ஒரு பொதுவான பார்வையில் இத்தனை வருடங்கள் ஆகியும் புத்தகக் கண்காட்சி அன்று எப்படி இருந்ததோ அப்படியே பழமை மாறாமல் இருக்கிறது. நாகரீக வசதிகள் எத்தனையோ வந்தும் கூட எந்த வசதிகளையும் செய்யாது கண்காட்சி நடத்துகிறார்கள். முதலில் கால் தடுக்காமல் நடக்க முடிவதில்லை. தரைவிரிக்கும் முன்பு ஒரு JCP வைத்து சமப்படுத்த மாட்டார்களா?
சாதாரணமான தெருக்கள் மற்றும் சாலையிலேயே நடமாடும் கழிவறை வசதிகள் வைக்கமுடியும்போது இங்கு உள்ளே அப்படி ஏற்பாடு செய்யாதது ஏனோ? ஒவ்வொரு வரிசையின் ஆரம்பத்திலும் முடிவிலும் இருபக்கமும் நான்கைந்து நாற்காலிகள் போட்டால் என்ன? கால் வலிக்கும்போது மக்கள் படும்பாடு... உள்ளே தள்ளு வண்டியில் வரும் தேநீரை கொஞ்சம் தரமானதாக கொடுக்கலாம். 20 ரூபாய் வாங்குவதில் குறைவில்லை. சகாய விலையில் தரமான தேநீர் வழங்க வேண்டும். வெந்நீரும் சாதா நீரும் வழங்கும் மெஷின்கள் வாங்கி இரண்டுமூன்று வைக்கலாம்.
செய்ய மாட்டார்கள். நம் அமைப்பு அப்படி.
சாஹித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வாங்கும்போது பாஸ் போன் செய்தார். அவர் ஓய்வாக தூரத்தில் ஒரு இருக்கை பிடித்து அமர்ந்து கொண்டிருந்தார். எனக்கு காவலாக வந்திருந்தார். இருமி, மயங்கி விழுந்து விடக் கூடாதாம்!
"பழ. கருப்பையா வருகிறார்"
மறுபடி போன் பேசி உங்கள் அரங்குக்கே வந்திருக்கிறார் என்று அவர் சொன்னபோது அவர் என் அருகில் நின்றிருந்தார் என்பதோடு, அவசரமாக அலைபேசியில் வேகமாக ஒருபடம் நான் எடுத்திருந்தேன். அவருக்குத் தெரியாமல் எடுக்க முயன்றதால் OOF ல் வந்திருந்தது!
அவரே என்னிடம் பேசினார். என்ன புத்தகம் வாங்கலாம் என்று யோசனை கேட்டார். கொஞ்ச நேர உரையாடல்களுக்குப் பின் நான் சொன்ன பருவம் - பைரப்பா புத்தகம் எடுத்துக் கொண்டார். :தம்பி... நல்லாயிருக்கும்ல? நீங்க சொல்றீங்கன்னு நம்பி வாங்கறேன்.."
"இதோ பாருங்க ஐயா...மகாபாரதம் சம்பந்தபப்ட்ட கதை. நான் பாதிதான் படித்திருக்கிறேன். ஒவ்வொருவர் ரசனையும் மாறுபடும். உங்கள் ரசனை என்ன என எனக்குத் தெரியாது. வாங்கிப் படித்துப் பாருங்கள்" என்றேன்.
அருகில் வந்த பாஸை நானும் அவரும் பேசிக் கொண்டிருப்பதை படம் எடுக்கச் சொன்னால், அவர் தயங்கோ தயங்கு என்று தயங்க, பழ. கருப்பையாவுடன் வந்திருந்தவர்களில் ஒருவர் 'படம் எடுக்கணுமா? இதிலென்ன இருக்கு? வாங்க, நில்லுங்க' என்று படம் எடுத்துத் தந்தார்.
அங்கேயிருந்த ஒரு மின்சார ஒயரை தொட்டு விட்டேன் போலிருக்கு, என் கையைத் தவிர என் உருவம் மறைந்து விட்டது! அவருக்கு பின்னால் 'மலையாளச் சிறுகதைகள் புத்தகத்துடன் நிற்கிறேன். அதில் அவரிடம் கையெழுத்தும் வாங்கி கொண்டேன்.
சாஹித்ய அகாடமி அரங்கில் நான் எதிர்பார்த்த மாதிரி புத்தகங்கள் கிடைக்கவில்லை!
நான் அங்கிருந்து கிளம்பும்போது ஸ்டால் காரருடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார்.
***************************
என் மகனுக்கெல்லாம் பிடிக்கும், எனக்குப் பிடிக்காது. உருளைக்கிழங்கு ஸ்ப்ரிங் ரோல். அது எந்த அளவு ஃபேமஸ் என்பது அவர்கள் அடுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு குவியலிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
உள்ளே செல்லும் வழியில் விதைகள் விற்பனைக்கு வைத்து காத்திருந்த இளைஞர்.
விதைகள் மட்டுமா, செடிகளும் விற்பனைக்கு...
அவர்கள் அடுக்கி வைத்திருந்த அழகுக்காகத்தான் மாஞ்சு மாஞ்சு உருளைக்கிழங்கை போட்டோ எடுத்தேன்! இதோ இன்னொன்று! ஸ்டிக் குத்தி தயாராக அடுக்கி இருக்கிறார்கள்.
பெருமாளே...
அழகா இருக்கேப்பா...
நான் என்னென்ன புத்தகங்கள் வாங்கினேன் என்று ஆர்வம் இருந்திருக்கும். இதோ....
