வெள்ளி, 24 ஜனவரி, 2025

தாயே இன்றேனும் என்னைப் பெற்றெடுத்தாயே... 

இன்றைய வெள்ளிக்கிழமை வீடியோக்கள் கொஞ்சம் வித்தியாசமாக... 

1964 ல் ஜனவரியில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் குந்தி தேவியார் கர்ணனை தன் மகனென்று சொல்லும் காட்சி.  கர்ணன் கேரக்டர் நல்லவனா, கெட்டவனா வகைக்  கேள்விக்குரியது.

வியாசர் அவனை கெட்ட குணம் அதிகமுள்ளவனாகத்தான் உருவாக்கி இருக்கிறார், சொல்கிறார்.  ஆனாலும் முற்போக்குவாந்திகள் சிலர் அவனை நல்லவன், வள்ளல் என்று புகழ்ந்து நல்ல இடத்தில வைத்திருக்கிறார்கள்..  அதுசரி..  துரியோதனனையே மிக்க நல்லவன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்களே...  இருக்கட்டும், அதுவும் ஒருவகையில் சரிதான் என்றே வைத்துக் கொள்வோம்.  அதுதான் வியாச பாரதம்.

இன்றைய முதல் காட்சியில் குந்தி தேவியை கர்ணன் தாயாக அறியும் இடம்.  முதலில் உணர்ச்சி வசப்பட்டாலும், பின்னர் அவள் நோக்கம் அறிந்து , ஆனால் அவளை ஏமாற்றாமல் அவள் கேட்டதைத் தந்து அனுப்புகிறான்.  

குந்தி மூன்றாவது வரம் கேட்டதும் சட்டென திரும்புகிறான்.  சட்டென்று புரிந்து விடுகிறது அவனுக்கு, இவள் தன்மேல் பாசம் கொண்டு வரவில்லை என்று.  கடவுள் போன்ற நண்பன் சொல்லி அனுப்பி இருக்கும் சாகசம் என்று சொல்கிறான்.  அந்த நிலையிலும் குந்தி சுயநலமாகவே இருப்பது மனத்தாங்கலை பார்வையாளர்களிடையே ஏற்படுத்துகிறது.

திருவிளையாடல் படத்தில் சாவித்ரியை தக்ஷன் யாகத்துக்கு செல்லும்போது "போ" என்று சொல்வது போல (சாவித்ரி "போய் வா என்று சொல்லுங்கள்" என்று அனத்துவார்) இந்தக் காட்சியில் மூன்றாவது வரம் தந்ததும் 'சென்று வரவா' என்று கேட்கும் குந்தியை "போங்கள்" என்று நிஷ்டூரமாக சொல்வான் கர்ணன்.


கர்ணன் திரைப்படத்தின் மாறுபட்ட கதைக்களம்தான் 'பட்டாக்கத்தி பைரவன்' படமும் 'தளபதி' படமும்.  பட்டாக்கத்தி பைரவன் படம் 1979 அக்டோபரில் வெளியானது.

'பட்டாக்கத்தி பைரவனி'ல் அதே சிவாஜி, தாய் சௌகார் ஜானகி.  சிவாஜிக்கு இன்னமும் சௌகார்தான் தனது தாய் என்று தெரியாது.  காட்சி அமைப்பில் கர்ணனோடு ஒப்பிடும்போது ப க பைரவன் இரண்டு மாத்து கம்மி.  படத்தில் ப க பைரவனுக்கு மாற்றுப்பெயர் கர்ணன்.  சிவாஜி, மேஜர், சௌகார், ஜெய்கணேஷ் யார் நடிப்பிலும் அவ்வளவு 'சுஸ்து' இல்லை!


1991 ல் வெளியானது மணிரத்னத்தின் தளபதி.  

ரஜினி தன் தாய்தான் ஸ்ரீவித்யா என்று ஜெய்சங்கர் மூலம் தெரிந்ததும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினாலும் வெளியில் சொல்லவேண்டாம் என்று ஜெய்சங்கரிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார். 

மிக மென்மையான கணவராக ஜெய்சங்கர்.  இப்படி கூட ஒரு கணவன் இருக்க முடியுமா என்பது போல அவ்வளவு நல்ல கணவன்!

கர்ணனில் கர்ணன் இறந்தபிறகு அவன் தாய் யார் என்று தெரிவதாக படம் அமைப்பு.  ப க பைரவனில் சுப முடிவுதான் என்று ஞாபகம்.  தளபதியின் கிளைமேக்ஸ் காட்சி இருவகைப்பட்டது.  தமிழ்நாட்டில் ரஜினி உயிரோடு இருப்பார், மம்மூட்டி இறந்து விடுவார்.  கேரளாவில் மம்மூட்டி உயிரோடு இருப்பார், ரஜினி இறந்து விடுவார்.

என்னுடைய ஒப்பீட்டில் முதலிடம் கர்ணன்.  மூலமே பிரதானம் இல்லையா...   அடுத்து தளபதி.  அப்புறம் பட்டாக்கத்தி பைரவன்.  ஒன்று சொல்ல வேண்டும்.  மூன்று படங்களிலுமே பாடல்கள் இனிமை.

