையை எழுதி இருந்தாலும் கடைசியில் சொதப்பல்! அப்படியே விட்டிருக்கலாம். அல்லது இருவருமே சேராமல் அவரவர் வழியில் போயிட்டாங்கனு முடிச்சிருக்கலாம். சினிமாத்தனமாக இரட்டையரைக் கொண்டு வந்து ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன தான் உடன் பிறந்த இரட்டையர் என்றாலும் கொஞ்சம் வித்தியாசம் தெரியத்தான் செய்யும். இது அத்தைமகள், மாமன் மகள்ங்கறச்சே! :)))) பூஸார்,ஆனாக் கதையைச் சுருக்கமாச் சொல்லத் தெரியுதே! அதுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா அதனாலதான் விபரமாக எழுதியிருக்கிறேனே.. மணமகள் தலையைக் குனிஞ்சபடி இருக்கிறா.. .. உடனேயே இவருக்கு தலை சுற்றி விட்டது.. திரும்பி வெளியே வந்திட்டர்ர்:)).

      ஹா ஹா ஹா நான் உண்மையில் அது கோதைக்கு திருமணமாகிட்டுது எனத்தான் கதையை முடிச்சிருந்தேன்ன்:)) ஆனா அது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை.. :) ஹா ஹா ஹா அதனாலயே டுவிஸ்ட் வச்சு முடிச்சேன் எப்பூடி?:))..

      மிக்க நன்றிகள் கீசாக்கா.

      நீக்கு
  40. @எ.பி.ஆ"சிரி"யர் குழுவினருக்கு, உங்களோட இந்தப் படம் பார்த்துக் கதை சொல்லு! திட்டத்துக்கு இந்தப் படத்துக்கு மாலா மாதவன் எழுதிய கதை மூலம் படம் முகநூலில் "மத்யமர்" குழுமத்தில் பிரபலம் ஆகிப் பலரும் இதற்கேற்ற கதைகள் எழுதிப்பரிசும் வாங்கி இருக்காங்க! எல்லாப் புகழும் எ.பி.க்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கீதாக்கா செம இன்ட்ரெஸ்டிங்க் செய்தி!! வாழ்த்துகள் எபி ஆசிரியர்களே!!! எல்லாப் புகழும் எபிக்கேனு கீதாக்கா சொன்னது கேட்டு எபி ஆசிரியர்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே...அடுத்து எல்லாப் புகழும் வாசகப் பெருமக்களுக்கேனும் சொல்லுவான...என்றாலும் இப்படியான புதிவிதங்களை அறிமுகப்படுத்தும் எபி ஆசிரியர்கள் குழுவினர் அதில் கொயந்தை நீலவண்ணக் கண்ணனுக்கும் அந்தப் புகழாரம்!!! இல்லையா கீதாக்கா!!!

      கீதா

      நீக்கு
    2. கீசாக்கா அப்போ எனக்கும் பொற்கிழி வாங்கித்தாங்கோ எ.புளொக் ஆசிரியர்களிடமிருந்து:)) அட்லீஸ்ட் அந்த 3வது ஆசிரியரின் புதுப் போனையாவது பரிசாக அளிக்கச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
  41. கதை மிக நன்றாக இருக்கிறது அதிரா. உங்கள் எழுத்தும் நன்றாக இருக்கிறது. நல்ல காலம் இருவரும் சேர்கிறார்கள்...சேர்வார்கள். பல வரிகள், தத்துவங்கள் எல்லாம் அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்! பாராட்டுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ துளசி அண்ணன்.. உங்களைக் கண்டு கன காலமானதுபோல இருக்கு.. மிக்க நன்றி.

      நீக்கு
  42. அதிரா கடைசி அந்த ட்விஸ்ட் மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோனு தோணிச்சு கீதாக்காவும் நெல்லையும் சொல்லியிருந்ததைப் பார்த்தேன் இனிதான் மேல கருத்துகள் பார்க்கனும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அது கொஞ்சம் சீரியஸ்நெஸ் ஐக் குறைத்து விட்டதோ?:) ஆனா ராகி மாமா பாவமெல்லோ. டுவிஸ்ட் வச்சிருக்காட்டில் அவரின் கெதி என்ன ஆகியிருக்கும்:).. பாவம் மனிசனுக்கு அந்த மரத்தடியிலயே திருவாதிரை நட்சத்திலயே சொர்க்கம் பார்த்திருப்பார்ர் ஹா ஹா ஹா:)).. அதிலிருந்து காப்பாற்றிய பெருமையவது என்னைச் சேருமெல்லோ கீதா:)) ஹா ஹா ஹா நன்றி கீதா.

      நீக்கு
  43. படித்தேன்
    சிந்தித்தேன்
    சிறந்த கதை
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!