ஓகே.. எல்லோரும் எழுந்து நில்லுங்கள்... புத்தகக் கண்காட்சி இந்த வருட பகிர்வு இனிதே முடிந்தது. ஜன கண மன அதிநாயக ஜெயஹே...
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
அப்போதைய முயற்சியும், வல்லிம்மாவின் முத்தாய்ப்பும்!

என்னவோ சொல்ல ட்ரை பண்ணியிருக்கான்....!
=================================================================================================================
நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன் +
- மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பெங்களூரு :தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகளை, கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.- வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத்தாக்க வாய்ப்புள்ளதாக நாசா பயமுறுத்தி உள்ளது!
- திருமணம் செய்யாமல் (Live-In) இணைந்து வாழ்வோர் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் வால்வோ பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியார் மூலம் இயக்க மாநகர போக்குவரத்துக்கு கழகம் முடிவு செய்துள்ளது.
- உத்தரபிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஒரு முதியவர் மனைவியை 3 முறை தொலைத்துவிட்டு பின்னர் சேர்ந்திருக்கிறார். மனைவியை தவறவிட்டபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்குள் போலீசார் அழைத்து வந்து என்னிடம் விட்டுவிடுவார்கள் என்று அந்த முதியவர் கூறினார்.
- தமிழக கிராமங்களில், எட்டாம் வகுப்பு மாணவர்களில், 64 சதவீதம் பேரும், ஐந்தாம் வகுப்பு படிக்கும், 35 சதவீதம் பேரும், இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மஹா கும்ப நகர்:உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளாவில், 77 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள் உட்பட, 118 பேர் அடங்கிய வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் புனித நீராடினர்.
- திருமண வரவேற்பில் மணமகன் "சோளி கே பீச்சே க்யா ஹை" பாடலுக்கு ஆடியதால் ஆபாச பாடல், குடும்ப கெளரவம் என்று சொல்லி பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தி மணமக்கள் உட்பட எல்லோரையும் கண்கலங்க வைத்தார்!
- பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'ஹிப்னோ தெரபிஸ்ட்' ஆன, நிக்கோலஸ் அஜுலா என்பவர், 'இந்த ஆண்டில், மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக வரும்...' என, கணித்துள்ளார். இவர், கடந்த, 2018ல், 'கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்...' என, முன்கூட்டியே கணித்துக் கூறியிருந்தார்.
- மும்பை; மஹாராஷ்டிராவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
- நைரோபி: கென்யாவில் அதிக எடை கொண்ட யானை ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் எடை 10 ஆயிரம் கிலோ ஆகும்.
- டெக்சாஸ் : அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களில், 205 பேரை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். டெக்சாசின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்தடைய உள்ளது.
- சென்னை: தமிழக காவல் துறையின் மெத்தனம் பற்றி கடும் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம். கோர்ட் உத்தரவையே அலட்சியம் செய்யும் போலீசாரை வைத்துக் கொண்டு எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
- பெங்களூரு: சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த அனைத்து சந்திப்புகளிலும் விரைவில் ஏ.ஐ. சிக்னல்கள்.
- புது டில்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் முதல் கேரளாவில் உள்ள சபரிமலை வரை நாடு முழுவதும் 18 ஆன்மீக தலங்களில் ரோப் கார் திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- நாகப்பட்டினம்: தமிழக அரசின் முதன்மை தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் நாகையில் இயற்கை சீற்றத்தால் பெற்றோர், உறவுகளை இழந்த இரண்டு பெண் குழந்தைகளை காப்பகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டதோடு தினசரி தன் குடும்பத்தோடு சென்று அந்த குழந்தைகளோடு நேரம் செலவழித்து வந்தார். அதில் ஒரு பெண்ணிற்கு 2022ல் திருமணம் நடந்தது. மற்றொரு பெண்ணிற்கு நடந்த திருமணத்தை ராதாகிருஷ்ணனும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் முன்னின்று நடத்தி வைத்தனர்.
- திருத்தணி: முகூர்த்த நாளான பிப்ரவரி இரண்டாம் தேதியன்று திருத்தணி முருகன் கோவிலில் 40 ஜோடிகளுக்கும், அங்கிருக்கும் திருமண மண்டபங்களில் 80 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- கோலாலம்பூர் : மலேஷியாவில் நடந்த 19 வயதிற்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., டி 20 உலக கோப்பை இரண்டாவது சீசனில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- ஜனவரியில் புதிய உச்சம் தொட்டது யு.பி.ஐ. பண பரிவர்த்தனை.
- யு.பி.ஐ. பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதால் சாக்லேட் விற்பனை சரிவு. இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் சில்லறை கெடுப்பதற்காக பதிலாக அந்த மதிப்பிற்கு சாக்லேட்டுகள் கொடுப்பது வியாபாரிகளின் பழக்கம். அதற்காக சாக்லேட்டுகள் வாங்குவார்கள் கடை முதலாளிகள். இப்போது பெரும்பாலோர் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி விடுவதால் சாக்லேட் வாங்குவது குறைந்து விட்டது என சாக்லேட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வருத்தம்.