கர்ணன் முதலில் போட்ட கோடு.  மற்றவை அதில் போட்ட ரோடுகள்.  இம்ப்ரொவைஸ் செய்ய முயன்றிருக்கிறார்கள்.  இந்தக் காட்சியை நீங்கள் புதிதாக ஒன்று எழுதினால் எப்படி எழுதுவீர்கள்?  நவீன பாத்திரங்களை வைத்தோ, இல்லை அதே கர்ணன் பாத்திரத்தையே வைத்தோ...  

எழுதி அனுப்புங்களேன்...


காட்சிகள் என்பதால் பொறுமையாக பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள்  என்று நம்புகிறேன்.   உங்களுக்கும் ஒரு கட்சி இருக்கும்.  அபிப்ராயம் இருக்கும்.

சொல்லுங்களேன்....

94 கருத்துகள்:

  1. கர்ணனின் கேரக்டர் மிக ஆழமானது. பெற்றோர் இல்லாம அநாதை. குலத்தால் தாழ்ந்த பெற்றோர். அதனால் திறமை இருந்தும் மாற்றுக் கம்மியான இடம், எப்போதும். தன்னையும் மதித்து தனக்கு ஒரு இடம் கொடுத்து நண்பனாக ஏற்றுக்கொள்கிறான் துரியோதன்ன். இருந்தாலும், அவனிடமும் கெட்ட குணங்கள் இருக்கின்றன. அவை அவன் விதிக்குக் காரணமாகின்றன. கர்ணன் படம், படமாக்கப்பட்ட விதம், பாடல்களும், அதன் வரிகளும், காட்சிகளுக்குச் செலவழித்துத் தரமாகத் தந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வெளியான சமயத்தில் இது தோல்விப்படம் என்பதைச் சீரணிக்க முடியவில்லை. நடிகர்களின் நடிப்பு அந்தப் படத்தை உயர்த்தியது. எப்போது பார்த்தாலும் எனக்குப் பிடித்தமான படம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  கர்ணன் தோல்விப்படம் என்பது எனக்கும் வருத்தம்தான்.  நீங்கள் சொல்லியிருப்பது போல அதன் கதை அமைப்பும், பாத்திரப் படைப்புகளும் சிறப்பானவை.நிஜ வாழ்வில் எதிரெதிர் துருவங்களாக நின்று சண்டையிட்டுக் கொண்ட அசோகனையும், சிவாஜியையும் நண்பர்களாக காட்டி இருப்பதும், அவர்களும் அந்தப் பாத்திரத்துக்கு உண்மையாக நடித்திருப்பதும் சிறப்பு.  பாடல்கள் பற்றி கேட்கவே வேண்டாம்..  மகா இனிமை.

      நீக்கு
    2. சீரணிக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம் நெல்லை? உங்களுக்கு 'ஜ' வார்த்தையை உச்சரிக்கத் தெரியாதா இல்லை ஒவ்வாமையா?

      நீக்கு
    3. கர்ணன் படம் தோல்வியா? எப்படி? இப்பதான் தெரிகிறது. ஏற்க முடியாத ஒன்று

      கீதா

      நீக்கு
    4. //உங்களுக்கு 'ஜ' வார்த்தையை //ஜீவி சார்...சில நேரங்களில் எழுதும்போது தமிழ் எழுத்தையே உபயோகிப்போமே என்று தோன்றும். 'ஜ' தமிழ் எழுத்தல்லவே.

      நீக்கு
    5. //கர்ணன் படம் தோல்வியா? எப்படி? இப்பதான் தெரிகிறது. ஏற்க முடியாத ஒன்று// அதுக்கு அப்போ முக்கிய காரணம் மக்கள் மனநிலையில் ஏற்பட்டிருந்த மாற்றம். ஆனால் இந்த மாதிரி ஒரு படம் எடுக்க ஏபிஎன் மாதிரியான கலைஞர்களால்தான் முடியும்

      நீக்கு
  2. தளபதி படமும் எனக்குப் பிடித்தமானது. ரொம்ப மாடர்னாக எடுத்திருப்பார் மணிரத்னம். இசையும் பாடல்களும் படத்தின் தரத்தை எங்கோ கொண்டுபோய்விட்டன. காணொளிகளை லேப்டாப்பில் பிறகு காண வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளை பார்த்தால் இன்னும் சில குறிப்புகளும் சேர்த்துப் பகிரத் தோன்றும்.  தளபதி மிகச்சிறப்பாக பேசப்பட்ட படம்.  நல்ல வசூலையும் கொடுத்தது.

