சனி, 15 செப்டம்பர், 2018

ஆசான்





1)  படிக்க பணமின்றி சிரமப்பட்ட நான், அந்த படிப்பை இலவசமாக சொல்லிக் கொடுக்க நினைத்தேன்.



என், 2ம் வகுப்பு ஆசிரியை, தன் இல்லத்தை இலவசமாக தந்து உதவினார்.என்னுடன் படித்த ஆசிரியராக உள்ள நண்பர்கள், டியூஷன் படித்த மாணவர்கள், என் மனைவி வகுப்பெடுக்கின்றனர்....

வேலுார் மாவட்டம், அசநெல்லிக்குப்பம் கிராமத்தில், 'வாமனன் குருகுலம்' நிறுவனர் கார்த்தி.





  

35 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் முதலில் வருபவர் பின்னாடி வருபவர் எல்லோருக்கும்!

    நேற்று பாடல் கேட்டேன் ஸ்ரீராம் நல்லாருக்கு ஆனா வால்யூம் எனக்கு கம்மியா இருந்துச்சு…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். பாடம் கற்கும் இடத்தில (சினிமாப்) பாடலா? ஆசான் திட்டப் போகிறார்!

      நீக்கு
  2. இன்று ஒரே ஒரு செய்திதானா ஸ்ரீராம் என்னாச்சு?? பாசிட்டிவ் செய்திகள் குறைந்துவிட்டதா??!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீ/ கீ மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா கீ கீ பார்த்து சிரித்துவிட்டேன் துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  4. கடுகை உடைத்த மாதிரி
    சின்னஞ்சிறு பதிவானாலும் அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடுகை உடைத்த மாதிரி
      சின்னஞ்சிறு பதிவானாலும் அருமை...​//

      அடடே... ஆஹா...

      நீக்கு
  5. இந்த செய்தி எபியில் வரும் என்று
    அன்றே நினைத்தேன்...

    பதிலளிநீக்கு
  6. ஒரு நாள் வகுப்புக்கு வரவில்லை என்றாலும், மறுநாள் பெற்றோருடன் தான் வர வேண்டும்.

    வீட்டில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என, மாதம் ஒரு முறை, 20 கேள்விகள் அடங்கிய விண்ணப்பத்தில், பெற்றோரை பூர்த்தி செய்து தரச் சொல்வோம்.//

    வாவ்! நல்ல விஷயம். இதை சிலர் எதிர்க்கலாம்...அல்லது மாரல் போலீஸிங்க் கூடாது என்று சொல்லலாம் ஆனால் இதை ஹாண்டில் செய்யும் விதத்தில் ஹாண்டில் செய்தால் மிக மிக நல்ல விஷயம்.!!! கண்டிப்பாக அவசியமான விஷயம். நான் படிக்கும் காலத்தில் இதெல்லாம் உண்டு. அருமையான ஆசான் கார்தி!!! ஹேட்ஸ் ஆஃப்! நல்லதொரு சேவை செய்கிறார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாரல் போலீசிங் நல்லதுதானே கீதா ரங்கன். பெற்றோரின் பங்களிப்போட பதின்ம வயசைக் கடக்க வைப்பது நல்லதுதான்.

      நீக்கு
  7. கார்த்தி குடும்பம் நீடூழி வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    முகநூலில் படித்தேன்.
    கார்த்தி அவர்கள் நண்பர்கள், ஆசிரியர், மனைவி கூட்டு முயற்சியால் நல்ல காரியம் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.
    வாமனன் குருகுலம் அருமையான பெயர்.
    அன்பால் உலகை ஆளட்டும்.

    பதிலளிநீக்கு
  9. விடுமுறையில் மரக்கன்று நட்டு வருதல், வாரந்தோறும் அனைத்து மாணவர்களுக்கும் வேப்பிலை கஷாயம், துளசி, கற்பூர வல்லி கஷாயம் கொடுத்தல் என அனைத்தும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  10. "அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு
    எழுத்தறிவித்தல்" அதோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் கார்த்தி, அவர் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  11. //கடுகை உடைத்த மாதிரி// அடடா! என்ன ஒரு உவமை!

    பதிலளிநீக்கு
  12. பாசிட்டிவ் செய்திகள் குறைந்து வருவது கலையைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வாரம் இப்படி டிமாண்ட் ஆகிவிடும்!

      சில வாரங்களில் நார்மலாகவும்,

      மிக அபூர்வமாக அதிகமாகவும் கிடைக்கும்!

      நீக்கு
  13. அந்த சமூகத்துக்கான தன் பங்களிப்பாக இதனைச் செய்துவரும் கார்த்தி பாராட்டப்பட வேண்டியவர். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. பாராட்டப்படவேண்டிய நண்பரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வீட்டிலிருந்து பள்ளிவரையும், பள்ளியிலிருந்து வீடுவரையும் குழந்தைகள் கவனிக்கப்படுகிறார்கள், அன்போடு, அக்கறையோடு. கல்வியோடு ஒழுக்கமும் இளம்வயதிலேயே சேர்ந்துவிட்டால் வேறு பெரிய தகுதி எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை. கார்த்தி ஒரு அற்புத ஆசான்.

    ஒன்னே ஒன்னு கொடுத்தாலும் கண்ணே கண்ணு என்றிருக்கிறது இன்று.

    ம்ஹ்ம்... இந்தக் கடுகை உடைத்துப் பார்த்தவர்கள்தான், அணுவை உடைத்த அப்பாவிகளின் மூதாதையர்களாக இருந்திருக்கவேண்டும்..

    பதிலளிநீக்கு
  16. ஒரே ஒரு செய்தி என்றாலும் மிகச் சிறப்பான செய்தி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. கேள்விப் படாத புதிய செய்தி! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    ஒற்றை செய்தியெனினும். நல்லதொரு செய்தி. இலவசமாக கற்று தருவதோடு மாணவ மணிகளுக்கு உடல் நலம் பேண இயற்கை மருந்துகளை தந்து காத்து, மெற்கொண்டு படிப்புக்கும் உதவி நல்ல முறையில் உதவும் வாமனன் குருகுலம் சேவை வாழ்க.. வளர்க.. வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. மிக அற்புதமான ஏற்பாடு.கார்த்திக் என்ற நல்ல ஆசான்
    நலம் பெற வாழட்டும். 4 மணீக்கூ எழுப்புவதாகச் சொல்வது மிக இதம். இப்பொழுதே பழகி விட்டால் எதிர்காலம் நல்ல வளம் பெறும். நல்ல செய்தி ஸ்ரீராம்.நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  20. கார்த்தி போன்ற ஆசிரியர்கள் நாளைய தலைமுறைக்கு ஒளிவிளக்குகள்.
    பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  21. பாசிட்டிவ் செய்திகள் பகிர்வு நன்று குறைந்து வருவது கவலை

    பதிலளிநீக்கு
  22. பகிர்வுக்கு நன்றி பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!