- தும்கூரு: தும்கூருவில் ஆகாஷ் ஜுவல்லரி என்னும் பெயரில் நகைக்கடை நடத்தி வந்த சிவானந்த மூர்த்தி என்பவர் நகைக்கடையோடு சீட்டுத் தொழிலும் நடத்தி வந்தார். சமீபத்தில் கூட்டுறவு சொஸைட்டி துவங்கினார். அதில் முதலீடு செய்பவருக்கு அதிக வட்டி தருவதாக அறிவித்தார். ஆனால் வட்டியும் தரவில்லை. ரூ. 30 கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு சிவானந்த மூர்த்தியின் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். சிவானந்த மூர்த்தியின் மகன் ஆகாஷ், நாராயணா ஹிருதயாலயாவில் டாக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போபால்: ம.பி.,உஜ்ஜைன் மாவட்டத்தின் நாக்டா நகரில் சிவபாபா மதுபான நிறுவனத்தில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ஆயுதமேந்திய ஐந்து பேர் 18 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். அதில் சம்பந்தப்பட்ட ரோகித் சர்மா என்னும் முக்கிய குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். காலில் அடிபட்டிருப்பதாக கூறிய ரோகித் சர்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அவரை அங்கிருந்து சிறைச்சாலைக்கு அழைத்து வராமல் மசாஜ் சென்டருக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர், அங்கிருந்து ரோகித் சர்மா தப்பி விட்டான்.மேற்படி காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரோகித் சர்மாவை தேட தனிப்படை அமைக்கப் பட்டிருக்கிறது.
- சென்னை: ''விதவிதமான திட்டங்களை அறிவித்து, முதலீடுதாரர்களிடம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தேன்,'' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- புதுடில்லி: 'முதல் திருமணத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், இரண்டாவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பெண்ணுக்கு உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- சென்னை:'தாமரை பிரதர்ஸ் மீடியா' பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'சோழர்கள் இன்று' நுால், தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நுாலுக்கான பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மேல பார்த்தீங்களா? வெரைட்டியா கலெக்ட் பண்ணியிருக்காங்க ரெண்டு பேரும்... அச்சா.. பஹுத் இன்டரெஸ்டிங் ஹை.. அவுர் சோட்டி சோட்டி கபரேன் ஹேனா... ஈஸிஸே பாஸ் கர் சகே...ஜ்யாதா வக்த் நஹி ஹோகா..
===========================================================================================
அதற்கு சுஜாதா பெங்களூரிலிருந்து வந்தார். அதிகாலை நேரத்தில் அவரை வரவேற்க சென்ட்ரல் ரயில் நிலையம் போயிருந்தேன். அந்த நாட்கள் நான் ஒரு பிரம்மச்சாரியாக திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்த நாட்கள். கார் வசதி கிடையாது. டாக்சி எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றவில்லை. எல்லோரையும் போல் சாலையைத் தவறான இடத்தில் தவறான தருணத்தில் கடந்து, மருத்துவக் கல்லூரி வாசலில் 21C பஸ்ஸில் ஏறித்தான் மைலாப்பூர் வந்தடைதோம்.உட்கார இடம் கிடைக்கவில்லை. நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும் அந்த பஸ்சில் தலையைக் குனிந்து கொண்டு பேசிக் கொண்டே வந்தோம். ரங்கராஜன் நெடுநாள் பழகிய நண்பரைப் போல சகஜமாக சரளமாகப் பேசிக் கொண்டு வந்தார். அன்று நைலான் கயிறு வெகு தீவிரமாக வாசகர்களால் வாசிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டும் கொண்டிருந்தது. தொலைக்காட்சி இல்லாத காலம். எனவே எழுத்தாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்திருந்தது.
அன்று எனக்கு ஒரு உண்மை புரிந்தது. வாசகனை விடத் தன்னை மேம்பட்டவனாகக் கருதிக் கொள்ளும் செருக்கு, அவரிடம் இல்லை.கடைசி வரை அந்த மனதை அவர் கைவிடவில்லை. எழுத வருகிறவன், குறிப்பாக இலக்கியச் சிற்றேடுகளில் எழுத்தைத் துவக்குகிறவன் அறிந்து கொள்ள வேண்டிய பால பாடம் அது. அது போன்று அவர் விளங்கியதற்கு ஓர் காரணம் உண்டு. அவர் எழுத்தை ஓர் ஆற்றலாகத்தான் (skill) கருதினார். அப்படித்தான் அதை நேசித்தார். அதை தவம், வரம் என்ற மிகை உணர்வுகளுக்கு அவர் உள்ளானதில்லை. அதனால்தான் எல்லா வகையான எழுத்தையும் எழுதிப்பார்த்து விடக் கருதினார்.என்னுடைய பார்வையில் இது ஒரு மனமுதிர்ச்சி.
எழுத்துக்களில் காணப்பட்டதை விடவும் அதிகமான ஒரு தேடல் மனம் (enquiring mind) அவரிடம் இருந்தது. அந்த மனமிருந்ததால் அவர் எந்த விதமான தீர்மானங்களுக்கும் வந்துவிடவில்லை. அதாவது அவர் எந்த விஷயத்திலும் ஓர் நிலை எடுத்துக் கொண்டுவிடவில்லை. வெகுஜன எழுத்து Vs சிற்றிதழ் எழுத்து, யாப்பிலமைந்த கவிதை Vs நவீன கவிதை, Block Buster Vs Parallel Cinema, சோஷலிசம் Vs தாரளமயமாக்கல், விஞ்ஞானம் Vs ஆன்மீகம், கருணாநிதி Vs ஜெயலலிதா, கல்கி Vs புதுமைப்பித்தன் என எந்த விஷயத்திலும் கட்சி கட்டிக் கொண்டு ஆடியதில்லை. எப்போதும் பத்திரமாக இருக்கவே விரும்பும் மத்திய தர வர்க்க மனோபாவம் இது. என்னுடைய பார்வையில் இது அவரது ஒரு பலவீனம்.