      நீக்கு
  3. என்னதான் க்ளாஸாகப் படமெடுத்தாலும், ரொம்ப மெனெக்கிடாமல், நம்பும்படி கதை இல்லையே என நினைக்காமல், தரம் இல்லாத படம் என நினைத்தாலும், மக்களுக்கு சகலகலாவல்லவன், முரட்டுக்காளை மாதிரியான படங்களையே மிகவும் பிடிக்கிறது. இது மக்களின் கஷ்டமான வாழ்வு காரணமா? (திரைப்படத்தில் ஃபான்டஸி தேடுவது) இல்லை பெரும்பான்மையான மக்களின் தரமே அப்படித்தானா (இடைத்தேர்தல்களில் வாக்களிக்கும் விதம்) என யோசிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. A P நாகராஜன் படங்கள் அப்போது பெரும்பாலும் தோற்றதே இல்லை.  மக்கள் அவற்றையும் ரசித்தார்கள்.  அதைத்தவிர இது மாதிரி படங்களையும் ரசித்தார்கள்.  ஒரேமாதிரி பார்க்க முடியாது என்பதாலோ வென்னவோ...!

      நீக்கு
  4. நெல்லை, மற்றும் இதுவரை பதிவைப் படித்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

    பதிவை மறுபடி படிக்க வேண்டுகிறேன். சில மாற்றங்கள் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நல்ல மாறுபட்ட வெள்ளியாக இன்றைய பதிவு மலர்ந்துள்ளது. பாராட்டுக்கள். கர்ணன் படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. (மஹா பாரதத்தில் கர்ணன் பாத்திரமும்) இந்தப் படம் தோல்வியா ? ஏன் அப்படி? நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு அப்பாத்திரமாகவே மாறி நடித்திருப்பதாலோ இல்லை புராண கதை என்பதால்தான் தோல்வியை தழுவியதா? எனக்கு இந்த செய்தி புதிது.

    இந்தப் படம் இரண்டாம் தடவை வண்ணமயமாக்கப்பட்டு புதிதாக்கி வந்த புதிதில் சென்னையில் ஒரு திரையரங்கில் என் கணவருடன் சென்று பார்த்து வந்தேன். நாங்கள் சேர்ந்து பார்த்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. எனக்கு பல நாட்களுக்கு மனதில் அந்த காட்சிகளின் வசனங்களும், நடித்தவர்களின் சிறப்பும் சுற்றி வந்த வண்ணமிருந்தன.நல்ல படம்.

    இரண்டாவதாக பகிர்ந்த ப. க. பைரவன். பார்த்த நினைவில்லை தளபதியும் தொலைக் காட்சியில்தான் பார்த்தேன்.

    தாய் பாசத்தை காட்டி எத்தனையோ படங்கள் வந்தும், நீங்கள் ஒப்புமையோடு இந்த மூன்று படங்களையும் எடுத்து இங்கு கோர்த்து சிறப்பித்து இருப்பது பாராட்டுக்குரியது.

    காணொளிகளை பார்த்து விட்டு வருகிறேன். நேற்றே உங்கள் பதிவுக்கு கருத்துச் சொல்ல தாமதமாக வந்தேன். அதனால்தான் இன்று காணொளிகளை பார்க்காமலேயே இப்போது வந்து விட்டேன். பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  தோல்வி என்று இல்லாவிட்டாலும், எதிர்பார்த்த வசூலை படம் கொடுக்கவில்லை.  பின்னாட்களில் ஒரு சிறந்த படமாக அறியப்பட்டது கர்ணன்.   

      காணொளிகளை பார்த்தால்தான் ஒரே காட்சியை எப்படி வெவ்வேறு விதமாக எடுத்துள்ளார்கள் என்பதும்  தெரியும்.  நான் கேட்டிருப்பதை நீங்கள் கூட எழுதி அனுப்பலாம்.

      நீக்கு
  7. தேர்ந்தெடுத்த காட்சிகள் சிறப்பு ஜி.

    ஒன்று மட்டும் புரிகிறது அன்றிலிருந்து இன்றுவரை அரைத்த மாவைத்தான் அழைக்கிறார்கள்.

    மக்கள்தான் புரியாமல் ரசித்துக்கொண்டே ஏழையாக தொடர்கிறார்கள், அவர்கள் செல்வந்தனாக வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா சொல்வார்.  ஒரு கதை எழுத ஒரு பரந்த பார்வையில் மொத்தம் ஏழு கருக்கள்தான் உள்ளன என்பார்.  அது போலதான்!

      நீக்கு
    2. என்ன அந்த ஏழுன்னு சொல்லியிருக்காரா, என்ன?
      எல்லாத்துக்கும் இப்படி நம்பர் கணக்கு ஏதாவது சொல்லலாம்.
      அதுக்கு கூட. எதுக்குங்கறது அவரவர் இஷ்டப்படி.

      நீக்கு
    3. சொல்லி இருந்தார்.  எனக்கு நினைவில்லை.  நாம் யாராவது ஏதாவது சொன்னார்கள் என்றால் அதை நம்புவதில்லை என்றே முடிவு செய்து விடுகிறோம்!  மனித இயல்பு.  அவர் சொல்வது தவறாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் மனித இயல்பு!