- மாலன்
ஓகே ஓகே... எனக்கு சுஜாதாவையும் தெரியாது.. மாலனையும் தெரியாது... கண்டுக்காதீங்க.. அடுத்ததுக்கு போகலாம்!
===============================================================================================
இணையத்தில் ரசித்த (திகில்) படம்...
ரூம் எல்லாம் புக் ஆயிடுச்சு ஸார்... இதுதான் காலியா இருக்கு... நைட் படுக்கதானே? வேணுமா?
இத்தனை பேரும் இங்கிருந்தாலும் அந்த ஒருத்தரைத் தேடும் மனசு...!

ஜீ ஹான்ப்பா.. கஹான் ஹை ஓ கியாரா ஆத்மி?
அம்மாடி... ஆனா பார்க்காவே பயம்மா இருக்கறது நிஜம்!
வாட்ஸாப் தந்த நகைச்சுவை!
Oh... These wives...
இது பழசுங்க... வாட்ஸாப் இல்லை!
கொஞ்சம் நேரம் கழிச்சு சிரிக்கவா?
யார் கண் என்று கண்டு பிடிக்க முடியுதா?
கோழிக்குஞ்சு... காலையில் சிரிப்பு வரவைத்த நகைச்சுவை.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... நன்றி.
நீக்குசட்டுனு கடைசி ஐட்டத்துக்கு போயிட்டீங்க...
புத்தகத்தில் துக்ளக் ரமேஷ் புத்தகம் தவிர வேறு எதையும் நான் வாங்கியிருந்திருக்க மாட்டேன்.
பதிலளிநீக்குபழ கருப்பையா அருமையான பேச்சாளர். இலக்கில்லாத கொள்கைகளால் அலைபாய்ந்தவர். மிகப் பெரிய படிப்பாளி. அவர் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
நல்ல வேளை சொன்னீர்கள். நான் படங்களில் உங்களைத் தேடினேன், அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என்று.
அவர் பெரிய படிப்பாளியா என்பது தெரியவில்லை. அவர் பேச்சு சட்டென சந்தேகம் ஏற்படுத்தியது!
நீக்குநான் கூட அதைத்தவிர மலையாளாச் சிறுகதைகள் வாங்கி இருக்கேன். இன்னும் இரண்டு புத்தகங்கள்.. அதுவும் மலையாள மொழிபெயர்ப்பு. அப்புறம் தடைசெய்யப்பட்ட துக்ளக்.
உங்கள் புத்தகப் படங்களைப் பார்த்துவிட்டுத்தான் என் கமென்ட். எனக்கு இப்போதெல்லாம் படிக்க நேரம் அமைவதில்லை.
நீக்குபுத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகள் அவரை அப்படி கருத இடம் தரவில்லை என்பதால் சொன்னேன்.
நீக்குகாந்தக் கண்ணழகி. யாரென்று கண்டுபிடிப்பதில் மனம் செல்லவில்லை
பதிலளிநீக்குநாளைவரை நேரம் இருக்கிறது!
நீக்குசரோஜா தேவி!
நீக்கு:))
நீக்குஒரு வழியாக புத்தக காட்சி உலாவை முடித்தீர்கள். வாங்கிய புத்தகங்கள் 2000 ரூ வரும் என்று தோன்றுகிறது. புத்தக ரசனை வித்தியாசம். ஆன்மிகம், அரசியல், வேதங்கள் கூறும் வழிமுறைகள், பிறமொழி கதைகள், கேள்வி பதில்கள் என்று கலப்படமான தேர்வு. எதை படிப்பீர்கள், எதை படிக்கும்போதே தூங்கி விடுவீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநியூஸ் ரூம் செய்திகள் கூடுதல்.
கவிதை .... கவிதை?
தற்போது வெளியிடப்படும் புகைப்படங்களை பார்க்கும்போது எது உண்மை, எது போட்டோஷாப் என்று ஆராயவே தோன்றுகிறது. அமிதாப் கமன்ட் சுவை சேர்க்கிறது.
ஸ்ரீராமுக்கு அனுஷ்காவை விட்டால் யார் இருப்பார். அதே கண்கள்!
அந்த கோழிக்குஞ்சு ஜோக் தான் உண்மையான ஜோக். பதிவின் மற்ற விஷயங்களை மறக்கடித்து முன்பே முந்திரிக்கொட்டையாக முன் வந்து நிற்கிறது.
Jayakumar
// வாங்கிய புத்தகங்கள் 2000 ரூ வரும் என்று தோன்றுகிறது //
நீக்குஇல்லை, அதிகம்.
// எதை படிக்கும்போதே தூங்கி விடுவீர்கள் என்பதை புரிந்து கொண்டேன். //
ஹா.. ஹா... ஹா.... எங்கே சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறேன்!
நியூஸ் ரூம் அமிதாப் சொல்றதைப் படிசீங்களா... எளிதாகக் கடக்கக்கூடிய சிறு சிறு செய்திகள்.. வெவ்வேறு வகைகளில் சுவாரசியம் காட்டும் செய்திகள் சில வரிகளில்!
ஹிஹிஹி... கவிதை மாதிரிதான்!
ஆம். நிறைய போட்டோக்கள் பொய்யானவையாய் இருக்கலாம். போலி காணொளிகள் தயாரிக்கிறார்கள். நிஜம் போலவே இருக்கிறது.
கண்கள்... விடை நாளை!
கோழிக்குஞ்சு ஜோக்.. கடைசி வினாடி இணைப்பு!
நன்றி JKC ஸார்...
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
நீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்கு/// மருத்துவ மனையில்
பதிலளிநீக்குஒன்பதாம் வகுப்பு மாணவி ஆண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை///
இன்றைய கல்வித் திட்ட நடை முறையில் யாரை யார் நோவது?..
கல்வி திட்டமா? கலவி திட்டமா?
நீக்குBad Girls...
நாட்டைக் கெடுக்கும் நாசகாரர்கள்.
தமிழக கிராமங்களில், எட்டாம் வகுப்பு மாணவர்களில், 64 சதவீதம் பேரும், ஐந்தாம் வகுப்பு படிக்கும், 35 சதவீதம் பேரும், இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பதிலளிநீக்குநகர்ப்புற மாணவர்களுக்கு இதுவும் தெரியாதே!..
முள்ளு முனையில மூணு குளம் வெட்டி ரெண்டுல தண்ணி இல்லே ஒன்னு பாழே பாழ்!... - ன்னு அந்த காலத்துல சொல்வாங்க...
இத இந்த கால பசன்ங்ககிட்ட சொன்னா,
" அதான் ஒன்னுல பால் கிடைக்குதில்லே.. தட்ஸ் குட் *.. என்பார்கள்..
ஹா.. ஹா... ஹா...
நீக்குதமிழ் படிக்கத்தெரியாத, தமிழ் பேசத்தெரியாத ஒரு இளைய சமுதாயம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அதுசரி, தமிழைக் காப்போம்.. நாங்கள்தான் காக்கிறோம்.
ஆள்பவர்களுக்கே பேசும்போது தமிழ் ததிங்கிணத்தோம் போடுகிறது!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. ஆனால் நிறைய விஷயங்களை அமிதாப் அவர்கள் கண்டு வியக்கும் வண்ணம்/ சொல்லும் வண்ணம் உள்ள படங்களை பார்க்கும் போது, வித்தியாசமான முறையில், புதுமைகளை நிறைய புகுத்தி ஸ்வாரஸ்யமாக தொகுத்துள்ளீர்கள் என தெரிகிறது. இதோ படித்து விட்டு வருகிறேன். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா... இது புதுசு இல்லை.. ஏற்கெனவே அனுஷ், சிவாஜி, வடிவேலு ஆகியோர் இந்த மாதிரி இடம் பெற்றிருக்கிறார்கள்!
நீக்குகண்கள் விஜயலலிதா கண்கள் போல இருக்கின்றன !
பதிலளிநீக்குவிடை நாளை.
நீக்கு//அங்கேயிருந்த ஒரு மின்சார ஒயரை தொட்டு விட்டேன் போலிருக்கு, என் கையைத் தவிர என் உருவம் மறைந்து விட்டது!// ஹாஹா! இரும்புக்கை மாயாவியாக உங்களை சித்தரித்துக் கொண்ட நகைச்சுவை உணர்ச்சியை பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குரசித்ததற்கு நன்றி பானு அக்கா.
நீக்குஇன்றைக்கு என்ன உற்சாகம் கொப்பளிக்கிறதே? என்ன விசேஷம்?
பதிலளிநீக்குஒவ்வொரு பகுதியிலும் அமிதாப்பின் பொருத்தமான படம்+கமெண்ட்.. நல்ல உத்தி! ஆனால் ஹிந்தி தெரியாது போய்யா என்றும் தோன்றுகிறது.
சுவாரஸ்யமான பதிவு!
அமிதாப் ஹிந்தியில் போலவில்லையே... தமிழ்லதான மாட்லாடறார்?
நீக்குஉற்சாகம் யாருக்கு கொப்பளிக்கிறது? அமிதாப்புக்கா?!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. புத்தக கண்காட்சி படங்கள், செய்திகள் அனைத்தும் சிறப்பு. கடைசியில் இப்படி மின் ஒயரில் கையை வைத்து மாயமாகி எங்களை ஏமாற்றமடைய செய்து விட்டீர்களே..? நியாமா? அதனால்தான் (அதைப் பார்த்து விட்டுத்தான்) தங்கள் பாஸ் புகைப்படம் எடுக்க இயலாமல், தயங்கோ , தயங்கென தயங்கினார்கள் போலிருக்கிறது. ஹா ஹா ஹா.உருவத்தை மறைத்து கூற நல்ல கற்பனை.
தாங்கள் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மேலும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் அதை எதிர்பார்க்கவேயில்லை கமலா அக்கா... சட்டென மறைந்துவிட்டேன் .போல.. எனக்குத் தெரியாது. கவனிக்கவே இல்லை. படம் எடுத்து வீட்டுக்கு வந்து பார்க்கிறேன். என்னைக் காணோம்!
நீக்குஹா ஹா ஹா. நானும், நம்பி சிரித்து விட்டேன். எனக்கு ஒரு வயதிலேயே காது குத்தி விட்டார்கள். ஆனால் பாருங்கள்...! . இப்போதுதான் தொட்டுப் பார்த்து உணர்ந்தேன். :))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅந்த கண்கள் படம் நடிகை தேவிகாவா? நாளைதான் பதில் கிடைக்குமென அமிதாப் சொல்லி விட்டார். இன்று எல்லா இடத்திலும் அவர் பேச்சை தட்ட முடியாது. :)) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் பதில் குறித்துக் கொள்ளபட்டது.. ஜவாப் கல் தூங்கா !
நீக்குஎன் பதில் ஒரளவு சரியாக வருகிறதா? இல்லையா..!! ஒரு வேளை அது தவறென்றால், "நான் தூங்கும் போது கூட ஜாவப்பை கல்" கொண்டு வந்து வீசி அடிக்க வைப்பீர்களா? அடாடா..! ஒன்று மட்டும் புரிகிறது. ஹிந்தி கற்றுக் கொள்ளாதது எத்தனை தவறென்பது இப்போது புரிகிறது.. :))
நீக்குஉங்களுக்கு ஹிந்தி தெரியாதா? நம்ப முடியவில்லையே... நானெல்லாம் தோடா தோடா மாலும் கேஸ்தான்.