      நீக்கு
    4. யாராவது ஏதாவது என்பது அல்ப. கதை எழுதுகிறவன் என்பதால் இதில் எனக்கு அக்கறை உண்டு.

      நீக்கு
  8. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  9. பட்டாக்கத்தி பைரவன் காணொளி பாதி பார்த்திருக்கேன். சிவாஜி மிகச் சிறப்பாக சில படங்களில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கார் என்பது உண்மைதான், ஆனால் இந்தப் படத்தில் தன் இயல்பற்ற நடிப்பால் படுத்தியிருக்கிறார். ஶ்ரீராம் இந்த மாதிரி அவங்க வீட்டில் பேச ஆரம்பித்தால் வீட்டில் உள்ளவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட மாட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டாக்கத்தி பைரவன் அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம் என்று நினைக்கிறேன்.  ஏதோ இருந்தது.  அந்தப் படத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றியது இளையராஜாவின் மூன்று பாடல்கள்!

      நீக்கு
  10. நேற்றைக்கு இரட்டைத் தலையணை புத்தகங்கள் பார்த்ததும் தோன்றிய கருத்தை எழுத மறந்துபோனேன். சேலத்தில் நான் ரெகுலராக வாங்கும் கடையில் ஜிலேபி ஆர்டர் பண்ணும்போது, கிலோவுக்கு எவ்வளவு பீஸ் வருமாறு ஜிலேபி வேணும் என்று கேட்பார்கள். மினி ஜாங்க்ரி 40 வரும், மெட்ராஸ் ஜிலேபி வடிவம் 22 வரும். நான் ஏழு வரும்படி ஆர்டர் செய்தேன். என் ஆசைக்காக 350 கிராம் ஜாங்க்ரி ஒன்றும் பண்ணி அனுப்பியிருந்தார். ஒரு கிலோ எடையுள்ள ஜிலேபியும் ஆர்டர் செய்யலாம். எதுவுமே அளவுக்கு மீறினால் அதன்மீதான ஆர்வம் போய்விடும் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் இத்தனை ஜிலேபிகள்? ஜாங்ரி கூட.
      'ஜ' வார்த்தை எனக்கு அலர்ஜி இல்லை என்று சொல்லுகிறாராம் முரளி.

      நீக்கு
    2. நெல்லை உங்க கருத்தை - செவ்வாய் அன்று - 'அதேதான்' என்று சொல்ல நினைத்ததை இப்ப இங்க சொல்லிடறேன்...

      //கதையில் குறை என மனதுக்குப் பட்டதை எழுதியதால் நாங்கள்ளாம் இன்னும் நல்லா எழுதுவோம் என்று அர்த்தம் இல்லை.//

      கீதா

      நீக்கு
    3. ஜாங்கிரியும் ஜிலேபியும் ஒன்றா? ஏனோ எனக்கு ஸ்வீட் கள் அதிகம் பிடிக்காது. அதில் இது மூன்றாம் தரம்தான்!!

      நீக்கு
    4. ஸ்ரீராம்... எனக்கு இனிப்பு பிடிக்காதவர்களைப் பிடிக்காது. ஹா ஹா ஹா. ஜிலேபி என்பது வடநாட்டு, மைதாமாவைப் புளிக்கவைத்துப் பண்ணி ஜீரா சேர்ப்பது. ஜாங்கிரி உளுந்தில் செய்து ஜீராவில் குளிப்பாட்டுவது. ஜாங்கிரியை மெட்ராஸ் ஜிலேபி என்று சொல்லும் வழக்கமும் உண்டு.

      நீங்க இன்னும் எனக்கு ஹேப்பிமேன் முந்திரி அல்வா தரலை.

      நீக்கு
    5. பிடிக்காது என்றில்லை.  அவ்வளவா பிடிக்காது! 

      முந்திரி அல்வா.. 

      சமீத்தில் நான் மதுரையே செல்லவில்லையே...  நீங்களாவது ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!

      நீக்கு
  11. "கர்ணன் படம் தோல்வி "-- ஸ்ரீராம்.
    எந்த விதத்தில் ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட வசூலில்...  தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திய வகையில்..

      நீக்கு
    2. கர்ணன் படம் நன்றாக ஓடவில்,லையா? அபத்தம்.
      சினிமா விஷயங்களில் அங்கே இங்கே எழுதறதை அப்படியே நம்பி விடக் கூடாது.

      நீக்கு
    3. விக்கி சொல்கிறது...

      Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal. The film ran for over 100 days in theatres, and later won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. It was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao. The film was also partly responsible for a resurgence in films based on Hindu epics in the industry. A digitised version of Karnan was released in March 2012 to critical and commercial success.

      நீக்கு
  12. ப.கத்தி பைரவன், தளபதி திரைப்படங்களைப் பார்த்ததில்லை.
    என்னைப் போல அதிகம் பேர்கள் இருப்பார்கள் என்பதினால் இதைக் குறிப்பிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  மறக்கப்பட வேண்டிய படங்களில் ஒன்று.  வந்த வேகத்தில் உள்ளே சுருண்டு விட்டதால் நிறையபேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  அந்த மூன்று பாடல்களுக்கு இளையராஜாவுக்கு நன்றி.