நீக்குமாலனின், எப்போதும் பத்திரமாக இருக்க நினைக்கும் மத்தியரதர மனோபாவம் கமென்ட் ரசிக்கவில்லை.
பதிலளிநீக்குஒவ்வொருவர் ரசனை வேறு. எல்லாவற்றையும் ஒருவர் விமர்சித்துக்கொண்டே இருக்கணும் என நினைப்பவர், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு கொண்டவராக இருக்கவேண்டும். சுஜாமாவிற்கு எழுதவே நேரம் இல்லை எனும்போது, நானும் குதிக்கறேன் சாக்கடையில என்று எதற்கு அவர் குதிக்கலைனு விமர்சிக்கணும்?
அபிப்ராயங்கள் மாறும். நாணல் போல. அது சுஜாதாவின் பலம் என்று எனக்குத் தோன்றுகிறது.
நீக்குவெறும் நடிகை, நடிகர், நடிப்பு, திரைப்படம் என்பதிலேயேஇரசை எல்லோருக்கும் வேறுபடுகிறது. ஒருத்தருக்குப் பிடிக்கும் என்றால் அதைக் குறை சொல்ல ஆளிருக்கு. சுஜாதா போன்ற வெகுஜன எழுத்தாளர்களுக்கு எதற்கு விமர்சனம்?
பதிலளிநீக்குஅவர் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லையே... ஆனால் இந்த விமர்சனங்கள் அவரை ஒன்றும் செய்யாது, பாதிக்காது!
நீக்குநான் சொல்லவந்தது, அவர் எதற்கு மற்றவர்களை விமர்சிக்கணும் என்று. சுஜாதாவின் எழுத்துகள் விமர்சனத்துக்கு உரியவை. ஆமாம் எனக்கு ஒரு புதன் கேள்வி தோணுது. (இளைஞர்களுக்குத்தான் அதுக்கு பதில் தெரியும். ஹிஹி). சுஜாதாவின் தொடர்கதைகளின் பலம் ஜெ. என்பது என் எண்ணம். வேறு ஓவியர்கள் வரைந்திருந்தாலும் தொடர் ரசித்திருக்கிறதா?
நீக்குஅப்டீன்னா இப்ப பதில் சொல்லக் கூடாதா?
நீக்குபுத்தகக் கண்காட்சியில், தரை சமமாக இருக்காது. சும்மா கார்பெட் போட்டுடுவாங்க எங்க பள்லம் எங்க மேடுன்னு தெரியாம டபக்கு டபக்குனு காலைத் தடுமாற வைக்கும். அடியில் வயர் கூடப் போகும் சில இடங்களில்!
பதிலளிநீக்குநானும் இதை உணர்ந்திருக்கிறேன் ஸ்ரீராம், நீங்க சொல்லிருப்பது போல் இப்ப எத்தனையோ வசதிகள் வந்தாச்சு.....சும்மா நடத்தணும்னு நடத்தறாங்க இல்லைனா வியாபாரத்துக்கு.. ஏன்னா புத்தகங்கள் ஆன்லைனில் கிடைக்குதே
கீதா
அப்படி எல்லாம் மற்றவர்கள் வசதி பார்த்து விட்டார்கள் என்றால் அப்புறம் எப்படி!
நீக்குநான் சொல்ல வந்ததை நீங்களே அடுத்த பாராவில் சொல்லிட்டீங்க நடமாடும் கழிப்பறை....இத்யாதிகள்...
பதிலளிநீக்குஎனக்கு காவலாக வந்திருந்தார். இருமி, மயங்கி விழுந்து விடக் கூடாதாம்!//
சிரித்துவிட்டேன்!
அங்கேயிருந்த ஒரு மின்சார ஒயரை தொட்டு விட்டேன் போலிருக்கு, என் கையைத் தவிர என் உருவம் மறைந்து விட்டது!//
ஹாஹாஹா Invisible படம்!!!
கீதா
எவ்வளவு சோகமாக சொல்லி இருக்கேன்...? என் கை தெரிகிறதா?
நீக்குஉருளைக் கிழங்கு என்ன ஆட்டம் பாம்ப் போல இருக்கு திரி வைச்சாப்ல!!!!! முளை விட்டிருக்கு எல்லா உ கி க்கும்!!
பதிலளிநீக்குவிதைகள் விதைச்சா வருமான்னு சிலசமயம் வாங்குவது வருவதில்லை. பாவம் அது அவரது உழைப்பு. அதை அங்கீகரிக்க வேண்டும். நல்லபடியா அவர் முன்னேற வேண்டும்.
கீதா
விதையல்ல, குச்சி.
நீக்குகௌ அண்ணா கொடுத்த தலைப்புக்கு இங்கு படங்கள் ! அந்த வயதான மாது பாவம் பாருங்க ஒரு நாள் வயிற்றுப் பிழைப்பு. இவரை நம்பி வீட்டில் எத்தனை பேரோ?
பதிலளிநீக்குஉ கி யில் அது குச்சியா!!!
கீதா
அடடே... ஆமாம் இல்லே?
நீக்குசெடிகளும் கூட வீட்டுக்குக் கொண்டு வந்து வைச்சா சிலது வருது...நம்ம மண்ணும் வளமா இருக்கணுமே.