      நீக்கு
  13. வியாழன், வெள்ளின்னா ஒரே மாதிரி தேய்ந்து தேய்ந்து போன வண்டிப்பாதை போல பதிவுகள் இருக்கணும்ங்கறது அவசியமில்லை.
    இந்த மாதிரி வித்தியாசமான முயற்சிகளை வரவேற்கிறேன்.
    அப்போ புதன் மட்டும்?..
    கேஜிஜி சொன்னால் கேட்பாரா?..
    சந்தேகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் முன்பு இருந்த வீடு கொஞ்சம் சிறிய வீடு.  அவ்வப்போது அதில் மாற்றம் செய்கிறோம் என்று ஹாலில் இருக்கும் சோபாவைத் தூக்கி நாடு இடத்தில போட்டு, இரண்டு நாற்காலிகளை ஜாலில் போட்டு, கொஞ்ச நாள் நாடு ஹாலில் இருந்து டிவியை ஹாலில் வைத்து, அப்புறம் மறுபடி நாடு இடத்தில் வைத்து...  மறுபடி மாற்றம் என்று பழைய மாதிரி மாற்றி... 

      சில சமயம் மேற்கு பார்க்க இருக்கும் சோபாவை வடக்கு பார்க்க போட்டதும் மாறுதல்.  ஆக, அதே சோபா, அதே நாற்காலி, அதே இடம்....!!

      நீக்கு
  14. வழக்கமா போடற பின்னூட்டங்கள் மாதிரியே இல்லாமல் பின்னூட்டங்களில் எத்தனை பேர் வித்தியாசம் காட்டுகிறார்கள் என்று பார்க்கலாம். அப்படி வித்தியாசம் காட்ட முயற்சித்தாங்கன்னா எபிக்குக் கொண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .துளள்டுட்ப ப்கக்சிற்யமு ம்றற்மா றுசி ருஒ ல்லிதிப

      நீக்கு
  15. இதே மாதிரி பின்னூட்டங்களிலும் வழக்கமாக எழுதுவது போல இல்லாமல் வித்தியாசம் காட்ட முயற்சித்தாங்கன்னா, எபிக்குக் கொண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மே பா 
      லே   ரு  
      ங்      

      ள் 
      .                                               

      நீக்கு
    2. சுஜாதாவே காப்பி. இதில் நீங்க வேறையா?

      நீக்கு
  16. கர்ணன் படம் பார்த்ததில்லை.இப்பொழுதுதான் பார்த்தேன்.

    மகாபாரதம் படிக்கும் காலத்தில் கர்ணன் பாத்திரம் பிடித்ததாக இருந்தது அவனுடைய நல்ல குணமும் கொடை வள்ளல் தனமும் . தீய பாத்திரமான துரியோதனனின் உதவியும் நட்பும் கிடைத்ததும், தர்மம் அதர்மத்தை அறிந்திருந்த கர்ணன் உண்ட வீட்டுக்கு தீங்கிளைக்காது நண்பன் பக்கம் நின்று தனது நற்குணத்தை மேலும் உயர்த்தி விட்டான். இதில் குந்திக்கு வரம் அளித்ததும் அடங்கும்.

    தளபதிபட ம் பார்த்திருக்கிறேன் பிடித்திருந்தது.
    மற்றைய படம் பார்த்ததில்லை.

    வெள்ளிப் பகிர்வு வித்தியாசமாக அமைந்துள்ளது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாபாரதத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கலாம். வித்தியாசத்தை ரசித்ததற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  17. துரியோதனனையே மிக்க நல்லவன்//

    "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குணம் நாடி குற்றமும்  நாடி என்பார்கள்.  எந்த ஒரு மனிதனிடமும் நல்ல குணமும் இருக்கும்.  தீய குணமும் இருக்கும்.  தர்மத்தை மீறிய குணங்களால்தான் ஒருவன் நலலவன் என்றும் கெட்டவன் என்றும் அறியப்படுகிறான்!  

      நீக்கு
  18. வியாசரின் படைப்பில்...நீங்க சொல்லியிருப்பதை னானும் சொல்வேன்

    கர்ணனும் நல்லவனே. ஆனால் பெற்ற அம்மா வே அவனை நிராகரித்து யாரிடமோ வளரும் போது அதுவும் தன் அன்னை யாரென்று தெரியாமலேயே...சமூகத்தின் இழிசொல்லிற்கு ஆளாகும் அதுவும் ஓர் ஆண்...எத்தனை அவமானங்களைப் பார்த்திருப்பான். அதனால் தன்னை அரவணைக்கும் கையை - அந்தக் கை எப்படிப் பட்ட கை என்று யோசித்திருக்கமாட்டான். தன் நிலைக்காக வருந்தி ஏங்கியிருக்கும் ஒருவன் அதுவும் திறமையானவன்.....அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மற்றொருவன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை இரு தரப்பிலும் வைத்து அவனைப் பேசலாம்.  (அந்த வில்லன் - அதுதான் வில்லாளி - எப்பவோ செத்துப் போயிட்டான் என்கிற தைரியத்தில் அவன் இவன் என்று ஏக வசனத்தில் எழுதுகிறேன்...  இல்லா விட்டால்..)

      நீக்கு
  19. //ஆனாலும் முற்போக்குவாந்திகள் சிலர் அவனை நல்லவன், வள்ளல் என்று புகழ்ந்து நல்ல இடத்தில வைத்திருக்கிறார்கள்.. //

    தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
    உன்னடி பணிவேனடா -கர்ணா
    மன்னித்து அருள்வாயடா

    செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா -- கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
    வருவதை எதிகொள்ளடா

    -- கண்ணதாசன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலைத்தான் பகிர்வதாக இருந்தேன் இன்று.  கடைசி நிமிடத்தில் முடிவு மாறியது.  வித்தியாசமான இந்தப் பதிவு உதயமாகியது!

      நீக்கு
    2. நீங்கள் 'வாந்தி' என்ற வார்த்தையை உபயோகித்ததால் தான் கண்ணதாசனை துணைக்கு அழைக்க வேண்டியதாயிற்று.

      நீக்கு
    3. நீங்கள் 'வாந்தி' என்ற வார்த்தையை உபயோகித்ததால் தான் கண்ணதாசனை துணைக்கு அழைக்க வேண்டியதாயிற்று.

      நீக்கு
    4. அது டைப்போ. எழுத்துப் பிழை. நான் கவனிக்கவில்லை. நாளை மாற்றி விடுகிறேன்.

      என்றாலும் கண்ணதாசன் எந்த சூழ்நிலை சொன்னாலும் பாடல் எழுதக்கூடிய கவிஞர். காசு கொடுத்தால் பாட்டு எழுதுவார். பாட்டு எழுத மாட்டேன் என்று அவர் எங்கும் சொன்னதாக தகவல் இல்லை.

      அவர் எழுதிய வரிகளை டிஎம்எஸ் வேண்டுமானால் நான் பாட மாட்டேன் என்று மறுத்து இருக்கிறார்!

      நீக்கு
  20. மகாபாரதமும், ராமாயணமும் நிறைய உளவியல் கருத்துகளைச் சொல்லும்.

    ராமாயணத்தில் ராமர் அணிலைத் தடவிக் கொடுப்பதாக வரும் அது செய்த சிறிய உதவி....தன்னால் இயன்ற ஒன்றை...

    இதை அப்படியே ஒரு நிறுவனத்திற்கு அப்ளை செய்து பார்த்தால், கடைநிலை ஊழியனையும் கீழாகப் பார்க்காமல் அவன் செய்யும் சிறு விஷயங்களையும் தட்டிக் கொடுத்துக் கொண்டு சென்றால் நிறுவனத்தின் தலைவரால் நிறுவனத்தை நன்றாக நடத்த முடியும் ஊழியர்களும் விசுவாசமாக இருப்பார்கள் என்பது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னதை நம்பி, என்னுடன் வேலை பார்ப்பவனின் முதுகைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க முயன்றேன்..அவனோ, 'பாஸ்' அடிச்சார்னு கம்ப்ளெயின்ட் பண்ணிட்டான்.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா....நெல்லை....நல்ல பாடத்தை அணில் ராமர் பத்தி எல்லாம் அவன் படிக்கலை போல!

      கீதா

      நீக்கு
    3. தன்மையாகத் தட்டவேண்டும்.  தாமரைக்கனி போலவா தட்டுவார்கள்!

      நீக்கு
  21. அடுத்தடுத்த வரிகளில், குந்தி வரம் கேட்கும் இடம் எல்லாம் எனக்கு நிறைய சொல்ல நினைத்தாலும் தவிர்க்கிறேன்....அப்புறம் இங்கு என்னை எல்லாரும் நீங்க சொல்லியிருக்கும் முற்போக்காளர் லிஸ்டில்... அடிக்க வந்துவிடுவார்கள். ஹாஹாஹா. நான் விவாதத்திற்கு இல்லை. எனவே பாட்டிற்குப் போகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பாட்டில்லை காட்சி என்று சொல்லியிருக்கணும்....

      கீதா

      நீக்கு
    2. இல்லை கீதா..  எல்லோருக்குமே அந்த எண்ணங்கள் தோன்றும்.  தர்மத்தைக் காக்கிறேன் என்று கண்ணன் செய்யாத கிருத்திருமங்களா?

      நீக்கு
  22. இதில் கர்ணனுக்கு எழுதப்பட்ட வசனங்கள் க்ளாஸ்! நான் ரசித்த காட்சி....இப்பவும் ....வசனங்களை சிவாஜி பேசி நடிக்கும் விதமும்....
    வசனங்களை இப்பவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்தி கிருஷ்ணஸ்வாமி வசனங்கள்.  வீட்டில் அமர்ந்து எவ்வளவு யோசித்து கற்பனை பண்ணி எழுதி இருப்பார்?