பதிலளிநீக்குபெருமாள் பொம்மை அழகா செஞ்சிருக்காங்க
அத்தனை புத்தகங்களும் வாங்கினீங்களா, ஸ்ரீராம்?
எழுந்து நின்னு பாடியாச்சு. திருஷ்டியும் சுத்திப் போட்டாச்சு!!! கண்காட்சி அடுத்த முறையாவது இன்னும் நல்லா ஏற்பாடு பண்ணுங்கப்பான்னு
கீதா
செடிகள் வைத்து பாதுகாப்பதில் நான் ஒரு மகா சோம்பேறி! கொஞ்சம் வார்த்தையை மாற்றினால், செடிகள் வைத்து பாதுகாப்பதிலும் நான் மகா சோம்பேறி!
நீக்குகவிதை நல்லாருக்கு, ஸ்ரீராம். அமிதாப் படம் பொருத்தம் போங்க!!
பதிலளிநீக்குநான் சொல்ல நினைச்சத வல்லிமா சொல்லிருக்காங்க. இது தொடரி தான்!
கீதா
ஆமாம். அதையும் நான் நினைச்சு முடிச்சீருக்கலாமேன்னு அப்போ தோன்றியது.
நீக்குஇன்றைய பகிர்வு மிகுந்த ரசனை அனைத்தையும் ரசித்தோம்.
பதிலளிநீக்குபடங்கள் போட்டோசொப்பில் செய்யப்பட்டவையாக இருக்கலாம் பார்வைக்கு ஆச்சரியப்பட வைக்கிறது.
கண்கள் அனுஸ் கண் தவிர வேறு யார் கண் வரும் ;)
கடைசி ஜோக் சிரிக்க வைத்தது.
நன்றி மாதேவி.
நீக்குவிடை நாளை!
உ பி ஒரு வகைச் சட்டம்னா, ராஜஸ்தான் வேறு மாதிரி இயங்குகிறதே!
பதிலளிநீக்குசென்னைக்குள்ள சொகுசு பேருந்துகள் தனியார் இயக்க ......புரிஞ்சு போச்சு!!!!
தமிழக கிராமக் குழந்தைகளின் கல்வி பற்றி என்ன சொல்ல? தெரிட்ந்த விஷயம். பாஸ் பண்ணி விட்டிடுறாங்க. கல்லூரி வந்தாதான் தெரியும் கஷ்டம்.
//தமிழக காவல் துறையின் மெத்தனம் பற்றி கடும் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம். கோர்ட் உத்தரவையே அலட்சியம் செய்யும் போலீசாரை வைத்துக் கொண்டு எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும் //
பாயின்ட்! தமிழ்நாடு போலீஸ் துறை ஸ்காட்லாந்து யார்ட் நு சொல்லிக்குவாங்களே!
செயலர் ராதா கிருஷ்ணன் - செய்தி முன்னர் அவர் காப்பகத்தில் வைத்து உதவுவது வந்திருந்தது. நல்ல விஷயம்.
//சிவானந்த மூர்த்தியின் மகன் ஆகாஷ், நாராயணா ஹிருதயாலயாவில் டாக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.//
இந்தச் செய்தி ரொம்ப ஆச்சரியப்படுத்துகிறது.
அமிதாப்ஜி, க்யா ஆப்கோ தமிழ் மாலும் ஹை? பினா படேஹி ஆப் கமென்ட் கர் தி!!!!
கீதா
ராதாகிருஷ்ணன் செய்தியில் அவர் இப்போதுதான் அவர்களுக்கு திருமணம் செய்திருக்கிறார்.
நீக்கு// அமிதாப்ஜி, க்யா ஆப்கோ தமிழ் மாலும் ஹை? பினா படேஹி ஆப் கமென்ட் கர் தி!!!! //
பினாகாவா.. அது இப்போ வர்றதே இல்லை மேம்சாப்... சிபாகா கூட கண்ல படறது இல்ல...
என எந்த விஷயத்திலும் கட்சி கட்டிக் கொண்டு ஆடியதில்லை. எப்போதும் பத்திரமாக இருக்கவே விரும்பும் மத்திய தர வர்க்க மனோபாவம் இது.//
பதிலளிநீக்குஇது மாலன் அவர்களின் பார்வை. ஜட்ஜ்மென்டல்.
பார்க்கப் போனால் சுஜாதா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லிவிட முடியாதுதான் இருந்தாலும்
எதற்குக் கட்சி கட்டிக் கொண்டு வாய் வார்த்தைகள் விட்டு, பத்திரிகைகளின் நாறடிப்புக்கு ஆளாகி, நம்முடைய அமைதியைக் கெடுத்துக்கணும்? இதை ஓப்பன் மைண்டெட்னஸ் என்றும் சொல்லலாம் இல்லையா? அவர் தன் எழுத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருந்தார் எனலாம்.
கீதா
நம்ம நிம்மதி நமக்கு முக்கியம் இல்லையா?
நீக்குஅவரவர் அபிப்ராயம் அவர்களுக்கு...
அமிதாப்பின் சிரிப்பு அந்த ஜோக்கிற்குப் போதும்.
பதிலளிநீக்குஅந்தப் படுக்கை ஆ ஆ!! அமிதாப் 30 40 வருஷத்துக்கு முன்னன்னா படத்துலதானே!!!
பறவை வெல்கம் செய்யும் அந்தப் படம் நல்ல எடிட்டிங்க் ஸ்ரீராம். சூப்பர் உங்க திறமை.
அந்த ஆடுகள் படம் நீங்க செஞ்சாப்ல செய்யப்பட்ட ஒன்றுதான்...ஆனா நீங்க சொன்னாப்ல 'மாரல் ஆஃப் த படம்' நீங்க சொல்லிருக்கறதுதான்...