      நீக்கு
  23. பட்டாகத்தி பார்த்தத்தில்லை.....தளபதியும் முழுவதும் பார்த்ததில்லை என்றாலும் கதை தெரியும். ....அம்மாவால் கைவிடப்பட்ட குழந்தையின் நிலை அந்த உணர்வுகள்...அக்குழந்தைக்கு மட்டுமே தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் படங்களில் அல்லது தற்போதைய படங்களில் புதிய பாதை தொடங்கி கைவிடப்பட்ட குழந்தைகள் எல்லாம் பொறுக்கிகளாகத்தான் ஆகிறார்கள்!

      நீக்கு
  24. பகபைரவனில் சிவாஜியின் வசனம் - சௌகாரிடம் - ஓகே ஆனால் கர்ணன் படத்தில் தன் தாய் யாரென்று தெரிந்தும் பேசும் மறைமுகமான வசனம்....ப க வில் தெரியாமல் கொந்தளிக்கும் இடம்...இரண்டுமே உணர்வுபூர்வமான இடம் வசனங்கள்.

    எனக்கு ப க வில் சிவாஜியின் நடிப்பு கொஞ்சம் ஓவராகத் தெரிந்தது கர்ணன் படத்தின் கதை ராஜ வம்சம்...ஸோ அதுக்கு ஏற்றாற்போல காட்சி அமைப்பு வசனம்....பகபை கதை இப்பவும் நடக்கக் கூடிய ஒன்றுதான். எனவே அப்படியான காட்சி அமைப்பு. ஒரு வேளை சிவாஜி அதை இன்னும் வேறு மாதிரி ப்ரசென்ட் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்தி கிருஷ்ணஸ்வாமி வசனங்களுக்கும் ஆரூர் தாஸ் வசனங்களுக்கும் உள்ள வித்தியாசம்.  ஆனால் ஆரூர்தாஸ் பல படங்களில் நன்றாகத்தான் வசனம் எழுதி இருப்பார்.  இதில் அமையலை!

      நீக்கு
  25. தளபதியின் கிளைமேக்ஸ் காட்சி இருவகைப்பட்டது. தமிழ்நாட்டில் ரஜினி உயிரோடு இருப்பார், மம்மூட்டி இறந்து விடுவார். கேரளாவில் மம்மூட்டி உயிரோடு இருப்பார், ரஜினி இறந்து விடுவார்.//

    ஓ அப்படியுமா? அங்கு அவர் ஸ்டார் இங்கு இவர் ஸ்டார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  முதலில் ரஜினி இறப்பதாக மட்டும்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.  பின்னர்தான் மாற்றப்பட்டதாக நினைவு.

      நீக்கு
  26. என் சாய்ஸ் கர்ணன் - தளபதி - பகபை. கர்ணனிலிருந்துதான் மத்தவை நீங்க சொல்றாப்ல

    கீதா

    பதிலளிநீக்கு
  27. மகாபாரதத்தின் கர்ணனை திரைப்படத்தில் அதீத நல்லவனாகக் காட்டியிருப்பார்கள்..

    அடிமைகளுக்கு மேலாடை எதற்கு எனக் கேட்டவன் கர்ணன்..
    நிராயுதபாணியாகத் தவித்த அபிமன்யுவை வீழ்த்தும்படி தூண்டியவன் கர்ணன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மை குணம் பற்றியும் இதே போல சொல்வார்கள்.  அவன் ஒரு கொள்ளைக்காரன், கொடுமைக்காரன் என்று தமிழ்வாணன் நிறுவ முஅயற்சி செய்திருந்தார்.

      நீக்கு
  28. சிவாஜி ரசிகனாக இருந்த அப்போதே பிடிக்காத படம் பட்டாக்கத்தி பைரவன்..

    அப்போதைய காலக் கொடுமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பிடிக்கவில்லைதான்!  ஆனால் இளையராஜாவின் அந்த மூன்று பாடல்கள்...

      நீக்கு
  29. கர்ணன் - திரைப்படம் எதிர்பார்த்த வருமானத்தைத் தரவில்லையே தவிர தோல்விப் படம் அல்ல..

    பெருஞ்செலவு ஏதுமின்றி எடுக்கப்பட்ட
    வேட்டைக்காரன் வெற்றிப் படமாக விசிலடிச்சான் குஞ்சுகளால் கொண்டாடப்பட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது விக்கி போய்ப் பார்த்ததில் வெற்றிப்படம் என்றுதான் போட்டிருக்கிறார்கள்.  இன்னும் சில சிறப்புகளையும் சொல்லி இருக்கிறார்கள்.  ஜீவி ஸாரின் ஒரு பின்னூட்டத்துக்கான பதிலில் இணைத்துள்ளேன் பாருங்கள்.

      நீக்கு
  30. கர்ணன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு காட்சிகள்..
    1) மேகலை அறுந்ததும் அப்பாவியாக எடுக்கவோ கோர்க்கவோ எனத் துரியோதனன் கேட்கின்ற காட்சி..

    2) திருதராஷ்டிரன் சபைக்கு ஸ்ரீ பரந்தாமன் வருவதில் இருந்து நீ கூட்டத்தோடு நின்று போரிடு என்று பீஷ்மர் ஆணையிட்டதும்
    கோபித்துக் கொண்டு கர்ணன் வெளியேறுவது வரையான உயிரோட்டம்..

    பதிலளிநீக்கு
  31. இந்த வெள்ளி வித்தியாசமாக இருக்கிறது. மூன்று காட்சிகளுக்கும் ஒற்றுமை இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
    பட்டாகத்தி பைரவன் படம் பார்க்கவில்லை.
    சிவாஜியின் பழைய படங்கள் பிடிக்கும் , சில படங்கள் பிடிக்கவில்லை அதனால் பார்க்கவில்லை.

    கர்ணன் பள்ளியில் படிக்கும் போது அழைத்து போனார்கள்.
    பள்ளி பிள்ளைகளுக்கு கட்டணம் குறைவு.

    பாடல்கள் எல்லாம் மிக அருமை. தொலைக்காட்சியில் கொஞ்ச நாள் முன்பு வைத்தார்கள்.

    மகாபாரதம், இராமாயணம் கதையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனி தனியாக படம் எடுக்கலாம் அவ்வளவு இருக்கிறது. பட்டி மண்டபத்தில் ஒவ்வொருவரும் ஒருவரை எடுத்து கொண்டு புகழ்ந்தும், தாழ்த்தியும் பேசுவார்கள்.
    கர்ண்னை பற்றி எடுக்கும் போது அவர் குணநலன்கள் பெற்றவராக தான் எடுப்பார்கள். அதற்கு சிவாஜி பொருத்தமானவர். அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாபாரதம், இராமாயணம் கதையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனி தனியாக படம் எடுக்கலாம் என்பது உண்மைதான்.  நம் புராணக் கதைகளுக்கு அவ்வளவு ஆழம் இருக்கிறது.

      நீக்கு
  32. முதல் காணொளியும் பாடலும் மிகவும் பிடித்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாடல் எப்பவுமே ஸ்பெஷலாச்சே....

      இந்தக் காட்சி பார்க்கும்போது உங்களுக்கு முன்னதாக கண்ணாம்பாவும் என் டி ராமராவும் கர்ணனிடம் வந்து குந்தி வரம் கேட்கும் யோசனை பற்றி பேசும் காட்சி நினைவுக்கு வந்திருக்க வேண்டுமே....

      முதலில் கிருஷ்ணராக ஜெமினிதான் நடிப்பதாக இருந்ததாம்.  சிவாஜிதான் அதை அண்ணாகாருதான் செய்ய வேண்டும் என்று விரும்பினாராம்.

      நீக்கு
    2. இல்லை. ஜெமினியின் கால் ஷீட் கிடைப்பதற்கு தாமதம் ஆ என்பதால் தான் ப்ரீயாக இருந்த என்.டி.ஆர் ஒப்பந்தம் செய்யப் பட்டாராம்.

      நீக்கு
  33. // வீரபாண்டிய கட்ட பொம்மனின் உண்மை குணம் பற்றியும் இதே போல சொல்வார்கள். அவன் ஒரு கொள்ளைக்காரன், கொடுமைக்காரன் என்று தமிழ்வாணன் நிறுவ முயற்சி செய்திருந்தார்.///

    அதுவும்
    வெள்ளைக்காரன் பதிவு செய்த தகவல்களைப் படித்து விட்டு!...

    அவனே நாடு பிடிக்க வந்தவன்.. அவன் என்ன மற்றவரைச் சொல்வது?..

    தமிழ்வாணனின் இந்தப் புத்தகத்தைப் படித்ததோடு கல்கண்டு படிப்பதை விட்டு விட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை எது பொய் எது என்று ஒன்றும் புரியலை நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியவில்லை....

      நீக்கு
  34. காணொளி இணைப்பு இப்போது தான் கிடைத்தது...

    கண்கள் குளமாகின..


    பட்டாக்கத்தியானாகவும் நடிக்க நேர்ந்ததே என்று நினைத்துக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
  35. /// முன்னதாக கண்ணாம்பாவும் என் டி ராமராவும் கர்ணனிடம் வந்து ///

    கர்னன் திரைப்படத்தில் எம். வி. ராஜம்மா அவர்கள்..

    கண்ணாம்பா எம். வி. ராஜம்மா இருவருமே திறமை மிக்கவர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்திக் கொள்கிறேன்.
      சாதாரணமாக விக்கி போன்ற தகவல்களை சரி பார்த்து பதிவிடுவேன். இன்று அது மாதிரி செய்யவில்லை. கன்பியூஸ் ஆகிவிட்டது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!