வாட்சப் ஜோல் - புன்னகைக்க வைத்தது. ஆனா பாருங்க மனைவிங்க புத்திசாலிங்க !
கோழிக்குஞ்சு - ஹிஹிஹி
கீதா
ஆங்காங்கே தெளிக்க பட்டிருந்த ஜோக்ஸை ரசித்ததற்கு நன்றி.
நீக்குஅம்மாடி...! அனைத்து பகுதிகளும் அருமை....
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குஅனைத்து பகுதிகளும் நன்றாக இருக்கிறது. புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள், பழ. கருப்பையாவுடன் படம் எடுத்து கொண்டு இப்படி காணாமல் போகலாமா?
பதிலளிநீக்குவாங்கிய புத்தகங்களை படித்து முடித்து பதிவு செய்வீர்களா?
பல விதமான செய்திகளை இருவரும் சேர்ந்து நிறைய சேகரித்து கொடுத்து விட்டீர்கள்.
கண்கள் இந்தி நடிகை கண்கள் என்றால் ஆஷாபரேக், தமிழ் நடிகை கண்கள் என்றால் ஜெயலலிதா
புத்தகங்களை படித்து புத்தக விமர்சனம் செய்யலாம். கீதா ரெங்கன் செய்யக்கூடும்! புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி இருக்கிறார். ஒரு ரகசியம்... முக்கால் வாசி படித்தும் விட்டார்.
நீக்கு// கண்கள் இந்தி நடிகை கண்கள் என்றால் ஆஷாபரேக், //
நீக்குசபாஷ் அக்கா... சரியான விடை.
/இதோ பாருங்க... முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுங்க... ஸ்ரீராம் விடையை நாளை போஸ்ட்ல சொல்வானாம்/
நீக்குஆகா.... இன்றே விடை கிடைத்து விட்டது. (கோமதி அரசு சகோதரியின் சரியான கணிப்பினால்.)
நன்றி சகோதரி..
நன்றி சகோதரரே.
தொடரி கவிதையும் வல்லி அக்காவின் முத்தாய்ப்பும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉச்சிக்கிளையில் வரை ஆடு சண்டை ,மலையில் படுக்கைகள் பயமாக இருக்கே! உண்மை (இல்லையென்றாலும்)
நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.
அமிதாப்புக்கு மாலனை தெரியாவிட்டாலும் சுஜாதாவை தெரியும்.
எப்படி சொல்கிறீர்கள், அமிதாப்புக்கு சுஜாதாவைத் தெரியும் என்று?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீங்கள் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்துமே வித்தியாசமாக உள்ளது. படிக்க நேரமிருந்தால், அதைவிட படிக்க நல்ல மனநிலையிருந்தால் படிக்கலாம்.
உ. கி படம்.. நிறைய பொறுமை வேண்டும் இப்படி அடுக்கி வைத்திருப்பதற்கு. அப்படியே எண்ணெய்யில் பொரிப்பார்களா? இதுவரையில் சாப்பிட்டதில்லை. மால்களில் இந்த உ. கி. ரோல் அனைவரின் கைகளிலும் பார்த்ததாக மட்டுமே நினைவு.
செய்திகள் நிறைய படித்து தெரிந்து கொண்டேன். நன்றி உங்கள் இருவருக்கும்.
கவிதை நன்று. இருக்கிறவர்களை பார்த்து இல்லாதவர்கள் நோகத்தானே வேண்டும் எனக்கூறும் கவிதையை ரசித்தேன்.
ஆடுகளின் சண்டை விளிம்பு வரை வந்து விட்டதே...! யாருக்கு வெற்றி, தோல்வி என்பதை விட "கரணம் தப்பினால் மரணம்" என்பதை அவை புரிந்து கொள்ளாமல், இருக்கிறதே என்பதுதான் கவலையாக உள்ளது.
பறவை வரவேற்பு அதிசயிக்க வைக்கிறது. அவர் ஹிந்தி நடிகையா? அதுதான் அமிதாப் இப்படி ரசித்து சிரிக்கிறார்.
திகில் காடசி ஜோக் அருமை. இடையிடையே வந்த நகைச்சுவைகளை ரசித்தேன்.இறுதி நகைச்சுவை பாவம்... கோழி குஞ்சுகள். மனதை பதறவைத்தது. இந்த வாரம் அனைத்துமே நல்ல ரசனையாக பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உருளைக்கிழங்கை நாரத்தை உருளை உருளையாக சீவுவார்களே, அது போல சீவிக்கொண்டு காரம் போட்டு பொரித்து எடுப்பார்கள்.
நீக்குசெய்திகளில் வியக்க வைத்த செய்தி எது?
பறவை வரவேற்பது யாரோ ஒரு எக்ஸ். ஏதோ காணொளி. அதிலிருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்தேன்.
நன்றி கமலா அக்கா.
மின்சார வயரைத் தொட்டு விட்டீர்களா:)?
பதிலளிநீக்குஉங்கள் மைண்ட் வாய்ஸுக்குப் பொருத்தமாக நடிகர் அமிதாப் படங்கள்!
நியூஸ் ரூம் - செய்திகளுக்கு நன்றி.
தொகுப்பு நன்று.
//மின்சார வயரைத் தொட்டு விட்டீர்களா:)? //
நீக்குஆமாம்.. பாருங்கள்.. என் கை மட்டும்தான் அங்கு தெரிகிறது.
:))
நன்றி ராமலக்ஷ்மி.